disalbe Right click

Monday, April 16, 2018

மோசடி செய்வது சிவில் வழக்கா?

சிவில் வழக்கு கிரிமினல் வழக்காக மாற வாய்ப்புண்டு!
ஆனால், கிரிமினல் வழக்கு சிவில் வழக்காக மாறாது!
கடந்த வருடம் ஏப்ரல் மாதத்தில், சிவகாசி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில், எனது சங்க நிர்வாகிகள், போலி ஆவணம் புனைந்தது மற்றும் அதனை உண்மையானது போல பயன்படுத்திக் கொண்டிருப்பது பற்றி வழக்கு ஒன்று (Cr.M.P. No.:6216/2017) தாக்கல் செய்திருந்தேன்.
இந்தி்ய தண்டணைச் சட்டம், பிரிவுகள் 468 மற்றும் 471ன்படி ஒவ்வொரு பிரிவிற்கும் ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டணை வழங்கக்கூடிய அளவுக்கு அது கடுமையான கிரிமினல் குற்றம் செய்யப்பட்டவர்களின் மீது தொடுக்கப்பட்ட வழக்கு அது. முழுக்க முழுக்க ஆவண சாட்சியங்களின் அடிப்படியில் அது என்னால் தொடுக்கப்பட்டிருந்தது.
விளக்கம் கேட்ட நடுவர்
வழக்கை எடுப்பதற்கு முன்னமே சிவகாசி குற்றவியல் நீதித்துறை நடுவர் அவர்கள் இது சிவில் வழக்கு போல் இருக்கிறதே, இங்கு வந்து தாக்கல் செய்ததற்கான காரணம் என்ன? என்று என்னிடம் விளக்கம் கேட்டு எனது கேஸ்கட்டை திருப்பி கொடுத்துவிட்டார்கள். .
நானும் நடைபெற்ற குற்றங்களையும், அதற்குரிய சட்டப் பிரிவுகளையும் அதற்குரிய தண்டணைகளையும் குறிப்பிட்டு இது கிரிமினல் கேஸ்தான் என்பதை எனது உரையின் மூலம் அழுத்தமாக தெளிவு படுத்தினேன்.
அதன் பிறகே கேஸ் நம்பரானது.
ஒரு வருடத்திற்கு மேலாக வழக்கு நடந்தது. முடிவில் இது கிரிமினல் சாயம் பூசப்பட்ட சிவில் கேஸ் என்று தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
சிவகாசி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நான் தாக்கல் செய்த வழக்கு கிரிமினல் வழக்குதான் என்பதற்கான விளக்க உரை

குற்றவியல் விசாரணை முறைச் சட்டம் பிரிவு:155(4)
ஒரு வழக்கு இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட குற்றங்களைப் பற்றியதாக இருந்து அவற்றில் குறைந்தது ஏதேனும் ஒன்று கைது செய்யப்படக்கூடிய குற்றமாக இருந்தால், அவ்வழக்கு கைது செய்யப்படக்கூடிய வழக்காக கொள்ள வேண்டும்.

 
பசுமாட்டின் கதையைப் போலவே எனது வழக்கும் இருக்கிறதா?
சொல்லுங்கண்ணே, சொல்லுங்க!
************************************************* அன்புடன் செல்வம் பழனிச்சாமி, 17.04.2018

No comments:

Post a Comment