disalbe Right click

Monday, April 6, 2015

ஆன்லைனில் வேலைவாய்ப்பை பதிவு செய்ய


ஆன்லைனில் வேலைவாய்ப்பை பதிவு செய்வது எப்படி?
***********************************************************************

தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களும் கணினி மயமாக்கப்பட்டு ஆன்லைனில் இணைக்கப்பட்டுள்ளன. முதுகலை பட்டப்படிப்புகள், பொறியியல், மருத்துவம், உயர் தொழில்நுட்ப கல்வித்தகுதிகளை பதிவு செய்ய ஆன்லைன் பதிவு முறை 2001-ல் முதல் கொண்டுவரப்பட்டாலும், தற்போதுதான் முழுமையான நடைமுறைக்கு வந்துள்ளது எனலாம்.

மாநிலம் முழுவதும் பதிவு செய்துள்ள அனைத்து கல்வித்தகுதிகளையும் கொண்ட பதிவுதாரர்களை இணைக்
கும் புதிய ஆன்லைன் சாப்ட்வேர் "சுசி லினக்ஸ்” என்ற பெயரைக்கொண்ட இப்புதிய சாப்ட்வேரை எல்காட் நிறுவனம் உருவாக்கி கொடுத்துள்ளது.

தமிழகத்தில் இதுவரை வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கு நேரில் சென்றுதான் கல்வித் தகுதியைப் பதிவு செய்ய முடியும் என்ற நிலை மாறி, தற்போது அனைத்துப் பணிகளையும் வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் பதிவு செய்து கொள்ள முடியும். ஏற்கெனவே வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவர்கள், இந்த இணைய தளத்தில் தங்களது பதிவு எண்ணை உள்ளிட்டு தங்களது கல்வி விவரங்களை சரிபார்த்துக் கொள்ளவும் முடியும்.


புதியதாக ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி?

*********************************************************************
புதியதாக ஆன்லைனில் பதிவு செய்ய குடும்ப அட்டை, சாதி சான்றிதழ், பத்தாம் வகுப்பு அல்லது பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழை கண்டிப்பாக கையில் வைத்திருக்க வேண்டும்.

முதலில் www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதள முகவரிக்கு சென்றால் 







அங்கு  click here for new user ID registration என்று இருக்கும்.

அதை கிளிக் செய்தால் 

Welcome to the DEPARTMENT OF EMPLOYMENT AND TRAINING JOB PORTAL.
FOR THE KIND ATTENTION OF THE REGISTRANTS
1. Candidates accessing the Online Employment Registration portal are informed to furnish correct and complete information regarding their personal profile and Educational Qualifications.

2. Accuracy in providing information is very essential .Candidates furnishing false or incorrect information, are liable for cancellation of their registration with our prior notice.

3. Even if any one of the information furnished is found to be false, the entire Registration stands cancelled and the candidate looses his/her seniority.

4. The onus of verification of the documents lies with the employer. If the employer on verifying the data finds any discrepancy in the details furnished, the appointment for the particular vacancy shall be cancelled along with the cancellation of the registration at the employment office.

I declare that the information provided by me shall be true to the best of my knowledge. If any of the information furnished is found to be false, my registration shall be cancelled. I accept the above terms and conditions for registration.

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்ச்சிதுறை இணையம் தங்களை வரவேற்கிறது 

பதிவர்களின் கனிவான கவனத்திற்கு ,

1.
இவ்விணையதளத்தில் பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் தங்களது தனிப்பட்ட விவரங்கள் மற்றும் கல்வித்தகுதி விவரங்களை சரியாகவும் முழுமையாகவும் உள்ளீடு செய்யத் தெரிவிக்கபடுகிறார்கள்.

2.
துல்லியமாக விவரங்களை அளிப்பது மிக முக்கியமானதாகும்.தவறான மற்றும் சரியற்ற விவரங்களை அளிப்பது விண்ணப்பதாரர்களின் பதிவு இரத்து ஆக வழி வகுக்கும்.

3.
எந்த ஒரு விவரமும் பொய்யானதாக, அறியப்பட்டால் பதிவுதாரரின் பதிவு எவ்வித முன்னறிவுப்புமின்றி ரத்து செய்யப்படும்.

4.
பதிவகர்கள் சான்றிதழின் உண்மைத்தன்மை அறிவது வேலை அளிப்போரின் முழுபொறுப்பாகும். பதிவர்கள் தவறான விவரங்கள் அளித்திருப்பது தெரியவந்தால், அவர்களின் பணி நியமனம் ரத்து செய்யப்படுவதுடன், வேலைவாய்ப்பு அலுவலகபதிவும் ரத்து செய்யப்படும்.

நான் இங்கு கொடுத்துள்ள விவரங்கள், என் அறிவுக்கு தெறிந்து உண்மையானது என்று அறிவிக்கிறேன். கொடுத்துள்ள விவரங்களில், ஏதேனும் தவறானது என கண்டறியப்பட்டால், எனது பதிவு ரத்து செய்யப்படலாம். நான் மேலே கொடுக்கப்பட்டவேலைவாய்ப்பு பதிவிற்கான கட்டளைகளை ஒப்புக்கொள்கிறேன்.


ஒரு விண்டோ ஓபன் ஆகும். 

அதில் I agree என்று கிளிக் செய்தால் அடுத்து வரும் பக்கத்தில் 









பதிவு செய்யும் விண்ணப்பதாரரின் பெயர், ஈமெயில் முகவரி, user id என்ற இடத்தில் புதியதாக ஒரு ID கொடுக்கவும், பின்பு அப்பா பெயர், பிறந்த தேதி, குடும்ப அட்டை எண்ணையும் Image Code என்ற இடத்தில் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் codeஐ கொடுத்து Save செய்தால் உங்களுகென்று ஒரு ID Create ஆகி விடும். 




அடுத்து வரும் பக்கத்தில உங்களது Personal detail, Contact detail, Qualification detail, Technical detail ஆகியவற்றை பூர்த்தி செய்து Save செய்தால் உங்களது Register Number Create ஆகிவிடும்.
கவனிக்க 1: 
Qualification detail பூர்த்தி செய்தவுடன் add என்று பட்டன் இருக்கும் அதை கிளிக் செய்தால் ஒரு சின்ன விண்டோ ஓபன் ஆகும் அதில் கிளிக் செய்து Save கொடுக்கவும். இதே போன்று Technical Detail-ம் செய்ய வேண்டும்.

கவனிக்க 2:
மேலே சொன்ன அனைத்தும் முடிவடைந்தவுடன் Home பகுதிக்கு சென்று பார்த்தால் Print ID Card என்று இருக்கும் அதை கிளிக் செய்து பிரிண்ட் எடுத்து கொள்ளலாம்.

கவனிக்க 3:
ஏதேனும் தவறாக செய்திருந்தால் Home பகுதியில் Modify Contact பகுதிக்கு சென்று மாற்றி கொள்ளலாம்.

கவனிக்க 4:
Update Profile-ல் சென்று Renewal செய்து கொள்ளலாம்.





Renewal செய்வதற்கான விவரம்: 

**********************************************
உதாரணத்திற்கு Register Number இப்படித்தான் இருக்கும்.

Register Number : ARD2012M00007502

வேலைவாய்ப்பு அலுலகத்தின் குறியீட்டு எண்: CUD - என்பது (வேலைவாய்ப்பு அலுவலகம், கடலூர்)

பதிவு செய்த ஆண்டு: 2010

ஆண் / பெண் : M/F

பதிவு எண்: 7802

பதிவு எண் என்பது 8 இலக்க எண்ணாக இருத்தல் வேண்டும், அப்படி இல்லாமல் 4 இலக்க எண்ணாக இருந்தால் முன்னதாக 4 பூஜ்ஜியங்களை சேர்த்துக்கொள்ளவும்.

User ID: ARD2012M00007502

Password: dd / mm / yyyy

கடவு சொல்லில் உங்களது பிறந்த தேதியை கொடுக்கவும்.

அவ்வளவு தான் நண்பர்களே.. இனி கால விரையமுமின்றி வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் பதிவு செய்து பயனடையுங்கள்.


மாவட்ட வேலைவாய்ப்பு அலுவக குறியீட்டு எண்கள்:

*****************************************************************************
1. ARD - District Employment Office-Ariyalur

2. CBD - District Employment Office-Coimbatore

3. CBR - Office of the Regional Deputy Director (Employment)-Coimbatore

4. CDC - Coaching-cum-Guidance Centre for SC/ST-Coimbatore

5. CHD - District Employment Office-Chennai CHG Head Office-Chennai

6. CHP - Professional and Executive Employment Office-Chennai

7. CHR - Regional Deputy Director Office-Chennai

8. CHS - District Employment Office Special Employment Office for Physically Handicapped-Chennai

9. CHT - District Employment Office(Technical Personnel).-Chennai

10. CHU - District Employment Office (Unskilled)-Chennai

11. CUC - Coaching-cum-Guidance centre for SC/ST-Cuddalore

12. CUD - District Employment Office-Cuddalore

13. DGD - District Employment Office-Dindigul

14. DRD - District Employment Office-Dharmapuri

15. ERD - District Employment Office-Erode

16. KGD - District Employment Office-Krishnagiri

17. KPD - District Employment Office-Kancheepuram

18. KRD - District Employment Office-Karur

19. MDD - District Employment Office-Madurai

20. MDP - Professional and Executive Employment Branch Office-Madurai

21. MDR - The Regional Deputy Director (Employment) Office-Madurai

22. NGD - District Employment Office-Kanyakumari

23. NKD - District Employment Office-Namakkal

24. NPD - District Employment Office-Nagapattinam

25. PDD - District Employment Office-Pudukottai

26. PRD - District Employment Office -Perambalur

27. RPD - District Employment Office-Ramanathapuram

28. SGD - District Employment Office-Sivaganga

29. SLD - District Employment Office-Salem

30. TCC - Coaching-cum-Guidance centre -Trichy

31. TCD - District Employment Office-Trichy

32. TCR - The Regional Deputy Director (Employment)-Trichy

33. THD - District Employment Office-Theni

34. TJD - District Employment Office-Thanjavur

35. TMD - District Employment Office-Thiruvannamalai

36. TNC - Coaching-cum-Guidance Centre-Thirunelveli

37. TND - District Employment Office-Thirunelveli

38. TPD - District Employment Office-Tiruppur

39. TRD - District Employment Office-Thiruvarur

40. TTD - District Employment Office-Tuticorin

41. TVD - District Employment Office-Thiruvallur

42. UGD - District Employment Office-Nilgiris

43. UGV - Special Vocational Guidance Centre for SC/ST-Nilgiris

44. VLC - Coaching-cum-Guidance Centre for SC/ST-Vellore

45. VLD - District Employment Office-Vellore

46. VPD - District Employment Office-Villupuram

47. VRD - District Employment Office-Virudhunagar

நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 1986


நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 1986
**************************************************

இச்சட்டம் 1986 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 24 ம் தேதியன்று அமுலுக்கு வந்தது.

ஏற்கனவே அமுலில் உள்ள சட்டத்தின் மூலம் நிவாரணம் பெற வாய்ப்பு இருந்தும் தனியாக ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டதின் அடிப்படை நோக்கமே - எளிய முறையில், குறுகிய காலத்தில், செலவில்லாமல் நிவாரணம் பெற வேண்டும் என்பதே. 

சாதாரமாக, நுகர்வோர் வழக்குகள் பதிவு செய்யப்படும் பொழுது அது சிவில் வழக்காக மாறிவிடும். இதனால் வழக்கு, நீதிமன்ற நடைமுறைப்படியே நடை பெற்வதால் காலதாமதம் ஏற்படுவதுடன், பெரும் செலவும் ஏற்படும். பெரும் தொகை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உள்ளவர்கள் ஒரு சிலர் தவிர மற்றவர்கள் நீதி மன்றத்தை அணுகுவது இல்லை. இச்சட்டத்தின் மூலம் இந்த குறைபாடுகள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளது. இனி அது பற்றி பார்க்கலாம்.

நுகர்வோர் நீதிமன்றங்களின் அமைப்பும், செயல்பாடும்:

கீழ் நீதிமன்றம், உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என்று இருப்பதை போலவே இச்சட்டப்படி - மாவட்ட அளவில் " மாவட்ட நுகர்வோர் குறை தீர் மன்றங்கள்", மாநில அளவில் "மாநில ஆணையம்", தேசிய அளவில் " தேசிய ஆணையம்" அமைக்கப்பட்டுள்ளது.

மாவட்ட நுகர்வோர் குறை தீர் மன்றம்:

20 லட்சம் ரூபாய் வரை நஷ்ட ஈடு கோரும் வழக்குகளை, மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் தான் பதிவு செய்ய வேண்டும். நீதிமன்ற கட்டணம் எதுவும் செலுத்தவேண்டியது கிடையாது. இதனால் வழக்கு தொடருவதற்கு தகுதியே இல்லாத பிரச்சனைக்கெல்லாம் வழக்கு தொடர ஆரம்பித்தனர். இதில் எதிர் தரப்பி னரை பிளாக் மெயில் செய்பவர்களும் அடங்கும். இது போன்ற வழக்குகளுக்கு அவர்கள் ஆஜராவது கிடையாது. இதனால் வழக்கு தள்ள்படியாகும் நிலை ஏற் பட்டது. இதனால் தவ்றே செய்யாத எதிர் தரப்பினர்களுக்கு கால விரயம் மற்றும் செலவு ஏற்படுவதையும், நீதிமன்றத்தின் நேரம் வீணாவதையும் கருத்தில் கொண்டு 2006 ம் ஆண்டில் கீழ் கண்டவாறு கட்டணம் நிர்ணயம் செய்ய்ப்பட்டு ள்ளது.


