disalbe Right click

Wednesday, November 2, 2016

பெண்களின் இன்ஷியல் - திருமணத்திற்குப் பிறகு

திருமணத்திற்குப் பிறகு பெண்களின் இன்ஷியல் - என்ன செய்ய வேண்டும்?
பெண்கள் பெரும்பாலும், மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் பெயர் பதிவுசெய்யும்போது, கணவர் பெயர் சேர்த்தோ, அவரது பெயரின் முதல் எழுத்தை இனிஷியலாகவோ கொடுக்கப் பழகியிருக்கிறார்கள்.
அதே நினைவில், தேர்வு அல்லது வேலைக்கு விண்ணப்பம் எழுதும்போதும், தங்களின் இனிஷியலாக கணவர் பெயரின் முதல் எழுத்தை எழுதிவிடுகிறார்கள். அவர்களின் கல்வி, பிறப்புச் சான்றிதழ்களிலோஅப்பா பெயரின் முதல் எழுத்தே இன்ஷியலாக இருக்கும்போது, அலுவல் ரீதியான குழப்பங்கள் ஏற்படுகின்றன.
சமீபத்தில், வங்கித் தேர்வு எழுத வந்த பெண்களுக்கும் இதே சிக்கல் நேர, திருமணச் சான்றிதழ், பிறப்புச் சான்றிதழ் எனக் கேட்கப்பட்டிருக்கிறது. இதனாலேயே சிலர் தேர்வு எழுத முடியாமல்கூட போய்விட்டது.
இனிஷியல் மாற்றம்பெண்களுக்கு மட்டும் ஏன்?
ஆண்களுக்குத் திருமணத்துக்கு முன்போ பின்போ ஒருபோதும் இனிஷியல் பிரச்னைகள் வருவதில்லை. பெண்களுக்கு மட்டும் ஏன் இந்த மாற்றம்? வழக்கறிஞர் அருள்மொழியிடம் கேட்டோம்.
பொது சிவில் சட்டம் பற்றி இப்போது அதிகம் விவாதிக்கப்படுகிறது. உண்மையில் பொது சிவில் சட்டம் என்பதை ஆண், பெண் இருவருக்கும் பொதுவானதாக மாற்றுவதே சரியாக இருக்கும். பெண்களுக்கு இனிஷியல் பிரச்னை எப்போது வந்தது? அவர்கள் படிக்கவும் வேலைக்கும் செல்லும்போதுதான்.
ஒரு பெண் திருமணத்துக்கு முன் தந்தைக்கும், திருமணத்துக்குப் பின் கணவனுக்கும், கணவன் இறந்துவிட்டால் மகனுக்கும் கட்டுப்பட்டிருக்க வேண்டும் எனும் சிலரால் வகுக்கப்பட்ட வரையறைகளே, பெண்கள் தங்கள் சுயத்தை இழந்து நிற்கக் காரணம்.
மதங்கள் பெண்கள் பெயர்களை இழக்கச் செய்கின்றனவா?
இந்துக்களில் ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு முன்பு வரை கணவர் பெயரைக் கூட பெண்கள் சொல்ல மாட்டார்கள். திருமணப் பத்திரிகைகளில் மணமக்களின் தந்தை பெயர் மட்டுமே இருக்கும்.
கிறிஸ்தவ மதத்தில் திருமணத்துக்குப் பின், அந்தப் பெண்ணின் பெயரே மறைந்துவிடுகிறது. எலிஸபெத் எனும் பெண் டேனியலைத் திருமணம் செய்தபின், மிஸஸ் டேனியல் என்றே அழைக்கப்படுகிறார்.
இஸ்லாம் முறையில் முன்பெல்லாம் திருமணப் பத்திரிகையில் பெண்ணின் பெயருக்குப் பதில்அழகிய மணமகளைஎன்றுதான் இருக்கும். இந்த ஆண்மைய சமூகப் பழக்கங்களின் தொடர்ச்சியாகவே கண வரின் பெயர் இனி ஷியலாக பெண்களுக்கு வந்து சேர்ந்திருக்கிறது.
அரசியலமைப்புச் சட்டப்படி
