disalbe Right click

Showing posts with label இணையதளம். Show all posts
Showing posts with label இணையதளம். Show all posts

Friday, October 13, 2017

தமிழ் இணையதளங்கள் துவக்கம்

தமிழ் இணையதளங்கள் துவக்கம்
சென்னை: தமிழ் இணைய கல்வி கழகத்தின் இணையதளம், www.tamilvu.org, 12.26 லட்சம் ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்டு உள்ளது. மேலும், 59 லட்சம் ரூபாய் செலவில், 'தமிழிணையம் மென்பொருள் தொகுப்பு - 2' உருவாக்கி உள்ளது. இந்த மென் பொருள் தொகுப்பை, தமிழ் இணைய கல்வி கழக இணையதளத்தில் இருந்து, பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.இதில், தமிழ் மொழி மற்றும் அதோடு தொடர்புடைய, தொல்லியல் சின்னங்கள், கல்வெட்டுகள், பாறை ஓவியங்கள், சுவரோவியங்கள், கோவில்கள், நாணயங்கள் உள்ளிட்ட ஆதார வளங்களை, தமிழ் இணைய கல்விக்கழகம் ஆவணப்படுத்தி உள்ளது. தமிழ் இணைய கல்வி கழகத்தின், 'தமிழ்
மின் நுாலகம்' இணையதளம், ஒரு கோடி ரூபாயில் துவக்கப்பட்டு உள்ளது. இம்மின் நுாலகத்தில், தமிழ் மொழி தொடர்பான, அச்சு நுால்கள், இதழ்கள், ஓலைச்சுவடிகள் போன்றவை,
டிஜிட்டல் மயமாக்கப்பட்டு தொகுத்து அளிக்கப்பட்டுள்ளன. முதல்வர், பழனிசாமி, தலைமை செயலகத்தில், நடந்த நிகழ்ச்சியில், இந்த இணையதளங்களை துவக்கி வைத்தார்.
இணையதளம் லின்க் : www.tamilvu.org, 
நன்றி : தினமலர் நாளிதழ் - 13.10.2017

Tuesday, August 1, 2017

வரலாற்றுக் கால வரைபடங்களுக்கான ஓர் இணையதளம்

வரலாற்றுக் கால வரைபடங்களுக்கான ஓர் இணையதளம்
வரைபடங்கள் மீது, அதிலும் வரலாற்றுக் கால வரைபடங்கள் மீது ஆர்வம் கொண்டவர்களுக்கு ஓல்டுமேப்ஸ்ஆன்லைன் இணையதளம் ஏற்றதாக இருக்கும். பெயர் உணர்த்துவதுபோலவே இந்தத் தளம் பழைய வரைபடங்களின் இருப்பிடம்.
இந்தத் தளத்தில் வரலாற்றுக் கால வரைபடங்களைத் தேடிப்பார்க்கலாம். வரலாற்றின் குறிப்பிட்ட காலகட்டம் அல்லது குறிப்பிட்ட இடத்தைத் தெரிவித்துத் தேடும் வசதி இருக்கிறது. தேடலில் ஈடுபடும்போதே அந்தக் கால சென்னை தொடர்பான பல்வேறு வரைபடங்கள் பரிந்துரைக்கப்படுகின்றன. தென்னக ரெயில்வே, தென்னிந்தியா, மலபார், கோரமண்டல் எனப் பல விதமான வரைபடங்களைப் பார்க்க முடிகிறது.
வரலாற்று ஆர்வம் கொண்டவர்களுக்கு இந்தத் தளம் பொக்கிஷமாக அமையும். வரைபடங்களை அச்சிட்டுக்கொள்ளும் வசதியும் இருக்கிறது. ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன்களுக்கான செயலி வடிவமும் இருக்கிறது.
இணைய முகவரி: >http://www.oldmapsonline.org/
நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் - 26.05.2017

Wednesday, March 1, 2017

இலவச புகைப்படங்கள் கிடைக்கும் இணையதளங்கள்


இலவச புகைப்படங்கள் கிடைக்கும் இணையதளங்கள்

மிகச்சிறந்த இலவச புகைப்படங்கள் கிடைக்கும் இணையதளங்கள் எவை தெரியுமா?

உலகம் முழுவதும் இணையதளங்கள் மற்றும் இண்டர்நெட்டின் பயன்பாடுகள் அதிகரித்து கொண்டிருக்கும் நிலையில் இண்டர்நெட் குறித்த புதுப்புது சட்டங்களும் உருவாகி வருகிறது.

குறிப்பாக டிஜிட்டல் காப்பிரைட் உரிமை என்பது தற்போது முக்கியமாக கவனிக்க கூடிய ஒரு அம்சமாக உள்ளது. இண்டர்நெட் பயன்படுத்தும் ஒவ்வொருவரும் இதுகுறித்த விழிப்புணர்வை தெரிந்து கொள்வது உங்களை பிரச்சனையில் சிக்கவிடாமல் பாதுகாக்கும் இமேஜ்கள் என்று கூறப்படும் படங்கள் இண்டர்நெட்டில் மில்லியன் கணக்கில் கொட்டி கிடக்கினது. 

ஆனால் இந்த இமேஜ்கள் குறித்த காப்பிரைட்ஸ்களை தெரிந்து வைத்து கொள்வது முக்கியம். கட்டிடம் சம்பந்தப்பட்ட ஒரு இணையதளமோ அல்லது வேறு ஏதேனும் துறை சம்பந்தப்பட்ட இணையதளமோ உருவாக்கும்போது அதில் பயன்படுத்த இண்டர்நெட்டில் இருந்து எடுக்க வேண்டிய நிலை ஏற்படும்.

அவ்வாறு எடுத்து புதிய இணையதளங்களில் பயன்படுத்தும்போது, அந்த இமேஜ்கள் காப்பிரைட்ஸ் உள்ளவைகளா என்பதை கவனிக்க வேண்டும். ஆனால் எந்த இமேஜ்களுக்கு காப்பிரைட்ஸ் உரிமை உள்ளது 

எந்த இமேஜ்களுக்கு இல்லை என்பது கண்டுபிடிக்க சிரமமாக இருந்தால் முழுக்க முழுக்க இலவசமாக காப்பிரைட்ஸ் பிரச்சனை இல்லாம வழங்கும் இலவச புகைப்பட இணையதளங்களை நீங்கள் கவலையின்றி பயன்படுத்தி கொள்ளலாம். அவ்வாறான இலவச புகைப்பட இணையதளங்கள் குறித்து தற்போது பார்ப்போம்

இலவச இமேஜ்கள் / Stock.Xchng
 ஆன்லைனில் கொட்டி கிடக்கும் ஏராளமான இலவச இமேஜ்களை நீங்கள் பார்க்க வேண்டும் என்றால் முதலில் நீங்கள் செல்ல வேண்டிய இணையதளம் இதுதான். 

http://www.scx.hu/

உலகில் பெரும்பாலானோர் இந்த இணையதளத்தின் இமேஜ்களைத் தான் பயன்படுத்துவார்கள். இந்த இணையதளத்தில் மிகச்சிறந்த இமேஜ்கள் கோடிக்கணக்கில் உள்ளன. இந்த இணையதளத்தில் 401,700 இமேஜ்களுக்கும் அதிகமாக டேட்டாபேஸில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

பெக்ஸெல்ஸ் (வெப்): Pexels (Web)
மிகவும் ஆடம்பரமான மிகச்சிறந்த இமேஜ்களை தேர்வு செய்ய மிகச் சிறந்த இணையதளங்களில் இதுவும் ஒன்று.

 https://www.pexels.com/ 

 பல்வேறு இலவச இமேஜ்கள் உள்ள இணையதளங்களை இந்த இணையதளம் ஒருங்கே நமக்கு அளிப்பதால் நமக்கு தேவையான எந்த இமேஜாக இருந்தாலும் இதில் இருந்து எடுத்துவிடலாம். இமேஜ்களை தேடுவதும் எளிமை, அதுமட்டுமின்றி மிகச்சிறந்த புதிய புதிய இமேஜ்களை ஜஸ்ட் ஒரு ஸ்குரோலில் பார்க்கலாம் இந்த இணையதளத்தில் உள்ள இமேஜ்களை டவுன்லோடு செய்யவோ பயன்படுத்தவோ அக்கவுண்ட் ஓபன் செய்து லாகின் செய்ய வேண்டிய அவசியம் எதுவும் இல்லை. மேலும் ஒவ்வொரு புகைப்படத்தையும் எதற்காக பயன்படுத்தலாம் என்ற குறிப்பும் இதில் இருப்பதால் தேடுபவர்களுக்கு மிகவும் வசதியாக இருக்கும் இணையதளம் ஆகும்

ஐகான் ஃபைண்டர் (Icon Finder)
உங்களுக்கு தேவையான ஐகான்களை இணையதளத்தில் தேட வேண்டும் என்றால் நீங்கள் வேறு எங்கும் போக வேண்டிய அவசியமே இல்லை.

 https://www.iconfinder.com/

 இந்த இணையதளத்தில் உங்களுக்கு எந்தவிதமான ஐகான்களும் நிச்சயம் கிடைத்துவிடும் என்பது உறுதி. 313,000 ஐகான்கள் இந்த இணையதளத்தில் குவிந்து கிடப்பதால் நீங்கள் எந்த ஐகான்களை பயன்படுத்த வேண்டும் என்ற குழப்பம்தான் வருமே தவிர ஐகான்கள் கிடைக்காத நிலை நிச்சயம் வராது. 1500 பிரிவுகளில் ஐகான்கள் கிடைப்பதால் உங்களுக்கு தேவையான பிரிவில் தேடிக் கொள்ளலாம்.

அவோபிக்ஸ் (AVOPIX) 
இமேஜ்கள் அதிகம் அடங்கியுள்ள இணையதளங்களில் ஒன்றுதான் இந்த அவோபிக்ஸ். 

https://avopix.com/ 

மேலும் இந்த இணையதளத்தில் இமேஜ்கள் மட்டுமின்றி வீடியோவும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. காப்பிரைட்ஸ் பிரச்சனை இல்லாமல் இந்த இணையதளத்தில் உள்ள இமேஜ்களையும், வீடியோக்களையும் நீங்கள் பயன்படுத்தி கொள்ளலாம். நீங்கள் இந்த இமேஜ்களை டவுன்லோடு செய்து கொள்ளலாம், மாற்றி அமைத்து கொள்ளலாம், மற்றவர்களுக்கு ஷேர் செய்து கொள்ளலாம் உங்களுக்கு அனைத்து உரிமைகளும் தரப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தில் 190000க்கும் அதிகமான இமேஜ்கள் தற்போது உள்ளது. மேலும் அவ்வப்போது ரெகுலராக புதிய புதிய இமேஜ்கள் இதில் கிடைத்து கொண்டே இருக்கும்

500px: 
Flickr  இணையதளத்தை நீங்கள் அறிந்திருப்பீர்கள் என்றால் அதற்கு சரியான மாற்ற்தான் இந்த 500px  இணையதளம். 

https://500px.com/

இந்த இணையதளத்தில் பல்வேறு பிரிவுகளில் எளிதில் தேடும் வகையில் ஆயிரக்கணக்கான இமேஜ்கள் உள்ளது. உங்களுக்கு எந்த பிரிவில் இமேஜ்கள் வேண்டுமோ அந்த பிரிவை டிராப்டவுனில் செலக்ட் செய்து உங்களுக்கு தேவையான இமேஜ்களை அதில் இருந்து எடுத்து கொள்ளலாம். 

