disalbe Right click

Showing posts with label Cr.P.C. Show all posts
Showing posts with label Cr.P.C. Show all posts

Friday, May 19, 2017

Cr.P.C:155(4) கைது பற்றி என்ன சொல்கிறது?

Cr.P.C:155(4) கைது பற்றி என்ன சொல்கிறது?
நம்முடைய நாட்டில் மற்றவற்றிற்கு குறை இருக்கலாம். ஆனால், குற்றங்களுக்கு குறைவே இல்லை. ஏதோ ஒரு குற்றம் செய்திருக்கிறார் என்று ஒருவரை விசாரணை செய்ய காவல்துறை அணுகினால், அவர் பல குற்றங்கள் செய்துள்ளது விசாரணை மூலம் தெரிய வருவதை, நாம் அடிக்கடி ஊடகங்களின் வாயிலாக கண்டு வருகிறோம். 
அது போன்ற ஒரு நபர் மீது முதல் தகவல் அறிக்கை போடப்படுகிறது. அவர் செய்த குற்றங்கள் வரிசைப்படுத்தப்படுகின்றது. அந்த நபர் கைது செய்யப்பட வேண்டியதல்லாத குற்றத்தையும்,  கைது செய்யப்பட வேண்டிய குற்றத்தையும், புரிந்திருக்கிறார். அவரை கைது செய்யலாமா? வேண்டாமா? என்ற கேள்வி எழுகின்ற போது, குற்றவியல் விசாரணை முறைச் சட்டம் - 1973, பிரிவு - 155(4) நமக்கு  வழி காட்டுகிறது. 
அதில் என்ன சொல்லப்பட்டுள்ளது என்றால், ஒரு வழக்கு இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட குற்றங்களைப் பற்றியதாக இருந்து, அவற்றில் குறைந்தது ஒன்றாவது கைது செய்யப்படக் கூடிய இருந்தால், அந்த வழக்குக்கு உட்பட்டவரை காவல்துறையினர் கைது செய்யலாம்.
*********************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி   

Wednesday, April 26, 2017

குற்ற விசாரணை முறைச் சட்டம், பிரிவு-280

குற்ற விசாரணை முறைச் சட்டம், பிரிவு-280
ஒரு நாள் குற்றவியல் நீதிமன்றம் ஒன்றில் கொலை வழக்கு பற்றிய விசாரணை நடந்து கொண்டிருந்தது. கொலை செய்ததாக குற்றவாளிக் கூண்டில் ஒருவரை நிற்க வைத்து விசாரித்துக் கொண்டிருந்தார்கள்.  ஆனால், கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படுகின்றவரின் பிரேதம் கைப்பற்றப்படவில்லை. 
எதிரியின் வழக்கறிஞர் முன் வைத்த வாதம்
குற்றஞ்சாட்டப்பட்டவரின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர், தனது வாதங்களை கோர்ட்டார் முன் வைத்துக் கொண்டிருந்தார். திடீரென்று அவர், ”எனது கட்சிக்காரர் கொலைகாரர் அல்ல, அவரால் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படுகின்றவர் இன்னும் கொஞ்ச நேரத்தில் உயிரோடு இங்கு வரப்போகிறார், பாருங்கள்!” என்று கூறினார். அதனைக் கேட்ட பார்வையாளர்கள் எல்லோரும் வாசலையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். 
ஆனால், யாரும் வரவில்லை.
சற்று நேரம் கழித்து, அந்த வழக்கறிஞர், எனது கட்சிக்காரரால், கொலை செய்ததாக கூறப்படுகின்றவர்  இன்னும் சற்று நேரத்தில் வரப்போவதாக நான் கூறியபோது எல்லோரும் சந்தேகத்துடன் வாசலையே பார்த்தார்கள். அதனால், அந்த சந்தேகத்தின் பலனை எனது கட்சிக்காரருக்கு வழங்கி விடுதலை செய்ய வேண்டும் என்று தனது வாதத்தை முடித்தார்.
நீதிபதி எழுதிய தீர்ப்பு
நீதிபதி தனது தீர்ப்பில், குற்றஞ்சாட்டப்பட்டவரை, கொலைகாரன் என்று தீர்மானித்து தீர்ப்பு எழுதினார். 
Image result for குற்றவாளி
என்ன காரணத்தினால், எனது கட்சிக்காரருக்கு தண்டணை வழங்கினீர்கள்? என்று வழக்கறிஞர் நீதிபதியிடம் கேட்டபோது,  கொலை செய்யப்பட்டவர் உயிரோடு இங்கு வரப்போகிறார் என்று நீங்கள் கூறியபோது, எல்லோரும் வாசலை பார்த்தார்கள் என்பது உண்மைதான். ஆனால், குற்றஞ்சாட்டப்பட்டவர் வாசலை பார்க்கவில்லை. தன்னால் கொலை செய்யப்பட்டவர் உயிரோடு எப்படி இங்கு வரமுடியும்? என்ற நம்பிக்கையில் அவர் தலை குனிந்து கொண்டு நின்றார். அதனால்தான், அவரை குற்றவாளி என்று தீர்மானித்தேன் என்றார்.
CrPc-280
குற்ற விசாரணை முறைச் சட்டம், பிரிவு - 280ல் ஒரு வழக்கை விசாரிக்கும் நீதிபதி, ”தரப்பினரின் வாக்குமூலத்தை பதிவு செய்யும் போது, அவர்களது முகக்குறிப்பையும் பதிவு செய்ய வேண்டும்!” என்று குறிப்பிடப் பட்டுள்ளது. 

