disalbe Right click

Showing posts with label லைசென்ஸ். Show all posts
Showing posts with label லைசென்ஸ். Show all posts

Friday, September 29, 2017

பட்டாசுக்கடை - தடையின்மைச் சான்று பெற ....

பட்டாசுக்கடை - தடையின்மைச் சான்று பெற ....
தீபாவளிப் பண்டிகை நெருங்கிக் கொண்டிருக்கிறது. பட்டாசு விற்பனைக்காக கடைகளும் அதிகமாக ஏற்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. பட்டாசுக் கடைகள் வைப்பவர்கள் தீயணைப்புத் துறையினரிடமிருந்து ”தடையின்மைச் சான்று” பெற வேண்டும். இந்தச் சான்று பெறாமல் பட்டாசுக் கடை வைப்பது சட்டப்படி தண்டணைக்குரிய குற்றமாகும்.
பொதுமக்களின் பாதுகாப்புக்காகவும், விபத்துக்கள் நேராமல் இருப்பதற்காகவும் தீயணைப்புத் துறையினர் பல விதிமுறைகளை ஏற்படுத்தி வைத்துள்ளனர். அதனை பட்டாசுக்கடை வைப்பவர்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். 
விதிமுறைகள்:
 வெடிபொருள் சட்டப்படி, பட்டாசு கடை வைக்கும் கட்டிடமானது, கல் மற்றும் கான்கிரீட்டால் கட்டப்பட்டு இருக்க வேண்டும்.
 பட்டாசு கடைகளுக்கான உரிமத்தை, வருடந்தோறும் கண்டிப்பாக புதுப்பிக்க வேண்டும்
 பட்டாசுக் கடையின் இரு புறங்களிலும், கட்டாயம், வழிகள் அமைத்திருக்க வேண்டும்
➽ கடை வைக்கப்பட்ட கட்டடத்தில், மின் விளக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். எண்ணை விளக்குகள் கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது.
 பட்டாசு கடைக்கும், மற்றொரு கடைக்கும் குறைந்தபட்சம், 15 மீ.,  (சுமார் 50 அடி)   இடைவெளி இருக்க வேண்டும்
➽ உதிரியாக பட்டாசுகளை விற்கக் கூடாது.
' புகை பிடிக்கக் கூடாது' என, பெரியதாக எச்சரிக்கை பலகை பல இடங்களில் வைக்க வேண்டும். வாடிக்கையாளரின் பார்வைக்கு தென்படும் வகையில் அதனை வைக்க வேண்டும்
➽ தீயணைப்பு வாகனம் வருவதற்கேற்பபட்டாசு கடை அருகே வழி ஏற்படுத்தி இருக்க வேண்டும்
 பட்டாசு வைப்பதற்கென்று உரிமம் பெற்ற இடத்தை தவிர, வேறு இடங்களில் பட்டாசு இருப்பு கண்டிப்பாக வைக்கக் கூடாது.
➽  குறிப்பிட்ட அளவுக்கு மேல் பட்டாசு இருப்பு கண்டிப்பாக வைக்கக் கூடாது.
  மேற்கண்ட விதிமுறைகளை மீறுகின்ற கடை உரிமையாளர் மீதும், கடையில் பணியாற்றும்   விற்பனையாளர்கள் மீது, குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்
➽ தீயணைப்புத் துறை, வருவாய் துறை மற்றும் காவல் துறையினர்கள் ஆகியோர்    ஆய்வு செய்து சான்றுகள் தந்த பின்னரே, தடையின்மை சான்றிதழ்  வழங்கப்படும்.
➽   மேற்கண்ட விதிமுறைகள் பின்பற்றாமல் இருந்தால், தடையின்மை சான்று வழங்கப்பட மாட்டாது.  துறைரீதியாக நடத்துகின்ற திடீர் சோதனையில், விதிமுறைகள்  மீறப்பட்டு இருப்பது தெரிய வந்தால், பட்டாசுக்கடையின்  உரிமம் ரத்து செய்யப்படும்
 பட்டாசு கடை வைக்க விண்ணப்பிக்கும் போது, வரி செலுத்தியதற்கான ரசீது மற்றும்    பட்டாசுக்கடை கட்டடத்தின் வரைபடத்தின் ஆறு நகல்களை இணைக்க வேண்டும்.