மேலும் இந்த இணையதளத்தில் உள்ள ஒவ்வொரு இமேஜின் லைசென்ஸ் குறித்த தகவல்களும் இதில் அடங்கியிருக்கும். அதை பற்றி தெரிந்து கொண்டு பின்னர் அந்த இமேஜ்களை நீங்கள் உபயோகப்படுத்தி கொள்ளலாம்.

 நன்றி : கிஸ்பாட் » News – 01.03.2017

Tuesday, February 28, 2017

பெரும் அளவில் பயன்படுத்தப்படும் குரோம் பிரவுசர்

பெரும் அளவில் பயன்படுத்தப்படும் குரோம் பிரவுசர்

இணைய உலா வர பெரும் அளவில் பயன்படுத்தப்படும் பிரவுசர்களில், குரோம் பிரவுசர் முதல் இடம் கொண்டுள்ளது. நம் விருப்பத்திற்கேற்ப அதனை வழி அமைத்துக் கொள்ளும் வசதியே இதற்குக் காரணம். மற்றும் இது தரும் பாதுகாப்பு, நம்மை வழி நடத்தும் இடைமுகம், தொடர்ந்து வழங்கப்படும் புதிய வசதிகள் என இதன் தன்மைகள், வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையைத் தொடர்ந்து உயர்த்தி வருகிறது.
1. பிரவுசரில் திறந்து வைக்கப்பட்டுள்ள தளங்களுக்குச் செல்ல,கீ போர்ட் வழியாக ஒரு வழி உள்ளது. முதலில், நீங்கள் விரும்பும் இணைய தளம் காட்டப்படும் டேப் எந்த இடத்தில் (1,2,3,4…) உள்ளது எனப் பார்க்கவும். பின்னர், கண்ட்ரோல் கீ அழுத்தி, அதன் இடத்திற்கான எண்ணை (Ctrl+3) அழுத்தினால், அந்த குறிப்பிட்ட டேப் உள்ள தளம் திரையில் கிடைக்கும்.
2. ஸ்பேஸ் பாரினை அழுத்தினால், எந்த இணைய தளத்திலும், தளமானது ஒரு பக்கம் கீழாகச் செல்லும் என்பதனை நீங்கள் அறிந்திருக்கலாம். இதே போல, ஷிப்ட் கீ அழுத்தி ஸ்பேஸ் பார் அழுத்தினால், அதே போல பக்கங்களைத் தாண்டிச் செல்லலாம்.
3. குரோம், அதன் எக்ஸ்டன்ஷன்களுக்குச் செல்ல ஷார்ட் கட் கீ வழிகளை அமைக்க வசதி தருகிறது. இதற்கு chrome://extensions/ எனச் செல்லவும். கிடைக்கும் பக்கத்தில் கீழாகச் செல்லவும்.இங்கு “Keyboard shortcuts” என்ற இடத்தில் கிளிக் செய்து, நீங்கள் விரும்பும் செயல்பாடுகளுக்கு, ஷார்ட் கட் கீகளை அமைக்கலாம்.
4. சில எக்ஸ்டன்ஷன் புரோகிராம்கள் பின்னணியில் இயங்கினாலே போதும். எனவே, ஏன் அவை பிரவுசரின் டூல்பாரில், இடம் எடுத்துக் கொண்டு தேவையற்ற வகையில் காட்டப்படுகிறது. இதனைப் போக்க, எந்த எக்ஸ்டன்ஷன் காட்டப்பட வேண்டாம் என்று எண்ணுகிறீர்களோ, அதற்கான ஐகானில், ரைட் கிளிக் செய்து, கிடைக்கும் கீழ்விரி மெனுவில், “Hide button” என்ற பட்டனைத் தேர்ந்தெடுத்து அமைக்கவும்.
5. எந்தவிதமான கவனச் சிதறலும் இல்லாமல், இணையப் பக்கத்தில் உலா வர, F11 என்ற கீயை அழுத்தவும். உடன், குரோம் பிரவுசர் முழு திரையிலும் காட்டப்படும். வழக்கமாகக் காட்டப்படும் பிரவுசர் சார்ந்த ஐகான்கள் மற்றும் பிற வகை தோற்றங்கள் அனைத்தும் மறைக்கப்படும்.
6. நிறைய டேப்களைத் திறந்து வைத்து, பிரவுசரைப் பயன்படுத்து பவரா நீங்கள்? இவற்றில் சிலவற்றை மறைத்து வைக்க விரும்புகிறீர்களா? பிரவுசரின் முகவரி விண்டோவில், chrome://flags என டைப் செய்திடவும். அங்கு Stacked Tabs என்பதனைத் தேடி அறியவும். அதனை இயக்கும் வகையில் enable செய்திடவும். இதனால், டேப்கள் அனைத்தும் சுருங்கி, சிறியதாகக் காட்சியளிப்பதற்குப் பதிலாக, ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கப்பட்டுக் காட்சி அளிக்கும்.
7. எந்த இணைய தளத்தினையும், அதன் காட்சித் தோற்றத்தினைப் பெரிதாக்கிப் (Zoom) பார்க்கலாம். பின் சுருக்கலாம். இதற்கு கண்ட்ரோல் கீ அழுத்திய நிலையில் “+” அல்லது “-” கீயினை அழுத்த வேண்டும். ஸூம் செய்யப்படும் அல்லது ஸூம் செய்த காட்சி சுருக்கப்படும். இதன் மூலம் இணைய தளப் பக்கத்தில் உள்ள எழுத்துக்களும் படங்களும் விரிக்கப்பட்டுக் காட்டப்படும்.
8. கண்ட்ரோல் + ஸீரோ (Ctrl+-0) அழுத்தினால், நீங்கள் ஸும் செய்த ஸ்கிரீன், அல்லது சுருக்கிய திரை பழைய 100% நிலைக்குத் திரும்பும்.
9. நீங்கள் எப்போது விரும்பினாலும், குரோம் பிரவுசரின் தாய் முகப்புப் பக்கத்திற்குச் செல்லலாம். Alt-+Home கீகளை அழுத்திப் பெறலாம். இதற்குப் பதிலாக ஹோம் பட்டன் இருந்தால், அதனை மட்டும் அழுத்திச் செல்லலாம் அல்லவா? இதனைப் பெற, chrome://settings தேர்ந்தெடுத்துச் செல்லவும். அங்கு, “Show Home button” என்று உள்ள பெட்டியில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும். இனி, இதற்கான பட்டன் ஒன்று ஸ்கீரினில் காட்டப்படும்.
10. எந்த இணையதளத்திற்குமான ஷார்ட் கட் ஒன்றை, விண்டோஸ் டெஸ்க்டாப்பில் அமைக்கலாம். முகவரி கட்டத்தில் காட்டப்படும் முகவரியினை, மவுஸ் மூலம் அப்படியே இழுத்துச் சென்று, திரையில் அமைத்தால், அது, அந்த இணைய தளத்திற்கான ஷார்ட் கட் கீயாகச் செயல்படும். அப்ளிகேஷன்களுக்கு நாம் ஏற்படுத்தும் ஷார்ட் கட் கீ ஒன்றையும், இணையப் பக்கங்களுக்கு ஏற்படுத்தலாம். பிரவுசரின் மெயின் மெனுவிற்குச் செல்லவும். அங்கு Tools தேர்ந்தெடுக்கவும். இதில் “Create application shortcuts” என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இனி, குறிப்பிட்ட பக்கமானது முழுமையாகத் திரை முழுவதும் காட்டப்படும். வழக்கமான பிரவுசர் சார்ந்த எதுவும் காட்டப்பட மாட்டாது.
11. பிரவுசரில் பல இணைய தளங்களைப் பார்த்துத் தேவையான தகவல்களை தேர்ந்தெடுக்கிறீர்கள். கம்ப்யூட்டரை நிறுத்தி, வேறு சில வேலைகளை முடித்து மீண்டும் திரும்ப நினைக்கிறீர்கள். பிரவுசரில் பார்த்த அனைத்து தளங்களும் அதன் டேப்களோடு உங்களுக்கு வேண்டும் என விரும்புகிறீர்கள். இதற்கு, chrome://settings செல்லவும். அங்கு, “On startup” என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இதில் ““Continue where I left off.”” என்பதனைக் கிளிக் செய்து தேர்ந்தெடுத்து அமைக்கவும். அடுத்த முறை, குரோம் பிரவுசரை இயக்கும்போது, அதற்கு முன் இயக்கியபோது நீங்கள் பார்த்த அனைத்துஇணைய தளங்களுடன், பிரவுசர் திறக்கப்படும்.
தினமலர் நாளிதழ் - 08.02.2016

Sunday, February 12, 2017

ஜிமெயிலில் அனுப்ப முடியாத பைல்கள்


ஜிமெயிலில் அனுப்ப முடியாத பைல்கள்


நாளை முதல் இந்த ஃபைல்களை ஜி மெயில் மூலம் அனுப்ப முடியாது! 
ஜி-மெயிலில் கணக்கு வைத்திருப்பவரா நீங்கள்? நாளை முதல் ஒரு சில ஃபைல்களை உங்களால் ஜி-மெயில் மூலம் அனுப்ப முடியாது என்று கூகுள் அறிவித்துள்ளது. இந்த ஃபைல்கள் மட்டுமின்றி ஏற்கெனவே சில ஃபைல்களை ஜி-மெயில் மூலம் அனுப்ப முடியாது என கூகுள் நிறுவனம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஜி-மெயில் தற்போது .js என்ற அமைப்பில் உள்ள ஃபைல்களை பிப்ரவரி 13ம் தேதி முதல் அனுப்ப முடியாது என தெரிவித்துள்ளது. இந்த ஃபைல்களை அனுப்ப முயற்சித்தால் அதனை அனுப்ப முடியாது என்ற தகவலையும், ஏன் இந்த மெயில் அனுப்ப இயலவில்லை என்ற செய்தியையும் உங்கள் ஜி-மெயிலுக்கு கூகுள் அனுப்பும் என்று கூறப்பட்டுள்ளது.

ஏன் அனுப்ப முடியாது?

இந்த ஃபைலை ஜி-மெயில் மூலம் அனுப்ப முடியாததற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. ஜி-மெயிலில் இருக்கும் பாதுகாப்பு காரணங்களுக்காக எளிதில் வைரஸ்களை பரப்பக்கூடிய ஃபைல்களின் வரிசையில் இது இருப்பதால் இந்த வகையான ஃபைல்களை ஜி-மெயில் மூலம் அனுப்ப முடியாது என அறிவித்துள்ளது கூகுள்.

இது மட்டுமின்றி சமீபத்தில் கூகுள் .ade, .adp, .bat, .chm, .cmd, .com, .cpl, .exe, .hta, .ins, .isp, .jar, .jse, .lib, .lnk, .mde, .msc, .msp, .mst, .pif, .scr, .sct, .shb, .sys, .vb, .vbe, .vbs, .vxd, .wsc, .wsf  மற்றும் .wsh வகை ஃபைல்களையும் தடை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜி மெயில் 

இந்த ஃபைல்களை எப்படி அனுப்பலாம்?

இந்த ஃபைல்களை ஒரு தனிப்பட்ட நபருடைய ஜி மெயில் கணக்கிற்கு தான் மெயில் மூலமாக அனுப்ப முடியாது என கூகுள் அறிவித்துள்ளது. ஆனால் ஒருவருக்கு இதே ஃபைல்களை கூகுள் ட்ரைவ் மற்றும் க்ளவுட் ஸ்டோரேஜ் மூலமாக அனுப்ப முடியும் என்று கூகுள் தெரிவித்துள்ளது.  