* ஒரு பெண், ஆணைப் போலவே திருமணத்துக்கு முன்னும் பின்னும் தன் தந்தையின் இனிஷியலோடு, ஒரே இனிஷியலோடு இருக்க முடியும்.
* ஒரு பெண் தன் தந்தையின் பெயரைத்தான் இனிஷிய லாக வைத்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. தன் தந்தையின் பெயரோடு, தாய் பெயரையும் இணைத்து இனிஷியலாக வைத்திருக் கலாம். அல்லது, தந்தை பெயர் இல்லாமல் தாய் பெயரை மட்டும்கூட இனிஷியலாக வைத்திருக்கலாம்.
* இன்ஷியலைத் தேர்வு செய்யும் உரிமையை அரசியலமைப்புச் சட்டம் பெண்களுக்கு வழங்கியுள்ளதுஎன்று தெளிவுபடுத்தினார் அருள்மொழி.
அது சுயமரியாதை சார்ந்தது!
ஒரு பெண் இனிஷியல் மாறுவது என்பது கல்வி மற்றும் வேலை சார்ந்தது மட்டுமல்ல, அவரது சுய மரியாதை சார்ந்ததும்கூட. திருமணத்துக்குப் பிறகு தன் நேசத்துக்கு உரிய தந்தையை தன் பெயரிலிருந்து பிரிவது நிஜமாகவே வலி தரும் விஷயம்தான்.
பெண்ணியச் செயற்பாட்டாளர் ஓவியா வின் பார்வை இது
நேசித்து திருமணம் செய்திருந்தாலும்கூட, தன் இனிஷியலை மாற்றிக் கொள்ளும்போது மனம் குறுகுறுக்கவே செய்யும். அது உளவியலாக அந்தப் பெண்ணை நிச்சயம் பாதிக்கும்.
திருமணம் ஆனபிறகு, பெண்கள் பலரும் தாங்களாகவே கணவரின் பெயரைச் சேர்த்துக்கொள்கிறார்கள். இது அவசியமற்றது என்பதே என் கருத்து. சில வீடுகளில் ஆண்கள் வற்புறுத்தி அவர் பெயரை இணைக்கச் சொல் வதையும் பார்க்க முடிகிறது.
இந்தியாவில் அப்பாவின் பெயரை இனிஷியலாக்கிக் கொள்வதே வழக்கமாக உள் ளது. அம்மாவின் பெயரைச் சேர்ப்பதே இல்லை. கேரளா வின் சில பகுதிகளில் விதி விலக்காக அம்மாவின் பெயரை இணைக்கிறார்கள்.
ஒரு பெண்ணின் தந்தை சரி யில்லாதவராக, குடும்பத்தை விட்டு ஓடியிருந்தாலும்கூட அவரின் பெயரை அந்தப் பெண் இறுதிவரை சுமக்கவே வேண்டியிருக்கிறது. இதில் அம்மாவின் பெயரையும் இனிஷியலாகக் கொள்ளும் பழக்கத்தை பலரும் முன் வைப்பதேயில்லை.
என் மகனின் பெயர் ஜீவசகாப்தன். அவருக்கு என் பெயர் மற்றும் கணவரின் பெயரின் முதலெழுத்தையும் சேர்த்து .வி.ஜீவசகாப்தன் என்று பள்ளியில் சேர்த்தோம். பள்ளி யில் ஏதேனும் ஒரு பெயரை மட்டும் வைக்க வேண்டும் எனச் சொன்னபோது, ‘அப்படி யென்றால் அவன் அம்மாவின் பெயரே இருக்கட் டும்என்றார் என் கணவர். பிறகு இருவரின் பெயருடன் பதிவு செய்தார்கள்.
இப்போது என் பேத்தியின் பெயரும் எஸ்.ஜெ.இதய சிற்பி என அம்மா-அப்பா இருவர் பெயரின் முதலெழுத்தோடு தான் பதிந்திருக்கிறோம்.”
ஆண்களுக்கு மட்டுமல்லபெண்களுக்கும் தனித்த அடை யாளம் இருக்கிறது. அதை இழக்காமல் வாழ்வோம்!
------------------------------------------------------------------------------------வி.எஸ்.சரவணன்
நன்றி : அவள்விகடன் - 15.11.201