*************************அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 26.04.2017

Monday, April 24, 2017

குற்றவியல் வழக்குகள்

குற்றவியல் வழக்குகள்
குற்றவியல் வழக்குகளானது
1. அழைப்பாணை வழக்கு என்ற Summons Case 
2.பிடிகட்டளை வழக்கு என்ற Warrant Case 
3. சிறு குற்ற வழக்கு என்ற Petty Case 
என்று மூன்றுவிதமாக பிரிக்கப்பட்டுள்ளது.
1.அழைப்பாணை வழக்கு (Summons Case) 
குற்ற விசாரனை முறைச் சட்டம் பிரிவு 2 (W)ன் படி அதிகபட்சமாக இரண்டு ஆண்டுகள் வரை தண்டணை வழங்கப்படுகின்ற (பிடிகட்டளை அல்லாத) வழக்குகளை அழைப்பாணை வழக்குகள் என்கிறோம்.
2.பிடிகட்டளை வழக்கு (Warrant Case )
குற்ற விசாரனை முறைச் சட்டம் பிரிவு 2 (X)ன் ப்டி, மரண தண்டணை அல்லது ஆயுள் தண்டணை அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு மேற்பட்ட தண்டணை வழங்கப்படுகின்ற வழக்குகளை அழைப்பாணை வழக்குகள் என்கிறோம்.
3.சிறு குற்ற வழக்குகள் (Petty Case )
குற்ற விசாரனை முறைச் சட்டம் பிரிவு 206(2)ன் படி 1000 ரூபாய்க்கு மேற்படாத அபராதம் மட்டுமே விதித்து தண்டிப்பதற்குரிய குற்றங்களைப் பொறுத்த ஒரு வழக்கு சிறு குற்ற வழக்கு ஆகும்.
அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 25.04.2017