லட்சம் ரூபாய் வரை நஷ்டஈடு கோரும் வழக்குகளுக்கு = 100 /-


1லட்சத்திற்கு மேல் 5 லட்சம் வரை = 200 /-


5 லட்சத்திற்கு மேல் 10 லட்சம் வரை = 400 /-


10 லட்சத்திற்கு மேல் 20 லட்சம் வரை = 500 /-


வழக்கு தொடர தேவையான தகுதிகள்:

1. வழக்கு தொடருபவர் நுகர்வோராக இருக்கவேண்டும். வழக்கு அவர் சம்பந்தப் பட்டதாக் இருக்கவேண்டும்.
2. நுகர்வோர், எந்த நுகர்வோர் குறைதீர் மன்றத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்ட எல்லைக்குள் ( Jurisdiction) இருக்கிறாரோ அதில் தான் வழக்கு தொடரவேண்டும்.
3. புகாருக்கான ஆதாரங்கள் இருக்கவேண்டும்.
4. பிரச்சனை ஏற்பட்டதிலிருந்து 2 வருடங்களுக்குள் வழக்கு தொடர வேண்டும்.

யார் மீது வழக்கு தொடர முடியும்?



1. நமக்கு பொருட்களை விற்பனை செய்பவர்கள் அனைவரும். இதில் தனியார், அரசு நிறுவனம் என்ற பாகுபாடு கிடையாது. அனைவருமே இதில் உட்படுவர்.

உதாரணம்:
மளிகை கடை, டிபார்ட்மெண்டல் ஸ்டோர், பேக்கரி, சைக்கிள் - பைக் - கார் - லாரி விற்பனையாளர், மெடிகல் ஷாப், ரேஷன் கடை போன்றவை.

2. பணம் வாங்கிக்கொண்டு வழங்கப்படும் சேவைகள், தனியார் மற்றும் அரசு துறை நிறுவனங்கள் அனைத்துமே இதில் அடங்கும்.

உதாரணம்:

மின்சார வாரியம், குடிதண்ணீர் சப்ளை, இன்ஸூரன்ஸ் கம்பெனி, வங்கிகள், மருத்துவ மனைகள், கியாஸ் கம்பெனிகள், சப் -ரிஜிஸ்டிரார் அலுவலகம், போன்றவைகள்.

எந்தெந்த துறைகள் எல்லாம் இதில் அடங்கும் என சட்டத்தில் பட்டியலிடப் படவில்லை. காரணம். சேவை என்ற வார்த்தைக்கு முழுமையான விளக்கம் கொடுக்க முடியாது. வார்த்தைக்கான விளக்கம், வழக்குக்கு வழக்கு விரிவடையும் என்பதே உண்மை. உதாரணத்திற்கு சப்-ரிஜிஸ்டிரார் ஆபீஸை எடுத்துக்கொள்ளலாம். இந்த சட்டம் வந்த பின்பு, பலர் இந்த அலுவலகத்தில் அவஸ்தை பட்டு வந்தாலும், இது அரசு அலுவலகம் என நினைத்து விட்டு விட்டனர். பல வருடங்கள் இப்படியே கழிந்தது. 

வில்லங்க சான்றிதழால் வந்த வில்லங்கம்!

ஒரு சில வருடங்களுக்கு முன்பு ஒருவர் ஒரு சொத்து வாங்க முடிவு செய்து, அதற்கு சம்பந்தப்பட்ட சப்- ரிஜிஸ்டிரார் அலுவல்கத்தில் வில்லங்க சர்டிபிகேட்டி க்குரிய கட்டணத்தை செலுத்தி விண்ணப்பம் செய்தார். எந்த வில்லங்கமும் இல்லை என சர்டிபிகேட் கொடுத்து விட்டனர். அதை நம்பி, அவர் அந்த சொத்தை வாங்கி விட்டார். அதன் பின்பு தான் அதில் வில்லங்கம் இருப்பது தெரிய வந்தது. அதனால் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டது. தவறான வில்லங்க சர்டிபிகேட் டிப்பார்ட்மெண்ட் கொடுத்ததினால்த் தான் நஷ்டம் என்றும், வில்லங்க சர்டிபிகேட் வழங்குவது என்பது பணத்தை பெற்றுக்கொண்டு வழங்கப்படும் சேவை என்பதால், நுகர்வோர் பாதுகாப்பு சட்டப்படி குறைபாடான சேவை என்பது அவர் முடிவு. அவர் நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அரசு தரப்பில், நுகர்வோர் பாதுகாப்பு சட்டப்படி தங்கள் மீது வழக்கு தொடர முfடியாது என்றும், சர்டிபிகேட்டில் தவறுகள் இருந்தால் இலாகா பொறுப்பு அல்ல" என குறிப்பிட்டே வழங்கட்டுள்ளதால் தாங்கள் பொறுப்பல்ல என வாதம் செய்தனர். ஆனால் அவர்களின் ஆட்சேபனையை நிராகரித்த் நீதிமன்றம் மனுதாரருக்கு நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட்டது. இது சட்டம் பற்றிய விளக்கம் விரிவடையக் கூடியது என்பதற்கு ஒரு உதாரணம்.

வழக்கு தொடர தேவையான முன் நடவடிக்கைகள்:

உதாரணத்திற்கு நாம் ஒரு கடைக்குப்போய் ஒரு பொருள் வாங்குகிறோம் என்று வைத்துக் கொள்வோம். அதன் பாக்கிங்கில் போடப்பட்ட விலைக்கு அதிகமாக பணம் வாங்கினாலோ, எடை மற்றும் அள்வு குறைவாக இருந்தாலோ அல்லது தரம் குறைவாக இருந்தாலோ உடனடியாக அதைப் பற்றி கடைக்காரரிடம் சுட்டிக்காட்டுங்கள். அவர் தவறை சரி செய்ய மறுத்தால், அவருக்கு நீங்களே " குறைபாடுகளை சுட்டிக்காட்டி அதை சரி செய்யாவிட்டால் நுகர்வோர் வழக்கு தொடரப்படும்" என அத்தாட்சியுடன் கூடிய பதிவு தபாலில் நோட்டீஸ் அனுப்புங் கள். அவருக்கு நோட்டீஸ் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது என்பதற்கான் ஆதாரத்தை நோட்டீஸ் காப்பியுடன் வைத்துக்கொள்ளுங்கள். அதைப் போலவே பொருள் வாங்கியதற்கான ரசீதும் பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

விலை சம்பந்தப்பட்ட பிரச்சனை என்றால்?

விலை அச்சடிக்கப்பட்ட பாக்கிங் கவரை பத்திரமாக வைத்திருங்கள்.

தரம் சம்பந்த பிரச்சனை என்றால்?

அதே பாக்கிங் கவருடன் பொருளை பாக் செய்ய்து வைத்துக்கொள்ளுங்கள்.

எடை சம்பந்தப்பட்ட பிரச்சனை என்றால்?

நீங்கள் பாக்கிங்கை பிரிப்பதற்கு முன்பே எடை குறைவு என்பதை ஊர்ஜிதம் செய்து விட்டு பாக்கிங்கை பிரிக்காமல் இருக்க வேண்டும். ஒரு வேளை பிரித்துவிட்ட பின்பு தான் எடை குறைவை கண்டு பிடித்தீர்கள் என்றால், பிரிக்கப்பட்ட பாக்கிங்கை ஆதாரமாக வைத்து வழக்கு தொடர முடியாது. எனவே மற்படியும் அதே கடைக்கு போய், அதே பொருளை, பில் போட்டு வாங்கிக்கொளுங்கள்.

இப்பொழுது சேவை சம்பந்தப்பட்ட பிரச்சனை என்றால்?
 சேவைக்கான ரசீது இருக்கவேண்டும். முன்பு குறிப்பிட்ட படியே சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்புங்கள். எல்லா அத்தாட்சிகளையும் பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள்.

2007-ல்ஒரு ரூபாய்க்காக ஒரு வழக்கு!
கோயம்புத்தூர் மாவட்ட நுகர்வோர் குறை தீர் மன்றத்தில் திரு. A.S. ரவி எனபவர் தொடர்ந்த வழக்கை பற்றி இப்பொழுது பார்க்கலாம். 

இவர் 22-1-2007 ல் கண்ணன் டிப்பார்ட்மெண்டல் ஸ்டோரில் ஒரு லைன் டெஸ்டர் ( LINE TESTER ) ஒன்றை வாங்கினார். அதன் விலை ரூபாய் 33 /- என கூறி பணத்தை பெற்றுக கொண்டு ள்ளனர். அதற்கான ரசீதும் பெறப்பட்டது. ஆனால் அதன் அட்டை பெட்டியில் " Maximum Retail Price Rs. 32 /- including all taxes ) " என அச்சிடப்பட்டுள்ளதை சுட்டிக் காட்டியும் அதிகப்படியாக வசூலித்த் ஒரு ரூபாயை திருப்பியளிக்கவில்லை

தன்னிடம் அதிகப்படியாக வாங்கிய ஒரு ரூபாயை திருப்பி தருமாறு 31-1-2007 மற்றும் 11-2-2007 ஆகிய தேதிகளில் கடிதங்களை அனுப்பியுள்ளார். மேற்படி கடையினர் ஒரு ரூபாயை திருப்பியளிக்கவும் இல்லை. கடிதத்திற்கு பதிலும் அளிக்கவில்லை.

பாக்கிங்கில் அச்சடிக்கப்பட்டிருக்கும் அதிகபட்ச சில்லரை விலைக்கு அதிகமாக எந்த ஒருபொருளையும் விற்பனை செய்யக்கூடாது என்பது சட்டம்.

இதை கண்காணிக்கும் பொறுப்பு மாநில தொழிலாளர் நலத்துறைக்கு என்பதால், அப்பகுதியிலுள்ள தொழிலாளர் நலத்துறையின் ஆய்வாளருக்கு 22-2-2007 ல் புகார் செய்துள்ளார். அதன் பின் 19-3-2007 ல் நினைவூட்டல் கடிதமும் அனுப்பி யுள்ளார். நடவடிக்கை விபரம் எதுவும் ஆய்வாளரால் தெரியப்படுத்தப்பட வில்லை.

எனவே தொழிலாளர் நலத்துறைக்கு , தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் கோரி விண்ணப்பித்தார். மேற்படி கண்ணன் டிபார்ட் மெண்டல் ஸ்டோரின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு ரூபாய் 1800 /- அபராதம் விதிக்கப்பட்டதாக, தகவல் அளிக்கப்பட்ட்து. 

இருப்பினும் ஒரு ரூபாய் கடைக்காரரால் திருப்பி கொடுக்கப்படவில்லை.
எனவே திரு. ரவி தன்னிடம் பெறப்பட்ட அதிகப்படியான தொகையான ரூபாய் ஒன்றை திருப்பியளிக்கவும், நஷ்ட ஈடு மற்றும் வழ்க்குக்கான தொகையை வழங்ககோரியும் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 
விசாரணை க்குப்பின் கீழ் கண்டவாறு தீர்ப்பு வழங்கப்பட்டது.

1. அதிகப்படியாக வசூலிக்கப்பட்ட தொகையான ரூபாய் ஒன்றை மனுதாரருக்கு திருப்பியளிக்கவேண்டும்.
2. வழக்கு செலவுத்தொகையாக 1000 /- வழங்கவேண்டும்.
3. நுகவோர் நல நிதிக்கு 5,000 /- வழங்கவேண்டும் என கண்ணன் டிபார்ட் மெண்டல் ஸ்டோருக்கு உத்தரவிட்டு தீர்ப்பு வழங்கியது.

நன்றி, சட்டம் என் கையில்

கேஸ்சிலிண்டர் பாதுகாப்பாக பயன்படுத்த


கேஸ்சிலிண்டரை பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி?
*************************************************************************

தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் சிலிண்டர் விபத்துச் சம்பவங்கள் அடிக்கடி நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அதற்குக் காரணம் மக்களின் அலட்சியமே!பெரும்பாலானவர்கள் சிலிண்டர் கனெக்‌ஷனை பெறுவதற்காக காட்டும் ஆர்வத்தையோ, செய்யும் முயற்சிகளையோ அதைப் பராமரிப்பதில்காட்டுவதில்லை. கேஸ் சிலிண்டருக்கான புது கனெக்‌ஷனைப் பெறும்போதே அதை எப்படிப் பயன்படுத்த வேண்டும், என்னென்ன பாதுகாப்பு முறைகளைப் பின்பற்றவேண்டும் போன்ற விஷயங்களைக் கற்றுத்தருவார்கள். அதைத் தொடர்ந்து கடைப்பிடித்தாலே போதும்…எந்த பிரச்னையும் வராது’’ 

கேஸ் சிலிண்டர் விபத்து நடப்பதற்கு முக்கிய காரணங்கள் என்னென்ன?

