disalbe Right click

Sunday, February 4, 2018

விஜிலென்ஸ் விழிப்புணர்வு முகாம்

பயணியர்களின் அன்பான கவனத்திற்கு.....
தென்னக ரயில்வேயில், விஜிலென்ஸ் பிரிவின் சார்பாக பயணியர்களுக்கு விழிப்புணர்வு முகாம், வருகின்ற 10.02.2018ம் தேதி வரை நடத்தப்படுகிறது.
ரயில்வேயில் நடக்கின்ற ஊழல்கள், முறைகேடுகள், உணவு, சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு குறைபாடுகள், இரயில்வே ஊழியர்களின் அடாவடி மற்றும் ரயில் பயணத்தில் ஏற்படும் பிரச்னைகள் உட்பட, அனைத்து முறைகேடுகளையும், விஜிலென்ஸ்
உதவி மையத்திற்கு, 155210 என்ற எண்ணில் தெரிவிக்கலாம்.
இணையதளம் மூலமாக, vigcomplaints@sr.railnet.gov.in என்ற முகவரியிலும் புகாரை பதிவு செய்யலாம். இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
உதவி மையத்தின் போன் எண் மற்றும் இணையதள முகவரி குறித்து, பயணியருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த, தெற்கு ரயில்வே முழுவதிலும் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில், 22.01.2018 முதல் 28.01.2018 வரை, விஜிலென்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஏற்கனவே நடத்தப்பட்டுள்ளன.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை, வரும், 10.02.2018 ம் தேதி வரை, முக்கிய ரயில் நிலையங்களில் தமிழ்நாடு முழுவதும் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
******************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி, 04.02.2018

No comments:

Post a Comment