disalbe Right click

Thursday, June 11, 2015

அடல் பென்ஷன் திட்டம்


அடல் பென்ஷன் திட்டம்… ஏன்? எதற்கு? எப்படி?

பிரதமர் நரேந்திர மோடி கடந்த மே மாதம் 9-ம் தேதி அறிமுகப்படுத்திய சமூக பாதுகாப்புத் திட்டங்களில் ஒன்றுதான் அடல் பென்ஷன் யோஜனா. இந்தத் திட்டம் ஜூன் 1, 2015-ல் இருந்து செயல்பட ஆரம்பித்திருக்கிறது.
இந்தத் திட்டத்தில் இணைய என்ன செய்ய வேண்டும், எப்படி பணம் வசூலிக்கப்படும், யார் இதை நிர்வகிப்பார்கள், எவ்வளவு தொகை பென்ஷனாக கிடைக்கும் என்று பல கேள்விகளுக்கு விரிவாக விளக்கம் தந்தார் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் வங்கிப் பரிமாற்றம் மற்றும் அரசுக் கணக்குகள் பிரிவின் இணைப் பொது மேலாளர் வி.வி.கணேசன்.
‘‘இந்தத் திட்டத்தின் நோக்கமே அமைப்பு சாராத (Unorganised) துறையில் வேலை செய்பவர்கள், ஓய்வுக்காலத்துக்குப் பின், அதாவது 60 வயதுக்குப்பின் மாதம் ரூ.1,000 – 5,000 வரை ஓய்வூதியம் பெற வேண்டும் என்பதுதான். அதற்காக அரசு தன் சார்பாக ஒரு சிறு தொகையைச் செலுத்தும்.
யார் இணையலாம்?
18  வயது முதல் 40 வயதுடைய, இந்தியாவில் வங்கி சேமிப்புக் கணக்கு வைத்துள்ள இந்தியர் யார் வேண்டுமானாலும் இந்தத் திட்டத்தில் இணையலாம். ஒரே குடும்பத்தில் 18 வயதுக்கு மேற்பட்டு 40 வயதுக்குள் உள்ள அனைவரும் இந்தத் திட்டத்தில் இணையலாம்.
இந்தத் திட்டத்தில் டிசம்பர் 31, 2015-க்குள் இணைபவர்களுக்கு அரசு தன் சார்பாக வருடத்துக்கு ரூ.1,000 அல்லது நாம் செலுத்தும் தொகையில் 50 சதவிகிதம், இவற்றில் எது குறைவோ அந்த தொகையைச் செலுத்தும். 
பென்ஷன் தொகை தரக்கூடிய திட்டங்களில் ஏற்கெனவே இணைந்திருப்பவர்கள், சமூக பாதுகாப்புத் திட்டங்களில் இணைந்திருப்பதாக கருதப்படு வார்கள். அப்படிப்பட்ட சமூக பாதுகாப்புத் திட்டங்களில் இருப்பவர்கள் இந்தத் திட்டத்தில் இணைய முடியும் என்றாலும் அரசு தன் சார்பாக செலுத்தும் தொகையை இவர்களுக்கு வழங்காது. அதேபோல், வரிக் கணக்கு தாக்கல் செய்பவர்களும் இந்தத் திட்டத்தில் சேரலாம் என்றாலும் அவர்களுக்கும் அரசு தன் சார்பாக செலுத்தும் தொகை கிடைக்காது.
ஒருவேளை இப்போது அமைப்புசாரா துறையில் பணியாற்றிக் கொண்டிருந்து, பிற்காலத்தில் அமைப்பு சார்ந்த துறையில் பணியில் சேர்ந்தால், எந்த வங்கிக் கிளையின் மூலம் இந்தத் திட்டத்தில் இணைந்தார் களோ, அந்த வங்கிக் கிளைக்கு உடனடியாக தெரியப்படுத்த வேண்டும். அரசுக்கு தெரியப் படுத்தியவுடன் அரசு தன் சார்பாக செலுத்தும் தொகையை நிறுத்திக்கொள்ளும்.
எப்படி இணைவது?
எந்த வங்கிக் கிளையில் உங்களுக்கு சேமிப்புக் கணக்கு இருக்கிறதோ, அந்த வங்கிக் கிளையில் இந்த பென்ஷன் திட்டத்துக்கான விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து, முகவரி சான்று, புகைப்பட அடையாள அட்டை, ஆதார் அட்டை போன்றவற்றைத் தரவேண்டும். வங்கி உங்களுக்கு ஒரு ‘ப்ரான் எண்’ணை (PRAN NO) வழங்கும். அந்த ‘ப்ரான் எண்’ணுக்கு நம் கணக்கிலிருந்து பணம் கிரெடிட் செய்யப்படும். இந்த ‘ப்ரான் எண்’ நாம் அடல் திட்டத்தில் இணைந்ததற்கு ஆதாரமாக இருக்கும்.
யார், எவ்வளவு தொகை செலுத்தலாம்?
நாம் விண்ணப்பம் பூர்த்தி செய்து தரும்போதே 60 வருடங்களுக்குப் பிறகு எவ்வளவு தொகை பென்ஷனாக கிடைக்க வேண்டும் என்பதைக் கேட்பார்கள். குறைந்தபட்சம் ரூ.1,000 தொடங்கி அதிகபட்சமாக ரூ.5,000 வரை ஒருவர் பென்ஷனாக பெற நினைக்கும் தொகையைக் குறிப்பிடலாம். பென்ஷனாக பெற நினைக்கும் தொகைக்கு ஏற்ப, ஒவ்வொரு மாதமும் பணம் கட்ட வேண்டியிருக்கும். (பார்க்க அடுத்த பக்கத்தில் உள்ள அட்டவணை!)
முதல்முறையாக இந்தத் திட்டத்தில் இணைந்தவுடன், இந்தத் திட்டத்தில் இணைந்ததற்கு சாட்சியாக ஒரு சான்றிதழ் வழங்கப்படும். அதுதான் ஒருவர் இந்தத் திட்டத்தில் இணைந்ததற்கான ஆதாரம். அதேபோல் ஒவ்வொரு தவணை செலுத்தும்போதும் உங்களுக்கு ரசீதோ அல்லது குறுஞ்செய்தியோ அனுப்பப்படும்.
எப்படி பணம் செலுத்துவது?
ஒருவர் இந்தத் திட்டத்தில் இணைந்தபின் மாதாமாதம் செலுத்த வேண்டிய தொகையை ஆட்டோடெபிட் மூலம் செலுத்தலாம்.  நம் வங்கி சேமிப்புக் கணக்கிலிருந்து குறிப்பிட்ட தொகையை எடுத்து வரவு வைக்கப்படும். நம் கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டு, அது நம் ‘ப்ரான்’ கணக்கில்   வரவு வைக்கப் பட்டதும் நமக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும்.
எப்போது பணம் எடுக்கப்படும்?
நாம் முதல் முறையாக அடல் திட்டத்தில் இணையும்போது எந்த தேதியில் பணம் செலுத்து கிறோமோ, அந்த தேதிதான் நம் அடுத்தடுத்த  மாதத்தின் கெடு தேதி. உதாரணமாக, ஜூன் மாதம் 8-ம் தேதி முதல் தவணை செலுத்தி இருந்தால், அடுத்தடுத்த மாதம் 8-ம் தேதி அன்று தவணைக்கான பணம் எடுக்கப்படும்.
தொகையை அதிகரிக்கலாமா?
