disalbe Right click

Thursday, December 22, 2016

நடைபாதை பக்தர்களுக்கு ஆதார் எண் கட்டாயம்!


நடைபாதை பக்தர்களுக்கு ஆதார் எண் கட்டாயம்!
திருமலைக்கு வரும் நடைபாதை பக்தர்களுக்கு ஆதார் எண்ணை தேவஸ்தானம் கட்டாயமாக்கி உள்ளது.
திருமலையில் தரிசன டிக்கெட், வாடகை அறை முன்பதிவு செய்ய தேவஸ்தானம் ஆதார் எண்ணை கட்டாயமாக்கியது. 

அதேபோல் தற்போது லட்டு டிக்கெட் முறைகேட்டை தடுக்க நடைபாதை பக்தர்களுக்கும் ஆதார் அட்டையை கட்டாயமாக்கி உள்ளது.

அலிபிரி, ஸ்ரீவாரி மெட்டு நடைபாதை மார்க்கத்தில் வரும் பக்தர்கள், தரிசன டோக்கன்களை பெறும்போது அவர்களின் பெருவிரல் ரேகை பதிவுடன் ஆதார் எண்ணை பதிவு செய்யும் புதியமுறை வியாழக்கிழமை முதல் அமலுக்கு வருகிறது. 

எனவே, நடைபாதை பக்தர்கள் கட்டாயம், தங்களுடன் ஆதார் அட்டை அல்லது வேறு ஏதாவது ஒரு அடையாள அட்டை இருந்தால் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

நன்றி : தினமணி நாளிதழ் – 22.12.2016

No comments:

Post a Comment