disalbe Right click

Showing posts with label தொழில் நுட்பம். Show all posts
Showing posts with label தொழில் நுட்பம். Show all posts

Wednesday, November 2, 2016

மொபைல் போன் சார்ஜ்


மொபைல் போன் சார்ஜ் குறையாமலிருக்க என்ன செய்ய வேண்டும்?
மொபைல் சார்ஜ் குறையாமல் இருக்க முக்கிய 7 விஷயங்கள்!
ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் பலரது முக்கியக் கவலைகளில் ஒன்று அதன் பேட்டரி. வீடியோ, கேம்ஸ் ஆகியவற்றை அதிக நேரம் பயன்படுத்தாவிட்டாலும்கூட, சார்ஜ் விரைவில் இறங்கிவிடும். ஆனால், இந்த 7 விஷயங்களைக் கவனத்தில்கொண்டு செயல்பட்டால் மொபைல் சார்ஜ் விரைவில் தீர்வதைத் தவிர்க்கலாம்.
1. குறுஞ்செய்தி, அழைப்புகள், அறிவிப்புகள் என அனைத்துக்கும்வைப்ரேட் ஆப்ஷனை தேர்வு செய்யாதீர்கள். இது ஒலியை விடவும் அதிக சக்தியை இழுக்கும். தவிர்க்க முடியாத சூழல்களைத் தவிர்த்து, மற்ற நேரங்களில் வைப்ரேஷன் ஆப்ஷனை எடுத்துவிடுங்கள்.
2. வைஃபை, ப்ளூடூத் பயன்படுத்திவிட்டு, தேவையற்ற சமயங்களில் ஆஃப் செய்யவும்.
3. இணையம் மூலமாக பிரவுசரில் ஏதேனும் தேடிக்கொண்டிருக்கும்போதோ, கேம்ஸ் விளையாடும்போதோ அந்த அப்ளிகேஷனை முழுமையாக குளோஸ் செய்யாமல், மொபைல் திரையை அணைக்கக்கூடாது. அப்படிச் செய்தால், திரைக்குப் பின்னால் அந்த அப்ளிகேஷன் இயங்கிக்கொண்டே இருக்கும்.
4. நெட்வொர்க் கவரேஜ் இல்லாத இடங்களில் இருக்கும்போது, உங்கள் மொபைல் ஆண்டனாக்கள் அதிக மின்சக்தியை செலவுசெய்து, நெட்வொர்க்கைத் தேடும். எனவே டவர் கிடைக்காத இடங்களில் ஏர் பிளேன் (Air Plane) மோட்-ஐ ஆன் செய்துவிடலாம். இதனால் எந்த இணையமும் இல்லாமல் போனில் இசை கேட்கலாம். கேம்ஸ், வீடியோ பார்க்கலாம்.
5. போனில் இருக்கும் ஒவ்வொரு ஆப்களையும் அடிக்கடி அப்டேட் செய்வது கொஞ்சம் சிக்கலான வேலைதான். ஆனால், இதன் மூலம் பேட்டரித் திறனை அதிகரிக்க முடியும். காரணம், ஒவ்வொரு ஆப் நிறுவனமும் தனது புதிய அப்டேட்டில், முன்பைவிட குறைவான மெமரி எடுக்கும்படியும், சார்ஜ் செலவாகும்படியும் வடிவமைப்பார்கள்.
6. ஆட்டோ சிங்க் ஆப்ஷனை அணைத்துவிடுவது மொபைல் டேட்டாவுக்கும், பேட்டரிக்கும் நல்லது. இல்லையெனில் மொபைல் டிஸ்ப்ளேவை ஆஃப் செய்து வைத்திருக்கும்போதும், மொபைல் பயன் படுத்தாதபோதும்கூட, இவை பின்னணியில் நமது டேட்டாவை தின்றுகொண்டே இருக்கும்.
7. உங்கள் மொபைல் பேட்டரி எவ்வளவு செலவாகி உள்ளது என எடுத்துப் பார்த்தால் அதில் அதிக பங்கு வகிப்பது மொபைல் திரைதான். இதன் வெளிச்ச அளவைக் குறைப்பதே சார்ஜ் குறைவதைத் தடுக்கும் முக்கிய வழி. ஆட்டோ ப்ரைட்னஸ் ஆப்ஷனைத் தேர்வு செய்வது நல்லது.

