disalbe Right click

Saturday, October 29, 2016

ஆயுள் தண்டனை கைதிகள்


ஆயுள் தண்டனை கைதிகள் - என்ன செய்ய வேண்டும்?

ஆயுள் தண்டனைக் கைதி ஒருவர் 17 ஆண்டுகளாக சிறை வாசம் அனுபவித்து வருவதால் தன்னை விடுவிக்கக் கோரி தொடர்ந்த வழக்கில் அவரே வாதாடி வெற்றி பெற்றார். 

இதனால், தமிழக சிறையில் 10 ஆண்டுகளுக்கு மேலாக தண்டனை அனுபவித்து வரும் ஆயுள் கைதிகள் முன்கூட்டியே விடுதலையாகும் வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் 1999-ம் ஆண்டு 16 வயது பள்ளி மாணவி பலாத் காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் பொறியாளர் பி.வீரபாரதி(44) என்பவருக்கு விருதுநகர் நீதிமன்றம் தூக்குத் தண்டனை வழங்கியது. 

மேல் முறையீட்டில் வீரபாரதிக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப் பட்டது. 

தற்போது அவர் பாளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், 17 ஆண்டுகள் சிறைவாசம் முடித்துவிட்டதால் தன்னை முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி தமிழக அரசுக்கு மனு அனுப்பினார். 

இது நிராகரிக்கப்பட்டதால் உயர்நீதிமன்ற கிளையில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். 

இந்த மனு முதல் அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் வீரபாரதி தனக்காக வழக்கறிஞர் வைத்துக்கொள்ளாமல் அவரே வாதாடினார்.

இந்த வழக்கில் நீதிபதிகள் பிறப் பித்த உத்தரவு:
தமிழ்நாடு சிறை விதி 341(3)-ல் 3 ஆண்டுகளுக்கு மேல் சிறை வாசம் அனுபவித்த ஆயுள் கைதி களை முன்கூட்டியே விடுவிக்க பரிசீலிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

 ஆனால், இந்த விதி பாலியல் பாலத்காரம், போர்ஜரி, கொள்ளை, பொருளாதாரக் குற்றங்கள், கடத்தல், உணவு கலப்படம், பயங்கர வாதம் மற்றும் மாநில நலனுக்கு எதிரான குற்றங்களில் தொடர்பு உடையவர்களுக்குப் பொருந்தாது.

ஆனால் விதி 341(2)-ல் ஆயுள் தண்டனை கைதிகளில் 10 ஆண்டுகள் சிறைவாசம் முடித்தவர்களை முன்கூட்டியே விடுதலை செய்ய பரிசீலிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

அதே பிரிவில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டவர்களை 14 ஆண்டுகள் சிறைவாசத்துக்குப் பிறகு விடுதலை செய்ய பரிசீலிக்கலாம் என சொல்லப்பட்டுள்ளது.

இருப்பினும் முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி ஆயுள் கைதிகள் அனுப்பிய மனுவை விதி 341(3)-ஐ காரணம் காட்டி அதிகாரிகள் நிராகரித்துள்ளனர். 

ஆயுள் கைதிகள் முன்கூட்டியே விடுவிக்கப்பட உரிமை உண்டு என நீதிபதிகள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.

வீரபாரதி அளித்த மனுவை நிராகரித்து அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தும், மனுதாரரின் மனுவை 8 வாரங்களில் பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் உள்துறை செயலருக்கு உத்தரவிட்டனர்.

மேலும், வீரபாரதிபோல் முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி மனு அளித்து, அறியாமையால் நீதிமன் றத்தில் வழக்கு தொடராமல் இருக்கும் பிற ஆயுள் கைதிகளின் மனுக்களை நிராகரித்து பிறப்பித்த உத்தரவை உள்துறை செயலர் மறு சீராய்வு செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த வழக்கால் வீரபாரதி மட்டுமின்றி, முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி மனு அளித்துள்ள 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ள பிற ஆயுள் கைதிகளும் விடுதலையாக வாய்ப்பு உள்ளது

நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் – 29.10.2016

Friday, October 28, 2016

ஏ.டி.எம்.மில் கள்ள நோட்டு


ஏ.டி.எம்.மில் கள்ள நோட்டு - என்ன செய்ய வேண்டும்?

வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் ஏடிஎம்-ல் பணம் எடுத்து, அருகில் உள்ள மளிகைக் கடையில் பொருட்களை வாங்கிவிட்டு, 500 ரூபாய் பணத்தை நீட்டுகிறீர்கள்.
‘சார், இது கள்ள நோட்டு, செல்லாது. வேறு நோட்டைக் கொடுங்க!’ என்று கடைக்காரர் கேட்டதும் உங்களுக்குப் பகீரென்கிறது.
சில சமயங்களில் வங்கியிலிருந்து நாம் வாங்கிவரும் பணம்கூட கள்ள நோட்டு என்று சில இடங்களில் வாங்க மறுத்துவிடுகிறார்கள்.
இது மாதிரி கள்ள நோட்டு உங்களிடம் வந்து சேர்ந்தால், என்ன செய்யவேண்டும், யாரிடம் புகார் தர வேண்டும் என தனியார் வங்கி அதிகாரி விஜயகுமாரிடம் விசாரித்தோம்.
ஏடிஎம்-ல் கள்ள நோட்டு!
“ஏடிஎம் அல்லது வங்கியில் கள்ள நோட்டுகள் வருவதற்கு இப்போது வாய்ப்புக் குறைவு. பொதுவாக, அனைத்து வங்கிகளும் ஏடிஎம்-ன் மூலம் விநியோகிக்கவேண்டிய பணத்தை, குறிப்பிட்ட வங்கியின் கருவூலம் மூலமே அனுப்பி வைப்பார்கள்.
இந்தக் கருவூலத்தில் அழுக்கடைந்த, கிழிந்த மற்றும் கள்ள நோட்டுகள் அனைத்தும் ஆராயப்படுகின்றன. இந்தக் கருவூலத்திலேயே கள்ள நோட்டுகளை ஆராய்வதற்காக சாதனங்களும் உள்ளன.
ஏடிஎம்-க்கு அனுப்பப்படும் அனைத்து ரூபாய் நோட்டுகளும் முழுவதுமாக சோதனை செய்த பின்பே அனுப்பப்படும். ஆகையால், ஏடிஎம்-ல் கள்ள நோட்டுகள் கிடைப்பதற்கு வாய்ப்புகள் மிகக் குறைவு” என்றவர், வங்கி வாடிக்கையாளர்கள் கவனிக்கவேண்டிய விஷயங்கள் குறித்து விளக்கிச் சொன்னார்.
கள்ள நோட்டுக்குச் சீல்!
ஏடிஎம்-ல் கள்ள நோட்டுகள் கிடைத்தால், கீழ்க்கண்ட வழிமுறைகளை வாடிக்கையாளர்கள் பின்பற்ற வேண்டியது அவசியம்.
* வாடிக்கையாளர்கள் முதலில் எது கள்ள நோட்டு, எது நல்ல நோட்டு என்பதை நன்கு தெரிந்துவைத்திருக்க வேண்டும்.
* ஏடிஎம்-ல் கள்ள நோட்டுகள் கிடைத்தால், எந்த ஏடிஎம்-ல் பணம் எடுக்கப்பட்டதோ, அதன் அருகிலுள்ள அந்த வங்கிக்குச் செல்லவேண்டும். வாடிக்கையாளர் மூலம் கள்ள நோட்டுகள் வங்கிகளுக்கு வந்தால், அந்தப் பணத்தை முதலில் பரிசோதித்து அது கள்ள நோட்டாக இருக்கும் பட்சத்தில், ‘கள்ள நோட்டு’ என்று பணத்தின் மீது சீல் வைக்கப்படும். அதன்பின் வாடிக்கையாளரின் முகவரி மற்றும் அடையாளச் சான்றை வாங்கி, அவரிடம் கையெழுத்து வாங்கப்படும்.
* ஒவ்வொரு வங்கியிலும் கள்ள நோட்டுக்கு என்றே தனி பதிவேடு, ஒன்று வங்கி மேலாளரிடம் இருக்கும். அதில் வாடிக்கையாளர் கொண்டுவந்த கள்ள நோட்டு குறித்த விவரம் பதிவு செய்யப்படும். மீண்டும் வாடிக்கையாளருக்கு அந்தக் கள்ள நோட்டு திரும்ப வழங்கப்பட மாட்டாது. ஏடிஎம்-ல் எடுத்த கள்ள நோட்டுக்குப் பதிலாக வேறு ரூபாய் நோட்டு வழங்கப்படும்.
* இறுதியாக, வங்கியாளர்கள், வாடிக்கையாளர் வழங்கியதில் 3, 4 கள்ள நோட்டுகள் இருந்தால், அது குறித்த விவரங்களை போலீஸ் ஸ்டேஷனில் தெரியப்படுத்தி, எஃப்ஐஆர் பதிவு செய்வார்கள்.