வருடத்துக்கு ஒருமுறை நாம் செலுத்தும் தொகையை அதிகரிக்கவோ அல்லது குறைக்கவோ முடியும். ஒவ்வொரு ஆண்டின் ஏப்ரல் மாதம் மட்டும் இந்த வசதி மூலம் நாம் மாதாமாதம் செலுத்தும் பென்ஷன் தொகையை அதிகரித்துக் கொள்ளவோ அல்லது குறைத்துக் கொள்ளவோ முடியும்.
பணம் கட்டாவிட்டால்..?
இந்தத் திட்டத்தில் சேர்ந்தபின் சரியாக பணம் கட்டவில்லை என்றால் அபராதம் விதிக்கப் படும். ரூ.1 முதல் 100-க்கு ஒரு மாதத்துக்கு 1 ரூபாயும், ரூ.101 முதல் 500 வரை ஒரு மாதத்துக்கு 2 ரூபாயும், ரூ.501 முதல் 1,000 வரை ஒரு மாதத்துக்கு 5 ரூபாயும், ரூ.1001-க்கு மேல் ஒரு மாதத்துக்கு 10 ரூபாயும் அபராதமாக விதிக்கப்படும். தொடர்ச்சியாக ஆறு மாதங்களுக்கு பணம் செலுத்தவில்லை என்றால், நம் சேமிப்புக் கணக்கு தற்காலிகமாக முடக்கப்படும். தொடர்ந்து 24 மாதங்கள் பணம் செலுத்தவில்லை என்றால் சேமிப்புக் கணக்கு நிரந்தரமாக மூடப்பட்டு, திட்டத்திலிருந்து நீக்கப்  படுவார்கள்.
யார் நிர்வகிக்கிறார்கள்?
இந்தத் திட்டத்தை ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDA) என்கிற அரசு அமைப்பு நிர்வகிக்கிறது. இந்தத் திட்டத்தின் மூலம் திரட்டப்படும் நிதியில் 85%  அரசுப் பத்திரங்கள் மற்றும் பாண்டுகளில் முதலீடு செய்யப் படும். மீதமுள்ள 15% பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படும்.
என்ன உறுதி?
நாம் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யும் தொகைக்கு  கூடுதல் தொகை கிடைத்தால், அந்த தொகை திட்டத்தில் முதலீடு செய்தவருக்கே  வழங்கப்படும். ஒருவேளை உறுதி செய்யப்பட்ட தொகையைவிட குறைந்த அளவே வருமானம் ஈட்டி இருந்தால், அதை அரசாங்கம் சரிகட்டும்.
எப்போது க்ளெய்ம் கிடைக்கும்?
இந்தத் திட்டத்தில் இணைந்தவர் 60 வயதுக்குப் பிறகு இறந்துவிட்டால், அவரது இறப்புச் சான்று, இந்தத் திட்டத்தில் இணைந்ததற்கான சான்றிதழ், ஆதார்  அட்டை விவரங்கள், நாமினியின் ஆதார் அட்டை ஆகிய ஆவணங்களை திட்டத்தை நிர்வகிக்கும் வங்கிக் கிளையில் சமர்பித்தால், வங்கி அந்த ஆவணங்களின் நகலை பிஎஃப்ஆர்டிஏவுக்கு அனுப்பும். பிஎஃப்ஆர்டிஏ  சான்றிதழ்களை சரிபார்த்து பென்ஷன் தொகையை நாமினிக்கு வழங்கும். ஒருவேளை 60 வயதுக்குமுன் இறந்தால் அல்லது உயிர் போகக்கூடிய நோய் காரணமாக பணத்தைத் திட்டத்திலிருந்து எடுக்க வேண்டும் என்றால், திட்டத்தில் இணைந்தவர் எவ்வளவு தொகை செலுத்தினாரோ அந்த தொகையும், அரசு தன் சார்பாக வழங்கிய தொகை மட்டும்தான் வழங்கும்.
60 வயதுக்குப் பின் இறந்தால்…?
இந்த திட்டத்தின் சிறப்பம்சமே, ஒருவர் 60 வயது முடித்து எத்தனை ஆண்டுகள் வாழ்கிறாரோ, அத்தனை ஆண்டுகளுக்கும் அவர் கோரி இருந்தபடி பென்ஷன் தொகை கிடைக்கும்.
அவருக்குப்பின் அவர் சொல்லும் நாமினி, அதாவது முதல் நாமினி, இறக்கும் வரை அதே அளவு தொகை ஒவ்வொரு மாதமும் பென்ஷனாக கிடைக்கும். முதல் நாமினியும் இறந்துவிட்டால், அவர் நாமினியாக நியமித்தவருக்கு, அதாவது இரண்டாவது நாமினிக்கு உறுதி செய்திருந்த மொத்த தொகையும்  (Lumpsum) வழங்கப்படும்.
உதாரணமாக, சேகர் என்பவர் தன் 30-வது வயதில் இந்தத் திட்டத்தில் இணைந்து மாதம் ரூ.577 செலுத்தி வருகிறார். அரசு தன் சார்பாக வருடத்துக்கு ரூ.1,000 செலுத்தி வருகிறது. இவருக்கு 61-ஆவது வயதிலிருந்து மாதம் ரூ.5,000 கிடைக்கும். சேகர் தன் 71-வது வயதில் இறந்துவிடுகிறார். ஆக சேகருக்கு  61 – 71 வயது வரை 10 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.5,000 கிடைத்திருக்கும்.
சேகர் இந்தத் திட்டத்தில் இணையும்போது நாமினியாக தனது மனைவி கமலாவைக் குறிப்பிட்டிருக்கிறார்.  (நாமினி கணவன் /மனைவி யாகத்தான் இருக்க வேண்டும்) எனவே, சேகர் இறந்தபின், கமலா உயிரோடு இருக்கும் வரை மாதம் ரூ. 5,000 கிடைக்கும். கமலா தனது நாமினியாக தன் மகன் ரமேஷை நியமித்திருப்பார். கமலா இறந்த பிறகு, ரமேஷுக்கு மொத்தத் தொகையான 8.5 லட்சம் ரூபாய் கிடைக்கும்.
நாமினியை மாற்றிக் கொள்ளலாமா?
இந்தத் திட்டத்தில் இணைபவர் விண்ணப்பத்தை பூர்த்தி செய்யும்போது கட்டாயம் நாமினியை குறிப்பிட வேண்டும். ஒருவேளை, நாமினி இறந்துவிட்டால், எந்த வங்கிக் கிளையில் இந்தத் திட்டம் நிர்வகிக்கப்பட்டு வருகிறதோ, அந்த வங்கியில் சென்று புதிதாக வேறு ஒரு நாமினியை நியமித்துக் கொள்ளலாம்.
வேறு வங்கிக் கிளைக்கு மாற்றலாமா?
இந்தத் திட்டத்தில் சேர்ந்தபின், ஒருவர் எந்த வங்கிக் கிளைக்கு வேண்டுமானாலும் இந்தத் திட்டத்தை மாற்றிக்கொள்ளலாம். ஆனால், க்ளெய்ம் சமயத்தில் ஒருவரின் ‘ப்ரான் கணக்கு’ எங்கு நிர்வகிக்கப்படுகிறதோ, அங்குதான் க்ளெய்ம் கிடைக்கும்.
தரப்பட்ட தகவல்கள் தவறாக இருக்கும்பட்சத்தில், திட்டத்தில் இணைந்தவர் செலுத்திய தொகை மட்டும் திரும்ப வழங்கப்பட்டு திட்டத்திலிருந்து நீக்கப்படுவார். அரசு தன் சார்பாக வழங்கிய தொகை கிடைக்காது” என்றார் கணேசன்.

