disalbe Right click

Thursday, June 14, 2018

இந்திய தண்டணைச் சட்டம் பிரிவு 197 & பிரிவு 219

இந்திய தண்டணைச் சட்டம் பிரிவு 197 & பிரிவு 219
படித்ததை பகிர்ந்து கொள்கிறேன்.
  • இந்திய தண்டணைச் சட்டத்தில் பிரிவு 197ம், பிரிவு 219ம் நீதிமன்ற நடவடிக்கைகளில் பொய்யான சாட்சியங்கள் புனைபவருக்கு அல்லது பொய்யான ஆவணங்கள் புனைபவருக்கு விதிக்கப்படுகின்ற தண்டணையைப் பற்றிக் கூறுகிறது.
  • இரண்டிற்கும் தண்டணை என்னமோ, ஒன்றுதான்! ஆனால், இரண்டிற்கும் ஒரு வித்தியாசம் உண்டு.
இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?
  • சிறு வித்தியாசம்தான்.
  • முதலில் சொல்லப்பட்ட இந்தியதண்டணைச்சட்டம் பிரிவு 197 - சாதாரண பொதுமக்களுக்கு உரியது.
  • இரண்டாவதாக சொல்லப்பட்ட இந்தியதண்டணைச்சட்டம் பிரிவு 219 ஆனது பொது (அரசு) ஊழியர்களுக்கு உரியது.
இந்தியதண்டணைச்சட்டம் பிரிவு 197
  • ஒரு நீதிமன்ற நடவடிக்கையின் எந்தக் கட்டத்திலாவது, உட்கருத்தோடு, பொய்சாட்சியம் தருகின்ற அல்லது ஒரு நீதிமன்ற நடவடிக்கையின் எந்தக் கட்டத்திலாவது, உபயோகிக்கப்படும் பொருட்டு, பொய்சாட்சியம் புனைகிற எவரொருவரும், ஏழு ஆண்டுகள் வரையில் நீடிக்கக்கூடிய ஒரு கால அளவுக்குச் சிறைத் தண்டணை வகைகள் இரண்டில் ஒன்று விதித்து தண்டிக்கப் படுதல் வேண்டும். மற்றும் அவரை அவராதத்திற்கு உள்ளாக்கவும் செய்யலாம்.
இந்தியதண்டணைச்சட்டம் பிரிவு 219
  • பொது ஊழியராக இருந்து கொண்டு ஒரு நீதிமன்ற நடவடிக்கையின் எந்தக் கட்டத்திலும் சட்டத்திற்கு முரணானது, என்று அவர் அறிந்திருக்கின்ற அறிக்கை, கட்டளை, தீர்ப்பு அல்லது எதனையும் நெறிகேடான முறையில் அல்லது குரோதத்துடன் செய்கின்ற அல்லது பகிர்கின்ற எவராயினும், ஏழு ஆண்டுகள் வரையில் நீடிக்கக்கூடிய ஒரு கால அளவுக்குச் சிறைத் தண்டணை வகைகள் இரண்டில் ஒன்றோ அல்லது அபராதமோ அல்லது இரண்டுமோ விதித்து தண்டிக்கப்படுதல் வேண்டும்.
  • இதன்படி நீதிபதிக்கும் தண்டணை எற்றுத் தரலாம்.
************************************* அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 14.06.2018

No comments:

Post a Comment