disalbe Right click

Showing posts with label குடும்ப அட்டை. Show all posts
Showing posts with label குடும்ப அட்டை. Show all posts

Friday, December 29, 2017

ஸ்மார்ட் கார்டு' பிழை திருத்தம்

புதிய ஸ்மார்ட் கார்டு எங்கு இடைக்கும்?
- சேவை மையங்களில் புதிய ஸ்மார்ட் கார்டு வழங்க தாமதம் ஏன்
நடைமுறை என்ன?
தமிழகத்தில் உள்ள, அனைத்து  (1.93 கோடி) ரேஷன் கார்டு தாரர்களுக்கு, 'ஸ்மார்ட் கார்டு' என்ற, கையடக்க அட்டை தமிழக அரசால் வினியோகிக்கப்பட்டு வருகிறது. அதில், புதிய பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம் செய்தல் போன்ற திருத்தங்களை செய்ய, அரசு - - சேவை மையங்களில் பொதுமக்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம். பொது வினியோகத் துறை  www.tnpds.gov.in  இணையதளத்திலும் விண்ணப்பிக்கலாம். அதற்கு, கட்டணமாக, 60 ரூபாய் பெறப்படுகிறது. இந்நிலையில், ஸ்மார்ட் கார்டுகளை பொதுமக்கள் பெறுவதில் சிக்கல் இருந்து வருகிறது.
இது குறித்து, தகவல் தொழில்நுட்பத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
பொதுவாக இ - சேவை மையங்களுக்கு வரும், ஸ்மார்ட் கார்டு தொடர்பான மனுக்கள், (Taluk Supply Officer) வட்ட வழங்கல் அதிகாரி அவர்களின் பரிசீலனைக்கு செல்லும். அவர்கள் ஒப்புதல் அளித்த பின், பதிவு செய்யப்பட்ட மனுதாரரின் மொபைல் போனுக்கு, எஸ்.எம்.எஸ்., (SMS) செய்தி அனுப்பப்படும். அதற்கு பிறகு தான், ஸ்மார்ட் கார்டு பெற,  - சேவை மையங்களுக்கு, மக்கள் வர வேண்டும்; ஆனால், அது பலருக்கு தெரிவது இல்லை. சில, நேரங்களில் வட்ட வழங்கல் அதிகாரிகள் லஞ்சம் கேட்டும், தாமதம் செய்கின்றனர். சமீபத்தில், நாமக்கல் மாவட்டத்தில், புதிய கார்டுக்கு விண்ணப் பித்தவரிடம், 5,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய ஒரு அதிகாரி பிடிபட்டுள்ளார்இதுபோன்ற மோசமான அதிகாரிகளால் தான், எஸ்.எம். எஸ்., அனுப்புவதில் தாமதம் ஏற்படுகிறது.  'ஸ்மார்ட் கார்டு - பிரின்ட் - அவுட்' அரசு கேபிள் நிறுவனம் நடத்தும் மையங்களில் மட்டும் தான் கிடைக்கும். அது தெரியாமல், மற்ற, ' - சேவை' மையங்களுக்கு பொதுமக்கள் செல்வதால், பிரச்னை ஏற்படுகிறது.
எனவே பொதுமக்கள் தங்களது ஸ்மார்ட் கார்டைப் பெற தங்களது மொபல் போனுக்கு குறுஞ்செய்து வந்த பின்பு அரசு கேபிள் நிறுவனம் நடத்தும் மையங்களுக்கு (மட்டும்) செல்ல வேண்டப்படுகிறார்கள்.
******************************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 30.12.2017 

Thursday, September 21, 2017

இனி எந்த ரேஷன் கடையிலும் அரிசி, சர்க்கரை வாங்கலாம்!

இனி எந்த ரேஷன் கடையிலும் அரிசி, சர்க்கரை வாங்கலாம்!
எந்த பகுதியில் உள்ள ரேஷன் கடையிலும், அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் வாங்கும் திட்டத்தை துவக்க, உணவுத் துறை முடிவு செய்துள்ளது.
தமிழக ரேஷன் கடைகளில், அரிசி, கோதுமை இலவசமாகவும், பருப்பு, சர்க்கரை, பாமாயில் ஆகியவை, குறைந்த விலையிலும் வழங்கப்படுகின்றன. தற்போது, ரேஷன் கார்டில் உள்ள முகவரிக்கு, அருகிலுள்ள கடையில் மட்டும் தான், இந்த பொருட்களை வாங்க முடியும்.
ரூ.5,400 கோடி
வீடு மாறி செல்வோர், அந்த விபரத்தை, உணவு வழங்கல் உதவி ஆணையர் அல்லது வட்ட வழங்கல் அலுவலகத்தில் தெரிவித்து, முகவரி மாற்றம் செய்ய வேண்டும். அங்கு தரும் சான்றை, புதிய இடத்தில் உள்ள ரேஷன் கடையில் வழங்கி, பொருட்களை வாங்க முடியும்.
இந்நிலையில், எந்த ரேஷன் கடையிலும், உணவுப் பொருட்கள் வாங்கும் திட்டத்தை துவக்க, உணவுத் துறை முடிவு செய்துள்ளது.
இது குறித்து, கூட்டுறவு மற்றும் உணவுத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
உணவு மானியத்திற்காக, தமிழக அரசு, 5,400 கோடி ரூபாய் செலவிடுகிறது. அரசியல்வாதிகள், அதிகாரிகள் உள்ளிட்டோர் செய்யும் முறைகேடுகளால், ரேஷன் பொருட்கள், முழுமையாக மக்களை சென்றடையவில்லை. இதற்கு, காகித ரேஷன் கார்டு, பதிவேட்டில் விற்பனை விபரம் பதிவு உள்ளிட்டவை, முக்கிய காரணம்.
தற்போது, ரேஷன் கடைக்கு பொருட்கள் அனுப்புதல், விற்பனை விபரம், 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு என, ரேஷன் தொடர்பான அனைத்து பணிகளும், கம்ப்யூட்டர் வாயிலாக மேற்கொள்ளப்படுகின்றன.
முறைகேடுகளுக்கு முடிவு
இதனால், கன்னியாகுமரியில் உள்ள, ஒரு ரேஷன் கடையில் இருக்கும் பொருட்களின் விபரத்தை, சென்னையில் இருந்து கண்காணிக்க முடிகிறது. இன்னும், 20 லட்சம் பேருக்கு மட்டும் தான், ஸ்மார்ட் கார்டு வழங்க வேண்டி உள்ளது. அந்த பணி முடிந்ததும், யார் வேண்டுமானாலும், எந்த ரேஷன் கடையிலும், உணவு பொருட்களை வாங்கி கொள்ளும் திட்டம் துவக்கப்படும்.
ஒரே மாதத்தில், இரு இடங்களில் பொருட்களை வாங்குவது உள்ளிட்ட முறைகேடுகள், இனி செய்ய முடியாது.இவ்வாறு அவர் கூறினார்.
நன்றி : தினமலர் நாளிதழ் - 21.09.2017 

