disalbe Right click

Monday, July 3, 2017

சட்டம் எங்கே படிக்கலாம் ?








சட்டம் எங்கே படிக்கலாம் ?
+2, பட்டதாரி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் 
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் (The Tamilnadu Dr. Ambedkar Law University) இடம்பெற்றிருக்கும் பல்வேறு சட்டப்படிப்புகளில் 2017-2018 ஆம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க வேண்டிய நேரமிது.இளநிலைச் சட்டப்படிப்புகள்: இப்பல்கலைக்கழகத்தில் இருக்கும் சட்டப்பள்ளியில் (School of Excellence in Law) ஐந்தாண்டு கால அளவிலான B.A.,L.L.B (Hons.), B.B.A.,L.L.B (Hons.), B.Com.,L.L.B., B.C.A.,L.L.B ஆகிய நான்கு பிரிவுகளிலான ஒருங்கிணைந்த பட்டப்படிப்புடன் கூடிய இளநிலைச் சட்டப்படிப்புகளும், மூன்று ஆண்டு கால அளவிலான L.L.B (Hons.) எனும் இளநிலைச் சட்டப்படிப்பும் இடம்பெற்றிருக்கின்றன.
ஐந்தாண்டு கால அளவிலான இளநிலைச் சட்டப்படிப்புக்கு +2 அல்லது அதற்கு இணையான தேர்வில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் 60% மதிப்பெண்களுடனும், பிற பிரிவினர் 70% மதிப்பெண்களுடனும் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். மூன்றாண்டு கால இளநிலைச் சட்டப்படிப்பிற்கு ஏதாவதொரு பட்டப்படிப்பில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் 55% மதிப்பெண்களுடனும், பிற பிரிவினர் 60% மதிப்பெண்களுடனும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்க வயது வரம்பு ஏதுமில்லை. 
முதுநிலைச் சட்டப்படிப்புகள்: இப்பல்கலைக்கழகத்தில் இரண்டாண்டு கால அளவிலான 1) Business Law, 2) Constitutional Law & Human Rights, 3) Intellectual Property Law, 4) International Law and Organisation, 5) Environmental Law and Legal Order, 6) Criminal Law and Criminal Justice Administration, 7) Human Rights and Duties Education, 8) Labour and Administrative Law, 9) Taxation Law எனும் ஒன்பது பிரிவுகளில் முதுநிலைச் சட்டப்படிப்புகள் (L.L.M) இடம்பெற்றிருக்கின்றன. 
முதுநிலைச் சட்டப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்க ஐந்து அல்லது மூன்று ஆண்டு கால அளவிலான இளநிலைச் சட்டப்படிப்பில் புதிய ஒழுங்குவிதிகள் எனில் 45% மதிப்பெண்களுடனும், பழைய ஒழுங்குவிதிகள் எனில் 40% மதிப்பெண்களுடனும் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.  
தொலைநிலைக் கல்விப் படிப்புகள்:
இப்பல்கலைக்கழகத்தில் தொலைநிலைக் கல்விப் படிப்புகளாக, இரண்டாண்டு கால அளவிலான நிறுமச் சட்டங்கள் (Master of Corporate Laws  M.C.L) எனும் பிரிவிலான முதுநிலைச் சட்டப்படிப்பும், ஒரு ஆண்டு கால அளவிலான
1) Business Law - P.G.D.B.L,
 2) Environmental Law  P.G.D.E.L,
 3) Information Technology LawP.G.D.I.T.L,
 4) Intellectual Property Law  P.G.D.I.P.L,
 5) Labour Law  P.G.D.L.L,
 6) Human Rights & Duties Education  P.G.D.H.R & D.E,
 7) Cyber Forensic and Internet Security P.G.D.C.F & I.S,
 8) Criminal Law, Criminology & Forensic Science P.G.D.C.L.C & F.S,
 9) Law Librarianship  P.G.D.L.Lib, (Medico  Legal Aspects  P.G.D.M.L.A),
 10) Consumer Law & Protection  P.G.D.C.l & P,
11) Maritime Law P.G.D.M.L
எனும் 11 பிரிவுகளிலான முதுநிலைச் சட்டப் பட்டயப்படிப்புகளும், ஆறுமாத கால அளவிலான ஆவணமாக்குதல் பயிற்சி (Course in Documentation) எனும் சான்றிதழ் படிப்பும் இடம்பெற்றிருக்கின்றன.
முதுநிலை நிறுமச் சட்டங்கள் படிப்பு மற்றும் முதுநிலைச் சட்டப் பட்டயப்படிப்புகள் அனைத்திற்கும் ஏதாவதொரு இள நிலைப் பட்டம் பெற்றிருந்தால் போதுமானது. சான்றிதழ் படிப்புக்கு +2 அல்லது அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:
 மேற்காணும் அனைத்துப் படிப்புகளுக்குமான விண்ணப்பத்தை
”The Registrar,
 The Tamilnadu Dr. Ambedkar Law University,
 “Poompozhil”
 No.5, Dr. D.G.S Dinakaran Salai,
 Chennai - 600028”
எனும் முகவரியில் நேரடியாகவோ, அஞ்சல் வழியிலோ பெற்றுக்கொள்ள முடியும். இளநிலை மற்றும் முதுநிலைச் சட்டப்படிப்புகள் அனைத்திற்கும் நேரடியாகப் பெற விரும்புவோர் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் ரூ.500, பிற பிரிவினர் ரூ.1000 எனவும், முதுநிலைச் சட்டப் பட்டயப்படிப்பு மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கு எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் ரூ.250, பிற பிரிவினர் ரூ.500 என்றும், விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும். 

அஞ்சல் வழியில் பெற விரும்புவோர் இளநிலை மற்றும் முதுநிலைச் சட்டப்படிப்புகளுக்கு எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் ரூ.600, பிற பிரிவினர் ரூ.1100 என்றும், முதுநிலைச் சட்டப் பட்டயப்படிப்பு மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கு எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் ரூ.350, பிற பிரிவினர் ரூ.600 என்றும்  விண்ணப்பக் கட்டணமாகச் செலுத்த வேண்டும். 
அஞ்சல் வழியில் பெற விரும்புவோர்
“The Registrar,
The Tamilnadu Dr. Ambedkar Law University,
 “Poompozhil”
 No.5, Dr. D.G.S Dinakaran Salai,
 Chennai - 600028”
எனும் முகவரிக்கு விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தி, வேண்டுதல் கடிதம் ஒன்றையும் சேர்த்து அனுப்பிப் பெற்றுக்கொள்ளலாம். ஒவ்வொரு படிப்பிற்கும் தனி விண்ணப்பத்துடன் விண்ணப்பக் கட்டணமும் தனியாகச் செலுத்த வேண்டும்.
விண்ணப்பக் கட்டணத்தினை ஏதாவதொரு இந்தியன் வங்கிக் கிளையில் உரிய சலான் வழியாக மட்டுமே செலுத்தவேண்டும். விண்ணப்பக் கட்டணத்திற்கான சலானை பல்கலைக்கழக அலுவலகத்தில் பெற்றுக்கொண்டோ அல்லது தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் www.tndalu.ac.in எனும் இணையதளத்திலிருந்து தரவிறக்கம் செய்தோ பயன்படுத்திக்கொள்ளலாம். 
நிரப்பப்பட்ட விண்ணப்பத்துடன் உரிய சான்றிதழ் நகல்களை இணைத்துப் பல்கலைக்கழக அலுவலகத்தில் நேரடியாகக் கொடுக்கலாம்.
அஞ்சல் வழியில் அனுப்ப விரும்புவோர்
“The Chairman,
 Law Admissions 2017-2018,
 The Tamilnadu Dr. Ambedkar Law University,
 “Poompozhil”
 No.5, Dr. D.G.S Dinakaran Salai,
 Chennai - 600028”
எனும் முகவரிக்குத் தொடர்புடைய படிப்பிற்கான கடைசி நாளுக்குள் கிடைக்கும்படி அனுப்பி வைக்க வேண்டும். 

