disalbe Right click

Tuesday, April 21, 2015

அரசு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற


அரசு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற என்ன செய்ய வேண்டும்?
*********************************************************************************
          சென்னை உயர்நீதிமன்றப் பேராணை மனு எண்:26722/2013-க்கு 11.08.2014 அன்று வழங்கப்பட்ட தீர்ப்பின்படி அரசாணை எண்:540 வருவாய் எல் டி 6 (2) துறை நாள்  : 04.12.2014-ல் அரசு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள்மீது நடவடிக்கை மேற்கொண்டு முடிவு செய்வதற்கு வட்ட/கோட்ட/மாவட்ட அளவில் குழுக்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளது. 
வட்ட அளவிலான குழு:
                       1.வருவாய் வட்டாட்சியர் 2. காவல் ஆய்வாளர் 3. வட்ட துணை ஆய்வாளர் (நில அளவை) 
கோட்ட அளவிலான மேல் முறையீட்டுக் குழு:
                           1. சார் ஆட்சியர் / வருவாய் கோட்டாட்சியர் 3. துணை காவல் கண்காணிப்பாளர் 3. உதவி இயக்குநர் (நில அளவை)
                    ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி மனு அளிக்கும் பொதுமக்கள் சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அவர்களுக்கு மனு அளிக்க வேண்டும்.
      ஷை வட்டாட்சியர் அவர்கள் 60 நாட்களில் ஆக்கிரமிப்பை அகற்றவில்லை என்றாலோ அல்லது ஷை வட்டாட்சியர் அவர்களின்  பதில் திருப்திகரமாக இல்லை என்றாலோ , 60 தினங்களுக்குப் பிறகு கோட்ட அளவிலான மேல்முறையீட்டுக்குழுத் தலைவரான சார் ஆட்சியர்/ வருவாய் கோட்டாட்சியர் அவர்களிடம்  மேல்முறையீடு செய்ய வேண்டும். இம் மேல்முறையீட்டு மனு 30 நாட்களுக்குள் விசாரணை செய்து ஆணை வழங்கப்படும். 
       கோட்ட அளவிலான மேல்முறையீட்டுக் குழுவின் ஆணை கிடைக்கப்பெறவில்லை என்றாலோ அல்லது அவர்கள் அளித்த பதில் திருப்திகரமாக இல்லை என்றாலோ, 30 தினங்களுக்குப் பிறகு, மாவட்ட அளவிலான ஆய்வுக்குழு தலைவரான மாவட்ட வருவாய் ஆய்வாளர் அவர்களுக்கு ஆய்வு மனு செய்ய வேண்டும். இம்மனுமீது 30 தினங்களில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு மனுதாரருக்கு ஆணை வழங்கப்படும். 
அரசு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற தமிழ்நாடு அரசு வெளியிட்ட ஆணையின் நகல் கீழே இணைக்கப்பட்டுள்ளது


No comments:

Post a Comment