Monday, July 31, 2017

ரேசன் கார்டு - புதிய விதிகள்

ரேசன் கார்டு - புதிய விதிகள்
தேசிய உணவு பாதுகாப்பு திட்ட விதிப்படி ஆண்டு வருமானம் ரூ.1 லட்சம் இருந்தால் ரேஷன் கார்டு கிடையாது!
சென்னை: தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தில் தமிழகம் இணைந்து விட்டதால் இனி ஆண்டு வருமானம் ரூ. 1 லட்சம் உள்ளவர்களுக்கு ரேஷன் கார்டு கிடைக்காமல் போகும் நிலை உருவாகியுள்ளது.
தேசிய உணவுப் பாதுகாப்பு திட்டத்தில் தமிழகம் இணைந்துவிட்டது என்பதற்கான அரசாணையை தமிழக அரசு இன்று வெளியிட்டது. இதன்படி யார் யாருக்கெல்லாம் ரேஷன் பொருள்களும், ரேஷன் கார்டுகளு்ம கிடையாது என்பது குறித்து அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.
விதிகள் விவரம்: 
⧭ வருமான வரி செலுத்தும் நபரை குறைந்தது ஒரு உறுப்பினராக கொண்ட குடும்பங்கள்.
⧭ தொழில் வரி செலுத்துபவர்களை உறுப்பினர்களாக கொண்ட குடும்பங்கள்.
⧭ ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வருமானம் இருந்தால் ரேஷன் கார்டு கிடையாது.
⧭ மத்திய/ மாநில உள்ளாட்சி அமைப்புகள்/ மாநகராட்சிகள்/ மத்திய/ மாநில தன்னாட்சி அமைப்புகள் ஆகியவற்றில் பணிபுரிபவர்கள் மற்றும் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களை உறுப்பினர்களாக கொண்ட குடும்பங்கள்.
⧭ பல்வேறு சட்டங்களின் கீழ் வணிக நிறுவனங்களை பதிவு செய்து செயல்படும் குடும்பங்கள்
⧭ நான்கு சக்கர வாகனத்தை வைத்துள்ள குடும்பங்கள் 
(ஒரு நான்கு சக்கர வாகனத்தை வணிக பயன்பாட்டிற்காக தினசரி வாழ்வாதாரத்துக்கு வைத்துள்ள குடும்பத்தினர் நீங்கலாக)
⧭ ஏசி, பிரிட்ஜ், 3 அறை கொண்ட வீடு ஆகியன இருந்தாலும் பொருள்கள் வழங்கப்படமாட்டாது
⧭ 5 ஏக்கருக்கு மேல் நில வைத்திருந்தால் ரேஷன் பொருள்கள் வழங்கப்படாது.
இருப்பினும் இந்த விதிகள் உடனடியாக தமிழகத்துக்கு பொருந்தாது என அமைச்சர் காமராஜ் அறிவித்திருக்கிறார். அதேநேரத்தில் விரைவிலேயே இதை தமிழக அரசு அமல்படுத்தவே செய்யும் என்றே கூறப்படுகிறது.
Posted By: Lakshmi Priya
நன்றி : ஒன்இந்தியா » தமிழ் » செய்திகள் » 31.07.2017

Tuesday, June 20, 2017

பிழைகளை நீக்கி, புதிய மின்னணு குடும்ப அட்டை பெற

பிழைகளை நீக்கி, புதிய மின்னணு குடும்ப அட்டை பெற
மின்னணு குடும்ப அட்டை தொலைந்து போனாலோ அல்லது சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தாலோ அரசு இசேவை மையங்கள் மூலம் பொதுமக்கள் மாற்று அட்டை பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழக அரசு திங்கட்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
தலைமைச் செயலகம், தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள், சென்னை பெருநகர மாநகராட்சி தலைமை அலுவலகம், மாநகராட்சியின் மண்டல அலுவலகங்கள், கோட்ட அலுவலகங்கள் ஆகிய இடங்களில் செயல்படும் இசேவை மையங்களில் பொதுமக்கள் மாற்று மின்னணு குடும்ப அட்டையை பெற்றுக் கொள்ளலாம்.
இதற்கு பழைய மின்னணு குடும்ப அட்டையில் பதிவு செய்துள்ள செல்போன் எண் மிக அவசியம் ஆகும். அந்த எண்ணுக்கு (One Time Password) ஒருமுறை பயன்படுத்தக்கூடிய கடவுச்சொல் அனுப்ப்ப்படும். அந்த கடவுச் சொல்லை பயன்படுத்தி, புதிய மின்னணு குடும்ப அட்டை அவர்களுக்கு வழங்கப்படும். பழைய மின்னணு குடும்ப அட்டையில் பதிவு செய்த செல்போன் எண் தெரியாதவர்களுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டை வழங்க இயலாது.
புதிய மின்னணு குடும்ப அட்டையில் உள்ள விபரங்களை திருத்தும் பணி மேற்கூறிய இசேவை மையங்களில் தற்போது நடைபெற்று வருகிறது. அங்கு பொதுமக்கள் புதிய மின்னணு குடும்ப அட்டையில் குடும்ப உறுப்பினர்களின் பெயரை நீக்குதல் மற்றும் மாற்றம் செய்தல், குடும்ப அட்டையின் வகையை மாற்றம் செய்தல், கேஸ் சிலிண்டர் விபரங்களை மாற்றம் செய்தல், முகவரி மாற்றம் செய்தல் போன்ற சேவைக்காக 60 ரூபாய் செலுத்தி விண்ணப்பித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது அந்த விண்ணப்பங்களுக்கு சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர் அவர்கள் ஒப்புதல் அளித்த பிறகு விண்ணப்பித்தவரது செல்போனுக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பப்படும். குறுஞ்செய்தி கிடைக்கப் பெற்றவர்கள் அருகிலுள்ள இசேவை மையத்தை அணுகி 30 ரூபாய் செலுத்தி திருத்தப்பட்ட புதிய மின்னணு குடும்ப அட்டைகளை பெற்றுக் கொள்ளலாம்.
மேற்கூறிய இரண்டு சேவைகளும் 20.06.2017 முதல் நடைமுறைக்கு வருகின்றது. இந்த சேவை தொடர்பாக புகார் அளிக்க வேண்டும் என்றால், 1800 425 2911 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.
நன்றி : தினமணி நாளிதழ் – 20.06.2017
                                           


Friday, March 31, 2017

ஸ்மார்ட் கார்டு பெற என்ன செய்ய வேண்டும்?


ஸ்மார்ட் கார்டு பெற என்ன செய்ய வேண்டும்?

மதுரை, உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை மூலம், மதுரை மாவட்டத்தில் ரேஷன் கார்டுக்கு பதிலாக, ஏப்.,1 முதல் 'ஸ்மார்ட் கார்டு' வழங்கப்பட உள்ளது.

