disalbe Right click

Wednesday, March 7, 2018

47 ஆண்டுகளுக்கு முன் பலாத்காரம் செய்ததாக புகார்.

47 ஆண்டுகளுக்கு முன் பலாத்காரம் செய்ததாக நடிகர்  மீது புகார்!
ஷிம்லா: பிரபல பாலிவுட் நடிகர், ஜிதேந்திரா, 47 ஆண்டுகளுக்கு முன், பாலியல் பலாத்காரம் செய்ததாக, அவர் உறவுப் பெண் அளித்த புகாரின்படி, போலீசார், எப்..ஆர்., எனப்படும், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து உள்ளனர்.
Image may contain: 1 person, hat
பாலிவுட்டைச் சேர்ந்த பிரபல நடிகர், ஜிதேந்திரா. இவருக்கு இப்போது வயது 75 ஆகிறது. இவர் மீது, அவரது நெருங்கிய உறவுப் பெண் ஒருவர் (வயது 65)  ஹிமாச்சல பிரதேச காவல்துறைக்கு இமெயில் மூலமாக அளித்த புகாரில்,  நடிகர் ஜிதேந்திரா, 47 ஆண்டுகளுக்கு முன்தனக்கு 18 வயதாக இருக்கும் போது    ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள, ஷிம்லா நகரில் நடக்கும் சினிமா படப்பிடிப்பை பார்ப்பதற்கு வருமாறு, என்னை அழைத்ததாகவும், ஷிம்லா நகர ஓட்டல் அறையில் தங்கியிருந்த போது, இரவில் தனது அறைக்கு வந்த ஜிதேந்திரா,தன்னை பலாத்காரம் செய்ததாகவும். அவர் மீது, தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
உடனே எப்..ஆர்
இந்த புகாரின்படி, ஜிதேந்திராவுக்கு எதிராக, ஷிம்லா காவல்துறையினர், எப்..ஆர்., பதிவு செய்து உள்ளனர்.
நன்றி : தினமலர் நாளிதழ் - 08.03.2018
********************************* அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 08.03.2018 

ஆசிரியரை தாக்கிய எஸ்.ஐ.,க்கு அபராதம்

ஆசிரியரை தாக்கிய சார்பு ஆய்வாளருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்
சென்னை - விழுப்புரம் மாவட்டம், பொன் அண்ணாமலை நகரைச் சேர்ந்தவர், மோகன்குமார்  என்பவர், கடந்த 2008ம் ஆண்டில் ஒருநாள், விழுப்புரம் நகரில் அவரது தந்தைக்குச் சொந்தமான கடையில் தனது மகளுடன் இருந்திருக்கிறார். அவர்களது கடையில் இளவரசன் என்பவர் வேலையாளாக இருந்திருக்கிறார். 
அப்போது, சீருடையில் ஒரு போலீஸ்காரரும், சீருடை இல்லாமல் ஒரு போலீஸ்காரரும் அவரது கடைக்கு வந்துள்ளனர். கடையில் பணியாற்றும் இளவரசனைப் பற்றி மோகன்குமாரிடம் விசாரித்துள்ளனர்.  உரிமம் இல்லாமல், வாகனத்தை ஓட்டியதற்காக இளவரசன், 650 ரூபாய் அபராதம் கட்ட வேண்டும் என, சீருடையில் இல்லாத போலீஸ்காரர் கூறியுள்ளார். அவர் இன்று வேலைக்கு வரவில்லை, அவர் வந்ததும், காவல் நிலையம் அனுப்பி வைக்கிறேன்' என்று மோகன்குமார் அவர்களிடம் கூறியுள்ளார். உடனே, சீருடையில் இல்லாத போலீஸ்காரர்  மோகன்குமாரை தகாத வார்த்தையால் பேசி, அங்கிருந்து காவல் நிலையம் வரை, அடித்துக் கொண்டே அழைத்துச் சென்றுள்ளார்.
காவல்துறையினரின்  செயலால், நானும், என் குடும்பமும் மிகுந்த மன உளைச்சலில் உள்ளோம். எனவே, சம்பந்தப்பட்ட, சார்பு ஆய்வாளர் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இதுபற்றி மாநில மனித உரிமைகள் ஆணையத்தில், மோகன்குமார் புகார்  செய்தார். 
இந்த மனுவை விசாரித்து, நீதிபதி, ஜெயச்சந்திரன் அவர்கள்,  சார்பு ஆய்வாளர் மீது, குற்றம் நிரூப்பிக்கப்பட்டுள்ளது. 'எனவே, பாதிக்கப்பட்ட மோகன்குமாருக்கு, இன்னும் இரண்டு மாதத்தில், தமிழக அரசு, 50 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்றும், அந்த தொகையை, எஸ்.., குமாரிடம் இருந்து பெற்றுக் கொள்ள வேண்டும்' என்றும் உத்தரவிட்டார்.
*************************************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 08.03.2018 