ஐந்தாண்டு இளநிலைச் சட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 19.6.2017. மூன்றாண்டு சட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 30.6.2017. முதுநிலைச் சட்டப்படிப்பு மற்றும் தொலைநிலைக் கல்விப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 28.7.2017.

மேலும் கூடுதல் தகவல்களை அறிய மேற்காணும் பல்கலைக்கழக இணையதளத்தைப் பார்க்கலாம் அல்லது பல்கலைக்கழக அலுவலகத்திற்கு நேரடியாகச் சென்றோ, பல்கலைக்கழகத்தின் 044 - 24641212 எனும் அலுவலகத் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டோ தகவல்களைப் பெறலாம். 

அரசு சட்டக்கல்லூரிகளில் சட்டப் படிப்புகள்தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்துடன் (The Tamilnadu Dr. Ambedkar Law University) இணைவிப்பு பெற்றுத் தமிழ்நாட்டில் செயல்பட்டுவரும் அரசு சட்டக் கல்லூரிகளில் இடம்பெற்றிருக்கும் இளநிலைச் சட்டப்படிப்புகளில் 2017-2018 ஆம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க வேண்டிய நேரமிது.

தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, திருச்சி, கோயம்புத்தூர், திருநெல்வேலி, செங்கல்பட்டு, வேலூர் ஆகிய இடங்களில் அரசுச் சட்டக்கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இளநிலைச் சட்டப்படிப்புகள்: மேற்காணும் சட்டக் கல்லூரிகளில் ஐந்தாண்டு கால அளவிலான ஒருங்கிணைந்த பட்டப்படிப்புடன் கூடிய இளநிலைச் சட்டப்படிப்பு (B.A.,L.L.B) மற்றும் மூன்று ஆண்டு கால அளவிலான இளநிலைச் சட்டப்படிப்பு (L.L.B) எனும் இரண்டு வகையான இளநிலைச் சட்டப்படிப்புகள் இடம்பெற்றிருக்கின்றன. 
கல்வித்தகுதி:
ஐந்தாண்டு கால அளவிலான இளநிலைச் சட்டப்படிப்புக்கு +2 அல்லது அதற்கு இணையான தேர்வில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் 40% மதிப்பெண்களுடனும், பிற பிரிவினர் 45% மதிப்பெண்களுடனும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மூன்றாண்டு காலச் சட்டப்படிப்பிற்கு ஏதாவதொரு பட்டப்படிப்பில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் 40% மதிப்பெண்களுடனும், பிற பிரிவினர் 45% மதிப்பெண்களுடனும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இரண்டு சட்டப்படிப்புகளுக்கும் விண்ணப்பிக்க வயது வரம்பு ஏதுமில்லை. 
விண்ணப்பிக்கும் முறை: இப்படிப்புகளுக்கான விண்ணப்பத்தை நேரடியாகப் பெற விரும்புவோர் மேற்காணும் அரசுச் சட்டக் கல்லூரிகளிலும், விழுப்புரம், தருமபுரி, இராமநாதபுரம் ஆகிய இடங்களில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் பெற்றுக்கொள்ளலாம். நேரடியாகப் பெற விரும்புவோர் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் ரூ.250, பிற பிரிவினர் ரூ.500 என்று விண்ணப்பக் கட்டணம் செலுத்தவேண்டும். 
அஞ்சல் வழியில் பெற விரும்புவோர் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் ரூ.350, பிற பிரிவினர் ரூ.600 என விண்ணப்பக் கட்டணமாகச் செலுத்தவேண்டும். அஞ்சல் வழியில் பெற விரும்புவோர்
The Registrar,
 The Tamilnadu Dr. Ambedkar Law University,
 “Poompozhil”
No.5, Dr. D.G.S Dinakaran Salai,
 Chennai - 600028”
எனும் முகவரிக்கு விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தி, வேண்டுதல் கடிதம் அனுப்பிப் பெற்றுக்கொள்ளலாம். 
விண்ணப்பக் கட்டணத்தினை ஏதாவதொரு இந்தியன் வங்கிக் கிளையில் உரிய சலான் வழியாக மட்டுமே செலுத்தவேண்டும். விண்ணப்பக் கட்டணத்திற்கான சலானை அரசுச் சட்டக் கல்லூரி அலுவலகங்களில் பெற்றுக்கொள்ளலாம் அல்லது தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் www.tndalu.ac.in எனும் இணையதளத்திலிருந்து தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.
நிரப்பப்பட்ட விண்ணப்பத்துடன் உரிய சான்றிதழ் நகல்களை இணைத்து, நேரடியாகச் சட்டக்கல்லூரி முதல்வர் அலுவலகங்களிலும், விழுப்புரம், தருமபுரி, இராமநாதபுரம் ஆகிய இடங்களில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் நேரடியாகக் கொடுக்கலாம். அஞ்சல் வழியில் அனுப்ப விரும்புவோர்
“The Chairman,
 Law Admissions 2017-2018,
 The Tamilnadu Dr. Ambedkar Law University,
“Poompozhil” No.5, Dr. D.G.S Dinakaran Salai,
 Chennai - 600028”
எனும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். 
ஐந்தாண்டு சட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 23.6.2017.
மூன்றாண்டு சட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 17.7.2017.

மேலும் கூடுதல் தகவல்களை அறிய மேற்காணும் பல்கலைக்கழக இணையதளத்தைப் பார்க்கலாம் அல்லது அருகிலுள்ள சட்டக்கல்லூரி அலுவலகங்களுக்கு நேரடியாகச் சென்று தகவல்களைப் பெறலாம்.

- தேனி மு. சுப்பிரமணி
நன்றி : தினகரன் நாளிதழ் - 16.06.2017

GST வரியை என CGST, SGST ஏன் பிரிக்கிறார்கள்?