'ஸ்மார்ட் கார்டு'கள் வினியோகம் குறித்த விபரம், ரேஷன் கார்டுதாரர்களின் அலைபேசி எண்ணிற்கு ஒருமுறை கடவுச்சொல் ஓ.டி.பி.,(ஒன் டைம் பாஸ்வேர்டு) எண் பதிவு செய்து குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்.,) அனுப்பப்படும். 

அது வரப்பெற்ற கார்டுதாரர்கள் தற்போதைய ரேஷன் கார்டு, ஆதார் அட்டை அசல் நகல் மற்றும் எஸ்.எம்.எஸ்., வரப்பெற்ற அலைபேசியுடன் சிறப்பு முகாமிற்கு செல்ல வேண்டும். 

ஒப்புதல் பட்டியலில் கையொப்பமிட்டு, புதிய 'ஸ்மார்ட் ரேஷன் கார்டை பெறலாம். இதற்கு கட்டணமில்லை.

இதுவரை அலைபேசி எண்ணை பதிவு செய்யாதவர்கள், உடனடியாக ரேஷன் கடைகளில் பதிவு செய்ய வேண்டும்.

'ஸ்மார்ட் ரேஷன் கார்டு' குறித்த எஸ்.எம்.எஸ்., வராமல் இருந்தால் அச்சப்பட தேவையில்லை. 

அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் 'ஸ்மார்ட் கார்டு' வழங்கப்படும் என கலெக்டர் வீரராகவராவ் தெரிவித்தார்.

நன்றி : தினமலர் நாளிதழ் - 31.03.2017

Tuesday, December 20, 2016

குடும்ப அட்டை - இணைய தளம்


குடும்ப அட்டை சம்பந்தமான இணைய தளம்

தமிழ்நாட்டில் பொது விநியோக திட்டத்தின் குறிக்கோள், எல்லா குடிமக்களுக்கும் குறிப்பாக ஏழை மக்களுக்கு உணவு வழங்குதல் ஆகும். பொது விநியோக திட்டம், அத்தியாவசியமான பொருட்களை மலிவான விலையில் ஒவ்வொரு மாதமும் நியாய விலைக் கடைகள் மூலம் ஏழை மக்களுக்கு வழங்குகிறது.

நீங்கள் இத்துறையின் இணையதளமான 

https://www.tnpds.com   க்குச் சென்றால், 

ஆன்லைன் மூலமாகவே

1) புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்.

2) புதிய குடும்ப அட்டை விண்ணப்ப நிலையைத் தெரிந்து கொள்ளலாம்.

3)  ஒவ்வொரு மாவட்டத்திற்கும், தாலுகாவிற்கும் வழங்கப்பட்டுள்ள உணவுப் பொருள்களின் இருப்பை அறிந்து கொள்ளலாம்.

4) ஒவ்வொரு மாவட்டத்திலும், தாலுகாவிலும் உள்ள குடும்ப அட்டைகளின் எண்ணிக்கையை தெரிந்து கொள்ளலாம்.

5) புகார் செய்யலாம்.



Thursday, July 21, 2016

பச்சை நிற குடும்ப அட்டை


பச்சை நிற குடும்ப அட்டை பெற என்ன செய்ய வேண்டும்?
அரசு அதிகாரிகளின் கவனக் குறைவாலும், நமது அலட்சியத்தாலும் சாதாரணக் கூலி வேலை செய்யும் பாமர மக்களுக்குக் கூட சீனி அட்டை என்று செல்லமாக கூறப்படுகின்ற “வெள்ளை நிற குடும்ப அட்டை” வழங்கப்பட்டுள்ளது. இந்த அட்டைக்கு அரிசி கிடைக்காது. மேலும் அரசு இலவசமாக வழங்குகின்ற சில சலுகைகளும் கிடைக்காது. 

இதனால் சிரமப்படுகின்ற பல மக்கள் பச்சை நிற குடும்ப அட்டை பெற வேண்டும் என்று விரும்புகிறார்கள். அதற்கா்ன வழிமுறைகள் என்ன என்று தேடித் தவிக்கிறார்கள்.

அவர்களுக்கான பதிவு இது.

மேற்கண்டவாறு பச்சை நிற குடும்ப அட்டைக்கு மாற விரும்புபவர்கள் கீழ்கண்டவாறு விண்ணப்பிக்க வேண்டும்.

அனுப்புனர்
             -----------------------------
             -------------------------------
             ------------------------------
பெறுநர்
             வட்ட வழங்கல் அலுவலர் அவர்கள்,
             வட்டாட்சியர் அலுவலகம்,
             ----------------------- 
ஐயா
             பொருள்: தவறுதலாக தரப்பட்ட வெள்ளை நிற குடும்ப அட்டையை ஒப்படைத்து, பச்சைநிற குடும்ப அட்டை பெறுவது சம்பந்தமாக.
           
             நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன். எனது குடும்பத்தில் நான் எனது மனைவி, எனது குழந்தைகள் இரண்டு பேர் ஆக மொத்தம் நான்கு பேர்கள் இருக்கின்றோம். எனது குடும்பத்தில் நான் மட்டுமே கூலிவேலை செய்து அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் நாங்கள் நான்கு பேர்களும் ஜீவனம் செய்து வருகின்றோம். எனது வருட வருமானம் 48,000 ரூபாய் ஆகும். அதற்கான வருமானச் சான்றிதழின் நகலை இத்துடன் இணைத்துள்ளேன்.

            எனது குடும்ப அட்டை எண்: -------------------ஆகும். தவறுதலாக எனக்கு வெள்ளைநிற குடும்ப அட்டை தங்கள் துறையினரால் வழங்கப்பட்டுள்ளது. இதனால் எனது குடும்பம் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளது. 
எங்கள் குடும்பத்தின் ஜீவாதார பிரச்சணை தீர எனக்கு வழங்கப்பட்டுள்ள வெள்ளை நிற குடும்ப அட்டையை பெற்றுக் கொண்டு பச்சை நிற அட்டையை வழங்குமாறு தங்களை பணிவுடன் வேண்டுகிறேன்.
இடம் :--------------------             தங்கள் உண்மையுள்ள
நாள்: --------------------

இணைப்பு : 1) குடும்ப அட்டை ஒருஜினல்
                      2) வருமான சான்றிதழ் நகல்.
                      3) எனது பாஸ்போர்ட் சைஸ் போட்டோ 2.

என்று விண்ணப்பம் எ்ழுதி தங்கள் பகுதிக்கு உட்பட்ட வட்டாட்சியர் (தாலுகா) அலுவலகத்தில் உள்ள வட்ட வழங்கல் அலுவலர் அவர்களிடம் கொடுக்க வேண்டும்.
இதை பெற்றுக் கொண்டு ஒரு ஒப்புதல் அட்டையை அவர்கள் தருவார்கள். அதில் என்று புதிய அட்டை வழங்கப்படும் என்று நாள் குறிப்பிடப்பட்டிருக்கும். அந்த நாளில் சென்று புதிய அட்டை பெற்றுக் கொள்ளலாம்.

Monday, July 18, 2016

ரேசன்கார்டு குறித்த 12 யோசனைகள்


ரேசன்கார்டு குறித்த 12 யோசனைகள் - என்ன செய்ய வேண்டும்?

