disalbe Right click

Tuesday, February 28, 2017

கைதியை பிரச்சாரம் செய்வத்ற்காக விடுவிக்க முடியாது!

Image may contain: text

கைதியை பிரச்சாரம் செய்வத்ற்காக விடுவிக்க முடியாது!

தேர்தலில் போட்டியிடும் கைதியை பிரசாரத்துக்காக விடுவிக்க முடியாது!

புதுடில்லி: 'சிறையில் இருப்பவர், தேர்தலில் போட்டியிட உள்ள உரிமையை காரணம் காட்டி, பிரசாரம் செய்வதற்காக அவரை சிறையில் இருந்து விடுவிக்க உரிமை கோர முடியாது' என, டில்லி ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது.

உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த, 'குவாமி ஏக்தா தள்' அமைப்பின் தலைவரும், முன்னாள் கொள்ளைக்காரருமான, முக்தார் அன்சாரி, சமீபத்தில், பகுஜன் சமாஜ் கட்சியுடன், தன் கட்சியை இணைந்து கொண்டார்.

உ.பி.,யின் மாவ் சதார் தொகுதியின் எம்.எல்.ஏ.,வாக உள்ள முக்தார் அன்சாரி, பா.ஜ., - எம்.எல்.ஏ., கிருஷ்ணானந்த் ராய் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்.

இந்நிலையில், உத்தர பிரதேசத்தில் தற்போது நடந்து வரும் சட்டசபை தேர்தலில், மாவ் சதார் தொகுதியில் இருந்து, பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளராக, அவர் போட்டியிடுகிறார்.

சிறையில் இருந்தபடியே, வேட்பு மனு தாக்கல் செய்த அவர், பிரசாரத்தில் ஈடுபடுவதற்காக, 'பரோல்' கேட்டு விண்ணப்பித்திருந்தார்.

இதை விசாரித்த கீழ் கோர்ட், அவருக்கு பரோல் அளித்து தீர்ப்பளித்தது.

இதை எதிர்த்து, தேர்தல் கமிஷன், டில்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

அதை விசாரித்த, டில்லி ஐகோர்ட் அளித்துள்ள தீர்ப்பில் கூறியுள்ளதாவது:

சிறையில் இருப்பவர், தேர்தலில் போட்டியிட உரிமை உள்ளது; ஆனால் அந்த உரிமையை காரணம் காட்டி, பிரசாரத்தில் ஈடுபடுவதற்காக, சிறையில் இருந்து விடுவிக்கும் உரிமையை கோர முடியாது.

வழக்கின் தன்மைக்கு ஏற்பவே, பரோல் வழங்குவது குறித்து கோர்ட் முடிவு செய்யும். அதனால், அன்சாரிக்கு கீழ் கோர்ட் அளித்துள்ள பரோல் ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

நன்றி : தினமலர் நாளிதழ் - 27.02.2017

No comments:

Post a Comment