GST வரியை என CGST, SGST ஏன் பிரிக்கிறார்கள்?
சரக்கு மற்றும் சேவைகள் வரி (ஜிஎஸ்டி) நாடு முழுவதும் கடந்த 1-ம் தேதி முதல் அமலாகியுள்ளது. கலால், சுங்கம், மதிப்புக்கூட்டு, விற்பனை, சேவை என பல்வேறு வரிகள் தனித்தனியாக இருந்த நிலையில், நாடு முழுவதும் ஒரே வரி என்ற அடிப்படையில் இந்த ஜிஎஸ்டி அமலாக்கப்பட்டுள்ளது.
இதற்காக அமைக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டி கவுன்சில், பொருளுக்கு தகுந்தபடி 5 முதல் 28 சதவீதம் வரை வரியை விதித்துள்ளது. மாநில வரிவிதிப்பு முற்றிலும் தவிர்க்கப் பட்டு, மத்திய அரசுக்கு முழுமையாக வரி செல்லும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
இதில், மத்திய ஜிஎஸ்டி (சிஜிஎஸ்டி), மாநில ஜிஎஸ்டி (எஸ்ஜி எஸ்டி), மாநிலங்களுக்கு இடையி லான ஜிஎஸ்டி (ஐஜிஎஸ்டி) என்ற முறையில் பிரித்து வரி விதிக் கப்படுகிறது. குறிப்பாக ஒரு பொருளுக்கு 18 சதவீதம் வரி என்றால், அதில் 9 சதவீதம் சிஜிஎஸ்டி, 9 சதவீதம் எஸ்ஜிஎஸ்டி என பிரித்து வகைப்படுத்தப்படுகிறது. அதேபோல, ஒரு பொருள் மாநிலம் விட்டு மாநிலம் சென்றால் ஐஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது.
இது தொடர்பாக வணிகவரித் துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘சிஜிஎஸ்டி, எஸ்ஜிஎஸ்டி, ஐஜிஎஸ்டி என வரி விதிப்பு இருந்தாலும், ஒட்டுமொத்த வரியையும் பெறு வது மத்திய அரசுதான். அதன்பின், அவர்கள் வைத்துள்ள பார்முலா அடிப்படையில் வரியை மாநில அரசுக்கு வழங்குவதாகக் கூறு கின்றனர். இது நடைமுறைக்கு வந்த பிறகுதான் மாநிலங்களுக்கான பங்கு என்ன என்பது தெரியவரும். இப்போதைக்கு மொத்த ஜிஎஸ்டி வரியில் மத்திய, மாநில ஜிஎஸ்டிக்கு தலா 50 சதவீதம் என்ற அளவில் பிரித்து பில் போட அறிவுறுத்தப்பட்டுள்ளது’’ என்றார்.
மறு விற்பனைக்கு வரி உண்டா?
ஏற்கெனவே ஜிஎஸ்டி விதிக் கப்பட்ட ஒரு பொருளை வாங்கி, மறு விற்பனை செய்யும் போதும் வரி செலுத்த வேண்டும் என்கின்றனர் வணிகவரித் துறையினர்.
இது தொடர்பாக வணிகவரித் துறை அதிகாரி கூறும்போது, ‘‘தற்போது மதிப்புக்கூட்டு வரிக்கும், ஜிஎஸ்டிக்கும் வித்தியாசம் இல்லை. ஆயிரம் ரூபாய்க்கு வாங்கப்படும் பொருளுக்கு முதல் விற்பனையாளர் 28 சதவீத அடிப் படையில் ரூ.280 வரியுடன் வழங்குவார். அதை வாங்குபவர், அந்தப் பொருளுக்கு ரூ.1,100 விலை நிர்ணயித்து, அதற்கு 28 சதவீத வரி நிர்ணயித்து விற்பார். ஆனால், அவர் ஏற்கெனவே பொருள் வாங்கியதன் அடிப்படையில் ரூ.28 மட்டும் மேல் வரி செலுத்துவார்’’ என்றார்.
 நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் - 03.07.2017



தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ரிசர்வ் வங்கி

Image may contain: text
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ரிசர்வ் வங்கி
இந்திய ரிசர்வ் வங்கிக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005ன் கீழ் விண்ணப்பிக்கும் வழிமுறைகள் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
இச்சட்டத்தின் கீழ் இந்தியக் குடிமக்கள் எழுத்து மூலமாக எத்தகவல்கள் அவர்களுக்குத் தேவையோ, அதனைத் தெளிவாகக் குறிப்பிட்டு விண்ணப்பிக்கலாம். 
மனுதாரரை தொடர்பு கொள்ள ஏதுவான தகவல்கள் (அஞ்சல் முகவரி, தொலைபேசி எண் நகலனுப்பி எண் (பேக்ஸ் எண்), மின்னஞ்சல் முகவரி) குறிப்பிடப்படவேண்டும். விவரங்கள் தேவைப்பட்டால் அவர்களைத் தொடர்பு கொள்ள வசதியாக இது இருக்கும். 
இந்தியக் குடிமக்களுக்கு மட்டுமே தகவல்கள் சட்டத்தின் கீழ் கொடுக்கப்படுமாதலால், குடியுரிமைச் சான்றையும் விண்ணப்பத்துடன் அளிக்க வேண்டும். ஒரு இந்தியக் குடிமகன் ஆன்லைன் போர்ட்டல் மூலமாகவும் https://rtionline.gov.in என்ற லிங்க் மூலமாக ஆன்லைனிலேயே விண்ணப்பப் பணம் செலுத்தி மனுவை அனுப்பலாம். உடனே அவருக்கு ஒரு பதிவு எண் கொடுக்கப்படும். அதன் மூலமாகவே மனுதாரர் தனது மனுவின் நிலையை அவ்வப்போது தெரிந்துகொள்ளலாம்.
மனுவை அனுப்புதல்

தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005 மற்றும் மத்திய அரசின் தகவல் அறியும் உரிமை விதிகள் 2012-ல் குறிப்பிட்டுள்ளபடி, சட்டப்பிரிவு 6(i)-ன்கீழ் தகவல் பெறுவதற்கான் விண்ணப்பங்களுடன் ரூ.10/- ரொக்கம் செலுத்தியதற்கான ரசீது/ கேட்புவரைவோலை/வங்கிக் காசோலை (சம்பந்தப்பட்ட கணக்கு அலுவலர் பெயரில்) இணைக்கப்பட வேண்டும்.
உங்கள் மனுவுடன் மனுக்கட்டணம் ரூ 10/- க்கான கேட்பு வரைவோலையாகவோ அல்லது வங்கிக் காசோலையாகவோ ரிசர்வ் வங்கியின் பெயருக்கு அனுப்பவும். கட்டணம் பணமாகவும் மனுவுடன் செலுத்தப்படலாம். 
மனுக்களை நகலிறக்கி மற்றும் மின் அஞ்சல் மூலமாகவும் அனுப்பலாம். ஒரு இந்தியக் குடிமகன் ஆன்லைன் போர்ட்டல் மூலமாகவும் https://rtionline.gov.in என்ற லிங்க் மூலமாக ஆன்லைனிலேயே விண்ணப்பப் பணம் செலுத்தி மனுவை அனுப்பலாம். உடனே அவருக்கு ஒரு பதிவு எண் கொடுக்கப்படும். அதன் மூலமாகவே மனுதாரர் தனது மனுவின் நிலையை அவ்வப்போது தெரிந்துகொள்ளலாம்.
உங்களின் கோரிக்கையைத் தபால் மூலமாகவோ நேரிலோ தேவைப்படும் தகவல் அறியும் உரிமைக் கட்டணத்தைக் குறிப்பிடப்பட்ட சரியான முறையில் செலுத்தி, 
மத்திய பொதுத் தகவல் அதிகாரி, 
இந்திய ரிசர்வ் வங்கி, 
தகவல் அறியும் உரிமைச் சட்டப் பிரிவு, 
அமர் கட்டடம் முதல் தள்ம், 
சர் P.M. ரோடு, 
மும்பை-1 
என்ற முகவரிக்கு அனுப்பலாம். ஆன்லைன் மூலம் https://rtionline.gov.in என்ற இணைப்பை அணுகி, கோரிக்கையை ஆன்லைன் மூலமாகவே,கட்டணப் பணத்தையும் செலுத்தி அனுப்பலாம். 
இந்திய ரிசர்வ் வங்கியில் நவம்பர் 16, 2009க்குப் பிறகு, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் அளிக்கும் பணி என்பது மைய அலுவலகத்திலிருந்து பரவலாக்கப்பட்டு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.இதன்பொருட்டு, மைய அலுவலகத்தின் பல்வேறு துறைகளின் தலைமைப் பொது மேலாளர்கள் / ஆலோசகர்கள் / பொதுமேலாளர்கள் (பொறுப்பு) மத்திய பொதுத் தகவல் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இல்லாதபட்சத்தில் அந்தந்த துறைகளின் இதர தலைமைப் பொது மேலாளர்கள் / பொதுமேலாளர்கள் பொது தகவல் அதிகாரிகளாக செயல்படுவார்கள். செயல் இயக்குநர், மேல்முறையீட்டு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
உரிய விண்ணப்பம் உரிய கட்டணத்தோடு கிடைத்த தேதியிலிருந்து 30 நாட்களுக்குள் விண்ணப்பதாரருக்கு அவர் கேட்ட தகவல்களைக்கொடுக்க முடியுமா முடியாதா என்பதை ரிசர்வ் வங்கி அவருக்குத் தெரியப்படுத்தி விடும்.
சட்டப்பிரிவு 7(5) இன் கீழ் தகவல் அளிக்க வேண்டியிருந்தால் -

