disalbe Right click

Wednesday, January 10, 2018

சிறப்பு அடையாள அட்டை

 ஆதார் கார்டு போல மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும்.
ஆதார் கார்டு போல் நாடு முழுவதும் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு ஒரே மாதிரியான 'யுனிக் ஐடி' கார்டுகளை வழங்க மத்திய அரசு அறிவித்துள்ளதாக, மாற்றுத் திறனாளிகள் நல துறை அதிகாரிகள்  கூறியுள்ளனர்.
மாநில அரசுகள் மூலம்
ஒவ்வொரு மாநிலமும் மாற்றுத் திறனாளிகளுக்கு என்று தனியாக  அடையாள அட்டை வழங்கியுள்ளது.  அந்த அட்டையை வைத்திருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள், தொழில் தொடங்க கடன் உதவிகளை மாநில அரசுகள்,  வழங்கி வருகிறது.
நாடு முழுவதும் 
நாடு முழுவதும் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு ஆதார் அட்டையைப் போல் ஒரே மாதிரியான யுனிக் ஐடி கார்டை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதுஆதார் அட்டையில் இடம் பெற்றுள்ள விவரங்கள் போல், இந்த அடையாள அட்டையிலும் 40 சதவீதத்துக்கு மேல் ஊனமுள்ள மாற்றுத்திறனாளியின் பெயர், வயது, முகவரி, ஆதார் எண், ஊனம் தொடர்பான விபரங்கள் மற்றும் குயிக் ரெஸ்பான்ஸ் கோடு ஆகியவை  இடம் பெற்றிருக்கும்.
இந்த அடையாள அட்டை பெற என்ன செய்ய வேண்டும்?
மாற்று திறனாளிகள் தங்களுடைய ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, ஜாதிச் சான்றிதழ்களின் நகல்கள் மற்றும் மருத்துவ சான்றிதழ்களின் நகல்களுடன் புகைப்படம் இணைத்து அந்தந்த மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
இதற்காக ஒவ்வொரு மாநிலம் முழுவதும் உள்ள மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்திற்கு பிரத்யேக மென்பொருள், லேப்டாப் வழங்கப்பட்டுள்ளது.
இலவசம்
அவர்களின் புகைப்படத்துடன், முழு விபரங்களையும் அங்கு பதிவேற்றம் செய்து மத்திய அரசின் மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை இலவசமாக வழங்கப்படும். மாற்று திறனாளிகளுக்காக ஆதார் கார்டில் இருப்பது போல் கை விரல் ரேகை, கண் விழி பதிவு செய்யும் முறையில் இருந்து இதற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
************************************ அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 11.01.2018

No comments:

Post a Comment