disalbe Right click

Thursday, July 27, 2017

காவிரி, முல்லை பெரியாறு பிரச்னை, வக்கீல் செலவு ரூ.40 கோடி

காவிரி, முல்லை பெரியாறு பிரச்னை, வக்கீல் செலவு ரூ.40 கோடி

ஒரே நபருக்கு ஆறரை கோடி ரூபாய் 'பீஸ்'

கோவை:காவிரி நதிநீர் பங்கீடு மற்றும் முல்லைப்பெரியாறு பிரச்னை தொடர்பாக, வழக்குகளை நடத்துவதற்கு, வக்கீல்களுக்கான கட்டணமாக, தமிழக அரசு, 40 கோடி ரூபாய் செலவு செய்திருப்பது, தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தெரிய வந்துள்ளது.

'காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக கர்நாடகா வுடனும், முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக கேரளாவுடனும், தமிழகத்துக்கு நீண்ட காலமாக, சட்டப் போராட்டம் தொடர்ந்து வருகிறது. கடந்த 1990ல், காவிரி நடுவர் மன்றம் அமைத்ததிலிருந்து, சுப்ரீம் கோர்ட்டில் காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான வழக்கு, பல்வேறு திருப்பங்களைச் சந்தித்துள்ளது.

வாதிட்டது இவர்களே
தமிழக அரசின் உரிமைகளை எடுத்து சொல்லி, முக்கிய தீர்ப்புகளை வாங்கியது யார், அரசித ழில் வெளியிட வைத்தது யார் என்பதில், தி.மு.க., - அ.தி.மு.க., இடையே, இன்றளவும் மோதல் நீடிக்கிறது. ஆனால், உரிய ஆதாரங் களை எடுத்து வைத்து, இந்த தீர்ப்புகளைப் பெற்றதில், தமிழக அரசு சார்பில் வாதாடிய வக்கீல்களுக்கே பெரும் பங்குண்டு.
இருப்பினும், இவர்களை நியமிப்பதில், மாநில நலனைத் தாண்டி, அரசியல் தலையீடு இருப்ப தும், வெட்ட வெளிச்சமாகியுள்ளது. இந்த வக்கீல்களுக்கு, அரசு சார்பில், பெரும் தொகை கட்டணமாக தரப்படுகிறது. இதனால், அரசு தரப்பில் வக்கீலாக வாதிடப்போவது யார் என்பதை முடிவு செய்வதில், ஆளும் கட்சியின் தலையீடுகள் இருந்தன.
கடந்த, 1991லிருந்து, காவிரி நதி நீர் மற்றும் முல்லைப் பெரியாறு பிரச்னைக்காக, சுப்ரீம் கோர்ட்டில் ஆஜரான தமிழக வக்கீல்கள் யார் யார், அவர்களுக்கு தரப்பட்ட கட்டணம் குறித்து, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் விபரங்களை வாங்கியுள்ளார், கோவையைச் சேர்ந்த வக்கீல் லோகநாதன்.
இதில் கிடைத்துள்ள தகவல்களின் படி, கடந்த, 1991லிருந்து, 2016 வரை, காவிரி நதி நீதி பிரச்னை தொடர்பாக, தமிழக அரசின் சார்பில், சுப்ரீம் கோர்ட் டில் 32 வக்கீல்கள் ஆஜராகியுள்ளனர். இவர்களில் 14 பேர், 1999லிருந்து முல்லைப் பெரியாறு பிரச்னைக் காகவும், ஆஜராகி வாதாடி உள்ளனர்.
பிரச்னை முடியவில்லை
காவிரி பிரச்னைக்காக வாதாடிய, 33 பேரில், ஜி.உமா பதி என்பவர் மட்டுமே, 1991லிருந்து இதுவரை, தொடர்ச்சியாக இவ்வழக்கில் ஆஜராகி வருகிறார். மற்ற அனைவருமே, ஆட்சி மாறியபோதெல்லாம் மாற்றப்பட்டுள்ளனர்.