Tuesday, November 1, 2016

அன்னை தெரசா நினைவு திருமண நிதியுதவி திட்டம்


அன்னை தெரசா நினைவு திருமண நிதியுதவித் திட்டம்
என்ன செய்ய வேண்டும்? 
பெண்களுக்கு அரசு திருமண நிதி உதவி திட்டங்களை செய்து வருகிறது. ஆதரவற்ற பெண்களுக்கு அரசு வழங்கும் அன்னை தெரசா நினைவு திருமண நிதிஉதவி திட்டத்தைப் பற்றிய தகவல்களைத் தெரிந்து பயன் பெறுங்கள்.
விண்ணப்பம்
அன்னைதெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண நிதியுதவித் திட்டம் என்ற விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் இணைத்து உங்கள் பகுதியில் இருக்கும் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் கொடுக்க வேண்டும்.
நிதி விபரம்
ஆதரவற்ற படிக்காதப் பெண் என்றால் ரூபாய் 25000க்கான காசோலையும் தாலிக்கு 4 கிராம் தங்கமும் வழங்கப்படும். படித்தப் பெண் என்றால் ரூபாய் 50,000க்கான காசோலையும் தாலிக்கு 4 கிராம் தங்கமும் வழங்கப்படும்.
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
பெற்றோரை இழந்து, திருமணம் செய்து கொள்ளப்போகும் பெண்கள் விண்ணப்பிக்க முடியும். திருமணத்தன்று நிதியுதவி பெறும் பெண்ணுக்கு 18 வயது நிறைவு பெற்றிருக்க வேண்டும்.
எப்போது விண்ணப்பிக்க வேண்டும்?
இத்திட்டத்தின் கீழ் பயன் பெற வேண்டுமானால் குறிக்கப்பட்ட திருமண தேதிக்கு 40 நாளுக்கு முன்னரே விண்ணப்பிக்க வேண்டும். திருமணத் தேதியன்றோ அல்லது திருமணம் முடிந்த பின்போ அளிக்கப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டது.
தகுதி
பட்டதாரிப் பெண்களுக்கான திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற விண்ணப்பம் செய்கிறீர்கள் என்றால் விண்ணப்பிக்கும் பெண் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியிலோ, பல்கலைக் கழகத்திலோ, தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களிலோ படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். படிக்காத ஆதரவற்ற பெண்களுக்கு எந்த நிபந்தனையும் இல்லை.
இணைக்க வேண்டியவை
சட்டமன்ற அல்லது பாராளுமன்ற உறுப்பினர்களால் வழங்கப்பட்ட ஆதரவற்ற பெண் என்பதற்கான சான்று. திருமணம் செய்து கொள்ளப்போகும் பெண்ணின் வயதுச்சான்று. தாய் தந்தையின் இறப்புச்சான்று. விண்ணப்பிக்கும் பெண்ணின் வருமானச்சான்று அல்லது பாதுகாவலரின் வருமானச்சான்று.
குறிப்பு
நீங்கள் விண்ணப்பித்த தேதியில் இருந்து 15 நாட்களுக்குள் உங்கள் விண்ணப்பம் பரிசீலிக்கப்படும். இது தொடர்பான மேலும் அதிக தகவலுக்கு உங்கள் பகுதியில் இருக்கும் மாவட்ட சமூகநலத்துறையையோ அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தையோ அணுகுங்கள்.

----------------------------------------------------------------------------------------------------------------- சூரியா கோமதி.