அதே சமயம், வாடிக்கையாளர் ஏடிஎம்-லிருந்து கள்ள நோட்டை எடுத்திருந்தால் அதை வங்கிகளில் நிரூபிக்கவேண்டும்.
கள்ள நோட்டு தொடர்பாக ஒருவேளை வங்கி அதிகாரிகள் உங்களுக்கு முறையான பதிலை அளிக்கவில்லை; கள்ள நோட்டுக்குப் பதில் வேறு பணத்தை வழங்கவில்லை எனில், காவல் நிலையத்தில் அது குறித்து நீங்கள் புகார் செய்யலாம்.
ஏடிஎம் ரிஜிஸ்டரில் புகார்!
இதுவே, வாடிக்கையாளர்கள் இரவு நேரத்தில் ஏடிஎம்-ல் பணம் எடுக்கச் சென்று அதில் கள்ள நோட்டுகள் இருந்தால், அங்குள்ள ஏடிஎம் காவலரிடம் இதுகுறித்த தகவல்களைத் தெரிவித்துவிட்டு, சிசிடிவி கேமரா முன் ஏடிஎம் ரிஜிஸ்டரில் உங்களுக்குக் கள்ள நோட்டுகள் கிடைத்துள்ளதாக அந்தப் புத்தகத்தில் புகார் செய்யவேண்டும்.
அதன்பின் அருகிலுள்ள போலீஸ் ஸ்டேஷன் சென்று, ஏடிஎம்-ல் கள்ள நோட்டு கிடைத்ததாக எஃப்ஐஆர் பதிவு செய்யவேண்டும்.
இந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸார் விசாரணை மேற்கொள்வார்கள். விசாரணையில் வங்கித் தரப்பில் தவறு இருந்தால், உங்களுடைய பணம் திருப்பி வழங்கப்படும்.
வங்கியில் கள்ள நோட்டுகள் வந்தால்..!
வங்கி கவுன்டர்களில் கள்ள நோட்டுகள் வருவதற்கும், வாடிக்கையாளர்களுக்குக் கிடைப்பதற்கும் வாய்ப்புகள் உள்ளன.
உதாரணத்துக்கு, வாடிக்கையாளர் ஒருவர் 10,000 ரூபாயை கவுன்டரில் செலுத்திவிட்டு, அதில் ஒரு சில நோட்டுகள், கள்ள நோட்டாக இருக்கும் பட்சத்தில், வங்கியாளர் அந்தப் பணத்தை பரிசோதிக்காமல், அந்தப் பணத்தை மற்ற ஒரு வாடிக்கையாளருக்கு வழங்கும்போது கள்ள நோட்டுகள் கிடைக்க வாய்ப்புள்ளது.
வங்கியில் இருந்து கள்ள நோட்டுகளை வாங்கி இருந்தால், அதற்கு ஆதாரம் வழங்கினால், அதற்கு உண்டான பணம் திரும்ப வழங்கப்படும்.
ஆர்பிஐ விதிமுறை!
வங்கிகள் தரப்பில் தவறு இருந்தால், அந்தப் பணம் வாடிக்கையாளருக்கு உடனடியாக கிடைக்கும். இல்லையெனில் வாடிக்கையாளருக்குக் கள்ள நோட்டுக்குப் பதில் வேறு பணம் கிடைக்காது.
ஆனால், ஏடிஎம் அல்லது வங்கிகளைத் தவிர, வேறு ஒரு ஏதாவது இடத்தில் கள்ள நோட்டுகள் ஒருவருக்குக் கிடைத்தால், அவர் அந்தப் பணத்தை இழந்ததற்குச் சமம்.
ஆர்பிஐ விதிமுறைகளின்படி, ஒன்றிரண்டு கள்ள நோட்டுகளை விவரம் தெரியாமல் வைத்து இருப்பது என்பது பெரும் குற்றமில்லை;
ஆனால், கள்ள நோட்டை வைத்துக்கொண்டு மற்றவரை ஏமாற்றவேண்டும் என்ற நோக்கத்தில் அதை விநியோகிக்கக்கூடாது. அப்படி விநியோகித்தால், அது சட்டப்படி தவறு.
அந்த வாடிக்கையாளரைக் கைது செய்து நடவடிக்கை எடுக்கவும் அதிகாரம் உண்டு’’ என்கிற எச்சரிக்கையுடன் முடித்தார்.
இனியாவது உங்களிடம் வரும் 500, 1,000 ரூபாய் நோட்டுக்கள் நல்ல நோட்டுகள்தானா என்பதைப் பரிசோதித்து வாங்குங்கள்!
நன்றி : நாணயம் விகடன் - 30.10.2016