நன்றி : நாணயம் விகடன் - 06.11.2016




Tuesday, October 25, 2016

பறந்துகொண்டு இருக்கும் விமானத்தின் என் ஜின்கள் செயல் இழந்தால்


பறந்துகொண்டு இருக்கும் விமானத்தின் என் ஜின்கள் செயல் இழந்தால் 
என்ன செய்ய வேண்டும்?

நடுவானில் எஞ்சின்கள் செயலிழந்தாலும் விமானம் தொடர்ந்து பறக்கும்... எப்படி தெரியுமா?
நடுவானில் பறக்கும்போது விமானத்தின் எஞ்சின்கள் செயலிழந்து போனால், விமானம் தொப்பென தரையில் விழுந்துவிடும் என்று நினைக்கத் தோன்றுகிறது. ஆனால், எஞ்சின்கள் செயலிழந்தாலும், விமானம் பறக்கும்.

பொதுவாக விமான எஞ்சின்கள் செயலிழப்பதற்கான வாய்ப்புகள் மிக குறைவு. எனினும், தொழில்நுட்பக் கோளாறு, எரிபொருள் பற்றாக்குறை போன்ற சில அரிதான காரணங்களால் விமான எஞ்சின்கள் செயலிழந்து போவதற்கான வாய்ப்புகள் ஏற்படுகின்றன.

அப்படியும் ஒன்றுக்கும் மேற்பட்ட எஞ்சின்களில் ஒரு எஞ்சின் பழுதானால் கூட மற்றொரு எஞ்சினை வைத்து பாதுகாப்பாக தரையிறக்கிவிடும் வாய்ப்புள்ளது. 

ஆனால், விமானத்தில் பொருத்தப்பட்டிருக்கும் எல்லா எஞ்சின்களுமே செயலிழந்து போனால் என்ன செய்வது? விமானம் தொப்பென தரையில் விழுந்துவிடும் என்றுதான் நினைக்கத் தோன்றும்.

ஏனெனில், விமானத்தின் எஞ்சின்கள் அளிக்கும் த்ரஸ்ட் விசையின் மூலமாக முன்னோக்கி பறக்கின்றன. ஆனால், எஞ்சின்கள் செயலிழக்கும்போது இந்த த்ரஸ்ட் விசை கிடைக்காததால், விமானம் முன்னோக்கி செல்லும் திறனை இழக்கும்.

ஆனால், பறக்கும் திறனை இழக்காது. ஆம். அனைத்து எஞ்சின்களுமே செயலிழந்தால் கூட விமானம் குறிப்பிட்ட தூரம் பறக்கும் திறனை பெற்றிருக்கின்றன. இது ஆச்சரியத்தை ஏற்படுத்தும் விஷயம்தான். தினசரி விமானத்தில் பயணிப்பவர்கள் கூட இந்த செய்தி புதிதாக இருக்கலாம்.

விமானத்தில் எஞ்சின்கள் செயலிழக்கும்போது த்ரஸ்ட் விசை கிடைக்காமல், விமானம் முன்னோக்கி செல்லாது. அதேநேரத்தில், படிப்படியாக கீழே இறங்க துவங்கும். இந்த நேரத்தில்தான் அறிவியல் தொழில்நுட்பமும், அதிர்ஷ்டமும் கைகொடுக்க வேண்டும்.

'மே டே' அலர்ட் எனப்படும் அவசரமாக தரையிறக்கும் அறிவிப்பையும் விமானிகள் அருகிலுள்ள விமான நிலையத்திற்கு கொடுத்துவிடுவார்கள். அதன்பிறகு, அந்த விமான நிலைய கட்டுப்பாட்டு மையத்தின் உதவி மற்றும் ஆலோசனைகளுடன் விமானிகள் செயல்படுவர்.

ஒவ்வொரு விமானமும் ஒவ்வொரு விகிதத்தில் தரையிறங்கும். உதாரணத்திற்கு, டெல்லி - சான்பிரான்சிஸ்கோ நகருக்கு இடையில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் உலகின் மிக நீண்ட தூர விமானமான போயிங் 777-200 விமானமானது 1:18 என்ற விகிதத்தில் தரையிறங்கும்.

