disalbe Right click

Wednesday, February 7, 2018

ஆதார் எண் பாதுகாப்பு

உங்கள் ஆதார் எண் பாதுகாப்பாக இருக்கிறதா! என்று சோதித்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும்?
நம்முடைய ஆதார் எண்ணை வேறு யாராவது பயன்படுத்துகிறார்களா? என்பது இன்றைக்கு எல்லோர்க்கும் எழுகின்ற சந்தேகமாக ஆகிவிட்டது. ஏனென்றால் நமது வங்கி எண், எரிவாயு இணைப்பு எண் என்று நம்மைப் பற்றிய முக்கியமான தகவல்கள் அனைத்தையும் கட்டாயமாக்கி  ஆதாருடன்  மத்திய அரசு  இணைத்துவிட்டது.  அதனால், நமது ஆதார் எண்ணை வைத்து நம்மைப் பற்றிய தகவல்கள் அனைத்தையும் மற்றவர்கள் பெறுகிறார்களோ? என்ற ஒருவித சந்தேக மனப்பான்மையுடன் நாம் இருந்து வருகிறோம். இதனை தீர்க்க  UIDAI இணையதளத்தில்  https://resident.uidai.gov.in/notification-aadhaar என்று புதிதாக ஒரு லிங்க் கொடுக்கப்பட்டு உள்ளதுஇந்த லிங்கிற்குச் சென்று நாம் நம்முடைய ஆதார் எண்ணைப் பதிவு செய்து அங்கு கொடுக்கப்பட்டுள்ள ரகசியக் குறியீட்டு எண்ணைப் பதிவு செய்து Generate One Time Password  க்ளிக் செய்ய வேண்டும்.
ஏற்கனவே, ஆதார் அட்டை வாங்கிய போது அதில் பதிவு செய்த உங்களின் செல்போன் எண்ணுக்கு ஒரு One Time Password  வரும். மேலும், அப்போது  திரையில் உள்ள விண்ணப்பத்தில், உங்கள் ஆதார் எண் பற்றிய அனைத்துத் தகவல்களும் வேண்டுமா? அல்லது குறிப்பிட்ட காலக்கட்டத்துக்கான தகவல்கள் மட்டும் வேண்டுமா? என்பதை பதிவு செய்து அந்த One Time Password ஐ பதிவு செய்தால் நீங்கள் கேட்ட தகவல்கள் கிடைக்கும்.
அதாவது, உங்கள் ஆதார் எண்ணை நீங்கள் எங்கெல்லாம் பதிவு செய்திருக்கிறீர்கள் என்ற அனைத்துத் தகவல்களும் ஒரு பட்டியலாகக் கிடைக்கும்.
உங்கள் ஆதார் எண்ணை வேறு யாரேனும் தவறாகப் பயன்படுத்தியிருந்தால் இதன் மூலம்  உங்களால் எளிதாக அறிந்து கொள்ள முடியும்.  அப்படி பயன்படுத்தி இருந்தால், உடனடியாக 1945 என்ற எண்ணை தொடர்பு கொண்டு நீங்கள் புகாரும் அளிக்கலாம்.
***************************************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 07.02.2018 

No comments:

Post a Comment