Friday, January 27, 2017

குற்றவியல் வழக்குகளில் அதிகபட்ச தண்டணை

குற்றவியல் வழக்குகளில் அதிகபட்ச தண்டணை

J.M COURT (இரண்டாம் நிலை) : ஒரு வருட கால அளவிற்கு சிறை தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் வரை அபராதம் விதிக்க முடியும்.
➤ J.M COURT (முதல் நிலை) : 3 வருடம் வரை ஒரு கால அளவிற்கு சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்க முடியும்.
➤  SUB DIVISIONAL JUDICIAL MAGISTRATE COURT : 3 வருடம் வரை ஒரு கால அளவிற்கு சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்க முடியும்.
 METROPOLITAN MAGISTRATE COURT : 3 வருடம் வரை ஒரு கால அளவிற்கு சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்க முடியும்.
 SPECIAL METROPOLITAN MAGISTRATE COURT : 3 வருடம் வரை ஒரு கால அளவிற்கு சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்க முடியும்.
 CHIEF JUDICIAL MAGISTRATE COURT : 7 வருடம் வரை ஒரு கால அளவிற்கு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்க முடியும்.
 CHIEF METROPOLITAN MAGISTRATE COURT : 7 வருடம் வரை ஒரு கால அளவிற்கு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்க முடியும்.
 ADDITIONAL SESSIONS COURT : 10 வருடம் வரை ஒரு கால அளவிற்கு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்க முடியும்.
 SESSIONS COURT : ஆயுள் கால சிறைத் தண்டனை அல்லது 10 வருடம் வரை ஒரு கால அளவிற்கு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்க முடியும்.
 MAHILA COURT : ஆயுள் கால சிறைத் தண்டனை அல்லது 10 வருடம் வரை ஒரு கால அளவிற்கு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்க முடியும்.
 SPECIAL COURT : மரண தண்டனை அல்லது ஆயுள் கால சிறைத் தண்டனை அல்லது ஒரு குறிப்பிட்ட கால அளவிற்கு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்க முடியும்.
 HIGH COURT : மரண தண்டனை அல்லது ஆயுள் கால சிறைத் தண்டனை அல்லது ஒரு குறிப்பிட்ட கால அளவிற்கு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்க முடியும்.
 SUPREME COURT : மரண தண்டனை அல்லது ஆயுள் கால சிறைத் தண்டனை அல்லது ஒரு குறிப்பிட்ட கால அளவிற்கு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்க முடியும்.
 district &sessions court can impose DEATH SENTENCE WITH THE CONFORMATION OF TWO HIGH COURT JUDGES

Tuesday, October 4, 2016

குற்ற விசாரணைச் சட்டம், பிரிவு 164


Cr.P.C. section : 164 - என்ன செய்ய வேண்டும்?

குற்றஞ்சாட்டப்பட்டவரிடம் இருந்து ஒப்புதல் வாங்க முற்படுகின்ற போது நடுவரானவர், குற்ற விசாரணைச் சட்டம், பிரிவு 164ன்படி, குற்றஞ்சாட்டப்பட்டவரிடம் கீழ்கண்டவற்றை தெரிவிக்க வேண்டும்.
# தாங்கள் என்னிடத்தில் ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்க கட்டுப்பட்டவர் அல்ல.
# தாங்கள் கொடுக்கின்ற ஒப்புதல் வாக்குமூலமானது தங்களுக்கு எதிராக சாட்சியமாக பயன்படுத்தக்கூடியது.
மேலும், யாருடைய வற்புறுத்தலுமின்றி ஷை ஒப்புதல் வாக்குமூலமானது குற்றஞ்சாட்டப்பட்டவரால் தன்னிச்சையாகவே கொடுக்கப்பட்டுள்ளது என்பதையும் மேற்கண்ட விஷயங்களை தன்முன்னால் குற்றஞ் சாட்டப்பட்டவருக்கு படித்துக் கட்டப்பட்டு அவரால் ஒத்துக் கொள்ளப்பட்டது என்பதையும் நடுவர் ஷை வாக்குமூலத்தின் அடியில் குறிப்பிட வேண்டும்.

Friday, July 29, 2016

குற்றவியல் வழக்குகளில் தண்டணை


குற்றவியல் வழக்குகளில் தண்டணை- நீதிமன்றங்களின் அதிகாரம்
என்ன செய்ய வேண்டும்?

* J.M COURT (இரண்டாம் நிலை) : ஒரு வருட கால அளவிற்கு சிறை தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் வரை அபராதம் விதிக்க முடியும்.

*J.M COURT (முதல் நிலை) : 3 வருடம் வரை ஒரு கால அளவிற்கு சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்க முடியும்.

* SUB DIVISIONAL JUDICIAL MAGISTRATE COURT : 3 வருடம் வரை ஒரு கால அளவிற்கு சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்க முடியும்.

* METROPOLITAN MAGISTRATE COURT : 3 வருடம் வரை ஒரு கால அளவிற்கு சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்க முடியும்.

* SPECIAL METROPOLITAN MAGISTRATE COURT : 3 வருடம் வரை ஒரு கால அளவிற்கு சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்க முடியும்.

