disalbe Right click

Tuesday, October 11, 2016

நாய்க்கடி


நாய்க்கடி - என்ன செய்ய வேண்டும்?

கேள்வி : 

நாய் கடித்தால் தொப்புளைச் சுற்றி ஊசி போடுவார்கள் என்று பயமுறுத்துகிறார்களே, உண்மையா?

பதில் : 

நாய்க்கடி என்பது மிகவும் ஆபத்தானது... அதனால் வரும் விளைவுகள் பயங்கரமானவை.. சரியான முதலுதவியும் சிகிச்சையும் செய்துகொண்டால் அச்சப்படத் தேவையில்லை.

வீட்டில் நீங்கள் செல்லமாக வளர்க்கும் நாய் கடித்தால், தொற்றுத் தடுப்பு (டி.டி.) ஊசி போட்டாலே போதுமானது.

அது கிருமிகள் பரவுவதைத் தடுத்து விடும்.

ஆனால், தெரு நாயோ அல்லது வெறி நாயோ கடித்துவிட்டால், கடிபட்ட இடத்தை உடனே சோப்பால் கழுவ வேண்டும். பிறகு டெட்டால் போன்ற கிருமிநாசினியால் நன்றாகச் சுத்தம் செய்ய வேண்டும். நாய்க்கடி பட்ட 48 மணி நேரத்துக்குள் தடுப்பூசி போட்டாக வேண்டும். இல்லையென்றால் ஆபத்துதான்.

அதுவும் வெறிநாய்கள் (சில நாய்கள் பார்ப்பதற்கே பயங்கரமாகவும், எப்போதும் நாக்கைத் தொங்கப்பட்டுக்கொண்டு, நாக்கில் இருந்து நீர் வழிந்துகொண்டு, இரைத்துக் கொண்டும் பயங்கரமாக முழித்துக் கொண்டும் இருக்கும்) கடித்துத்தான் ஆக வேண்டும் என்றில்லை. தனது நாக்கினால் நக்கினாலே போதும். அந்த இடத்தில் புண்ணோ, சிராய்ப்போ இருந்தால், அந்த வழியாக "ரேபிஸ் வைரஸ்' (கிருமிகள்) உடம்பின் உள்ளே புகுந்து விடும்.

கடிபட்ட இடத்திலிருந்து, நரம்பு வழியே இந்தக் கிருமி, ஸ்லோ மோஷனில் மூளையை நோக்கிப் பயணிக்கும். அதுவும் மூளைக்கு அருகில் தலையிலோ கழுத்திலோ நாய் கடித்திருந்தால் மேட்டர் ரொம்பவும் சீரியஸ். உடனடியாக டாக்டரைப் பார்க்க வேண்டும்.

தொப்புளைச் சுற்றி, ஊசி போட்டு, நல்லா இருந்த வயிற்றைச் சல்லடையாக்கி, பொத்தல் போட்டு விடுவார்களோ என்று பயப்பட வேண்டாம். கையிலேயே போடும் ஊசி வந்து விட்டது.
------------------------------------------------------------------------------------------------------- ரொசிட்டா

நன்றி : தினமணி - சிறுவர் மணி - 11.10.2016

No comments:

Post a Comment