*******************************************************************************************************
‘‘தினமும் தூங்கப் போவதற்கு முன்னால் ரெகுலரேட்டரை ஆஃப் செய்துவிட வேண்டும். 

நிறையபேர் அதைப் பின்பற்றுவதில்லை. ரெகுலேட்டரில் இருந்து கேஸ் கசிவதால்தான் பெரும்பாலான விபத்துகள் நடக்கின்றன.

கேஸ் சிலிண்டரின் உள்ளே இருக்கும் புரோப்பேன் (Propane), பூட்டேன் (Butane) ஆகியவை திரவ வடிவில்தான் இருக்கும். அதுதான் அடுப்பு வழியாக நமக்கு வாயு வடிவில் வருகிறது. 

சிலிண்டரில் இருந்து கேஸ் லீக் ஆகும்போது எளிதில் உணர்ந்து கொள்ள உதவியாக எத்தில் மெர்கேப்டன் (Ethyl Mercaptan) என்ற கெமிக்கல் சேர்க்கப்பட்டிருக்கும். இந்த கெமிக்கல்தான் கேஸ் லீக்காவதை முதலில் எச்சரிக்கை செய்யும். 

அந்த வாசனையை உணர்ந்ததும் உடனடியாக உஷாராகி செயல்பட வேண்டும். இல்லையென்றால் சிலிண்டரில் இருந்து வெளிவரும் திரவம் தரையில் பரவிவிடும். சின்ன தீப்பொறி ஏற்பட்டாலோ, எலெக்ட்ரிக்கல் ஸ்விட்சை ஆன் செய்தாலோ பெரிய விபத்து ஏற்பட்டுவிடும். இப்படித்தான் சிலிண்டர் விபத்து நடக்கிறது.

சிலர் அடுப்பில் பால் பாத்திரத்தை வைத்துவிட்டு வேறு வேலையைப் பார்க்கப் போய்விடுவார்கள். அந்த இடைவெளியில் பால் பொங்கி வழிந்து அடுப்பை அணைத்துவிடும். 

திரும்ப அடுக்களைக்குள் வருபவர்கள், அடுப்புதான் அணைந்துவிட்டதே என்று நினைப்பார்கள். அல்லது அடுப்பை தாங்கள் அணைக்கவில்லை என்பதை மறந்து போய்விடுவார்கள். ஆனால், சிலிண்டரில் இருந்து கேஸ் வெளியேறிக் கொண்டிருக்கும். அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக பரவி, வீடு முழுவதும் நிரம்பி விபத்துகளை உருவாக்கிவிடும். 

எனவே, அடுப்பில் எதையாவது வைத்திருந்தால் பக்கத்தில் இருந்து கவனித்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

சில வீடுகளில் கிச்சனோடு பூஜையறையும் சேர்ந்தே இருக்கும். விளக்கேற்றுவது அல்லது ஊதுவத்தி கொளுத்துவது போன்றவற்றை செய்துவிட்டு, வீட்டை பூட்டிவிட்டு வெளியே போய்விடுவார்கள். இந்த மாதிரியான நேரங்களில் சிலிண்டரில் இருந்து கேஸ் லீக் ஆனாலும் விபத்து நடக்க வாய்ப்பு இருக்கிறது.

சிலர் கிச்சனிலேயே ஃப்ரிட்ஜ், மைக்ரோவேவ் அவன் போன்ற மின்னணு சாதனங்களை வைத்திருப்பார்கள். சிலிண்டர் லீக்ஆகும் நேரத்தில் இவற்றுக்கு மின்சாரம் வரும் ஸ்விட்ச் போர்டில் இருந்து சின்ன ஸ்பார்க் வந்தாலும் எளிதில் தீ பற்றிக் கொள்ளும்.

எனவே, கிச்சனில் மின்னணு சாதனங்களைப் பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது.

மாடுலர்கிச்சன் என்ற பெயரில் சிலர் சிலிண்டரை மர கப்போர்டுகளால் பூட்டி வைத்துவிடுவார்கள். இதனால் கேஸ் லீக் ஆனால் கூட ஆரம்பத்திலேயே தெரியாமல் போய்விடும். 

எந்த மாடல் கிச்சனாக இருந்தாலும் சிலிண்டரை வெளியில்,
காற்றோட்டமான இடத்தில் வைத்திருக்க வேண்டும்.


சிலர் ஜன்னலுக்கு அருகில் கேஸ் அடுப்பை வைத்திருப்பார்கள். அதிகமான காற்று அடிக்கும் நேரங்களில் அடுப்பு அணைந்து போய்விடும். வேறு வேலைகளில் பிஸியாக இருந்தால், அது கவனத்துக்கு வராமலே போய்விடும். இப்படி லீக் ஆகும் கேஸ் ஆபத்தைக் கொண்டு வந்து சேர்க்கும்.

முன்பெல்லாம் அடுப்பைப் பற்ற வைக்க தீக்குச்சிகளைப் பயன்படுத்தினோம். இப்போது லைட்டர் கருவி வந்து விட்டது. 

இது எளிதாக இருப்பதாக பலரும் நினைக்கிறார்கள். அப்படி இல்லை.

உண்மையை சொல்லப் போனால் லைட்டர்களாலும் விபத்துகள் நடக்கின்றன. கையில் வைத்து ‘டக்டக்’ என்று தட்டிக் கொண்டிருக்கும் போது கேஸ் லீக் ஆகி, கவனிக்காமல் விட்டுவிட்டால் குப்பென உடலிலேயே நெருப்பு பற்றிக் கொள்ளும் ஆபத்தும் இருக்கிறது. எனவே, இந்த விஷயத்தில் அலட்சியம் கூடாது. அடுப்பை ஆன் செய்த அடுத்த சில விநாடிகளுக்குள் நெருப்பை பற்ற வைப்பது ரொம்ப முக்கியம்’’.

கேஸ் லீக் ஆனால், உடனே செய்ய வேண்டியது என்ன?

*******************************************************************************‘‘உடனடியாக அடுப்பையும் ரெகுலேட்டரையும் ஆஃப் செய்துவிட்டு ஜன்னல் மற்றும் கதவுகளை திறந்து வைக்கவேண்டும்.

இதனால் வீட்டின் உள்ளே பரவியிருக்கும் கேஸ் வெளியே போய்விடும். ரெகுலேட்டரை சிலிண்டரில் இருந்து டிஸ்கனெக்ட் செய்து (பிரித்து) விடவேண்டும். 

சிலிண்டருடன் இணைந்திருக்கும் சேஃப்டி கேப்பால் லாக் செய்து விடவேண்டும்.

லீக்கேஜ் ஆன உடனே சம்பந்தப்பட்ட ஏரியா சிலிண்டர் டிஸ்ட்ரிப்யூட்டருக்கு தகவல் தெரிவித்து விடுவது நல்லது. 

ஒவ்வொரு பத்தாயிரம் வாடிக்கையாளருக்கும் ஒருவர் என்ற கணக்கில் இண்டேன் கேஸ் நிறுவனத்தின் சார்பில் மெக்கானிக்குகள் இருக்கிறார்கள். 

அவர்கள் வந்து பிரச்னையை சரிசெய்து கொடுப்பார்கள். சிலிண்டரில் பிரச்னை என்றால் அதை மாற்றித் தந்துவிடுவார்கள். அதன்பிறகு பயன்படுத்தலாம். 

இந்த சேவை காலை 9 மணி முதல் மாலை 6 மணிவரை மட்டுமே. இது தவிர மாலை 6 மணி முதல் காலை 9 மணி வரை உள்ள நேரங்களில் சிலிண்டர் லீக் ஆகிறது என்றால்,

1800425247247 என்ற டோல்ப்ரீஎண்ணை 

********************************************************
தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். 24 மணி நேரமும் இயங்கும் இந்த சென்டரில் புகாரை பதிவு செய்த உடனே, அந்தத் தகவல் உங்கள் ஏரியாவில் இருக்கும் டிஸ்ட்ரிபியூட்டர் மெக்கானிக், சேல்ஸ் ஆபிஸர், ஏரியா மேனேஜர் ஆகியோருக்கு போய்ச் சேர்ந்து விடும். அவர்கள் உடனடியாக வந்து சரிசெய்து கொடுப்பார்கள்’’.

சிலிண்டர் விபத்தைத் தடுக்க எந்த மாதிரியான பாதுகாப்பு  ஏற்பாடுகளைச் செய்யவேண்டும்?


‘‘கேஸ் சிலிண்டருக்கான புது இணைப்பைப் பெறும் போது, உங்கள் பகுதி டிஸ்ட்ரிப்யூட்டருக்கான அங்கீகரிக்கப்பட்ட மெக்கானிக்கை வரவழைத்து அவர் மூலமாக சிலிண்டரை இணைப்பது முக்கியம். 

ஒருவேளை அவர்கள் செய்ய மறுத்தால் ‘டெமோ’ செய்து காட்டும்படி கேட்கவேண்டும். முறையாக எப்படி இணைப்பது என்று கற்றுக் கொள்ள வேண்டும். 

சிலிண்டர் டெலிவரி ஆகும் போது, அதை அடுப்புடன் இணைத்து எரிய வைத்துப் பார்க்க வேண்டும். பிரச்னை ஒன்றும் இல்லை என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.

சிலிண்டர் இணைப்புப் பெறும்போது, எரிவாயு நிறுவனத்தில் கொடுக்கும் ரெகுலேட்டர், டியூப்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். 

அதில் பிரச்னை எதுவும் ஏற்பட்டால் ஏரியா டிஸ்ட்ரிப்யூட்டருக்கு தகவல் சொல்லி, புதிதாக வாங்கிக்கொள்ள வேண்டும். இப்படி மாற்றிக்கொள்வதற்கு கட்டணம் ஏதுமில்லை. 

ஆனால், நீங்களாக சாதாரண கடைகளில் கிடைக்கும் தரமற்ற ரெகுலேட்டர், டியூப்களை வாங்கி எக்காரணம் கொண்டும் பயன்படுத்த வேண்டாம். 

இந்த தரமற்ற ரெகுலேட்டர், டியூப்களின் வழியாகத்தான் கேஸ் கசிவு ஏற்பட்டு விபத்துகள் அதிகம்நடக்கின்றன.

2 அடுக்கு வயர்களால் ஆன திக்கான சுரக்‌ஷா டியூப்கள் எப்போதும் நிரந்தரமாக இருக்கும். ஒரு மீட்டர், 1.2 மீட்டர் என இரு அளவுகளில் கிடைக்கிறது.

5 வருட வாரண்டியுடனும் தருகிறார்கள். எலி கடித்தாலும் டேமேஜ் ஆகாமல் உறுதியாக இருக்கும்… ஆபத்துகளை தவிர்க்கும்.

ஒன்றுக்கு மேற்பட்ட சிலிண்டர்களை ஒரே இடத்தில் குவித்து வைக்கக் கூடாது. ஒரு வீட்டில் 2 சிலிண்டர்களுக்கு மேல் வைத்திருப்பதும் ஆபத்தானதே.

நல்ல காற்றோட்டமான இடத்தில், சிலிண்டர்களை வைப்பது நல்லது.

‘துருப்பிடித்த, மட்டமான சிலிண்டர்களை எங்களுக்குக் கொடுக்கிறார்கள்’ என நிறையபேர் புகார் சொல்கிறார்கள். ஒரு சிலிண்டரின் ஆயுட்காலம்10 வருடங்கள். 10 வருடங்களில் சிலிண்டர் எங்கெங்கேயோ பயணம் செய்திருக்கும். எனவே, சிலிண்டரை மேற்பார்வையாக பார்த்து அதன் தரத்தை தீர்மானிக்க முடியாது. சிலிண்டரின் மேற்பகுதியில் அது தயாரான தேதி, அதன் ஆயுள் முடிவுறும் தேதி உட்பட எல்லாமே இருக்கும். 

அதன் ஆயுட்காலத்தையும் தாண்டி புழக்கத்தில் இருப்பது தெரிந்தால் தாராளமாக புகார் தெரிவிக்கலாம். கேஸ் சிலிண்டர் தொடர்பான எல்லா புகார்களுக்கும்18002333555என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

கணவன், மனைவி இருவரும் வேலைக்குப் போகும் இல்லங்களில் சிலிண்டரை வாங்குவதில் சிரமமும் தேவையில்லாத குழப்பங்களும் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. 

அவர்களுக்காகவே மாலை 6 மணிக்கு மேல் சிலிண்டர் விநியோகம் செய்யும் வசதியும் இருக்கிறது. அதைப் பயன்படுத்திக்கொள்ளலாம். 

சிலிண்டர் டெலிவரி செய்ய வரும்போது அதன் எடையை பரிசோதித்துக் கொள்வது அவசியம். 

சிலிண்டரின் எடை 15 கிலோ, உள்ளிருக்கும் கேஸ் எடை 14.2 கிலோ இரண்டும் சேர்த்து 29.5 கிலோ இருக்க வேண்டும். இந்த எடை விவரம் சிலிண்டரிலேயே குறிக்கப்பட்டிருக்கும். அதற்கு கூடுதலாகவோ, குறைவாகவோ 100 கிராம் இருக்கலாம். 

