disalbe Right click

Sunday, December 31, 2017

ரிட் பெட்டிஷன் தீர்ப்பு நகல்

இந்திய அரசியல் சாசனம் பிரிவு 226ன் கீழ் சென்னை உயர்நீதிமன்றத்தில் திண்டிவனம் ஜின்ஞ்சி  ரோடு ஆட்டோ தொழிலாளர் நலசங்கத்தின் சார்பாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியர்,  திண்டிவனம் தாலுகா ரெவின்யூ டிவிசனல் ஆபிஸர் மற்றும் திண்டிவனம் முனிசிபாலிட்டி கமிஷ்னர் ஆகியோர்கள் மீது தொடரப்பட்ட ரிட்  வழக்கின் தீர்ப்பு நகல் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
அதில் 30 நாட்களுக்குள் பெட்டிஷனர் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்றும், ஒரு வேளை அதற்குள் தீர்க்க முடியாவிட்டால், மேலும் நாட்கள் தேவைப்பட்டால் அதனை பெட்டிஷனருக்கு எழுத்து மூலமாக தெரிவிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. 
நன்றி : முகநூல் நண்பர் திரு N R Mohan Raam அவர்கள்




************************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 31.12.2017 

Saturday, December 30, 2017

நெட் தேர்வை எதிர்கொள்ள

நெட் தேர்வை எதிர்கொள்ள என்ன செய்ய வேண்டும்?
💥 நெட் தேர்வில் முதுநிலைப் படிப்புகளில் உள்ள ஒவ்வொரு பாடப்பிரிவுகளில் இருந்தும் வினாக்கள் தொடர்ந்து கேட்கப்படுகின்றன. இதனால், நீங்கள் உங்களது முதுநிலைப் படிப்பிற்கான புத்தகங்களை தேசிய தகுதி தேர்வுக்கான பாடத்திட்டத்தின் அடிப்படையில் சேகரித்து வைத்து கொள்ள வேண்டும். அத்துடன் நீங்கள் முதுநிலை படிப்பைப் படிக்கும்போது வகுப்பறையில் குறிப்புகளை எழுதி வைத்த நோட்டுகளையும் சேர்த்து வைத்துக்கொள்ள வேண்டும்.
💥உங்களுடைய நெட் தேர்வுக்கான முழுமையான பாடத்திட்டத்தை கொண்டு இருக்கும் புத்தகங்களை மட்டுமே வாங்க வேண்டும். இதற்கு சுமார் ஆயிரம் ரூபாய் செலவு செய்தால் போதும்.  தேர்வுக்கு  வேண்டிய நல்ல புத்தகங்களை  நீங்கள் வாங்கிவிட முடியும்.
💥கடந்த பத்து ஆண்டுகளில் கேட்கப்பட்ட கேள்வித்தாள்கள் தற்போது யு.ஜி.சி இணையதளத்தில் தொகுத்து வைக்கப்பட்டுள்ளது. இதில், கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக இத்தேர்வுகளில் கேட்கப்பட்ட வினாக்களுக்கான விடைகளும் வழங்கப்படுகின்றன. இவற்றை டவுன்லோடு செய்து, பிரிண்ட் அவுட் எடுத்து நீங்கள் பயிற்சி பெறலாம்.
💥தேர்வு பாடத்திட்டத்திற்கு தகுந்த முறையில் சேகரித்த பாடப்புத்தகங்களையும், குறிப்புகளையும் ஆழமான முறையில் தெரிந்து கொள்ள வேண்டும். உதாரணமாக யாரால் கண்டறியப்பட்டது, எதனால் கண்டறியப்பட்டது,  எந்த ஆண்டு கண்டறியப்பட்டது போன்ற விவரங்கள் அனைத்தும் ஆழமாக படித்து, குறிப்பேட்டில் குறித்து வைத்து கொள்ள வேண்டும்.
💥ஒரே பாடத்தில் தேர்வுக்கு தயாராகுபவர்கள் குழுவாக சேர்ந்து பயிற்சி மேற்கொண்டால் எளிதில் விஷயங்கள் மனதில் பதியும். இதன் மூலம் பல விஷயங்களை பகிர்ந்து கொள்ள முடியும் கால நேரம் மிச்சமாகும். மேலும், ஏற்கனவே தேர்ச்சி பெற்றவர்களின் ஆலோசனைகளையும் அவர்களிடம் உள்ள குறிப்புகளையும் பெற்று கொள்வது நல்லது.💥 முன்னணி பாடப் புத்தகங்களை வெளியிடும் நிறுவனங்கள் நெட் தேர்வு மாதிரி வினா விடை புத்தகங்களை வெளியிடுகின்றன. இவற்றில் தரமானைதைத் தேர்ந்தெடுத்து வாங்க, அதில் வெளியிட்டுள்ள கேள்விகளுக்கு சரியான பதில்களை எழுதி பார்த்து பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