கடந்த 27 ஆண்டுகளில், காவிரி நதிநீர் பிரச்னைக் காக வாதாடிய, 33 வக்கீல்களுக்கும் கட்டணமாக, 30 கோடியே 93 லட்சத்து, 80 ஆயிரத்து, 643 ரூபாய், தமிழக அரசு செலுத்தியுள்ளது. அதேபோன்று, 1999 லிருந்து முல்லைப் பெரியாறு பிரச்னைக்காக வாதாடிய, 15 வக்கீல்களுக்கு, 9 கோடியே 5 லட்சத்து 57 ஆயிரத்து 38 ரூபாய், கட்டணமாக வழங்கப்பட்டு உள்ளது.
இவர்களில்,வக்கீல் உமாபதிக்கு மட்டும்,4 கோடியே, 67 லட்சத்து, 37 ஆயிரத்து, 302 ரூபாய், கட்டணமாகத் தரப்பட்டுள்ளது. முல்லைப் பெரியாறு பிரச்னைக் காக இவர் ஆஜரானதற்காக, ஒரு கோடியே, 77 லட்சத்து, 89 ஆயிரத்து, 42 ரூபாய் வழங்கப்பட்ட தையும் சேர்த்தால், இவருக்கு மட்டுமே, 6 கோடியே, 45 ஆயிரத்து, 26 ஆயிரத்து, 344ரூபாய், வக்கீல் கட்டணமாக அரசு வழங்கியுள்ளது.
ஒட்டு மொத்தமாக, இவ்விரு பிரச்னைகள் தொடர் பாக, சுப்ரீம் கோர்ட்டில் வாதாடுவதற்காக, வக்கீல் களுக்கு மட்டுமே, 39 கோடியே, 99 லட்சத்து, 37 ஆயிரத்து, 681 ரூபாயை, தமிழக அரசு செலவிட்டுள் ளது. இதுதொடர்பாக, அரசு செயலர், பிற அதிகாரி கள் சென்று வந்த செலவுகள் தனி. இத்தனை கோடி ரூபாய் செலவிட்டும், 27 ஆண்டுகள் கடந்தும், இன்னமும் வழக்குகள் தொடர்கின்றன.
அந்த வக்கீல்கள் யார் யார்?
காவிரி நதி நீர் பிரச்னைக்காக, தமிழக அரசின் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல்கள் பட்டிய லில், கே.பராசரன், கே.கே.வேணு கோபால், பி.பி.ராவ், ஏ.கே.கங்குலி, சி.எஸ். வைத்திய நாதன், வி.கிருஷ்ணமூர்த்தி, வினோத் அரவிந்த் பாப்டே, ராகேஷ் திவேதி, ஆர்.முத்துக்குமார சுவாமி, எல்.நாகேஷ்வர ராவ் என, 10 பேர் இடம் பெற்றுள்ளனர்.
தமிழக அரசின் தலைமை வக்கீல்களாக, என்.ஆர்.சந்திரன், கே.சுப்ரமணியன், கே.வி. வெங்கடபதி, ஆர்.கிருஷ்ணமூர்த்தி, ஏ.நவநீத கிருஷ்ணன், ஏ.எல்.சோமயாஜி ஆகியோரும், அரசு கூடுதல் தலைமை வக்கீல்களாக, ஆர். முத்துக்குமார சுவாமி, எஸ்.குரு கிருஷ்ண குமார், சுப்ரமணிய பிரசாத் ஆகியோரும் ஆஜராகியுள்ளனர்.
வக்கீல்களாக எம்.எஸ்.கணேஷ், ஏ.சுப்பாராவ், இ.சி.அக்ரவாலா, ஜி.உமாபதி, சி.பரமசிவம், பி.என்.ராமலிங்கம், நிக்கில் நய்யார், கே.பார்த்த சாரதி, அஜித் குமார் சின்ஹா, எஸ்.வடிவேலு, சுப்ரீம் கோர்ட் பதிவுரு வக்கீல்களாக ரேவதி ராகவன், ஆர்.அய்யம்பெருமாள், ஆர்.நெடு மாறன், பி.பாலாஜி ஆகியோரும் ஆஜராகி யுள்ளனர். இவர்களைத் தவிர, முல்லைப் பெரியாறு பிரச்னை சார்ந்த வழக்கில், ஆர்.மோகன் என்பவர், மூத்த வக்கீலாக ஆஜராகியுள்ளார்.
நன்றி : தினமலர் நாளிதழ் - 26.07.2017


Wednesday, July 26, 2017

நவம்பர் 19-இல் 'நெட்' தேர்வு, ஜூன் மாதத் தேர்வு ரத்து!