* CHIEF JUDICIAL MAGISTRATE COURT : 7 வருடம் வரை ஒரு கால அளவிற்கு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்க முடியும்.

* CHIEF METROPOLITAN MAGISTRATE COURT : 7 வருடம் வரை ஒரு கால அளவிற்கு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்க முடியும்.

* ADDITIONAL SESSIONS COURT : 10 வருடம் வரை ஒரு கால அளவிற்கு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்க முடியும்.

* SESSIONS COURT : ஆயுள் கால சிறைத் தண்டனை அல்லது 10 வருடம் வரை ஒரு கால அளவிற்கு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்க முடியும்.

* MAHILA COURT : ஆயுள் கால சிறைத் தண்டனை அல்லது 10 வருடம் வரை ஒரு கால அளவிற்கு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்க முடியும்.

* SPECIAL COURT : மரண தண்டனை அல்லது ஆயுள் கால சிறைத் தண்டனை அல்லது ஒரு குறிப்பிட்ட கால அளவிற்கு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்க முடியும்.

* HIGH COURT : மரண தண்டனை அல்லது ஆயுள் கால சிறைத் தண்டனை அல்லது ஒரு குறிப்பிட்ட கால அளவிற்கு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்க முடியும்.

* SUPREME COURT : மரண தண்டனை அல்லது ஆயுள் கால சிறைத் தண்டனை அல்லது ஒரு குறிப்பிட்ட கால அளவிற்கு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்க முடியும்.

* district &sessions court can impose DEATH SENTENCE WITH THE CONFORMATION OF TWO HIGH COURT JUDGES.

நன்றி ;  திரு T.S.ARUN KUMAR - 29.07.2016

Thursday, July 28, 2016

புகார் பற்றிய புலனாய்வு அறிக்கை பெற


புகார் பற்றிய புலனாய்வு அறிக்கை பெற என்ன செய்ய வேண்டும்?

நாம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்மீது, காவல் நிலைய அதிகாரி உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை எழுத்து மூலமாக அவர்களிடம் இருந்து பெற்றுக் கொள்ள வேண்டும்.

அவ்வாறு பெற்றுக் கொண்டால்தான் அதனை நீதிமன்றத்தில் நாம் சமர்ப்பித்து காவல் நிலையத்தில் புகார் செய்ததையும், அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதையும் நிரூபிக்க முடியும். அதன்மூலம் காவல் அதிகாரியின் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கவும் முடியும்.

இதற்கு என்ன செய்ய வேண்டும்?

பொதுவாக புகார் அளித்த நம்மிடம் வாய்மொழியாக உங்கள் புகார்மீது முதல் தகவல் அறிக்கை பதிய வழியில்லை என்று சொல்லி, காவல்நிலைய அதிகாரி  நாம் அளித்த புகாரை “குளோஸ்” செய்து விடுவார். ஆனால், அவர் புகார் அளித்தவரிடம் புகாரின்மீது நடவடிக்கை ஏன் எடுக்கவில்லை என்ற காரணத்தை அறிவிக்க வேண்டும் என்று சட்டம் சொல்கிறது.

Cr.P.C. பிரிவு : 157 - 2 (ஆ)

அவர் அந்தப் புகார் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? என்பதற்கான காரணத்தை  புகார் அளித்தவரிடம் அறிவிக்க வேண்டும் என்று குற்ற விசாரணை முறைச் சட்டம், பிரிவு 157 - 2(ஆ)வில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதனை தங்கள் மனுவில் குறிப்பிட்டு, புகார் மீது நடவடிக்கை எடுக்காத காரணத்தை எழுத்து மூலம் காவல் நிலைய அதிகாரியிடம் இருந்து பெற்றுக் கொள்ளலாம். 

இந்திய சாட்சியச் சட்டம், 1872 - பிரிவு 76

புகாரின்மீது நடவடிக்கை ஏன் எடுக்கவில்லை என்ற அறிக்கையின் நகலை தனது மேலதிகாரிக்கு எழுத்து மூலம்  காவல் நிலைய அதிகாரி தெரிவிக்க வேண்டும். 
அந்த அறிக்கையின் நகலை மனுதாரர் காவல்நிலைய அதிகாரி அவர்களிடம் இருந்து இந்திய சாட்சியச் சட்டம், 1872 - பிரிவு 76ன் கீழும் பெற்றுக் கொள்ளலாம்.