குடும்ப அட்டை... இனி குழப்பம் வேண்டாம்!

ஒரு செயலில் இறங்குவதற்கு முன், அதைப் பற்றி தெளிவுற அறிந்துகொள்வது அதை சரியாக செய்து முடிப்பதை  சுலபமாக்கும். வாழ்க்கையில் பல்வேறு சந்தர்ப்பங்களில் எதிர்கொள்ள வேண்டிய விஷயங்களை அதிக சிரமமின்றி கடக்க உதவிக்கரம் நீட்டும் பகுதி இது..!

குடும்ப அட்டைக்கு (ஃபேமிலி கார்டு) விண்ணப்பிப்பதில் இருந்து, பெயர் மாற்றம், முகவரி மாற்றம், புதிய அட்டை, புதிய உறுப்பினர் சேர்க்கை... என அனைத்துக்கும் வழிகாட்டும் தகவல்கள் இதோ...

1.புதிதாக திருமணமான தம்பதி, தனிக்குடித்தனமாக சென்றால், தங்களுக்கான குடும்ப அட்டையைப் பெற, ஏற்கெனவே வசித்த பகுதியின் வட்ட வழங்கல் அலுவலரிடம் (கார்ப்பரேஷன் என்றால் உதவி ஆணையர், தாலுகா என்றால் வட்ட வழங்கல் அலுவலர்), தங்கள் பெற்றோரின் குடும்ப அட்டையில் இருந்து தங்களது பெயரை நீக்கம் செய்ததற்கான சான்றிதழைப் பெறவும். பிறகு, தாங்கள் குடியேறி இருக்கும் பகுதியின் வட்ட வழங்கல் அலுவலரிடம், புதிய குடும்ப அட்டை பெறுவதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, இருப்பிடச் சான்று, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, வீட்டுவரி (அ) மின்சாரக் கட்டண ரசீது, வங்கி பாஸ்புக், பாஸ்போர்ட்... இவற்றில் ஏதாவது ஒன்றின் நகலை இணைத்து மனு தாக்கல் செய்யவும்.

2.வீட்டை எதிர்த்து திருமணம் செய்துகொண்டவர்கள், பெற்றோரின் குடும்ப அட்டையைப் பெற முடியாத சூழலில், தாங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள வட்ட வழங்கல் அலுவலரிடம் தங்கள் பெற்றோரின் குடும்ப அட்டை எண்ணையும், திருமணப் பதிவு சான்றிதழ் மற்றும் இடது பக்கம் சொல்லி உள்ளவற்றில் ஏதேனும் ஓர் அடையாள அட்டையையும் கொடுத்து மனு தாக்கல் செய்யலாம்.

3.குடும்ப அட்டை தொலைந்துவிட்டாலோ அல்லது மிகவும் பழுதடைந்திருந்தாலோ, வசிக்கும் ஏரியாவின் வட்ட வழங்கல் அலுவலரிடம் உரிய ஆவணங்களுடன் (பழைய குடும்ப அட்டையின் நகல்/எண் அல்லது பாஸ்போர்ட், ஆதார் அட்டை போன்ற பிற அடையாள அட்டைகளுடன்) மனு தாக்கல் செய்தால், இரண்டு மாதங்களில் புதிய குடும்ப அட்டை கிடைக்கப் பெறலாம்.

4.புதிதாகப் பிறந்துள்ள குழந்தையின் பெயரை குடும்ப அட்டையில் சேர்க்க, குழந்தை பிறந்து ஒரு வருடம் கழித்து அதன் பிறப்புச் சான்றிதழை குடும்ப அட்டையுடன் இணைத்துக் கொடுத்தால் போதும்.

5.குடும்ப அட்டையில் இருந்து இறந்தவர் பெயரை நீக்கம் செய்ய, இறந்தவரின் இறப்புச் சான்றிதழை வாங்கியதும் மூன்று நாட்களுக்குள் குடும்ப அட்டையுடன் இணைத்து வட்டாட்சியர் அலுவலரிடம் கொடுத்து நீக்கம் செய்துகொள்ளலாம்.

6.குடும்ப அட்டைக்கான மனு விண்ணப்பிக்கப்பட்டு, 60 நாட்களுக்குள் கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டும் என்பது தமிழக அரசின் உத்தரவு. மேலும் குடும்ப அட்டை பெற செலுத்த வேண்டிய தொகை, ரூபாய் 5 மட்டுமே. இதில் ஏதேனும் சிக்கல் எழுந்தால்,
http://www/consumer.tn.gov.in/contact.htm
என்ற தளத்தில் புகார் அளிக்கலாம்.

7.குடும்ப அட்டை இரண்டு வண்ணங்களில் வழங்கப்படுகிறது. பச்சை வண்ண அட்டையில் ரேஷனில் வழங்கும் அனைத்துப் பொருட்களையும் பெற முடியும், வெள்ளை வண்ண அட்டையில் அரிசி தவிர்த்து பாமாயில், பருப்பு, சர்க்கரை போன்றவற்றை பெறலாம். அடையாளச் சான்றாக மட்டும் குடும்ப அட்டை இருந்தால் போதும் என்பவர்களுக்கும் வெள்ளை நிற அட்டையே வழங்கப்படுகிறது.

8.ரேஷனில் எந்தப் பொருளும் வேண்டாம், அடையாள அட்டையாக மட்டும் பயன்படுத்த வேண்டும் என நினைப்பவர்கள் உங்கள் பகுதியின் வட்ட வழங்கல் அலுவலரிடம் ‘ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா’வில் எடுக்கப்பட்ட 100 ரூபாய்க்கான டிடி-யுடன் பழைய குடும்ப அட்டையையும் ஒப்படைத்துவிட்டால்... ஒரு மாதத்தில் ‘என் கார்டு’ என்று சொல்லக்கூடிய வெள்ளை நிற அட்டை கிடைத்துவிடும்.

9.புதிய குடும்ப அட்டை பெறுவதற்கான கோரிக்கையை மனுவாக தாக்கல் செய்த பிறகு சம்பந்தப்பட்ட அலுவலர் நேரடியாக வந்து வீடு, சமையல் அறை போன்றவற்றை மேற்பார்வையிடுவார் (தனியாக சமைக்கிறீர்களா, சமையல் எரிவாயுவை பயன்படுத்துகிறீர்களா போன்ற பரிசோதனைகள்). அப்படி வருபவர்களை அடையாள அட்டையைப் பார்த்து உறுதிசெய்த பிறகே அனுமதிக்கவும்.

10.முகவரி மாற்றத்துக்கு வீட்டு ரசீதுகளை (வாடகை வீடு என்றால் வீட்டு உரிமையாளரிடம் கேட்டுப் பெறலாம்) குடும்ப அட்டையுடன் இணைத்து புதிதாக குடியேறிய பகுதியின் வட்ட வழங்கல் அலுவலரிடம் மனு தாக்கல் செய்யலாம்.