நன்றி : விகடன் செய்திகள் – 02.11.2016



தொகுப்பு வீடுகள் - விபரங்கள்


தொகுப்பு வீடுகள் - விபரங்கள் - என்ன செய்ய வேண்டும்?
மக்கள் நலனுக்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்துகிறார்கள். அந்த திட்டங்கள் மக்களுக்கு நேரடியாக சென்று செல்கிறதா? என்றால் முழுமையாக இல்லை என்ற பதில் கிடைக்கிறது. இதற்கு காரணம் திட்டம் தொடர்பான தகவல் மக்களுக்கு தெரியவில்லை.
அதை தெரிவிக்க வேண்டிய அதிகாரவர்க்கத்தினரும் மெத்தனம் காட்டுகிறார்கள். தேவையில்லாத பிரச்னைக்கெல்லாம் தெருவில் இறங்கி போராட்டம் நடத்ததும் அமைப்பினர் மக்களுக்கு தேவையான தகவல்களை கொண்டு சேர்ப்பதில் அக்கரை எடுத்து கொள்வதில்லை.
இந்நிலையில் அரசாங்கத்தின் திட்டங்களை மக்கள் முன் கொண்டு செல்லும் நோக்கத்தில் சமூக கண்ணோட்டத்துடன் நமது தினகரன் நாளிதழில் வாரம்தோறும் செவ்வாய்கிழமை அன்று சட்டம் ஒரு எட்டும் கனி என்ற பெயரில் சிறப்பு கட்டுரை வெளியிடுகிறோம். அதன்படி இவ்வாரம் மாநிலத்தில் வாழும் ஏழை குடும்பத்தினருக்கு மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தி வரும் ‘‘தொகுப்பு வீடு’’ திட்டம் தொடர்பாக தகவல் கொடுக்கப்படுகிறது.
தார்மீக உரிமை:
நமது இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் நாட்டில் குடிமகனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் உண்ண உணவு, உடுக்க உடை, உறங்க உறைவிடம் ஆகிய மூன்றும் கட்டாயம் இருக்க வேண்டும். இல்லாதவர்களுக்கு அரசாங்கம் அதை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்பதை மிகவும் அழுத்தமாக சொல்லப்பட்டுள்ளது. ஆனால் நாட்டில் 40 சதவீதம் பேர் மட்டுமே சொந்த வீட்டில் வாழ்வதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது. பலர் வாடகை வீடுகளிலும், சிலர் பாழடைந்த கட்டிடங்கள், திறந்த வெளியில் டெண்ட் அமைத்து வாழ்கிறார்கள்.
மாநகரங்கள், நகர பகுதியில் கண்நோக்கி பார்க்கும் இடமெல்லாமல் குடிசைகள் அமைத்து வாழ்ந்து வருகிறார்கள். இந்நிலையில் நாட்டில் வீடில்லாத ஏழைகளுக்கு படிப்படியாக வீடு கட்டி கொடுக்கும் தொகுப்பு வீடு திட்டம் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் மத்திய அரசு அறிமுகம் செய்தது. அதன்படி மத்திய மாநில அரசுகளின் கூட்டு முயற்சியில் பல்வேறு பெயர்களில் தொகுப்பு வீடு திட்டம் செயல்படுத்தப்பட்டது.
இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு நிதியாண்டிலும் ஒவ்வொரு கிராமத்தில், 20 வீடு என்ற வகையில் பட்ஜெட்டில் பணம் ஒதுக்கீடு செய்து வீடுகள் கட்டிக் கொடுக்கப்படுகிறது.