 பட்டாசு கடை வைக்கும் இடமானது, வாடகை கட்டடமாக இருந்தால், 'நோட்டரி பப்ளிக்' வழக்கறிஞர் கையெழுத்துடன் கூடிய, வாடகை ஒப்பந்த பத்திரம், உரிமம் கட்டணம், 500 ரூபாய் செலுத்தி, அதற்கான அசல் சான்றுடன், 'பாஸ்போர்ட் சைஸ்' போட்டோ   மூன்றுடன், மாவட்ட வருவாய் அலுவலரிடம் விண்ணப்பிக்க வேண்டும்.
➽  வருகின்ற வாடிக்கையாளர்களுக்கு கடையிலோ அல்லது கடையின் அருகிலோ   பட்டாசுகளை வெடித்து காட்டக் கூடாது. பட்டாசுக் கடையில், கூட்டம் அதிகம் இல்லாதவாறு பார்த்து கொள்ள வேண்டும்.
பட்டாசுக் கடையில், இரு தீயணைப்பு கருவிகள், இரு வாளிகளில் தண்ணீர் மற்றும்    மணல் ஆகியவற்றை, தயாராக வைத்திருக்க வேண்டும்.
➽ கடையின் வெளிச் சுவரில் தெளிவாக தெரியும்படி,  கடையின் பெயர், உரிமம் எண்; உரிமம் பெற்றவர் பெயர்; அனுமதிக்கப்பட்ட பட்டாசு இருப்பு விபரம் மற்றும் அதன் வகைகள் குறித்து, பெயிண்டால் எழுதி வைக்க வேண்டும்.
 பட்டாசு இருப்பு, தணிக்கை பதிவேடு முறையாக பராமரிக்க வேண்டும்.
 பட்டாசு கடை வைக்க அனுமதி பெற்றவர் அல்லது அவரது அதிகாரம் பெற்ற பிரதிநிதிகள் மட்டுமே, பட்டாசுக்கடையில் பட்டாசு விற்க வேண்டும்.
➽ பட்டாசு கடைகள், 270 சதுரடியில் மட்டுமே இருக்க வேண்டும். குறைந்தபட்சம், 9 சதுர மீட்டர்,  அதிகபட்சம், 25 சதுர மீட்டராகவும் இருக்க வேண்டும்.
 பள்ளி, மருத்துவமனை, பெட்ரோல் பங்க், வழிபாட்டு தலங்கள் மற்றும் மின் வினியோக பெட்டிகள் அருகே, பட்டாசு கடை அமைப்பதற்கு அனுமதி கிடையாது.
பொதுமக்கள், வாடிக்கையாளர்கள், விதிமீறல் கடைகள் குறித்து,  கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் அல்லது வட்டாட்சியர், போலீசார் ஆகியோரிடம் புகார் அளிக்கலாம்.
தற்காலிகமாக பட்டாசுக்கடை அமைக்க.....
பண்டிகைகளை முன்னிட்டு தற்காலிக பட்டாசுக்கடைகள் அமைக்க விரும்புபவர்கள் அந்தந்த மாவட்டத்தில் உள்ள மாவட்ட வருவாய் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
மாநகரங்களின் போலீஸ் எல்லைக்குள் கடை அமைக்க, மாநகர போலீஸ் கமிஷனரிடம் விண்ணப்பிக்க வேண்டும்.
பண்டிகைக்கு மட்டும் விற்பனை செய்யும் வகையில், தற்காலிக பட்டாசுக்கடை அமைக்க, கட்டட உரிமையாளருடனான வாடகை ஒப்பந்தம் மற்றும் சொத்து வரி ரசீதுடன் காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறையில், தடையின்மை சான்று பெற்று, நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை செலுத்தி விண்ணப்பித்தால், அவர்களுக்கு தற்காலிக 'லைசென்ஸ்' வழங்கப்படும்.
பண்டிகை ஆரம்பிப்பதற்கு ஒரு இரண்டு நாட்கள் முன்பிருந்து, பண்டிகை முடிந்த ஒரு நாள் வரையிலும் பட்டாசுக் கடை நடத்த அனுமதி வழங்கப்படும்.
*******************************************************அன்புடன் செல்வம் பழனிச்சாமி 

Friday, September 1, 2017

ஒரிஜினல எல்லாத்துகிட்டயும் கேக்கமாட்டோங்க!