ஒரு தட்டு அல்லது குறுந்தட்டுக்கு ரூ.50/-
அச்சடித்த வெளியீடுகளுக்கு அதற்குரிய விலை அல்லது நகலெடுத்தால் பக்கத்துக்கு ரூ.2/-
எப்பொழுது செலுத்தவேண்டும்?

தகவல் அறியும் உரிமைச்சட்டம் 7 (i) இன் கீழ், விண்ணப்பமும் அதற்குரிய கட்டணமும் கிடைத்த 30 தினங்களுக்குள், ரிசர்வ் வங்கி, கேட்ட தகவல்கள் அளிக்கப்படுமாயின் அதற்குரிய கட்டணங்களையும் கூடவே அறிவிக்கும்.
தகவல் கிடைப்பது எப்பொழுது ?

ரிசர்வ் வங்கி அறிவித்த கட்டணம் செலுத்தப்பட்டவுடன் நீங்கள் கேட்ட தகவல்கள் உங்களுக்குக் கிடைக்கும்.
தகவல் அறியும் உரிமைச்சட்டம், 2005

இந்திய அரசு 2005 ஆம் வருடத்திய தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை இயற்றியுள்ளது (http://www.persmin.nic.in/). 2005 அக்டோபர் 12 ஆம் தேதியிலிருந்து இது அமலுக்கு வருகிறது. பொது நிறுவனங்களின் செயல்பாடுகள் மறைவேதும் இல்லாமல், பொதுமக்களுக்குத் தெள்ளத் தெளிவாகத் தெரியவும், அந்த நிறுவனங்களின் செயல்பாட்டுக்குச் சம்பந்தப்பட்ட அதிகாரிகளைப் பொறுப்பேற்க வைக்கவும், பொதுமக்கள் அந்த நிறுவனங்களின் செயல்பாட்டினை அறிந்து கொள்ள வழிவகை செய்யும் சட்டம் தான் இச்சட்டம். இச்சட்டத்தின் பிரிவுகள் 8,9 இன் கீழ் சில வகையான தகவல்கள் வெளியிடப்படுவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகின்றன. தலைமைப் பொதுத்தகவல் அலுவலர் ஒருவரையும் நியமிக்க இச்சட்டம் வழிவகுக்கிறது.
இச்சட்டத்தின் கீழ் ரிசர்வ் வங்கியின் பொறுப்புகள்

இச்சட்டத்தின் கீழ் ரிசர்வ் வங்கி பொது அலுவலகமாகக் குறிக்கப்படுகிறது. ஆகவே பொதுமக்களுக்குத் தகவல்கள் அளிப்பது ரிசர்வ் வங்கியின் பொறுப்பாகும்.
வெளிப்படைத்தன்மை அதிகாரியின் பெயர் மற்றும் முகவரி

தலைமைப் பொது மேலாளர் – பொறுப்பு
மனித வள மேலாண்மைதுறை 
இந்திய ரிசர்வ் வங்கி
மத்திய அலுவலகக் கட்டிடம் (20வது தளம்)
சாஹித் பகத் சிங் மார்க்-போர்ட்
மும்மை – 400 001
தொலைபேசி எண் 22610301
பிரிவு 4(1)(b) சட்டத்தின் கீழ் பிரசுரிக்கப்பட வேண்டிய தகவல்கள்

(i) அமைப்பு / நிறுவனத்தின் விவரங்கள், பணிகள், கடமைகள்
(ii) அதிகாரிகள், அலுவலர்களது பணிகளும் அதிகாரங்களும்
(iii) மேற்பார்வையிடுதல், பொறுப்பேற்பது உள்ளிட்ட முடிவுகளை எடுக்கும் விதம் பற்றிய நடைமுறைகள்
(iv) தனது பணிகளைச்செய்ய வங்கியின் வழிமுறைகள்
(v) வங்கி வைத்திருக்கும் / கையாளும் விதிகள், ஒழுங்குமுறைகள், அறிவுரைகள், அறிவுரைகளின் தொகுப்புகள், ஏடுகள் – அதிகாரிகளும் அலுவலர்களும் தங்கள் பணிகளைச்செய்யப் பயன்படுத்தும் ஏடுகள்
(vi) ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஆவண வகைகளின் பட்டியல்
(vii) பொதுமக்கள் / அவர்கள் பிரதிநிதிகளைக் கலந்து முடிவுகள் எடுக்க / அமலாக்க ஏதேனும் திட்டம்/பழக்கம்
(viii) அறிவுரைக்காக குழுமம், குழு – 2 அல்லது அதற்கு மேற்பட்டதாக கொண்ட அமைப்பு – இந்த அமைப்புகளின் கூட்டம் பொது மக்களுக்குத் திறந்து விடப்படுகிறதா அல்லது கூட்டத்தில் நடப்பவை மக்களுக்குத் தெரியப்படுத்தப்படுகிறதா
(ix) அதிகாரி / அலுவலர் பெயர் முகவரி கொண்ட தொகுப்பு
(x) மாதச்சம்பளம் / சலுகைகள்
(xi) திட்டங்கள் / பட்ஜெட்டுகள் / உத்தேச செலவுகள்
(xii) பொருந்தாதது
(xiii) சலுகைகள் பெறுவோர் விவரம் அளிக்கப்பட்ட அனுமதி அல்லது அங்கீகாரம்
(xiv) மின்னணு முறையில் கொடுக்கப்பட்ட தகவல்களின் விவரங்கள்
(xv) தகவல் பெற குடிமக்களுக்கு உள்ள வசதிகள், பொது உபயோகத்துக்கான நூலகம், படிப்பறைகளின் வேலை நேரங்கள்
(xvi) பொதுத் தகவல் அதிகாரியின் பெயர், பதவி மற்றும் முகவரி
கோரிக்கையை எங்கு அனுப்ப வேண்டும்