Wednesday, October 26, 2016

ஒரே கிளிக்கில் ஓவர் டிராப்ட் கடன்


ஒரே கிளிக்கில் ஓவர் டிராப்ட் கடன் - என்ன செய்ய வேண்டும்?

ஒரே க்ளிக்கில் ஓவர் டிராப்ட் கடன்… வாங்கலாமா, கூடாதா?

அவசரத் தேவைக்கு சிலர் வங்கியில் சம்பள ஓவர் டிராப்ட் கடன் வாங்குவார்கள். இந்த வாடிக்கையாளர்களைக் குறிவைத்து தனியார் நிறுவனங்கள் உடனடிக் கடன் வழங்க ஆரம்பித்திருக்கின்றன. 

முதல் முறையாகக் கடன் வாங்கும்போது ஐந்தே நிமிடங்களில் தரப்படும் இந்தக் கடன், இரண்டாவது முறையிலிருந்து ஒரு சில நொடிகளில் கடன் வசதி என அறிவிப்பை வெளியிட்டு சம்பளதாரர்களை கிறங்கடிக்கின்றன.

உடனடிக் கடன்!

மாதச் சம்பளம் வாங்கும் வாடிக்கையாளரைக் குறி வைத்து, அவர்களுடைய அவசரத் தேவைக்கு பணம் வழங்குவதே இது போன்ற நிறுவனங்களின்  நோக்கம். வாடிக்கையாளர் வாங்கும் கடனுக்கு மாதம் 1.8-2%. வட்டி. 

முதன் முறையாகக் கடன் வாங்கும்போது பரிசீலனைக் கட்டணம் ரூ.250-300, 

இரண்டாவது முறையிலிருந்து ரூ.150 வசூலிக்கப்படுகிறது. 

அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரை இந்தக் கடன் வழங்கப்படுகிறது. 

சராசரியாக ரூ.50,000 கடன் வழங்கப்படுகிறது.

இந்த நிறுவனங்கள் வழங்கும் கடன் வசதியில் என்ன விசேஷம் எனில், அவசர பணத் தேவைக்காக அலையத் தேவையில்லை. நண்பர்களிடமோ, உறவினர்களிடமோ கடன் கேட்டு தர்மசங்கடத்தை உருவாக்க வேண்டியதில்லை. இந்த நிறுவனங்களின் ஆப் மூலம் உடனடியாகவும், எளிதாகவும் கடன் கிடைக்கும். 

ஆனால், இதுபோன்ற நிறுவனங்களை நம்பலாமா? இதன் சாதகம், பாதகம் குறித்து நிதி ஆலோசகர் முத்துக்கிருஷ்ணனிடம் கேட்டோம். விளக்கமாக எடுத்துச் சொன்னார்.

அதிக வட்டி!

“இதுபோன்ற நிறுவனங்கள் வழங்கும் கடன் சேவையில் சாதகமான விஷயங்களைவிட, பாதகமான விஷயங்களே அதிகமாக உள்ளன. ஏனெனில் இந்த நிறுவனத்தில் குறைந்தபட்சம் வட்டியே மாதத்துக்கு 2% என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகையால் வருடத்துக்கு 24% வட்டி கட்டவேண்டும். 

வங்கிகளில் சம்பள ஓவர் டிராப்டுக்கு அதிகபட்சமாக 16%  என்றளவில்தான் கடன் வழங்குகிறார்கள். ஆகையால், இவ்வளவு அதிக வட்டிக்கு இதுபோன்ற கடனை வாங்கத் தேவையில்லை. உதாரணத்துக்கு, இதில் 10,000 ரூபாய்க்குக் கடன் வாங்குகிறோம் எனில், ரூ.150 பரிசீலனைக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதுவே கடனில் 1.5% ஆகும். 

இது தவிர ஒவ்வொரு மாதமும் 2 சதவிகித வட்டி செலுத்தவேண்டும்.

சிபில் ஸ்கோர் பாதிக்கும்!

இந்தக் கடனுக்கு ஒவ்வொரு முறையும் பரிசீலனைக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்தக் கடன் சுலபமாகக் கிடைப்பதால், இது நாளடைவில் நமக்குப் பழகிவிடும். கடன் வாங்குவது எளிதாக இருப்பதால், வாடிக்கை யாளருக்கும் அடிக்கடி இந்தக் கடனை வாங்கி, எப்போதும் வட்டி கட்டும் நிலை ஏற்படும்.

இதுபோன்ற கடனை அடிக்கடி வாங்கினாலோ, திரும்பச் செலுத்தாமல் இருந்தாலோ, வாடிக்கை யாளர்களுடைய சிபில் ஸ்கோர் குறைய வாய்ப்புண்டு. ஏனெனில் சிபில் ஸ்கோரைப் பொறுத்தவரை அடிக்கடி கடன் வாங்கினாலே அது தவறாக எடுத்துக் கொள்ளப்படுகிறது.

இதுபோன்ற நிறுவனங்கள் மூலம் ஆயிரம், இரண்டாயிரத்துக்குக் கடன் வாங்கி, அதன்பின் முறையாகக் கடனைத் திருப்பிச் செலுத்தாமல் இருந்தால்கூட, எதிர்காலத்தில் வீட்டுக் கடனுக்கோ அல்லது அவசரத் தேவைக்கோ வங்கிகள் கடன் வாங்கும்போது கடன் கிடைக்காமல் போகலாம்.

இந்தக் கடனை வாங்கியபின் திரும்பச் செலுத்தாவிட்டால் அல்லது காலதாமதம் ஏற்பட்டால் எந்த மாதிரியான நடவடிக்கையை மேற் கொள்வார்கள் என்பது தெரியவில்லை. வாடிக்கையாளரைக் கைது செய்வார்களா அல்லது அலுவலகத்துக்கே வந்து மிரட்டல் விடுப்பார்களா என்பது போன்ற விவரங்களும் தெரியாது. 