நவம்பர் 19-இல் 'நெட்' தேர்வு, ஜூன் மாதத் தேர்வு ரத்து!
நடப்பு ஆண்டான 2017ல் கல்லூரி உதவிப் பேராசிரியர் பணியில் சேருவதற்கான நெட்எனப்படும் தேசிய அளவிலான தகுதித் தேர்வுநவம்பர் மாதம் 19ம் தேதியில் நடத்தப்பட உள்ளது.
நாடு முழுவதிலும் உள்ள கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணியில் சேருவதற்கான தகுதியைப் பெறுவதற்கும், உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை ஆராய்ச்சி உதவித் தொகை பெற தகுதி பெறுவதற்கும், ஆண்டுக்கு இருமுறை இந்தத் தேர்வை பல்கலைக்கழக மானியக்குழு என்று சொல்லப்படக்கூடிய University Grants Commission (UGC) நடத்தி வந்தது.
கடந்த 2014ம் ஆண்டு முதல் இந்தத் தேர்வை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் என்று சொல்லப்படக்கூடிய The Central Board of Secondary Education (CBSE) நடத்தி வருகிறது.
கடந்த 2016ம் ஆண்டுத்தேர்வை இந்த ஆண்டின் துவக்கத்தில் (ஜனவரி) நடத்திய CBSE அதற்கு முன்னதாக மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தது.
அதில் ஏராளமாக தேர்வுகளை நடத்தி வருவதன் மூலம் தங்களுக்கு பணிச்சுமை அதிகரித்திருப்பதால் நெட் தேர்வை தங்களால் இனி நடத்த இயலாது என்பதை CBSE தெரிவித்திருந்தது.
இது சமபந்தமாக நடந்த கலந்தாலோசனைக்குப் பிறகு CBSE தொடர்ந்து நெட் தேர்வை நடத்தும் என்று UGC அறிவித்தது.
நவம்பர் 19ல் நெட் தேர்வு
2017ம் ஆண்டிற்கான நெட் தேர்வு நவம்பர் மாதம் 19ம் தேதி நடத்தப்படும். இதற்காக ஆன்லைன் மூலமாக ஆகஸ்ட் 1ம் தேதி முதல் 31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். தேர்விற்கான கட்டணத்தை ஆகஸ்ட் மாதம் 31ம் தேதி வரை செலுத்தலாம். இது தொடர்பான முழுமையான அறிவிப்பு, 2017 ஜூலை 24ம் தேதி CBSE இணையதளத்தில் http://cbsenet.nic.in  வெளியிடப்படும் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் மாதத் தேர்வு ரத்து
கடந்த (2017) ஜூன் மாதத்தில் நடந்திருக்க வேண்டிய தேர்வு ரத்து செய்யப்பட்டு உள்ளது. டிசம்பரில் நடக்க வேண்டியத் தேர்வு நவம்பரில் நடத்தப்பட உள்ளது. இனி ஆண்டுக்கு ஒருமுறைதான் நெட் தேர்வை நடத்துவதற்கு வாய்ப்பு உள்ளதாக CBSE அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
(15.07.2017 - தினமணி நாளிதழில் வெளிவந்த செய்தியினைத் தழுவி எழுதப்பட்டுள்ளது)
அன்புடன் செல்வம் பழனிச்சாமி



Tuesday, July 25, 2017

துப்புரவு வேலைக்கு ஆங்கில விளம்பரம்!

துப்புரவு வேலைக்கு ஆங்கில விளம்பரம்! 
ஐகோர்ட் பதிவாளருக்கு 'நோட்டீஸ்'
சென்னை: துப்புரவு பணியாளர்கள் பணிக்கு, ஆங்கிலத்தில் விளம்பரம் செய்தது தொடர்பாக, தலைமை பதிவாளருக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பொதுநல மனு : சென்னை உயர் நீதிமன்றத்தில், வழக்கறிஞர் புகழேந்தி தாக்கல் செய்துள்ள பொது நல மனு: சென்னை உயர் நீதிமன்றத்தில், துப்புரவு தொழிலாளர்கள் பணி இடங்களை நிரப்பு, உயர் நீதிமன்ற பதிவாளர், சமீபத்தில், பத்திரிகைகளில், ஆங்கிலத்தில் விளம்பரம் கொடுத்துள்ளார். இப்பணிக்கு, 8ம் வகுப்பு கல்வி தகுதி நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இக்கல்வி தகுதி உள்ளவர்களுக்கு, ஆங்கிலம் தெரிய வாய்ப்பில்லை.