அதாவது, ஒரு அடி உயரம் குறையும்போது, 18 அடி தூரம் முன்னோக்கி சென்றிருக்கும். எஞ்சின்கள் செயலிழக்கும்போது 32,000 அடியில் இந்த விமானம் பறந்து கொண்டிருந்தால், 175 கிமீ தூரம் வரை பயணிக்கும். இதனை கணக்கிட்டு, அருகிலுள்ள விமான நிலைய ஓடுபாதையில் விமானத்தை விமானிகள் தரையிறக்க வேண்டும்.

ஓடுபாதை மிக அருகில் இருந்தால் விமானத்தை வட்ட மடித்து அல்லது விமானத்தின் பேலன்ஸ் குறையாமல் குறிப்பிட்ட முறையில் வளைந்து சென்று விமானத்தின் இறங்கும் உயரத்தை அட்ஜெஸ்ட் செய்து ஓடுபாதையில் சரியாக இறக்க விமானிகள் முற்படுவர்.

இப்போது மற்றொரு விஷயம். எஞ்சின்கள் செயலிழக்கும்போது ஆட்டோபைலட் கட்டுப்பாட்டு சாதனங்களும் செயலிழக்கும். அப்போது எரிபொருள் சப்ளை தானியங்கி முறையில் நிறுத்தப்பட்டுவிடும்.

இந்த சூழலில் எஞ்சின்கள் செயலிழந்ததை சென்சார் உதவியுடன் கண்டுகொள்ளும், ராம் ஏர் டர்பைன் என்ற விசிறி தானாக இயங்கும். விமானத்தின் அடிப்பாகத்தில் மின் விசிறி போன்றே இருக்கும் இந்த கருவியானது வெளிக்காற்று விசை மூலமாக சுழன்று மின்சாரத்தை உற்பத்தி செய்து தரும்.

இந்த கருவியின் மூலமாக விமானத்தின் கட்டுப்பாட்டு சாதனங்களுக்கு தேவையான மின்சாரத்தை பெற முடியும். அதேநேரத்தில், இந்த சாதனம் மூலமாக எஞ்சின்கள் போன்று த்ரஸ்ட் எனப்படும் முன்னோக்கி செலுத்தும் விசையை பெற முடியாது.

மேலும், விமானத்தின் பின்புறத்தில் இருக்கும் துணை பேட்டரி யூனிட்டிலிருந்து ஹைட்ராலிக் கருவிகளை இயக்குவதற்கான மின்சாரம் பெறப்படும். இந்த மின்சாரத்திலிருந்து திசை மாற்றும் அமைப்பு, பிரேக்குகள், லேண்டிங் கியர்கள் எனப்படும் விமான சக்கரங்களையும் இயக்க முடியும்.

ஆனால், இதற்கு விமானத்தின் எடை,  சீதோஷ்ண நிலை, காற்று வீசும் திசை, விமான நிலையம் அமைந்திருக்கும் தொலைவு, விமானிகளின் சாமர்த்தியம் ஆகிய அனைத்தும் சரியாக அமைய வேண்டும். ஹெட்விண்ட்ஸ் எனப்படும் எதிர்க்காற்றைவிட, டெயில்விண்ட்ஸ் எனப்படும் தள்ளுக்காற்று இருந்தால் சற்றே கூடுதல் தொலைவு பறக்கும் வாய்ப்புள்ளது.

பொதுவாக நடுத்தர வகை மற்றும் பெரிய வகை விமானங்களில் இரண்டு அல்லது நான்கு எஞ்சின்கள் பொருத்தப்படுகின்றன. அனைத்து எஞ்சின்களுமே ஒரேநேரத்தில் செயலிழப்பது அரிதான விஷயமே. ஆனால், அப்படியும் எஞ்சின்கள் செயலிழந்து பின்னர் விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்கிய சம்பவங்களும் உண்டு.

2001ம் ஆண்டு அட்லாண்டிக் பெருங்கடல் மேலே பறந்துகொண்டிருந்த ஏர் டிரான்ஸ்சாட் நிறுவனத்துக்கு சொந்தமான ஏர்பஸ் ஏ330-243 என்ற விமானமானது எரிபொருள் இல்லாமல் ஒரு எஞ்சின் செயலிழந்தது.

அப்போது, பைலட்டுகள் உடனடியாக 300 கிமீ தூரத்தில் இருந்த விமான நிலையத்தை தொடர்பு கொண்டு அவசரமாக தரையிறக்க கேட்டுக் கொண்டனர். அப்போது விமானமானது 33,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தது.