Wednesday, June 10, 2015

ஹெல்த் இன்சூரன்ஸ், முழுமையாக “க்ளெய்ம்” செய்ய


ஹெல்த் இன்சூரன்ஸ்,  முழுமையாக “க்ளெய்ம்” செய்வது எப்படி?
ஹெல்த் இன்ஷூரன்ஸில் முழுமையான க்ளெய்ம் கிடைக்க...
கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
ஹெல்த் இன்ஷூரன்ஸில் முழுமையான க்ளெய்ம் கிடைக்க கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள் குறித்து விளக்குகிறார் ஃபண்ட்ஸ் இந்தியா டாட்காம் நிறுவனத்தின் தலைமை இன்ஷூரன்ஸ் ஆலோசகர் ஸ்ரீதரன்.
மறைக்கக்கூடாத தகவல்கள்!
ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்கும்போது இன்ஷூரன்ஸ் நிறுவனம் கேட்கும் விவரங்களில் எந்த மாதிரியான விவரங்களை முழுமையாகத் தரவேண்டும் என்பது இன்னும் பலருக்குத் தெளிவில்லாமல் இருக்கிறது. உதாரணமாக, ஏதாவது நோயினால் நீங்கள் அவதிப்பட்டு பாலிசி எடுப்பதற்குமுன் குணமடைந்திருந்தால் அது குறித்த மருத்துவச் சான்றிதழ் மற்றும் மருத்துவரின் பரிந்துரைக் கடிதங்களை விண்ணப்பத்தோடு சமர்பிக்க வேண்டும். உங்களுக்கு ஏற்கெனவே இருக்கும் நோய்கள் பற்றிய விவரங்களையும் விரிவாக, தெளிவாகக் குறிப்பிடுவதால் உங்கள் பிரீமியத்தை அதிகமாக்கும் என்றாலும், க்ளெய்ம் என்று வரும்போது பிரச்னை எழாமல் இருக்கும். பாலிசி எடுக்கும்போது பிரீமியத்தைக் குறைக்க உங்கள் நோய் பற்றிய விவரங்களை மறைத்தால் அது நீங்கள் எடுத்த இன்ஷூரன்ஸ் பாலிசியின் அடிப்படை நோக்கத்தையே நேரடியாகப் பாதிக்கும்.
நீங்கள் தனிநபர் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்காமல் ஃப்ளோட்டர் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்கும்போது மேற்கூறிய அனைத்தையும் உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் ஏற்கெனவே உள்ள நோய்களை (ப்ரீ எக்ஸிஸ்டிங் டிஸீஸ்) பற்றிய விரிவான குறிப்புகள் மற்றும் ஏற்கெனவே நோய்வாய்ப்பட்டு குணமான நோய்கள் போன்றவைகளையும் குறிப்பிடுவதால் க்ளெய்ம் தொகை கிடைப்பதில் சிக்கல் வராமல் பார்த்துக் கொள்ளலாம்.
பாடி மாஸ் இண்டெக்ஸ்!
ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுக்கும்போது பாடி மாஸ் இண்டெக்ஸ் கணக்கிடப்படும். இந்த இண்டெக்ஸ்படி, ஒருவர் எவ்வளவு உயரம் இருக்கிறாரோ, அந்த உயரத்துக்கு தகுந்தாற் போல் அவரின் உடல் எடையும் இருக்க வேண்டும். அப்படி இல்லாமல் கூடுதல் உடல் எடை இருந்தால், அது இன்ஷூரன்ஸ் பிரீமியம் அதிகரிக்க காரணமாகும். ஏன் இதைக் கணக்கிடுகிறார்கள் என்றால், அதிகப்படியான உடல் எடை சர்க்கரை நோய்க்கு அடித்தளம். சர்க்கரை நோய் வந்துவிட்டால், படிப்படியாக ரத்த அழுத்தம், இதய நோய்களும் கூடவே வர வாய்ப்பு அதிகம். இதனால் கம்பெனி அதிக பிரீமியம் வசூலிக்க வேண்டியிருக்கும். பிரீமியத்தைக் குறைக்க நம் எடையைக் குறைத்து சொல்லி, பிறகு ஏதாவது க்ளெய்முக்குச்  சென்று, பின்னாளில் இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்குத் தெரிய வந்தால் மொத்த பாலிசியும் ரத்து செய்யப்படும்.
ஹெல்த் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களில் பாலிசி!
ஜெனரல் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள், ஹெல்த் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களின் பாலிசிகளுக்கு இணையாக அதிக க்ளெய்ம்களை தருவதில்லை. உதாரணமாக, ஒரு சில ஜெனரல் இன்ஷுரன்ஸ் நிறுவனங்கள் வழங்கும் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியில் ஆம்புலன்ஸ், மருத்துவர் கட்டணம், சிறப்பு மருத்துவர் கட்டணம், நோயாளிகள் தங்கும் அறை வாடகை போன்றவை களுக்கு க்ளெய்ம்  கிடையாது.
மேலும், ஹெல்த் இன்ஷுரன்ஸ் நிறுவனங்களின் முதல் கடமையே இதுவாக இருப்பதால், பாலிசிதாரரின் தேவையை அறிந்து பல புதிய பாலிசிகளை அறிமுகமும் செய்து வருகின்றன. ஹெல்த் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களின் பாலிசிகளில் மேற்கூறிய அனைத்துக்கும் பாலிசியின் மொத்த க்ளெய்ம் தொகையில் குறிப்பிட்டுள்ள அளவு க்ளெய்ம் தொகை வழங்கப்படுகிறது. உதாரணமாக, பொது மருத்துவரை அணுகினால் மொத்த கவரேஜ் தொகைக்கு 1%, சிறப்பு மருத்துவர்களை அணுகினால் ஒரு நாளுக்கு இவ்வளவு தொகை என்று வழங்கப்படும். மருத்துவ அறையின் வாடகை கவரேஜ் தொகையில் 1% என்று வழங்கப் படுகிறது. இது ஒவ்வொரு ஹெல்த் இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்கும் மாறுபடும்.
இரண்டாவது ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி!
ஒருவர் இரண்டாவது ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்தால் அவர் தன் முதல் பாலிசி பற்றிய விவரங்களை இரண்டாவது பாலிசி எடுக்க இருக்கும் இன்ஷூரன்ஸ் நிறுவனத்திடம் தெரிவிக்க வேண்டும். இரண்டு இன்ஷூரன்ஸ் நிறுவனமும் ஐஆர்டிஏவின் பரிந்துரையின் படி, அதிக கவரேஜ் வழங்கிய நிறுவனம் அதன் கவரேஜ் தொகைக்குத் தகுந்த பங்கு தொகையையும், குறைந்த கவரேஜ் வழங்கிய நிறுவனம் அதற்குத் தகுந்த பங்கு தொகையையும் வழங்கும். உதாரணத்துக்கு, ஒருவர், முதல் பாலிசியில் 2 லட்சம் கவரேஜும், இரண்டாவது பாலிசியில் 1 லட்சம் கவரேஜும் எடுத்திருந்தால், முதல் பாலிசியிலிருந்து மூன்றில் இரண்டு பங்கும் இரண்டாவது பாலிசியில் இருந்து மூன்றில் ஒரு பங்கும் க்ளெய்ம் பெற முடியும். ஆனால், ஒருவர் இரண்டுக்கும் மேற்பட்ட ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசிகளை எடுக்கும்போது க்ளெய்ம் நேரத்தில் எந்த இன்ஷூரன்ஸ் நிறுவனம் எவ்வளவு க்ளெய்ம் வழங்க வேண்டும் என்று இன்ஷூரன்ஸ் நிறுவனங்க ளுக்குள் சிக்கல்கள் ஏற்படும். எனவே, ஒரு தனிநபர் பாலிசியும், ஒரு ஃப்ளோட்டர் பாலிசியும் எடுத்தால் போதுமானது.
கோ-பேமென்ட்!
பாலிசி எடுக்கும்போது கோ - பேமென்ட் என்று ஏதாவது செலுத்த வேண்டுமா என்பதைத் தெரிந்துகொண்டு  எடுங்கள். பல நிறுவனங்கள் சிகிச்சை எடுத்துக் கொள்ளும் தொகையில் 10 - 20% தொகையைக் கோ-பேமென்ட்டாகச் செலுத்த வேண்டும் என்று சொல்கிறது. சில நிறுவனங்கள் இந்தக் கோ-பேமென்ட் இல்லாமலும் க்ளெய்ம் வழங்குகிறது. எனவே, இவற்றைக் கணக்கில் எடுத்துக் கொண்டு பாலிசி எடுங்கள். அதேபோல் வயதானவர்களுக்கு எப்படி கோ-பேமென்ட் கணக்கிடுகிறார்கள் என்று விசாரித்து பாலிசி எடுங்கள்.
க்ளெய்ம் விவரங்கள்!
எந்த மாதிரியான சிகிச்சைகளுக்கு க்ளெய்ம் கிடைக்கும்; எந்த மாதிரியான சிகிச்சைகளுக்கு க்ளெய்ம் கிடைக்காது என்பதையும் தெரிந்துகொண்டு எடுங்கள். உதாரணமாக, நாம் செய்து கொள்ளும் சிகிச்சைகளில் நம் அழகை அதிகப்படுத்தச் செய்யப்படும் கிசிக்கைகளுக்கு க்ளெய்ம் கிடைக்காது. அதோடு ஏற்கெனவே இருக்கும் நோய்களுக்கு எத்தனை ஆண்டுகள் காத்திருப்புக் காலம்  என்பதையும் கவனத்தில் எடுத்துக்கொண்டு பாலிசி எடுப்பது நல்லது. சில நிறுவனங்கள் பாலிசி எடுத்து 30 நாட்களுக்குப் பின் க்ளெய்ம் செய்துகொள்ளலாம் என்று குறிப்பிட்டிருக்கிறது. அதேபோல் ஏற்கெனவே இருக்கும் நோய்களுக்கு எத்தனை நாட்களுக்கு காத்திருப்புக் காலம் என்பதை எல்லாம் கவனித்துப் பாலிசி எடுங்கள். இது உங்கள் க்ளெய்ம் தொகையில் பிரச்னை இல்லாமல் இருக்க வழி வகுக்கும். இந்தக் காத்திருப்புக் காலம் இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்கு நிறுவனம் மாறுபடும்.
சர்க்கரை நோய்..! 
பொதுவாக சர்க்கரை வியாதிக்கு எந்த பாலிசியிலும் க்ளெய்ம் கிடைக்காது. அப்படி க்ளெய்ம் கொடுப்பதாகக் குறிப்பிட்டிருந்தால் எதற்கு எல்லாம் க்ளெய்ம் உண்டு என்று தீர விசாரித்துத் தெரிந்துகொண்டு பாலிசி எடுங்கள். எனவே, சர்க்கரை வியாதி உள்ளவர்கள் பிரத்தியேகமான டயாபெட்டீஸ் பாலிசி எடுத்தால் சர்க்கரை வியாதியால் வரும் அனைத்து நோய்களுக்கும் க்ளெய்ம் கிடைக்கும். சர்க்கரை வியாதிதான் இன்றைய தேதியில் பெரும்பாலான நோய்களுக்கான அறிமுக நோயாக இருக்கிறது. எனவே, அதற்கு தனி பாலிசியை எடுத்துக்கொள்வது நலம்.
எங்கு சிகிச்சை?
பாலிசி எடுத்தவர்கள் சிகிச்சை எடுக்க வேண்டும் எனில், பாலிசி எடுத்த நிறுவனத்தின் நெட்வொர்க் மருத்துவ மனைகளில் இணைவது நல்லது. பணத்தை நாம் செலுத்திவிட்டுப் பின் க்ளெய்முக்கு காத்திருப்பதை விட கேஷ்லெஸ் முறையில் நெட்வொர்க் மருத்துவ       மனைகளில் சிகிச்சை எடுத்துக் கொள்வது பெஸ்ட்.
தெரியப்படுத்துதல்!
முன்கூட்டித் திட்டமிட்டு எடுக்கவுள்ள சிகிச்சைகளை 72 மணி நேரத்துக்குமுன் இன்ஷூரன்ஸ் நிறுவனத்திடம் தெரியப்படுத்த வேண்டும். இல்லை என்றால் உங்கள் க்ளெய்மை நிராகரிக்க இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்கு உரிமை உண்டு.
அதுபோல அவ்வப்போது ஏதாவது புதிய விதிமுறைகள் வந்திருக்கிறதா அல்லது இருக்கும் விதிமுறைகள் மாற்றப்பட்டிருக்கிறதா என்பதை இணையம், நாளிதழ்கள் மற்றும் உங்கள் இன்ஷூரன்ஸ் ஏஜென்ட்டுகள் மூலம் தெரிந்துகொள்ளுங்கள்.
சிறப்பு பாலிசிகள்!
இன்றைய காலத்தில் க்ரிட்டிக்கல் இல்னஸ் பாலிசிகள், மகளிர் பாலிசிகள் என்று பல தரப்பட்ட பாலிசிகளை இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் வழங்கத் தொடங்கி இருக்கின்றன. மேலும், மூத்த குடிமக்களுக்கும் சிறப்பு பாலிசிகளை ஒரு சில நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. ஆகவே, மூத்த குடிமக்களும், இத்தகைய சிறப்பு பாலிசிகளை எடுத்துக்கொள்வது மிகவும் நல்லது.
உதாரணமாக, ஒரு குடும்பத்தில் பலருக்கு இதயம் சம்பந்தப்பட்ட நோய் பாதிப்பு உள்ளது என்றால் வெறும் கார்டியாக் பாலிசியை எடுத்தால் போதும். அதேபோல் தற்போது பெண்களுக்கு என்று சிறப்பு மகளிர் பாலிசிகள் வந்திருக்கின்றன. இந்த பாலிசி மூலம் பெண்களை அதிகம் தாக்கக்கூடிய மார்பகப் புற்றுநோய், கர்பப்பை புற்றுநோய் பெண்களின் மாதவிடாய் பிரச்னைகளின் நோய்களான ப்ரீ மெச்சூர் ஒவேரியன் ஃபெய்லியர், பாலிசிஸ்டிக் ஓவரி போன்ற பிரச்னைகளுக்குக்கூட இந்த பாலிசிகளில் க்ளெய்ம் கிடைக்கும்.
மு.சா.கெளதமன்
நன்றி : நாணயம் விகடன், 07.06.2015  