அதனால்  .js  ஃபைல்கள் இருந்தால் அவற்றை  இன்றைக்கே யாருக்காவது அனுப்புங்கள். இல்லையெனில் ட்ரைவ் மூலமாக அனுப்புங்கள். 

இது தவிர ஜி-மெயிலில் சில சுவாரஸ்யமான விஷயங்களும் உள்ளன.

1. உங்கள் மெயில் ஐடிக்கு யார் வேண்டுமானாலும் டாட் வைத்தோ அல்லது வைக்காமலோ அல்லது வேறு ஒரு இடத்தில் டாட் வைத்தோ அனுப்ப முடியும். இதில் எப்படி அனுப்பினாலும் உங்கள் மெயிலுக்கு மெயில் வரும் என்பது தான் ஜி மெயிலின் ட்ரிக்.

2. நீங்கள் அனுப்பிய மெயில் ஏதோ தவறுதலாக இருக்கிறது என்றால் அதனை திரும்ப பெறும் வசதியும் ஜி-மெயிலில் உள்ளது. இதற்கு ஒருவர் தனது ஜி-மெயில் செட்டிங்கில் உள்ள அன்டூ ஆப்ஷனை ஆன் செய்ய வேண்டும்.

3. கூகுளின் பூமராங் எக்ஸ்டென்ஷன் மூலம் ஜி-மெயில்களை ஸ்கெட்யூல் செய்துகொள்ள முடியும்

4. Checker Plus for Gmail என்ற எக்ஸ்டென்ஷன் மூலம் ஜி-மெயில்களை திறக்காமலேயே படிக்க முடியும்.  சில சமயம் மாஸ் மெயில் அனுப்பும் நிறுவனங்கள் எத்தனை பேர் இந்த மெயிலை திறந்துள்ளார்கள் என்ற டேட்டாவையெல்லாம் எடுக்கும்.

5. உங்கள் ஜி-மெயில் ஓப்பன் செய்து வலது கை ஓரத்தில் இருக்கும் கமென்ட்டை கவனியுங்கள். கடைசியாக எப்போது உங்கள் கணக்கு பயன்படுத்தப்பட்டது என்ற விவரம் இருக்கும் அதன் மூலம் உங்கள் கணக்கை மற்றவர்கள் பயன்படுத்துகிறார்களா? என்பதையும் ஆராய முடியும்.

ச.ஸ்ரீராம்

நன்றி : விகடன் செய்திகள் - 12.02.2017

Monday, January 23, 2017

கூகுள் குரோம் இணையதளம்


கூகுள் குரோம் இணையதளம்

மேலாகப் பார்க்கையில், கூகுள் குரோம் மற்ற பிரவுசர்களின் செயல்பாடுகளைக் கொண்டதாகவே காட்சி அளிக்கும். ஆனால், அதன் இயக்கங்கள் சிலவற்றில், நாம் பிற பிரவுசர்களிடம் இல்லாத வசதிகளைக் காணலாம். சில அமைப்புகளை மாற்றி வைப்பதன் மூலம், நம் வசதிக்கேற்ப அவற்றை இயங்கும்படி செய்யலாம்.
இதன் சில மறைத்து வைக்கப்பட்ட அம்சங்கள், நம் பிரவுசர் அனுபவத்தினைச் சிறப்பாக மாற்றி அமைக்கின்றன என்பதே உண்மை. இதில் என்ன சிறப்பென்றால், இவற்றை அனுபவிக்க, இந்த வசதிகளைப் பெற நாம் பெரிய தொழில் நுட்ப அறிவெல்லாம் கொண்டிருக்கத் தேவையில்லை. எந்தப் பயனாளரும் எளிமையான வழியில் இவற்றை மேற்கொள்ளலாம்.
ஒலிக்காமல் இருக்கும்படி அமைக்க நாம் ஓர் இணைய தளத்தைத் திறந்திருப்போம். அந்த தளத்தில், ஒரு விடியோ விளம்பர இயக்கி இருக்கும். ஏதேனும் ஒரு விளம்பரப் படத்தை உடனே இயக்கும். சில வேளைகளில், எங்கு படம் உள்ளது, எப்படி இயக்கப்படுகிறது என்று கூடத் தெரியாது. மிகச் சிறியதாகக் கீழாக இருக்கும். அதற்குள் அதன் ஒலி நாராசமாக நம் காதுகளை வந்தடையும்.
இது போன்ற விடியோ படக் காட்சிகள் இயங்கும்போது, நாம் அதிர்ச்சியுற்று, நம் சிஸ்டம் ஒலியை முடக்குவோம். 

இதற்குப் பதிலாக, குரோம் ஒரு நல்ல வழியைத் தருகிறது.
குறிப்பிட்ட இணைய தளம் திறக்கப்பட்டுள்ள டேப்பில் இதற்கான வழி உள்ளது. அங்கு சிறிய ஒலிப்பான் படம் காட்டப்படுகிறது. இதில் கிளிக் செய்தால், அந்த தளத்தில் எந்த ஒலியும் இயக்கப்பட மாட்டாது.
இதனை இயக்க குரோம் பிரவுசரில் சின்ன அளவில் மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும். மாறா நிலையில், அந்த படத்தில் எந்த இயக்கமும் தரப்பட்டிருக்காது. இல்லை எனில், டேப்பில், அந்த ஒலிப்பான் அடையாளம் தெரியும். அதில் கிளிக் செய்தால், எந்த மாற்றமும் ஏற்படாது. இதனை இயக்க, கீழே தரப்பட்டுள்ள டெக்ஸ்ட்டை அப்படியே, பிரவுசரின் முகவரிக் கட்டத்தில் அமைத்து எண்டர் தட்டவும்.
chrome://flags/#enable-tab-audio-muting உடன், உங்களுக்குப் பல கட்டளை வரிகள் அடங்கிய பக்கம் காட்டப்படும். உடனே பயந்துவிட வேண்டாம். நீங்கள் எந்த வரியில் செயல்பட வேண்டுமோ, அந்த டெக்ஸ்ட் மஞ்சள் வண்ணத்தில் காட்டப்படும். அங்குள்ள enable என்பதில் கிளிக் செய்திடுங்கள்.
பின்னர், பிரவுசர் மீண்டும் இயக்கப்படும். இப்போது தளங்களின் ஆடியோவினை முடக்கும் வழி உங்களுக்குத் தரப்பட்டதாக பிரவுசர் இயங்கும். எந்த தளத்திற்கான டேப்பிலும், ஸ்பீக்கர் ஐகானை இயக்கி, முடக்கலாம். மீண்டும் ஒலி வேண்டும் என்றால், மீண்டும் ஒருமுறை அதே ஸ்பீக்கர் ஐகானில் கிளிக் செய்திட, ஒலி இயக்கப்படும்.
டெக்ஸ்ட் தேர்ந்தெடுக்க எளிய வழி
நாம் இணைய தளங்களைப் பார்வையிடுகையில், நாம் அனைவரும் மேற்கொள்ளும் ஒரு செயல், அதன் டெக்ஸ்ட்டைத் தேர்ந்தெடுப்பதுதான். அது ஒரு சொல்லாகவோ, பாராவாகவோ, அல்லது குறிப்பிட்ட அளவிலான டெக்ஸ்ட்டாகவோ இருக்கும். பெரும்பாலானவர்கள் மவுஸ் கொண்டு டெக்ஸ்ட்டின் தொடக்கம் முதல், இறுதி வரை இழுத்துத் தேர்ந்தெடுப்போம். இது பெரிய அளவிலான டெக்ஸ்ட் எனில், சற்று சிரமம் தரும் செயலாக இது இருக்கும். குரோம் பிரவுசரில் இதற்கு ஒரு விரைவான எளிய வழி ஒன்று தரப்பட்டுள்ளது.
ஒரு சொல்லைத் தேர்ந்தெடுக்க வேண்டும் எனில், அதன் மீது இருமுறை கிளிக் செய்திடுங்கள். மவுஸ் கொண்டெல்லாம் இழுக்க வேண்டாம். பாரா ஒன்றில் எங்காவது மூன்று முறை தொடர்ந்து கிளிக் செய்தால், அந்த பாரா முழுவதும் தேர்ந்தெடுக்கப்படும். இங்கும் மவுஸை இழுக்க வேண்டாம். சரி, பாரா ஒன்றின் நடுப் பகுதியை மட்டும் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றால், என்ன செய்வீர்கள்.
தொடக்கத்தில் மவுஸைக் கிளிக் செய்து, இறுதி வரை அப்படியே இழுத்து வந்து தேர்ந்தெடுப்பீர்கள். இங்கு அது தேவையில்லை. எங்கு டெக்ஸ்ட் பகுதி தொடங்குகிறதோ, அங்கு ஒருமுறை கிளிக் செய்திடுங்கள். பின்னர், டெக்ஸ்ட் எங்கு முடிகிறதோ, அங்கு ஷிப்ட் கீ அழுத்திக் கொண்டு கிளிக் செய்திடுங்கள். குறிப்பிட்ட பகுதி மட்டும் ஹை லைட் செய்யப்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்டதனைக் காட்டும். நமக்கு எவ்வளவு நேரம் மிச்சமாகிறது. மேலே சொல்லப்பட்டவை போல பல ட்ரிக்ஸ் குரோம் பிரவுசர் கொண்டுள்ளது.

Friday, January 20, 2017

மாநில தகவல் ஆணையம்


மாநில தகவல் ஆணையம்

நமது நாட்டில் நடைபெறுகின்ற ஊழல்களை வெளிக் கொண்டு வந்ததில் முக்கிய பங்கு வகிப்பது, “தகவல் அறியும்  உரிமைச் சட்டம்-2005” என்றால், அது மிகையாகாது.

சமூக ஆர்வலர்களாக இருந்தாலும் சரி, சாதாரணமானவர்களாக இருந்தாலும் சரி, மேற்கண்ட சட்டத்தை பயன்படுத்தாமல் இருந்திருக்க மாட்டார்கள் என்று சொல்லும் அளவிற்கு இதனது பயன்பாடு இருந்திருக்கிறது. 

சிலரது பெயருக்கு முன்னால் இந்த சட்டத்தின் சுருக்கச் சொல்லானது  (RTI) இணைந்து, அவர்களுக்கு ஒரு தனி அடையாளத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 

இந்த சட்டத்தைப் போல வேறு எந்த சட்டத்தையும் மக்கள் அதிக அளவு பயன்படுத்தி இருப்பார்களா? என்றால், அது சந்தேகமே.

ஆரம்பத்தில் இருந்த வேகம் மற்றும் கடுமையான நடவடிக்கைகள் எதுவும்  இதனை செயல்படுத்தும் ஆணையத்தில்  தற்போது இல்லை என்பது அனைவரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய, வருத்தம் தரக்கூடிய விஷயம்.

இருந்தபோதிலும் இந்த சட்டத்திற்கு ஆதரவு இன்னும் குறையவில்லை. பயன்படுத்துபவர்களும் அதனைப் பற்றி விசாரிப்பவர்களும் அதிகமாகிக் கொண்டே போகிறார்கள்.

மாநில தகவல் ஆணையத்திற்கென்று தனியாக  http://www.tnsic.gov.in/ இணையதளம் ஒன்று உள்ளது. 