விமானத்தின் எடையுடன் ஒப்பிடும்போது, அந்த ஒற்றை எஞ்சினை வைத்து எளிதாக தரையிறக்க விடும் வாய்ப்பு இருந்தது. ஆனால், விமான நிலையத்திற்கு 120 கிமீ தொலைவில் இருந்தபோது எரிபொருள் முற்றிலும் தீர்ந்துபோய் மற்றொரு எஞ்சினும் செயலிழந்தது.

இதையடுத்து, மேற்சொன்ன முறையில் விமானத்தின் இறங்கும் விகிதத்தை வட்டமடித்தும், எஸ் டர்ன் அடித்தும் சரியாக குறைத்து பாதுகாப்பாக தரையிறக்கினர். மணிக்கு 370 கிமீ வேகத்தில் அந்த விமானமானது தரையிறங்கியது.

ஆனால், இங்கு மற்றொரு சிக்கல், அந்த ஏர்பஸ் ஏ330 விமானத்தை தரையிறக்குவதற்கு ஓடுபாதையின் நீளம் போதுமானதாக இல்லை. மேலும், ஓடுபாதை முடிவில் மலைக்குன்று ஒன்றும் இருந்தது. இதையடுத்து, சமார்த்தியமாக விமானத்தின் 8 டயர்களையும் வெடிக்கச் செய்து விமானத்தின் வேகத்தை அதிரடியாக குறைத்து நிறுத்தினர்.

விமானத்தை கேப்டன் ராபர்ட் பிச் மற்றும் விமானத்தின் முதன்மை அலுவலர் டர்க் டி ஜாகர் ஆகியோர் பத்திரமாகவும், சாமர்த்தியமாகவும் தரையிறக்கி சாதித்தனர். விமான போக்குவரத்து வரலாற்றில் விமான எஞ்சின்கள் செயலிழந்த பின் நீண்ட தூரம் விமானத்தை இயக்கிய பெருமையும் இவர்களுக்கு உண்டு.

விமானத்தின் ஒரு எஞ்சினில் தவறான உதிரிபாகத்தை பொருத்தியதால், எரிபொருள் கசிவு ஏற்பட்டிருப்பது விசாரணையில் தெரியவந்தது. மற்றொரு சம்பவத்தில் விமானி எரிபொருள் நிரப்புவதற்கு கொடுத்த எடை அளவை, தவறாக புரிந்து கொண்டு கிலோவுக்கு பதில் பவுண்ட் மதிப்பில் பணியாளர் ஒருவர் எரிபொருள் நிரப்பிவிட்டார்.

இதனால், பாதியளவே எரிபொருள் நிரப்பப்பட்டிருக்கிறது. நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது திடீரென எரிபொருள் தீர்ந்துவிட்டதாக காட்டியதும் விமானி அதிர்ந்து, பின்னர் எஞ்சின் செயலிழந்தத நிலையில் விமானத்தை தரையிறக்கிவிட்டார். பின்னர் விசாரணையில் இந்த குழப்பம் தெரியவந்தது. இதற்கு Dead stick Landing என்று குறிப்பிடப்படுகிறது.

Written By: Saravana Rajan

நன்றி : டிரைவ் ஸ்பார்க்     ஆஃப் பீட் – 25.10.2016

Thursday, June 2, 2016

கைபேசியில் தமிழ் அகராதி


கைபேசியில் தமிழ் அகராதி -  என்ன செய்ய வேண்டும்?

ஆண்ட்ராய்டு செல்பேசிகளில் இனி புரட்டலாம் 
'க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி'!

சமகாலத் தமிழைத் தொழில்நுட்பரீதியாக அடுத்த யுகத்துக்குக் கொண்டுசெல்லும் முயற்சிகளில் ஒரு மைல்கல் சாதனையை நிகழ்த்தியிருக்கிறது ‘க்ரியா பதிப்பகம்’. ஆண்ட்ராய்டு செல்பேசிகளுக்கான ‘க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி’யின் செயலியைப் பதிவிறக்கிக்கொண்டால், இனி செல்பேசியிலேயே தமிழ் அகராதியைப் புரட்டலாம். தமிழ் வார்த்தைகளுக்கான விளக்கங்களோடு அவற்றுக்கு இணையான ஆங்கில வார்த்தைகளையும் விளக்கங்களையும் பெறலாம்.

