disalbe Right click

Sunday, February 16, 2020

ஸ்மார்ட் கார்டு நகலை இனி எளிதாகப் பெறலாம்!

ஸ்மார்ட் கார்டு நகலை இனி எளிதாகப் பெறலாம்!
ஸ்மார்ட் கார்டு தொலைந்து விட்டாலோ, தகவல்களில் திருத்தம் செய்தாலோ, அதன்   நகலைப் பெறுவது எளிதாகியுள்ளது.
நமது மாநிலம் முழுவதும், 2.06 கோடிக்கும் அதிகமான 'ஸ்மார்ட்'  (ரேஷன்)  கார்டுகள் பயன்பாட்டில் உள்ளன.  அந்தக் கார்டில் ஏற்கனவே இருந்த தவறான தகவல்களை திருத்தினாலோ, முகவரி மாற்றம் செய்தாலோ, நகல் கார்டு பெறும் வசதி இதற்கு முன்பு ஏற்படுத்தப்படவில்லை.  திருத்தம் செய்த பிறகு இணையதளத்தில் கிடைக்கின்ற, அதற்கான ரசீது மட்டுமே, ஆதாரமாக இருந்தது.
மேலும் கார்டு தொலைந்து விட்டாலும், (Duplicate Card) நகலைப் பெற முடியாமல் இருந்ததுகடந்த, மூன்று வருடங்களாக நிலவிய  இந்த சிக்கலுக்கு, தீர்வு காணும் வகையில், மாவட்டம் தோறும் 'ஸ்மார்ட் ரேஷன் கார்டு' நகல், 'பிரின்ட்' செய்யும் மையம் தற்போது  துவக்கப்பட்டுள்ளது.
நகல் பெற விண்ணப்பிப்பது எப்படி!
  • முதலில் '-சேவை' மையம் சென்று, ஸ்மார்ட் கார்டில், பெயர், முகவரி மாற்றம் உள்ளிட்ட தேவையான திருத்தங்களை  செய்து கொள்ள  வேண்டும்
  • பின் ,tnpds.gov.in என்ற அரசு இணையதள முகவரிக்கு சென்று, பொது வினியோக திட்ட பகுதிக்குள் நுழைந்து, 'நகல் ஸ்மார்ட் அட்டைக்கு விண்ணப்பிக்க' என்ற கட்டத்தை 'க்ளிக்' செய்ய வேண்டும்
  • ரேஷன் கடையில் ஏற்கனவே பதிவு செய்துள்ள மொபைல் எண்ணை பதிவு செய்து, கடவு எண்ணையும், 'கேப்சா' குறியீட்டு எண்ணையும் 'டைப்' செய்து, சமர்ப்பிக்க வேண்டும்
  • சமர்ப்பிக்கப்பட்ட 'ஆன்லைன்' விண்ணப்பம், நேரடியாக, நீங்கள் வசிக்கும் பகுதிக்கு உட்பட்ட தனி தாசில்தாருக்கு அல்லது வட்ட வழங்கல் அலுவலருக்கு உடனே சென்று விடும்
  • அவர் அதனை சரிபார்த்து ஒப்புதல் அளித்ததும், மாவட்ட 'எல்காட்' பிரிவு இணையத்துக்கு சென்று, அங்கு ஸ்மார்ட் கார்டு  பிரின்ட் செய்யப்படும்.
  • கார்டுதாரரின் மொபைல் எண்ணுக்கு இதுகுறித்து எஸ்.எம்.எஸ்., அனுப்பப்படும்.
  • அந்த செல்போனுடன் தாலுகா அலுவலகம் சென்று, பெறப்பட்ட தகவலை அங்கு காண்பித்து நகல் ஸ்மார்ட் கார்டை எளிதாக பெற்றுக்கொள்ளலாம்.
******************************* அன்புடன் செல்வம் பழனிச்சாமி, 16.02.2020



No comments:

Post a Comment