disalbe Right click

Saturday, February 15, 2020

ஜாமீன் கொடுக்குறவங்க தெரிஞ்சிக்க வேண்டிய புதிய நிபந்தணைகள்

ஜாமீன் கொடுக்குறவங்க தெரிஞ்சிக்க வேண்டிய புதிய நிபந்தணைகள்
நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டு நீதிமான் காவலில் உள்ளவரை சிறையில் எடுக்க ஒரு நபருக்கு  இரண்டு  ஜாமின்தார்கள் கொடுக்கவேண்டும் என்று Tamil Nadu criminal Rules of practice ல் குறிப்பிடப்பட்டு  உள்ளது. தற்போது 2019 ஆண்டு Tamil Nadu Criminal Rules of practice ஜாமின்தார்கள் (Suriety) கொடுப்பதில் கடுமையான  நிபந்தனைகளை விதித்துள்ளது
Suriety கொடுப்பவர்களுடைய முழு விபரங்களையும் இனி நீதிமன்றத்தில் சமர்பிக்கவேண்டும்

இந்த சட்டத்திருத்தம் 2020‌ ஆண்டு நடைமுறைக்கு வந்து விட்டது

ஜாமீன் தாரர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவேண்டிய விபரங்கள்
1) பாஸ்போர்ட் சைஸில்  இரண்டு புகைப்படங்கள் 
(புகைப்படங்கள் ஆறுமாத்திற்குள் எடுக்கப்பட்டு இருக்க வேண்டும்)
2) ஜாமின் கொடுப்பவரின் அடையாள அட்டை
 அசல் ஆதார் அட்டை அல்லது அசல் பாஸ்போர்ட் அல்லது அசல் ரேஷன் கார்டு
3) ஜாமீன் கொடுப்பவர் என்ன  வேலை செய்கிறார்?  
வியாபாரமா? தொழிலா? வேலையா?  சொந்தத் தொழிலாக இருந்தால், அதன் விபரம் மாத வருமானம் பற்றி குறிப்பிட வேண்டும்.
 கூலி அல்லது சம்பளத்திற்கு வேலை செய்வதாக இருந்தால், தினக்கூலியா, அது எவ்வளவு? மாதச் சம்பளமா? அது எவ்வளவு?  வேலை செய்யும் இடம் மற்றும் அதன்  உரிமையாளரது  பெயர் குறிப்பிட வேண்டும்.
4) சொத்து விபரம்
வாடகை வீடா? சொந்த வீடாக என்கிற விபரம்
5) வருமான வரி செலுத்துபவரா?
பான் கார்டு எண் மற்றும் கடந்த மூன்று வருடத்திற்கான வருமான வரி செலுத்திய விபரம்
6) இதற்கு முன்பு . வேறு யாருக்கேனும் ஜாமின் கொடுக்கப்பட்டு இருந்தால் ....
யாருக்கு கொடுத்தார்? எப்பொழுது கொடுத்தார்? எந்த வழக்கில் கொடுத்தார்? என்கின்ற விபரம்
7) ஜாமீன் தாரர் படித்தவரா?
என்ன படித்திருக்கிறார்? என்ற விபரம்.
8) சேமநல நிதி விபரம்
9) வங்கி கணக்கு விபரங்கள்
 எந்தெந்த வங்கியில் கணக்கு வைத்திருக்கிறார்? வங்கி கணக்கில் தற்போது இருப்பில் உள்ள தொகை எவ்வளவு? 
10) ஜாமீன் கொடுப்பவர் பற்றிய சுய விபரங்கள்
ஏதாவது குற்றவழக்கில் இதற்கு முன் சம்பந்தப்பட்டு இருக்கிறாரா? என்கின்ற விபரம்
11) குற்றம் சாட்டப்பட்டு உள்ளவருக்கும் ஜாமீன் தாரருக்கும் உள்ள தொடர்பு
ஜாமீன் கொடுப்பவர்  வேறு குற்ற வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு உள்ளவரோடு, குற்றம் சாட்டப்பட்டு  உள்ளாரா என்கின்ற விபரம்

மேற்கண்ட விபரங்கள் தெரிவித்து affidavit தாக்கல் செய்யவேண்டும்! என் புதிய சட்ட திருத்தம் சொல்கிறது.
நன்றி : எனது முகநூல் நண்பரும் வழக்கறிஞருமான Dhanesh Balamurugan 

No comments:

Post a Comment