அதற்கும் குறைவாக இருந்தால் சிலிண்டரை திருப்பி எடுத்துப் போக சொல்லிவிட்டு, வாடிக்கையாளர் மையத்தில் புகார் தெரிவிக்கலாம்.

ஐஎஸ்ஐ முத்திரையுள்ள தரமான அடுப்பைப யன்படுத்தவேண்டியது எல்லாவற்றையும்விட முக்கியமானது. பர்னரை சுத்தம் செய்கிறேன் என்று அடுப்பைக் கழற்றி, ஊற வைத்து சுத்தம் செய்யத் தேவையில்லை. அவ்வப்போது சுத்தம் செய்தால் போதும்.

2 வருடங்களுக்கு ஒரு முறை ஏரியா கேஸ் சிலிண்டர் மெக்கானிக்கை அழைத்து அடுப்பு, கனெக்‌ஷன் ஆகியவற்றை சோதித்துக் கொள்வது அவசியம். இதற்கு கட்டணமாக ரூ.70 மட்டும் செலுத்த வேண்டியிருக்கும்.

அடுப்பருகில் நின்று சமைக்கும்போது தீ பரவாமல் இருக்க Fire Resistant Apron
என்றொரு கவர் இருக்கிறது. தீப்பிடித்தாலும் எரியாத தன்மை கொண்ட இதை சமைக்கும்போது பயன்படுத்தலாம். இது இண்டேன் டிஸ்ட்ரிபியூட்டர்களிடமும் கிடைக்கிறது.

ஏர்கண்டிஷன் பாதுகாப்பாக பயன்படுத்த


ஏர்கண்டிஷன் பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி?
*********************************************************************

பொதுவா... ஸ்பிலிட்டைவிட, விண்டோ ஏ.சி-யி லதான் பாதிப்பு அதிகம்'' 

புதிதாக ஏ.சி. வாங்குபவராக இருந்தால் உங்கள் வீட்டில் ஏ.சி. பொருத்தப்படவிருக்கும் அறையின் அளவை மனதில் வைத்துக் கொண்டு தேர்வு செய்யுங்கள்.

1.5 டன், 2 டன், 3 டன் என்று நம் பயன்பாட்டுக்கு ஏற்ற ஏ.சி. மெஷின்கள் உள்ளன. 

150 சதுர அடி கொண்ட அறையாக இருந்தால் 1.5 டன் அளவுள்ள ஏ.சி. போதுமானது. பெரிய ஹால் என்றால் 3 டன் தேவைப்படும்.

உதிரிபாகங்களை குறைந்த விலையில் வாங்காதீர்கள். நல்ல விலையில் தரமானவற்றை வாங்குங்கள். ஏ.சி. வாங்கியதும், அதற்கேற்ற தரமான 'ஃப்யூஸ் ஒயர்', 'டிரிப்பர்' போன்றவற்றை பொருத்தவேண்டும். மலிவான விலைகளில் வாங்கினால், உங்கள் உயிருக்கு ஆபத்தாக முடியும்.

உதாரணத்துக்கு ஸ்பிலிட் ஏ.சி. 1.5 டன் எனில், 20 ஆம்ப்ஸ் ஒயரினால் ஆன ஃப்யூஸை பொருத்துங்கள். இதேபோல் டிரிப்பரும் 20 ஆம்ப்ஸ் கொண்டதாக இருக்க வேண்டும்.

அப்போதுதான் மின் சப்ளையில் கோளாறு எற்பட்டாலும் டிரிப்பர் தானாக ஆஃப் ஆகி ஏ.சி-யைக் காப்பாற்றி விடும்.

ஏ.சி. வாங்கும்போது இலவசமாகக் கொடுக்கப்படும் ஸ்டெபிலைசர்கள் தரம் குறைந்தவையாக இருக்கக் கூடும். தரமான நிறுவனங்களின் ஸ்டெபிலைசர்களை வாங்குங்கள்.

எல்லா ஏ.சி. நிறுவனங்களும் வாடிக்கையாளர்களுக்கு சொல்லும் அட்வைஸ்... ஏ.சி. வாங்கி பொருத்தியதும், அது எப்போதும் 23 டிகிரிக்கு கீழ் வைக்கக்கூடாது. அதற்கும் குறைவாகக் கொண்டு போகும்போது ஏ.சி. அதிக பயன்பாட்டுக்கு உட்படுத்தப்படும்.

அப்போது கம்ப்ரஸர், காயில், ஏ.சி-க்கு செல்லும் ஒயர் என எல்லா பகுதியும் சூடாகிவிடும். இதனாலும் தீப்பிடிக்க அதிக வாய்ப்பு இருக்கிறது.
எக்காரணம் கொண்டும் 16 டிகிரியில் ஏ.சி-யை கொண்டு போகாதீர்கள்.

வீடுகளில் பயன்படுத்தப்படும் ஏ.சி-க்களை முன்று மாதங்களுக்கு ஒரு முறை கட்டாயம் சர்வீஸ் செய்யவேண்டும்.

ஸ்பிலிட் ஏ.சி. எனில் 15 நாட்களுக்கு ஒரு முறை ஃபில்டரை கழற்றி தண்ணீரில் நன்கு சுத்தம் செய்து மாட்டுங்கள். இதனால், எந்தவித இடையூறும் இல்லாமல் குளுமையாக காற்று வரும்.

ஏ.சி. ஓடிக் கொண்டிருக்கும்போதே ரூம் ஸ்ப்ரே அடிப்பது மிகவும் தவறு
.

பெர்ஃப்யூம்கள் ஏ.சி.யின் உள்ளே இருக்கும் காயிலை பழுதாக்கி, சீக்கிரத்தில் மெஷினை ரிப்பேராக்கிவிடும்.

நல்ல குளுமை வேண்டும் என்பதற்காக ஏ.சி. ஓடிக்காண்டிருக்கும்போதே ஃபேனை போடாதீர்கள்.

ஃபேன் காற்று, ஏ.சி காற்றை திசை திருப்பி விடும். ஏ.சி காற்று வருவதற்கு சரியான ஃப்ளோ கிடைக்காது.

27 டிகிரியிலும், நல்ல குளுமையை தரக்கூடிய ஏ.சி.தான் தரமானது.

27 டிகிரியில் வைக்கும்போது மூச்சு திணறுவதுபோல் உணர்ந்தால், அந்த ஏ.சி. சரியாக சர்வீஸ் செய்யப்படாததாக இருக்கலாம்.

ஸ்பிலிட் ஏ.சி. எனில் அறையை முழுவதையும் மூடிவிடக்கூடாது.

கதவுக்கு அடியில் இருக்கும் வழியிலாவது காற்று போகும் அளவுக்கு இடைவெளி இருக்க வேண்டும். சிறிய துவாரமாவது போட்டு வையுங்கள்.

இதனால் ஒரு நாளைக்கு ஒரு யூனிட் கரன்ட் மட்டுமே கூடுதலாகச் செலவாகும்.

உங்கள் ஏ.சி. கூலாக இல்லையெனில் உடனடியாக சர்வீஸ் ஆட்களை அழைத்து, மெஷினில் கேஸ் போதுமான அளவோடு இருக்கிறதா என்று தெரிந்து கொள்ளுங்கள். இல்லையென்றால் நிரப்பச் சொல்லுங்கள்.

ஏ.சி. மெஷின்களைப் பொறுத்தவரை எவாபிரேட்டர் காயில், கண்டன்ஸர் காயில், ஏ.சி. மெஷினுடைய ஃபேன் இந்த மூன்றும் மிகவும் முக்கியம்.

இந்த பாகங்கள் சுத்தமாக வேலை செய்கின்றனவா என்பதை கண்காணித்துக் கொண்டே இருங்கள்.

இவை மூன்றும் சரியாக வேலை செய்தாலே மின்சாரம் வீணாகாமல் இருக்கும்.

ஏ.சி-யை வாங்கும்போது அதுபற்றிய டெக்னிக்கலான விஷயங்களை அறிந்து கொள்ளவேண்டும். இதனால், ஏ.சி. சர்வீசுக்கு வருபவர்கள் மேலோட்டமாக சரி செய்வதையும் நீங்கள் கண்டுபிடித்துவிடலாம்.

சர்வீஸ் ஆட்கள் வந்தால் கூடவே இருந்து கவனிப்பது உங்கள் ஏ.சி. மெஷினுக்குப் பாதுகாப்பானது.

ஜாக்கிரதை - சைபர்கிரைம்


ஜாக்கிரதை - சைபர்கிரைம்
*************************************************************
சமீபகாலமாக நவீன தொழில்நுட்பங்களின் வளர்ச்சியினால் கம்ப்யூட்டர், லேப்டாப், ஸ்மார்ட்போன், கிரெடிட்கார்டு பொருட்களின் பயன்பாடு அதிகரிக்கிறது. குறிப்பாக பேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்களை பயன்படுத்தும் நபர்களின் எண்ணிக்கையும் பலமடங்காகியுள்ளது. இதுபோன்ற நவீன தொழில்நுட்ப வளர்ச்சியால் நன்மைகள் இருந்தாலும், அதே அளவிற்கு தீமைகளும் உள்ளது என்பது நிதர்சனமான உண்மை. 

இந்த நவீன தொழில்நுட்பங்களின் வளர்ச்சியை பயன்படுத்தி சிலர் மோசடியிலும் ஈடுபடுகின்றனர். சமூக வலைதளங்களில் வெளியிடும் புகைப்படத்தை சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரியாமல் எடுத்து மார்பிங் செய்து ஆபாசமாக சித்தரித்து வெளியிடுவது, கிரெடிட் கார்டுகளில் உள்ள ரகசிய எண்களை திருடி மோசடி செய்வது, அந்த கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி நூதன முறையில் மோசடி செய்வது போன்ற சைபர் கிரைம் தொடர்பான குற்றங்கள் சமீபகாலமாக அதிகரிக்கிறது.

கிரெடிட் கார்டு வைத்துள்ளவர்கள் வெளியிடங்களுக்கு சென்று பொருட்களை ஆன்லைன் முறையில் வாங்குவது, வாகனங்களுக்கு பெட்ரோல் போடும் போது, பொருட்களை வாங்கும் போது கிரெடிட் கார்டை தருகின்றனர். இந்த கார்டை சம்பந்தப்பட்டவர்கள் வாங்கி அவர்களிடம் உள்ள கருவியை சுவிப் செய்து தருகின்றனர்.

ஆனால், சில மோசடி நபர்கள் வாடிக்கையாளர்கள் தரும் இதே கார்டை, அவர்கள் அஜாக்கிரதையாக இருக்கும் போது பயன்படுத்தி �ஸ்கிம்மர் கருவி� என்ற கருவியில் சுவிப் செய்கின்றனர்.இதனால் மோசடி நபர்களுக்கு அந்த கிரெடிட் கார்டுதாரரின் கார்டுஎண், பெயர், முகவரி, வங்கி கணக்கு எண் உள்ளிட்ட அனைத்து விபரங்களும் தெரியவருகிறது.

ஆனால், கிரெடிட் கார்டை அளிக்கும் வாடிக்கையாளர்கள் இதுகுறித்து அறியாமல் கார்டை வாங்கிச் சென்றுவிடுகின்றனர். சிலநாள்கள் கழித்து அந்த மோசடி நபர்கள், அந்த கிரெடிட் கார்டுதாரரின் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு, வங்கியில் இருந்து பேசுவது போல், வங்கி எண், முகவரி உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் தெரிவிக்கின்றனர். பின், அவர்களின் கிரெடிட் கார்டு எண்ணை சரிபார்ப்பதற்காக கேட்கின்றனர். இதனால் வாடிக்கையாளர்கள் மறுமுனையில் பேசுவது போல் வங்கி ஊழியர்கள் தான் என நினைத்து தங்களது கிரெடிட் கார்டு ரகசிய எண்ணை தெரிவிக்கின்றனர்.

இதனை பயன்படுத்தி அந்த மோசடி நபர்கள், சம்பந்தப்பட்ட கிரெடிட் கார்டுதாரர்களின் எண், பாஸ்வேர்டை பயன்படுத்தி ஆன்லைன் முறையில் பலஆயிரம் மதிப்பிற்கு பொருட்களை வாங்கிவிட்டு தப்புகின்றனர். பொருட்கள் வாங்கியது தொடர்பாக சம்பந்தப்பட்ட கிரெடிட் கார்டுதாரர்களுக்கு எஸ்எம்எஸ் வரும்போதே, அவர்களுக்கு நூதன முறையில் மோசடி செய்யப்பட்டது தெரியவருகிறது.

வாடிக்கையாளர்களின் கிரெடிட் கார்டின் பதிவு எண்ணை திருடும் மோசடி நபர்கள், போலி கார்டு தயாரித்து தவறான ரகசிய குறியீட்டு எண்ணை 3 முறை தவறாக அடிக்கின்றனர். இதனால் சம்பந்தப்பட்ட அந்த வாடிக்கையாளரின் கிரெடிட் கார்டு லாக் ஆகிவிடும். அதுகுறித்த எஸ்எம்எஸ் தகவல் வாடிக்கையாளர்களுக்கு வரும்.

