disalbe Right click

Saturday, March 25, 2017

தேர்தல் களம் - டெபாசிட் என்றால் என்ன ?

Image may contain: text

தேர்தல் களம் - டெபாசிட் என்றால் என்ன ?
தேர்தலில் எத்தனை பேர் போட்டியிட்டாலும் ஒருவருக்கு மட்டுமே வெற்றி. மற்றவர்களுக்கு தோல்வி கட்டாயம். ஆனாலும் அந்த தோல்வி கவுரவமாக இருக்க வேண்டும் என்று அனைவரும் விரும்புவார்கள்.
அந்த கவுரவத்தின் அடையாளமாக சொல்வது டெபாசிட்டை தக்க வைத்துக் கொள்வது. அதுவும் எல்லோருக்கும் வாய்க்காது அதிகபட்சமாக 6 பேருக்குதான் அந்த வாய்ப்பு கிடைக்கும்.
அதற்கு மேல் போட்டியிட்டவர்களுக்கு கட்டாயம் டெபாசிட் காலி.
என்ன இந்த டெபாசிட் காலி?
தேர்தலில் போட்டியிடும் எல்லா வேட்பாளர்களும் வேட்பு மனுவுடன் வைப்புத் தொகையும்(டெபாசிட்) செலுத்துவார்கள். தேர்தலில் வெற்றி பெறுபவர்களுக்கு இந்த வைப்புத் தொகை திருப்பித் தரப்படும்.
தோற்பவர்களுக்கும் இந்த வைப்புத் தொகை திருப்பித்தரப்படும்.
அப்படி வைப்புத் தொகையை திருப்பி பெற வேண்டும் என்றால் ஒரு வேட்பாளர் அந்த தொகுதியில் பதிவான செல்லத்தக்க வாக்குகளில் 6ல் ஒரு பங்கு வாக்குகளை பெற்றிருக்க வேண்டும்.
அதாவது ஒரு தொகுதியில் 6000 வாக்குகள் பதிவாகி இருந்தால் 1000 அல்லது அதற்கு மேலான எண்ணிக்கையில் வாக்குகள் பெறும் ஒவ்வொருவருக்கும் வைப்புத் தொகை திருப்பித் தரப்படும்.
அப்படியில்லாமல் 1000க்கும் குறைவான வாக்குகள் பெறுபவர்களுக்கு வைப்புத் தொகையை திருப்பித்தர மாட்டார்கள். அப்படி வைப்புத் தொகையாக செலுத்திய பணத்தை திருப்பி பெற முடியாத தோல்வியைத்தான் 'டெபாசிட் காலி' என்கின்றனர்.
பெரும்பாலும் முக்கிய அரசியல் கட்சிகளுக்கு டெபாசிட் காலி சங்கடம் அதிகம் ஏற்படுவதில்லை. சிறுகட்சிகள், சுயேட்சைகள்தான் இந்த நஷ்டத்தில் சிக்குவார்கள்.
சில நேரங்களில் அரிதாக பெரிய கட்சிகளும், முக்கிய பிரமுகர்களும் கூட இந்த 'டெபாசிட் காலி' அலையில் அடித்து செல்வதுண்டு.
நாடாளு(பாராளு)மன்ற தேர்தலுக்கு அதில் போட்டியிடுபவர் ரூ.25,000/- டெபாசிட் பணம் கட்ட வேண்டும். சட்டமன்ற தேர்தலுக்கு அதில் போட்டியிடுபவர் ரூ.10,000/- டெபாசிட் பணம் கட்ட வேண்டும். SC/ST பிரிவைச் சேர்ந்தவர்கள் மேற்கண்ட தொகையில் பாதியை கட்டினால் போதுமானது.
(2011ம் ஆண்டு கணக்கின்படி) உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் செலுத்த வேண்டிய வைப்புத்தொகை, தேர்தல் செலவின உச்சவரம்பு விவரங்கள்:
ஊராட்சி வார்டு உறுப்பினர் பொதுப் பிரிவினருக்கு ரூ. 200,
எஸ்.சி., எஸ்.டி.யினருக்கு ரூ. 100.
செலவின உச்சவரம்பு ரூ. 3,750.
ஊராட்சித் தலைவர்பொதுப் பிரிவினருக்கு ரூ. 600, எஸ்.சி., எஸ்.டி.யினருக்கு ரூ. 300.
செலவின உச்சவரம்பு ரூ. 15,000.
ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்பொதுப் பிரிவினருக்கு ரூ. 600,
எஸ்.சி., எஸ்.டி.யினருக்கு ரூ. 300.
செலவின உச்சவரம்பு ரூ. 37,500.
மாவட்ட ஊராட்சி உறுப்பினர்பொதுப் பிரிவினருக்கு ரூ. 1000,
எஸ்.சி., எஸ்.டி.யினருக்கு ரூ. 500.
செலவின உச்சவரம்பு ரூ. 75,000.
பேரூராட்சி, மூன்றாம் நிலை நகராட்சி ஆகியவற்றின் உறுப்பினர் பொதுப் பிரிவினருக்கு ரூ. 500,
எஸ்.சி. எஸ்.டியினருக்கு ரூ. 250,
செலவின உச்சவரம்பு ரூ. 11,250.
பேரூராட்சி, மூன்றாம் நிலை நகராட்சி ஆகியவற்றின் தலைவர் பொதுப் பிரிவினருக்கு ரூ. 1,000,
எஸ்.சி. எஸ்.டியினருக்கு ரூ. 500,
செலவின உச்சவரம்பு ரூ. 56,250.
நகராட்சி உறுப்பினர்பொதுப் பிரிவினருக்கு ரூ. 1,000,
எஸ்.சி. எஸ்.டியினருக்கு ரூ. 500.
செலவின உச்சவரம்பு
முதல் நிலை, இரண்டாம் நிலை ரூ. 22,500,
சிறப்பு நிலை, தேர்வு நிலை 56,250.
நகராட்சித் தலைவர்பொதுப் பிரிவினருக்கு ரூ. 2,000,
எஸ்.சி. எஸ்.டியினருக்கு ரூ. 1,000,
செலவின உச்சவரம்பு
முதல் நிலை, இரண்டாம் நிலை ரூ. 1,12,500,
தேர்வு நிலை, சிறப்பு நிலை ரூ. 2,25,000.
செலவு செய்வது எப்படி?தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களுக்கு அனுமதிக்கப்படும் தேர்தல் செலவினங்களை தேசியமயமாக்கப்பட்ட ஏதாவது ஒரு வங்கியில் தனி கணக்கு துவங்கி பராமரிக்க வேண்டும்.
செலவு கணக்கு 1951-ம் ஆண்டின் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 8ஏ 11(ஏ) (2) மற்றும் 10ஏ ஆகிய பிரிவின் படி,
பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டசபை தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்தல் முடிவு வெளியான 30 நாட்களுக்குள் தங்கள் தேர்தல் செலவு கணக்கை தாக்கல் செய்ய வேண்டும். 
அதன்படி தேர்தல் செலவு கணக்கை தாக்கல் செய்யாத வேட்பாளர்கள், 3 ஆண்டுகளுக்கு மீண்டும் தேர்தலில் போட்டியிட தேர்தல் கமிஷன் தடை விதிக்க முடியும்.

No comments:

Post a Comment