அதற்குள் சென்று பார்த்தால் 

* தகவல் அறியும் உரிமைச் சட்டம்

* மாநில தகவல் ஆணையம்

* தகவல் எப்படி கோருவது

* தகவல் ஆணைய முடிவுகள் மற்றும் ஆணைகள்

* நடைபெற இருக்கும் வழக்கு பற்றிய விபரங்கள்

* மாநில தகவல் ஆணையத்தின் முகவரி

* மற்ற மாநில தகவல் ஆணையங்களின் இணைப்புகள்

ஆகியவற்றைப் பற்றிய ஏராளமான தகவல்கள் நமக்கு கிடைக்கிறது.

மத்திய தகவல் ஆணையத்தின் இணைப்பிற்கு இதனை கிளிக் செய்யுங்கள்.

http://www.cic.gov.in/

*****************************அன்புடன் செல்வம் பழனிச்சாமி**

Wednesday, January 11, 2017

நீங்கள் இணையத்திற்குப் புதியவராக இருந்தால்


நீங்கள் இணையத்திற்குப் புதியவராக இருந்தால் 

தன் சார்பு தகவல்களைக் குறைக்கலாம்

நீங்கள் ஆண்ட்ராய்ட் போன் அல்லது டேப்ளட் சாதனத்தைப் பயன்படுத்துபவராக இருந்தால், உங்களைப் பற்றி கூகுள் ஏற்கனவே பல தகவல்களைப் பின் தொடர்ந்து வரும் செயல்பாட்டினை மேற்கொண்டிருக்கும். அப்படியா! என் அக்கவுண்ட்டை மூடிவிடவா? என்ற எண்ணம் உங்கள் மனதில் தோன்றும். 
மூடுவதற்கும் கூகுள் எளிய வழிகளைத் தரும். ஆனால், நாம் அக்கவுண்ட்டினை மூடிவிட மாட்டோம். ஏனென்றால், கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து நாம் அப்ளிகேஷன்களை இறக்க வேண்டும் எனில், நமக்கு கூகுள் அக்கவுண்ட் ஒரு கட்டாயத் தேவை ஆகும்.

எனவே, இந்தச் சூழ்நிலையில், நாம் நம்மைப் பற்றிய டேட்டாவினை, எப்படி கூகுள் நிறுவனத்திற்குக் குறைவாகக் கொடுக்கலாம் என்று பார்ப்போம். பல செயலிகள் வழியாக, பல இடங்களில் நம்மைப் பற்றிய தகவல்கள், கூகுள் நிறுவனம் பெறும் வகையில் கசிகின்றன. இருப்பினும், சில முக்கிய வழிகளை இங்கு காணலாம்.

கூகுள் நமக்குத் தருபவை எல்லாம் இலவசமே. ஏனென்றால், கூகுள் என்னும் தொழில் நுட்ப அரக்கன், விளம்பரம் வழி பெரும் வருமானமே அதற்கு எக்கச்சக்கமாகும். இந்த விளம்பரங்கள் வழியாகவே, உங்களுக்கான விளம்பர வட்டம் கட்டப்படுகிறது. இணையத்தைச் சுற்றி வருகையில், இந்த விளம்பரங்களை ஒதுக்குவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. கூகுள் தளத்தின் விளம்பர செட்டிங்ஸ் பக்கத்தில் (https://www.google.com/settings/u/0/ads) நீங்கள் சில நகாசு செட்டிங்ஸ் அமைப்பை மேற்கொண்டு, நீங்கள் தரும் தகவல்கள் துல்லிதமாகவும், ஆர்வம் கொண்டுள்ள விளம்பரங்கள் மட்டும் இருப்பதாகவும் ஏற்படுத்தலாம். 

கூகுள் நிறுவனத்தின் முதன்மை வர்த்தகம் தேடுதல் தான். அதில் என்ன செய்யலாம் என்று அடுத்து பார்க்கலாம். கூகுள் நீங்கள் செல்லும், பார்க்கும் அனைத்து தளங்கள் குறித்த தகவல்களைப் பதிவு செய்து வைத்துக் கொள்கிறது. பெர்சனல் கம்ப்யூட்டராக இருந்தாலும், ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் ”கூகுள் நவ்” செயலியாக இருந்தாலும், தேடுதல் கட்டத்தில் என்னவெல்லாம் டைப் செய்கிறீர்கள் என்பதைக் கூகுள் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டுள்ளது.

அதிர்ஷ்டவசமாக, கூகுள் இந்த தகவல்கள் எல்லாம் எளிதாகக் காணும்படி, நம் அக்கவுண்ட் ஹிஸ்டரி பக்கத்தில் மேல் பகுதியில் வைத்துள்ளது. இங்கு, இவற்றை சேவ் செய்திடாமல் வைத்துக் கொள்ள செட்டிங்ஸ் பகுதியில் வழி தரப்பட்டுள்ளது. எனவே, நாம் கூகுள் எடுத்து வைத்துள்ள தகவல்களை சேவ் செய்திடாமல் நீக்கிவிடலாம். அல்லது தேர்ந்தெடுத்த சிலவற்றை மட்டும் பதியும்படி அமைத்துக் கொள்ளலாம்.

ஜிமெயில்

நாம் ஜிமெயில் செயலியைப் பயன்படுத்துகையில், கூகுள் சர்வர்கள் வழியாக நாம் அனுப்புவது அனைத்தையும் ஒரு காப்பி எடுத்து, கூகுள் வைத்துக் கொள்கிறது. மின் அஞ்சல் செயலி ஒன்றின் செயல்பாட்டின் அடிப்படையே இதுதான். ஆனால், கூகுள் அதற்கும் மேலாக ஒரு படி சென்று, நமக்கு விளம்பரங்களை அனுப்புவதற்காக, நம் அஞ்சல்களை ஸ்கேன் செய்து தகவல்களைத் திரட்டி வைத்துக் கொண்டு செயல்படுத்துகிறது. நாம் அனுப்பும் டெக்ஸ்ட்டை மட்டுமல்ல; படங்களையும் ஸ்கேன் செய்கிறது. இவ்வாறு கூகுள் செயல்படுவதை நீங்கள் விரும்பவில்லை என்றால், நம் அக்கவுண்ட்டிலிருந்து ஜிமெயில் அக்கவுண்ட்டை நீக்குவதுதான் ஒரே வழி.
தொடர்புகள் (Contacts)

ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தினைப் பயன்படுத்துவதில் நாம் பெறும் மிகப் பெரிய வசதி, நம் தொலைபேசி தொடர்புகளை எளிதாக, ஒரு சாதனத்திலிருந்து இன்னொன்றுக்கு மாற்றிக் கொள்வதுதான். இது எப்படி சாத்தியமாகிறது என்றால், நம் தொடர்புகள் அனைத்தும் கூகுள் அக்கவுண்ட்டுடன் ஒருங்கிணைக்கப்படுவதுதான். மொபைல் போனிலேயே, நம் தொடர்புகளின் மின் அஞ்சல் முகவரிகளும் தாமாக சேவ் செய்யப்படுவதும் இப்படித்தான். நாம் நீக்க வேண்டும் என எண்ணினால், ஒரு முயற்சியில், ஒரு தொடர்பினை மட்டுமே நீக்க முடியும். ஆனால், இந்த சாதனங்களில், நாம் நம் தொடர்புகளை சேவ் செய்து வைத்துக் கொள்வதுதான் சிறந்த வழியாகும்.
பெரும்பாலான ஆண்ட்ராய்ட் இயக்கும் சாதனங்களில், உங்கள் போன் தொடர்புகளை, உங்கள் சிம் கார்டிற்கு மாற்றுவது எனில், People என்னும் அப்ளிகேஷன் சென்று, அதில் Settings தேர்ந்தெடுக்க வேண்டும். அதன் பின்னர், Export Contacts to SIM என்பதனைக் கிளிக் செய்திட முகவரிகள் அனைத்து தகவல்களுடன் மாற்றப்படும். ஒரு சில ஆண்ட்ராய்ட் சாதனங்களில், இந்த வழிமுறைகள் சற்று மாறுபடலாம்.

கூகுள் காலண்டர்

இதில் நாம் அமைக்கும் நிகழ்வுகள் அனைத்தும் கூகுள் தளத்தினால் ஒருங்கிணைக்கப் படுகின்றன. இங்கு மட்டும், இதில் உள்ளவற்றை முற்றிலுமாக நீக்க முடியாது. கூகுள் காலண்டருடன் அனைத்து தொடர்புகளையும் நீக்கினால்தான் அது முடியும்.
கூகுள் ட்ரைவ்

ஜிமெயில் சர்வரில், நம் மெயில்கள், தொடர்புகள் அனைத்தும் சேமிப்புக் கிடங்கில் வைக்கப்படுவது போல, ட்ரைவ் செயலிக்கான சர்வரிலும் சேமிக்கப்படுகிறதா என்பது இன்னும் தெளிவாக அறியத் தரப்படவில்லை. ஆனால், ட்ரைவ் பயன்படுத்தும் சர்வரில் சேர்த்து வைக்கப்படும் ஆவணங்கள், படங்கள், விடியோக்கள் அனைத்தும், எந்த நேரமும் கூகுள் நிறுவனம் அறியக் கிடைக்கும் வகையில்தான் பதியப்படுகின்றன. 
நீங்கள் உங்கள் பைல்களை அழிக்கும்போதும் அழித்த பின்னர், ட்ரேஷ் பெட்டியிலிருந்து நீக்கும் போதும், அவை மறைக்கப்படுகின்றன. நிச்சயமாய், அவை கூகுளின் சர்வரிலிருந்து உடனடியாக, அறவே நீக்கப்படுவதில்லை. ஆனால், உங்கள் அக்கவுண்ட்டினை வேறு யாரேனும், பின் நாளில் அணுகினால், அவர்களுக்கு நீங்கள் நீக்கியவை நிச்சயமாகக் கிடைக்காது.

உலவும் இடம் (Location)

உங்கள் ஆண்ட்ராய்ட் சாதனம் இயங்கத் தொடங்கிய காலத்திலிருந்து, கூகுள் ‘லொகேஷன்’ என்னும் வசதி மூலம், நீங்கள் எங்கெல்லாம் செல்கிறீர்கள் என்பதனை அறிந்து பதிவு செய்கிறது. அந்த சாதனம் மூலம், கூகுள் மேப் பயன்படுத்துவதாக இருந்தால், இந்த டூல் தான் அடிப்படையை அமைக்கிறது. பெர்சனல் கம்ப்யூட்டரில் மேப் பயன்படுத்துகையில், லொகேஷன் டூலை நாம் இயக்காமலேயே, மற்றவை மூலம், கூகுள் நாம் இயங்கும் இடத்தை அறிந்து கொள்கிறது. இதனை நீங்கள் விரும்பவில்லை என்றால், இந்த செயல்பாட்டினை, ஆண்ட்ராய்ட் சாதனத்தில் முடக்கிவிடலாம். 
கூகுள் ப்ளே

ஆண்ட்ராய்ட் போன் வைத்திருப்பவர்கள், கூகுள் ப்ளே பயன்படுத்தாமல் இருக்க முடியாது. பல செயலிகள் இதன் வழியாகவே நமக்குக் கிடைக்கும். கூகுள், நீங்கள் இந்த ஸ்டோர் சென்று பெறும் அனைத்தையும் பட்டியலிட்டுத் தன்னிடம் வைத்துக் கொள்ளும். இது நாம் ஸ்டோரைப் பயன்படுத்த ஒப்புக் கொள்ளும் ஒப்பந்தத்தில் ஒரு நிபந்தனையாகும். ஆனால், வெளிப்படையாக இது தெரிவதில்லை. இதற்கு நீங்கள் உடன்பாடில்லை என்றால், ப்ளே ஸ்டோரினைப் பயன்படுத்தாமல் இருப்பதுதான் ஒரே வழி. ஆனால், அது சரியான வழி அல்ல. 
ஏனென்றால், இந்த ப்ளே ஸ்டோரில் இருந்து நீங்கள் பெற்ற அனைத்து செயலிகளையும் நீக்க வேண்டும். பின் எந்த பயன்பாடும் உங்களுக்குக் கிடைக்காது.