இதுபோன்ற நிறுவனங்கள் ஆர்.பி.ஐ வரம்புக்கு உட்பட்டதாகவும் தெரிய வில்லை. ஆகையால், இந்த இணையதளம் மூலம் அவசரத் தேவைக்கு வேண்டுமானால் கடன் வாங்கலாம். ஆனால், தேவையில்லாத செலவுக்கு கடன் வாங்காமல் இருப்பதே சிறந்தது” என்றார்.

மாதச் சம்பளம் வாங்குபவர்களுக்கு நிதிச் சிக்கல் தொடர்ந்து இருந்தாலும், எளிதில் கிடைக்கிறது என்பதற்காக இதுபோன்ற நிறுவனங்களின் வலையில் சிக்காமல் இருப்பதே நல்லது. உடனே திரும்பக் கட்டிவிட முடியும் என்கிற நம்பிக்கையில், அவசரத் தேவைக்கு மட்டுமே இதனைப் பயன்படுத்தலாம்.

சோ.கார்த்திகேயன்
நன்றி – நாணயம் விகடன் – 30.10.2016

பிரதமர் அலுவலகத்தை தொடர்பு கொள்ள


பிரதமர் அலுவலகத்தை தொடர்பு கொள்ள என்ன செய்ய வேண்டும்?

நமது உரிமை

நாட்டின் பிரதமர் அலுவலகத்தையும் பிரதமரையும் தொடர்பு கொள்வது எப்படி என்ற தகவல் நாட்டுக் குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் அவசியமாக தெரிந்திருக்க வேண்டிய ஒன்று .

நமது தேவைகளையும் உரிமைகளையும் பெற்றுக்கொள்வது எப்படி சட்டப்படி உரிமையோ அதை பயன்படுத்தி நாம் பிரதமரை அல்லது அவர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு தேவையானதை பெற்றுக் கொள்ள முடியும்.

பிரதமர் அலுவலகத்தை பொதுமக்கள் தொடர்பு கொள்ள பல்வேறு வழிகள் உள்ளது. கடிதம், பேக்ஸ், இ.மெயில். பேஸ்புக், டுவிட்டர், வெப்சைட் மற்றும் மொபைல் மூலம் நாட்டு குடிமக்கள் ஒவ்வொருவரும் பிரதமர் அலுவலகத்தை தொடர்பு கொள்ள முடியும்.

அப்படி தொடர்பு கொள்வதால் எந்தவிதமான சட்ட நடவடிக்கையும் எடுக்க முடியாது. மக்களை ஆட்சி செய்பவர், மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் இந்த வசதியை அரசயலமைப்புச் சட்டம் வழங்கியுள்ளது.

கடிதம்

பிரச்னை உள்ள மக்கள் அதன் தீர்வுக்காக பிரதமர் அலுவலகத்திற்கு கடிதம் எழுத முடியும் அந்தக் கடிதம் அலுவலகத்தைச் சென்றடைவதுடன் அதில் பணியாற்றும் ஊழியர்கள் படித்து அதிகாரிகள் மட்டத்தில் கேட்க வேண்டிய விஷயமாக இருந்தால் அவர்களே அதற்கு தீர்வு காண்பார்கள்.

தவிர்க்க முடியாமல் பிரதமர்தான் அதைப் பார்க்க வேண்டும் என்று விருப்பப்பட்டால்,. பிரதமரின் கவனத்திற்கு கொண்டு செல்வார்கள். பிரதமருக்கு கடிதம் எழுத விரும்பினால்,

Prime minister office,
south Block,
raisina hil,
New delhi, 110001 ( India ),
Phone num - 91-1123012312 .
பேக்ஸ் - 91-11-23019545, 23016857.

இணையம் :
நமது பிரதமர் நரேந்திரமோடி அவருக்காக உருவாக்கப்பட்டுள்ள அங்கீகரிக்கப்பட்ட இணையதளம் மூலம் மக்களோடு தொடர்பு கொண்டு பேசும் பழக்கத்தை கொண்டுள்ளார். இணைய தளத்தின் மூலம் முதல்முறை கவனத்திற்கு யார் தகவல் கொடுத்தாலும் சமயம் கிடைக்கும்போது அதைப் பயன்படுத்தி பேசுவார். அதன்படி பிரதமரின் இணையதளத்தை பயன்படுத்த விரும்புவோம் https://www.pmindia.gov.in/en/interact-with-honble-pm மற்றும் www.narendramodi.in ஆகிய இணையதள முகவரி மூலம் தொடர்பு கொள்ளலாம் அல்லது நேரடியாக அரசாங்க இணையதளத்தில் தொடர்பு கொள்ள விரும்புவோர் https://mygov.nic.in/signup லாகின் செய்ய வேண்டும்.

பிரதமர் அலுவலகத்தை தொடர்பு கொள்ள முடியும் ஒரு வேளை இணையதளத்தில் ஏதாவது தொழில்நுட்ப பிரச்னை இருந்தால்

web Information manager,
south Block,
raisina hil,
New delhi, 110001 ( India ),
Phone num - 91-1123012312 .
பேக்ஸ் - 91-11-23019545, 23016857.

