disalbe Right click

Tuesday, May 22, 2018

மாப் ஆப்ரேஷன்

காவல்துறை துப்பாக்கிச் சூடு - விதிமுறைகள்
பொது இடங்களில் நடத்தும் போராட்டக்காரர்களை கலைப்பதற்கு, காவல் துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கான தெளிவான நிர்வாக நடைமுறை விதிகள் ஏற்கனவே ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இதற்குமாப் ஆபரேஷன்என்று பெயர்
விதிமுறைகள் என்ன?
  • சட்டவிரோதமாகக் கூடியிருக்கும் கூட்டத்துக்கு முன்னதாக 500 மீட்டர் தூரத்தில், முதலில் காவல் படையினர் அணிவகுத்து நிற்க வேண்டும்
  • முன்வரிசையில் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை கையாளும் அணியினர் நிற்க வேண்டும் 
  • இரண்டாவதாக லத்தி சார்ஜ்அணியினர் நிற்க வேண்டும்.
  • மூன்றாவதாக  குறைவான எண்ணிக்கையிலான துப்பாக்கி ஏந்திய அணியினர் நிற்க வேண்டும்.
  • இறுதி வரிசையில் முதலுதவி அளிக்கும் அணியினர் நிற்க வேண்டும் 
  • முன்னறிவிப்பாக போராட்டக்காரர்களுக்கு மைக்கில் எச்சரித்து விடுத்து, எச்சரிக்கை கொடியை உயர்த்திப் பிடிக்க வேண்டும்
  • அதன்பிறகும் போராட்டக்காரர்கள் கலைந்து போகாவிட்டால் கண்ணீர்ப்புகை குண்டுகளைத் தரையில் படும்படியாக 45 டிகிரி கோணத்தில் வைத்துச் சுட வேண்டும்.
  • தொடர்ந்து போராட்டக்காரர்கள் மீது தண்ணீர் பாய்ச்ச வேண்டும். அவர்கள் மீது ரப்பர் குண்டுகளையும் வீசலாம்
  • அதன் பின்பு லத்தி சார்ஜ் செய்ய வேண்டும்.
  • அதன்பிறகும் கலவரம் அடங்கவில்லை என்றால் துப்பாக்கி அணியினர் இரு வரிசையாக சிறிது முன்னேறி, துப்பாக்கியில் தோட்டாக்களை நிரப்ப வேண்டும்.
  • காவலர்களில் ஒருவர் 5 அடி முன்னால் சென்று மீண்டும் எச்சரிக்கை விடுக்க வேண்டும்..  
  • இதன் பிற்கு காவல் அதிகாரி குறிப்பிட்ட ஒரு காவலரிடம் கூட்டத்தில் இருக்கும் குறிப்பிட்ட முக்கியமான ஒரு நபரை மட்டும் காலில் சுடும்படி உத்தரவிடுவார். (அந்த நபர் சுடப்பட்டதும் போராட்டக்காரர்கள் கலைந்து ஓடுவிடுவார்கள் என்பது காவல் துறையினரின் கணிப்பு) 
  • அதன் பின்பு உடனடியாக முதலுதவி அணியினர் முன்னேறிச் சென்று குண்டடிப் பட்ட நபருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து அவரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டும்.
இந்த நடைமுறைகள் ஏனோ இப்போது பின்பற்றப்படுவது இல்லை.
********************************************************** செல்வம் பழனிச்சாமி - 23.05.2018 

No comments:

Post a Comment