அந்த புகார் சம்பந்தமாக நீதிமன்றத்தில் சென்று முறையிடும் போது மேற்கண்டவாறு பெற்ற ஆவணங்கள் புகார்தாரருக்கு கண்டிப்பாக உதவும்.

Tuesday, July 5, 2016

குற்ற விசாரணை முறைச் சட்டம் பிரிவு-155,

குற்ற விசாரணை முறைச் சட்டம் பிரிவு-155,
சட்டம் வகுத்தவர்கள் நமது நாட்டில் நடைபெறும் குற்றங்களை இரண்டு பிரிவுகளாக பிரித்து வைத்துள்ளனர்.
1) கைது செய்வதற்குரிய குற்றம். (Cognizable offence)
2) கைது செய்ய முடியாத குற்றம். (Non cognizable offence)
கைது செய்தற்குரிய குற்றங்களை செய்தவர்கள் பற்றிய புகாரை நாம், காவல்துறையினருக்கு குற்ற விசாரணை முறைச் சட்டம், பிரிவு - 154 மூலம் தெரிவிக்க வேண்டும். நாம் எழுதும் புகாரின் தலைப்பிலேயே இதனை தெரிவித்தால் புகாரைப்பற்றி எடுத்த எடுப்பிலேயே புரிந்து கொள்ள காவல்துறை அலுவலருக்கு உதவியாக இருக்கும்.
கைது செய்ய முடியாத குற்றங்களைப் பற்றி புகார் செய்வதற்கும், வழக்குத் தொடுப்பதற்கும் குற்ற விசாரணைச் சட்டம் பிரிவு - 155 பயன்படுத்துகிறார்கள்.
குற்ற விசாரணை முறைச் சட்டம் - 1973, (Cr. P.C) பிரிவு : 154
*** ஒரு காவல்நிலைய எல்லைக்குள் கைது செய்ய முடியாத குற்றம் ஒன்று நடைபெற்று உள்ளதாக ஒருவர் புகார் அளிக்கும் போது, அதற்கென்று காவல் நிலையத்தில் வைத்து பராமரித்து வருகின்ற குறிப்பேட்டில் அதனை பதிவு செய்து அந்த வழக்கை நீதிமன்றத்திற்கு அனுப்ப வேண்டும். புகார் அளித்தவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும்.
*** கைது செய்ய முடியாத வழக்கு ஒன்றை காவல் நிலைய அலுவலராலோ அல்லது காவல்நிலைய அதிகாரியாலோ தன்னிச்சையாக விசாரணை செய்வதற்கும், மேல்விசாரணைக்கு அனுப்புவதற்கும் முடியாது.
*** அதே நேரத்தில் நீதிமன்ற உத்தரவு வழங்கப்பட்டு இருந்தால், காவல் நிலைய அலுவலர்/அதிகாரி அந்த வழக்கை விசாரணை செய்யலாம்.
*** நீதிமன்ற உத்தரவு பெற்ற பிறகு காவல்நிலைய அலுவலர்/அதிகாரி அந்த வழக்கில், ”கைது செய்வதற்குரிய வழக்கில் உள்ள அதிகாரங்களில்கைது செய்வதைத் தவிர அனைத்து அதிகாரங்களையும் கொண்டிருப்பார்.
குற்ற விசாரணை முறைச் சட்டம் - 1973, (Cr. P.C) பிரிவு : 154 (4)
*** ஒரு வழக்கில் இரண்டு அல்லது இரண்டுக்கும் மேற்பட்ட குற்றங்கள் செய்யப்பட்டு இருந்து அதில் ஏதாவது ஒன்று கைது செய்யக்கூடிய குற்றமாக இருந்தால், அந்த வழக்கு கைது செய்யப்படக் கூடிய வழக்காக எடுத்துக் கொள்ளப்படும்.