யு ட்யூப்

யு ட்யூப் தள செட்டிங்ஸ் அமைப்புகள் https://www.google.com/settings/accounthistory என்னும் இடத்தில் கிடைக்கும். இங்கு நீங்கள் தேடிய விடியோக்களின் பட்டியல் கிடைக்கும் இவற்றை நீக்க நீங்கள் விரும்பினால், அவற்றைத் தேடி நீக்கிவிடலாம். இங்கேயே, உங்கள் தேடலைப் பதிவு செய்ய வேண்டாம் என கூகுளுக்குக் கட்டளை இடலாம். அதே போல, நீங்கள் தேடிப் பார்த்த விடியோக்களின் பட்டியலையும் அணுகி, நீக்க விரும்புவதை நீக்கிவிடலாம்.
மேலே தரப்பட்டுள்ள தகவல்களிலிருந்து, நீங்கள் கூகுள் சர்வர்களுக்கு, உங்களைப் பற்றிய தகவல்களை, அறிந்தோ அறியாமலோ, எந்த அளவிற்குத் தருகிறீர்கள் என்பதனைத் தெரிந்து கொண்டிருப்பீர்கள். 

கூகுள் நிறுவனம் தரும் எந்த வசதியை நாம் பயன்படுத்தினாலும், நம்முடைய விருப்பங்கள், நம்மைப் பற்றிய தகவல்கள், அதன் சர்வரில் சென்று அடைவதையோ, அவற்றைப் பயன்படுத்தி நம்மை கூகுள் அணுகுவதையோ மாற்ற இயலாது. விருப்பப் பட்டால், நம்மிடமிருந்து செல்லும் தகவல்களைக் குறைத்துக் கொள்ளலாம். கூகுள் சேவையே, அதில் உள்ள நம் அக்கவுண்ட்டினைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டிருக்கும் டூல்களைத் தருகிறது. 

ஆனால், இதற்கு நாம் முயற்சி எடுத்து, செட்டிங்ஸ் அமைத்துத் தொடர்ந்து கண்காணிக்கும் வேலையையும் மேற்கொள்ள வேண்டும். ஆண்ட்ராய்ட் சாதனங்கள், ஜிமெயில், கூகுள் மேப்ஸ், யு ட்யூப் போன்றவை எல்லாம், தகவல்களைச் சேகரிக்கும் டூல்களைத் தாங்களாகவே இயக்கித் தங்கள் பணியைத் தொடர்கின்றன. நாம் இதனை அறிந்து, ஒவ்வொரு செட்டிங்ஸ் பக்கமும் அணுகி, இவற்றைத் தடுக்கலாம். 

ஆனால், அவ்வாறு தடுக்கும் வேளைகளில், சில வசதிகளை இழக்க வேண்டியதிருக்கும். தேவைப்படும்போது மட்டும் பயன்படுத்தினால், தகவல்கள் தொடர்ந்து செல்வது நிறுத்தப்படும்.

நன்றி : தினமலர் நாளிதழ் - 02.01.2017

Sunday, November 27, 2016

குரோம் இணையதளம் வசப்படுத்த


குரோமை வசப்படுத்த என்ன செய்ய வேண்டும்?


இணையத்தில் தேடல் பிரிவில், தனக்கு நிகர் என எதுவும் இல்லாத வகையில், கூகுள் நிறுவனத்தின் தேடல் இஞ்சின் இயங்கி வருகிறது. தேடல் என்றாலே, அது கம்ப்யூட்டருக்குள் என்றாலும், இணையத்தில் என்றாலும், கூகுள் இஞ்சின் தான் முதல் இடம் பெறுகிறது. 

அதே போல, கூகுள் தந்துள்ள குரோம் பிரவுசர், இணையப் பயனாளர்களால் அதிக அளவில் விரும்பப்படும் பிரவுசராக இயங்கி வருகிறது. நாம் விரும்பும் வகையில் அதனை வடிவமைத்துச் செயல்படுத்த, கூகுள் பல வழிகளைத் தந்துள்ளது. 

தெளிவான இடைமுக அமைப்புகள் இதன் இன்னொரு சிறப்பாகும். அத்துடன் நம் இணைய உலாவிற்கான பாதுகாப்பு, அவ்வப்போது இணைக்கப்படும் புதிய வசதிகள் என நம் இணைய உலாவினை அன்றாடம் ஒரு புதிய அனுபவமாகவே கூகுள் தந்து வருகிறது. 

கூகுள் குரோம் பிரவுசரில் இந்த வசதிகளைப் பெறும் வழிகளை இந்த கட்டுரை விளக்குகிறது. 

1. பிரவுசரில் திறந்து வைக்கப்பட்டுள்ள தளங்களுக்குச் செல்ல,கீ போர்ட் வழியாக ஒரு வழி உள்ளது. முதலில், நீங்கள் விரும்பும் இணைய தளம் காட்டப்படும் டேப் எந்த இடத்தில் (1,2,3,4...) உள்ளது எனப் பார்க்கவும். பின்னர், கண்ட்ரோல் கீ அழுத்தி, அதன் இடத்திற்கான எண்ணை (Ctrl+3) அழுத்தினால், அந்த குறிப்பிட்ட டேப் உள்ள தளம் திரையில் கிடைக்கும்.

2.  ஸ்பேஸ் பாரினை அழுத்தினால், எந்த இணைய தளத்திலும், தளமானது ஒரு பக்கம் கீழாகச் செல்லும் என்பதனை நீங்கள் அறிந்திருக்கலாம். இதே போல, ஷிப்ட் கீ அழுத்தி ஸ்பேஸ் பார் அழுத்தினால், அதே போல பக்கங்களைத் தாண்டிச் செல்லலாம்.

3. குரோம், அதன் எக்ஸ்டன்ஷன்களுக்குச் செல்ல ஷார்ட் கட் கீ வழிகளை அமைக்க வசதி தருகிறது. இதற்கு chrome://extensions/ எனச் செல்லவும். கிடைக்கும் பக்கத்தில் கீழாகச் செல்லவும்.இங்கு “Keyboard shortcuts” என்ற இடத்தில் கிளிக் செய்து, நீங்கள் விரும்பும் செயல்பாடுகளுக்கு, ஷார்ட் கட் கீகளை அமைக்கலாம்.

4. சில எக்ஸ்டன்ஷன் புரோகிராம்கள் பின்னணியில் இயங்கினாலே போதும். எனவே, ஏன் அவை பிரவுசரின் டூல்பாரில், இடம் எடுத்துக் கொண்டு தேவையற்ற வகையில் காட்டப்படுகிறது. இதனைப் போக்க, எந்த எக்ஸ்டன்ஷன் காட்டப்பட வேண்டாம் என்று எண்ணுகிறீர்களோ, அதற்கான ஐகானில், ரைட் கிளிக் செய்து, கிடைக்கும் கீழ்விரி மெனுவில், “Hide button” என்ற பட்டனைத் தேர்ந்தெடுத்து அமைக்கவும். 

5. எந்தவிதமான கவனச் சிதறலும் இல்லாமல், இணையப் பக்கத்தில் உலா வர, F11 என்ற கீயை அழுத்தவும். உடன், குரோம் பிரவுசர் முழு திரையிலும் காட்டப்படும். வழக்கமாகக் காட்டப்படும் பிரவுசர் சார்ந்த ஐகான்கள் மற்றும் பிற வகை தோற்றங்கள் அனைத்தும் மறைக்கப்படும். 

6. நிறைய டேப்களைத் திறந்து வைத்து, பிரவுசரைப் பயன்படுத்து பவரா நீங்கள்? இவற்றில் சிலவற்றை மறைத்து வைக்க விரும்புகிறீர்களா? பிரவுசரின் முகவரி விண்டோவில், chrome://flags என டைப் செய்திடவும். அங்கு Stacked Tabs என்பதனைத் தேடி அறியவும். அதனை இயக்கும் வகையில் enable செய்திடவும். இதனால், டேப்கள் அனைத்தும் சுருங்கி, சிறியதாகக் காட்சியளிப்பதற்குப் பதிலாக, ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கப்பட்டுக் காட்சி அளிக்கும்.

7. எந்த இணைய தளத்தினையும், அதன் காட்சித் தோற்றத்தினைப் பெரிதாக்கிப் (Zoom) பார்க்கலாம். பின் சுருக்கலாம். இதற்கு கண்ட்ரோல் கீ அழுத்திய நிலையில் “+” அல்லது “-” கீயினை அழுத்த வேண்டும். ஸூம் செய்யப்படும் அல்லது ஸூம் செய்த காட்சி சுருக்கப்படும். இதன் மூலம் இணைய தளப் பக்கத்தில் உள்ள எழுத்துக்களும் படங்களும் விரிக்கப்பட்டுக் காட்டப்படும்.

8. கண்ட்ரோல் + ஸீரோ (Ctrl+-0) அழுத்தினால், நீங்கள் ஸும் செய்த ஸ்கிரீன், அல்லது சுருக்கிய திரை பழைய 100% நிலைக்குத் திரும்பும். 

9. நீங்கள் எப்போது விரும்பினாலும், குரோம் பிரவுசரின் தாய் முகப்புப் பக்கத்திற்குச் செல்லலாம். Alt-+Home கீகளை அழுத்திப் பெறலாம். இதற்குப் பதிலாக ஹோம் பட்டன் இருந்தால், அதனை மட்டும் அழுத்திச் செல்லலாம் அல்லவா? இதனைப் பெற, chrome://settings தேர்ந்தெடுத்துச் செல்லவும். அங்கு, “Show Home button” என்று உள்ள பெட்டியில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும். இனி, இதற்கான பட்டன் ஒன்று ஸ்கீரினில் காட்டப்படும்.

10.எந்த இணையதளத்திற்குமான ஷார்ட் கட் ஒன்றை, விண்டோஸ் டெஸ்க்டாப்பில் அமைக்கலாம். முகவரி கட்டத்தில் காட்டப்படும் முகவரியினை, மவுஸ் மூலம் அப்படியே இழுத்துச் சென்று, திரையில் அமைத்தால், அது, அந்த இணைய தளத்திற்கான ஷார்ட் கட் கீயாகச் செயல்படும். அப்ளிகேஷன்களுக்கு நாம் ஏற்படுத்தும் ஷார்ட் கட் கீ ஒன்றையும், இணையப் பக்கங்களுக்கு ஏற்படுத்தலாம். பிரவுசரின் மெயின் மெனுவிற்குச் செல்லவும். அங்கு Tools தேர்ந்தெடுக்கவும். இதில் “Create application shortcuts” என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இனி, குறிப்பிட்ட பக்கமானது முழுமையாகத் திரை முழுவதும் காட்டப்படும். வழக்கமான பிரவுசர் சார்ந்த எதுவும் காட்டப்பட மாட்டாது.