விசாரணை : இதனால், தகுதி உள்ள நபர்களுக்கு விளம்பரம் தெரியாமல் போய்விடும். விளம்பரத்தை தமிழில் வெளியிட, பதிவாளருக்கு உத்தரவிடவேண்டும்.இவ்வாறு, மனுவில் கோரியிருந்தார்.இம்மனு, நீதிபதிகள் சத்தியநாராயணன், சேஷசாயி, 'டிவிஷன் பெஞ்ச்' முன், நேற்று விசாரணைக்கு வந்தது.

அலுவல் மொழி : வழக்கில், உயர் நீதிமன்றம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 'உயர் நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக ஆங்கிலம் உள்ளதால், ஆங்கிலத்தில் விளம்பரம் செய்யப்பட்டது' என்றார். மனுவிற்கு பதில் அளிக்க, உயர் நீதிமன்ற தலைமை பதிவாளருக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிட்டனர்.

நன்றி : தினமலர் நாளிதழ் செய்தி - 24.07.2017

Monday, July 24, 2017

வருமான வரியின் வரலாறு என்ன?

வருமான வரியின் வரலாறு என்ன
இன்கம் டேக்ஸ் பற்றி A - Z தகவல்...
வருமானம் வரும் ஒவ்வொரு நாளும் சிறப்பான நாள்தான். ஆனால், வருமான வரித் தாக்கல் செய்யும் நாளில் எதற்கு வரி செலுத்த வேண்டும் என்று நிறையவே யோசிப்போம். அரசர்கள் காலத்தில் இருந்து நில வரி போன்று பல‌ வரிகள் இருந்தாலும் வருமான வரி என்பது ஆங்கிலேயர் காலத்தில்தான் அறிமுகப்படுத்தப்பட்டது. அதாவது, கடந்த 150 வருடங்களாகத்தான் வருமான வரி (Income tax) வழக்கத்தில் இருந்து வருகிறது. ஒவ்வோர் ஆண்டும் ஜூலை 24-ம் தேதி வருமான வரி தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த தினம் எதற்காக கொண்டாடப்படுகிறது, இதன் வரலாறு என்ன என்பதை அறிந்துகொள்ள வருமான வரித்துறை அதிகாரி பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தியிடம் பேசினோம்.