சிறிதுநேரத்தில் மோசடி நபர்கள் வாடிக்கையாளர்களுக்கு தொடர்பு கொண்டு, �நாங்கள் வங்கியில் இருந்து பேசுகிறோம். உங்களது கணக்கில் பணம் இல்லாததால் கார்டு லாக் ஆகிவிட்டது. உங்கள் கார்டு ரகசிய எண்ணை கூறுங்கள்� எனக்கேட்பர்.

வாடிக்கையாளரும் வங்கியில் இருந்து கேட்கின்றனர் என நினைத்து கார்டு ரகசிய குறியீடு எண்ணை தெரிவிக்கின்றனர். அதை பெறும் மோசடி நபர்கள், வங்கி இலவசசேவை எண்ணுக்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்க வலியுறுத்துகின்றனர். வாடிக்கையாளர்களும் சேவை மையத்தைதொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கின்றனர்.

சேவை மையத்தினர் அந்த கார்டின் லாக்கை சரிசெய்கின்றனர். அதன்பின், மோசடி நபர்கள் வாடிக்கையாளர் அளித்த ரகசிய எண்ணை பயன்படுத்தி மோசடியில் ஈடுபடுகின்றனர். இதுபோல சராசரியாக மாதத்திற்கு 10 முதல் 20 புகார்கள் வருகிறது. கடந்த இரண்டு மாதத்தில் மட்டும் 30க்கும் மேற்பட்ட புகார்கள் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசாருக்கு வந்துள்ளது.

பேஸ்புக்கில் பெண்கள் தங்களுக்கு முன்பின் அறிமுகமில்லாதவர்களை நண்பர்களாக ஏற்றுக்கொள்ளக்கூடாது.

தங்களது படங்களை அதில் வெளியிடக்கூடாது. படத்தை வெளியிட்டால் அதை பயன்படுத்தும் மர்மநபர்கள் அந்த படத்தை டவுன்லோடு செய்து, மார்பிங் முறையில் ஆபாசமாக மாற்றி மீண்டும் சமூகவலைதளத்தில் வெளியிடுகின்றனர்.

இதனால் பாதிக்கப்படுவது பெண்கள் தான். இதுபோன்ற மோசடி பேர்வழிகளிடம் இருந்து வாடிக்கையாளர்கள், பெண்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும், போலீசாரும் தெரிவித்துள்ளனர்.

கடனில் உள்ள வீட்டை விற்கமுடியுமா?


கடனில் உள்ள வீட்டை விற்கமுடியுமா?
****************************************************************
ஆசை ஆசையாக வங்கியில் கடன் வாங்கி ஒரு வீட்டை வாங்குகிறோம். வாங்கிய கடனுக்கு முறையாக இ.எம்.ஐ.யும் கட்டி வருகிறோம். திடீரென வேலை நிமித்தமாக வேறு ஊருக்கு நிரந்தரமாகச் செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது என்று வைத்துக் கொள்வோமே.

அந்த வீட்டை விற்று விடலாம் என்று நினைக்கிறோம். 20 ஆண்டுகளுக்கான இ.எம்.ஐ.யில் இரண்டு ஆண்டுகளுக்கு மட்டுமே இ.எம்.ஐ. கட்டியுள்ள நிலையில், வீட்டை விற்க முடியுமா?

வீட்டுக் கடன் என்பதே, வாங்கிய வீட்டை வங்கியில் அடமானம் வைத்து வாங்குவதுதான் இல்லையா? வீட்டை அடமானமாக வைத்துக் கொண்டுதான் வங்கிகள் கடனை அளிக்கின்றன. ஆனாலும் வங்கியில் அடமானம் வைத்துள்ள வீட்டையோ அல்லது ஃபிளாட்டையோ விற்க முடியும். அதை வாங்குபவருக்கும் எந்த வித சட்டப் பிரச்சினையும் நிச்சயம் இல்லை என்றே சொல்லலாம். இதற்காகச் சில வழிமுறைகள் உள்ளன. அதைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

வங்கியில் அடமானம் வைக்கப்பட்டுள்ள வீட்டை வேறு ஒருவர் வாங்கத் தயார் என்றால், சொந்தமாகக் கைவசம் வைத்துள்ள பணத்தில் அந்த வீட்டை வாங்குகிறாரா? அல்லது அவரும் வங்கிக் கடன் மூலமாகவே வாங்குகிறாரா என்பதைப் பார்க்க வேண்டும். 


மொத்தமாகப் பணத்தைக் கையில் வைத்துக் கொண்டு வாங்குவதாக வைத்துக் கொண்டால் என்னென்ன செய்ய வேண்டும்?

1. வீட்டை விற்பவர் அடமானம் வைத்துள்ள வங்கியை அணுகி முதலில் விஷயத்தை முழுமையாகத் தெரிவிக்க வேண்டும். கடன் பாக்கி, அசல் தொகை மற்றும் வட்டித் தொகை எவ்வளவு என்பதற்கு ஒரு கடிதத்தை வங்கியிடமிருந்து கேட்டுப் பெற வேண்டும்.

2. வங்கிக்கு ஏற்கெனவே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து ஆவணங்களின் பட்டியலையும் எழுத்துப்பூர்வமாக வங்கியில் வாங்கிக்கொள்ள வேண்டும்.

3. சம்பந்தப்பட்ட வங்கிக்கு, கடன் பாக்கியைச் செலுத்திவிட்டால், அடமானம் வீட்டுத் தொடர்பான அனைத்து ஒரிஜினல் ஆவணங்களையும் சம்பந்தப்பட்டவருக்குக் கொடுப்பதற்கு வங்கிக்கு ஆட்சேபணை இல்லை என்று சம்பந்தப்பட்ட வங்கி எழுதிக் கொடுக்க வேண்டும்.

4. வீட்டின் உரிமையாளர் வங்கியிடமிருந்து பெற்ற கடிதங்களையும் தன் வசமுள்ள விற்பனைப் பத்திரத்தின் நகலையும், அந்த வீடு தொடர்புடைய அனைத்துப் பத்திரங்களின் நகல்களையும் வீடு வாங்கப் போகும் நபரிடம் வழங்க வேண்டும்.

6. வீட்டை வாங்குபவர் ஆவணங்களையும் வங்கியின் கடிதங்களையும் தனது வழக்கறிஞரிடம் காட்டிய பிறகு சட்ட ரீதியான கருத்தைப் பெறலாம். திருப்தி ஏற்படும்பட்சத்தில் வீட்டின் சொந்தக்காரருக்கு முன்பணம் கொடுக்கலாம். பிறகு வீட்டை விற்பவருக்கும் வாங்குபவருக்கும் இடையேயான ஒப்பந்தத்தை எழுதி இரு தரப்பினரும் கையெழுத்திட்ட பிறகு சார்பதிவாளர் அலுவலகத்தில் முறைப்படி பதிவு செய்யலாம்.

7. ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ள தேதிக்குள் முழுத் தொகையையும் பெற்றுக் கொண்டு, வங்கிக்குச் சேர வேண்டிய தொகையைக் கொடுத்துவிட வேண்டும். கணக்கு முடிந்ததற்கு அடையாளமாக, வங்கியிடம் இருந்து ஒரு சான்றிதழைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

8. வங்கியிடம் இருந்து வீட்டுக்குத் தொடர்புடைய ஆவணங்களைப் பெற்று அவற்றை வீட்டை வாங்குபவருக்குக் கொடுத்து, அவரிடம் இருந்து ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும். அதேசமயம், வீட்டை விற்பவர் அதை வாங்குபவருக்குக் கிரயப் பத்திரம் எழுதிக் கொடுத்துச் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும்.

அடமான வீட்டுக்கடன்

ஒருவேளை கையில் சொந்தமாகப் பணம் இல்லை. வங்கியில் கடன் பெற்றுத்தான் அந்த அடமான வீட்டை வாங்க வேண்டும். அப்படியென்றால் என்ன செய்ய வேண்டும்? ஏற்கெனவே சொன்ன நடைமுறைகளில் முதல் நான்கு நடைமுறைகளை வீட்டை விற்பவர் செய்ய வேண்டும். அதன் பிறகு வீட்டை வாங்குபவர் செய்ய வேண்டிய சில விஷயங்கள் உள்ளன.

1. தன்னிடம் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து ஆவணங்களையும் வங்கியின் கடிதங்களையும் வீட்டை வாங்குபவர் கடன் வழங்கும் வங்கிக்குக் கொடுக்க வேண்டும். அத்துடன் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை, புகைப்படத்துடன் கூடிய முகவரிச் சான்றிதழ், சம்பளம் அல்லது வருமானச் சான்றிதழ் மற்றும் வங்கியின் பரிசீலனைக் கட்டணம் ஆகியவற்றையும் வங்கியிடம் வழங்க வேண்டும். கடன் விண்ணப்பப் படிவத்தையும் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.

2. வங்கி உரிய பரிசீலனைக்குப் பிறகு கடன் வழங்கக் கொள்கை அடிப்படையிலான ஒப்புதல் வழங்கும். ஏற்ககெனவே ஒரு வங்கி தேவையான அனைத்துப் பரிசீலனைகளையும் செய்த பிறகுதான் கடன் வழங்கி உள்ளது என்பதால், தேவையற்ற தாமதம் இதில் இருக்காது.

3. வீட்டுக் கடன் தொகையைச் சம்பந்தப்பட்ட வங்கி, வீடு அடமானம் வைக்கப்படுள்ள வங்கிக்கு நேரிடையாகக் கொடுக்கும்.

4. கடனுக்கான முழுத் தொகையையும் பெற்றுக்கொண்டதால் அடமானம் வைத்திருந்த வங்கி, சம்பந்தப்பட்ட அனைத்து ஆவணங்களையும் வீடு வாங்குவதற்குக் கடன் வழங்கும் வங்கிக்குக் கொடுத்துவிடும்.

5. அதன் பிறகு வீட்டுக் கடன் கொடுக்கும் வங்கி அசல், வட்டித் தொகை போக மீதத் தொகையை வீட்டை விற்பவருக்குக் கொடுத்துவிடும். இறுதியாக வீட்டை வாங்குபவர் சார்பதிவாளர் அலுவலகத்தில் விற்பனைப் பத்திரத்தை வழக்கம்போல் பதிவு செய்துகொள்ளலாம்.

இந்த இடத்தில் ஒன்றைக் கவனிப்பது மிகவும் நல்லது. அடமான வீட்டை வாங்குபவர் அதே வங்கியில் வீட்டுக் கடன் பெற்றுக்கொள்வது நல்லது. இதனால் இரு தரப்புக்கும் நேரமும் சிரமமும் நிச்சயம் குறையும்.

முறைசாரா தொழிலாளர்கள் தேசிய ஓய்வூதிய திட்டம்


முறைசாரா தொழிலாளர்கள் தேசிய ஓய்வூதிய திட்டம்
********************************************************************

ஓடி ஓடி உழைத்தாலும் ஒரு நாளில் ஓய்வெடுக்கத்தான் வேண்டும். ஓய்வெடுக்கும் காலத்தில் கொஞ்சம் பொருளாதார பலமும் இருந்தால் மிச்சமிருக்கும் வாழ்க்கையை கஷ்டமில்லாமல் கழிக்கலாம் என்பதுதான் பலரது எண்ணமாக இருக்கும்.

அரசு ஊழியர்கள், மற்றும் முறைப்படுத்தபட்ட நிறுவன பணியாளர்களுக்கு அவர்களது சம்பளத்திலிருந்தே பிடித்தம் செய்யப்படும் பணியாளர் ஓய்வூதிய தொகை கொஞ்சம் உதவிகரமாக இருக்கும். ஆனால் முறைசாரா தொழில்களில் இருப்பவர்களுக்கு ஓய்வுகால நிதி என்பது சாத்தியமில்லை. அவர்களுக்கு என்றே கொண்டு வரப்பட்டதுதான் தேசிய ஓய்வூதிய திட்டம். இந்த திட்டத்தை 2008ல் மத்திய அரசு கொண்டு வந்தது.

முறைசாரா தொழிலாளர்கள் தங்களது எதிர்காலத்துக்கு என்று சிறு தொகையை மாதா மாதம் சேமித்தால் ஓய்வுகாலத்தில் பலன் கொடுக்கும் வகையில் அமைந் துள்ள திட்டம் இது. இதன் மூலம் சேமிக்கப்படும் தொகைக்கு வரி விலக்கு பலன்களும் கிடைக்கும் என்பதுதான் இதன் சிறப்பு. பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள், அஞ்சலகம் மூலம் இந்த திட்டத்தில் சேர வேண்டும். மத்திய அரசின் சார்பு நிறுவனமான என்எஸ்டிஎல் இதை நிர்வகித்து வருகிறது.

யார் யார் சேரலாம்?
***************************
இந்திய குடிமகனாக இருப்பவர்கள் அனைவரும் இதில் சேரலாம். வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கும் அனுமதிக்கப்படுகிறது. இந்த திட்டத்தில் சேர 18 வயது முதல் 55 வயதுக்குள் இருக்க வேண்டும்.