உங்களின் கோரிக்கையைத் தபால் மூலமாகவோ நேரிலோ தேவைப்படும் தகவல் அறியும் உரிமைக் கட்டணத்தைக் குறிப்பிடப்பட்ட சரியான முறையில் செலுத்தி, 
மத்திய பொதுத் தகவல் அதிகாரி, 
இந்திய ரிசர்வ் வங்கி, 
தகவல் அறியும் உரிமைச் சட்டப் பிரிவு, 
அமர் கட்டடம் முதல் தள்ம், 
சர் P.M. ரோடு, 
மும்பை-1 
என்ற முகவரிக்கு அனுப்பலாம். 
ஆன்லைன் மூலம் https://rtionline.gov.in என்ற இணைப்பை அணுகி, கோரிக்கையை ஆன்லைன் மூலமாகவே,கட்டணப் பணத்தையும் செலுத்தி அனுப்பலாம். கோரிக்கையை அனுப்பும்போது, விண்ணப்பதாரருக்கு ஒரு பதிவு எண் தரப்படும். அதைக் கொணடு அவர் தனது விண்ணப்பத்தின் நிலைப்பாட்டை அறிந்துகொள்ளமுடியும்.
மத்திய பொதுத் தகவல் அதிகாரி / மாற்று மத்திய பொதுத் தகவல் அதிகாரி, மேல்முறையீட்டு அதிகாரி
இந்திய ரிசர்வ் வங்கியில் நவம்பர் 16, 2009க்குப் பிறகு, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் அளிக்கும் பணி என்பது மைய அலுவலகத்திலிருந்து பரவலாக்கப்பட்டு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.இதன்பொருட்டு, மைய அலுவலகத்தின் பல்வேறு துறைகளின் தலைமைப் பொது மேலாளர்கள் / ஆலோசகர்கள் / பொதுமேலாளர்கள் (பொறுப்பு) மத்திய பொதுத் தகவல் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இல்லாதபட்சத்தில் அந்தந்த துறைகளின் இதர தலைமைப் பொது மேலாளர்கள் / பொதுமேலாளர்கள் பொது தகவல் அதிகாரிகளாக செயல்படுவார்கள். செயல் இயக்குநர், மேல்முறையீட்டு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னையில் விண்ணப்பிக்க 

துணைப் பொது மேலாளர் (நிர்வாகம்) 
இந்திய ரிசர்வ் வங்கி
மனிதவள மேலாண்மைத் துறை
16, ராஜாஜி சாலை
சென்னை - 600 001 044-25360823
044-25399203
Fax: 044-23565220
தகவல் அளிக்க ஆகும் காலம்

உரிய விண்ணப்பம் உரிய கட்டணத்தோடு கிடைத்த தேதியிலிருந்து 30 நாட்களுக்குள் விண்ணப்பதாரருக்கு அவர் கேட்ட தகவல்களைக்கொடுக்க முடியுமா முடியாதா என்பதை ரிசர்வ் வங்கி அவருக்குத் தெரியப்படுத்தி விடும்.
தகவல் கிடைக்கப் பணம் தரவேண்டுமா ?

தகவல் அறியும் உரிமைச்சட்டம் (ஒழுங்கு முறைக்கட்டணம் செலவு) விதிகள் 2005 இன் கீழ் பொது அதிகாரி.
ஒருபக்கத்துக்கு (A3 or A4) (அச்சு அல்லது நகல்) ரூ.2/-.
பெரிய அளவு காகிதமெனில் அதற்குள்ள விலை, மாதிரிகள் ஏதேனும் அனுப்பினால் அவைகளுக்குரிய விலை, ஆவணங்களை ஆய்வு செய்ய : முதல் ஒரு மணி நேரத்திற்குக் கட்டணம் ஏதுமில்லை, அதற்கு அதிகமனால் குறைந்த அளவு, ஒவ்வொரு 15 நிமிடத்திற்கும் ரூ.5/- கட்டணம் விதிக்க வேண்டும்
சட்டப்பிரிவு 7(5) இன் கீழ் தகவல் அளிக்க 

ஒரு தட்டு அல்லது குறுந்தட்டுக்கு ரூ.50/-
அச்சடித்த வெளியீடுகளுக்கு அதற்குரிய விலை 
அல்லது நகலெடுத்தால் பக்கத்துக்கு ரூ.2/-
எப்பொழுது செலுத்தவேண்டும்?தகவல் அறியும் உரிமைச்சட்டம் 7 (i) இன் கீழ், விண்ணப்பமும் அதற்குரிய கட்டணமும் கிடைத்த 30 தினங்களுக்குள், ரிசர்வ் வங்கி, கேட்ட தகவல்கள் அளிக்கப்படுமாயின் அதற்குரிய கட்டணங்களையும் கூடவே அறிவிக்கும்.
தகவல் கிடைப்பது எப்பொழுது ?

ரிசர்வ் வங்கி அறிவித்த கட்டணம் செலுத்தப்பட்டவுடன் நீங்கள் கேட்ட தகவல்கள் உங்களுக்குக் கிடைக்கும்.
கேட்ட தகவலை ரிசர்வ் வங்கி தர மறுக்கலாமா ?

தகவல் அறியும் உரிமைச் சட்டப்பிரிவு 8, 9 இன் கீழ், சில தகவல்கள் வெளியிடப்படுவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
இந்தியாவின் இறையாண்மையையும் ஒருமைப்பாட்டையும் பாதிக்கும் தகவல்கள்; பாதுகாப்பு, முக்கியத்துவம் வாய்ந்த, பொருளாதார, அறிவியல் சம்பந்தப்பட்ட நாட்டின் தகவல்கள்; அன்னிய நாடுகளுடனான உறவு; குற்றமாகக் கருதப்படுவதற்கு இட்டுச்செல்லும் தகவல்கள்
நீதிமன்றங்கள், நடுவர் மன்றங்கள் போன்றவைகள் தடைசெய்த தகவல்கள்; நீதிமன்ற அவதூறுக்கு இட்டுச்செல்லும் தகவல்கள்
பாராளுமன்ற, சட்டமன்ற தனி உரிமைகளை மீறும் செயலுக்கு இட்டுச்செல்லும் தகவல்கள்
வணிக நம்பிக்கை, வியாபார ரகசியங்கள், அறிவுச்சொத்துகள் சம்பந்தப்பட்ட தகவல்கள்; முன்றாவது நபரின் போட்டியிடும் தன்மையைப்பாதிக்கும் தகவல்கள்; பொதுவான மக்கள் நம்பிக்கைக்குக் குந்தகம் ஏற்படுத்தும் தகவல்கள்
அந்நிய அரசுகளிடமிருந்து வரும் ரகசியத்தகவல்கள், பிறரது உயிரையும், உடமையையும் பாதிக்கும் தகவல்கள்; தகவல் தரும் நிறுவனங்களைப் பாதிக்கும் தகவல்கள், பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக அல்லது சட்டத்தை அமல் படுத்துபவர்களை பாதிக்கும் தகவல்கள்
ஏற்கனவே விசாரணை, ஆய்விலிருக்கும் விவரங்களைப் பற்றிய தகவல்கள், அமலில் உள்ள விசாரணை, ஆய்வைப் பாதிக்கும் தகவல்கள்
அமைச்சர் குழுக்காகிதங்கள், அமைச்சர்கள், செயலாளர்கள் பிற அதிகாரிகளுடன் கலந்துரையாடிய தகவல்கள்
தனி நபர் பற்றிய தகவல்கள் பொது நன்மை அல்லது பொதுக் காரியத்திற்கு அல்லது பொது நன்மைக்குச் சம்பந்தமில்லாத தகவல்கள்
ஒட்டுமொத்தமான பொதுநலன் கருதி தகவல்களை வெளியிடுதல் தேவை என்று தகுதி வாய்ந்த பொருத்தமான அதிகாரி திருப்திபட்டாலன்றி, பொருப்பாண்மையிலிருந்து ஒருவருக்குக் கிடைக்கும் தகவல்கள்
யாருக்கு மேல்முறையீடு செய்யவேண்டும் ?