"1860-ம் ஆண்டு ஜூலை 24-ம் தேதி வருமானத்துக்கு வரி வசூலிப்பது என முடிவெடுக்கப்பட்டது. இதனை நடைமுறைப்படுத்தியவர் அன்றைய பிரிட்டிஷ் இந்தியாவின் நிதி அமைச்சராக இருந்த சர் ஜோம்ஸ் வில்சன். ஆரம்பத்தில் பிரிட்டிஷ்காரர்களிடம் மட்டுமே இன்காம் டேக்ஸ் வசூலிக்கப்பட்டது. இதனால் இந்தியாவில் பணியாற்றிய பிரிட்டிஷ்காரர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து இன்காம் டேக்ஸ் வசூலிக்கக்கூடாது எனப் போராடி இருக்கிறார்கள். ஆனால், வரி செலுத்த வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டது. முதல் ஆண்டிலேயே வருமானவரியாக 30 லட்ச ரூபாய் வசூலாகி இருக்கிறது. இந்தியா சுதந்திரம் பெறும்போது 1945-46-ம் ஆண்டுக்கான வருமான வரியாக 57 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டிருந்தது. 1970-ம் ஆண்டின் தொடக்கத்தில் 1,000 கோடி ரூபாயும், 2000-ம் ஆண்டில் ஒரு லட்சம் கோடி ரூபாயும் Income tax வசூலிக்கப்பட்டிருக்கிறது.
நடப்பு ஆண்டில் (2017-2018) ஒன்பது லட்சம் கோடி ரூபாய்க்கு அதிகமாக‌ வசூலிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. ஒவ்வொர் ஆண்டும் வருமானவரி இலக்கு அதிகமாகிக்கொண்டே வருகிறது. அடுத்த நிதி ஆண்டில் பத்து லட்சம் கோடி ரூபாய்க்கு அதிகமாக இலக்கு நிர்ணயிக்க வாய்ப்பு இருக்கிறது. இந்திய அரசுக்கு மிகப்பெரிய வருமானம் வருமானவரிதான். இந்த வரியை மிகப்பெரிய நிலையான திட்டங்கள் நிறைவேற்றப்பயன்படுத்துகிறது அரசு. குறிப்பாக, ஆற்றுப்பாலங்கள், சாலைகள் போன்றவற்றுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
சீனா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ஜப்பான், அமெரிக்கா உள்படப் பல நாடுகளில் வருமானவரி அதிகமாகவே உள்ளது. பல நாடுகளில் 30 சதவிகிதம் என்ற அளவில் இருப்பதைக் கணக்கில்கொண்டு, நம் நாட்டில் ஐந்து முதல் 30 சதவிகிதம் வரை வருமானவரி வசூலிக்கப்படுகிறது. அதாவது, வருமானத்துக்கு அதிகபட்சமாக 30% மட்டுமே வரி. சீனாவில் 45 சதவிகிதம், அமெரிக்காவில் 39.6 சதவிகிதம் என வசூலிக்கப்படுகிறது. 1970-ம் ஆண்டுகளில் இந்தியாவில் பெரும் பணக்காரர்களிடம் வருமான வரியாக 90 சதவீதத்துக்கு அதிகமாக வசூலிக்கவும் செய்திருக்கிறோம் என்பதையும் கவனிக்க வேண்டும்.
தற்போது இரண்டரை லட்சம் ரூபாய் வரை வருமானம் உள்ளவர்களுக்கு Income tax செலுத்த தேவையில்லை. 80 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருந்தால் ஐந்து லட்ச ரூபாய் வரை வருமானம் உள்ளவர்களுக்கு வரி செலுத்த தேவையில்லை. அரசு திட்டங்களிலும், அரசு நிறுவனங்களிலும் முதலீடு செய்யப்பட்டால் அதற்கு குறிப்பிட்ட தொகைக்கு வரியில் இருந்து விலக்கு வழங்கப்படுகிறது. ஆரம்பத்தில் இருந்தே விவசாயத்திற்கும், அறக்கட்டளை போன்றவற்றுக்கும் வரி செலுத்தத் தேவையில்லை என்பது நடைமுறையில் இருக்கிறது.
தனி நபருக்குத்தான் வருமானவரி. குடும்பத்தில் ஒவ்வொருவரின் வருமானமும் இரண்டரை லட்சம் ரூபாய்க்குள்தான் இருக்கிறது என்றால் வருமான வரி செலுத்துவதில்லை. அதாவது, குடும்பத்தில் உள்ள நான்கு பேரின் வருமானம் பத்து லட்ச ரூபாய் என்றால் குடும்ப வருமானத்துக்கு வரி செலுத்த தேவையில்லை. அதிக வருமானவரி வசூலிப்பதில் மகாராஷ்ட்ரா மாநிலம் முதல் இடத்தில் இருக்கிறது. ஆந்திரா, தமிழ்நாடு, குஜராத், பஞ்சாப் மாநிலங்கள் என அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

Income tax செலுத்த உதவியாக பான் கார்டு வழங்கும் முறை 1994-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த 20 வருடங்களில் சுமார் 30 கோடி பேர் பான் கார்டு வாங்கி இருக்கிறார்கள். பான் இல்லாமல் எந்த விதமான பணப்பரிமாற்றமும் செய்ய முடியாது என மாறி இருக்கிறது வருமானவரித் துறை. இனி வரும் காலங்களில் வருமான வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கை உயரும். இதன்மூலம் நாடும் வளம் பெறும்" என்கிறார் பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி.
நன்றி : விகடன் செய்திகள் -24.07.2017

உங்கள் சொத்தை இனி எந்த ஊரிலும் நீங்களே பதியலாம்!

