disalbe Right click

Monday, May 30, 2016

கலப்பட உணவுப்பொருட்களை கண்டுபிடிக்க


கலப்பட உணவுப்பொருட்களை கண்டுபிடிக்க 
என்ன செய்ய வேண்டும்?
‘‘நம் கிச்சனில் இருக்கும் மளிகைப் பொருட்களில், 50 சதவிகிதத்துக்கும் மேல் கலப்படம் சேர்ந்த பொருட்களே! கலப்படத்தை எப்படிக் கண்டறிவது என்று தெரியாததால், அந்தப் பொருட்களைப் பயன்படுத்தப் பழகிவிட்டோம். ஆனால், மளிகைப் பொருட்களின் கலப்படத்தை சில எளிய வழிகள் மூலம் அறியலாம்!’’ என்று வழிகாட்டுகிறார், இந்திய நுகர்வோர் சங்கத்தின் துணை இருக்குநர் எம்.ஆர்.கிருஷ்ணன்.
மளிகைப் பொருட்களின் கலப்பட சோதனைக்காக கிருஷ்ணன் குறிப்பிட்ட வழிமுறைகள்... இதோ!
மிளகு
கலப்படம்: மிளகில் எடை அதிகரிப்புக்காக பப்பாளி விதை சேர்க்கப்படுகிறது. பழைய ஸ்டாக் மிளகைப் பளபளப்பாக்கி ஃப்ரெஷ் ஷாகக் காட்ட, இப்போது மினரல் ஆயிலும் கலக்கப்படு கிறது.
கண்டறிதல்: டிஷ்யூ பேப் பரில் மிளகை வைத்தால், பேப்பரில் எண்ணெய் ஒட் டும். தண்ணீரில் மிளகைப் போட்டால் எண்ணெய் மிதக்கும். மிளகில் உள்ள எண்ணெய் வாசனையை வைத்தும், கலப்படத்தைக் கண்டுபிடிக்கலாம்.

பருப்பு வகைகள்
கலப்படம்: பாலிஷ் செய்யப் பட்ட பருப்பு வகைகளில் பெரும்பாலும் மெட்டானில் யெல்லோ கலர் (metanil yellow colour) கலக்கப்படுகிறது. நிறம் மங்கிய பருப்புகளை ஃப்ரெஷ்ஷாகக் காட்டவும்... பருப்பை பாலிஷிங் செய்யும்போது பருப்பில் இழந்த மஞ்சள் நிறத்தை மீண்டும் ஏற்றவும் இது கலக்கப்படுகிறது.
கண்டறிதல்: டைல்யூட் ஹைட்ரோகுளோரிக் ஆசிட்டை (dilute hydrochloric acid) டெஸ்ட் டியூப்பில் எடுத்துக்கொண்டு சிலதுளிகள் விட்டுப்பார்த்தாலே பருப்பில் ஏற்றப்பட்டிருக்கும் கலர் பிரிந்து கசடுபோல் கீழே தங்கிவிடும்.

ஜவ்வரிசி
கலப்படம்: ஆப்டிக்கல் வொயிட்னர் கெமிக்கலை (டினோபால் என்கிற பெயரில் இந்த ரசாயனம் விற்க்கப்படுகிறது.) ஜவ்வரிசி யுடன் கலக்கும்போது பளிச் என மாறும்.
கண்டறிதல்: இதை சோதனைச்சாலையில் ஆய்வு செய்து கண்டறியமுடியும்.

தனியா (கொத்தமல்லி)
கலப்படம்: பளபளப்புக்காக தனியாவில், சல்ஃபர் டை ஆக்சைடு (sulphur dioxide) பயன்படுத்தப்படுகிறது.
கண்டறிதல்: வெண்மையாக இருந்தால் அது கலப்பட தனியா. கறுப்பு தனியாதான் எப்போதும் சிறந்தது.

டீ பவுடர்
கலப்படம்: டீ வைத்த பிறகு ஃபில்டரில் இருந்து மீதமாகும் கசடுகளை 20, 30 கிலோ வரை சேகரித்து வைத்திருந்து அதை உலர்த்தி, அதில் சிறிதளவு நல்ல டீ தூளினை சேர்த்து, டார்டாரின் (tartarin) என்கிற கெமிக்கலையும் கலந்து இறுதியில் பாக்கெட் செய்து விற்கப்படுகிறது.
கண்டறிதல்: வெள்ளை பேப்பரில் சிறிது டீத்தூளை வைத்து தண்ணீரை விட்டால், பேப்பர் நிறம் மாறும். பொதுவாக சுடுநீரில்தான் டீத்தூளின் நிறம் மாறும். குளிர் நீரிலேயே நிறம் மாறி னால், உஷார்.

மைதா மாவு
கலப்படம்: மைதா மாவில் அதிகளவில் கலக்கப்படுவது, மரவள்ளிக்கிழங்குத்தூள். இது அதிக வெளிர் நிறத்தை மாவுக்குக் கொடுக்கும்.
கண்டறிதல்: மைதா மாவில் இழுவைக்கான எலாஸ்டிக் தன்மை இருக்கும். இதுவே கலப்பட மைதாவாக இருந்தால், உதிரி உதிரியாக இருப்பதுடன் இழுவைத் தன்மையின்றி இருக்கும்.
இவை தவிர, எண்ணெ யின் கலப்படத்தை லேப்களில் மட்டுமே கண்டறிய முடியும் என்பது குறிப்பிடத் தக்கது. கல் உப்பை பயன் படுத்தும்போது, அதை டம்ளர் தண்ணீரில் போட, கசடுகள் அடியில் தேங்கும். மேலே இருக்கும் தெளிந்த நீரை, உப்பு தேவைக்குப் பயன்படுத்தலாம்!’’ என்று விரிவாக பேசியவர்,
‘‘அந்தக் காலத்தில் வீட்டிலேயே போடப்படும் அப்பளம் மற்றும் வடாம் போன்றவை வெள்ளை நிறத்திலேயே இருக்கும். அதில் எந்தவிதமான கலர்களும் கலக்காமல் உணவுப்பொருளாக மட்டுமே உடலுக்கு நன்மை பயத்தன. ஆனால், இன்று எல்லா உணவுப்பொருட்களிலுமே கலர்களைப் பயன்படுத்து கிறார்கள். அப்பளங்களே பலவண்ணங்களில் வருகின் றன. இப்படிப்பட்ட கலர்கள் அனைத்துமே உடலுக்கு ஆபத்தை விளைவிக்க கூடியவைதான். இவற்றை தவிர்த்தலே நலமான வாழ்வுக்கு வழிவகுக்கும். கிச்சனை மாடுலர் கிச்சனாக மாற்றுவதைவிட, கலப்படமற்ற கிச்சனாக வைத்திருப்பது முக்கியம். அதுதான் ஆரோக் கியத்துக்கு அரண்!’’
- அழுத்தமாகச் சொல்லி முடித்தார் கிருஷ்ணன்.
வே.கிருஷ்ணவேணி
நன்றி : அவள்விகடன் - 14.07.2015 

No comments:

Post a Comment