முதலீடு எவ்வளவு?****************************

குறைந்தபட்சமாக ரூ.500 வரை கட்டலாம். ஒரு நிதி ஆண்டில் ரூ.6000 வரை குறைந்தபட்சமாக முதலீடு செய்யலாம். அதிகபட்சம் எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். பரிவர்த்தனைக்கான கட்டணமாக முதலீட்டிலிருந்து 0.25 சதவீதம் அல்லது ரூ.20 கட்டணமாக பிடித்துக் கொள்ளப்படும்.

தேர்ந்தெடுக்கும் வாய்ப்புகள்:
******************************************
இ-கிளாஸ் மற்றும் சி-கிளாஸ், ஜி-கிளாஸ் என மூன்று வகைகளில் முதலீடு செய்யலாம். இதில் ஆக்டிவ் சாய்ஸ், ஆட்டோ சாய்ஸ் என இரண்டு வசதிகள் உள்ளது. ஆக்டிவ் சாய்ஸ் என்பது எவ்வளவு சதவிகிதம் ஈக்விட்டி, பாண்டு, கடன் பத்திரங்களில் முதலீடு செய்யவேண்டும் என்பதை முதலீட்டாளர்கள் முடிவு செய்யலாம். ஆனால் முதலீட்டை தேர்வு செய்ய முடியாதவர்கள் ஆட்டோ சாய்ஸ் எடுத்துக் கொள்ளலாம். ஆட்டோ சாய்ஸ் பிரிவில் வயது அடிப்படையில் முதலீட்டுத் திட்டம் இருக்கிறது.

இ-கிளாஸ் பண்டுகள் என்பது ஈக்விட்டி பங்குகளில் முதலீடு செய்வது. சி-கிளாஸ் பண்டுகள் என்பது கார்பரேட் பாண்டுகளில் முதலீடு செய்வது. ஜி-கிளாஸ் பண்டுகள் என்பது அரசு பத்திரங்களில் முதலீடு செய்வது. இதில் முதலீட்டாளர்கள் மூன்று திட்டங்களையும் சேர்த்து தேர்ந்தெடுக்கலாம். ஈக்விட்டி பண்டுகளில் 50 சதவீதத்துக்கும் அதிகமாக முதலீடு செய்ய அனுமதி இல்லை.

வரி விலக்கு:
*******************
தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் செய்யப்படும் முதலீடுக்கு வரிச்சலுகை உண்டு. இதில் மேற்கொள்ளப்படும் முதலீடு 80 சி யின் கீழ் கணக்கிடப்படும். இதில் ஆண்டுக்கு 1.50 லட்ச ரூபாய் வரை வரி விலக்கு பெற்றுகொள்ள முடியும். கடந்த பட்ஜெட்டில் கூடுதலாக 50 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த சலுகையை அடுத்த நிதி ஆண்டு முதல் பெறலாம். ஆனால் பென்ஷன் திட்டம் மூலம் கிடைக்கும் வருமானத்துக்கு வரி செலுத்த வேண்டி இருக்கும்.

முதலீட்டுக் காலம்:
***************************

இந்த திட்டத்தில் சேர்ந்த பிறகு எத்தனை வருடங்களுக்கு ஓய்வுகால நிதி தேவை என்பதையும் நாமே தேர்ந்தெடுக்கலாம். அதாவது, 10, 15 மற்றும் 20 ஆண்டுகளுக்கு ஓய்வுகால நிதி தேவை என தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். அத்தனை வருடங்களுக்கு பென்ஷன் கிடைக்கும். 60 வயதில் ஓய்வூதியம் பெற தொடங்குபவர் எனக்கு 70 வயது வரை ஓய்வூதியம் வேண்டும் என்றால் அதற்கேற்ப ஓய்வூதியம் கிடைக்கும்.

இந்த காலத்துக்கு ஏற்ப ஓய்வூதிய தொகை மாறுபடும் முதலீட்டாளர் பத்து ஆண்டுக்கு தேர்ந்தெடுத்து இடையில் இறந்துவிட்டால் மீதமுள்ள ஆண்டுகளுக்கு அவரது நாமினி அல்லது சட்டப்படியான வாரிசுக்குக் ஓய்வூதிய தொகை கிடைக்கும். ஒருவேளை பென்ஷன் பெறும் நபர், அவர் குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு மேல் உயிருடன் இருந்தால் அவருக்கு பென்ஷன் கிடைக்காது.

திட்ட மாறுதல்:
*********************
பென்ஷன் பண்ட் அல்லது யூலிப் போன்றதல்ல. ஒரு திட்டத்திலிருந்து இன்னொரு திட்டத்துக்கும் மாறிகொள்ளும் வாய்ப்புகளும் உள்ளது. ஆனால் ஒரு வருடம் முதலீடு செய்த பிறகுதான் ஒரு திட்டத்திலிருந்து இன்னொரு திடத்துக்கு மாறமுடியும்.

கட்டணங்கள்:
**********************
இந்த் திட்டத்தின் பண்ட் மேனேஜர்களின் செலவு சராசரி 0.01 சதவீதம்தான். எனவே மிகக் குறைந்த செலவைக் கொண்ட முதலீட்டு திட்டம் இது. இந்த கணக்கை தொடங்குவதற்கு ஒரே ஒரு முறைக் கட்டணமாக 0.25 சதவீதம் முதல் அதிகபட்சம் ரூ. 20 வரை பிடித்தம் செய்யப்படும். வேறு எந்த கட்டணங்களும் கிடையாது.

வெளியேறும் விதிமுறைகள்:
******************************************
புதிய ஓய்வூதிய திட்டத்தில் சேர்ந்துள்ள தொகையை 60 வயதுக்கு முன்னர் திரும்ப எடுக்க முடியாது. இடையில் பணத்தேவை என்றால் 40 சதவீதம் வரை திரும்ப எடுத்துக் கொள்ளலாம்.

இதுவும் அவசரகால பணத்தேவை, குழந்தைகளின் உயர்கல்வி, பெண் குழந்தை திருமணம், மருத்துவ தேவை மற்றும் வீடு தேவைகளுக்கு ஏற்பவே. 60 வயதுக்கு முன் திட்டத்திலிருந்து வெளியேறுவதாக இருந்தால், 75 சதவீத தொகையை பென்ஷனுக்காக ஒதுக்கி வைத்துவிட்டு, மீதி 25 சதவீத தொகையை மட்டுமே பெற்றுக் கொள்ள முடியும்.

இந்த 75 சதவீத தொகை ஓய்வூதிய முதலீடுக்குச் எடுத்துக் கொள்ளப்படும். மேலும் எந்த நிறுவனத்தின் ஓய்வூதியத் திட்டத்தில் முதலீடு செய்யவேண்டும் என்பதையும் அரசே முடிவு செய்யும்.

எல்.ஐ.சி, எஸ்.பி.ஐ லைஃப் இன்ஷூரன்ஸ், ஹெச்.டி.எஃப்.சி லைஃப் இன்ஷூரன்ஸ், பஜாஜ் அலையன்ஸ் லைஃப் இன்ஷூரன்ஸ், ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் லைஃப் இன்ஷூரன்ஸ், ஆகிய நிறுவனங்களின் திட்டத்தில் மட்டுமே பென்ஷனுக்காக முதலீடு செய்யலாம்.

வங்கி சேமிப்பு மற்றும் இன்ஷூரன்ஸ் திட்டங்களில் சேமிப்பதைவிட இதில் சேமிப்பது பாதுகாப்பு. திட்டமிட்ட எதிர்காலத்துக்கு ஓய்வூதியம் அவசியம் என்பதை உணர்ந்தால் முறைசாரா தொழில்களில் இருப்பவர்களுக்கு இது வரப்பிரசாதமே

புதிய ஓய்வூதிய திட்டத்தில் சேர்ந்துள்ள தொகையை 60 வயதுக்கு முன்னர் திரும்ப எடுக்க முடியாது. அவசரத் தேவைக்காக பணத்தேவை என்றால் 40 சதவீதம் வரை திரும்ப எடுத்துக் கொள்ளலாம். 60 வயதுக்கு முன் திட்டத்திலிருந்து வெளியேறுவதாக இருந்தால், 75 சதவீத தொகையை பென்ஷனுக்காக ஒதுக்கி வைத்துவிட்டு, மீதி 25 சதவீத தொகையை மட்டுமே பெற்றுக் கொள்ள முடியும்.

ரேசன் கடையைப் பற்றி தெரிந்து கொள்வோமா?

ரேசன் கடையைப் பற்றி தெரிந்து கொள்வோமா?

***************************************************
ரேஷன் கடைக்கு செல்வோரில் பல பேருக்கு இந்த அனுபவம் கிடைத்தி...ருக்கும். காலையில் அரிசி, பருப்பு, சர்க்கரை போன்றவைவந்திருக்கும். நாம் மாலையிலோ அல்லது மறுநாளோ சென்றால், அவைகள்இருந்தும் கூட "ஸ்டாக் இல்லை" என்று சொல்லி விடுவார்கள்.
இனி அப்படி ஏமாற்ற முடியாது. ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்பினாலே போதும், அன்றைய சரக்கிருப்பு விவரங்களைப் அறிந்துக் கொள்ளலாம்.

எஸ்.எம்.எஸ் அனுப்பும் முறை:

குடும்ப அட்டைதாரர்கள் (PDS) இடைவெளி (மாவட்ட குறியீடு) இடைவெளி (கடை எண்)
என்ற முறையில் எஸ்.எம்.எஸ். அனுப்ப வேண்டும்.
உதாரணமாக :-
PDS 01 BE014
என்ற தகவலை 9789006492, 9789005450, 9176480226, 9176480227, 9094831766, 9790725349, 9176480216ஆகிய ஏதேனும் ஒரு செல்பேசி எண்ணுக்கு அனுப்பினால் உடன் ரேஷன் கடையில் பொருள் வாரியான அன்றைய சரக்கிருப்பு விவரங்களைப் பெறலாம்.
மேலே கண்ட எஸ்.எம்.எஸ். தகவலில் உள்ள 01 என்ற குறியீடு சென்னை (வடக்கு) மாவட்டத்திற்கு உரியது. எனவே, இந்த குறியீட்டினை தங்களதுமாவட்டக் குறியீட்டினைக் கொண்டுமாற்றிட வேண்டும்.
அதுபோல் BE014 என்ற கடை குறியீடு (shop code) தங்களது குடும்ப அட்டையிலுள்ள முன்பக்க கீழ்ப்பகுதியில்அச்சடிக்கப்பட்டுள்ளவாறு எஸ்.எம்.எஸ். பதிவு செய்ய வேண்டும்.
குடும்ப அட்டை எண்ணில் முதல் இரண்டு எழுத்துக்கள் மாவட்ட குறியீட்டு எண்ணாகும். உதாரணமாக, 01/G/0557070 என்ற குடும்ப அட்டை எண்ணில் “01” என்பது சென்னை (வடக்கு) மாவட்ட குறியீடாகும். இதுபோல் ஒவ்வொரு மாவட்ட குறியீடு குடும்ப அட்டை எண்ணில் உள்ளது. எனவே, அந்த குறியீட்டு எண்ணை சரியாக அளித்து நியாய விலைக் கடையின் இருப்பு விவரத்தைப் பெறலாம்.
எஸ்.எம்.எஸ். அனுப்பும் கணினியில்(server) மாலை 5 மணிக்கு மேல் அதிகபளு ஏற்படுவதால் மேற்கண்ட தகவல் பெறும் சேவையை காலை நேரங்களில் உடனடியாக பதில் தகவல் பெறும் வண்ணம் பொது மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

கிறிஸ்துவ திருமணச் சட்டம் 1872



கிறிஸ்துவ திருமணச் சட்டம் 1872
*************************************************************************