உங்கள் சொத்தை இனி எந்த ஊரிலும் நீங்களே பதியலாம்!
தமிழகத்தில்பத்திரப்பதிவு முறையில் அதிரடி மாற்றம் செய்ய அரசு முடிவெடுத்துள்ளது. அதன்படிஎந்த ஊர் நிலத்தையும்எந்த ஊரின் சார் - பதிவாளர் அலுவலகத்திலும் பதிவு செய்ய முடியும். இதனால்சொத்து பதிவுக்காக பொது மக்கள் அங்கும்இங்குமாக அலைய வேண்டியதில்லைகெடுபிடிகளும் இனி இருக்காது. அனைத்து சார் - பதிவாளர் அலுவலகங்களும்ஆன்லைன் முறைக்கு மாற்றப்படுவதால்இது சாத்தியமாகிறது.
தமிழகத்தில்சொத்து பரிமாற்றம் தொடர்பான பத்திரங்களை பதிவு செய்ய, 578 சார் - பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. இந்த அலுவலகங்களின் எல்லைகள் பிரிக்கப்பட்டுஎந்தெந்த கிராமங்களில் உள்ளோர்சொத்து பரிமாற்றங்களைஎங்கு பதிவு செய்யவேண்டும் எனதெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது.
அதிகாரம்
இதன்படிஆண்டுக்கு, 25 லட்சம் பத்திரங்கள் பதிவாகின்றன. இந்திய பதிவு சட்டம் - 1908ல் வழங்கப்பட்டுள்ள சிறப்பு அனுமதியின் படிசென்னைமும்பை,கோல்கட்டாடில்லி ஆகியநான்கு பெருநகரங்களிலும்தலா ஒரு சார் - பதிவாளர் அலுவலகத்தில்எந்த ஊர் நிலத்தையும்எங்கும் பதிவு செய்ய அதிகாரம் அளிக்கப் பட்டுள்ளது.
இதன் படிதமிழகத்தில்வட சென்னை மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் உள்ள, 'இணை சார் - பதிவாளர்அலுவலகத்துக்கு சிறப்பு அதிகாரம் அளிக்கப்பட்டது. தமிழகத்தில்எந்த ஊரிலும் உள்ள எந்த சொத்தையும்இங்கு பதிவு செய்யலாம்.
ஆனால்சொத்துக்களின் வழிகாட்டி மதிப்பு களை துல்லியமாக சரி பார்ப்பதில் ஏற்பட்ட சிக் கல் மற்றும் அதிகாரிகள் துணையுடன்பத்திரப் பதிவில் நடந்ததாக கூறப்பட்ட முறைகேடுகளால்அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்றிஇந்த நடைமுறை நிறுத்தப்பட்டது.
இந்திய பதிவுச்சட்டம் - 1908ல்தமிழக அரசு, 1997 மார்ச், 29ல் மேற்கொண்ட திருத்தத்தின் படிசொத்து அமைந்துள்ள பகுதிக்கான சார் - பதிவாளர் அலுவலகத்தில் மட்டுமேபத்திரப் பதிவு செய்ய முடியும் என்பது கட்டாயமாக்கப் பட்டுள்ளது.இதனால்சொத்து உள்ள பகுதியில் உள்ள சார் - பதிவாளர் அலுவலகங்களில் மட்டுமேபத்திரத்தை பதிவு செய்ய முடியும்.
வெளியூர் பத்திரங்களை பதிய முடியாத நிலை ஏற்பட்டதால்சொத்து விற்பனையில்சம்பந்தப்பட்டோர்அந்தந்த சார் - பதிவாளர் அலுவலகத்துக்கு செல்ல வேண்டியது கட்டாயமானது. பத்திர பதிவை எளிமைப்படுத்தும் வகையில்,இந்த நடைமுறையை மாற்ற பதிவுத்துறை முடிவெடுத்துள்ளது.
இது குறித்துபதிவுத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
பத்திரப்பதிவு பணிகளை, 'டிஜிட்டல்மயமாக்கும் பணிகள்இறுதி கட்டத்தை அடைந்துள்ளன. இதன்படி, 578 சார் - பதிவாளர் அலுவலகங்களிலும் உள்ள அனைத்து ஆவணங்களும்பதிவேடுகளும், 'ஆன்லைன்முறைக்கு மாற்றப்படுகின்றன.
சரி பார்க்கலாம்
தற்போதுஎந்த அலுவலகத்தின் பதிவேடுகளையும்எந்த பகுதியில் இருந்தும் சரி பார்க்க முடியும். இதனால்எந்த ஊர் இடத்தையும்எந்த சார் - பதிவாளர் அலுவலகத்தில் இருந்தும்பதிவு செய்வது சாத்தியம். எனவேஇந்த மாற்றத்தை கொண்டு வர அரசு முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாகஆன்லைன் வசதி உள்ள, 100 சார் - பதிவாளர் அலுவலகங்களில்இத் திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும். படிப்படியாகஅனைத்து அலுவலகங்களுக்கும் விரிவுபடுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
பத்திரப்பதிவு முறையில் செய்யப்பட உள்ள அதிரடி மாற்றத்தால்பொதுமக்களின் அலைச்சல்அதிகாரிகளின் கெடுபிடிகள் களையப்படும். அந்தந்த ஊர்களில்இருந்த இடங்களில் இருந்தே,பத்திர பதிவு செய்யலாம்.
 நன்றி : தினமலர் நாளிதழ் - 23.07.2017