இதைத்தவிர பிரதமரை பணம் செலவு செய்து தொடர்பு கொண்டு பேச முடியாதவர்கள், மிஸ்டுகால் கொடுத்து அல்லது எஸ்.எம்.எஸ். மூலம் தொடர்பு கொள்ளும் வசதி கடந்த 2015ம் ஆண்டு மூலம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி 011-3006 3006 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

சமூக வலைத்தலங்கள்

நாட்டில் இதற்கு முன் இருந்த எந்த பிரதமரும் செயல்படுத்தாத வகையில் பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைத்தலங்கள் மூலம் பொதுமக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வசதியை அறிமுகம் செய்துள்ளார். அதன்படி
https://facebook.com/pmoindia மற்றும் https://www.facebook.com/narendramodi
இதன்மூலம் தொடர்பு கொள்ளலாம். மேலும் டுவிட்டர் மூலம் தொடர்பு கொள்ள விரும்புவோர் https://twitter.com/PMOIndia மற்றும் http://twitter.com/narendramodi
இதன்மூலம் தொடர்பு கொள்ளலாம்.

* https:/www.youtube.com/user/narendramodi/abouut.
* http://www/weibo/com/u/5581682776,
* https://wwwin/linkedin/com/narendramodi/
* https://wwwin/instagram/com/narendramodi/
* narendramodi1234@gmail.com

இதனிடையில் சமீபத்தில் பிரதமரை பொதுமக்கள் எந்த சங்கடமும் இல்லாமல் பிரச்னைகளை தீர்த்துக்கொள்ள புதியதாக செயலியை அறிமுகம் செய்துள்ளார். அதன்படி * https://play.google.com/store/apps/details?=com. narendramodiapp&hl=en என்ற லிங்கில் லாகின் செய்ய வேண்டும். மேலும் பிரதமர் வீட்டிற்கு கடிதம் எழுத விரும்புவோர்
honourable prime minister of india.
No-7, racecource road,
teenmurti marg area,
New delhi - 110 011.

மத்திய அமைச்சர்கள்

சுஷ்மா ஸ்வராஜ் - வெளியுறவுத்துறை அமைச்சர்

இ.மெயில் - 2009vidisha@gmail.com

அலுவலக முகவரி

No 8,
safdarjung lane,
New delhi 110 011

சமூக வலைத்தளம்

* https://teitter.com/sushmaswaraj
* https://www.facebook.com/sushmaswarajBJP

சுரேஷ்பிரபு

அலுவலக முகவரி

No 256-A,
railbhavan,
raisnaroad,
Newdelhi-110 011

செல்போன் எண் - 91-11-2338 9155,

இணையதளமுகவரி fora@rb.railnet.gov.in

வீட்டு முகவரி

B-21,
sadhana.
16th Road. ghar-west,
Mumbai -400052
Maharashtra,
India

* https://twitter.com/sureshprabhu/
* https://www.faceboo.com/railministersureshprabhu/

நன்றி : தினகரன் நாளிதழ் – 25.10.2016





பட்டாசு விபத்துகளுக்குக் காரணம் தமிழக அரசே


பட்டாசு விபத்துகளுக்குக் காரணம் தமிழக அரசே - ஐகோர்ட்
என்ன செய்ய வேண்டும்?

விதி மீறிய பட்டாசு கடைகளுக்கு உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கூறிய ஐகோர்ட் நீதிபதிகள், பட்டாசு விபத்துகளுக்கு அரசின் அலட்சிய போக்கே காரணம் என்று கண்டனம் தெரிவித்துள்ளனர். 

விருதுநகர் மாவட்டம், சிவகாசி பட்டாசு கடையில் கடந்த அக். 20ல் ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் பலியாகினர். இந்த விபத்து குறித்து ஐகோர்ட் கிளை நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, எம்.வி.முரளிதரன் ஆகியோர் தாமாக முன்வந்து பொதுநல மனுவாக விசாரித்தனர். 

இந்த மனுவுடன், கும்பகோணம் அருகே பட்டாசு ஆலையில் கடந்த 2013ல் நடந்த விபத்தில் உயிரிழந்த 10 சிறுவர்களின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்குவது, திருச்சி மற்றும் கரூர் மாவட்டத்தில் அனுமதியின்றியும், விதிகளை மீறியும் பட்டாசுகள் விற்பனை செய்வது குறித்த மனுக்களும் சேர்த்து நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்டன.

திருச்சி கலெக்டர் பழனிச்சாமி, போலீஸ் துணை கமிஷனர் மயில்வாகனன், விருதுநகர் எஸ்பி ராஜராஜன், தஞ்சாவூர் டிஆர்ஓ சந்திரசேகரன், மத்திய அரசின் இணை தலைமை வெடிபொருள் கட்டுப்பாட்டு அதிகாரி ஏ.கே.யாதவ், இணை தலைமை கட்டுப்பாட்டு அலுவலர் சுந்தரேசன் ஆகியோர் ஆஜராகி விளக்கமளித்தனர். 

