disalbe Right click

Friday, March 31, 2017

ஸ்மார்ட் கார்டு பெற என்ன செய்ய வேண்டும்?


ஸ்மார்ட் கார்டு பெற என்ன செய்ய வேண்டும்?

மதுரை, உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை மூலம், மதுரை மாவட்டத்தில் ரேஷன் கார்டுக்கு பதிலாக, ஏப்.,1 முதல் 'ஸ்மார்ட் கார்டு' வழங்கப்பட உள்ளது.

'ஸ்மார்ட் கார்டு'கள் வினியோகம் குறித்த விபரம், ரேஷன் கார்டுதாரர்களின் அலைபேசி எண்ணிற்கு ஒருமுறை கடவுச்சொல் ஓ.டி.பி.,(ஒன் டைம் பாஸ்வேர்டு) எண் பதிவு செய்து குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்.,) அனுப்பப்படும். 

அது வரப்பெற்ற கார்டுதாரர்கள் தற்போதைய ரேஷன் கார்டு, ஆதார் அட்டை அசல் நகல் மற்றும் எஸ்.எம்.எஸ்., வரப்பெற்ற அலைபேசியுடன் சிறப்பு முகாமிற்கு செல்ல வேண்டும். 

ஒப்புதல் பட்டியலில் கையொப்பமிட்டு, புதிய 'ஸ்மார்ட் ரேஷன் கார்டை பெறலாம். இதற்கு கட்டணமில்லை.

இதுவரை அலைபேசி எண்ணை பதிவு செய்யாதவர்கள், உடனடியாக ரேஷன் கடைகளில் பதிவு செய்ய வேண்டும்.

'ஸ்மார்ட் ரேஷன் கார்டு' குறித்த எஸ்.எம்.எஸ்., வராமல் இருந்தால் அச்சப்பட தேவையில்லை. 

அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் 'ஸ்மார்ட் கார்டு' வழங்கப்படும் என கலெக்டர் வீரராகவராவ் தெரிவித்தார்.

நன்றி : தினமலர் நாளிதழ் - 31.03.2017

No comments:

Post a Comment