(மேல் முறையீட்டு அதிகாரி)
நிர்வாக இயக்குநர்
இந்திய ரிசர்வ் வங்கி
மத்திய அலுவலகக் கட்டிடம்
சாஹித் பகத் சிங் மார்க்
மும்பை – 400 001
மின் அஞ்சல் : aaria@rbi.org.in
Tel : 022 - 22611083
Fax : 022 – 22632052
அல்லது
(மாற்று மேல் முறையீடு அதிகாரி)
நிர்வாக இயக்குநர்
இந்திய ரிசர்வ் வங்கி
மத்திய அலுவலகக் கட்டிடம்
சாகித் பகத் சிங் மார்க்
மும்பை – 400 001
மின் அஞ்சல் : aaria@rbi.org.in
தொலைபேசி : 022 - 22611097
நகலனுப்பி 022 – 22675277
மேற்கண்ட தகவல்கள் இந்திய ரிசர்வ் வங்கியின் https://www.rbi.org.in/ இணைய தளத்தில் இருந்து 03.07.2016 அன்று எடுக்கப்பட்டு முகநூலில் எனது பக்கத்தில் பதிவு செய்யப்பட்டது.
அன்புடன் செல்வம் பழனிச்சாமி 

Saturday, July 1, 2017

ஜி.எஸ்.டி வரி பற்றிய கேள்விகள் மற்றும் பதில்கள் - பாகம் : 8

ஜி.எஸ்.டி வரி பற்றிய கேள்விகள் மற்றும் பதில்கள் - பாகம் : 8

பதிவு செய்யாத வணிகரிடம் பொருள்களை கொள்முதல் செய்யலாமா?

சிறப்பு பொருளாதார மண்டலத்தில் (SEZ) அமைந்திருக்கும் நிறுவனத்திற்கு தனிப்பதிவு அவசியமா? உதாரணமாக, எங்கள் நிறுவனம் பெருந்துறை சிறப்பு பொருளாதார மண்டலத்தில் ஒரு கிளையும் சென்னையில் ஒரு கிளையும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இதற்கு தனித்தனி பதிவு அவசியமா ?
உங்களது நிறுவனம் ஏற்கெனவே ஜிஎஸ்டியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் இருக்கும் பிரிவுக்கும் தனிப்பதிவு அவசியம். இது தவிர ஒரே மாநிலத்திலுள்ள மற்ற கிளைகளுக்கு தனி பதிவு அவசியமில்லை.
வழக்கறிஞர்களுக்கு கட்டணமாக செலுத்தப்படும் தொகைக்கு ஜிஎஸ்டி வரி அவசியமாகிறதா?
வழக்கறிஞர்கள் இன்னமும்கூட ஜிஎஸ்டியி லிருந்து விலக்கு பெற்றவர்களாகத்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அவர்களுக்கு வியாபார நிறுவனங்கள் கொடுக்கும் தொகைக்கு எதிர்முறை கட்டண முறையில் (Reverse Charge Mechanism) அதற்குரிய தொகையை சேவை பெறுபவர்கள் செலுத்த வேண்டியது அவசியமாகிறது. இதனால் வழக்கறிஞர்கள் எவரும் ஜிஎஸ்டியில் பதிவு செய்ய வேண்டிய நிலை ஏற்படவில்லை.
நான் காஞ்சிபுரத்தில் பட்டுப்புடவைகளை உற்பத்தி செய்து கொண்டும் அதற்கான வர்த்தக நிறுவனம் ஒன்றும் வைத்துள்ளேன். இரண்டிற்கும் தனித்தனி பதிவுகள் அவசியமா?
நீங்கள் இரண்டு நிறுவனத்தையும் ஒரே பான் எண்ணின் கீழ் செய்வதால் தனித்தனி பதிவுகள் அவசியமில்லை. ஒரே பதிவின் கீழ் உற்பத்தி மற்றும் விற்பனையை செயல்படுத்தலாம்.
கரூரில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் எங்களது நிறுவனத்திற்கு மைசூரில் பதிவு செய்யாத நிலையில் இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு நிறுவனத்திடம் இருந்து பொருட்களைக் கொள்முதல் செய்கிறோம். இதனால் ரிவர்ஸ் சார்ஜ் என்று சொல்லப்படுகின்ற எதிர்முறை கட்டணத்தை செலுத்த வேண்டியிருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் நாங்கள் கர்நாடகாவில் பதிவு செய்வது அவசியமா ?
நீங்கள் தற்பொழுது தமிழ்நாட்டில் பதிவு செய்துள்ளீர்கள். நீங்கள் கர்நாடகாவைச் சேர்ந்த பதிவு செய்யாத நிறுவனத்திடம் இருந்து பெறுவதால் உங்களது நிறுவனத்தை கர்நாடகாவிலும் பதிவு செய்வது அவசியம்.
ஜிஎஸ்டி வந்தால் வியாபாரத்தில் நடைமுறை மூலதனம் பாதிக்கப்படும் என்று நண்பர்கள் கூறுகிறார்கள் உண்மையா ?
ஜிஎஸ்டி முறையால் வரி நிகழ்வு நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டு வரி கட்ட வேண்டிய சூழ்நிலையில் சில மாற்றங்கள் வந்துள்ளன. உதாரணமாக ஒரு பொருளுக்கான முன் பணம் (Advance) பெறும்போது வரி நிகழ்வு ஏற்படுகிறது. முன் பணம் (Advance) பெறும்போதே வரி செலுத்த கடமைப்பட்டிருக்கிறீர்கள். அதுபோல நீங்கள் கொடுக்கும் முன் பணத்திற்கும் (Advance) உடனடியாக உள்ளீட்டு வரி வரவாக எடுத்துக்கொள்ள முடியாது. இதில் மூன்று நிபந்தனைகள் உள்ளன. அதில் முதலாவது நிபந்தனை நீங்கள் கொடுத்துள்ள முன் பணத்திற்கான (Advance) பொருட்கள் வந்து சேர வேண்டும். இரண்டாவது விற்பதற்கான ஒப்புகை சீட்டு தயார் செய்திருக்க வேண்டும். மூன்றாவது நீங்கள் முன் பணம் கொடுத்தவர் (Advance) அதற்குரிய ஜிஎஸ்டி வரியை செலுத்தி இருக்க வேண்டும். மேற் சொன்ன மூன்று நிபந்தனைகளை பூர்த்தி செய்தால் மட்டுமே நமது முன் பணத்திற்கான (Advance) உள்ளீட்டு வரி எடுத்துக்கொள்ள முடியும். எனவே இது போன்ற நிகழ்வுகளால் நடைமுறை மூலதனத்தின் கணக்குகள் மறுஆய்வு செய்யப்பட வேண்டும் அல்லது மறுமதிப்பீடு செய்யப்பட வேண்டும். நடைமுறை மூலதனத்தில் ஜிஎஸ்டி அணுகுமுறையில் எந்த மாற்றங்கள் இருக்கிறது என்பதை ஒப்பிட்டு கணக்கிட்டு பார்த்துக்கொள்ள வேண்டும்.