11. பிரவுசரில் பல இணைய தளங்களைப் பார்த்துத் தேவையான தகவல்களை தேர்ந்தெடுக்கிறீர்கள். கம்ப்யூட்டரை நிறுத்தி, வேறு சில வேலைகளை முடித்து மீண்டும் திரும்ப நினைக்கிறீர்கள். பிரவுசரில் பார்த்த அனைத்து தளங்களும் அதன் டேப்களோடு உங்களுக்கு வேண்டும் என விரும்புகிறீர்கள். இதற்கு, chrome://settings செல்லவும். அங்கு, “On startup” என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இதில் ““Continue where I left off.”” என்பதனைக் கிளிக் செய்து தேர்ந்தெடுத்து அமைக்கவும். அடுத்த முறை, குரோம் பிரவுசரை இயக்கும்போது, அதற்கு முன் இயக்கியபோது நீங்கள் பார்த்த அனைத்துஇணைய தளங்களுடன், பிரவுசர் திறக்கப்படும்.

நன்றி : தினமலர் நாளிதழ் - 21.11.2016

Thursday, November 17, 2016

ஃபேஸ்புக் - மோசடி விளம்பரம்


ஃபேஸ்புக் மூலம் மோசடி வலை - என்ன செய்ய வேண்டும்? 

கரன்சி டிரேடிங் உஷார்!
***********************************
இப்போதெல்லாம் ஃபேஸ்புக்கைத் திறந்தாலே ஒரு விளம்பரம் தவறாமல் கண்ணில்படுகிறது. ‘ஃபாரெக்ஸ் டிரேடிங்கில் ஒரே நாளில் 10,000 ரூபாய் சம்பாதித்தேன், 20 ஆயிரம் சம்பாதித்தேன்’ என்று பற்பல பெயர்களுடன் ஹாயாக சிரித்தபடி சொல்லும் ஸ்டேட்மென்ட்டுகளை பார்த்தால், அட, ஒரே நாளில் இவ்வளவு லாபமா என்று யாருக்குத் தான் வாய் பிளக்கத் தோணாது!

பங்குச் சந்தை டே டிரேடிங், கமாடிட்டி டிரேடிங்கில் ருசி கண்ட நம்மவர்கள், இப்போது ஃபாரெக்ஸ் (கரன்சி) டிரேடிங் கில் இறங்கி இருக்கிறார்கள், தமிழகத்தின் பட்டிதொட்டி எங்கும் ஃபேஸ்புக் பரவி இருப்பதால், இந்த விளம்பரத்தை பார்த்து ஃபாரெக்ஸ் டிரேடிங் பற்றி சரியாக தெரிந்து கொள்ளாமலேயே அதில் சிக்கி, சீரழிகிறவர்களின் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கிறது. 

அது என்ன ஃபாரெக்ஸ் டிரேடிங், இதில் இவ்வளவு லாபம் கிடைக்குமா?

ஃபாரின் எக்ஸ்சேஞ்ச் டிரேட் என்பதைத்தான் சுருக்கி ஃபாரெக்ஸ் டிரேட் என்று அழைக்கிறோம். அமெரிக்க டாலர், ஐரோப்பாவின் யூரோ, இங்கிலாந்தின் பவுண்ட், ஜப்பானின் யென் போன்ற நாணயங்களை (கரன்சி) வாங்கி விற்பது ஃபாரெக்ஸ் டிரேடிங். இதில் கரன்சியை வாங்கியும் விற்கலாம் (லாங்); விற்றும் வாங்கலாம் (ஷார்ட்).

இந்த ஃபாரெக்ஸ் டிரேடிங்கில் இரண்டு வகை உண்டு. 

முதல் வகை நம் அரசாங்கத்தின் அனுமதியுடன் நடப்பது. இது எப்படி நடக்கிறது என்பதை முதலில் சொல்லிவிடுகிறேன்.

ஈக்விட்டி டிரேடிங், கமாடிட்டி டிரேடிங் பற்றி நன்கு தெரிந்தவர்கள், ஃபாரெக்ஸ் டிரேடிங்கும் அப்படித்தான் இருக்கும் என்று நினைத்துதான் அதை செய்யத் தொடங்குகிறார்கள். ஆனால், இரண்டுக்கும் வித்தியாசம் உண்டு.

ஒரு பங்கின் விலை ஏறினால் லாபத்தில் விற்கலாம். விலை குறைந்தால் நஷ்டத்தில் விற்கலாம். ஆனால், அமெரிக்க டாலரின் விலை ஏறுமா அல்லது இறங்குமா என்பதை தனியாக அளவிட முடியாது. அதை இன்னொரு நாணயத்துடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். உதாரணமாக, அமெரிக்க டாலர் இந்திய ரூபாய்க்கு நிகராக ஏறுகிறதா, இந்திய ரூபாய் யூரோவுக்கு நிகராக குறைகிறதா என்று பார்க்க வேண்டும்.

ஒரு அமெரிக்க டாலர் = ரூ.65 என்று வைத்துக்கொள்ளலாம். 1000 டாலர் வாங்குகிறோம். 65 ரூபாய் 66 ரூபாயாக உயர்கிறது எனில், நமக்கு 1000 ரூபாய் லாபம். 10,000 டாலரை ரூபாய் 65 என்கிற மதிப்பில் வாங்கி அது 66 ரூபாயாக உயர்ந்தால், நமக்கு 10,000 லாபம். அட! என்று சொல்லத் தோன்றுகிறதில்லையா?

ஒரு டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 65 ரூபாய் எனில், 1000 டாலர் வாங்க 65,000 ரூபாய் தரவேண்டுமே! அவ்வளவு பணம் நம்மிடம் இல்லையே என்று நினைக்காதீர்கள். 

முழுப் பணத்தையும் நீங்கள் தரவேண்டிய தில்லை. ஆயிரம் டாலரின் (ஒரு லாட்) மதிப்பு ரூ.65,000 எனில், அதன் மதிப்பில் வெறும் 3 சதவிகித பணத்தை மட்டும் கட்டி மொத்த மதிப்புக்கும் சொந்தம் கொண்டாடலாம். இதைத்தான் லீவரேஜ் என்கிறார்கள்.

ஆனால், மிகக் குறைந்த அளவு பணத்தையே முன்பணமாக கட்டுவதால், டாலர் மதிப்பு உயர்வதற்கு பதிலாக குறையும்பட்சத்தில் நாம் முன்பணமாக கட்டிய பணம் காணாமலே போக வாய்ப்புண்டு. லீவரேஜ்-ல் இருக்கும் மிகப் பெரிய அபாயம் இது.

இந்த ஃபாரெக்ஸ் டிரேடிங்கை டாலர் – ரூபாய் மட்டுமல்ல, இன்னும் மூன்று விதமான கரன்ஸியிலும் செய்யலாம். அவை EUR – INR, GBP – INR, YEN - INR. இதில் முதலில் வருவது பேஸ் கரன்சி (Base Currency). யூரோ என்பது ஐரோப்பிய பணம். ஜிபிபி என்பது கிரேட் பிரிட்டன் பவுண்ட். யென் என்பது ஜப்பான் நாட்டு நாணயம். இந்த நான்கு கரன்சிகளையும் ரூபாய்க்கு நிகராக உயரும் என்று நினைத்தால் வாங்கி விற்கலாம். குறையும் என்று நினைத்தால், விற்று வாங்கலாம்.

ஒரு லாட் என்பது 1000 அமெரிக்க டாலர் அல்லது யூரோ அல்லது பவுண்ட் ஆகும். ஜப்பான் யென் மட்டும் ஒரு லாட் என்பது ஒரு லட்சம் எண்ணிக்கையில் இருக்கும். இதன் மதிப்பில் வெறும் 3%, அதாவது ரூ.1,950 மட்டும் கட்டி வாங்கிவிடலாம். இவ்வளவு குறைவாக முன்பணம் வாங்கக் காரணம், ஒரு நாளைக்கு இந்த நாணயங்களின் மதிப்பு 3 சதவிகிதத்துக்கு மேல் மாறியதில்லை என்பதால்தான்.

இந்த ஃபாரெக்ஸ் டிரேடிங் இந்திய பங்குச் சந்தைகளான என்.எஸ்.இ., பி.எஸ்.இ., எம்சிஎக்ஸ் எக்ஸ்சேஞ்சுகளில் நடக்கிறது. இந்த எக்ஸ்சேஞ்சுகள் செபியின் கட்டுப்பாட்டில் இருப்பதால், இந்த வர்த்தகத்தில் பெரிய அளவில் முறைகேடுகள் நடக்க வாய்ப்பில்லை.

ஆனால், இப்போது ஃபேஸ்புக்கில் பெரிதாக விளம்பரப்படுத்தப்படும் ஃபாரெக்ஸ் டிரேடிங் இதுவரை நாம் பார்த்த மாதிரியானதல்ல. இன்டர்நேஷனல் அளவில் நடக்கும் இந்த ஃபாரெக்ஸ் டிரேடிங் செய்பவர்கள் நம் நாட்டில் அங்கீகரிக்கப்படாத கரன்சியில் வர்த்தகத்தை எல்லாம் செய்வார்கள். இங்கே ரூபாய் என்பதே இருக்காது. EUR – USD, USD – JPY, EUR – JPY, GBP - USD, GBP – JPY என்று உலக அளவிலான நாணயங்களின் மதிப்புகள் வர்த்தகமாகும். ஃபேஸ்புக்கில் அடிக்கடி வரும் இந்த விளம்பரங்களை பார்த்து, இதில் பணத்தை போடலாமா?

நிச்சயம் போடக்கூடாது. 
காரணம், இந்திய அரசாங்கத்தின் அங்கீகாரம் இதற்கு இல்லை. 1973-ல் கொண்டு வரப்பட்ட ஃபாரின் எக்ஸ்சேஞ்ச் ரெகுலேஷன் ஆக்ட் (FERA), 1998-ல் கொண்டு வரப்பட்ட FERA ஆகிய சட்டங்களின் அடிப்படையில் ஓடிசி மார்க்கெட்டும், செபியின் கண்காணிப்பில் கரன்சி வர்த்தகமும் இயங்குவது போல, எந்த சட்டவிதிமுறையும் இதற்கு இல்லை. 

இந்த வியாபாரத்தில் நீங்கள் ஈடுபட நினைத்தால், இன்டர்நேஷனல் புரோக்கர்கள் உங்களை டாலரில் பணம் கட்டச் சொல்வார்கள் (கிரெடிட் கார்டிலோ அல்லது டெபிட் கார்டிலோ). இதுவே சட்ட விரோதமான காரியத்தில் ஈடுபடும் ஒரு செயலாகக்கூட இருக்கலாம். 

இந்த வியாபாரத்தில் சிறு வியாபாரிகளை குறிவைப்பதே முக்கிய நோக்கமாக இருக்கிறது. அதாவது, $100 போடுங்கள், $200 போடுங்கள் என்று குறைந்த தொகையில் ஆரம்பிக்க சொல்வார்கள். அதிக லீவரெஜ் தருவதாக ஆசை காட்டுவார்கள். லாபம் சம்பாதித்தால், அந்தப் பணத்தை உங்கள் வங்கிக் கணக்கில் போட்டுவிடுவோம் என்பார்கள். 

ஆனால், பலரையும் விசாரித்ததில், பணம் வங்கிக் கணக்குக்கு வரவில்லை என்றே சொல்கிறார்கள். இன்னும் சிலர், லாபம் வந்தால்தானே பணம் வர்றதுக்கு! பெரும்பாலும் நஷ்டத்தில்தானே வியாபாரம் முடிகிறது. பிறகு எங்கே பணம் வரும் என்று கேட்கிறார்கள்.