வையாபுரிப்பிள்ளை ஆசிரியராக இருந்து வெளியிட்ட ‘தமிழ்ப் பேரகராதி’ (Tamil Lexicon) பழந்தமிழ்ச் சொற்களிலிருந்து இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலம் வரையிலான சொற்களுக்கான அகராதி என்றால் ‘க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி’தற்காலப் பொதுத் தமிழுக்கான அகராதி. மொழியியல் அறிவு, கணினித் தொழில்நுட்பம் போன்றவை ஒருங்கே இந்த அகராதியில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

இத்தகைய சிறப்புகள் வாய்ந்த ‘க்ரியா’ அகராதி யின் முதல் பதிப்பு சிறப்பு வாய்ந்த அறிஞர்கள் குழு, நிபுணர்கள் குழுவின் ஆறு ஆண்டுகால உழைப் பில் 1992-ல் வெளியானது. அதற்குப் பிறகு, தமிழில் நிகழ்ந்த மாற்றங்களையும் சேர்க்கைகளையும் கணக்கில் கொண்டு, அந்த அகராதியை விரிவாக்கி 2008-ல் வெளியிட்டார்கள். 75 லட்சம் தமிழ்ச் சொற் களைக் கொண்ட ‘சொல்வங்கி’யின் உதவியுடன் உருவாக்கப் பட்டது இந்தப் பதிப்பு. 21,000 தலைச்சொற்கள், 38,000 எடுத்துக்காட்டு வாக்கியங்கள், 1,700 இலங்கைத் தமிழ்ச் சொற்கள் போன்றவை இதன் முக்கியமான அம்சங்கள்.

இணையத்தின் பயன்பாடு அதிகரித்துள்ள சூழலில், க்ரியா அகராதியை மேம்பட்ட தேடல் வசதிகளுடன் க்ரியா இணையதளத்தில் வெளியிட்டார்கள். கூடவே, ஐபேட், ஐஃபோன் சாதனங்களிலும் இந்த அகராதியின் ஆப் வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஆண்ட்ராய்டில் இந்த அகராதி தற்போது வெளியிடப்பட்டிருக்கிறது.

செல்பேசியில் அகராதியைப் புரட்டுவதே அலாதியான அனுபவமாக இருக்கிறது. ‘அ’ என்ற எழுத்தைத் தட்டினாலே அகரத்தில் தொடங்கும் எழுத்துகளைக் கைபேசித் திரை காட்டுகிறது. அது மட்டுமல்லாமல், Options என்ற பகுதியில் சொற்களை அவற்றின் இலக்கண வகை, வழக்குக் குறிப்புகள், துறைகள் ரீதியாகவும் தேட முடியும். உதாரணத்துக்கு, ஒருவர் அச்சுப் பதிப்பு அகராதியில் இயற்பியல் சார்ந்த சொற்களைப் பக்கம் பக்கமாகப் புரட்டித் தேடுவதென்றால், ஒரு வாரம் பிடிக்கலாம். ஆனால், இந்த ‘ஆப்’பில் இயற்பியல் என்ற துறையை அழுத்தினால், ஒரு நொடிக்குள் நூற்றுக்கும் மேற்பட்ட சொற் களின் பட்டியல் விரிகிறது. இந்த அம்சம் மாணவர் களுக்கும் ஆசிரியர்களுக்கும் மிகவும் உதவியாக இருக்கும்.

இது ‘தமிழ்-தமிழ்- ஆங்கிலம்’ அகராதி என்பதால், ஆங்கிலச் சொல்லைத் தட்டச்சு செய்தால், அதற்குத் தமிழில் நிகரான பொருள் என்ன என்பதையோ அது தொடர்பான மற்ற தமிழ்ச் சொற்களையோ தேடலாம். தமிழறிவைத் தாண்டி, ஆங்கில அறிவை மேம்படுத்திக்கொள்வதற்கும் இது மிகவும் உதவியாக இருக்கும். தேடல் வசதியும், இண்டிக் கீபோர்டு என்ற விசைப்பலகையும் திறன் பொருந்தியவையாகவும் எளிமையாகவும் இருக்கின்றன. கணினித் தமிழில் நடந்திருக்கும் சாதனைகளில் ஒன்று என்றே இதைச் சொல்லலாம்!

