disalbe Right click

Wednesday, February 8, 2017

குடும்பத்தில் ஒருவருக்கே அரசு வேலை

Image may contain: text

குடும்பத்தில் ஒருவருக்கே அரசு வேலை
நமது நாட்டில் படித்தவர்கள் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டு வருகிறது. வேலையில்லாத் திண்டாட்டமும் பெருகி வருகிறது.
ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும், அரசு வேலையில் இருப்பவர்கள் இன்னொரு அரசு ஊழியரையே திருமணம் செய்து கொள்கிறார்கள். இதனால், அந்தக் குடும்பம் வசதியாக இருக்கிறது. மேடு மேலும் மேடாகிறது. பள்ளம் பள்ளமாகவே இருக்கிறது.
இந்த சூழ்நிலை மாற வேண்டுமென்றால், ஒரு அரசு ஊழியர், இன்னொரு அரசு ஊழியரை மணக்கக் கூடாது. 
மணந்தே ஆக வேண்டும் என்று விரும்பினால், அவர்களில் யாராவது ஒருவர் தனது அரசு உத்தியோகத்தை ராஜினாமா செய்துவிட வேண்டும்.
இதனால், பலருக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கும். பணம் ஒரே இடத்தில் சேராது. இது எனது தனிப்பட்ட கருத்து.
இதனை அரசாங்கம் பரிசீலனை செய்யவேண்டும்.
செல்வம் பழனிச்சாமி -09.08.2015

No comments:

Post a Comment