11.குடும்ப அட்டை சம்பந்தப்பட்ட எந்தக் கோரிக்கைக்கும், இடைத்தரகர்கள் தவிர்த்து உரிய அலுவலர்களை நேரில் அணுகுவதே சிறந்தது.

12.‘இதுவரை என் குடும்பத்துக்கு குடும்ப அட்டையே இல்லை’ அல்லது ‘நான் பெற்றோர் இன்றி அநாதை ஆசிரமத்தில் வளர்ந்தேன்’ என்பது போன்ற காரணங்களுடன் இருப்பவர்கள், வெள்ளைத்தாளில் மனு எழுதி ஏரியாவின் வட்ட வழங்கல் அலுவலரிடம் சமர்ப்பிக்கவும். இரண்டு மாதங்களில் குடும்ப அட்டை கிடைக்கும்.

 சு.சூர்யா கோமதி

நன்றி : அவள்விகடன் - 03.11.2015

Wednesday, July 6, 2016

காதல் திருமணம் செய்தவர்கள் குடும்ப அட்டை பெற


காதல் திருமணம் செய்தவர்கள் குடும்ப அட்டை பெற
என்ன செய்ய வேண்டும்?

பெற்றோர்களை எதிர்த்து, காதல் திருமணம் செய்து கொள்பவர்களுக்கு குடும்ப அட்டை பெறுவது மிகவும் சிரமமான காரியமாக உள்ளது. இதனை உணர்ந்த உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அதற்கென ஒரு கடிதத்தை சுற்றறிக்கையாக வெளியிட்டுள்ளது.

சம்பந்தப்பட்டவர்கள் குடும்ப அட்டை பெறுவதற்கு விண்ணப்பிக்கும் போது இதனை தங்களது விண்ணப்பத்தில் குறிப்பிட்டு குடும்ப அட்டையை வேண்டினால் அதனைப் பெறுவதற்கு இலகுவாக இருக்கும்.

உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் 
                             பாதுகாப்புத் துறை
                             
அனுப்புனர்
திரு க.ராஜாராமன், இ.ஆ.ப.,
ஆணையாளர்
உணவுப்பொருள் வழங்கல் மற்றும் ்
நுகர்வோர் பாதுகாப்புத் துறை,
சேப்பாக்கம்,
சென்னை-600 005.

பெறுநர்
1. ஆணையாளர் (நகரம்) வடக்கு, தெற்கு
   உணவுப்பொருள் வழங்கல் மற்றும்
நுகர்வோர் பாதுகாப்புத் துறை,
சேப்பாக்கம்,
சென்னை-600 006.

2. அனைத்து மாவட்ட விநியோக அலுவலர்கள்

ந.க.எண்:இ4/8920/2009, நாள்:20.05.2009

அய்யா, 
          பொருள்:பொது விநியோகத்திட்டம்-குடும்ப அட்டைகள்- காதல் திருமணம் செய்து கொண்டவர்கள்- அவர்கள் பெயர்களை பெற்றொர் குடும்ப அட்டையில் இருந்து நீக்குவது - அறிவுரைகள் வழ்ங்கப்படுகின்றன.
                                                         *****************
காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் அவர்களுக்கு குடும்ப அட்டை பெறுவதற்கு ஏதுவாக, அவர்கள் பெயர்களை அவர்களது பெற்றோர் குடும்ப அட்டையில் இருந்து நீக்க கோரும்போது, சில பெற்றோர்கள் அவர்களது குடும்ப அட்டையினை தர மறுக்கிறார்கள் என தெரிவித்து தங்கள் பெயர்களை தங்கள் பெற்றோர் குடும்ப அட்டையில் இருந்து நீக்கி உரிய சான்று வழங்க கோரி இத்துறைக்கு கோரிக்கைகள் தந்துள்ளனர்.

இந்த கோரிக்கைகள் கவனமாக பரிசீலிக்கப்பட்டு கீழ்க் கண்ட அறிவுரைகள் வழங்கப்படுகின்றன.

1) காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் ஆண்களாக இருப்பின் 21 வயது பூர்த்தி அடைந்தவர்களாகவும், பெண்களாக இருப்பின் 18 வயது பூர்த்தி அடைந்தவர்க்ளாக இருப்பின் அவர்கள் அவர்களது பெயரை அவர்கள் பெற்றோர் குடும்ப அட்டையில் இருந்து நீக்கம் செய்யக் கோரி மனு செய்யலாம். குடும்ப உறுப்பினர்களின் பெயரை நீக்கி சான்றிதழ் பெற குடும்பத்தலைவர் மனு செய்ய வேண்டும் என்ற விதிமுறைகளிலிருந்து இந்த இனத்திற்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்படுகிறது. 

2) இவ்வாறு அளிக்கப்படும் மனுக்களுடன் கீழ்க்கண்ட ஆவணங்கள் இணைக்கப்பட வேண்டும்.

அ. வயது வரம்பு மற்றும் விண்ணப்பதாரரின் பெற்றோர் பெயர்கள்-இரண்டையும் நிரூபிப்பதற்கான பிறப்புச் சான்றிதழ் நகல் அல்லது கல்விச் சான்று.

ஆ. பெற்றோர் குடும்ப அட்டை நகல் அல்லது குடும்ப அட்டை எண், அங்காடி குறியீடு எண், பெற்றோர் பெயர், குடும்ப அட்டையில் உள்ள முகவரி,  தற்போது பெற்றோர்கள் குடியிருக்கும் முகவரி, திருமண்பதிவு சான்றிதழ் நகல்.

3) இவ்வாறு பெறப்படும் மனுக்களின் மீது நீக்கல் சான்றிதழ் கோரும் மனுக்களுக்குரிய காலக் கெடுவிற்குள் வட்ட வழங்கல் அலுவலர் / உதவி ஆணையாளர் நீக்கல் சான்றிதழ் வழங்க வேண்டும்.

4) குடும்ப அட்டை இல்லாமல் இத்தகைய இன்ங்களில் சிறப்பினமாக நீக்கல் சான்றிதழ் வழங்கப்படுவதால் பெயர் நீக்கப்பட்டதற்கா்ன பதிவுகளை குடும்ப அட்டை்கள் தகவல் கணிணி பதிவில் பெயரை நீக்கம் செய்வதுடன் யூனிட்/நபர் குறைக்கப்பட்ட விவரத்தை அலுவலக மற்றும் அங்காடி அ மற்றும் வழங்கல் பதிவேட்டில் பதிவு்கள் செய்ய வேண்டும். மேலும் இவ்வாறு பெயர் நீக்கம் செய்யப்பட்டு வழங்கப்படும் ஆணையின் நகல் குடும்பத் தலைவருக்கு தபால் மூலம் அனுப்பப்பட வேண்டும்.

5) இந்த அறிவுரைகள் உடன் அமுலுக்கு வருகின்றன. இக் கடிதத்தை பெற்றுக் கொண்டதற்கான ஒப்புதலை மறு அஞ்சலில் அனுப்பி வைக்க கேட்டுக் கொள்ளப் படுகிறது.
                                                                                (ஒம்) க.ராஜாராமன்
                                                                                     ஆணையாளர்
நகல்:-

1. அரசுச் செயலாளர்,
கூட்டுறவு உணவு மற்றும்
நுகர்வோர் பாதுகாப்புத் துறை
சென்னை-600 009.

2. கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர்
 சென்னை - 600 010.

3. நிர்வாக இயக்குநர், 
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்
சென்னை-600012.

4. அனைத்து உதவி ஆணையாளர்கள்

5. அனைத்து வட்ட வழங்கல் அலுவலர்கள்

6. ஆவண காப்பு அலுவலகத்திலுள்ள 
  அனைத்து்பிரிவுகள்

7. இருப்புக் கோப்பு.

ஆணைப்படி அனுப்புதல்

Saturday, May 21, 2016

குடும்ப அட்டை சம்பந்தமான கேள்விகள், பதில்கள்


குடும்ப அட்டை சம்பந்தமான கேள்விகள், பதில்கள்  
என்ன செய்ய வேண்டும்?

குடும்ப அட்டையின் அவசியம் என்ன ?

பொதுவிநியோகத் திட்டத்தில் பொருட்கள் பெற மட்டுமல்லாது சமையல் எரிவாயு சிலிண்டருக்கு விண்ணப்பிக்கும் போது சமர்ப்பிக்கக்கூடிய ஆவணமாகவும், இருப்பிடச் சான்றுக்கான மிக முக்கிய ஆவணமாகவும் பயன்படுகிறது.

தனியாக புதிய குடும்ப அட்டை பெற தகுதியுடையவர் யார்?

1). விண்ணப்பதாரர் மற்றும் அவருடைய குடும்பம் இந்திய குடியுரிமை பெற்றவராக இருத்தல் வேண்டும்.
2). விண்ணப்பதாரர் மற்றும் அவருடைய குடும்பம் தனி சமையலறையுடன் தனியாக வசிக்க வேண்டும்.
3). விண்ணப்பதாரர் மற்றும் அவருடைய குடும்பம் தமிழகத்தில் வசிப்பவராக இருத்தல் வேண்டும்.
4). விண்ணப்பதாரர் மற்றும் அவருடைய குடும்ப உறுப்பினர் இந்தியாவில் எங்கும் குடும்ப அட்டை பெற்றிருத்தல் கூடாது.
5). விண்ணப்பதாரரோ மற்றும் அவருடைய குடும்ப உறுப்பினர் பெயர் தமிழ்நாட்டில் வேறு எந்த குடும்ப அட்டையிலும் இடம் பெற்றிருக்க கூடாது.
6). விண்ணப்பதாரர் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் நெருங்கிய உறவினராக இருத்தல் வேண்டும்.
குடும்ப அட்டைகளின் வகைகள் (விருப்பங்களின் அடிப்படையில் )

அனைத்து அத்தியாவசிய பொருட்கள் .குடும்ப அட்டைகள் ( பச்சை நிற அட்டைகள் ) அரிசி மற்றும் இதர இன்றியமையாப் பொருட்கள் பெற விருப்பம் தெரிவித்தவர்களுக்கு பச்சை நிற குடும்ப அட்டைகள் வழங்கப்படுகின்றன.
சர்க்கரை விருப்ப குடும்ப அட்டைகள் ( வெள்ளை நிற குடும்ப அட்டைகள்) அரிசிக்கு பதிலாக சர்க்கரை பெற விருப்பம் தெரிவித்தவர்களுக்கு சர்க்கரை விருப்ப அட்டை ( வெள்ளை நிறம் ) வழங்கப்படுகின்றன. அவர்களுக்கு அரிசி தவிர இதர அத்தியாவசியப் பொருட்களுடன் அரிசி*க்கு பதிலாக 3 கிலோ கூடுதல் சர்க்கரை வழங்கப்படுகிறது.
எந்த பொருளும் பெற விருப்பமில்லை என்ற குடும்ப அட்டைகள். வெள்ளை நிற குடும்ப அட்டைகள்: பொது விநியோக திட்டத்தின் கீழ் எந்த பொருளும் வாங்க விருப்பம் தெரிவிக்காதவர்களுக்கு, எப்பொருளும் வேண்டா ( வெள்ளை நிறம் ) குடும்ப அட்டை வழங்கப்படுகின்றன.

குடும்ப அட்டை பெற விண்ணப்ப படிவம்?

தமிழக அரசு புதிய குடும்ப அட்டைக்கான விண்ணப்பப்படிவத்தினை ஆங்கிலம் மற்றும் தமிழில் நிர்ணயித்துள்ளது . இப்படிவம்http://www.consumer.tn.gov.in/pdf/ration_t.pdf 
என்ற இணைய தளத்தில் உள்ளது. பயன்படுத்த விரும்புவோர் படிவத்தினை மேற்கண்ட இணையதளத்தில் இருந்து எடுத்து பிரதிகளை எடுத்துக் கொள்ளலாம்.

தேவையான ஆவணங்கள் என்னென்ன?

விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து கீழ்கண்ட ஆவணங்களின் நகல் ஒன்றை இணைக்க வேண்டும்.
1. தமிழ்நாட்டில் வசிப்பதற்கான இருப்பிடச் சான்றாக தேர்தல் வாக்காளர் அடையாள அட்டை, மூன்று மாதங்களுக்குள்ளான வீட்டு வரி / மின்சாரக் கட்டணம் / தொலைபேசிக் கட்டணம் செலுத்திய ரசீதுகளில் ஏதாவது ஒன்று அல்லது வங்கிக் கணக்குப் புத்தகத்தின் முதல் பக்க நகல் / பாஸ்போர்ட் நகல்/ வாடகை ஒப்பந்தம் இவற்றில் ஏதாவது ஒன்று மட்டும் போதுமானது. ஒரு வேளை இந்தச் சான்றுகள் ஏதும் இல்லையென்றால், நோட்டரி பப்ளிக்கிடம் அஃபிடவிட் பெற்றுக் கொடுக்கலாம்.
2. முந்தைய முகவரியில் குடும்ப அட்டை வழங்கப்பட்டிருப்பின் குடும்ப அட்டை வழங்கும் அலுவலரிடமிருந்து பெறப்பட்ட ஒப்பளிப்புச் சான்று.
3. முந்தைய முகவரியில் குடும்ப அட்டை வழங்கும் அதிகாரியிடம் (TSO) பெறப்பட்ட பெற்றோர் அல்லது பாதுகாவலர் குடும்ப அட்டையிலிருந்து பெயர் நீக்கல் சான்று அல்லது பெயர் சேர்க்கப்படவில்லை என்பதற்கான சான்று.
4.முந்தைய முகவரியில் குடும்ப அட்டை இல்லை எனில் குடும்ப அட்டை இல்லை என்ற சான்று.
5.எரிவாயு இணைப்பு ஏதேனும் இருப்பின், இணைப்பு யாருடைய பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் எரிவாயு இணைப்பு முகவர் மற்றும் எண்ணெய் நிறுவனத்தின் பெயர் போன்றவை அடங்கிய விவரங்கள் கொடுக்க வேண்டும்.
6.விண்ணப்பத்தினை அளித்த உடன் விண்ணப்பத்தை வரிசை எண், தேதி, அலுவலக முத்திரையுடன் மற்றும் இறுதி முடிவு தெரிந்து கொள்ளும் தேதி ஆகியவற்றுடன் கூடிய ஒப்புகைச் சீட்டை மனுதாரர் பெற்றுக்கொள்ள வேண்டும். பதிவுத் தபாலில் அனுப்புவர்கள் சுயமுகவரியிட்ட தபால் தலையுடன் கூடிய தபால் உறை அல்லது அஞ்சல் அட்டை இணைக்கலாம்.