நமது இந்திய பண்பாட்டில் திருமணம் என்பது சடங்காக மட்டுமில்லாமல், இரு ஜீவன்கள் கடவுள் கொடுத்த ஆயுள் வரை இன்ப-துன்பங்களில் இணைந்து வாழ்க்கை நடத்த வேண்டும் என்பதை அடிப்படையாக கொண்டுள்ளது. அதே சமயத்தில் ஒவ்வொருவர் வாழ்விலும் பிரச்னைகள் வரும் சமயத்தில் அதன் தீர்வுக்கு சட்டம் அவசியமாகும். அதை கருத்தில் கொண்ட பல சாதி, மதம், மொழியினர் ஒருமரத்து பறவையாக கூடி வாழும் இந்திய திருநாட்டில், ஒவ்வொரு மதத்தினருக்கும் தனித்தனியாக திருமண சட்டங்கள் வகுத்து செயல்படுத்தி வருகிறோம்.
அதன்படி கிறிஸ்துவ திருமண சட்டம் 1872ன் கீழ் என்னென்ன அம்சங்கள் சொல்லப்பட்டுள்ளது என்பதை தெரிந்துகொள்வோம்.
கிறிஸ்துவ திருமண சட்டம்-1872
*****************************************************
திருமணம் மற்றும் விவாகரத்து தொடர்பாக நமது நாட்டில் இந்து, இஸ்லாமியர், கிறிஸ்துவர், பார்சி, யஹொதி ஆகிய மதங்களுக்கு தொடர்புடைய வெவ்வேறு சட்டங்கள் உள்ளது. அதன்படி கிறிஸ்துவ திருமண சட்டம்-1872, (இது இந்து, இஸ்லாமியர், பார்சி, யஹொதி மதங்களை தவிர்த்து) இந்து, ஜெயின், பவுத்த, சிக்கிய மதத்தினருக்கு இந்து திருமண சட்டம்-1955 பொருந்தும். அதேபோல் பார்சி, யஹொதி ஆகிய மதங்களுக்கு தனி தனியாக திருமண சட்டங்கள் உள்ளது. கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவர்களுக்கு தனியாக திருமண சட்டம் பல ஆண்டுகளுக்கு முன் வகுத்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்திய கிறிஸ்துவ திருமண சட்டம்-1872 உள்ளது. அதேபோல் அவர்கள் எதிர்பாராத சூழ்நிலையில் பிரியும் சூழ்நிலை ஏற்படும் பட்சத்தில் இந்திய கிறிஸ்துவ விவாகரத்து சட்டம்-1869 வகுத்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் இஸ்லாமிய திருமணம் சமூகத்தின் அவசியம் அல்லது ஒப்பந்த அடிப்படையில் மட்டுமே கணக்கிடப்படுகிறது. ஆனால் கிறிஸ்துவ மதத்தில் திருமணம் என்பது வேதாகமத்தின் அடிப்படையில் புனிதமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்துவர் என்ற வார்த்தைக்கு கிறிஸ்துவின் வழியை பின்பற்றி நடக்கும் நபர் மற்றும் அதே மதத்தை பின்பற்றும் வம்சத்தினர் என்று அர்த்தமாகும்.
சட்டபூர்வமான திருமணத்திற்கு பின்பற்ற வேண்டிய விதிமுறைகள்:
**********************************************************************************************************
* திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகளில் கண்டிப்பாக ஒருவர் கிறிஸ்துவராக இருக்க வேண்டும். அவர்களின் திருமணம் கீழே குறிப்பிட்டுள்ள (காலம் 5ல் குறிப்பிட்டுள்ளபடி) கிறிஸ்துவ மத்திற்கு உட்பட்ட பிற வழிபாட்டிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் அத்தகைய திருமணம் சட்டப்படி செல்லாத பூஜ்ஜிய திருமணமாக கருதப்படும் ( திருமண சட்டம் 4வது பத்தியில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது).
திருமணம் கீழ் காணும் விதிமுறைகள்படி தான் நடக்க வேண்டும்.
*******************************************************************************************************
* திருச்சபை ஒன்றில் உறுப்பினராக இருக்க வேண்டும். கிறிஸ்துவ கோட்பாட்டின் படி ஞானஸ்தானம் பெற்றிருக்க வேண்டும். திருச்சபையின் தலைமை போதகர், பங்குதந்தை, ஆயர் உள்பட அதிகாரம் படைத்தவர்களால் உருவாக்கப்பட்டுள்ள விதிமுறை (Rules), மதவிதிமுறை (Rites), வழிபாடு
(Ceremony), பாரம்பரம் (Custom) ஆகியவைக்கு ஏற்ற வகையில் திருமணம் நடக்க வேண்டும். அல்லது
* திருமணம் செய்து வைக்கும் போதகர் (Minister of Religion) அரசாங்கத்தால் அங்கிகரிக்கப்பட்டிருக்க வேண்டும்.
* கிறிஸ்துவ திருமண சட்டத்தின் படி நியமனம் செய்துள்ள திருமண பதிவாளர் (Marriage Registrar) அல்லது அவருக்கு இணையான அதிகாரி முன்னிலையில் திருமணம் நடக்க வேண்டும்.
* இந்திய கிறிஸ்துவர்கள் திருமணம் தொடர்பாக திருமண உறுதி சான்றிதழ் (Marriage Certificate) கொடுக்கும் அதிகாரத்தை மாநில அரசின் மூலம் பெற்றுள்ளவர் முன்னிலையில் திருமணம் நடக்க வேண்டும்.
* திருமணம் செய்து கொள்பவர்கள் தங்கள் எந்த இடத்தில், எந்த சமயத்தில் திருமணம் செய்யப்படும் என்பதை குறிப்பிட வேண்டும் (திருமணம் காலை 6 மணி முதல் மாலை 7 மணிக்குள்) மட்டுமே நடக்க வேண்டும். மேலும் திருமணம் திருச்சபையில் நடப்பது நல்லது. இருப்பினும் சில எதிர்பாராத சூழ்நிலையில் திருமண மண்டபங்களில் நடத்தலாம். அங்கும் அரசாங்கத்தால் அங்கிகரிக்கப்பட்ட போதகர்கள் மூலம் மட்டுமே நடக்க வேண்டும்.
* திருச்சபையின் தலைமை போதகர் (பிஷப்), பங்குதந்தை (பாதர்), ஆயர் அல்லது Minister of Religion மூலம் மட்டுமே திருமணம் நடக்க வேண்டும்.
* மேலே குறிப்பிட்டுள்ளபடி கிறிஸ்துவ திருமண சட்டம் பிரிவு 5 (1), (2) மற்றும் (3)ல் குறிப்பிட்டுள்ளபடி திருமணம் செய்து வைக்கும் அதிகாரம் திருச்சபையின் தலைமை போதகர் அல்லது அவரால் திருமணம் செய்துவைக்க அதிகாரம் வழங்கப்பட்ட போதகர் மட்டுமே திருமணம் செய்து வைக்க வேண்டும். அப்படி செய்யப்படும் திருமணம் மட்டுமே சட்டப்படி அங்கிகரிக்கப்பட்ட திருமணமாக ஏற்றுகொள்ளப்படும். இத்தகைய திருமணம் செய்து வைக்கும் போதகர்களுக்கு மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது.
* மேலும் திருமணம் செய்து கொள்பவர்கள் தங்கள் திருமணம் தொடர்பாக ஒரு மாதத்திற்கு முன் தங்கள் திருச்சபை போதகரிடம் கடிதம் கொடுக்க வேண்டும். அதில் தான் திருமணம் செய்து கொள்ளும் தேதி, மணமுடிக்கும் பெண்களின் பெயர், முகவரி, பெற்றோர், பிறந்த தேதி உள்பட முழு விவரங்கள் கொடுக்க வேண்டும். அதை பெற்றுகொள்ளும் போதகர்கள், நகல் எடுத்து திருச்சபையின் தகவல் பலகையில் வெளியிட்டு, இத்திருமணத்திற்கு நியாயப்படி ஏதாவது எதிர்ப்பு இருக்குமானால் கைப்பட கடிதம் எழுதி கொடுக்க வேண்டும் என்று அறிவிப்பு வெளியிட வேண்டும். திருமணம் நடக்கும் நாள் வரை யாரும் எதிர்ப்பு தெரிவிக்காத பட்சத்தில் மண முடிக்கும் தம்பதியர்களின் உறவினர்கள் இருவரை சாட்சியாக வைத்து சம்மந்தப்பட்ட திருச்சபை போதகர் திருமணம் செய்து வைக்க வேண்டும்.
திருச்சபையின் தலைமை போதகர் (பிஷப்), பங்குதந்தை (பாதர்), ஆயர் அல்லது 
Minister of Religion ஆகியோர் திருமணம் பதிவு செய்வது தொடர்பாக:-
* திருமணம் செய்து வைக்கும் போதகர்கள், பிஷப் உள்பட பங்கு தந்தையாக இருப்பவர்கள் தாங்கள் செய்து வைக்கும் திருமணத்தை பதிவு செய்யும் உரிமை பெற்றுள்ளனர். திருமணம் முடித்தபின் தன்னிடம் வைத்து கொண்டுள்ள திருமண பதிவு புத்தகத்தில் மணமக்கள் பெயர், திருமண தேதி, நேரம், இருவரின் பெற்றோர் பெயர், நம்பிக்கைகுரிய இருவரின் சாட்சிகளை புத்தகத்தில் பதிவு செய்து கையெழுத்து பெற வேண்டும். அதை தேவைப்படும் போது அரசு அதிகாரிகள் யாராவது கேட்கும் போது காட்ட வேண்டும். மேலும் திருமணம் செய்து கொண்ட தம்பதிகள், தங்கள் திருமணத்தை அரசு பாதிவாளரிடம் பதிவு செய்யவிரும்பினால், தங்களுக்கு திருமணம் நடத்தி வைத்த போதகரிடம் சான்றிதழ் பெற்றுகொண்டு, அதை தாலுகா அல்லது மாவட்ட திருமண பதிவாளரிடம் கொடுத்து பதிவு செய்து கொள்ளும் அதிகாரம் உள்ளது.
* திருச்சபைக்கு கொடுக்கப்படும் கடிதத்தில் மணமக்கள் முழு விவரம், கல்வி, வயது, இருப்பிட முகவரி, தொழில், குடும்ப பின்னணி, திருச்சபையில் எத்தனை ஆண்டுகள் உறுப்பினராக உள்ளீர்கள், தாங்கள் கொடுக்கும் முகவரியில் எத்தனை காலம் வாழ்ந்து வருகிறீர்கள், சொந்த வீடா அல்லது வாடகை வீடா என்ற விவரங்கள் கொடுக்க வேண்டும். அதை பெற்று கொள்ளும் போதகர், தங்கள் அலுவலகத்தில் பொதுமக்கள் பார்வை விழும் இடத்தில் வெளியிட வேண்டும்.
* திருமணம் செய்து வைக்கும் அதிகாரம் படைத்தவர்கள் மூலம் கொடுக்கப்படும் திருமண பதிவு சான்றிதழ் மணமக்களுக்கு தேவைப்படும் பட்சத்தில் வழங்க வேண்டும். ஒருவேளை திருமணமான தம்பதிகள் இடையில் கருத்து வேறுபாடு ஏற்படும்பட்சத்தில் தங்களுக்கு திருமணம் நடந்ததை உறுதிபடுத்தும் சான்றிதழ் வழங்கும்படி போதகர் உள்பட திருமணம் நடத்தி வைத்தவரிடம் கேட்டால், தடையில்லாமல் கொடுக்க வேண்டும்.
* திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகள் தங்கள் வயது தொடர்பாக சம்மந்தப்பட்டவரின் தாய், தந்தை இருவரும் இல்லாத பட்சத்தில் அவரது ரத்த சம்மந்தமான உறவினர்கள் மூலம் எழுத்து மூலமாக கடிதம் பெற்றுகொள்ள வேண்டும். அதை திருச்சபையின் அறிவிப்பு பலகையில் வெளியிட வேண்டும். (திருமணம் செய்து கொள்ள ஆணுக்கு 21, பெண்ணுக்கு 18 வயது நிரம்பி இருக்க வேண்டும்.) மேலும் திருமணம் செய்து கொள்பவர்கள் விதவை அல்லது மனைவியை இழந்தவராக இருக்ககூடாது.
* திருச்சபையில் ஒப்புதல் சான்றிதழ் பெற்ற பின் திருமணம்:- பொதுவாக திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகள் தங்கள் திருமணம் தொடர்பாக தான் சார்ந்த திருச்சபைக்கு கடிதம் மூலம் தெரிவிக்க வேண்டும். அதை பரிசீலனை செய்யும் போதகர் முன் புதுமண தம்பதிகள் உறுதிமொழி எடுத்து கொள்ள வேண்டும். அதை தொடர்ந்து போதகர் மூலம் திருமணம் செய்துகொள்ள தடையில்லை என்ற சான்றிதழ் பெற வேண்டும். அதன் பிறகே இரு வீட்டாரின் ஒப்புதலுடன் திருமணம் நிறைவேற்ற வேண்டும்.
* திருமண நாளில் சபை போதகர் அல்லது திருமணம் செய்து வைக்கும் உரிமை பெற்றவர் முன் திருமணம் செய்துகொள்ளும் தம்பதியர் மணமகனான (பெயரை குறிப்பிட்டு) மணமகளாகிய உன்னை (மணமகளின் பெயரை குறிப்பிட்டு) உன்னை கடவுளின் சன்னிதானத்தில் மனைவியாக ஏற்றுகொள்வதுடன், சட்டபடி மனைவியாக ஏற்றுகொள்கிறேன். இருவரும் வாழ்விலும், தாழ்விலும், இன்பத்திலும், துன்பத்திலும், மரணம் நம்மை பிரிக்கும் வரை கணவன், மனைவியாக வாழ ஒப்புதல் அளிக்கிறேன் என்று உறுதிமொழி கொடுக்க வேண்டும். அதே உறுதிமொழியை மணமகளும் கொடுக்க வேண்டும். அவர்கள் கொடுக்கும் உறுதிமொழியை தம்பதியரின் உறவினர்கள் இருவர் சாட்சியாக கையெழுத்திட வேண்டும். அப்போது தான் திருமணம் அங்கிகரிக்கப்படும்.
தாம்பத்திய உரிமைகள் (Restitution of Conjugal Rights):
********************************************************************************
* சட்டப்படி திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகள் பரஸ்பர ஒற்றுமையுடன் வாழும் உரிமை பெறுகிறார்கள். எதிர்பாராத சூழ்நிலையில் கணவன், மனைவி இடையில் பிரச்னை வந்து தனித்தனியாக வாழும் நிலை ஏற்பட்டாலும், தம்பதியரில் யாரும் நீதிமன்றத்தை நாடி தங்களை ஒன்றாக வாழ உத்தரவிடும்படி முறையிடும் உரிமை பெற்றுள்ளனர்.
* தவிர்க்க முடியாத நிலையில் நீதிமன்றம் மூலம் விவாகரத்து பெறலாம் (Judicial Separation and Divorce):
* திருமணமான தம்பதியர் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் தனி தனியாக வசிப்பதை Judicial Separation என்று கூறப்படுகிறது. அதே சமயத்தில் தம்பதியர் நிரந்தரமாக பிரிவதை விவாகரத்து என்று அழைக்கப்படுகிறது. தவிர்க்க முடியாத சூழ்நிலையில் தம்பதியரில் யாராவது ஒருவர் கீழ் காணும் காரணங்களை முன்வைத்து தனியாக பிரிந்து வாழ்வது அல்லது நிரந்தரமாக பிரிந்துவிட விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய முடியும்.
தம்பதிகள் இருவர் விருப்பத்தின் பேரில் விவாகரத்து:-
**********************************************************************************
திருமணமான தம்பதிகள் எதிர்பாராத சூழ்நிலையில் ஒன்றாக வாழவே முடியாது எனும் பட்சத்தில் அவர்கள் தங்களின் திருமண உறவை முறித்து கொள்ள முடியும். இருவரும் பிரிந்துவிட ஒன்றாக சுய விருப்பத்துடன் நீதிமன்றத்தில் விவாகரத்து மனு தாக்கல் செய்யலாம்.
* விவாகரத்து மனுவை திருமணமாகி ஓராண்டு முடிவதற்குள் தாக்கல் செய்ய முடியாது.
* விவாகரத்து பெற்றபின் இருபாலரும் தாங்கள் விரும்புவோரை திருமணம் செய்து கொள்ளலாம் கிறிஸ்துவ திருமண சட்டத்தின்படி திருமணமான தம்பதிகள் நீதிமன்றத்தின் மூலமே விவாகரத்து பெற முடியுமே தவிர, வேறு வழியில் விவாகரத்து பெற முடியாது. அப்படி பெற்றால் அது சட்டப்படி செல்லாது.
* தம்பதிகள் ஒன்றாக வாழ முடியாத நிலையில் விவாகரத்து பெறுவதாக எழுத்து மூலம் பத்திரம் எழுதி கொண்டு பிரிந்துவிடுவது சட்டபடியான விவாகரத்து என்று ஏற்றுகொள்ள முடியாது.
திருமணமான தம்பதிகள்:-
****************************************
* கணவர் வேறொரு பெண்ணுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்தாலோ அல்லது மனைவி வேறொரு ஆணுடன் கள்ள தொடர்பு வைத்திருந்தால் தம்பதியரில் யாராவது ஒருவர் அதிகார தோரணையுடன் கொடுமைப்படுத்தினால்
* இரண்டாண்டுகளுக்கு மேல் யாராவது ஒருவர் அடிமை தனத்துடன் நடந்துகொண்டால் தம்பதியரில் யாராவது ஒருவர் கிறிஸ்துவ மதத்தை விட்டு வேறு மதத்தை பின்பற்றினால்
* தம்பதியரில் யாராவது மனநோயாளியாக பாதிக்கப்பட்டால், எய்ட்ஸ் உள்பட பாலின நோய் பெற்றிருந்தால், தொழுநோயால் பாதிப்பு அல்லது குணப்படுத்த முடியாத நோய் தாக்கும் பட்சத்தில் யாராவது உலக பற்றுடன் வாழ்ந்தால்
* தம்பதியரில் யாராவது ஒருவர் மற்றொருவர் மீது திருமண விவகார உரிமையை மீண்டும் பெறுவதற்கு நீதிமன்றத்தில் டிக்ரி பெற்றுகொண்டு பின் ஓராண்டு முடிந்தால் கணவர் அல்லது மனைவி ஆகிய இருவரில் ஒருவர் வேறொருவருடன் வாழ்ந்தால்
* தம்பதியரில் யாராவது ஒருவர் 7 ஆண்டுகள் காணாமல் போய் இருந்து, அவர் உயிருடன் இருக்கும் தகவல் உறுதியாக தெரியாத பட்சத்தில் நீதிமன்ற உத்தரவின் பேரில் யாராவது ஒருவர் ஓராண்டு பிரிந்து வாழ்ந்து வந்தால்
ஜீவனாம்சம் மற்றும் வழக்கு செலவு:-
**********************************************************
தம்பதிகள் இடையில் மனகசப்பு ஏற்பட்டு இருவர் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்துவரும் சமயத்தில் தனது தேவைகளுக்காக கணவரிடம் ஜீவனாம்சம் பெறும் தகுதி மனைவிக்கு உள்ளது. மேலும் வழக்கு செலவுக்கான தொகையும் பெறலாம். இந்த சலுகை மனைவி வேறொருவரை திருமணம் செய்துகொள்ளும் வரை மட்டுமே வழங்க முடியும். வழக்கு காலத்தில் பெண் வேறொருவரை திருமணம் செய்து கொண்டால், ஜீவனாம்சம் பெறும் உரிமையை இழந்துவிடுகிறார்.

