disalbe Right click

Thursday, July 28, 2016

புகார் பற்றிய புலனாய்வு அறிக்கை பெற


புகார் பற்றிய புலனாய்வு அறிக்கை பெற என்ன செய்ய வேண்டும்?

நாம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்மீது, காவல் நிலைய அதிகாரி உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை எழுத்து மூலமாக அவர்களிடம் இருந்து பெற்றுக் கொள்ள வேண்டும்.

அவ்வாறு பெற்றுக் கொண்டால்தான் அதனை நீதிமன்றத்தில் நாம் சமர்ப்பித்து காவல் நிலையத்தில் புகார் செய்ததையும், அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதையும் நிரூபிக்க முடியும். அதன்மூலம் காவல் அதிகாரியின் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கவும் முடியும்.

இதற்கு என்ன செய்ய வேண்டும்?

பொதுவாக புகார் அளித்த நம்மிடம் வாய்மொழியாக உங்கள் புகார்மீது முதல் தகவல் அறிக்கை பதிய வழியில்லை என்று சொல்லி, காவல்நிலைய அதிகாரி  நாம் அளித்த புகாரை “குளோஸ்” செய்து விடுவார். ஆனால், அவர் புகார் அளித்தவரிடம் புகாரின்மீது நடவடிக்கை ஏன் எடுக்கவில்லை என்ற காரணத்தை அறிவிக்க வேண்டும் என்று சட்டம் சொல்கிறது.

Cr.P.C. பிரிவு : 157 - 2 (ஆ)

அவர் அந்தப் புகார் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? என்பதற்கான காரணத்தை  புகார் அளித்தவரிடம் அறிவிக்க வேண்டும் என்று குற்ற விசாரணை முறைச் சட்டம், பிரிவு 157 - 2(ஆ)வில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதனை தங்கள் மனுவில் குறிப்பிட்டு, புகார் மீது நடவடிக்கை எடுக்காத காரணத்தை எழுத்து மூலம் காவல் நிலைய அதிகாரியிடம் இருந்து பெற்றுக் கொள்ளலாம். 

இந்திய சாட்சியச் சட்டம், 1872 - பிரிவு 76

புகாரின்மீது நடவடிக்கை ஏன் எடுக்கவில்லை என்ற அறிக்கையின் நகலை தனது மேலதிகாரிக்கு எழுத்து மூலம்  காவல் நிலைய அதிகாரி தெரிவிக்க வேண்டும். 
அந்த அறிக்கையின் நகலை மனுதாரர் காவல்நிலைய அதிகாரி அவர்களிடம் இருந்து இந்திய சாட்சியச் சட்டம், 1872 - பிரிவு 76ன் கீழும் பெற்றுக் கொள்ளலாம்.

அந்த புகார் சம்பந்தமாக நீதிமன்றத்தில் சென்று முறையிடும் போது மேற்கண்டவாறு பெற்ற ஆவணங்கள் புகார்தாரருக்கு கண்டிப்பாக உதவும்.

No comments:

Post a Comment