சரி, ஃபாரெக்ஸ் டிரேடிங்கில் ஏதாவது முறைகேடு நடந்தால், சந்தை கட்டுப்பாட்டு வாரியமான செபியிடம் நீங்கள் முறையிடலாம். ஆனால், இந்த இன்டர்நேஷனல் புரோக்கர்களிடம் ஃபாரெக்ஸ் டிரேட் செய்து, பிரச்னையில் மாட்டினால் யாரிடம் முறையிடுவது?

இந்த ஃபாரெக்ஸ் டிரேட் செய்த புரோக்கர் இங்கிலாந்தில் இருந்தால், அங்கே இருக்கிற மத்திய வங்கியிடம்தான் நீங்கள் முறையிட வேண்டும். அமெரிக்கா எனில், ஃபெட் ரிசர்வ் வைத்துள்ள அமைப்பிடம் முறையிடலாம். 

அதுபோல, நீங்கள் வியாபாரம் செய்யும் புரோக்கர் நிறுவனம் தன் தலைமை அலுவலகத்தை எந்த நாட்டில் வைத்திருக்கிறாரோ, அங்கேதான் போய் முறையிட வேண்டும். 

லோக்கலில் நம்மை ஏமாற்றியவர்கள் மீதே நடவடிக்கை எடுக்க முடியாமல் நாம் திணறும்போது, அமெரிக்கா, இங்கிலாந்து என எல்லா வெளிநாடுகளுக்கும் போய் நடவடிக்கை எடுக்க வைப்பதெல்லாம் சாத்தியமே இல்லை. 

50 ஆயிரம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டால், அதை திரும்பப் பெற அமெரிக்கா போய்வர அதற்கு மேல் செலவாகும்தானே? எனவே, அளவுக்கு அதிகமாக ஆசைப்பட்டு, பல லட்சம் ரூபாயை இழந்தவர்கள், வெளியே சொல்ல முடியாமல், அப்படியே மென்று முழுங்கிவிடுகிறார்கள்.

கூரை ஏறி கோழி பிடிக்காதவன், வானம் ஏறி வைகுண்டம் போனானாம் என்று ஒரு பழமொழி உண்டு. 

முதலில் உள்நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட டிரேடிங்கில் நம் திறமையைக் காட்டுவோம். அங்கீகாரம் இல்லாத வேறு எந்த டிரேடிங்கிலும் தலைகாட்டா மல் இருப்பதே நல்லது.

நன்றி : நாணயம் விகடன் - 15.11.2015

Saturday, October 15, 2016

ஆன்லைனில் உங்கள் உயிலை உருவாக்க


ஆன்லைனில் உங்கள் உயிலை உருவாக்க என்ன செய்ய வேண்டும்? 

சென்னை: ஓர் உயில் என்பது ஒரு நபரால் எழுதப்படும் சாசனம் ஆகும். உயிலானது ஒருவரின் மரண சாசனம் என்றும் அழைக்கப்படுகின்றது.

அந்த சாசனத்தில் ஒருவர் அவரது இறப்புக்கு பிறகு, அவரது விருப்பத்தின் படி அவரது சொத்துக்கள் எவ்வாறு விநியோகிக்கப்பட வேண்டும் என்பதை அறிவிக்கின்றார்.

 ஒரு உயிலை எழுதுவது மிகவும் எளிதாக தோன்றலாம். ஆனால் அந்த மரண சாசனத்தில் ஒருவரின் உண்மையான நோக்கம் தெளிவாக தெரிவிக்கப்பட வேண்டும். மேலும் அதை பத்திரமாக பாதுகாக்க வேண்டும். அவ்வாறு செய்தால் மட்டுமே ஒருவரின் உயில் நீதிமன்றத்தில் செல்லுபடியாகும். 

ஆகவே உங்களுக்கு உதவும் பொருட்டு நீங்கள் எவ்வாறு ஆன்லைன் சேவை மையங்களை பயன்படுத்தி, ஆன்லைன்னில் உயிலை உருவாக்குவதற்கான திட்டக்குறிப்புகளை நாங்கள் இங்கு விவரித்துள்ளோம். 

போர்டலில் பதிவு செய்தல் முதலில், நாம் ஒரு சேவை வழங்குனர்களின் வலைத்தளத்தில் நம்முடைய விபரங்களை பதிவு செய்ய வேண்டும். உறுப்பினர்களுக்கு ஒரு பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல் வழங்கப்படும். அதைப் பயன்படுத்தி சேவை மையத்தின் சேவைகளை அணுபவிக்கலாம். 

விவரங்களை பதிவிடல் மரண சாசனத்தை உருவாக்கும் முன் ஒருவர் தனது சொத்துக்கள், பயனாளிகளின் விபரங்கள் மற்றும் தன்னுடைய பிற தனிப்பட்ட விவரங்களை தெரிவிக்க வேண்டும். அதைப் பயன் படுத்தி ஒருவரின் உயில் உருவாக்கப்படும். 

இந்த விவரங்கள், ஒரு கேள்வித்தாள் வடிவில் நிரப்பப்படும் அல்லது போர்டலின் விண்ணப்படுவங்களை நிரப்புவதன் மூலம் விபரங்கள் அந்த வலைத்தளத்தில் பதிவேற்றப்படும். 

நீங்கள் உங்களின் விபரங்களை பூர்த்தி செய்த பின் மீண்டும் ஒரு முறை, அந்த விபரங்களை ஆய்வு செய்து ஏதேனும் பிழைகள் இருந்தால் அதைத் திருத்தி சமர்ப்பிக்கலாம். 

அதைத் தவிர்த்து இங்கே பயனாளர் அவருடைய உயிலை நிறைவேற்றுபவராக யார் இருக்க வேண்டும் என்பதையும் குறிப்பிட வேண்டும்.   கட்டணங்கள் பயனாளரின் அனைத்து விபரங்களும் ஆன்லைனில் சமரப்பிக்கப்பட்ட பின்னர், அந்தப் பயனாளர் சேவை மையத்திற்கு உரிய கட்டணத்தை செழுத்த வேண்டும்.

 சேவை மையத்தின் கட்டண விபரம் ஒவ்வொரு மையத்திற்கும் மாறுபடும். 

அந்த சேவை மையத்தின் கட்டண விபரத்தின் படி, ஒரு பயனாளர் தன்னுடைய கட்டணத்தை செழுத்த வேண்டும். அந்த சேவை மையத்திற்கு உரிய கட்டணத்தை ஆன்லைன் மூலமாகவோ அல்லது ஆப்லைன் மூலமாகவோ செழுத்தலாம். 

முதல் வரைவு, மற்றும் இறுதி வடிவம் ஒரு வழக்கறிஞர்கள் குழு, பயனாளரினால் வழங்கப்பட்ட விவரங்களைப் பயன்படுத்தி அவரின் உயிலுக்கான முதல் வரைவு அறிக்கையை உருவாக்கும்.

அதன் பின்னர் அந்த வரைவு அறிக்கை பயனாளரின் ஒப்புதலுக்காக அனுப்பப்படும். பயனாளர் வரைவு அறிக்கையில் மாற்றங்களைப் பரிந்துரைக்கலாம். வரைவு அறிக்கை அங்கீகரிக்கப்பட்ட பின் உயிலின் இறுதி வடிவம் பயனாளருக்கு அனுப்பி வைக்கப்படும். 

அதை பயனாளர் செயல்படுத்த வேண்டும்.   சாட்சிகள் முன்னிலையில் கையொப்பம் இடுதல் இறுதி வரைவு பயனாளருக்கு கிடைத்த பின்னர், அதை அவர் சாட்சிகள் முன்னிலையில் கையெழுத்திட வேண்டும். 

உயில் பதிவு உயிலை பதிவு செய்வது கட்டாயம் இல்லை என்றாலும், உயிலை துணை பதிவாளர் முன் பதிவு செய்வது மிகவும் நல்லது. 

அது அந்த ஆவணத்தின் நம்பகத்தன்மையை அதிகரிக்கின்றது. கவனிக்க வேண்டியவை சேவை வழங்கும் மையங்களின் பின்னணி மற்றும் நிபுணத்துவம் பற்றி அறிந்து கொள்வது மிகவும் அவசியம். 

அதைத் தவிர்த்து சேவை வழங்குநரின் முழு விபரம் மற்றும் அவர்கள் வழங்கும் சேவைகளை சரிபார்ப்பது மிகவும் முக்கியம். ஆன்லைன் சேவை வழங்கும் மையங்கள் பொதுவாக ஒரு கூட்டு உயிலை எழுதுவதில்லை. 

சேவை மையங்கள் வசூலிக்கும் உயில் கட்டணங்கள் பொதுவாக ஒரு முறை அல்லது இருமுறை மட்டும் உயிலை திருத்துவதற்கு அனுமதிக்கும். 

அதற்கு மேல் நீங்கள் உங்களின் உயிலை திருத்த வேண்டும் எனில் அதற்குத் தனியாக கட்டணம் செலுத்த வேண்டும்..        

Written by: Batri Krishnan 

குட்ரிட்டன்ஸ் » தமிழ் » 15.10.2016



Tuesday, October 11, 2016

ஆன்லைன் பர்சேஸ்


ஆன்லைன் பர்சேஸ் - என்ன செய்ய வேண்டும்?

ஆன்லைன் பர்ச்சேஸ்… நில்… கவனி… வாங்கு!
ராஜேஷ், சென்னையின் பிரபலமான ஐ.டி நிறுவனம் ஒன்றில் அட்டகாசமான சம்பளத்தில் வேலை செய்யும் சாஃப்ட்வேர் இன்ஜினீயர். இன்னும் திருமணமாகாத இளைஞன் என்பதால், தனி வீட்டில் வாசம். பேஸ்ட், பிரஷ் தொடங்கி காய்கறி, கம்ப்யூட்டர் வரை ஆன்லைன் ஷாப்பிங் அவருக்கு கைவந்த கலை.

நன்றாகச் சென்றுகொண்டிருந்த ஆன்லைன் ஷாப்பிங் வாழ்க்கையில், ஆசைக்காக ஒரு செல்போன் வாங்கப் போய் அவர் பட்டபாடு… செல்போன் மாடல், விலை எல்லாவற்றையும் தேர்ந்தெடுத்தவர் செய்த ஒரே தவறு, அதை பெயர் தெரியாத ஒரு விற்பனைத் தளத்தில் ஆர்டர் செய்ததுதான்.

செல்போனுக்காக ஆர்வமாகக் காத்திருந்தவருக்கு பார்சலில் வந்து சேர்ந்தது ஒரு செங்கல். அதிர்ந்து போனவர் கஸ்டமர்கேர்க்கு போன் போட்டால்,  பதிலாக எதிர்முனையில் கிடைத்தது வெறும் ‘பீப்’ ஒலி. 

இதில் கொசுறாக அவருடைய கிரெடிட் கார்டு நம்பரை அந்த ஆன்லைன் வெப்சைட் மூலமாக மனப்பாடம் செய்த மற்றொரு வெப்சைட், கிட்டதட்ட பத்தாயிரம் ரூபாயை அவருக்கே தெரியாமல் தீட்டிவிட்டது. 

என்ன செய்வதென்றே தெரியாமல் கஸ்டமர் கேருக்கும், கிரெடிட் கார்டு புகார் தரும் நம்பருக்கும் ஓயாமல் அழைத்து நொந்துபோன ராஜேஷ் இப்போதெல்லாம் ஆன்லைன் ஷாப்பிங் என்றாலே அலறியடித்து ஓடுகிறார்.