மின் இணைப்பு பெறுவது எப்படி?



மின் இணைப்பு பெறுவது எப்படி?
****************************************************************************

மின்சாரம் இல்லாத வாழ்க்கை சாத்தியமே இல்லாதது இன்று. அப்படி அவசியமான மின் இணைப்பு வீடு கட்டும் முன்பே நமக்குத் தேவைப்படும். வீடு கட்டும் பணிக்கு நீர் அவசியமானது. நீருக்காக வெளியே அலைவதைக் காட்டிலும் வீடு கட்டப் போகும் நிலத்திலேயே ஆழ்துளை கிணறு அமைப்பது சாலச் சிறந்தது. மட்டுமல்லாமல் கட்டிடப் பணிகளுக்கு விளக்கு அமைக்க வேண்டும். இதற்குத் தற்காலிக மின் இணைப்பு பெற்றுக் கொள்ளும் வசதியும் இருக்கிறது.
விண்ணப்பம் எங்கே கிடைக்கும்?
****************************************************
தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிர்மானக் கழகத்தின் பிரிவு அலுவலகங்களிலும் மின் இணைப்புக்கான விண்ணப்பங்கள் கிடைக்கும். http://www.tangedco.gov.in/formgallery1.php என்னும் இணையதளத்திலும் விண்ணப்பத்தைப் பெறலாம். பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பத்தை, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் அந்தப் பகுதி பிரிவு அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும்.
தேவையான ஆவணங்கள்:
******************************************
மின் இணைப்புக் கோரும் நபர் இடம், வீட்டின் உரிமையாளராக இருக்க வேண்டும். இல்லையெனில் சம்பந்தப்பட்ட உரிமையாளரிடமிருந்து அனுமதிக் கடிதம் வாங்கியிருக்க வேண்டும். வீடு, நிலம் போன்றவற்றின் பட்டா மற்றும் பத்திரத்தின் நகல். வீட்டின் நிழற்பட அச்சுமுறை நகல் (ப்ளூ பிரிண்ட்).
அங்கீகாரம்
*******************
வீட்டுக்கான ஒயரிங் முழுவதுவமாக முடிக்கப்பட்டுவிட்டன என்பதை அரசு அனுமதி பெற்ற மின் பொறியாளர் உறுதிசெய்ய வேண்டும். அரசு அங்கீகாரம் பெற்றவர்தான் வயரிங் பணிகளைப் பார்க்க வேண்டும். பிறகு அவரிடம் ஒப்புதல் கடிதம் பெற வேண்டும்.
கட்டணம் எவ்வளவு?
********************************
தனி இணைபைத் (Single Phase) தேர்ந்தெடுக்கிறோமா, மும்முனை (Three Phase) இணைப்பைத் தேர்ந்தெடுக்கிறோமா என்பதைப் பொறுத்து கட்டணம் வேறுபடும். மேலும் இணைப்புக் கோரும் இடத்துக்கு அருகில் மின் கம்பம் இல்லையெனில் அந்தச் செலவு இதில் கணக்கிடப்படும். அருகில் உள்ள மின்மாற்றியின் (Transformer) திறன் போதுமானதாக இருக்கிறதா என்பதையும் ஆய்வுசெய்து கட்டணத் தொகையை முடிவுசெய்வார்கள்.
எத்தனை நாட்கள் ஆகும்?
***************************************
அனைத்து ஆவணங்களும் சரியாக இருக்கும் பட்சத்தில் ஒரு வாரத்தில் இருந்து 30 நாட்களுக்குள் மின் இணைப்பு கிடைத்துவிடும். மின்மாற்றி அமைக்க வேண்டும் எனும் பட்சத்தில் 60 நாட்கள் முதல் 90 நாட்கள் வரை ஆகலாம்.

ஈஸியாக வாங்கலாம் வில்லங்கச் சான்றிதழ்



ஈஸியாக வாங்கலாம் வில்லங்கச் சான்றிதழ்
********************************************************************************

சொந்தமான வீடு, மனை வைத்திருப்பவர்களுக்கு வில்லங்கச் சான்றிதழ்(ஈ.சி.) (EC - Encumbrance Certificate) பற்றி நன்றாக தெரியும். சம்பந்தப்பட்ட சொத்து யார் பெயரில் இருக்கிறது என்பதையும், இதற்கு முன்பு யார்யார் கைகளில் சொத்து மாறியது என்பதைக் காட்டும் ஒரு பதிவு ஆவணம். இந்த ஆவணத்தை பத்திரப்பதிவு அலுவலகத்தில் வாங்க முடியும். இப்போது இந்த ஈ.சி.யை ஒரு ரூபாய் செலவு செய்தால் போதும், வாங்கிவிடலாம். இதை ஆன்லைனிலேயே பெற்றுக் கொள்ளலாம்.
இதற்கான ஏற்பாட்டைத் தமிழ்நாடு அரசு பத்திரப்பதிவுத்துறை செய்துள்ளது. பொதுவாகவே ஈ.சி. கிடைக்க நிறைய பேர் தரகரை நாடுவார்கள். பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு ஒன்றுக்கு மூன்று முறை நடையாய் நடக்க வேண்டும். இப்போது அந்தக் கஷ்டமே இல்லை. ஒரு ரூபாயில் ஆன்லைனிலேயே எடுத்துவிடலாம். இதை வீட்டுக்கு கொரியர் அல்லது துரித அஞ்சலில்கூட அனுப்பி வைக்கவும் செய்கிறார்கள்.
ஈ.சி. எடுக்க 1 ரூபாய்தான். முதல் வருடத்துக்கு 15 ரூபாயும் ஒவ்வொரு வருஷத்துக்கான கூடுதல் ஆவணம் பெற 5 ரூபாய் செலுத்த வேண்டும். பத்து வருடத்துக்குத் தோராயமாக 1+15+9 = 61 ரூபாய் தான் செலவாகும். இதை வீட்டுக்கு கொரியர் செய்ய 25 ரூபாய் செலவு செய்ய வேண்டியிருக்கும். ஆன்லைனில் நேரடியாக தேடி பிரின்ட் அவுட் செய்து கொள்ள செலவு என மொத்தமே 100 ரூபாய் தான் செலவு.
மேலும் பதிவு ஆவணம், சிட்டா அடங்கலின் நகல்கூட இங்கு கிடைக்கும். சென்னை, கடலூர், கோயம்புத்தூர், திருச்சி, சேலம், மதுரை, தஞ்சாவூர், வேலூர், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகங்களில் இந்த வசதி உள்ளது. இதற்கான விண்ணப்பத்தை ஆங்கிலம், தமிழில் பூர்த்தி செய்து தரலாம்.
இப்படி சொத்து சார்ந்த ஆவணங்கள் மட்டுமல்ல, பதிவு திருமண சான்றிதழ்கூட ஆன்லைன் மூலம் டவுன்லோட் செய்யலாம். அதற்கு கட்டணம் ஒரு ரூபாய். அதை கொரியரில் அனுப்பி வைக்க ஒரு பக்கத்துக்கு 2 ரூபாய். கொரியர் கட்டணம் 25 ரூபாய் மட்டுமே. அது போக சிட் கம்பெனிகள், சொசைட்டிகளின் ஆவணங்களைப் பற்றி தெரிந்து கொள்ள ஆன்லைன் லிங்குகள் உள்ளன. அரசாங்க சொத்து வழிகாட்டி மதிப்பு பெறவும் முடியும். இதனால் வாங்கும் சொத்துக்கு எவ்வளவு முத்திரைத் தாள் என்பதை முன்னமே திட்டமிடவும் முடியும். கீழே உள்ள இணையதள முகவரிகள் உங்களுக்கு உதவியாக இருக்கும்.
ஈ.சி. சான்றிதழ் ஆங்கிலத்தில் பெற
ஈ.சி. சான்றிதழ் தமிழில் பெற
டாக்குமெண்ட் ரிஜிஸ்ட்ரேசன்
திருமணத்தைப் பதிவு செய்ய
சீட்டு கம்பெனி ரிஜிஸ்டர்
சொசைட்டி ரிஜிஸ்டர்
லேண்ட் வேல்யூ சர்டிபிகேட் பெற
http://www.tnreginet.net/Guidelineva…/gvaluemainpage2011.asp