disalbe Right click

Wednesday, March 21, 2018

புரோ நோட் சம்பந்தமான வழக்கு

கடனுறுதிச் சீட்டை திரும்பப்பெற உரிய நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும்!
மொதல்ல்ல வாதி என்ன சொல்றாருன்னு பார்க்கலாம், வாங்க!
என்னுடைய பெயர் மாதவன். சீர்காழி நகரத்தில் வசித்து வருகிறேன். பிரதிவாதி சௌந்திரராஜன் அவர்களும் சீர்காழி நகரத்தில் வசித்து வந்தார். அங்குள்ள நகராட்சி அலுவலகத்தில் சுகாதார மேற்பார்வையாளராக பணிபுரிந்து வந்தார். கடந்த 10.10.2010ம் ஆண்டில் தன்னுடைய குடும்ப செலவுகளுக்காக மாதவன் என்ற என்னிடம் 80,000/- ரூபாய் கடனாக பெற்றார். மாதம் ஒன்றுக்கு 100/-ரூபாய்க்கு 1/-ரூபாய் வட்டி வீதம் செலுத்திவருவதாகவும், அசலையும் வட்டியையும் சேர்த்து நான் கேட்கும்போது என்னிடத்திலோ அல்லது நான் அதிகாரம் வழங்கியவரிடத்திலோ கொடுப்பதாக அவர் என்னிடம் ஒப்புக் கொண்டார். அதற்கு ஆதாரமாக ஒரு புரோ நோட்டிலும் அதனை எழுதித் தந்தார். ஆனால், வட்டியையோ, முதலையோ அவர் எனக்கு செலுத்தவில்லை. இந்த சூழ்நிலையில் அவர் புதுக்கோட்டை நகராட்சி அலுவலகத்திற்கு வேலை மாறுதல் செய்யப்பட்டார். என்னுடைய வழக்கறிஞர் மூலமாக ஒரு அறிவிப்பை அவரது புதுக்கோட்டை முகவரிக்கு நான் கடந்த 08.10.2011 அன்று அனுப்பி வைத்தேன். ஆனால், அவர் அதனை பெற்றுக் கொள்ளாமல் திருப்பி அனுப்பிவிட்டார். அவருக்கு சொந்தமாக மூன்று லட்சம் ரூபாய் பெறுமான வீடு உள்ளது. அவரது வருமானம் வருடத்திற்கு இரண்டு லட்ச ரூபாய்க்கும் அதிகமாக உள்ளது. ஆகவே கடன் நிவாரணச் சட்டப் பலன்கள் அவருக்கு கிடைக்கக் கூடியதல்ல. எனவே, பிரதிவாதி சௌந்திரராஜன் அவர்களிடமிருந்து தாவாத் தொகை 92,666/- ரூபாயை பின்வட்டி மற்றும் வழக்கு செலவுத்தொகையுடன் பெற்றுத்தர இந்த வழக்கை நான் தாக்கல் செய்துள்ளேன்.
பிரதிவாதி என்ன சொல்றாருன்னு பார்க்கலாம், வாங்க!
என்னுடைய பெயர் சௌந்திரராஜன். சீர்காழி நகரத்தில் வசித்து வந்தேன். . அங்குள்ள நகராட்சி அலுவலகத்தில் சுகாதார மேற்பார்வையாளராக பணிபுரிந்து வந்தேன். அந்த ஊரில் உள்ள மாதவன் என்பவரிடம் கடந்த 2007ம் வருடத்தில் 80,000/- ரூபாய் கடனாக பெற்றிருந்தேன். அதனை தவணை முறையில் 5,000/- ரூபாய் மற்றும் 10,000/- ரூபாய்களாக கொடுத்து அடைத்து விடுவதாகத்தான் கூறி அந்தக் கடனை பெற்றிருந்தேன். அந்தத் தொகையை அவரிடமிருந்து பெறும்பொழுது அவரிடம் ஏதும் நிரப்பப்படாத 2 புரோ நோட்டில் கையெழுத்துப் போட்டு கொடுத்திருந்தேன். அதில் சாட்சிக் கையெழுத்து யாரும் போடவில்லை. அந்த புரோ நோட்டில் இப்போது தேதி, தொகை மற்றும் சாட்சிகள் கையெழுத்துகளை நிரப்பி மோசடியாக இந்த வழக்கை மாதவன் தாக்கல் செய்துள்ளார் . அவரது உறவினர் துரைப்பாண்டி என்பவரிடம் எனது கையெழுத்து உள்ள மற்றோரு புரோ நோட்டைக் கொடுத்து அவர் மூலமாகவும் இது போன்ற ஒரு வழக்கை தொடுத்துள்ளார். வழக்கறிஞர் அறிவிப்பு எனக்கு வரவே இல்லை. நான் அலுவலகத்திலேயே இருந்து பணிபுரிபவன் அல்ல. நகராட்சியின் பல இடங்களுக்குச் சென்று மேற்பார்வை இடும் பணி செய்து வருகிறேன். சொசைட்டியில் லோன் போட்டு  கடந்த 06.10.2010 அன்று மாதவனிடம் 60,000/- ரூபாய் செலுத்தி அசலில் கழித்துவிட்டேன். அதனை வரவு வைத்து தருமாறு மாதவனிடம் கேட்டதற்கு புரோ நோட்டை வீட்டில் வைத்துவிட்டு வந்துவிட்டேன், பிறகு வரவு வைத்து விடுகிறேன் என்று மாதவன் கூறியதை நம்பி பேசாமல் இருந்துவிட்டேன். இன்னும் நான் 20,000/- ரூபாய்தான் அசலில் தரவேண்டும்..வாங்கிய கடனுக்குக்காக வட்டியாக 4% வீதம் ஏற்கனவே  45,000/- ரூபாய் செலுத்தியுள்ளேன். நான் 2007ல் வாங்கிய கடன் இது. ஆகையால் காலாவதி ஆகிவிட்டது. இதனை தள்ளுபடி செய்ய வேண்டும். 
பிரதிவாதி செய்த தவறுகள்