ஒரிஜினல எல்லாத்துகிட்டயும் கேக்கமாட்டோங்க!
அசல் ஓட்டுநர் உரிமம்: காவல்துறை புதிய விளக்கம்!
அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பதுகுறித்து, காவல்துறை புதிய விளக்கம் ஒன்றை வெளியிட்டுள்ளது.
போக்குவரத்து காவல்
தமிழகத்தில், 'இன்று முதல் வாகன ஓட்டிகள் அசல் ஓட்டுநர் உரிமைத்தை வைத்திருக்க வேண்டும்' என்று போக்குவரத்துத்துறை தெரிவித்திருந்தது. அப்படி அசல் ஓட்டுநர் உரிமம் இல்லாதவர்களுக்கு, 500 ரூபாய் அபராதம் மற்றும் மூன்று மாதம் சிறைதண்டனை விதிக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது.
இதனிடையே வாகனச் சட்டப்பிரிவு 139-ன்படி ஓட்டுநர்கள், ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பது அவசியம் இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் கூறியிருந்தது. இந்நிலையில் அசல் ஓட்டுநர் உரிமம் குறித்து காவல்துறை விளக்கமளித்துள்ளது.
அதன்படி, "அதிக வேகம், அதிக சுமை ஏற்றுதல், அதிக ஆட்களை ஏற்றிச் செல்லுதல், குடி போதையில் வாகனம் ஓட்டுதல், சிக்னலில் எல்லையைத் தாண்டுதல், செல்போன் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட 6 குற்றங்களில் ஈடுபட்டால் மட்டுமே அசல் ஓட்டுநர் உரிமம் கேட்கப்படும்" என்று போக்குவரத்துக் காவல்துறை விளக்கமளித்துள்ளது. கடந்த மூன்று மாதங்களில் மட்டும், இந்த ஆறு குற்றங்களில் ஈடுபட்டதாக, தமிழகத்தில் 52,064 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
குறிப்பாக, 'அசல் ஓட்டுநர் உரிமத்துக்காக என்று தனியாக சோதனை ஏதும் நடத்தப்படவில்லை' என்று காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. .
இரா.குருபிரசாத்
நன்றி : விகடன் செய்திகள் – 01.09.2017

Sunday, August 27, 2017

பொதுமக்களுக்கு கஷ்டந்தான்!

பொதுமக்களுக்கு கஷ்டந்தான்!
மோட்டார் வாகன சட்டப்படி, அசல் ஆவணங்கள் வைத்திருப்பது கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது. ஒரிஜினல் தொலைந்துவிட்டால் என்ன செய்வது? என்று நாம் அனைத்து ஆவணங்களின் நகலைத்தான் இதுவரை உடன் வைத்திருந்தோம். இனிமேல் போக்குவரத்து காவல்துறையினர்  இதை  அனுமதிக்க மாட்டார்கள். இது நல்லதுக்குத்தான் என்றாலும், நடைமுறை சிக்கல்களை பொதுமக்களாகிய நாம்தான் அனுபவிக்கப் போகிறோம். 
தொலைந்து போனால் என்ன செய்ய வேண்டும்?
ஒரு வாகன ஓட்டுனர், தனது ஒரிஜினல் ஓட்டுநர் லைசென்சை தொலைத்து விட்டால், அவர் வசிக்கும் பகுதியில் உள்ள காவல் நிலையத்திற்குச் சென்று புகார் கொடுக்க வேண்டுமாம். ஒரு வாரம் கழித்து மீண்டும் அவர்களை போய் பார்த்து, 'கண்டுபிடிக்க முடியவில்லை' என, சான்றிதழ் ஒன்று அவர்களிடமிருந்து வாங்கி வர வேண்டுமாம்.  அந்த சான்றிதழை, அவர் வசிக்கும் பகுதியை சேர்ந்த, வட்டார போக்குவரத்து அலுவலர் (Regional Transport Officerஅவர்களிடம் கொடுக்க வேண்டுமாம். அவர் அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கும், அந்த நபரின் டிரைவிங் லைசென்ஸ் எண்ணை அனுப்பி, 'இவரது லைசென்சை, யாராவது ஏதாவது குற்றத்தின் அடிப்படையில் பறிமுதல் செய்து உள்ளீர்களா?' என கேட்டு, கடிதம் எழுதுவாராம்.
அதற்கு, பதில் வராத பட்சத்தில், எல்.எல்.டி., படிவம் மற்றும் 20 ரூபாய் மதிப்புள்ள பத்திரத்தில், 'தற்போது, நான் வாங்கும் லைசென்சை தவறாக பயன்படுத்த மாட்டேன். இதில், நடக்கும் தவறுக்கு நானே பொறுப்பு'  என்று நாம் எழுதி கொடுக்க வேண்டுமாம். பின்,10 நாட்களில், புதிய டிரைவிங் லைசென்ஸ் கிடைக்குமாம். (எப்படியும் ரெண்டு மாசம் ஆயிடும்)
******************************************அன்புடன் செல்வம் பழனிச்சாமி