Tuesday, June 9, 2015

ஃபேஸ்புக்கில் பறிபோகும் பிரைவஸி! பாதுகாப்பது எப்படி?


ஃபேஸ்புக்கில் பறிபோகும் பிரைவஸி! பாதுகாப்பது எப்படி?
***************************************************************

இன்று காலை பல நண்பர்களது ஃபேஸ்புக் கணக்குகளில் இருந்து ஒரு ஆபாச வீடியோ ஒன்று இன்பாக்ஸில் வந்தது. என்ன என்று பார்ப்பதற்குள் என் கணக்கிலிருந்து பலருக்கு அந்த செய்தி பரவிவிட்டது. பின்னர்தான் தெரிந்தது அது வைரஸ் செய்தி எனும் ஸ்பாம். இதேபோல் பலருக்கும் உண்டான அனுபவம் ஸ்டேட்டஸில் வெளிப்பட்டது. 
இதற்கெல்லாம் காரணம் நமது ப்ரைவஸி அமைப்பு சரியாக இல்லாதது தான்.முன்பு எப்போதோ ஒரு ஆப்ஸுக்கு நம் தகவல்களை பயன்படுத்தி கொள்ளலாம் என நாம் வழங்கிய அனுமதிகூட இந்த நிகழ்வுக்கு காரணமாக இருக்கலாம்.இன்றைய சமூக வலைதள உலகில் ப்ரைவஸி என்பது கிட்டத்தட்ட இல்லை என்ற நிலையிலேயே இருக்கிறது. குறிப்பாக நமது தகவல்களை பிறர் தெரிந்து கொள்வது துவங்கி ஒருவரது புகைப்படத்தை முகம் தெரியாத நபர் எடுத்து கொள்வது வரை அனைத்துமே இன்றைய சமூக வலைதளங்களில் எளிதாக இருக்கிறது.
இன்றைய நிலையில் அனைவரும் தகவல்களை ப்ரைவஸியாக வைத்திருப்பது அவசியமாகிறது. குறிப்பாக பெண்கள் தங்கள் தகவல் மற்றும் புகைப்படங்களை பயன்படுத்தாமலோ அல்லது பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டும் என்பதும் இன்றைய நிலையில் அவசியமாகிறது. ஃபேஸ்புக்கும் இதற்கேற்ப ப்ரைவஸி தகவல்களை பாதுகாக்கும் அமைப்பை உருவாக்கியுள்ளது. இதனை எப்படி சரியாக பயன்படுத்துவது என்பது நம்மில் பலருக்கு தெரிவதில்லை. ஃபேஸ்புக்கில் நமது ப்ரைவஸியான விஷயங்களை எப்படி பாதுகாப்பது என்பதை பற்றி பார்ப்போம்.
பாதுகாப்பது எப்படி?
1.பலருக்கு ஃபேஸ்புக் அமைப்பில் தங்களது புகைப்படத்தை மாற்றுவது மற்றும் தங்களை பற்றிய விவரங்களை மாற்றுவது மட்டுமே தெரிந்திருக்கிறது. ஆனால் அதனை தாண்டி ஃபேஸ்புக்கில் ப்ரைவஸி செட்டிங் என்றை அமைப்பு உள்ளது அதில் இருக்கும் விஷயங்களை நாம் பெரும்பாலும் கவனிப்பதே இல்லை. அதில்...
1.நம் தகவல்களை யார் பார்க்க வேண்டும்?

2.நம்மை யார் தொடர்பு கொள்ள வேண்டும்?