விண்ணப்ப படிவத்தினை யாருக்கு அனுப்ப வேண்டும் ?

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை இணைப்பு ஆவணங்கடன் அவர் வசிக்கும் பகுதிக்கு உரிய உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை உதவி ஆணையாளர் (மண்டல) அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர் அவர் வசிக்கும் பகுதி எந்த உதவி ஆணையாளர் அலுவலக கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது என்பது தொடர்பாக சந்தேகம் எழுந்தால் தொலைபேசி மூலம் இந்த அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம்.
சென்னை தவிர பிற மாவட்டங்களுக்கு விண்ணப்பதாரர் வசிக்கும் பகுதியைச் சார்ந்த உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் வட்ட வழங்கல் அலுவலர், உதவி பங்கீட்டு அலுவலர்*, (கோயம்புத்தூர் நகரம் மட்டும்) குடும்ப அட்டை பெறுவதற்கான விண்ணப்பத்தை பெற்றுக் கொள்வார்கள்.
விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட உதவி ஆணையாளர் மற்றும் வட்ட வழங்கல் அலுவலகத்தில் ஒப்புகை சீட்டினை பெற்றுக் கொள்ள வேண்டும். விண்ணப்பதாரர்கள் தனது விண்ணப்பத்தினை அஞ்சல் மூலமாகவும் அனுப்பலாம். இருந்தபோதிலும் விண்ணப்பம் சென்றடைந்ததை உறுதி செய்துக் கொள்ள ஆதாரமாக ஒப்புகை அட்டையுடன் கூடிய பதிவு அஞ்சல் மூலம் அனுப்பி வைப்பது நல்லது.

மனுதாரர் தனது விண்ணப்பத்தின் முடிவினை அறிந்து கொள்ள முடியுமா?

கூடுதல் ஆவணங்கள் அளிக்கப்பட வேண்டியது இருந்தால் தவிர, மனுதாரர் 30 நாட்களுக்கு முன்னதாக உதவி ஆணையாளர் அல்லது வட்ட வழங்கல் அலுவலர்களை தொடர்பு கொள்ள தேவையில்லை.
விண்ணப்பத்தினை அளித்த உடன் விண்ணப்பத்தின் வரிசை எண், தேதி, அலுவலக முத்திரையுடன் மற்றும் மனுவின் மீதான இறுதி முடிவு தெரிந்து கொள்ளும் தேதி ஆகியவற்றுடன் கூடிய ஒப்புகை சீட்டினை மனுதாரர் பெற்றுக் கொள்ள வேண்டும்.
தமிழக அரசு புதிய குடும்ப அட்டை பெறுவதற்கான விண்ணப்பத்தின் பேரில் 60 நாட்களுக்குள் குடும்ப அட்டை வழங்க அல்லது மனுவின் முடிவை தெரிவிக்க கால நிர்ணயம் செய்துள்ளது.
விண்ணப்பம் தகுதியுடையதாக இருந்தால், குடும்ப அட்டை அச்சிட அனுப்பப்படும். அச்சிடப்பட்ட குடும்ப அட்டை உதவி ஆணையாளர் அல்லது வட்ட வழங்கல் அலுவலர் அலுவலகத்தில் பெறப்பட்டவுடன்* அலுவலகத்திலிருந்து ஒப்புகைச்சீட்டுடன் 15 தினங்களுக்குள் குடும்ப அட்டை பெற்றுக் கொள்ளுமாறு அஞ்சல் அட்டை மனுதாரருக்கு அனுப்பப்படும்.
ஒரு வேளை, விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்பட்டிருந்தாலும் உதவி ஆணையாளர் / வட்ட வழங்கல் அலுவலர் அலுவலகத்தில் விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்பட்ட காரணத்தை விண்ணப்பித்த நாளிலிருந்து 60 நாட்களுக்குள் மனுதாரருக்கு அஞ்சல் அட்டை மூலம் தெரிவிக்கப்படும்.
விண்ணப்ப படிவத்தில் மொபைல் எண் அல்லது மின்னஞ்சல் குறிப்பிட்டிருந்தால், விண்ணப்பத்தின் மீது எடுக்கப்பட்ட இறுதி முடிவின் நிலையினை உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையிடமிருந்து மனுதாரருக்கு தகவல் தெரிவிக்கப்படும்.

ரேஷன் கார்டு விண்ணப்பித்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால் யாரிடம் முறையீடு செய்வது ?

சென்னை நகர் மற்றம் புற நகர் பொறுத்த வரையில் துணை ஆணையாளர் (நகரம்) வடக்கு மற்றும் துணை ஆணையாளர் (நகரம்) தெற்கு, உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அவர்களிடம் மேல் முறையீடு செய்யலாம் .
பிற பகுதிகளில் மாவட்ட வருவாய் அலுவலரிடம் மேல் முறையீடு செய்யலாம்.

குடும்ப அட்டை குறித்து எங்கே புகாரளிப்பது?

வேண்டுமென்றே கொடுக்க மறுத்தாலோ, காலதாமதம் செய்தாலோ சென்னையைச் சேர்ந்தவர்கள் ஆணையாளருக்கும் மற்ற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் மாவட்ட வழங்கல் அலுவலர் அல்லது மாவட்ட ஆட்சியரிடம் புகார் செய்ய வேண்டும் அல்லது தகவல் பெறும் உரிமைச் சட்டத்தை பயன்படுத்தி எளிதில் வாங்க முடியும் அல்லது மாநில நுகர்வோர் மையத்தைத் தொடர்பு கொள்ளவும்.
மாநில நுகர்வோர் மையத்தை 044 2859 2858 என்ற எண்ணில் தொலைபேசியிலோ, consumertn.gov.in, schtamilnadugmail.comஎன்ற மின்னஞ்சல் முகவரியிலோ, மாநில நுகர்வோர் உதவி மையம், உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை, 4ஆவது தளம், எழிலகம், சேப்பாக்கம், சென்னை-5 என்ற முகவரியில் தபால் மூலமும் தொடர்புகொண்டு புகார் தெரிவிக்கலாம்.

ரேஷன் கார்டு விண்ணப்பத்தில் பொய்யான அல்லது தவறான தகவல்களை அளித்தால்?