நான் திருப்பூரில் ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறேன். என்னுடைய உள்ளீட்டு வரிகளை நான் மீண்டும் பெற்றுக்கொள்ள முடியுமா? ஏற்றுமதியாளருக்கு ஜிஎஸ்டி சட்டம் எந்த வகையில் உதவுகிறது?
ஏற்றுமதியாளர்கள் இரண்டு வகைகளில் ஜிஎஸ்டி வரிவிதிப்பை அணுகலாம். ஒன்று வரி செலுத்திவிட்டு வாங்கிய பொருட்களுக்கும் சேவைகளுக்குமான உள்ளீட்டு வரியை நீங்கள் ஏற்றுமதி செய்த பிறகு திருப்பித்தரத் தக்க தொகையாக பெற்றுக் கொள்ளலாம். இரண்டாவது உங்களது ஏற்றுமதிக்கான வரியை செலுத்திவிட்டு உள்ளீட்டு வரிபோக வாங்கிய பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான உள்ளீட்டு வரியை கழித்து மீதியை மொத்த தொகையையும் திருப்பித்தரத்தக்க தொகையாக (Refund) பெற்றுக் கொள்ளலாம். மேற்சொன்ன வகைகளிலும் ஏற்றுமதியாளர்கள் ஜிஎஸ்டியை அணுகலாம்.
பதிவு செய்யப்படாத வணிகரிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் பொருட்களுக்கு எதிர்முறை கட்டண (Reverse Charge) முறையில் வரி செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. தற்பொழுது நான் ரூ.750-க்கு எழுதுபொருட்களைப் (Stationary Goods) பதிவு செய்யாத கடையிலிருந்து வாங்குகிறேன் என்று வைத்துக் கொள்ளலாம். இதற்கு எதிர்முறை கட்டண (Reverse Charge) முறையில் ஜிஎஸ்டியில் வரி உண்டா ?
பதிவு செய்யப்படாத வணிகரிடமிருந்து வாங்கப்படும் பொருட்களுக்கு ஒரு நாளுக்கு ரூ.5000 வரை விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதற்கு மேல் வாங்கும் பொருட்களுக்கு மாதத் திற்கு ஒருமுறை கூட்டுத்தொகை கணக்கீடு (Consolidate raise) செய்யப்பட வேண்டும்.
எனது தொழில் நிறுவனம் ஈரோட்டில் உள்ளது. அது சில ஜாப் ஒர்க் வேலைகளைக் கோவையிலுள்ள ஒரு நிறுவனத்திற்கு கொடுத்துவிட்டுப் பின் அந்தப் பொருட்கள் திருச்சூரில் உள்ள எங்களுடைய வாடிக்கையாளருக்கு செல்கிறது. இதற்கு நான் எந்தவிதமான வரிகளைச் செலுத்த வேண்டும்?
உங்களுடைய பொருட்கள் விநியோகம் செய்யப்படுவது வேறு மாநிலத்திற்கு உள்ளதா என்பதை முதலில் பார்க்க வேண்டும். உங்களது பொருட்கள் தமிழகத்திற்குள்ளேயே உற்பத்தி செய்யப்பட்டு கடைசியாக சேருமிடம் திருச்சூர் என்பதால் ஐஜிஎஸ்டி கட்ட வேண்டும்.
ஜிஎஸ்டி பற்றி பல ஊடகங்களில் பல செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இது மிகவும் குழப்பத்தையும் ஏற்படுத்துகிறது. சில்லரை வணிகத்திலுள்ள நான் என்ன செய்ய வேண்டும். ?
ஏராளமான வரிச் சட்டங்களும் வரித் திருத்தங்களும் விதிமுறைகளும் வந்து கொண்டுதான் இருக்கின்றன. இவை அனைத்தையும் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய மிகமுக்கியமான ஒன்று அதில் உங்களுக்குண்டான வரிவிகிதங்கள் என்ன? உங்களது வாடிக்கையாளர் யார்? நீங்கள் வரி செலுத்தப் போவது உங்களுடைய மாநிலத்திற்காக அல்லது வேறு மாநிலத்திற்கா? இவைகளை மட்டும் நீங்கள் தெளிவாக தெரிந்தால் போதும். நீங்கள் கடைசி ஆறு மாதம் தாக்கல் செய்திருந்தால் உங்களுக்கு உண்டான கிரெடிட்டை(Credit) நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். கிரெடிட்(Credit) எடுத்துக் கொள்வதை மிக முக்கியமாக நீங்கள் பார்த்துக் கொள்ள வேண்டும்.
இன்று (01-07-2017) முதல் இன்வாய்ஸ் புதிய வரிசை எண்ணில் ஆரம்பிக்க வேண்டுமா? அல்லது இந்த நிதி ஆண்டு ஏப்ரலில் தொடங்கிய வரிசையைத் தொடரலாமா?
30-06-2017 நள்ளிரவோடு மதிப்புக்கூட்டப்பட்ட வரி, உற்பத்தி வரி மற்றும் சேவை வரியை மறந்துவிடலாம். இன்றுமுதல் ஜிஎஸ்டி வரிச்சட்டத்தின் கீழ் வருகிறீர்கள். உங்களது பதிவு, கிளைகள் மற்றும் அமைப்பைப் பொறுத்து புதிய இன்வாய்ஸ் தயார் செய்து விநியோக்த்தை ஆரம்பியுங்கள். புதிய வரிசையில் வரித்தொகை விவரங்கள் குறிப்பிடவேண்டும்.
இன்றிலிருந்தே (01-07-2017) மின்னணு பில் கொண்டு செல்வது அவசியமா?
இன்னும் 3 மாத காலத்திற்கு முந்தைய நடைமுறையிலேயே இருக்கும். 3 மாதத்திற்கு பிறகு மின்னணு பில் கொண்டு செல்வது கட்டாயம். வெளிமாநில கிளைகளுக்கு பொருட்களைக் கொண்டு செல்லும்போது விநியோக ரசீது (Bill of Supply) அவசியம். முறையே ஜாப் வொர்க்கிற்கு பொருட்களைக் கொண்டு செல்லும்போது டெலிவரி சலான் அவசியமாகிறது.
 நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் - 01.07.2017