3.நம்மை தொந்தரவு செய்பவரை எப்படி தவிர்ப்பது?
இந்த மூன்று கேள்விகளும் இடம் பெற்றிருக்கும். இதனை ஒவ்வொன்றாக பார்த்தால் நம் தகவல்களை நமது நண்பர்கள் பார்க்கலாம்,நண்பர்களது நண்பர்கள் பார்க்கலாம்? அனைவரும் பார்க்கலாம் என்பது போன்ற அமைப்புகள் தரப்பட்டிருக்கும். இதனை சரியாக அமைத்தாலே பாதி பிரச்னைகளை தவிர்க்கலாம். அதற்கு முன்பு சமூக வலை தளங்களில் முகம் தெரியாதவர்களோடு அதிகம் நெருங்கி பழகாமல் இருப்பதும் அவசியம் என்பதை உணர வேண்டும்.
நம்மை யாராவது தொடர்பு கொள்ள வேண்டும் எனில் நம்மிடம் அனுமதி கேட்க வேண்டும் என்ற அமைப்பையும் ஃபேஸ்புக் வைத்துள்ளது அதற்கு நாம் செய்ய வேண்டியது நமது விவரங்களை நமக்கு மட்டும் தெரியும் 'ஒன்லி மீ' அல்லது ''ஃப்ரெண்ட்ஸ் ஒன்லி' அமைப்பாக வைத்திருப்பதன் மூலம் நம் தகவல்கள் தேவையில்லாத நபர்களுக்கு பகிரப்படுவதை தவிர்க்கலாம்.
சமூக வலைதளங்களில் சிலர் அடிக்கடி தொந்தரவு தரும் செய்திகளையோ அல்லது தனிப்பட்ட முறையில் நமக்கு தொந்தரவுகளையும் தர முடியும். அவர்களை ப்ளக் செய்யும் வசதியையும், அவர்களுக்கு நம் கணக்கு கண்களுக்கு தெரியாமல் செய்யவும் செய்ய முடியும்
இது ஒரு புறம் என்றால் தன்னை பிரபலபடுத்தி கொள்ளவும், அதிக லைக்ஸ்கள் வாங்கவும் ஒரு கூட்டம் அனைவரையும் டேக்(TAG) செய்து பதிவுகளை பதிவு செய்து வரும். அதனை தவிர்க்க முடியாமல் பலரும் அவதிபடுவார்கள். அதனை தவிர்க்கவும் ஃபேஸ்புக்கில் வழி உள்ளது. ஃபேஸ்புக் ரிவியூ அமைப்பின் மூலம் உங்களை டேக் செய்யும் பதிவுகளை நீங்கள் பார்த்து சரி என்று சொன்னால் மட்டுமே அது உங்கள் டைம் லைனுக்கு வரும் இல்லையெனில் அவை உங்கள் டைம்லைனில் நிற்காது. 
புகைப்படங்கள் மூலமாக தான் அதிகமாக பிரச்னைகள் வருகின்றன. அப்படி புகைப்படங்களால் பிரச்னை வரும் போது நமது புகைப்படத்தை பதிவு செய்வதை தவிர்க்கலாம். அப்படியே பதிவு செய்தாலும் உங்களுக்கும், உங்கள் நண்பர்களுக்கு மட்டும் தெரியுமாறு அமைப்பை அமைத்து கொள்ளுங்கள். உங்களுக்கு பிரச்னை தரக்கூடியவர்களுக்கு உங்கள் கணக்கு தெரியாதபடி அமைப்பை மாற்றி கொள்ளுங்கள்.
இவையெல்லாம் நாமாக பாதுகாத்து கொள்ளும் ப்ரைவஸி விஷயங்கள் என்றாலும், நம்மை அறியாமல் சில விஷயங்கள் நம் தகவல்களை திருடும். சில வைரஸ்கள் உருவாக்கப்பட்டு உங்களது புகைப்படம் உள்ள வீடியோவை உங்கள் நண்பர் அனுப்பியுள்ளார். என்ற செய்தி உங்கள் இன்பாக்ஸிற்கு வரும் அப்படி வரும் போது அதனை அவசரபட்டு நம் நண்பர் அனுப்பிய வீடியோ தானே என்று க்ளிக் செய்தால் அதே செய்தி உங்கள் நட்பு வட்டாரத்தில் உள்ள அனைவருக்கும் நீங்கள் அனுப்பியது போன்று அனுப்பப்படும். இதில் சில சமயம் ஆபாச செய்திகளும் வருகின்றன. இது உங்கள் தகவல்களை திருடும் நோக்கில் உருவாக்கப்படுபவை தான். சில ஆப்ஸ்களை ரன் செய்யும் போது உங்கள் கணக்கு தகவல்களை எடுத்து கொள்கிறேன் என கேட்கும் அதனை நாம் படிக்க முடியாத அளவுக்கு சிறிய எழுத்தில் கொடுத்திருப்பார்கள். அதனை நாம் படிக்காமல் ஆம் என கூறுவதாலும் நம் ஃபேஸ்புக் பிரைவஸி பறிபோகிறது.
அனைவரும் ஃபேஸ்புக்கில் இனி லாக் இன் செய்து நம் நண்பர்களோடு அரட்டை அடிப்பதற்கு முன் அதில் உள்ள அமைப்புகளை கொஞ்சம் கூர்ந்து கவனித்து பாதுகாப்பாக இருக்க முயற்சி செய்வோம். குறிப்பாக பல பெண்கள் ஃபேஸ்புக் பிரச்னையால் தவறான முடிவை எடுக்கும் நிலையிலிருந்து மீட்க ஃபேஸ்புக்கை கொஞ்சம் கூர்ந்தும், எச்சரிக்கையுடனும் கவனிப்போம்.
ச.ஸ்ரீராம்
நன்றி : விகடன் செய்திகள், 10.06.2015

Monday, June 8, 2015

பி.எஃப்-ல் பணம் எடுத்தால் என்ன நடக்கும்?