ஒவ்வொரு குடும்ப அட்டைக்கு தோராயமாக ஆண்டுக்கு ரூ.2000/- மானிய செலவு ஆகிறது என்பதை விண்ணப்பதாரர் அறிந்து கொள்ள வேண்டும். எனவே குடும்ப உறுப்பினர் பற்றிய தவறான விவரங்கள் மற்றும் தவறான முகவரி அளித்தல் போன்றவை பொது விநியோக திட்ட பொருட்களை கடத்துதலுக்கு வழிகோலும் என்பதுடன் 1955 ஆம் ஆண்டு அத்தியாவசியப் பண்ட சட்டம் பிரிவு 7 ன் கீழ் தண்டனைக்குரியதாகும். இத்தகைய விண்ணப்பதாரர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மற்றும் சட்டப் படி தண்டனை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, விண்ணப்பதாரர்கள் சரியான குடும்ப உறுப்பினரின் விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும்.

விண்ணப்பதாரர் தனது குடும்ப அட்டையினை எவ்விதம் பெற்றுக் கொள்ள வேண்டும் ?

குடும்ப அட்டை சம்பந்தப்பட்ட உதவி ஆணையாளர்/ வட்ட வழங்கல் அலுவலகத்தில் தயாராக உள்ளது என்ற தகவலை விண்ணப்பதாரர் பெறப்பட்டவுடன், 15 தினங்கக்குள் நேரடியாக திங்கள் அல்லது வெள்ளிக் கிழமை அல்லது அஞ்சல் அட்டை, சிக்கன சேமிப்பு தகவல் / மின்அஞ்சல் ஆகியவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள தேதியில் சம்பந்தப்பட்ட உதவி ஆணையாளர்/ வட்ட வழங்கல் அலுவலரிடம் விண்ணப்பம் சமர்ப்பித்த பொழுது பெறப்பட்ட அசல் ஒப்புகை சீட்டுடன் கொடுத்து குடும்ப அட்டையினை பெற்றுக் கொள்ளலாம்.
ஒருவேளை, அசல் குடும்ப அட்டை தொலைந்து விட்டால் , நகல் அட்டை பெற விண்ணப்பிப்பதற்கு ஏதுவாக மனுதாரர் குடும்ப அட்டையின் முதல் பக்கமும் கடைசி பக்கமும் நகல் எடுத்து அல்லது குடும்ப அட்டை எண் ,கடையின் குறியீடு எண் ஆகியவற்றை பாதுகாப்பாக குறித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு வேளை, குடும்ப தலைவர் குடும்ப அட்டை பெற்றுக் கொள்ள வர இயலவில்லை என்றால் குடும்ப தலைவர் குடும்ப உறுப்பினர் ஒருவரிடம் அதிகாரம் அளிப்பு கடிதத்துடன் குடும்ப அட்டை பெற்றுக் கொள்ள அனுப்பலாம். குடும்ப அட்டை பெற்றுக் கொள்ள வரும் உறுப்பினரின் கையொப்பத்தினை மனுதாரர் மேலொப்பம் செய்து அங்கீகாரம் அளிப்பு கடிதம் அளிக்க வேண்டும். இந்த அதிகாரம் வழங்கப்பட்ட நபர் விண்ணப்பம் வழங்கிய பொழுது பெறப்பட்ட அசல் ஒப்புகைச் சீட்டினை சமர்ப்பித்து குடும்ப அட்டைகளை பெற்றுக் கொள்ளலாம்.
உதவி ஆணையாளர்/ வட்ட வழங்கல் அலுவலர் அங்கிகாரம் செய்யப்பட்ட நபர் சந்தேகப்படும் வகையில் இருப்பின் குடும்ப அட்டை வழங்குவதை மறுக்கலாம்.

புதிய குடும்ப அட்டை பெற கட்டணம் உள்ளதா ?

தமிழக அரசு புதிய குடும்ப அட்டை பெற ரூ.10/- கட்டணம் நிர்ணயித்துள்ளது. இந்த தொகை சம்பந்தப்பட்ட உதவி ஆணையாளர் / வட்டவழங்கல் அலுவலகத்தில் செலுத்தப்படும்.

குடும்ப அட்டை தொலைந்து போனால்:

தொலைந்து போன குடும்ப அட்டையின் நகலுடன் ஏதாவது ஓர் அடையாள அட்டையின் நகலையும் சேர்த்து கிராமப்புறங்களில் வட்டார உணவுப்பொருள் வழங்கு அலுவலரையும், நகர்ப்பகுதிகளில் உணவுப் பொருள் வழங்குதுறை மண்டல உதவி ஆணையரையும் அணுக வேண்டும். சம்பந்தப்பட்ட அலுவலரிடம் காணாமல் போன விவரத்தைக் குறிப்பிட்டு கடிதம் தந்து, அவர்கள் வழங்கும் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து தர வேண்டும். அவர்களின் விசாரணைக்குப் பிறகு புதுக் குடும்ப அட்டை அனுப்பி வைக்கப்படும். விண்ணப்பம் அளித்த 45 நாட்களுக்குள் புதிய குடும்ப அட்டை கிடைத்துவிடும். இதற்கு ரூ.10 கட்டணம் செலுத்த வேண்டும்.
பெயர் நீக்கம் மற்றும் பெயரை சேர்க்க என்ன செய்ய வேண்டும்?

ரேஷன் கார்டில் பெயர் நீக்கம் செய்ய வேண்டும் என்றால் குடும்ப தலைவர் விண்ணப்ப படிவம் மற்றும் ரேஷன் கார்டு கொடுக்க வேண்டும். குடும்ப தலைவர் மரணம் அடைந்திருந்தால், இறப்பு சான்றுடன் அவரது வாரிசுதாரர் மனு கொடுக்கலாம். பெயர் சேர்க்க வேண்டும் என்றால், சம்பந்தப்பட்ட குடும்ப
தலைவர் அதற்கான விண்ணப்பிக்க படிவத்தை அளிக்க வேண்டும்.

மேலதிக விவரங்களுக்கு:

தங்கள் பகுதிக்குட்பட்ட தாலுகா அலுவலகத்தில் உள்ள வட்ட வழங்கல் அதிகாரியை அணுகி கூடுதல் விவரங்கள் அறிந்து கொள்ளலாம்.
உங்கள் பகுதியின் பொது விநியோகக் கடைக்கான பொருட்களின் ஒதுக்க்கீடு குறித்து அறிய
http://cscp.tn.nic.in/allotmentver2/repallotmentshopwise.jsp
இத்தளத்திற்குச் செல்லவும்.

 புதுச்சேரியைச் சேர்ந்தவர்கள்
http://egov-civilmis.pon.nic.in/SearchCardPondyAppNo.aspx
 இத்தளத்திற்குச் சென்று விண்ணப்பத்தின் நிலையறியலாம்.

மேலும் விவரங்களை அறிந்துகொள்ளhttp://www.consumer.tn.gov.in/fairprice.htm 
இத்தளத்திற்குச் செல்லவும்.

நன்றி : நாணயம்விகடன் & புதிய தலைமுறை இதழ்கள்