disalbe Right click

Thursday, April 14, 2016

கட்சி ஆரம்பிக்க


கட்சி ஆரம்பிக்க என்ன செய்ய வேண்டும்?
இந்தியாவில் உலகளவிலான கட்சிகளும், தமிழகத்தில் பல தேசிய கட்சிகளும், மாநிலகட்சிகளும் பல இருக்கின்றன. இருப்பினும், புதிது புதிதாகக் கட்சிகள் முளைத்துக் கொண்டேஇருக்கின்றன.
அரசியலில் விருப்பம் இருப்பவர்களுக்கு, கொஞ்சம் பிரபலமும் ஆன கூட்டத்தினர்களுக்கு மனதின் உள்ளூர ஒரு ஆசை அரித்துக் கொண்டே இருக்கும். எதோ ஒரு கட்சிக்குதொண்டனாக இருப்பதை விட, நாமே ஒரு கட்சி ஆரம்பித்தால் என்ன?
ஆரம்பிக்கலாம்தான்.
ஆனால் அதன் சட்ட வழி முறை?
இதோ…சொல்லத்தானே இந்தக் கட்டுரையே…
தேர்தல் ஆணையத்தில் பதிவு:
ஒத்த கருத்துடையவர்கள், அவர்களின் சங்கங்கள் / கழகங்கள் மற்றும் அமைப்புகள் ஒருகட்சியாக உருவெடுக்க வேண்டும் எனில் தேர்தல் ஆணையத்திடம் பதிவு செய்தல் வேண்டும்.
கட்சியாக விரும்பும் ஒரு குழு, அமைப்பு, கழகம் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம்- 1988 தொடங்கிய போது நிகழ் நிலையில் இருப்பின், தொடங்கியதில் இருந்து 60 நாட்களுக்குள்ளும், அந்தக் குழு, இந்த மக்கள் பிரதிதித்துவச் சட்டம் இதன் தொடக்கத்திற்கு பின்ஆரம்பிக்கப்பட்டிருந்தால் அமைக்கப்பட்ட தேதியின் பின்னிட்டு 30 நாட்களுக்குள் விண்ணப்பம்செய்யப்படுதல் வேண்டும்.
அந்த விண்ணப்பத்தில், விண்ணப்பித்த கழகத்தின் தலைமைச் செயல் அலுவலர், செயலாளர், கையொப்பமிட வேண்டும், அந்தக் கையெழுத்தானது தேர்தல் ஆணையத்தின் செயலருக்கு முன்நிகழ வேண்டும், அல்லது செயலருக்கு பதிவு அஞ்சல் மூலம் அனுப்பப்படுதல் வேண்டும்.
விண்ணப்பத்தில் கட்சியின் பெயர், அது அமைந்துள்ள மாநிலம், அதற்கான கடிதங்கள் அனுப்பவேண்டிய முகவரி, அதன் தலைவர், செயலாளர், பொருளாளர், உறுப்பினர் எண்ணிக்கையளவு, அவர்களில் பிரிவு இருந்தால் அந்தத் தகவல், வட்டார அலகுகள், மக்களவை அல்லது வேறுஏதேனும் மாநில சட்டமன்றத்தில் சார்பு செய்த உறுப்பினர் உண்டா?
ஆம் எனில் அது குறித்ததகவல், அந்த அமைப்பு/கட்சிக்குள் வேறுபட்ட கருத்து தோன்றினால் அதைத் தீர்க்கும் Dispute resolution பற்றிய தகவல்கள் ஏதும், அதன் விதிகளில் பின்னாளில் மாற்றம் கொண்டு வரவேண்டும் எனில் அதைக் கொண்டு வரும் முறை பற்றிய தகவல்கள், வேறு கட்சியுடன் இணைக்க விரும்பும் காலத்தில் அதைச் செய்ய வேண்டியமுறை குறித்த விதிகள், இணைப்பது, பிரிவது, கட்சி/அமைப்பை கலைப்பது ஆகியவை ஏறுபடுங்கால் அதைச் செய்ய வேண்டிய முறை குறித்தவிதிகள் அனைத்தும்…