பி.எஃப் பணம் எடுத்தால் எப்பொழுதெல்லாம் பணம் செலுத்த வேண்டும்?
******************************************************************************
பிஎஃப் பணம் எடுத்தால் டிடிஎஸ் செலுத்த வேண்டுமா?பதற வைக்கும் புதிய உத்தரவு!
புதிய நிதிச் சட்டம் 2015-ல் 192ஏ என்ற பிரிவை மத்திய அரசு இப்போது புதிதாக அறிமுகப்படுத்தியுள்ளது. இதில், ஐந்து வருடத்துக்குக் குறைவாக பிஎஃப் உறுப்பினராக இருந்து அவருடையை கணக்கிலிருந்து ரூ.30 ஆயிரம் அல்லது அதற்கு அதிகமாகப் பணத்தை எடுக்கும்போது டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படும். இதில் பான் எண் கொடுத்தவர்களுக்கு 10 சதவிகிதம் டிடிஎஸ் (Tax Deducted at Source) பிடித்தம் செய்யப்படும். அதுவே படிவம் 15ஜி, 15ஹெச் சமர்பித்தவர்களுக்கு டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படமாட்டாது. அதிகபட்சமாக டிடிஎஸ் 34.608 சதவிகிதம் பிடித்தம் செய்யப்படும். இந்த விதிமுறை யாருக்கு பொருந்தும், யாருக்குப் பொருந்தாது என்பது குறித்து பிஎஃப் அமைப்பின் சென்னை மண்டல ஆணையர் எஸ்.டி.பிரசாத்திடம் கேட்டோம். விளக்கமான பதிலைத் தந்தார் அவர்.
எப்போது டிடிஎஸ் பிடிக்கப்படாது?
"ஒரு பிஎஃப் கணக்கிலிருந்து இன்னொரு பிஎஃப் கணக்குக்குப் பணத்தை மாற்றும்போது டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படாது. அதாவது, ஒரே ஊழியருக்கு இரண்டு, மூன்று கணக்கு இருந்தால் அல்லது ஒரு நிறுவனத்திலிருந்து வேறு நிறுவனத்துக்கு வேலை மாறிச் செல்லும்போது பழைய பிஎஃப் கணக்கிலிருந்து புதிய பிஎஃப் கணக்குக்குப் பணத்தை மாற்றும்போது டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படாது. மேலும், உடல்நலக் குறைவினால் வேலையை விட்டுப் போகும்போது, நிறுவனத்தை மூடும்போது, புராஜெக்ட் முடிவடைதல் போன்ற காரணங்களினால் பிஎஃப் கணக்கை முடித்துப் பணத்தை எடுக்கும்போது டிடிஎஸ் பிடிக்கப்படாது. தவிர, ஐந்து ஆண்டு சர்வீஸுக்கு பிறகு, பிஎஃப் கணக்கிலிருந்து பணம் எடுக்கும்போது டிடிஎஸ் இருக்காது. அதுவும் அந்த பிஎஃப் கணக்கு, ஒரு கணக்கிலிருந்து இன்னொரு கணக்குக்கு மாற்றியி ருந்தாலும் இது பொருந்தும். ஐந்து வருடத்துக்கும் குறைவாக சர்வீஸ் வைத்திருந்து, அதே நேரத்தில் 30 ஆயிரம் ரூபாய்க்கு குறைவாகப் பணம் எடுக்கும் போது டிடிஎஸ் பிடிக்கப்படாது.
எப்போது டிடிஎஸ் பிடிக்கப்படும்?
ஐந்து வருடத்துக்குக் குறைவாக பிஎஃப் உறுப்பினராக இருந்து அவருடையை கணக்கிலிருந்து ரூ.30 ஆயிரம் அல்லது அதற்கு அதிகமாகப் பணத்தை எடுக்கும்போது மட்டுமே டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படும்'' என்றார்.
15ஜி மற்றும் 15ஹெச் எப்போது ஏற்றுக் கொள்ளப்படும்?
மூத்த குடிமக்களுக்கு (60 வயதுக்கு மேற்பட்டவர்கள்) படிவம் 15ஹெச், மற்றவர்கள் 15ஜி படிவமும் சமர்பிக்க வேண்டும். வருமான வரி வரம்புக்குள் வராதவர்கள் இந்தப் படிவம் கொடுக்க வேண்டும்.
படிவம் 15ஜி மற்றும் 15ஹெச் படிவத்தில் சுயகையொப்பமிட்டு சமர்பிக்கும்போது சிலசமயங்களில் மட்டும் இந்தப் படிவம் ஏற்றுக்கொள்ளப்படும்.
பொதுப் பிரிவினர் ரூ.2.5 லட்சத்துக்கும், மூத்த குடிமக்கள் ரூ.3 லட்சத்துக்கும் மேல் பிஎஃப் தொகை எடுக்கும்போது, 15ஜி மற்றும் 15ஹெச் ஏற்றுக் கொள்ளப்படாது.
பிஎஃப் தொகையை எடுக்க 15ஜி மற்றும் 15ஹெச் படிவத்தைப் பூர்த்திச் செய்யும்போது அதில் பான் எண்ணை குறிப்பிடுவது அவசியம்.
வரிக்கு உட்பட்ட வருமானம் ஏதும் இல்லையெனில் 15ஜி மற்றும் 15ஹெச் படிவத்தைச் சமர்பிக்கலாம்.
பிஎஃப் உறுப்பினர் ஒரு நிறுவனத்தில் தொடர்ச்சியாக 5 வருடமோ அல்லது அதற்கு அதிகமாகவோ வேலை பார்த்த பிறகு பணத்தை எடுத்தால் 15ஜி மற்றும் 15ஹெச் படிவம் கொடுக்கத் தேவையில்லை.
குறிப்பிட்ட சில காரணங்களினால் வேலை இழக்கும்போது பான் கார்டு, 15ஜி மற்றும் 15ஹெச் படிவம் கொடுக்கத் தேவையில்லை.
இந்த டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படுவதால் அதிகமாகப் பாதிக்கப்படுவது அடித்தட்டு மக்கள்தான். அதாவது, சின்னச் சின்ன வேலைகள் செய்வதற்காக சென்னை போன்ற நகரங்களுக்கு வந்து வேலை பார்ப்பவர்களிடம் பான் கார்டு இருப்பதற்கான வாய்ப்புக் குறைவு.
இவர்கள் பிஎஃப் தொகையை க்ளெய்ம் செய்யும்போது அதில் டிடிஎஸ் 34.608 சதவிகிதம் பிடித்தால் ரூ.30 ஆயிரத்துக்கு ரூ.10,382 பிடித்தம் செய்யப்படும்.
இந்தத் தொகையை வரி தாக்கல் செய்துதான் திரும்பப் பெற முடியும். இதுவும் அவர்களுக்குச் சாத்தியம் இல்லை. எனவே, டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படும் வரம்புக்குட்பட்ட தொகையை அதிகப்படுத்துவது அல்லது குறிப்பிட்ட சில துறையில் வேலை செய்பவர்களுக்கு மட்டும் டிடிஎஸ் என வைத்தால் நன்றாக இருக்கும் என்பதே பலரது கருத்து!
வரி செலுத்த வேண்டுமா?
5 வருடத்துக்குக் குறைவாக பிஎஃப் உறுப்பினராக இருந்து பணத்தை எடுக்கும்போது, அந்தப் பணத்துக்கு வரி செலுத்த வேண்டும். அவரவர் வருமான வரி வரம்புக்கு ஏற்றாற்போல்் வரி செலுத்த வேண்டியிருக்கும். இதேபோல பிஎஃப் தொகையில் டிடிஎஸ் பிடித்தம் செய்யப்பட்டிருந்தால்  அதை வருமான வரி கணக்குத் தாக்கலில் காண்பிக்க வேண்டும். வருமான வரிக்கு உட்படாமல் மொத்த வருமானம் இருந்தால் இந்த டிடிஎஸ் தொகையை திரும்பப் பெற முடியும். 
இரா.ரூபாவதி
நன்றி : விகடன் செய்திகள், 07.06.2015

Sunday, June 7, 2015

லேப்டாப் சார்ஜ் தீரும் நிலையில்


லேப்டாப் சார்ஜ் தீரும் நிலையில் பணியை தொடர்ந்து செய்ய என்ன செய்ய வேண்டும்? 
********************************************************************************************


முக்கியமான பணியினை மேற்கொள்ளும் போது உங்களின் லாப்டாப் சார்ஜ் தீரும் நிலையில் இருக்கின்றதா. லாப்டாப் சார்ஜரும் கையில் இல்லையா, உடனே மனம் தளராமல் மீதம் இருக்கும் நேரத்தில் முடிந்த வரை மின்னஞ்சல்களுக்கு பதில் அளிக்க முடியும். இது போன்ற சம்பவங்களில் சிறிது நேரத்திற்கு லாப்டாப் பேட்டரியை நீட்டிக்க என்ன செய்ய வேண்டும் என்பதை தொடர்ந்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

பேட்டரி சேவர் மோடு:
 பேட்டரி தீரும் நிலையில் லாப்டாப் பேட்டரி சேவர் மோடு ஆன் செய்தால் சிறிது நேரத்திற்கு பேட்டரி தாங்கும்.


டிவைசஸ்:
முடிந்த வரை வை-பை, ப்ளூடூத் ரேடியோ, கிராபிக்ஸ் பிராசஸர் போன்ற அம்சங்களை ஆஃப் செய்யலாம். இவ்வாறு செய்யும் போது பேட்டரி பேக்கப் சற்று நேரத்திற்கு அதிகரிக்கும்.

செட்டிங்ஸ்:
வெளிச்சம் அதிகமாக இருக்கும் இடங்களில் லாப்டாப் கீபோர்டு பேக்லைட்டிங்'ஐ ஆஃப் செய்யலாம்.  


ஆப்ஸ்:
 ஹார்டுவேர் மட்டுமின்றி அப்ளிகேஷன்களும் பேட்டரியை பயன்படுத்தும், இதனால் பயன்படுத்தாத ஆப்ஸ்களை ஆஃப் செய்து வைக்கலாம்.


சிம்ப்லிஃபை:
லாப்டாப்பில் பேட்டரி குறைவாக இருக்கும் போது மல்டி டாஸ்கிங் செய்வது முற்றிலும் தவறான விஷயமாகும். இவ்வாறு செய்வது பேட்டரியை எளிதில் தீர்த்து விடும்.




பேட்டரி: 
 நீண்ட நாள் பேட்டரியை பயன்படுத்த அவைகளை சீராக பராமரிக்க வேண்டும். எப்பவும் பேட்டரியை சார்ஜரில் வைக்க கூடாது. லாப்டாப் பேட்டரிகளை சூடான இடங்களில் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

ட்யூன்: 
சீரான இடைவெளியில் லாப்டாப் கம்ப்யூட்டரில் இருக்கும் தேவையற்ற மொன்பொருள்களை அழித்து விடுவது நல்லது. மேலும் வெப் ப்ரவுஸர் கேச்சி மற்றும் பழைய ஃபைல்களையும் அழிக்க வேண்டும்.
ஹார்டுவேர் :
கம்ப்யூட்டரில் சாலிட் ஸ்டேட் டிரைவ் பயன்படுத்தலாம். இவை ப்ளாஷ் மெமரி ஆப்ஷனை பயன்படுத்துவதால் அதிக சக்தியை கம்ப்யூட்டருக்கு வழங்கும்.

பேட்டரி பேக்கப் :
மிகவும் எளிமையான விஷயம் என்னவென்றால் கையில் எப்பவும் கூடுதல் பேட்டரியை வைத்து கொள்ளலாம்.

Thanks to : (Meganathan) TAMIL GIZBOT - 07.06.2015








Saturday, June 6, 2015

பி.எஃப் கணக்கு - பொது கணக்கு எண்



பி.எஃப் கணக்கிற்கு அளிக்கப்படும் பொது கனக்கு எண்

 பிஎஃப் கணக்கிற்கு அளிக்கப்படும் பொதுக் கணக்கு எண் (யுஏஎன்) பல்வேறு துறைகள் அல்லது நிறுவனங்கள் ஒரு தனி நபருக்கு வழங்கும் வெவ்வேறு குறியீட்டு எண்களை இணைக்கும் ஒரு பொதுவான எண்ணாக விளங்கும். புரியலியா? 