ஆனால் ராஜேஷைப் போல நம் எல்லோராலும் ஆன்லைன் பர்ச்சேஸை முழுவதுமாகத் தவிர்க்க இயலாது. உலக அளவில் மூன்று கோடி பேர் ஆன்லைன் ஷாப்பிங்கில் பொருட்கள் வாங்குவதை பழக்கமாக வைத்துக் கொண்டிருக்கின்றனர். 

அப்படி இருக்கையில் ஆன்லைன் பர்ச்சேஸை  நம்மால் மட்டும் எப்படி தவிர்க்க முடியும்..? ஆனால், பர்ச்சேஸ் செய்யும்போது எதையெல்லாம் வாங்கலாம், எதையெல்லாம் வாங்கக்கூடாது, எப்படியெல்லாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் எனப் பார்ப்போம்.

வெப்சைட்டின் நம்பகத்தன்மை!

உண்மையில் ஐந்து நிமிடத்தைக்கூட வேஸ்ட் செய்ய முடியாத டெக்னாலஜி வளர்ச்சி அடைந்துள்ள இந்த வைரல் உலகில், வெளியில் சென்று பொருள் வாங்க முடியாத பலருக்கும் ஆன்லைன் ஷாப்பிங்தான் தக்க சமயத்தில் கைகொடுக்கிறது. ஆனால், ஒரு பெட்டிக் கடையில்கூட பேரம் பேசி பொருள் வாங்கும் நாம், ஆன்லைன் தளங்களில் மட்டும் கண்ணை மூடிக்கொண்டு பொருள் கிடைத்தால் போதும் என க்ளிக் செய்து விடுகிறோம். 

அந்தத் தளத்தின் உண்மைத் தன்மை, இதுவரை பொருட்கள் வாங்கியவர் களின் கருத்துக்கள், பொருளின் தயாரிப்பு முறைகள் ஆகியவற்றைப் பற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை. ஆன்லைன் ஷாப்பிங் உலகுக்குள் கொட்டிக் கிடக்கும் வெப்சைட்கள் கணக்கிலடங்காதவை.

அமேசான், ஃப்ளிப்கார்ட், ஜபாங், லைம்ரோடு என்று ஆடைகள், புத்தகங்கள், கேட்ஜெட் என்னும் எலெக்ட்ரானிக் அயிட்டம்கள் தொடங்கி அரிசி, பருப்பு, கேக் என்று உணவுப் பொருட்கள் வரை விற்கும் தளங்களும் எக்கச்சக்கம். அதில் நியாயமான விலை, நம்பகத்தன்மை கொண்ட வெப்சைட்களைத் தேர்ந்தெடுத்தால் மட்டுமே உங்கள் பொருள், பத்திரமாக உங்கள் கைகளுக்கு வந்துசேரும்.

 கவனிக்கவேண்டிய கஸ்டமர் ரெவியூ!

நீங்கள் ஒரு புடவையோ, டீ-சர்ட்டோ அழகாக இருக்கிறது. விலையும் கம்மி என்று முடிவு செய்து ஆர்டர் செய்திருப்பீர்கள். ஆனால், கைகளுக்கு வந்து சேர்வதோ நிறம் மங்கிய, இல்லையெனில் வேறு டிசைன், வேறு கலரில் என்று உங்களை கொலைவெறிக்கு உள்ளாக்கும் ஒரு ஆடையாக இருக்கும். 

இந்த பிரச்னைகளைத் தவிர்க்க, ஆடைகளை ஆன்லைனில் தேர்ந்தெடுக்கும்போது அதிக அளவிலான கஸ்டமர் ரெவியூக்கள் பெற்ற தளத்தினைத் தேர்ந்தெடுத்தல் அவசியம். ஆடையின் நிறம், சைஸ் ஆகியவற்றையும் ஒன்றுக்கு இரண்டு முறை செக் செய்துகொள்ளுங்கள். கூடுமானவரையில் உங்களுக்கு பரிட்சயமான பிராண்ட் துணிகளையே தேர்ந்தெடுங்கள்.

விலை உயர்ந்த பொருட்களைத் தவிர்க்கலாம்!

ஒரு துணிக்கே இவ்வளவு யோசிக்க வேண்டுமென்றால், விலையுயர்ந்த எலெக்ட்ரானிக் பொருட்களான செல்போன், டிவி, ஃப்ரிட்ஜ் போன்றவற்றை வாங்க எவ்வளவு யோசிக்க வேண்டும் என நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். ஆன்லைனில் கொட்டிக் கிடக்கும் கம்பேரிசன் வெப்சைட்கள் மூலமாக ஒரு பிராண்டின் விலை மாறுபாடுகள், தர நிர்ணயம் போன்றவற்றில் கவனமாக வையுங்கள். 

45 இன்ச் டிவிக்கு பதில், 16 இன்ச் டிவியையோ, பிராண்ட் செல்போ னுக்கு பதில் சைனா மேட் செல்போன் ஒன்றையோ ஆன்லைன் டீலர் உங்களுக்கு அனுப்பிவைத்துவிட்டால் அதை திருப்பி அனுப்பி, அவர்களிடமிருந்து ரீஃபண்ட் பெறுவதற்குள் நீங்கள் கடையிலேயே நேரடியாக அதை வாங்கியிருக்கலாம் என்று தோன்றிவிடும்.

பெரும்பாலும் விலையுயர்ந்த தங்க நகைகள், எலெக்ட்ரானிக் பொருட்கள், முக்கியமாக உணவுப் பொருட்களை ஆன்லைனில் வாங்குவதைத் தவிர்ப்பது நலம். 

ஏனெனில், தங்க நகைகளைப் பொறுத்தவரை, ஆன்லைன் பர்ச்சேஸில் ஒருமுறை விற்பனை செய்துவிட்டால், 15 நாட்கள் கெடுக்குள் திரும்பி மாற்றிக்கொள்ளமுடியும் என்கிற கெடுவெல்லாம் பெரும்பாலான விற்பனைத் தளங்களில் கிடையாது. 

அதேபோன்று ஆன்லை னில் விற்பனையாகும் பிராண்ட் இல்லாத எலெக்ட்ரானிக் பொருட்களை வாங்குவதைத் தவிர்ப்பதும் முக்கியம். ஏனெனில், ஒரு சிறிய கோளாறு என்றால்கூட நீங்கள் வீதி வீதியாக சர்வீஸ் ஷோருமைத் தேடி அலைய வேண்டி வரும்.

உணவுப் பொருட்கள், உஷார்!

உணவுப் பொருட்களை வாங்கியே ஆகவேண்டிய கட்டாயம் இருந்தால் மட்டுமே ஆன்லைனில் வாங்குங்கள். அடிக்கடி வாங்கிப் பழகிய வெப்சைட் என்றால் பிரச்னை இல்லை. 

புதிதாக வாங்கத் தொடங்கும்போது கூடியவரை கூகுள் சஜஷனில் முன்னிலையில் உள்ள வெப்சைட்டைத் தேர்ந்தெடுங்கள். தேதி முடிவடைந்த பொருட்களைக்கூட வேறு கவர்களில் மாற்றி விற்பதற்கான சாத்தியக்கூறுகள் ஆன்லைன் உணவுப் பொருள் ஷாப்பிங்கில் அதிகம்.

லெக்ட்ரானிக் பொருட்கள், எச்சரிக்கை!

எலெக்ட்ரானிக் பொருட்களைப் பொறுத்த வரையில், நம்பகமான தளத்தில் ஆஃபர்களைக் கணக்கிட்டு வாங்குங்கள். ஒரு நல்ல, தரமான பொருளுக்காகக் காத்திருப்பதில் தவறில்லை. அதை விட்டுவிட்டு ஆன்லைன் ஷாப்பிங் மோகத்தில் இரண்டே நாளில் பொருள் கைக்கு வந்துவிட வேண்டும் என்று ஓட்டை, உடைசல் செல்போனையோ, வாரண்டி இல்லாத டிவி, மிக்ஸியையோ வாங்கிவிட்டால் அவதிப்படப் போவது நீங்கள்தான். அதுவும், 

இஎம்ஐ போட்டு கடனில் வாங்கும் பொருட்களில் தரம் இல்லையென்றால், அதிக விலை கொடுத்தும் வேஸ்ட்தான். இவற்றையெல்லாம் தாண்டி குறைந்த விலையில் கிடைக்கும் காஸ்மெட்டிக் பொருட்கள், சார்ஜர், பர்னிச்சர் என்று எல்லாவற்றையும் முடிந்தவரை நேரில் சென்று ஒன்றுக்கு நான்கு பொருட்களின் விலை மாறுபாடுகளை ஆராய்ந்து வாங்குவதே நல்லது.

எனினும், ஆன்லைன் ஷாப்பிங்கில்தான் இவற்றையெல்லாம் வாங்குவேன் என்பவர்கள் பொருள் கைக்கு கிடைத்த அன்றே அதில் ஏதேனும் குறைகள் இருந்தால் வாங்கிய இணைய தளத்தில் புகாரினைப் பதிவு செய்துவிடுங்கள். 

அதிக அளவிலான பயனாளர்களின் வருகை இருக்கும் ஆன்லைன் வெப்சைட்களையே பொருட்கள் வாங்கத் தேர்ந்தெடுங்கள். ரீஃபண்ட் பாலிசிகளைத் தெளிவாக மெயின்டெய்ன் செய்யும் தளங்களில் எலெக்ட்ரானிக் பொருட்களை வாங்குங்கள். விலை அதிகமாக இருந்தாலும் தரமான, நீண்ட நாட்கள் உழைக்கக்கூடிய பிராண்ட் பொருட்களையேத் தேர்ந்தெடுங்கள்.

பணம் பத்திரம்!

உங்கள் சொந்தக் கணினி இல்லாமல், வெளியில், அலுவலகக் கணினிகளில் பொருட்களை ஆர்டர் செய்யும்போது வைரஸோ, மால்வேரோ உள்நுழைந்து உங்கள் கிரெடிட், டெபிட் கார்டு தகவல்களைத் திருடிவிடலாம். அதனால், ஹைப்பர் லிங்கில் தேவை இல்லாத இணையப் பக்கங்களுக்கு அழைத்துச் செல்லும் தளங்களில் பர்ச்சேஸ் செய்வதைத் தவிர்ப்பது நல்லது.

ஜிகினா ஆஃபர்களை நம்பாதீர்!

முக்கியமாக, ஆன்லைன் ஜிகினா வேலைகளை நம்பி பொருட்களை வாங்குவதைப் பழக்கமாக வைத்துக்கொள்வது ஆபத்து. முடிந்தவரை,  ‘இன்றே கடைசி’,  ‘விசாலமான ஹோட்டல் அறை 750 ரூபாய் மட்டுமே’ போன்ற ஆஃபர்களை தவிர்த்துவிடுங்கள். ஹோட்டல் ஆஃபர்களை ஏதோ ஒரு தளத்தில் புக் செய்துவிட்டு, புது ஊர், புது இடத்தில் சென்று தவிக்கும் நிலை ஏற்பட்டால் ரொம்பக் கஷ்டம்.

கடைசியாக ஒன்றே ஒன்று… இது ஆன்லைன் ஷாப்பிங் தவிர்க்கவே முடியாத ஒன்றாக மாறிவிட்ட உலகம். முடிந்தவரை எச்சரிக்கை உணர்வோடு பர்ச்சேஸ் செய்வது மட்டுமே உங்கள் பணத்துக்கான பாதுகாப்பாக இருக்கும்.

--------------------------------------------------------------------------------------------பா.விஜயலட்சுமி

நன்றி : நாணயம் விகடன் - 02.10.2016