இவை போக, அந்த கட்சியின் விதிகள், விதிகளின் விவரக்குறிப்புகள், இவை எல்லாம் போக, அந்தக் கழகம்/கட்சி/அமைப்பு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீது நம்பிக்கைகொண்டிருக்கிறது என்றும், சமூகப் பொதுவுடமை, மதச் சார்பின்மை மற்றும் ஜனநாயகம் இவற்றின் மீது நம்பிக்கை கொண்டிருக்கின்றது எனவும், இந்தியாவின் ஒருமைப்பாடு, இறையாண்மையைப் பாதுகாக்க கருத்தும் கொண்டிருக்க வேண்டும்.
(பிரிவு5)
தேர்தல் ஆணையமானது, தான் பொருத்தமெனக் கருதும், அத்தகைய பிற விவரங்களைக் கழகம்/கட்சி/அமைப்பிடம் இருந்து கேட்டுப் பெறலாம்.
அத்தோடு, தேர்தல் ஆணையம் நிர்ணயிக்கும் தொகையினை டிமாண்ட் ட்ராஃப்டாக விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.
இந்த தகவல்கள் எல்லாவற்றையும் பெற்ற பிறகு, தேர்தல் ஆணையம் விணப்பித்த அந்த குழு/அமைப்பு/கழகத்தை கட்சியாக ஏற்பதா வேண்டாமா என்பதைக் குறித்து முடிவு செய்து, பின்னர் அந்த முடிவை, அந்த அமைப்பிற்குத் தகவல் தரும்.
அந்த அமைப்பு, பிரிவு 5-ல் குறிப்பிட்ட காப்புரைகளுக்கு அனுசரித்திருக்க வேண்டும் என்பதேமுக்கியமாக கவனிக்கப்படும்.
இது குறித்து தேர்தல் ஆணையத்தின் முடிவே இறுதியானது.
நன்கொடைக்கான விதி
அரசியல் கட்சிகள் நன்கொடை பெறுவது குறித்தும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் சொல்கிறது.
அரசியல் கட்சிகளுக்கு நிறுவனச் சட்டம் 1956 -ன் படி, கட்சி நபர் ஒருவரால், அல்லது அரசுநிறுவனம் அல்லாத நிறுவனத்தால், மனமுவந்து அளிக்கப்படும் நன்கொடைத் தொகையினைப் பெற்றுக் கொள்ளலாம்.
இதில் கவனிக்க வேண்டிய விசயங்கள் இரண்டு.• 
அரசு நிறுவனங்களிடம் இருந்து அரசியல் கட்சிகள் நன்கொடை பெற முடியாது.
• அந்த நன்கொடையானது மனமுவந்து அளிக்கப் பட்டிருக்க வேண்டும். வலுக்கட்டாயவசூல் கூடாது.
அந்த நன்கொடையானது, The Company's Act - 1956ன் காப்புரைகளுக்கு உட்பட்டுஇருக்க வேண்டும்.
நிறுவனம் என்றால் என்ன என The Company's Act - 1956ல் வரையறை செய்யப்பட்டுள்ளபடி, என்றும், அரசு நிறுவனம் என்றால் நிறுவனச் சட்டம் - 1956ன் பிரிவு 617ல் குறிப்பிட்டபடியும், நன்கொடை என்றால், அதே சட்டத்தின் பிரிவு 293 - A யின் கீழ் சொல்லப்பட்ட
பொருளிலும், அதே சமயம், அரசியல் கட்சிக்கு ஏதேனும் நபரால் அளிக்கப்பட்ட ஏதேனும் நன்கொடைஅல்லது சந்தா தொகையினையும் உள்ளடக்கும்…என இந்தப் பதங்களுக்கான பொருளைமக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் விளக்குகிறது.
பிரிவு 29B ல் குறிப்பிடப்பட்ட ”நபர்” ஒருவரால் எனும் பதத்தில் உள்ள நபர் எனும் சொல்லானது, வருமான வரிச்சட்டம் பிரிவு 2 (31)ன் கீழ் அதற்கு ஒதுக்கப்பட்டுள்ள பொருளைக்கொண்டிருக்கும். ஆனால், அரசு நிறுவனம் உள்ளாட்சி அமைப்பு மற்றும் அரசினால் நிதியுதவிமுழுமையாக அல்லது பகுதியாக அளிக்கப்படும் ஒவ்வொரு செயற்கையான சான்றாயர் 'நபர்'எனும் பதத்தினுள் அடங்காது.
வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 2 (31) ”நபர்” எனும் பதத்திற்குப் பொருள் விளக்கம் தருகிறது. அதன் படி,
”person” includes-
An individual,
A Hindu undivided family,
A company,
A firm
An association of persons or a body of individuals,
whether incorporated or not,
A local authority, and
Every artificial juridical person, not falling within
any of the preceding sub-clauses;
ஆனால், அரசு நிறுவனம், உள்ளாட்சி அமைப்பு, மற்றும் அரசினால் நிதியுதவி பகுதியாக அல்லதுமுழுதுமாகப் பெறும் செயற்கையான நபர், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 'நபர்' எனும்வரையறையின் கீழ் வர மாட்டார். அதாவது, அரசு நிறுவனங்கள், மற்றும் மேற்கூறியவர்களிடமிருந்து, ஒரு அரசியல் கட்சியின் நபர் நன்கொடை வாங்குதல் கூடாது.
அப்படி அரசியல் கட்சிகளினால் வாங்கப்படும் மற்றும் வாங்கப்பட்ட நன்கொடையினை, அக்கட்சிகள், நிதியாண்டு அறிக்கையினை தயாரிக்க வேண்டும். அதாவது, அக்கட்சியின் பொருளாளர், அல்லது இதன் பொருட்டே அரசியல் கட்சியினால் ஏற்பளிக்கப்ப்ட்ட ஏதேனும் ஓர்நபர், ஒவ்வொரு நிதியாண்டிலும், அறிக்கை தயாரிக்க வேண்டும்.
அவை யாவன:
அந்தந்த நிதியாண்டில், நபர் எவரிடமிருந்தேனும், ரூபாய் 20,000/க்கு மேல் பெறப்பட்டநன்கொடை, அரசு நிறுவனங்கள் அல்லாத, நிறுவனங்களிடமிருந்து ரூபாய் 20,000/க்கு மேல் பெறப்பட்டநன்கொடை, ஆகிய தகவல்கள் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டிருக்கும் படிவத்தில்அமைந்திருக்க வேண்டும்.
வருமான வரிச் சட்டம் 1961 பிரிவு 139ன் கீழ் அந்த நிதியாண்டிற்கான வருமான விவர அறிக்கைதாக்கல் செய்வதற்கான குறிப்பிட்ட தேதிக்கு முன், உட்பிரிவு (1) ந் கீழான நிதியாண்டு அறிக்கையினை அந்த அரசியல் கட்சியின் பொருளாளர் அல்லது இதன் பொருட்டு அரசியல்கட்சியினால் ஏற்பளிக்கப்பட்ட நபர் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்.
அந்த அரசியல் கட்சியின் பொருளாளர் அல்லது அரசியல் கட்சியினால் இதன் பொருட்டுஅதிகாரம் அளிக்கப்பட்ட ஒரு நபரானவர், உட்பிரிவு (3) ந் கீழ் அறிக்கை சமர்ப்பிக்கத் தவறினால், வருமான வரிச் சட்டத்தில் எப்படி இருப்பினும், அந்த அரசியல் கட்சி அந்தச்சட்டத்தின் கீழ் வரி நிவாரணம் ஏதும் பெற உரிமை உடையது அன்று.
மேற்சொன்னவை, ஒரு அமைப்பை கட்சியாக தேர்தல் ஆணையத்தின் கீழ் எப்படிப் பதிவுசெய்வது என்பதைப் பற்றி மட்டுமே.

நன்றி : தினமலர் நாளிதழ் - 14.02.2016


No comments:

Post a Comment