அதாவது ஒருவர் வெவ்வேறு கம்பெனிகளுக்கு மாறினாலும் அவரது பி எப் கணக்கு எண் மட்டும் மாறும் ஆனால் இந்தப் பொதுக் கணக்கு எண் மட்டும் புதிய மற்றும் பழைய நிறுவனங்களின் விவரங்களைத் தொடர்புப் படுத்தும். 

இந்த யுஏஎன் எனப்படும் பொதுக் கணக்கு எண்ணின் குறிக்கோள், ஒரே உறுப்பினருக்கு வெவ்வேறு நிறுவனங்களால் வழங்கப்படும் எண்கள் ஒரு பொதுவான எண்ணின் கீழ் தொடர்புப் படுத்தப்படுவது தான். ஒரு உறுப்பினருக்கு ஏற்கனவே இந்த யுஏஎன் எண் ஒதுக்கப்பட்டிருந்தால், அவர் புதிய நிறுவனத்தில் இணையும் போது இந்த எண்ணைக் கொடுக்க வேண்டும். இதன் மூலம் புதிய நிறுவனம் புதிதாகத் தரப்படும் உறுப்பினர் எண்ணை குறித்துக்கொள்ள முடியும்.

1) யுஏஎன் நம்பரைப் பெறுவது எப்படி? 
இது நீங்கள் தற்போது பணிபுரியும் நிறுவனத்தினரால் தரப்படும். அது அவர்களிடம் தயாராக இருக்கும். அதை நீங்கள் இதுவரை பெறவில்லைஎன்றால், உங்கள் ஹெச் ஆர் அல்லது மனிதவளத் துறையை அணுகுங்கள்.

 2) இணையத்தில் விவரங்களைப் பெறுவது எப்படி?
 உறுப்பினர்கள் இந்த யுஏஎன் தொடர்பான உறுப்பினர் இணையத் தளத்தை அணுக வேண்டும். அதாவது http://uanmembers.epfoservices.in என்ற இணையதளத்தில் பெறலாம். முதலில் ஒரு ஒருப்பினர் இங்குத் தரப்பட்டுள்ள ACTIVATE YOUR UAN என்ற தொடர்பை அழுத்தி தன்னுடைய கணக்கை செயல்பட வைக்க அல்லது ஆக்டிவேட் செய்ய வேண்டும். உறுப்பினர்கள் தங்களுடைய யுஏஎன் எண், உங்களுடைய அலைபேசி எண் மற்றும் உறுப்பினர் குறியீட்டு எண்ணை தயாராக வைத்துக்கொண்டு பின்னர் உங்கள் கணக்கை ஆக்டிவேட் செய்ய அந்த இணையதளத்தில் முயற்சிக்கலாம்.

3) யுஏஎன் கார்டை பதிவிறக்கம் (டவுன்லோட்) செய்ய முடியுமா? 
நிச்சயமாக. முதலில் நீங்கள் உங்கள் சரியான யுஏஎன் எண் மற்றும் பாஸ்வேர்டை கொண்டு லாகின் செய்யுங்கள். பின்னர் "Download" மெனுவில் "Download UAN Card" என்ற தொடர்பை அழுத்தவும். இந்தக் குறிப்பிட்ட தொடர்பு மூலமாக யுஏஎன் கார்டை பிடிஎப் வடிவில் பதிவிறக்கம் செய்து பிரிண்ட் செய்து கொள்ளலாம்.

 4) பழைய உறுப்பினர் எங்களுடன் இதனை இணைக்க வேண்டிய அவசியம் என்ன? இதன் மூலம் பழைய உறுப்பினர் எண் மற்றும் விவரங்களை ஒரே கணக்கின் கீழ் கொண்டுவர முடிவதுடன் பழைய தகவல்களை உடனடியாகப் பெற இது உதவும்.

 5) ஒருவர் பணி மாற்றம் அடைந்தால் அவர் செய்யவேண்டியது என்ன? 
அடுத்தடுத்து நீங்கள் சேரும் நிறுவனங்களில் உங்கள் யு ஏ என் எண்ணை கொடுத்தால் போதும். 

6) பதிவிறக்கம் அல்லது பிரிண்ட் செய்யும் வழிகள் 
1. லாகின் செய்யவும் (உங்கள் யுஏஎன் எண்-தான் எப்போதும் உங்கள் யூசர் நேம் அல்லது உபயோகப் பெயர்)
2. டவுன்லோட் மெனுவில் "Download UAN card" என்ற தொடர்பை அழுத்துக.
3. அதன்பின் யுஏஎன் கார்டை திறக்கையில் டவுன்லோட் என்ற தொடர்பை அழுத்தவும். 

இப்ப எல்லாம் தெளிவாகியிருக்கும். ஒடனே போய் உங்களுடைய கணக்கை ஆக்டிவேட் செய்து கணக்கை பராமரிக்கும் வேலையை எளிதாக்குங்கள்.

நன்றி :  (பிரசன்னா) குட் ரிட்டன்ஸ், 06.06.2015

Friday, June 5, 2015

செல்போன்கள் வெடிக்காமல் இருக்க


செல்போன்கள் வெடிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

மொபைல் போன்களின் பயன்பாடு இன்றியமையாத ஒன்றாக இருக்கும் கால கட்டத்தில் அவைகளின் மூலம் ஏற்படும் ஆபத்துகளும் அதிகமாகவே இருக்கின்றது. சமீபத்தில் ஸ்மார்ட்போன்கள் வெடித்து சிதறும் சம்பவங்கள் அதிகளவு நடைபெறுகின்றன. 

ஸ்மார்ட்போன்கள் ஏன் திடீரென வெடிக்கின்றன, அவை வெடிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பனவற்றை தொடர்ந்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

மொபைல் போன்:
புதிதாக மொபைல் வாங்கும் போது முடிந்த வரை பிரான்டெட் கருவியாக இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

வெடித்தல்:
 சில சமயங்களில் வெளிநாட்டு நம்பர்களில் இருந்து வரும் மிஸ்டு கால்களுக்கு மீண்டும் அழைக்கும் போது போன்கள் வெடிப்பதாக கூறப்படுகின்றது. மேலும் போனினை சார்ஜரில் இருக்கும் போது அழைப்புகளை மேற்கொள்வதும் அவைகளை வெடிக்க செய்கின்றன. 

என்ன செய்யலாம்?
 முடிந்த வரை போன் சார்ஜரில் இருக்கும் போது பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். மேலும் பேட்டரி பழுதாகி இருந்தால் அதனை உடனே மாற்றி விட வேண்டும்.

குறைந்த விலை: 
முடிந்த வரை விலை குறைவான போன்களை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. பெரும்பாலும் விலை குறைந்த போன்களில் சீன ஹார்டுவேர்களே பயன்படுத்தப்படுகின்றன, இவை பிரான்டெட் இல்லாத காரணத்தினால் அவை எப்பவும் ஆபத்தை விளைவிக்கும். 

இண்டர்நெட்:
 போன்களில் இண்டர்நெட் பயன்படுத்தும் போது உங்களுக்கு அறிமுகம் இல்லாத தளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்வதை தவிர்க்க வேண்டும். மேலும் பொது இடங்களில் கிடைக்கும் வை-பை பயன்படுத்துவதும் ஆபத்தில் முடியலாம்.

முன் எச்சரிக்கை:
 போன்களை உங்களது உடலில் இருந்து சற்று தள்ளி வைத்து பயன்படுத்தலாம். முடிந்த வரை ஸ்பீக்கர் அல்லது ப்ளூடூத் ஹெட்போன்களை பயன்படுத்தலாம்.

ஈரம் நீக்குவதற்கு:
 போனில் தண்ணீரில் விழுந்தால் உடனடியாக அதனினை தனித்தனியாக பிரித்து காய வைக்க வேண்டும். அதிகபட்சம் 12 - 24 மணி நேரத்திற்கு போனினை நன்கு காய வைத்து அதன் பின் ஆன் செய்ய முயற்சிக்கலாம்.

பயன்பாடு:
 போனினை சிலர் முகங்களோடு நெருக்கமாக வைத்து பயன்படுத்துவர், இவ்வாறு செய்வது வாய் புற்று நோய் மற்றும் தூக்கமின்மைக்கு வழி வகுக்கும்.

நன்றி : Meganathan, Tamil GIZBOT 05.06.2015










Thursday, June 4, 2015

காண்டாக்ட்லெஸ் டெபிட்கார்டு


காண்டாக்ட்லெஸ் டெபிட்கார்டு பற்றி தெரிந்து கொள்வோமா?