பாஸ்போர்ட் பெற இனி பிறப்பு சான்றிதழ் அவசியமில்லை

பாஸ்போர்ட் பெற இனி பிறப்பு சான்றிதழ் அவசியமில்லை
புதுடில்லி: கடந்த வாரம் பார்லி.,யில் பாஸ்போர்ட் விண்ணப்ப முறை தொடர்பான கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த மத்திய அரசுபாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் முறை எளிமையாக்கப்பட உள்ளது என பதிலளித்துள்ளது.
மத்திய அமைச்சர் வி.கே.சிங் அளித்துள்ள பதிலில்பாஸ்போர்ட் பெறுவதற்கு இனி பிறப்பு சான்றிதழ் அவசியமில்லை. ஆதார் அல்லது பான் கார்டை சமர்ப்பித்தாலே போதும். அதுவே பிறப்பு சான்றிதழாக எடுத்துக் கொள்ளப்படும். தத்தெடுக்கப்பட்ட குழந்தைகள்அவர்களை பராமரித்த காப்பகத்திடம் இருந்து பிறந்த தேதி தொடர்பான ஆவணத்தை பெற்று அளிக்கலாம்.
புதிய பாஸ்போர்டில் தனிநபர் விபரங்கள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் அச்சிடப்பட்டிருக்கும். 60 வயதிற்கு மேல் மற்றும் வயதிற்கு கீழுள்ள அனைத்து பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்களுக்கும் பாஸ்போர்ட் கட்டணத்தில் இருந்து 10 சதவீதம் சலுகை அளிக்கப்படும்.
ஆன் லைனில் விண்ணப்பம் செய்வோர் பெற்றோரில் தந்தை அல்லது தாய் யாராவது ஒருவரின் பெயரை மட்டும் குறிப்பிட்டால் போதும்.
இணைப்பு படிவத்தின் எண்ணிக்கையும் 15 லிருந்த ஆக குறைக்கப்பட உள்ளது. 
அது சுய ஒப்பம் இருந்தாலே போதுமானது.
ஒப்புகை கையெழுத்து பெற வேண்டிய அவசியமில்லை.
திருமணம் ஆனோர் திருமண சான்றிதழ் சமர்ப்பிக்கவோஅவர்கள் விவாகரத்து பெற்றிருந்தால் அவர்களின் கணவர் அல்லது மனைவியின் பெயரையோ குறிப்பிடவோ தேவையில்லை என தெரிவித்துள்ளார்.

நன்றி : தினமலர் நாளிதழ் - 24.07.2017

Friday, July 21, 2017

சிறையில், சசிக்கு சலுகைகள் வழங்கியது உண்மைதான்

சிறையில், சசிக்கு சலுகைகள் வழங்கியது உண்மைதான்
புதிய சிறைத்துறை அதிகாரிகள் ஒப்புதல்
பெங்களூரு: சொத்துக்குவிப்பு வழக்கில் சிறயைில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் உண்மைதான் என சிறைத்துறை உயர் அதிகாரிகள் இன்று ஒத்துக்கொண்டனர்.