பணம் திருப்பிக் கொடுத்ததற்கான ஆதாரம் ஏற்படுத்தவில்லை.
தான் கொடுத்த பணத்தை புரோ நோட்டில் மாதவன் வரவு வைக்கவில்லை என்பது தெரிந்திருந்தும், அதனை வரவு வைக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
ஆதாரங்களை நீதிமன்றத்தில் அளிக்க முடியாததால் தீர்ப்பு பிரதிவாதிக்கு எதிரானது. 
*********************************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 21.03.2018 
மாவட்ட உரிமையியல் நீதிமன்றம். சீர்காழி
முன்னிலை : திரு . செல்வராஜ்.¸ B.C.A., B.L.,
மாவட்ட உரிமையியல் நீதிபதி. சீர்காழி
2017-ம் ஆண்டு ஜனவரித் திங்கள் 4-ம் நாள் புதன்கிழமை திருவள்ளுவராண்டு 2047. துர்முகி வருடம் மார்கழித்திங்கள் 20-ம்நாள்
அசல் வழக்கு எண். 38/2012
மாதவன் வாதி
.....எதிராக.....
சௌந்திரராஜன் பிரதிவாதி
வழக்கிலிருந்து முக்கிய குறிப்புகள்:
'வாதியிடம் 2007-ம் ஆண்டில்தான் பிரதிவாதி கடன் பெற்றார் என்பதையும். அந்தக்கடனை 2010-ம் ஆண்டில் வாதிக்கு பிரதிவாதி திருப்பிச் செலுத்திவிட்டார் என்பதையும் நிரூபணம் செய்ய வேண்டிய பொறுப்பு பிரதிவாதியையே சார்ந்தது ஆனால் பிரதிவாதி அவ்வாறு எவ்வித சாட்சியங்களையும். ஆவணங்களையும் தாக்கல் செய்து நிரூபணம் செய்யவில்லை. வாதியிடம் பெற்ற கடன் தொகையை திருப்பிச் செலுத்தியபின் கடனுறுதிச்சீட்டை திருப்பிக் கொடுக்கும்படி வாதியிடம் கேட்டும் அதனை வாதி திருப்பிக்கொடுக்கவில்லை என்று கூறும் பிரதிவாதி வாதியிடம் உள்ள கடனுறுதிச் சீட்டை திரும்பப்பெற உரிய நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும். அவ்வாறு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் வெறுமனே வாதியிடம் பெற்ற கடன் தொகையை திருப்பிச் செலுத்திவிட்டதாக பிரதிவாதி கூறுவது ஏற்கத்தக்கதாக இல்லை. வாதிதரப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள முன்தீர்ப்பு நெறியில் மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் பின்வருமாறு கூறியுள்ளது:-
“ CDJ - 2011 - MHC - 5091 , Siva Mohan -Vs- Jayabalan “
“ 5............... Further, it is highly unbelievable that the promissory note executed in the year 1992 was misused in the year 2001 as alleged by the appellant and no notice was issued by the appellant to the respondent calling upon the respondent to return the promissory note executed by him in the year 1992 after discharging the promissory note amount ...@
மேற்கண்ட முன்தீர்ப்பு நெறியின்படி வாதியிடம் பிரதிவாதி 2007-ம் ஆண்டில் கடன் பெற்றுக்கொண்டு கடனுறுதிசீட்டு எழுதிக்கொடுத்திருந்தால் 2010-ம் ஆண்டில் கடன் தொகையை திருப்பிச் செலுத்தியதாக கூறப்படும் தேதிக்கு பின் உடனடியாக பிரதிவாதி வாதிக்கு அறிவிப்பு அனுப்பி கடனுறுதிச்சீடடை திருப்பிக் கொடுக்கும்படி கேட்டிருக்க வெண்டும். அவ்வாறு பிரதிவாதி அறிவிப்பு அனுப்பி நடவடிக்கை எடுத்துள்ளார் என்பதற்கு எவ்வித ஆதாரமும் தாக்கல் செய்யவில்லை. வாதியிடம் பிரதிவாதி 10.10.2010 அன்று பெற்ற கடன் தொகையான ரூ.80.000/-த்தை பிரதிவாதி திருப்பிச் செலுத்தாததால் அத்தொகையை வட்டியுடன் திருப்பிச் செலுத்தும்படி அறிவிப்பு அனுப்பியுள்ளதை வாதி வா.சா..2 ஆவணம் மூலம் நிரூபணம் செய்துள்ளார். வாதியிடம் பெற்ற கடன் தொகையை பிரதிவாதி திருப்பிச் செலுத்தவிலலை என்பதை உரிய ஆவண வாய்மொழி சாட்சியங்கள்மூலம் நிரூபணம் செய்துள்ள வாதி தாவா தொகையை பிரதிவாதியிடமிருந்து பெறுவதற்கு உரிமை உடையவர் என்று இந்நீதிமன்றம் முடிவு செய்து எழுவினா-2-க்கு தீர்வு காண்கிறது.
நன்றி : http://www.tamiljudgements.org

No comments:

Post a Comment