வாகன ,ஓட்டுனர்கள், 'ஒரிஜினல் ,லைசென்ஸ்' வைத்திருப்பது,கட்டாயம்

வாகன ,ஓட்டுனர்கள், 'ஒரிஜினல் ,லைசென்ஸ்வைத்திருப்பது,கட்டாயம்
வாகனம் ஓட்டுவோர், 'ஒரிஜினல் லைசென்ஸ்' வைத்திருக்க வேண்டும்' என்ற அரசின்உத்த ரவு, செப்டம்பர், 1-ம் தேதி முதல் கட்டாயமாகிறது. மீறுவோர் மீது, சட்ட நடவடிக்கை பாயும் என, காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
வாகன ,ஓட்டுனர்கள், 'ஒரிஜினல் ,லைசென்ஸ்' வைத்திருப்பது,கட்டாயம்
தமிழகத்தில், டூ - வீலர், கார் உள்ளிட்ட வாகனங்களுக்கு என, தனித்தனி லைசென்ஸ் வழங்கப்படுகிறது. அவை, ஆர்.டி.ஓ., எனப்படும், வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் வழங்கப்படுகின்றன. லைசென்ஸ் பெறுவதற்கு முன், ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், எல்.எல்.ஆர்., என்ற, பழகுனர் உரிமம் பெற வேண்டும்.
பின், ஒரு மாதம் கழித்து, லைசென்ஸ் பெற விண்ணப்பிக்கலாம். அப்போது, விண்ணப்பதாரர் வாகனம் இயக்குவதை, மோட்டார் வாகன ஆய்வாளர் பரிசோதித்து, லைசென்ஸ் வழங்க, ஆர்.டி.ஓ.,க்கு பரிந்துரைப்பார். இவ்வாறு, லைசென்ஸ் பெற, பல படிகள் உள்ளன.
இதனால், வாகன ஓட்டுனர்கள், ஒரிஜினல் லைசென்சை, பாதுகாப்பாக வீட்டில் வைத்து விட்டு, அதன் நகலை மட்டும் வைத்திருப்பர்.
போலீசார், வாகன சோதனையில் ஈடுபடும் போது, நகல் லைசென்சை காட்டி செல்வர். மது அருந்தி வாகனம் ஓட்டினாலோ அல்லது விதிகளை மீறி ஓட்டினாலோ, வண்டியின் சாவியை, போலீசார் எடுத்துக் கொள்வர்; ஒரிஜினல் லைசென்ஸ் எடுத்து வரும்படி கூறுவர். ஒரிஜினல் லைசென்ஸ் வந்ததும், அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வர்.
ஆட்டோ, வேன், பஸ் போன்ற வர்த்தக வாகனங்களின் உரிமையாளர்கள், டிரைவர்களை நியமித்து, அவற்றை வாடகைக்கு விடுகின்றனர். வாகனங்களை, சொந்த வண்டி போல் பராமரிக்கவும், வாடகையை ஒழுங்காக தரவும், டிரைவர்களின், ஒரிஜினல் லைசென்சை வாங்கி வைத்துக் கொள்வர்.
இந்நிலையில், வாகன விபத்துக்களால், உயிர் இழப்பு அதிகரிப்பதை அடுத்து, வாகனம் ஓட்டுவோர், ஒரிஜினல் லைசென்சை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு ஆணைப்படி, 'செப்., 1 முதல்வாகன ஓட்டுனர்கள்ஒரிஜினல் லைசென்ஸ் கட்டாயம் வைத்திருக்க வேண்டும். தவறும் பட்சத்தில், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்' என, காவல் துறையும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது, வாகன ஓட்டுனர்கள் மற்றும் வாகன உரிமையாளர்களிடம், அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து, வாகன ஓட்டிகள் சிலர் கூறியதாவது:
வாகனத்தை ஒழுங்காக ஓட்ட தெரிந்தாலும், ஆர்.டி.ஓ., அலுவலகத்தில்,அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை விட, லஞ்சம் தந்தால் மட்டுமே லைசென்ஸ் கிடைக்கிறது. வாகனத்தை ஒழுங்காக ஓட்டினாலும், பணம் பறிக்க வேண்டும் என்ற எண்ணத்தில், போலீசார், வண்டி சாவியை பறித்து, அலைய வைப்பர்.
தற்போது, கட்டாயம் ஒரிஜினல் லைசென்ஸ் வைத்து கொள்ள வேண்டும் என்றால், அவர்கள் தவறே செய்யவில்லை என்றாலும், அதை வைத்து, பணம் வசூலில் ஈடுபடுவர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
தொலைந்து போனால் பெரிய தொல்லை!
ஆர்.டி.ஓ., எனப்படும், வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் எடுக்கக்கூடிய நடவடிக்கை குறித்து, அதிகாரி ஒருவர் கூறியதாவது:
வாகன  சட்டப்படி, அசல் ஆவணங்கள் வைத்திருப்பது கட்டாயம். இந்திய மனபான்மை படி, அனைத்திலும் நகல் வைத்திருப்பது, வாடிக்கையாகி விட்டது. இதற்கு, இதுவரை அனுமதி அளித்தோம்; இனிமேலும் முடியாது.
வாகன ஓட்டுனர், ஒரிஜினல் லைசென்சை தொலைந்து விட்டால், காவல் நிலையத்தில் புகார் கொடுத்து, 'கண்டுபிடிக்க முடியவில்லை' என, சான்றிதழ் வாங்கி வர வேண்டும். அந்த சான்றிதழை, அவரது பகுதியை சேர்ந்த, ஆர்.டி.ஓ.,விடம் கொடுத்தால், அவர் அனைத்து, ஆர்.டி.ஓ.,க்களுக்கும், அந்த நபரின் லைசென்ஸ் எண்ணை அனுப்பி, 'இவரது லைசென்சை, யாராவது பறிமுதல் செய்து உள்ளீர்களா?'  என கேட்டு,  கடிதம் எழுதுவர்.
அதற்கு, பதில் வராத பட்சத்தில், எல்.எல்.டி., படிவம் மற்றும் 20 ரூபாய் பத்திரத்தில், 'தற்போது, நான் வாங்கும் லைசென்சை தவறாக பயன்படுத்த மாட்டேன். இதில், நடக்கும் தவறுக்கு நானே பொறுப்பு' என்று எழுதி கொடுக்க வேண்டும். பின், 10 நாட்களில், புதிய டிரைவிங் லைசென்ஸ் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
தமிழக முற்போக்கு நுகர்வோர் மைய தலைவர், சடகோபன் கூறுகையில், ''ஒரிஜினல் டிரைவிங் லைசென்ஸ், தொலைந்து விடும் பட்சத்தில், இணைய தளத்தில் எளிதாக பெற, அரசு வழிவகை செய்ய வேண்டும். இல்லை யென்றால், வாகன ஓட்டிகள் அனைவரும், ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், பல நாட்கள் காத்திருக்கும் நிலையும், அவர்கள், 'கேட்பதை' கொடுக்க வேண்டிய நிலையும் வரும்,'' என்றார்.
போக்குவரத்து போலீஸ் உயரதிகாரிகள் கூறுகையில், 'போக்குவரத்து போலீசார், ஒரிஜினல் லைசென்சை பறிமுதல் செய்து, அதிகளவில் பணம் கேட்பர் என, பொது மக்கள் அச்சப்பட வேண்டாம். அதுபோன்ற செயல் களில் ஈடுபடும் போலீசார் மீது, நடவடிக்கை எடுக்க, டி.ஜி.பி., உத்தரவிட்டுள்ளார்' என்றனர்.
நன்றி : தினமலர் நாளிதழ் -26.08.2017
அசல் உரிமம் இல்லாவிட்டால் 3 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும்! அல்லது ரூ500 அபராதம் விதிக்கப்படும் என சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை தெரிவித்துள்ளது. 
நன்றி : தினமலர் நாளிதழ் -29.08.2017