சசிக்கு சிறையில் சலுகைகள் வழங்கப்படுவதாக டி.ஐ.ஜி., ரூபா பரபரப்பு தகவலை வெளியிட்டார்.
இதற்கென ரூ.2 கோடி லஞ்சம் வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தார். இதனை தொடர்ந்து சிறைதுறை டி.ஜி.பி., சத்தியநாராயணன், ரூபா ஆகியோர் இட மாற்றம் செய்யப்பட்டனர்.இந்நிலையில் கர்நாடக சட்டசபை வளாகத்தில் சட்டசபை பொதுக்கணக்கு குழு கூட்டம் நடந்தது. குழு தலைவர் ஆர். அசோக் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி., என்.எஸ் மேக்ரட், டி.ஐ.ஜி., ரேவண்ணா ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.
சசிக்கு வழங்கப்பட்ட சலுகைகள் குறித்து கேள்வி கேட்கப்பட்டன. சசிக்கு வழங்கப்பட்ட டி.வி., சிறப்பு சமையலறை இருந்தது உண்மைதான், சீருடை அணியாமல் சாதாரண உடையில் இருந்தது உண்மை தான். 7, மற்றும் 8 வளாகத்தில் கண்காணிப்பு காமிரா செயல்படவில்லை. இவ்வாறு குழு முன்பு ஒத்து கொண்டனர்.

இதனை குழு தலைவர் ஆர். அசோக் மீடியாக்களிடம் தெரிவித்தார். ஆக ரூபா கூறிய அனைத்து குற்றச்சாட்டுகளும் உண்மை தான் என நிரூபணம் ஆகியுள்ளது.

நன்றி : தினமலர் நாளிதழ் - 21.07.2017 

Tuesday, July 18, 2017

பள்ளிகளை ஒரே நிர்வாகத்திற்கு மாற்ற உத்தரவு

பள்ளிகளை ஒரே நிர்வாகத்திற்கு மாற்ற உத்தரவு
தமிழகத்தில், 18 வகை நிர்வாகங்களின் கீழ் செயல்படும் அரசு பள்ளிகளை ஒருங்கி ணைத்து, ஒரே நிர்வாக முறையில் கொண்டு வர, மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.
தமிழகத்தில், 8,400 அரசு உதவிபெறும் பள்ளிகள் உட்பட, 40 ஆயிரம் பள்ளிகள், அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. மற்ற பள்ளிகள், ஆங்கிலோ இந்தியன், மெட்ரிக் என, தனியார் பள்ளிகளாக, தனி இயக்குனரக கட்டுப்பாட்டில் உள்ளன. இந்த பள்ளிகளில், மாநிலம் முழுவதும், 5.60 லட்சம் பேர் படிக்கின்றனர்.
பல்வேறு விதிகள்
அரசு பள்ளிகளை பொறுத்த வரை, அரசின் பல்வேறு துறைகள் மூலம் நிர்வாகம் செய்யப்படுகிறது.
அதாவது, பள்ளிக்கல்வித் துறை, நகராட்சி, மாநகராட்சி, பஞ்சாயத்துகளுக்கான ஊரக வளர்ச்சித் துறை, கள்ளர் மறுசீரமைப்பு, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, சிறுபான்மையினர் நலத்துறை, வனத்துறை, சமூகநலத் துறை, பழங்குடியினர் நலத்துறை மற்றும் கன்டோன்மென்ட் என, பல்வேறு துறைகளின் நிர்வாகத்தில் செயல்படுகின்றன. மாணவர் சேர்க்கை, ஆசிரியர்கள் நியமனம், உள்கட்டமைப்பு மேம்பாடு, பள்ளி நிர்வாகம்போன்றவற்றில், பல்வேறு விதிகள் தனித்தனியாக வகுக்கப்படுகின்றன.
குளறுபடிகள் கண்டறிந்துள்ளது.
அதனால், பள்ளிகளின் திட்டங்களை வகுப்பதிலும், ஒழுங்குமுறை செய்வதிலும், பல்வேறு குளறுபடிகள் ஏற்படுகின்றன. இது குறித்து, தமிழக பள்ளிக்கல்வியின் ஆண்டறிக்கையை ஆய்வு செய்த மத்திய அரசு, குளறுபடிகளை கண்டறிந்துள்ளது. இதை தொடர்ந்து, அனைத்து நிர்வாகங்களையும், ஒரே குடையின் கீழ் வரும் வகையில் ஒன்றிணைக்க வேண்டும். இதில், தாமதம் ஏற்படக் கூடாது என, தமிழக பள்ளிக் கல்வித் துறைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
நன்றி : தினமலர் நாளிதழ் - 18.07.2017