இத்திட்டத்தில் அரசுக்கு சொந்தமான நிலமோ அல்லது தனியார் நிலத்தை வாங்கி அதில் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயனாளிகளை கிராம பஞ்சாயத்துகள் தேர்வு செய்து அதை மாவட்ட பஞ்சாயத்துக்கு சிபாரிசு செய்யும், அதை தாலுகா, மாவட்ட பஞ்சாயத்து முதன்மை செயல் அதிகாரிகள் பரிசீலனை செய்து பின் ஆன்லைன் மூலம் மாநில வீட்டு வசதி வாரியத்திற்கு அனுப்பி வைப்பார்கள்.
அவற்றை பரிசீலனை செய்து வீடுகள் கட்ட நிதி ஒதுக்கீடு செய்து வீடு கட்டும் பொறுப்பை குத்தகைதாரர்களிடம் ஒப்படைப்பார்கள். அவர்கள், வீடு கட்டி முடித்தபின் பயனாளிகளுக்கு காண்பித்து அவர்கள் கட்டியுள்ள வீடு வாழ வசதியாக உள்ளது என்பதை உறுதி செய்து ஒப்புதல் சான்றிதழ் வழங்குவார்கள். அதைத் தொடர்ந்து குத்தகை எடுத்தவர்கள் வீடு கட்டி முடிக்கப்பட்டுள்ளது என்ற சான்றிதழை மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைப்பார்கள். இப்பணிகள் மேற்கொண்டபின் வீடுகளை அரசாங்கம் பயனாளிகளிடம் ஒப்படைக்கும்.அதன்பின் வீடுகள் பராமரிப்புச்செலவை மாவட்ட பஞ்சாயத்து நிர்வாகம் ஏற்றுக்கொள்ளும்.
பயனாளிகள் தேர்வு எப்படி?:
தொகுப்பு வீடு திட்டத்தில் மத்திய அரசு ராஜீவ்காந்தி வீட்டு வசதி திட்டம் அடல்பிகாரி வாஜ்பாய் வீட்டுவசதி திட்டம், பிரதமர் வீட்டு வசதி திட்டம் ஆகியவை செயல்பட்டு வருகிறது. கர்நாடக அரசு இந்திராகாந்தி, வாஜ்பாய், வால்மீகி ஆகிய பெயர்களில் வீட்டு வசதி தி்ட்டங்கள் செயல்படுத்தி வருகிறது. எந்த வீட்டுவசதி திட்டமாயிருந்தாலும் மத்திய மாநில அரசுகளின் கூட்டு முயற்சியில் மேற்கொள்ளப்படுகிறது.

அதன்படி தொகுப்பு வீட்டு திட்டத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் கிராம பஞ்சாயத்துகள் கூடி தங்கள் பஞ்சாயத்துக்கு உள்பட்ட கிராமங்களில் எத்தனை பேர் சொந்தமாக வீடுகள் இல்லாமல் உள்ளனர் என்ற பட்டியல் தயாரிக்க வேண்டும்

மேலும் வீடில்லாதவர்களுக்கு வீடு கட்டிக் கொடுக்க நிலம் உள்ளதா என்ற விவரங்களை தயார் செய்து பொதுமக்கள் கருத்துகேட்புகள் வெளியிட வேண்டும்.

அதில், ஆட்சேபனை ஏதாவது இருக்குமாயின் அதனை சரிசெய்து உரிய பயனாளிகள் பட்டியல் தயாரித்து அவை பஞ்சாயத்து அலுவலக பெயர் பலகையில் அறிவித்து ஜனவரி 31க்குள் ஆட்சேபனை தெரிவிக்க கால அவகாசம் வழங்க வேண்டும். மாவட்ட பஞ்சாயத்து தயாரித்துள்ள பட்டியலுக்கு தகராறில்லாமல் ஒப்புதல் கேட்டால் கிராம சபை கூட்டி அதற்கு அனுமதி பெற்று பின் தொகுதி எம்.எல்.ஏ. தலைமையில் அமைக்கப்பட்டுள்ள ஆஷ்ராய கமிட்டிக்கு அனுப்பி வைக்க வேண்டும்

அக்கமிட்டி பரிசீலனை செய்து பயனாளிகளுக்கு வீடு கட்டிக் கொடுக்கும்படி தாலுகா பஞ்சாயத்து நிர்வாக அதிகாரிக்கு சிபாரிசு செய்யும். அவர் பரிசீலனை செய்த பின் மாவட்ட பஞ்சாயத்து முதன்மை செயல் அதிகாரிக்கு அனுப்பி வைப்பார்.

தொகுப்பு வீடு திட்டத்தில் மொத்த வீடுகளில் 30 சதவீதம் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கும் 10 சதவீதம் பழங்குடியினத்தவருக்கும் மீதி 10 சதவீதம் சிறுபான்மை பிரிவினருக்கும் கட்டாயம் ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

கொடுக்க வேண்டிய ஆவணங்கள்: சொந்தமாக வீடு இல்லாத ஏழைகள் அரசின் பல்வேறு திட்டங்களில் வீடு பெறுவதற்கு விண்ணப்பிக்கும் பயனாளிகள் விண்ணப்பப் படிவத்துடன் ரேஷன் கார்டு, தேர்தல் அடையாள அட்டை, ஆதார் அட்டை, பேங்க் பாஸ்புக் ஆகியவற்றின் நகல்கள் கொடுக்க வேண்டும் இது தவிர சாதி மற்றும் வருமானச் சான்றிதழ் இணைக்க வேண்டும்.