Monday, March 5, 2018

800 சதுர அடி மனைக்கும் கட்டட அனுமதி

நீண்ட கால சிக்கலுக்கு தீர்வு கண்ட தமிழக அரசு!
வீட்டு மனைகளின் அளவு, 800 சதுர அடியாக இருந்தாலும், கட்டிடம் கட்ட அனுமதி தரும் வகையில், தமிழக அரசு, கட்டுப்பாடுகளை தளர்த்தி உள்ளதால், ரியல் எஸ்டேட் துறை இனி நல்ல வளர்ச்சியைக் காணும் என்பதில் சந்தேகமில்லை.
மனை வாங்கவே முடியவில்லை!
நடுத்தர மக்களின் கனவு ஒரு மனையை வாங்கி, நமக்குத் தகுந்தாற்போல் சின்னதாக ஒரு வீடு கட்ட வேண்டும் என்பதுதான். ஆனால், சென்னை பெருநகர் பகுதிகளில் உருவாக்கப்பட்ட மனைகளின் சதுர அடி குறைந்தபட்சம் 1500 சதுர அடி இருக்க வேண்டும் என்று கட்டுப்பாடுகள் இருந்ததால், பெரும்பாலானோர் தங்களது வீடு கட்டும் கனவை நனவாக்க முடியாமல் கனவாகவே வைத்திருந்தனர். ஏனென்றால் ஒரு மனை வாங்கவே பல லட்சங்கள் தேவைப்படும். இதில் வீடு எப்படி கட்டுவது?
விதியைத் தளர்த்திய தமிழக அரசு!
நடுத்தர மக்களின் கனவை நனவாக்கும் விதமாக தமிழக அரசு விதிகளைத் தளர்த்தியுள்ளது.  புதிய லே - அவுட்களில், மனைகளின் குறைந்த பட்ச அளவு, 800 சதுரடியாக நிர்ணயிக்கப்பட்டு, கட்டுமான அனுமதியை, தற்போது சி.எம்.டி.., வழங்குகிறது. சென்னையைத் தவிர, பிற பகுதிகளில், கட்டுமான அனுமதியை, நகர், ஊரமைப்பு துறையான, டி.டி.சி.பி., தருகிறது. மனையின் முன்பகுதியின் அளவு  30 அடியாகவும், மனையின் நீளம், 50 அடியாகவும் இருக்க வேண்டும் என இருந்த விதிகள் இருந்தன. இனி மனையின் முன்பகுதியின் அளவு  20  அடியாகவும், மனையின் நீளம், 40 அடியாகவும் இருந்தால் போதுமானது என்று நகர் ஊரமைப்பு   துறையானடி.டி.சி.பி, தெரிவித்துள்ளது.
டி.டி.சி.பி., புதிய சுற்றறிக்கை
மனைகளின் குறைந்தபட்ச அளவை மாற்றி அமைப்பது குறித்து, சமீபத்தில் நடந்த உயர் நிலை குழு கூட்டத்தில், முடிவு செய்யப்பட்டு, மனைகளின் குறைந்தபட்ச அளவு, 1,500 சதுர அடியில் இருந்து, 800 சதுர அடியாக குறைக்கப்பட்டு. முகப்பு அகலம், 20 அடி; நீளம், 40 அடியாக இருக்கலாம் என, தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், திறந்த வெளி ஒதுக்கீடாக, சாலைக்கு ஒதுக்கிய இடத்தை தவிர்த்து, மற்ற இடங்களில், 10 சதவீதத்தை ஒதுக்கும் வகையிலும், சில திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளதாக டி.டி.சி.பி., புதிய சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
************************************************ அன்புடன் செல்வம் பழனிச்சாமி, 05.03.2018 