குற்ற விசாரணைச் சட்டம் பிரிவு-160

குற்ற விசாரணைச் சட்டம் பிரிவு-160, என்ன செய்ய வேண்டும்?
அழைத்து விசாரணை செய்வதற்குள்ள அதிகாரம்
ஏதாவது ஒரு காரணத்திற்காக நம்மை அழைத்து விசாரிப்பதற்கு காவல் நிலைய அலுவலர் அல்லது அதிகாரிக்கு கொடுக்கப் பட்டுள்ள அதிகாரம் என்ன? நமக்கு கொடுக்கப்பட்டுள்ள உரிமைகள் என்ன?  என்பதைப் பற்றி இந்தப் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
காவல்நிலையத்தில் யாரோ ஒருவரால் கொடுக்கப்பட்ட புகார் மூலமாகவோ, அல்லது ஒரு வழக்கு நிகழ்வு மற்றும் சூழ்நிலைகளுடன் தொடர்பு உள்ளவர் போல் நாம் இருந்து, காவல்நிலைய அதிகார எல்லைக்குட்பட்ட பகுதியில் நாம் குடியிருந்தால், நம்மை தன்முன் ஆஜராகுமாறு அந்த வழக்கு சம்பந்தமாக புலனாய்வு செய்து வருகின்ற காவல் நிலைய அலுவலர் அல்லது அதிகாரி எழுத்து முலமாக நமக்கு உத்தரவிடலாம்.
xxxxx என்பவர் xxxxx அன்று கொடுத்த புகாரின்படி தங்களிடம் (xxxxx வழக்கு சம்பந்தமாக தங்களை) விசாரணை செய்ய வேண்டியதிருப்பதால் தாங்கள் xxxxx அன்று காலை (அல்லது மாலை) xxxxx மணிக்கு xxxxx காவல்நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்று அந்த உத்தரவு எழுத்து மூலமாக இருக்க வேண்டும்.
அதில் நிலைய முத்திரையுடன் அதிகாரியின் கையெழுத்தும் இருக்கவேண்டும்.
அழைக்கப்பட்ட எவரும் கண்டிப்பாக விசாரணைக்கு ஆஜராக வேண்டும்.
அந்த வழக்குக்கு உரிய ஆவணங்கள் ஏதேனும் நம்மிடமிருந்தாலோ அல்லது இருக்கிறது என்று அவர்கள் நினைத்தாலோ, அதனை ஆய்வு செய்ய வேண்டும் என்று அந்த காவல்துறை அதிகாரி விரும்பினால் அதனை கொண்டுவரும்படியும் அதில் குறிப்பிட வேண்டும்.

அந்த புகார் அல்லது வழக்கு சம்பந்தமாக எதனையும் மறைக்காமல் நமக்கு தெரிந்த அனைத்தையும் அவரிடம் தெரிவிப்பது மற்றும் ஆதாரங்கள் இருந்தால் அவற்றை ஒப்படைப்பது நமது கடமையாகும்.
ஆனால், ஒரு பெண்ணையோ அல்லது பதினைந்து வயதுக்குட்பட்ட ஒரு சிறுவனையோ அந்த புகார் அல்லது வழக்கு சம்பந்தமாக விசாரணை செய்வதாக இருந்தால் அவர்கள் குடியிருக்கும் இடத்திற்கு சென்றுதான் ஒரு காவல் அதிகாரி விசாரணை செய்ய வேண்டும்.
ஒருவேளை நாம் அந்த காவல்நிலைய அதிகார எல்லைக்குள் வசிக்காதவராக இருந்து நம்மை அவர்கள் விசாரணைக்கு அழைத்தால், நமக்கு ஏற்படுகின்ற நியாயமான போக்குவரத்து செலவை இந்தப் பிரிவின் கீழ் காவல்துறையினர் கொடுக்க வேண்டும்.
ஆனால், இந்தப்பிரிவில் உள்ளது போல எந்த காவல்நிலைய அலுவலரும் 100% நடந்து கொள்வதில்லை. அதனை அரசும் ஏனோ கண்டுகொள்ளவதில்லை.
பொதுமக்களும் சட்டம் தெரியாததாலும், பயத்தாலும் இதனை வற்புறுத்துவதில்லை.
****************************************  அன்புடன் செல்வம் பழனிச்சாமி