சென்னைப் புத்தகக் காட்சியில் ‘க்ரியா பதிப்பகம்’ பங்கேற்றிருக்கிறது. அரங்கு எண்: 51, 52. இந்த அகராதிச் செயலியை அங்கு நேரடியாகப் பெறலாம் அல்லது உங்கள் ஆண்ட்ராய்டு கைபேசியில் உள்ள ‘பிளே ஸ்டோ’ருக்குச் சென்று creatamildictionary என்று ஆங்கிலத்தில் அடித்தால், இந்தச் செயலி வந்துவிடுகிறது. முதல் பத்துச் சொற்கள் வரை கட்டணமின்றிப் பயன்படுத்திப் பார்க்கலாம். பயன்பாடு பிடித்திருக்கும் பட்சத்தில் ரூ.199 செலுத்தினால், ஆயுளுக்கும் பயன்படுத்தலாம்!

நன்றி  :  இந்து நாளிதழ் - 03.06.2016

Thursday, May 19, 2016

ATM ல் சிக்கலின்றி பணம் எடுக்க


ATM ல் சிக்கலின்றி பணம் எடுக்க என்ன செய்ய வேண்டும்?

வங்கி ஏடிஎம்-ல் சில நேரங்களில் எடுக்க வேண்டிய பணம் பதிவு செய்தபின், பணம் கைக்கு வருவதில்லை ஆனால் வங்கி கணக்கில் இருந்து பணம் கழிக்கப் படுகின்றது.
என்ன காரணம்?
நமது நடவடிக்கைதான் இதற்குக் காரணம்.
இதற்கான காரணத்தை முன்னாள் வங்கியாளர் திரு.ப்ளெமிங் டையஸ் அவர்கள் கீழ்கண்டவாறு பதிவு செய்கின்றார்.
ஓவ்வொரு ATM - லும் நீங்கள் உங்களது ATM / debit கார்டை அதற்கூரிய slot - ல் நுழைப்பதிலிருந்து பணம் வெளி வரும் வரை என்ன நடக்கிறது என்பதைப் பார்போம்.
மெஷினில் நமது கார்டை நுழைத்தவுடன் என்ன நடக்கிறது?

கார்டை நுழைத்தவுடன் Language ? கேட்கும்...
அடுத்து உங்களது PIN கேட்கும். PIN enter பண்ணினவுடன் கார்ட் நம்பரையும் PIN - ஐயும் பரிசீலித்து சரி எனில் சில பல option கொடுக்கும்.. withdrawal / Fast Cash / Statement / Balance etc...,
பணம் எடுத்தல் எனில் நீங்கள் withdrawal - ஐ தேர்ந்தெடு.ப்பீர்கள்....
உடனே எவ்வளவு என்று வினா வரும். தொகையினை enter பண்ணினவுடன் அது சரிதானா என்று வினவும்.
Yes என்று நீங்கள் enter பண்ணினதும் சில விநாடிகளில் பணம் உங்கள் கையில் வரும்.
வேறு வங்கி ATM என்றால் type of account - ம் கேட்கும்....
இது நம் கண் முன்னே நடப்பது.
மேற்கண்ட நேரத்தில் உள்ளே என்ன நடக்கிறது? 
நீங்கள் கார்ட் வைத்திருக்கும் வங்கியில் ஒரு server இருக்கும். Central Server என்றும் ஒன்று உண்டு..
நீங்கள் PIN enter பண்ணி உங்கள் கணக்கும் கார்டும் tally ஆன வுடன் தொகையை enter பண்ணினவுடன் ATM, Central Server - ஐ தொடர்பு கொண்டு இந்த கணக்கில் இவ்வளவு தொகை கேட்கிறார்கள்.. கணக்கில் பணம் இருக்கிறதா ? எனறு வினவும்.
Central Server Branch Server - ஐ தொடர்பு கொண்டு கணக்கை verify பண்ணச் சொல்லி போதுமான பணம் இருப்பின் நீங்கள் கேட்ட தொகையினை debit பண்ண சொல்ல, branch server தொகையினை debit செய்து, செய்தாகி விட்டது... என்று Central Server -க்கு செய்தி அனுப்பும்.
Central Server ATM- க்கு கேட்ட தொகை debit செய்யப்பட்டு விட்டது, பணம் கொடுக்கலாம் எனறு instruction கொடுக்கும்.
ATM தனது vault - ல் இருந்து பணம் எடுத்து கொடுக்கும்.
இவ்வளவு சமாச்சாரமும் ஒரு குறிப்பிட்ட நேரத்துக்குள் நடக்க வேண்டும் ( say 90 sec ).
ஆனால், நம்மில் பலர் PIN நம்பரையோ அல்லது எவ்வளவு பணம் எடுக்க வேண்டும் என்பதையோ ATM - ல் நுழைந்து கார்டை insert பண்னின பிறகுதான் யோசிப்போம். சில நேரங்களில் வீட்டிற்கு போன் செய்து கேட்போம்.
குறிப்பிட்ட நேரம் ஓடிக் கொண்டே இருக்கும். கணக்கு debit ஆகி பணம் கொடுக்கலாம் என்று instruction வரும் முன்னர் நேரம் முடிந்து போகும்.
பணம் வராது...
ஆனால் கணக்கு debit ஆகி விடும்...
எனவே ATM - ல் பணம் எடுக்க செல்லும் போதே PIN நம்பர், நாம் எடுக்கப்போகும் தொகை இவற்றை தெரிந்து கொண்டு தயாராகப் போனால் இந்த மாதிரி தொல்லையை தவிர்க்கலாம்.
நன்றி திரு.ப்ளெமிங் டையஸ் அவர்களுக்கு.
நண்பரும், வழக்கறிஞருமான  
Leenus Leo Edwards's Profile Photo
திரு  Leenus Leo Edwards  அவர்களுடன் இணைந்து