Friday, March 2, 2018

ரயில் டிக்கெட் முன்பதிவு

பெண் பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி!
தனியாக பயணம் செய்ய ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் பெண் பயணிகளுக்கு அதிக முன்னுரிமை அளிக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
வசதியாக, பாதுகாப்பாக மற்றும் பயணச் செலவு குறைவாக இருப்பதால் இப்போது பலரும் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். ஆண்களது துணை இல்லாமல் தனியாகவோ அல்லது குழந்தைகளுடனோ அல்லது குழுவாகவோ பயணம் செல்வதற்கு பெண்களுக்கு மிகவும் ஏற்ற ரயில் பயணத்திற்கு டிக்கட் கிடைப்பது அவர்களுக்கு மிகவும் சிரமமாக இருந்து வந்தது. 
படுக்கை வசதி கொண்ட ஒவ்வொரு ரயில் பெட்டியிலும் 6 இடங்கள்
தற்போது அந்த சிரமத்தை போக்குவதற்காக இரயில்வே நிர்வாகம் புதிய முடிவை அறிவித்துள்ளது. ரயில் பெட்டிகளில் ஒதுக்கப்படாத படுக்கைகளை, பெண் பயணிக்கோ அல்லது பெண் பயணிகளின் குழுக்களுக்கோ முதலில் ஒதுக்குவது என்று முடிவு செய்திருக்கிறது. இதனால், படுக்கை வசதி கொண்ட ஒவ்வொரு ரயில் பெட்டியிலும் 6 படுக்கை வசதி கொண்ட இருக்கைகளை பெண் பயணிகளுக்காக ஒதுக்குவதற்கு  ரயில்வே வாரியம் தெற்கு ரயில்வேக்கு உத்தரவிட்டுள்ளது.
இதனால், "இந்த ஆறு படுக்கை வசதி கொண்ட இருக்கைகளும், தனியாக பயணிக்கும் பெண் பயணிகளுக்கோ அல்லது ஒரே PNR எண்ணில் பதிவு செய்யப்படும் பெண் பயணிகளுக்கோ ஒதுக்கப்படும். ரயில் பயணத்தின் முதல் சார்ட் தயாரிக்கப்படும் வரை 6 படுக்கை வசதிகளும் முன்பதிவு செய்யப்படாத நிலையில், அது வெயிட்-லிஸ்ட்டில் இருக்கும் பெண் பயணி அல்லது குழுவாக பயணிக்கும் பெண் பயணிகளுக்கு ஒதுக்கப்படும். அதற்கடுத்ததாக 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு இந்த சலுகை வழங்கப்படும்" என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான சுற்றறிக்கையினை ரயில்வே வாரியம் கடந்த 15.02.2018ம் தேதி மத்திய ரயில்வே தகவல் மையம் (சிஆர்ஐஎஸ்) மற்றும் ஐஆர்சிடிசிக்கு அனுப்பியுள்ளது. ஐஆர்சிடிசி இணையதளத்தில் இதற்குத் தேவையான வகையில் மாற்றங்களை செய்யப்படுவதற்கு ஏதுவாக இந்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
**************************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி, 02.03.2018 

Thursday, March 1, 2018

அதிகாரிகள் செய்த நிலமோசடி!

