disalbe Right click

Thursday, June 6, 2019

24 மணி நேரமும் இனிமேல் கடை - அரசாணை.


24 மணி நேரமும் இனிமேல் கடையை திறந்து வைக்கலாம்.
தொழில் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பைகளை அதிகரிக்கும் விதமாக தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களை திறந்திருக்க அனுமதிக்கும் அரசாணையை தமிழக அரசு வெளியிட்டு உள்ளது.
இந்த அரசாணை 11.07.2019-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. தொடர்ந்து மூன்று ஆண்டுகள் இது அமுலில் இருக்கும். இதன்படி கடைகள், தொழில் நிறுவனங்கள், உணவகம், விடுதிகள், திரையரங்குகள் ஆகிய அனைத்துமே வருடத்தின் 365 நாட்களும் திறந்திருக்கலாம்.
அரசாணையின் முக்கிய அம்சங்கள்
⧭ ஒவ்வொரு வேலைக்காரருக்கும் சுழற்சி முறையில் வாரத்தில் ஒரு நாள் கட்டாயம் விடுமுறை அளிக்க வேண்டும்.
⧭ 'பார்ம் எஸ்' என்ற விண்ணப்பத்தின் மூலம் ஒவ்வொரு வேலைகாரரைப் பற்றிய தகவல்களை உரிமையாளர் பெற வேண்டும்.
⧭ ஒவ்வொரு நாளும், இன்று வேலை செய்பவர்கள் யார்? விடுமுறையில் இருப்பவர் யார் என்ற தகவலை அந்தந்த நிறுவனங்கள் வெளிப்படையாக தெரியப்படுத்த வேண்டும்.
⧭ ஒரு வேலையாளை ஒரு நாளைக்கு 8 மணி நேரம் மட்டுமே பணியில் ஈடுபடுத்த முடியும். ஒரு வேளை கூடுதல் நேரம் அவரை வேலைக்கு பயன்படுத்த வேண்டியது இருந்தால், அந்த வேலைக்காரரிடம் எழுத்துப்பூர்வ அனுமதியை நிறுவனம் முன்கூட்டியே பெறவேண்டும்.
⧭ விடுமுறை நாட்களிலோ அல்லது வேலைக்கான நேரத்தை விடகூடுதல் நேரமோ வேலையாட்களைக் கட்டாயப்படுத்தி வேலை வாங்கினால் அந்த நிறுவன உரிமையாளருக்கு எதிராகவோ அல்லது மேலாளருக்கு எதிராகவோ சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும்.
⧭ வழக்கமாக வேலை செய்யும் 8 மணி நேரத்தை தவிர கூடுதல் நேரம் வேலையாட்கள் விருப்பப்பட்டு வேலை செய்தால் அவர்களது வங்கி கணக்கில் தான் அந்த பணத்தை நிறுவனங்கள் சேர்க்க வேண்டும்.
⧭ வேலையாட்களுக்கு ஓய்வு அறை, குளியல் அறை,பொருட்கள் பாதுகாப்பு அறை மற்றும் அடிப்படை வசதிகள் அனைத்தும் அந்தந்த நிறுவனத்தில் இருக்க வேண்டும்.
ஒரு நாளைக்கு 10.30 மணி நேரத்திற்கு அதிகமாகவோ அல்லது வாரத்திற்கு 57 மணி நேரத்திற்கு அதிகமாகவோ ஒரு வேலைக்காரரிடம் வேலை வாங்கக்கூடாது. 
பெண் வேலையாட்களுக்கான விதிமுறைகள்
⧭ இரவு 8 மணி வரை மட்டுமே பெண்களை பணியில் ஈடுபடுத்த வேண்டும்
⧭ ஒரு வேளை பெண்கள் இரவில் வேலை செய்வதாக இருந்தால் அவர்களிடம் எழுத்துப்பூர்வமாக அனுமதி எழுதி வாங்க வேண்டும். மேலும், அவர்களுக்கு இரவு 8 மணியில் இருந்து காலை 6 மணி வரை தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை அந்தந்த நிறுவனங்கள் செய்து கொடுக்க வேண்டும்..
⧭ ஷிப்ட் அடிப்படையில் தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்களுக்கு, அந்த நிறுவனத்தின் மெயின் நுழைவு வாசல் வரை வாகன வசதிகளை அந்த நிறுவனம் கட்டாயம் அளிக்க வேண்டும்.
⧭ பாலியல் ரீதியான தொந்தரவுகள் இல்லாமல் இருக்க கட்டாயம் பெண்கள் தலைமையிலான புகார் அளிக்கும் குழு ஒன்றை அந்தந்த நிறுவனத்தில் ஏற்படுத்தி இருக்க வேண்டும்.
மேலே சொன்ன விஷயங்களில் கவனமாக இருப்பதை நீங்கள் உறுதி செய்தால், 24 மணிநேரமும் கடையை அல்லது நிறுவனத்தை திறக்க அனுமதி வேண்டி தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளிடம் விண்ணப்பிக்கலாம்.
அவர்கள் நேரில் வருகை தந்து உங்களது கடையை அல்லது நிறுவனத்தை ஆய்வு செய்து 24 மணி நேரமும் திறக்க அனுமதிப்பார்கள்.
Image may contain: text

No photo description available.

Related image

No photo description available.


****************************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி – 06.06.201

No comments:

Post a Comment