disalbe Right click

Tuesday, September 26, 2017

ரத்தத்தை உறிஞ்சும் அட்டை

ரத்தத்தை உறிஞ்சும் அட்டை
கிரெடிட் கார்டு
உங்களுக்கு இமெயில் ஐடி இருக்கின்றதா? அப்படியென்றால், அந்த இமெயில் ஐடிக்கு  நீங்கள் விண்னப்பிக்காமலேயே, ”உங்களது கிரடிட் கார்டு ரெடியா இருக்கு, உடனே வந்து வாங்கிக் கொள்ளுங்கள்!” என்ற அர்த்தம் கொண்ட பல மெசேஜ்கள் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் உங்களுக்கு யாராலேயோ அனுப்பப்பட்டு இருக்கும். அட நம்மளயும் மதிச்சி பேங்கில இருந்து கூப்புடுறாங்களேன்னு நெனைக்காம, நாமதான் அப்ளையே பண்ணலியே, பிறகு எதுக்கு நம்மள கூப்புடுறாங்க?ன்னு  நீங்கள் அதனை கண்டு கொள்ளாமல் விட்டு விட்டால் தப்பித்தீர்கள். இல்லையென்றால், புதைகுழிக்குள் இறங்கப் போகிறீர்கள்! என்று அர்த்தம். 
சாதாரண வங்கி என்று இல்லை. மிகப்பெரிய வங்கிகளும் இந்த வலையை நமக்கு விரித்து நம்மை வளைக்கிறார்கள்.
இவுங்க ஏன் இப்படி நமக்கு தேடி வந்து இலவசமா கிரடிட் கார்டு தர்ராங்கன்னு கொஞ்சமாவது நாம யோசிக்கணும்.
ஆனா, ரொம்ப பேரு எதையும் யோசிக்கிரதே இல்ல. எப்படி அத யூஸ் பண்ணணும்னு கூட தெரியாமலேயே வாங்கிடுறாங்க. இன்னும் சில பேரு நாலஞ்சி அட்டய வாங்கி வச்சிக்கிடுவாங்க. அத ஒரு கவுரவமா நெனக்கிறாங்க.
கட்டணம்
நம்ம நாட்டுல, “ஆதாயம் இல்லாம செட்டி ஆத்தோட போவானா?”ன்னு ஒரு பழமொழி கேள்விப்பட்டு இருப்பீங்க. அது கிரடிட் கார்டு கொடுக்குற வங்கிகளுக்கு ரொம்ப பொருந்தும். உங்களப் பொருத்த அளவில, அவுங்களுக்கு நீங்க “பொன்முட்டை இடுர வாத்து!” இதுக்கு வருஷத்துக்கு இவ்வளவுன்னு கட்டணம் இருக்கு! 200 ரூபாயில இருந்து 2000 ரூபாய்க்கு மேல கட்டவேண்டியது வரும். அத நீங்க கட்டியே ஆகணும். உங்கள குழிக்குள்ள தள்ள சில தள்ளுபடிகளை வங்கிகள் அறிவிக்கும். அதாவது, நீங்க வருஷத்துக்கு ஒன்றரை லட்ச ரூபாய் செலவு செஞ்சீங்கன்னா நீங்க வருடாந்திர கட்டணம் கட்ட வேண்டியதில்லன்னு சொல்லுவாங்க. ஆனா, உங்க கிரடிட் அட்டையோட லிமிட்டே வருஷத்துக்கு 30,000 ரூபாய்க்குள்ளதான் இருக்கும். நம்மளும் வருடாந்திர கட்டணம் ரத்தாகுதேன்னு நெனச்சி,  தேவையே இல்லாம கிரடிட் கார்ட தேச்சி  அதுக்கு வட்டி கட்ட முடியாம முழிப்போம்.
நீங்க அத பயன்படுத்தாம கட்டுப்பாடோட இருந்தாலும், உங்க நண்பருக்குன்னோ அல்லது உங்க உறவினருக்குன்னோ  ஒரு அவசரத் தேவைன்னு பணம் எடுத்து கொடுக்க வேண்டிய சூழ்நிலைகளும் உருவாகும். வேறு வழியில்லாம கொடுத்திருக்கிற லிமிட்டுக்கு மீறி செலவழிப்போம்.
செய்யும் பிஸ்னஸில், இன்னும் பத்தே நாளில் பணம்தான் வந்திரும்ன்னு அதிகமாக முதல் போட்டு அகலக் கால் வைப்பீங்க. எதிர்பார்த்தபடி பணம் வராது. என்ன செய்வது என்றே தெரியாது.
சுயரூபம்
அப்பதான் வங்கி தன்னோட சுயரூபத்த நமக்கு காமிக்கும். வட்டி, வட்டிக்கு வட்டி, தாமதக் கட்டணம், சேவை வரி, அது இதுன்னு போட்டு நம்மள தாக்கும். அதக்கட்ட முடியாம திண்டாடுவோம்.  நாம வாங்கின பணம், கட்டின வட்டி, அபராதம் எல்லாமே இம்மிகூட பிசகாம சிபில்ல ரெக்காடாயிரும். இதனால நம்மோட சிபில் ஸ்கோர் ரொம்ப பாதிக்கும். அதுக்கப்புறம் நாம எங்கயுமே கடன் வாங்க முடியாது.   
என்ன செய்ய வேண்டும்?
உங்களோட கிரடிட் கார்டின் லிமிட் 30,000 ரூபாயின்னா, 10,000 ரூபாய மட்டும் பயன்படுத்துனீங்கன்னா உங்க சிபில் ஸ்கோர் உங்கள பாதிக்காது. சில நேரங்களில் 15,000 ரூபாய் வரைக்கும் போகலாம். அதுக்கு மேல போனா, நீங்க அதுக்கு அடிமையாயிட்டீஙகன்னு அர்த்தம். இந்த சாதாரண அட்டைய ரத்தத்தை உறிஞ்சும் “அட்டையாக” மாற்றுவது நம்ம கையிலதான் இருக்கு.
******************************************************************அன்புடன் செல்வம் பழனிச்சாமி 

No comments:

Post a Comment