disalbe Right click

Tuesday, March 3, 2020

தலைமை தகவல் ஆணையர் அவர்களின் எச்சரிக்கை கடிதம்

தலைமை தகவல் ஆணையர் அவர்களின் எச்சரிக்கை கடிதம்
தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005, பிரிவு 2(ஜே) -ன்படி விண்ணப்பம்
கடந்த 31.08.2019 அன்று விருதுநகர் மாவட்ட பதிவாளர் அவர்களது அலுவலக பொது தகவல் அலுவலர் அவர்களுக்கு, தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005, பிரிவு 2(ஜே) -ன்படி எங்களது சங்க நிர்வாகிகள் தாக்கல் செய்த ஆவணங்களை நேரில் ஆய்வு செய்ய அனுமதி கேட்டிருந்தேன்.
சம்பந்தமே இல்லாத தகவல்கள்
அதற்கு பொது தகவல் அலுவலரான மாவட்டப் பதிவாளர் அவர்கள், தகவல் ஆணையம் ஏற்கனவே வழங்கிய தீர்ப்பு ஒன்றை மேற்கோள் காட்டி, சம்பந்தமே இல்லாத தகவல்களை எனக்கு வழங்கி இருந்தார்.
இணையத்தில் கிடைத்த தீர்ப்பு
அவர் குறிப்பிட்டு இருந்த தீர்ப்பை தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் இணையதளத்தில் இருந்து தேடி எடுத்து பார்த்தேன். நான் கோரி இருந்த அனுமதிக்கும், அந்த தீர்ப்பிற்கும் சம்பந்தமே இல்லை.  
பதிவுத்துறை துணைத்தலைவர் அவர்களுக்கு முதல் மேல்முறையீடு
மதுரை ஒத்தக்கடை பகுதியிலுள்ள, பதிவுத்துறை துணைத்தலைவர் அவர்களுக்கு எனது முதல் மேல்முறையீட்டை சமர்ப்பித்தேன். அவர் மிகவும் உத்தமர். எந்த பதிலும் வழங்கவில்லை. 
இரண்டாம் மேல்முறையீடு
முதல் மேல்முறையீட்டை 03.10.2019 அன்று அனுப்பி எந்த பதிலும் கிடைக்காத காரணத்தினால், எனது இரண்டாம் மேல்முறையீட்டை 21.11.2019 அன்று தகவல் ஆணையத்திற்கு அனுப்பினேன். 
ஆணையத்திடம் இருந்து வந்த ஆணை 
தகவல் ஆணையத்திடம் இருந்து 28.02.2020 அன்று அனுப்பிய ஆணை எனக்கு 02.03.2020 அன்று கிடைத்தது. அதனை கீழே தங்களது பார்வைக்காக பதிவிட்டுள்ளேன். 





இதற்கு பொது தகவல் அலுவலர் பதில் அளித்தவுடன் அதனையும் பதிவேற்றுகிறேன்.

***************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி, 03.03.2020 

No comments:

Post a Comment