ஜி.எஸ்.டி வரி பற்றிய கேள்விகள் மற்றும் பதில்கள் - பாகம் : 7

ஜி.எஸ்.டி வரி பற்றிய கேள்விகள் மற்றும் பதில்கள் - பாகம் : 7

அறிவோம் ஜிஎஸ்டி: வரி விகிதத்தை மாற்றும் அதிகாரம் யாருக்கு உண்டு?

சில உணவுப் பொருட்கள் பூஜ்யம் வரி விகிதத்தில் உள்ளன. ஆனால் இதுவே பிராண்ட் தயாரிப்பாக இருந்தால் 5 சதவீதம் என்பது சாமான்ய மக்களை பாதிக்காதா?
பெரிய நிறுவனங்கள் 5% ஜிஎஸ்டி வரி செலுத் தும்பொழுது அதனை பிராண்ட் செய்வதற் கான செலவுகள், உதாரணமாக விளம்பரச் செலவுகள் போன்றவற்றுக்கான உள்ளீட்டு வரியை வரவாக எடுத்துக் கொண்டு மீதியை மட்டும் வரியாக செலுத்தினால் போதும். இதனால் 5% என்பது உள்ளீட்டு வரி மற்றும் வெளியீட்டு வரி இரண்டையும் சரி செய்து கொள்ளலாம். ஆகவே இது சாமானிய மக்களை பாதிக்காது. மேலும் பிராண்ட் அல்லாத பொருட்களை வியாபாரம் செய்பவர்களுக்கு விலை வித்தியாசத்தில் ஒரு சின்ன அனுகூலம் இருப்பதாகவும் அமைந்திருக்கும் என்று நாம் எடுத்துக் கொள்ளலாம்.
ஜிஎஸ்டி வரி விகிதங்களை மாநில அரசோ, மத்திய அரசோ நிர்ணயிக்க அதிகாரம் உள்ளதா?
மாநில அரசும் மத்திய அரசும் 101வது அரசியல் சாசன சட்டத்தின்படி வரி விதிக்கும் உரிமை பெறுகிறார்கள். ஆனால் ஜிஎஸ்டிக் கான வரிவிகிதம் மொத்தமாக மத்திய, மாநில இரண்டு அரசுகளும் சேர்ந்து 40%க்கு மேல் வரிவிதிப்பதற்கு சட்டம் அனுமதிக்கவில்லை. எந்தப் பொருளுக்கு எந்த வரி என்பதை நிர்ணயம் செய்யும் அதிகாரம் ஜிஎஸ்டி கவுன்சிலை சேர்ந்தது. இதில் மூன்றில் இரண்டு பங்கு மாநில நிதி அமைச்சர்களும், மூன்றில் ஒரு பங்கு மத்திய நிதி அமைச்சர் மற்றும் இணை அமைச்சரும் இடம் பெற்று இருப்பார்கள். 50 சதவீதம் உறுப்பினர்கள் பங்குபெறும் நிலையில் 75 சதவீத உறுப்பினர்களின் ஆதரவுடன் இந்த ஜிஎஸ்டி வரிவிதிப்பு சட்ட வடிவம் பெறும். எனவே தன்னிச்சையாக மாநில அரசோ அல்லது மத்திய அரசோ வரி விகிதங்களை முடிவு செய்ய இயலாது.
வரிவிலக்கு பெற்ற மற்றும் வரிவிலக்கு பெறாத பொருட்களை விற்று வருகிறேன். இதற்கான உள்ளீட்டு வரி வரவு (Input Tax Credit) எடுக்க முடியுமா?
விலக்கு அளிக்கப்பட்ட பொருட்களுக்கான, சேவைகளுக்கான உள்ளீட்டு வரியை வரவாக (Credit) எடுத்துக் கொள்ள முடியாது. மாறாக வரிவிலக்கு பெறாத பொருட்களான உள்ளீட்டு வரியை மட்டும் எடுத்து கொள்ளலாம்.
எந்த வகையான வரி செலுத்துவோர் வருடாந்திர கணக்கை தாக்கல் செய்ய வேண்டும்? அதற்கான கால அவகாசம் என்ன?
ஒவ்வொரு பதிவு செய்யப்பட்ட வரிதாரரும் தங்களது வருடாந்திர கணக்கை தாக்கல் செய்வது அவசியமாகிறது. ஜிஎஸ்டிஆர் 9 என்கிற படிவத்தை பூர்த்தி செய்து அடுத்த வருடம் டிசம்பர் 31க்கு முன்பாக வரி தாக்கல் செய்வது அவசியமாகிறது.
கணக்கு மற்றும் தணிக்கை கட்டாயமா? மேலும் இதற்குரிய வரம்புகள் என்ன?
ஒவ்வொரு வணிகரும் தங்களது கணக்கு புத்தகங்கள் மற்றும் ஜிஎஸ்டி சார்ந்த அனைத்து ஆவணங்களையும் பாதுகாப்பாக வைத்திருப்பது அவசியம். நிதி ஆண்டிற்கான வருடாந்திர தாக்கல் செய்யும் குறிப்பிட்ட நாளிலிருந்து மேலும் 72 மாதங்கள் முடியும் வரை பத்திரமாக பாதுகாத்து வைத்திருக்க வேண்டும். தணிக்கை என்பது ஆண்டு வர்த்தகம் இரண்டு கோடிக்கு மேல் இருந்தால் தணிக்கையாளர் (Auditor) மூலமாகவும் செலவு கணக்காளர் (Cost Accountant ) மூலமாகவும் கணக்கை தாக்கல் செய்வது அவசியமாகிறது.
ஜிஎஸ்டி வரியில் முன்தொகை (Advance) பெறும்போது வரி செலுத்த வேண்டும் என்று சொல்கிறார்களே?
ஆம். முந்தைய முறையில் உற்பத்தி வரி மற்றும் மதிப்பு கூட்டு வரி, முன்தொகை பெறும் போது ஏதும் செலுத்த வேண்டியதில்லை. மேலும் முந்தைய சேவை வரியில் முன்தொகை (Advance) பெறும்பொழுது அது வரி நீங்கலாக கருதப்பட்டு அதற்குரிய வரித் தொகையை முன்தொகை(Advance) பெற்ற நாளிலிருந்து முன்தொகை பெற்ற நபர் கட்ட வேண்டும். ஆனால் ஜிஎஸ்டி முறையில் விநியோகம் செய்த நாளிலிருந்தே வரிவிதிப்பு நிகழ்வாக கருதப்பட்டு அதற்கான வரியை பிடித்து செலுத்துவது அவசியமாகிறது.
ஐஜிஎஸ்டி செலுத்தும்போது கவனிக்க வேண்டியவை என்ன?
ஐஜிஎஸ்டி செலுத்தும்போது விநியோக இடம் மற்றும் விநியோக நேரத்தை கண்டறிவது அவசியம். உதாரணமாக மும்பையை சேர்ந்த யாத்ரீகர் மதுரை கோவிலுக்கு வரும்போது அங்குள்ள நகைக் கடையில் ரூ.2 லட்சத்திற்கு தனது நிரந்தர கணக்கு எண் (PAN) மற்றும் முகவரி கொடுத்து நகை வாங்குகிறார் என்றால் இது ஒரு வெளிமாநில விநியோகம். எனவே ஐஜிஎஸ்டி செலுத்த வேண்டும். இவ்வாறே அவர் துணிக்கடையில் நிரந்தர கணக்கு எண் (PAN) மற்றும் முகவரி ஏதுமில்லாமல் துணி வாங்கினால், இது உள்மாநில விநியோகமாகும். இதற்கு சிஜிஎஸ்டி மற்றும் எஸ்ஜிஎஸ்டி செலுத்த வேண்டும்.
பல்வேறு மாநிலங்களில் வியாபாரம் செய்யும் போது அதாவது திருச்சியை சேர்ந்த வணிகர் குஜராத்திற்கும் மஹாராஷ்டிராவிற்கும் விநியோகம் செய்தால் அம்மாநிலங்களிலும் பதிவு பெற வேண்டுமா?
பல்வேறு மாநிலங்களில் விநியோகம் செய்யும் போது அம்மாநிலங்களிள் பதிவு செய்ய வேண்டியதில்லை. மேலும் அங்கு அவருக்கு ஏதேனும் கிளைகள் இருந்தால், கிளைகளுக்கு விநியோகம் செய்யும்போது பதிவு செய்வது அவசியமாகிறது.
கூலி உற்பத்தியாளர்களுக்கு (Job Work) பொருட்கள் கூடுதல் வேலைப்பாடுகளுக்காக அனுப்பினால் எத்தனை நாட்களுக்குள் திரும்ப பெற வேண்டும்?
கூலி உற்பத்தியாளர்களுக்கு பொருட்களை அனுப்பும்போது 1 வருட காலத்திற்குள் (மூலதன பொருட்களாக இருந்தால் 3 வருடத்திற்குள்) திரும்ப பெற வேண்டும். இல்லாவிட்டால் அதுவும் விநியோகமாக கருதப்பட்டு ஜிஎஸ்டி செலுத்த வேண்டும்.
 நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் - 30.06.2017