வழக்கின் சுருக்கம்
கோவையில் உள்ள 14 ஏர்ஸ் பரப்பளவு கொண்ட ஒரு நிலத்தை வி.வி.ஆனந்தபாரதி என்பவரிடமிருந்து 06.11.1992 அன்று எம்.விஜயமோகன் என்பவர் கிரையம் பெறுகிறார். அந்த நிலத்தை எம்.விஜயமோகனிடமிருந்து 31.01.2005 அன்று உதயகுமார் என்பவர் கிரையம் பெறுகிறார். உதயகுமார் பெயரில் பட்டாவும் வாங்கப்படுகிறது. இந்த இடத்தின் சர்வே எண்:27/4 ஆகும். எதிர்பாராவிதமாக உதயகுமார் இறந்துவிடுகிறார். இவரது நிலமானது கோவை வடக்கு வட்டாட்சியர் அலுவலக அதிகாரிகளால் மோசடியாக புல எண்:27/4-A, 27/4-B என்று உட்பிரிவு செய்யப்படுகிறது.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த உதயகுமாரின் மனைவி திருமதி கே.மலர் என்பவர் கோவை வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கடந்த 19.02.2014 அன்று தகவல் அறியும் உரிமைச் சட்டம் பிரிவு 6(1)ன்கீழ் மூலம் மேற்கண்ட மோசடி குறித்து சில தகவல்கள் கேட்கிறார். தகவல் அறியும் உரிமைச் சட்டம் பிரிவு 7(1)ன்கீழ் 30 நாட்களுக்குள் தகவல் வழங்காத காரணத்தால், தகவல் அறியும் உரிமைச் சட்டம் பிரிவு 19(1)ன்கீழ் முதல் மேல்முறையீட்டு மனுவை 21.03.2014 அன்று (கோவை வட்டாட்சியர் அவர்களுக்கு அனுப்புவதற்கு பதிலாக, தவறுதலாக) வருவாய் கோட்டாட்சியர் அவர்களுக்கு அனுப்பிவிடுகிறார்.
தகவல் அறியும் உரிமைச் சட்டம் பிரிவு 6(3)ன்கீழ், வருவாய் கோட்டாட்சியர் அவர்கள் அந்த முதல் மேல்முறையீட்டு மனுவை 5 நாட்களுக்குள் கோவை வடக்கு வட்டாட்சியர் அவர்களுக்கு அனுப்பி வைத்திருக்க வேண்டும். ஆனால், அவர் 15 நாட்கள் கழித்து, காலதாமதமாக, அந்த மனுவை கோவை வடக்கு வட்டாட்சியர் அவர்களுக்கு அனுப்பி வைக்கிறார். அந்த மனுவை 07.04.2014 அன்று பெற்றுக் கொண்ட கோவை வடக்கு வட்டாட்சியர் அவர்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டம் பிரிவு 19(6)ன்கீழ் மனுதாரருக்கு தகவல் வழங்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மனுதாரர் கே.மலர் அவர்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டம் பிரிவு 19(3)ன்கீழ் மாநில தகவல் ஆணையத்தில் இரண்டாம் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்கிறார்.
மாநில தகவல் ஆணையமானது அவரது மனுவை ஏற்றுக் கொண்டு 12.02.2015 அன்று விசாரனை செய்து சில ஆனைகளை பிறப்பிக்கிறது. அந்த வழக்கின் தொடர்ச்சியாக 23.04.2015 அன்று மாநில தகவல் ஆணையம் மீண்டும் விசாரனையை நடத்தி கீழ்க்கண்ட ஆணையை பிறப்பிக்கிறது.
குறிப்பு: கீழ்க்கண்ட ஆணையை மட்டும் பார்த்தால் எதுவும் புரியாது என்பதற்காக வழக்கைப் பற்றிய விபரம் என்னால் மேலே இணைக்கப்பட்டுள்ளது.
*********************************************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி, 01.03.2018




நன்றி : ஆவண காப்பகர் திரு   A Govindaraj Tirupur