disalbe Right click

Monday, January 30, 2017

பிளாஸ்டிக் ஆதார் கார்டு

Image may contain: text

ஆதார் கார்டை பிளாஸ்டிக்கில் மாற்றி தருவது சட்டவிரோதம்

புதுடில்லி:பிளாஸ்டிக் ஆதார் அட்டை வழங்கு வதாக, 200 ரூபாய் வரை வசூலிப்போருக்கு எதிராக, யு.ஐ.டி.ஏ.ஐ., எனப்படும், தனித்துவ அடையாள அட்டை ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

யு.ஐ.டி.ஏ.ஐ., அமைப்பு, நாடு முழுவதும், ஆதார் அடையாள அட்டைகளை இலவசமாக வினியோகித்து வருகிறது. இந்த அட்டைகளை, பிளாஸ்டிக் அட்டையாகவோ அல்லது ஸ்மார்ட் அட்டையாகவோ மாற்றித் தருவதாக, சிலர், 50 முதல் 200 ரூபாய் வரை வசூலிப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.

இதையடுத்து, யு.ஐ.டி.ஏ.ஐ., தலைவர் அஜய் பூஷண் பாண்டே, டில்லியில் நேற்று கூறியதாவது:

காகிதத்தில் வழங்கப்படும், ஆதார் அடையாள அட்டைகள், முற்றிலும் செல்லத்தக்கவை. அதற்கு மாற்றாக, பிளாஸ்டிக், ஸ்மார்ட் கார்டு வடிவில் ஆதார் அட்டைகளை பெற வேண்டிய அவசியம் இல்லை. அவற்றுக்காக, 50 - 200 ரூபாய் வசூல் செய்வோர் குறித்து, மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

ஆதார் கடிதம், ஆதார் காகித அட்டை, இணைய தளம் மூலம் காகிதத்தில், 'டவுன்லோடு' செய்யப் படும் ஆதார் பதிவு, ஆகியவற்றை அனைத்து தேவைகளுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். பிளாஸ்டிக் அல்லது ஸ்மார்ட் ஆதார் அட்டை என்ற ஒன்றுஇல்லவே இல்லை என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்; இதற்காக, யாரும் பணம் செலவு செய்ய வேண்டாம்.

ஆதார் பற்றிய விபரங்களை, வேறு நபர்களிடம் பகிர்ந்து கொள்வதை, மக்கள் தவிர்க்க வேண்டும். பிளாஸ்டிக் கார்டுகளாக மாற்றித் தருவதாக கூறி, ஆதார் கார்டுகளை பெறுவது சட்டவிரோதம்.இவ்வாறு அவர் கூறினா

நன்றி : தினமலர் நாளிதழ் - 30.01.2017

No comments:

Post a Comment