மேலும் மத்திய மாநில அரசுகளின் எந்த வீட்டு வசதி திட்டத்தின் கீ்ழ் இதுவரை எந்த வீடு அல்லது நிலம் பெறவில்லை என்பதை உறுதிப்படுத்தும் கடிதம் கொடுக்க வேண்டும்.

மேலும் சொந்தமாக வீடு வைத்துள்ளவர்கள் விண்ணப்பிக்கக்கூடாது வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பத்தினர் மட்டுமே இத்திட்டத்தில் பயனாளியாக சேர்க்கப்படுவார்கள்.

கிராமப்புறத்தில் வசிக்கும் ஏழைக் குடும்பத்தினரின் ஆண்டு வருமானம் ரூ.34,000க்கும் குறைவாக இருக்க வேண்டும். நகரப்பகுதியில் உள்ள ஏழைகளாக இருப்பின் அவரது ஆண்டு வருமானம் ரூ.87,600 ஆக இருக்க வேண்டும். பயனாளிகள் மாநிலத்தில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.

மேலும் தாங்கள் வசிக்கும் நகரம் அல்லது கிராமப்பகுதியில் தனக்கு சொந்தமாக வீடு இல்லை அரசு திட்டத்தின் கீழ் வீடு கட்டிக் கொடுக்க வேண்டும் என்று சம்மந்தப்பட்ட துறையிடம் பெயரைப் பதிவு செய்ய வேண்டும். ஒரு குடும்பத்தில் உறுப்பினராக இருப்பவர்கள் தனித்தனி பெயரில் வீட்டுமனை பெற வாய்ப்பில்லை.

அதே போல் ஒரே ரேஷன் அட்டையில் பெயர் உள்ளவர்களுக்கு தனித்தனியாக வீடு கட்டித்தர முடியாது. இத்திட்டத்தில் சொந்த வீடு இல்லாதவர்கள் அல்லது வசிக்க தகுதியில்லாத பாழடைந்த வீட்டில் வசித்து வருபவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும்.

இத்திட்டத்தில் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு குத்தகை ஒப்படைத்தபின் ஓராண்டுக்குள் வீடு கட்டி கொடுக்கும் திட்டத்தை நிறைவு செய்ய வேண்டும். பயனாளிகள் கிராமப் பஞ்சாயத்து தாலுகா, மாவட்ட, பஞ்சாயத்து அலுவலகங்களில் இவற்றுக்கான விண்ணப்பம் பெறலாம் அல்லது ஆன் லைன் மூலமாகவும் விண்ணப்பம் செலுத்தலாம். ஜனவரி மாதம் பயனாளிகள் தேர்வு தொடங்கி 3 மாதங்கள் முடித்துவிட்டு ஏப்ரல் அல்லது மே மாதம் வீடு கட்டும் திட்டத்தை தொடங்க வேண்டும்.

இத்திட்டத்தில் பொய்த்தகவல் கொடுத்து யாராவது வீடு அல்லது நிலம் பெற்றுள்ளது உறுதி செய்யப்பட்டால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
இது தொடர்பாக விவரம் வேண்டுவோர்
ராஜீவ் காந்தி ஊரக வீட்டு வசதிக் கழகம்
பிளாட் நம்பர் 1-4,
2வது மாடி ஐடி பார்க்,
இன்டஸ்டிரியல் எஸ்டேட்,
ராஜாஜி நகர்,
பெங்களூரு 560044
தொலை பேசி எண் 808-23118888,
இ.மெயில் rgrhel@rediff mail.com
அல்லது
இணையதளம். ashraya.kar.nic.in தொடர்பு கொள்ளலாம்.

நன்றி : தினகரன் நாளிதழ் - 20.09.2016

வேட்பாளர்கள் தவறான தகவல் அளித்தால்


வேட்பாளர்கள் தவறான தகவல் அளித்தால் - என்ன செய்ய வேண்டும்?