💥ஒவ்வொரு வாரமும் குறிப்பிட்ட நேரம் ஒதுக்கி கடந்த ஆண்டுகளில் நடத்தப்பட்ட கேள்வித்தாள்களை கொண்டு மாதிரி தேர்வு எழுதி, எழுதி பார்க்க வேண்டும். பழைய கேள்வித்தாள்களில் இருந்து 10 முதல் 15 சதவீத வினாக்கள் புதிய தேர்வுகளில் இடம் பிடிக்கின்றன என்கிறது ஓர்  ஆய்வு. தொடர் பயிற்சி மேற்கொள்ளும் போது உங்களுக்குள் தன்னம்பிக்கை வளரும்.
💥 பல்கலைக்கழக மானியக் குழு நடத்தும் நெட் தேர்வு June  2018ல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றால் தான் நாடு முழுவதிலுமுள்ள கல்லூரிகளில் அல்லது பல்கலைக்கழகங்களில் ஆசிரியர் பணியில் சேர தகுதி பெற முடியும். அத்துடன், ஆராய்ச்சி படிப்புகளில் சேர்ந்து படிக்க உதவித் தொகையும் பெற முடியும்
💥  இந்த தேர்வில் எளிதாக வெற்றி பெற தேர்வுக்கு தயாராகுதல், தேர்வுக்கான பயிற்சி செய்தல் மற்றும் தேர்வை முறையாக எழுதுதல் ஆகிய மூன்று விஷயங்களையும் முனைப்பாக கடைப்பிடிக்க வேண்டும்.
💥 முதல் தாள் தேர்வு அனைவருக்கும் பொதுவானது, இந்த தேர்வில் ஆராய்ச்சிகள் மற்றும் கற்பித்தல் போன்ற பிரிவுகளில் இருந்து கேள்விகளை கேட்கிறார்கள். வகுப்பறையில் ஆசிரியர் எப்படி மாணவர்களை கையாள வேண்டும் என்ற வகையிலும் நிறைய கேள்விகள் இருக்கும். அத்துடன், இந்தியாவில் உயர்கல்வி குறித்த விஷயங்கள், பல்கலைக்கழக மானிய குழு குறித்த விஷயங்கள் கேட்கப்படுகின்றன. மேலும், முதல்தாளில் சுற்றுச்சூழல் கல்வி, தகவல் தொழில்நுட்பம் சார்ந்த கேள்விகளும் இடம் பெறுகிறது. இந்த பிரிவுகள் குறித்து அடிப்படை அறிவினை வளர்த்துக்கொள்வது அவசியம்.
💥முதல்தாளில் தேர்ச்சி பெற்றவர்களைத்தான் இரண்டாவது மற்றும் மூன்றாவது தாளில் எவ்வளவு மதிப்பெண் பெற்று இருக்கிறார்கள் என்று பார்த்து முடிவை வெளியிடுகிறார்கள். முதல் தாளில் கணித தர்க்க அறிவு குறித்து சோதிக்கிறார்கள். இதை மிகவும் எளிதாக கேட்பார்கள். பலருக்கும் கணக்கு கடினமாக இருக்கும் என்று விட்டுவிடுகிறார்கள். இனி அது போல் கணக்கு கடினமாக இருக்கிறது என்று ஒதுக்கி தள்ளாமல் விடையளிக்க முயற்சி செய்யுங்கள்.
💥இரண்டாவது மற்றும் மூன்றாவது தாளில் ஒவ்வொரு பாடத்திற்கும் தனித்தனியே கேள்விகளை வடிவமைத்து இருப்பார்கள். மூன்றாவது தாளில் 5 முதல் 10 கேள்விகள் தர்க்க வாதம் சார்ந்தவையாக இருக்கும். இந்த கேள்விகளுக்கு விடையளிக்க ஆங்கில அறிவு அவசியம். இதை எளிதில் கையாள பழைய கேள்வித்தாளில் இந்த கேள்வி எப்படி கேட்டு இருக்கிறார்கள், விடைகள் எவை என்பதை தெரிந்து வைத்து கொள்ள வேண்டும். இதற்கான முறையான பயிற்சியையும் எடுத்துக்கொண்டால் இப்பகுதியில் உள்ள கேள்விக்கு சரியான விடையளிப்பது எளிது.
💥இத்தேர்வில் தவறான விடைகளுக்கு நெகட்டிவ் மதிப்பெண்கள் கிடையாது. எனவே, முதலில் தெரிந்த கேள்விகளுக்கும், பின்னர் தெரியாத கேள்விகளுக்கும் யோசித்து தவறாமல் விடையளிக்க வேண்டும். இத்தேர்வில் தேர்ச்சிக்குரிய மதிப்பெண் மட்டும் பெறுவது முக்கியம் அல்ல, சமீபகாலமாக மதிப்பெண் அதிகம் பெற்றவர்களின் தரப்பட்டியலில் இருந்து தான் தேர்ச்சி விவரம் வெளியிடப்படுகிறது.
💥இத்தேர்வு எழுதுபவர்களுக்கு நேர மேலாண்மை முக்கியம். தேர்வு நடைபெறும் இடத்துக்கு உரிய நேரத்தில் செல்ல வேண்டும். தேர்வில் கொடுக்கப்பட்டுள்ள நேரத்திற்குள் அனைத்து கேள்விகளுக்கும் விடையளிக்க வேண்டும். தேர்வுக்கு முன்னதாக நல்ல பயிற்சி தேவை. தன்னம்பிக்கையுடன் தேர்வினை எதிர்கொள்ளுங்கள்.
*********************************************அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 31.12.2017