disalbe Right click

Saturday, September 17, 2016

இலவச கேஸ் இணைப்பு


இலவச கேஸ் இணைப்பு - என்ன செய்ய வேண்டும்?

4 லட்சம் இலவச காஸ் இணைப்புகள் வழங்கும் பணி தமிழகத்தில் துவக்கம்

பிரதமர் மோடியின் பிறந்த நாளான நேற்று, தமிழகத்தில், நான்கு லட்சம் இலவச காஸ் இணைப்பு வினியோகம் துவங்கியது; காஸ் ஏஜன்சி அலுவலகங்களில் பெண்கள் குவிந்தனர்.

பிரதமர் மோடியின், 'உஜ்வாலா' திட்டத்தில், நாடு முழுவதும், வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள பெண்களுக்கு, ஐந்து கோடி இலவச காஸ் இணைப்புகள் வழங்கப்படுகின்றன. இதில், தமிழகத்தில், நான்கு லட்சம் இணைப்புகள் வழங்கும் பணி நேற்று துவங்கியது.

பிரதமர் மோடியின் பிறந்த நாளான நேற்று, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் உள்ள காஸ் ஏஜன்சிகள், இலவச சிலிண்டருடன் கூடிய காஸ் இணைப்பு வினியோகத்தைதுவங்கின.

இந்த திட்டத்தில் பயனாளிகளுக்கு, சிலிண்டர் டிபாசிட், 1,250 ரூபாய், ரெகுலேட்டர், 150, கேஸ் புக், 25, அட்மிஷன் சார்ஜ், 75, டியூப், 100, ஸ்டவ் 1,000, சிலிண்டர் தொகை, 568 என, மொத்தம், 3,168 ரூபாயில், ஸ்டவ், சிலிண்டர் தொகை கடனாக வும், மற்றவை மானியமாகவும் வழங்கப்படுகிறது.

இந்த கடன் தொகை, மத்திய அரசு, சிலிண்டருக்கு வழங்கும் மானியத்தில் இருந்து பிடித்தம் செய்யப் படும். கடன்முழுவதும் கழிக்கப்பட்டதும், மானிய தொகை, பயனாளிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.

இதில் பயன் பெறுவோர், ரேஷன் கார்டு, ஆதார் அட்டை (ரேஷன் கார்டில் பெயர் உடைய அனைவருக்கும் தேவை), வங்கி பாஸ் புத்தகம், புகைப்படம் இரண்டு வழங்க வேண்டும். இத் திட்டத்தில் இணைய, நேற்று தமிழகம் முழுவதும் உள்ள, காஸ் ஏஜன்சி அலுவலகங்களில் பெண்கள் கூட்டம் அலைமோதியது. 

இதுகுறித்து, காஸ் ஏஜன்சி உரிமையாளர் ஒருவர் கூறுகையில், 'பாரத் பெட்ரோலியம் சார்பில், தமிழகம் முழுவதும், 1.25 லட்சம் இணைப்புகளும், சேலத்தில், 3,000 இணைப்பு களும் இலவசமாக வழங்கப் படுகின்றன' என்றார்.

நன்றி : தினமலர் நாளிதழ் - 17.09.2016

No comments:

Post a Comment