disalbe Right click

Monday, February 10, 2020

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்

படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (Unemployed Youth Employment Generation Programme -UYEGP)

தமிழக அரசால், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் துறை கொள்கை 2008-ன் கீழ் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கும், சமூகத்தில் பின்தங்கியுள்ள மக்களுக்கும் வேலைவாய்ப்பு உருவாக்கும் நோக்குடன், வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் கடன் வழங்க இலக்கு  நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மாவட்ட தொழில் மையம் மூலமாக  செயல்படுத்தப்பட்டு வருகிறது. 
விண்ணப்பிப்பதற்கான தகுதிகள் என்ன?
  1. இதில் பயன்பெற விரும்புபவர்கள் குறைந்த பட்சம் 18 வயது பூர்த்தியடைந்தவராகவும் அதிகபட்சம் 35 வயதுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும்
  2. தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், முன்னாள் இராணுவத்தினர், மாற்றுத் திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் ஆகியோருக்கு 45 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்
  3. விண்ணப்பதாரரின் ஆண்டு குடும்ப வருமானம் ரூ.1.50 இலட்சத்திற்குள் இருக்க வேண்டும்
  4. இதற்கான உரிய சான்றிதழை நோட்டரி பப்ளிக் அல்லது உறுதி மொழி ஆணையரிடம் இருந்து பெற வேண்டும்.
இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படுகின்ற கடன் தொகை எவ்வளவு?

  1. உற்பத்தி நிறுவனங்களுக்கு அதிகபட்ச தொழில் கடனாக ரூ.10 இலட்சம் வழங்கப்படுகிறது.
  2. சேவை சார்ந்த தொழில்களுக்கு ரூ.3 இலட்சம் வழங்கப்படுகிறது.
  3. வியாபாரத்திற்கு ரூ.1 இலட்சம் வழங்கப்படுகிறது. 
  4. வழங்கப்படுகின்ற தொகைகள் வங்கிகள் மூலமாக வழங்கப்படுகிறது.
  5. வழங்கப்படுகின்ற கடனுக்கு 25 சதவீதம் மானியம் உண்டு. அதிகபட்ச மானியம் 1 லட்சத்து 25 ஆயிரம் ஆகும்.
  6. நேரடி விவசாயம் மற்றும் அதைச் சார்ந்த தொழில்களுக்கு இத்திட்டத்தின் கீழ் கடன் பெற இயலாது
  7. கடன் பெறுவோரில் பொதுப் பிரிவினர் திட்ட முதலீட்டில் 10 சதவீதம் பங்கு தொகையாக முதலீடு செய்ய வேண்டும்
  8. ஏனைய பிரிவினர்களாகிய தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், முன்னாள் இராணுவத்தினர், மாற்றுத் திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் திட்ட முதலீட்டில் 5 சதவீதம் பங்கு தொகையாக முதலீடு செய்ய வேண்டும்
  9. எஞ்சிய தொகை தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், தனியார் வங்கிகள் மற்றும் தமிழ்நாடு தொழிற் கூட்டுறவு வங்கி மூலம் கடனாக வழங்கப்படும்.

இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க www.msmeonline.tn.gov.in/uyegp என்ற இணையதள முகவரியின் மூலம் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க, மாவட்ட தொழில் மைய அலுவலகத்திற்கு நேரில் வர வேண்டிய அவசியமில்லை.
விண்ணப்பபடிவத்துடன்  (Project Report) திட்ட அறிக்கை, விலைப்புள்ளி (GST Number கொண்டது). கல்வித் தகுதிச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் நகல், இருப்பிடச் சான்றிதழ் நகல், ஆதார் அட்டை நகல், பான்கார்டு நகல் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
முன்னாள் இராணுவத்தினர் மற்றும் மாற்றுத் திறனாளிகளாக இருக்கும் பட்சத்தில் அதற்கு உரிய சான்றிதழுடன் விண்ணப்பித்தினை சமர்ப்பிக்க வேண்டும்.

No comments:

Post a Comment