காவல்துறை நடவடிக்கைகள் இப்படித்தான் இருக்குமா?
காவல் ஆய்வாளர்
தயாரித்த பொய்யான
அறிக்கை
விருதுநகர் மாவட்டம், சிவகாசி தாலுகா, திருத்தங்கல்
காவல் ஆய்வாளர் திரு இராஜா அவர்கள் பொய்யான அறிக்கை தயாரித்து நீதிமன்றத்தில் சமர்ப்பித்ததாக, என்னால் விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) அவர்களிடம் புகார் அளிக்கப்பட்டது.
ஒருதலைப்பட்சமான விசாரணை
விருதுநகர் மாவட்ட ADSP அவர்களும், SP அவர்களும் நடத்திய விசாரணையானது, முறையாக நடத்தப்படாமல்,
குற்றஞ்சாட்டப்பட்ட ஆய்வாளருக்கு
சாதகமாக ஒருதலைபட்சமாக
முடிவுரை எழுதப்பட்டது.
மதுரை மண்டல
காவல் துணைத்தலைவருக்கு புகார்!
இதனை ஆட்சேபித்து, புகாரை விசாரித்த விருதுநகர் மாவட்ட ADSP அவர்கள் மீதும், SP அவர்கள் மீதும் குற்றம் சுமத்தி, மதுரை மண்டல DIG அவர்களே இதனை நேரடியாக விசாரிக்க வேண்டும் என்று DIG அவர்களுக்கு ஒரு புகார் அனுப்பியிருந்தேன்.
டி.ஐ.ஜி. எடுத்த நடவடிக்கை!
ஆனால், மீண்டும் எனது புகார் விருதுநகர் மாவட்ட SP அவர்களுக்கே மதுரையில் இருந்து அனுப்பப்பட்டது.
எஸ்.பி. மீண்டும் அளித்த அறிக்கை!
விருதுநகர் மாவட்ட SP அவர்களும் வழக்கம் போல அந்த புகாரில் உண்மையில்லை என்று நிராகரித்துவிட்டனர்.
எனது முதல்
மேல்முறையீடு
அதனால், மீண்டும் மதுரை மண்டல DIG அவர்களுக்கு புகார் (முதல் மேல்முறையீடு)
அனுப்பினேன்.
மீண்டும் அந்தப் புகார் விருதுநகர் மாவட்ட SP அவர்களுக்கு அனுப்பப்பட்டு, அங்கிருந்து சிவகாசி DSP அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக படத்தில் கண்ட கடிதம் தெரிவிக்கிறது.
ஒரு அதிகாரி
மீதான புகாரை
அவருக்கு கீழ் பணி புரிகின்ற ஒரு அலுவலர் விசாரித்தால் எனக்கு
என்ன நீதி கிடைக்கும்?
போகிற போக்கைப்
பார்த்தால், விருதுநகர்
மாவட்ட SP மீதான
புகாரை, திருத்தங்கல் காவல்
நிலையத்தில் பணிபுரிகின்ற ஒரு ஏட்டு
விசாரித்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.
காவல்துறையினர் பின்பற்றும் இந்த நடைமுறையை நீதிமன்றங்களும் பின்பற்றினால், உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் வழக்குகள் ஏதும் நிலுவையில் இருக்காது.
******************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி,
17.02.2020
No comments:
Post a Comment