Tuesday, May 17, 2016

வாட்ஸ்அப்பில் வீடியோ ஃகால்


வாட்ஸ்அப்பில் வீடியோ ஃகால் - என்ன செய்ய வேண்டும்?

வாட்ஸ்ஆப் நிறுவனம் தனது செயலியில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட வீடியோ கால் அம்சத்தினை வழங்க இருப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. வாட்ஸ்ஆப் செயலியில் வீடியோ கால் சோதனையானது பீட்டா பதிப்புகளில் சோதனை செய்யப்பட்டு வருகின்றது. மேலும் இந்த அம்சம் விரைவில் பயன்பாட்டிற்கு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

வாட்ஸ்ஆப் செயலியின் போன் ஐகானை க்ளிக் செய்து வீடியோ கால் மேற்கொள்ள முடியும். முன்னதாக வாய்ஸ்கால் செய்ய வழங்கப்பட்ட இந்த ஐகான் மூலம் வீடியோ கால் மற்றும் வாய்ஸ் கால் என இரு அம்சங்களை வழங்கும். தற்சமயம் வரை இந்த அம்சம் சோதனை செய்யப்பட்டு வருகின்றது.

முயற்சி 
வாட்ஸ்ஆப் வீடியோ கால் அம்சத்தினை உடனடியாக பயன்படுத்த விரும்புவோர் தற்சமயம் ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு கருவிகளில் முயற்சிக்க முடியும்.
செயலி
ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் பயனர்கள் தங்களது ப்ளே ஸ்டோர்களில் இருந்து பூயா எனும் செயலியை கொண்டு பயன்படுத்த முடியும். 

காண்டாக்ட்

இந்த செயலியை இன்ஸ்டால் செய்ததும் வாட்ஸ்ஆப் காண்டாக்ட், புகைப்படம், மீடியா, கேமரா, வை-பை போன்றவைகளை ஆய்வு செய்யும். 

வீடியோ கால் 
வீடியோ கால் அம்சத்தினை க்ளிக் செய்தவுடன் காண்டாக்ட்களை இணைக்க லின்க் அனுப்பப்படும். ஒரு வேளை வீடியோ கால் செய்யும் போது செயலியை க்ளோஸ் செய்தால் வீடியோ கால் வாய்ஸ் கால் போன்று மாற்றப்பட்டு விடும்.

க்ரூப் வீடியோ கால் 
பூயா செயலியை பயன்படுத்தி க்ரூப் வீடியோ கால் செய்யும் அம்சமும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த அம்சம் பயன்படுத்த கருவியில் பூயா செயலி இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Written By: Meganathan

நன்றி : கிஸ்பாட் » News - 16.05.2016