வேட்பாளர்கள் தவறான தகவல் அளித்தால் வேட்புமனு ரத்து செய்யலாம்

புதுடில்லி: வேட்பாளர்கள் தங்களின் கல்வி தகுதி குறித்து தவறான தகவல் அளித்தால் அவர்களின் வேட்பு மனுவை நிராகரிக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.  

வெற்றி செல்லாது:
கடந்த 2012-ம் ஆண்டு நடைபெற்ற மணிப்பூர் மாநில சட்டசபை தேர்தலில் மொய்ரங் தொகுதியில் தேசியவாத காங்கிரஸ் சார்பில் மைரம்பம் பிருதிவிராஜ் என்பவரும், காங்கிரஸ் கட்சி சார்பில் புக்ரம் சரத்சந்திரசிங் என்பவரும் போட்டியிட்டனர். 

இதில், பிருதிவிராஜ் வெற்றி பெற்றார்.ஆனால், பிருதிவிராஜ் தனது வேட்புமனுவில், தான் எம்.பி.ஏ. பட்டதாரி என்று கூறி இருந்தது தவறானது என்று கண்டுபிடிக்கப்பட்டது. 

அதன் அடிப்படையில், அவரது வெற்றி செல்லாது என்று அறிவிக்கக்கோரி, மணிப்பூர் ஐகோர்ட்டில் சரத்சந்திரசிங் வழக்கு தொடர்ந்தார். அதை ஏற்று, பிருதிவிராஜ் வெற்றி பெற்றது செல்லாது என்று ஐகோர்ட் தீர்ப்பு அளித்தது.

அந்த தீர்ப்பை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் பிருதிவிராஜ் மேல்முறையீடு செய்தார். ஐகோர்ட் தீர்ப்பின் அடிப்படையில், தான் வெற்றி பெற்றதாக அறிவிக்கக்கோரி, சரத்சந்திரசிங்கும் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

வாக்காளர்களின் உரிமை :
இந்த மனுக்களின் மீதான விசாரணை முடிந்த நிலையில், நீதிபதிகள் ஏ.ஆர்.தவே, எல்.நாகேஸ்வர ராவ் ஆகியோர் அடங்கிய சுப்ரீம் கோர்ட் அமர்வு நேற்று தீர்ப்பு அளித்தது. மணிப்பூர் ஐகோர்ட்டின் தீர்ப்பை உறுதி செய்த நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில், வேட்பாளர்களின் கல்வித்தகுதியை தெரிந்து கொள்வது ஒவ்வொரு வாக்காளரின் அடிப்படை உரிமை. 

வேட்பாளர்கள், தங்களது கல்வித்தகுதி பற்றிய சரியான தகவலை அளிக்க வேண்டியது அவர்களது கடமை என்று மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. 

தவறான தகவலை அளித்தால், வேட்புமனுவை நிராகரிக்க முடியும். இந்த வழக்கை பொறுத்தவரை, தேர்தலில் வெற்றி பெற்ற பிருதிவிராஜ், மைசூரு பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. படிக்கவில்லை என்பதில் சர்ச்சையே இல்லை. அது எழுத்துப்பிழையால் நிகழ்ந்த தவறு என்று அவர் கூறுவதை ஏற்க முடியாது. 

அந்த தவறை அவர் இந்த ஒருதடவை மட்டும் செய்யவில்லை. தான் எம்.பி.ஏ. படித்துள்ளதாக, 2008-ம் ஆண்டில் இருந்தே அவர் கூறி வருகிறார். 

வேட்புமனுவில் அவர் கூறியுள்ள தகவல், பொய் பிரகடனம் என்றே கருதப்படும். அது பெரிய தவறல்ல என்று கூறுவதையும் ஏற்க முடியாது.

 இருப்பினும், வெற்றி பெற்ற பிருதிவிராஜின் வேட்புமனு, தவறாக ஏற்கப்பட்டு விட்டது என்ற ஒரே காரணத்துக்காக, அவரது வெற்றியை செல்லாது என்று அறிவிக்க முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர்.

நன்றி : தினமலர் நாளிதழ் - 02.11.2016