நீதிபதிகள்: 

திருச்சியில் பட்டாசு கடை விதிமீறல் குறித்து வெடிபொருள் கட்டுப்பாட்டு அதிகாரிகள் பலமுறை கடிதம் எழுதியுள்ளனர். உங்கள் தரப்பில் என்ன நடவடிக்கை மேற் ெகாள்ளப்பட்டது. 

உதவி கமிஷனர்:

97 கடைகள் ஆய்வு செய்யப்பட்டன. சில கடைகள் விதிமீறல் உள்ளது.

நீதிபதிகள்: 

எந்த அடிப்படையில் விதிமீறல் என்கிறீர்கள்? 

உதவி கமிஷனர்: 

கடைகளுக்கு இடையே 3 மீட்டர் தூரமும், மருத்துவமனை, கோயில் போன்ற பகுதிகளில் 50 மீ தூரமும் இருக்க வேண்டும். சில இடங்களில் அதுபோல் இல்லை.

நீதிபதிகள்

வெடிபொருள் விதியை பின்பற்றி, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டுமென ஏற்கனவே நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீங்கள் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? 

உதவி கமிஷனர்: 

தனிப்படைகள் அமைத்து ஆய்வு செய்யப்பட்டது. விதிமீறலில் ஈடுபட்டுள்ள கடைகளுக்கான அனுமதியை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. 

நீதிபதிகள்

கரூரில் ஆய்வு செய்யப்பட்டதா? 

சிறப்பு தாசில்தார்: 

41 கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சில கடைகளில் விதிமீறல் உள்ளது. 

நீதிபதிகள்:

 மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்த போட்டோவில் மேல்பகுதியில் வங்கியும், கீழ் பகுதியில் பட்டாசு கடைகளும் உள்ளன. வங்கி பொதுமக்கள் அதிகளவு வந்து செல்லும் பகுதி. அங்கு எப்படி அனுமதித்தீர்கள்? 

சிறப்பு தாசில்தார்: 

விதிமீறல் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

நீதிபதிகள்:

 கும்பகோணம் சம்பவம் 2013ல் நடந்துள்ளது. ஏன் இதுவரை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவில்லை. 

இன்ஸ்பெக்டர்: 

இன்று (நேற்று) தாக்கல் செய்யப்பட்டது.

நீதிபதிகள்

நீதிமன்றம் நடவடிக்கை எடுத்த பிறகு அவசர, அவசரமாக தாக்கல் செய்து, எண் பெற்றுள்ளீர்கள். மாஜிஸ்திரேட் படித்து பார்த்தாரா என தெரியவில்லை. அதே நேரம் இறந்தவர்களின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? 

சிறப்பு தாசில்தார்: 

3 பேருக்கு உழவர் பாதுகாப்பு திட்டத்தில் நிதியுதவி செய்யப்பட்டது.

 நீதிபதிகள்

நீங்கள் கூறுவது நிதியுதவி, நீதிமன்றம் கேட்பது இழப்பீடு. சிவகாசியில் கடந்த 2010 முதல் தற்போது வரை இறப்பு நிகழ்ந்த விபத்துகள் எத்தனை நடந்துள்ளது. 

எஸ்பி

58 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 16 வழக்கின் விசாரணை

சிபிஐ விசாரணையா?

நீதிபதிகள் அளித்த உத்தரவில், சிவகாசி விபத்து வழக்கை எஸ்பி மேற்பார்வையில் சிவகாசி டிஎஸ்பி விசாரிக்க வேண்டும். அதன் விபரத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். அறிக்கையில் கூறப்பட்டுள்ள விபரத்தின் அடிப்படையில் சிபிஐ விசாரணைக்கு மாற்றுவது குறித்து நீதிமன்றம் முடிவு செய்யும் என தெரிவித்தனர்.

நன்றி : தினகரன் – 27.10.2016

தனியார் சட்டக் கல்லூரி தொடங்க விதிக்கப்பட்ட தடை ரத்து


தனியார் சட்டக் கல்லூரி தொடங்க விதிக்கப்பட்ட தடை ரத்து 
என்ன செய்ய வேண்டும்?

தனியார் சட்டக் கல்லூரிகள் தொடங்க விதிக்கப்பட்ட தடை நீங்கியது - உயர் நீதிமன்றம் உத்தரவு.

தமிழகத்தில் தனியார் சட்டக்கல்லூரிகள் தொடங்க தமிழக அரசு கொண்டுவந்த தடைச் சட்டத்தை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. 

இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சமூக நீதிப்பேரவை சார்பில் வழக்கறிஞர் கே.பாலு தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தின் மக்கள் தொகை 5 கோடிக்கு மேல் உள்ளது. தற்போது தமிழகத்தில் 65 ஆயிரம் வழக்கறிஞர்கள் உள்ளனர். 