சென்னை: வங்கிகள் மேலும் மேலும் இந்த புதிய தொடர்பில்லா டெபிட் மற்றும் கிரேடிட் கார்டுகளை நாடத் தொடங்கியுள்ளன. ஐசிஐசிஐ வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கிகளைத் தொடர்ந்து எஸ்பிஐ வங்கியும் இத்தகைய கார்டுகளை வெளியிட்டுள்ளன. 

இவற்றில் ஸ்வைப் மெஷினில் தொடர்பு ஏற்படுத்தத் தேவையில்லாத முத்திரை இந்த கார்டில் பொறிக்கப்பட்டுள்ளது. இதனை உபயோகிப்பது மிகவும் எளிது என்பதுடன், நீங்கள் உங்கள் பின் நம்பரை உபயோகப்படுத்த வேண்டியதில்லை.

 இது போன்ற கார்டுகள் என்எஃப்சி, அதாவது நியர் ஃபீல்ட் கம்யூனிகேஷன் (NFC) எனப்படும் விரைவான பரிமாற்றத்திற்கு உதவும் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகின்றன. 

இவற்றை எப்படிப் பயன்படுத்துவது? 
**************************************
இந்த கார்டுகளில் உள்ள தொடர்பில்லா முத்திரை அலைவரிசைகளின் மூலம் ஸ்வைப் மெஷின் அருகில் எடுத்து செல்லும்போது அதிலுள்ள பச்சை விளக்கு எறிந்து பரிவர்த்தனை முடிவுற்றதைத் தெரிவிக்கும். இவற்றை சாதாரண விசா டெபிட் கார்டுகளைப் போல அதிக மதிப்புள்ள பரிவர்த்தனைகளில் பின் நம்பரை உபயோகித்துச் செய்யவும் முடியும்.

 இந்த புதிய வசதி உடைய கடைகள் அல்லது விற்பனைக் கூடங்களில் இந்த வகைக் கார்டுகளை பயன்படுத்தலாம். வங்கிகள் குறைந்த மதிப்புள்ள பரிவர்த்தனைகளையும் அனுமதிக்கும். இது போன்ற பரிவர்த்தனைகளையும் அதன் வரம்புகளையும் அங்கீகரிக்கும் உரிமை அவற்றை வழங்கும் வங்கிகளைச் சார்ந்திருக்கும். 

ஒரு நாளைக்கு, வாரத்திற்கு அல்லது மாதத்திற்கு இது போன்ற சிறிய மதிப்புள்ள பரிவர்த்தனைகள் எத்தனை செய்ய இயலும் என்பதை வங்கிகளே தீர்மானிக்கும். நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய சில விஷயங்கள் வாடிக்கையாளர்கள் இந்த பின் உபயோகம் இல்லாத பரிவர்த்தனைகள் என்பது இதுபோன்ற வசதியுள்ள வர்த்தக் கூடங்களில் ரூபாய் 2000 வரை உச்ச வரம்பு கொண்டவை.

 கார்டு தொலைந்தாலோ அல்லது திருடப்பட்டாலோ பின்பற்ற வேண்டிய நடைமுறைகளைப் பற்றி புகார் அளிக்க இணையத்தின் மூலமோ, தொலைபேசியிலோ அல்லது எஸ் எம் எஸ் அல்லது ஐவிஆர்எஸ் மூலமோ உடனடியாக தெரிவித்துவிட வேண்டும்.

நன்றி :குட்ரிட்டன்ஸ் - 05.06.2015

Wednesday, June 3, 2015

வாட்ஸஅப் பற்றி


வாட்ஸஅப் பற்றி தெரிந்து கொள்வோமா?

     ஷேர் செய்ய   ட்வீட் செய்ய   ஷேர் செய்ய    கருத்துக்கள்  மெயில் ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் அனைவரும் கட்டாயம் பயன்படுத்தும் குறுந்தகவல் செயலியாக வாட்ஸ்ஆப் விளங்குகின்றது. வாட்ஸ்ஆப் மக்களின் தொலைதொடர்பு முறையை செயலி வாயிலாக எளிமையாக்கியிருக்கின்றது என்றும் கூறலாம். தொழில்நுட்ப ரீதியில் வளர்ச்சியடைந்த நாடுகளின் பட்டியல் அதிக செலவில்லாமல் இண்டர்நெட் வசதி இருந்தால் உலகின் எந்த இடத்திற்கும் தொடர்பு கொள்ள முடியும் என்ற நிலையை வாட்ஸ்ஆப் உருவாக்கியுள்ளது. இதெல்லாம் எங்களுக்கு தெரியாதா என்கின்றீர்களா. இவை தெரிந்திருந்தாலும் வாட்ஸ்ஆப் குறித்து உங்களுக்கு தெரியாததும் இருக்கின்றது. அந்த வகையில் வாட்ஸ்ஆப் குறித்து நீங்கள் அறிந்திராத சில வியப்பூட்டும் தகவல்களை தொடர்ந்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்.. 

 ப்ரொபைல் போட்டோ:
 உங்க நண்பரின் ப்ரொபைல் போட்டோவை வாட்ஸ் அப்பில் மாற்ற முடியும், ஆனால் அது உங்களுக்கு மட்டும் தான் தெரியும். அதற்கு உங்களுக்கு பிடித்த போட்டோவை 561*561 அளவில் எடுத்து அதில் உங்க நண்பர் எண்ணை பதிவு செய்து மெமரி கார்டு- வாட்ஸ் அப் - ப்ரொபைல் போட்டோ சென்று ஏற்கனவே இருக்கும் போட்டோவை ரீ ப்ளேஸ் செய்தால் வேலை முடிந்தது.

வாட்ஸ் ஆப் அக்கவுன்ட்:
 ஆண்ட்ராய்டில் டூயல் சிம் பயன்படுத்துபவர்கள் இரு வாட்ஸ் ஆப் அக்கவுன்டகளை ஆரம்பிக்க நீங்க ஸ்விட்ச்மீ என்ற அப்ளிகேஷனை பயன்படுத்தலாம்.

மெசேஜ்: 
தவறுதலாக டெலீட் செய்த மெசேஜ்களை மீட்க உங்க எஸ்டி கார்டு சென்று வாட்ஸ் ஆப் - டேட்டாபேஸ் இல் நீங்கள் டெலீட் செய்த அனைத்து மெசேஜ்களும் இருக்கும்.

ஆட்டோ இமேஜ் டவுன்லோடு:
 வாட்ஸ் அப்பில் வரும் போட்டோ, வீடியோ தானாக டவுன்லோடு ஆவதை கட்டுப்படுத்த செட்டிங்ஸ் - சாட் செட்டிங்ஸ் - மீடியா ஆட்டோ டவுன்லோடு சென்று உங்களுக்கு தேவையான ஆப்ஷனை தேர்வு செய்து கொள்ளலாம்.

மொபைல் நம்பர்
 உங்க மொபைல் நம்பர் என்டர் செய்யாமல் வாட்ஸ் ஆப் பயன்படுத்த முடியும் என உங்களுக்கு தெரியுமா?

வாய்ஸ் நோட்டிபிக்கேஷன்:
 வாட்ஸ் ஆப் நோட்டிப்பிக்கேஷன்களை படிக்க நேரமில்லை என்றால் வாய்ஸ் ஃபார் நோட்டிபிக்கேஷன் செயலி மூலம் குரல் வடிவில் நோட்டிபிகேஷனஅகளை பெற முடியும்.

வாட்ஸ் ஆப் ஸ்டாட்ஸ்: 
வாட்ஸ் ஸடாட் ஃபார் வாட்ஸ் ஆப் அப்ளிகேஷன் மூலம் நீங்கள் வாட்ஸ் ஆப் டவுன்லோடு செய்ததில் இருந்து மேற்கொண்டவற்றை அறிந்து கொள்ள முடியும்.

வாட்ஸ் அப் அக்கவுன்ட்:
 வாட்ஸ் அப் அக்கவுன்டை டெலீட் செய்ய செட்டிங்ஸ் - அக்கவுன்ட் - டெலீட் கொடுத்தால் வேலை முடிந்தது.

போன் நம்பர்: 
வாட்ஸ் ஆப்பில் போன் நம்பரை மாற்றினால் பழைய எண்ணில் இருக்கும் மெசேஜ்கள் அழிந்து விடும். அவ்வாறு அழியாமல் இருக்க செட்டிங்ஸ் - அக்கவுன்ட் - சேன்ஞ் நம்பர் கொடுத்தால் புதிய நம்பரிலும் மெசேஜ் அழியாமல் இருக்கும். 

Written by: Meganathan Published: Thursday, June 4, 2015, 
நன்றி : TAMIL GIZBOT