disalbe Right click

Wednesday, March 8, 2017

டி.என்.பி.எஸ்.சி., தேர்வு கட்டணம் உயர்வு!


டி.என்.பி.எஸ்.சி., தேர்வு கட்டணம் உயர்வு!

அரசு பணியாளர் தேர்வு வாரியமான, டி.என்.பி.எஸ்.சி.,யின் தேர்வு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில், பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்ட முஸ்லிம், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பட்டம் பெற்றவராக இருந்தால், மூன்று முறை, கட்டணமின்றி, இலவசமாகத் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டது. 

இனி, பட்டம் பெற்றவர்கள் மட்டுமின்றி, கல்வித் தகுதி எதுவாக இருந்தாலும், மூன்று முறை, இலவசமாகத் தேர்வு எழுத அனுமதிக்க, அரசு உத்தரவிட்டுள்ளது. 

அத்துடன் டி.என்.பி.எஸ்.சி., தேர்வுக் கட்டணமும் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. புதிய கட்டணம், மார்ச் 1 முதல் அமலுக்கு வந்துள்ளது.

புதிய கட்டண விபரம்:

• எழுத்து, நேர்முகத் தேர்வு, மாநில அரசுப்பணி தேர்வுக்கான கட்டணம், 125 ரூபாயில் இருந்து, 200 ரூபாயாகஉயர்ந்துள்ளது.

• தமிழ்நாடு சார்பு பணிக்கான தேர்வுக் கட்டணம், 100 ரூபாயிருந்து, 150 ரூபாயாகியுள்ளது.

• நீதித்துறை, தலைமைச் செயலகம், அமைச்சுப் பணிக்கான எழுத்து தேர்வுக் கட்டணம், 75 ரூபாயில் இருந்து, 100 ரூபாயாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.

• முதல் நிலை தேர்வுக் கட்டணம், 75 ரூபாயில் இருந்து, 100 ரூபாய்; ஐந்து ஆண்டுகள் ஆன் - லைன் பதிவுக்கான கட்டணம், 30 ரூபாயில் இருந்து, 150 ரூபாயாக கூடியுள்ளது.

நன்றி : தினமலர் (கல்விமலர்) – 08.03.2017

No comments:

Post a Comment