ஒவ்வொரு ஆண்டும் 3 ஆயிரத்து 500 புதிய வழக்கறிஞர்கள் பார் கவுன்சிலில் பதிவு செய்கின்றனர். 

தற்போது தமிழகத்தில் 10 சட்டக் கல்லூரிகள் மட்டுமே உள்ளன. 

கடந்த ஆண்டு சட்டக் கல்லூரியில் சேர விரும்பிய 6 ஆயிரத்து 36 பேருக்கு இடம் கிடைக்கவில்லை. இதனால் அவர்கள் வெளிமாநில சட்டக் கல்லூரி களில் சேர்ந்து படிக்கின்றனர்.

இதையெல்லாம் கருத்தில் கொண்டு தான் தமிழகத்தில் தனியார் சட்டக் கல்லூரிகள் தொடங்க வேண்டுமென கோரிக்கைகள் எழுந்தன. 

இந்நிலையில் தமிழக அரசு கடந்த 2014 ஜூலை 30-ம் தேதி தமிழகத்தில் தனியார் சட்டக் கல்லூரிகள் தொடங்குவதை தடுக்கும் விதமாக ஒரு சட்ட மசோதாவை சட்டப் பேரவையில் கொண்டு வந்தது. இந்த தடைச் சட்டம் கடந்த 2014 செப்டம்பர் 30-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. 

தமிழக அரசு கொண்டு வந்துள்ள இந்தத் தடைச் சட்டம் அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது. எனவே அதை ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி அடங்கிய முதல் அமர்வு நேற்று பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் தனியார் சட்டக் கல்லூரிகள் தொடங்க ஒட்டுமொத்தமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. சட்டக் கல்வியை நியாயமான கட்டணத்தில் வழங்க வேண்டும் என்பதற்காக இந்த தடைச் சட்டத்தை கொண்டு வந்துள்ளதாக அரசு தரப்பில் கூறப்படுகிறது. 

ஆனால் போதுமான எண்ணிக்கையில் அரசு கல்லூரிகள் இல்லை. இந்தச் சட்டத்தை பொருத்தவரை எத்தனை ஆண்டுகளுக்கு இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறித்தும் தெளிவாக தெரிவிக்கவில்லை. 

அரசியல் சாசனத்தை பாதுகாப்பதற்காக இந்த விஷயத்தில் உயர் நீதிமன்றம் தலையிட வேண்டியதுள்ளது. எனவே தமிழக அரசு கொண்டு வந்த இந்தத் தடைச் சட்டம் அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என்பதால் அதை ரத்து செய்கிறோம்.

அண்டை மாநிலமான ஆந்திராவில் 37 சட்டக் கல்லூரிகளும், கர்நாடகாவில் 98 சட்டக் கல்லூரிகளும் உள்ளன. 

ஆனால், 700 பொறியியல் கல்லூரிகள் உள்ள தமிழகத்தில் 7 அரசு கல்லூரிகள், 3 நிகர் நிலைப் பல்கலைக்கழகங்கள் என மொத்தம் 10 சட்டக் கல்லூரிகளே உள்ளன.

தனியார் சட்டக் கல்லூரி தொடங்க வன்னியர் கல்வி அறக்கட்டளைக்கு வழங்கப்பட்ட தடையில்லாச் சான்று இன்னும் அமலில்தான் உள்ளது. 

இதற் காக அந்த அறக்கட்டளை 8 முறை வழக்கு தொடர்ந்துள்ளது. எனவே வன்னியர் சங்கத்துக்கு அனுமதி மறுத்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்கிறோம். சட்டக் கல்லூரி தொடங்குவதற்காக அவர்கள் அளித்த விண்ணப்பத்தை 4 வாரங்களுக்குள் பரிசீலித்து அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகம் தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும். 

மேலும் வன்னியர் சங்கம் சார்பில் சட்டக் கல்லூரி தொடங்க அளிக் கப்பட்ட விண்ணப்பத்தை காலதாமத மாக நிராகரித்ததற்காக தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் ரூ. 20 ஆயிரத்தை வழக்கு செலவாக மனுதாரருக்கு வழங்க வேண்டும்.

ஆண்டுதோறும் எத்தனை வழக்கறிஞர்கள் தேவைப்படுவர்? என்பது குறித்து இந்திய பார் கவுன்சில் ஒரு ஆய்வை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உச்சநீதி மன்ற தலைமை நீதிபதியும் ஏற்கெனவே கூறியுள்ளார். 

அப்போதுதான் எத்தனை சட்டக்கல்லூரிகள் தேவைப்படும்? தற்போதுள்ள கல்லூரிகள் போதுமான தாக உள்ளதா? என்பது குறித்து தெரிய வரும் என உத்தரவிட்டனர்.

நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் – 27.10.2016