disalbe Right click

Tuesday, May 26, 2020

திருமணத் தடைக்கு 'செவ்வாய் தோஷம்' காரணமா?

திருமணத் தடைக்கு 'செவ்வாய் தோஷம்' காரணமா? 
இந்தப்பதிவை உங்களுக்கு வழங்கக் காரணம்:
எனது மகனுக்கு திருமணம் முடிப்பதற்காக மணமகளை தேடிக் கொண்டிருக்கிறேன். எனது மகனின் ஜாதகத்தில் லக்கனத்தில் இருந்து ஏழாம் இடத்தில் செவ்வாய் இருக்கிறது. அதனுடன் குரு எனப்படுகின்ற வியாழன் இருப்பதால், இது செவ்வாய் தோஷ ஜாதகம் கிடையாது என்று சில ஜோஸ்யர்களும், யார் பார்த்தால் என்ன? எங்கு இருந்தால் என்ன? தோஷம் தோஷம்தான் என்று சில ஜோஸ்யர்களும் சொல்லுகிறார்கள். இதனால் எனக்குள் குழப்பம் வந்தது. நல்ல, நல்ல வரன்களையெல்லாம் ஒதுக்க வேண்டிய நிலை வந்தது எனக்கு. மணமகளை மற்றும் மணமகனை தேடிக் கொண்டிருக்கும் மற்ற பெற்றோர்களுக்கு இந்த பிரச்சனை இருக்கும். அதற்கு விடை காண இணையத்தில் தேடியபோது கிடைத்த சங்கதியை ஒரு பதிவாக கீழே கொடுத்துள்ளேன். படித்து தெளிவு பெறுங்கள். பதிவின் இடையில் உள்ள படங்கள் படிப்பவர்களின் தெளிவிற்காக நான் இணைத்தது.
திருமணத் தடைக்கு 'செவ்வாய் தோஷம்' காரணமா? 
திருமணப் பொருத்தம் பார்க்கும்போது முக்கியமாக கவனிக்கப்படும் ஒரு விஷயம் பையனுக்கோ அல்லது பெண்ணுக்கோ செவ்வாய் தோஷம் இருக்கிறதா என்பதுதான். பலரையும் இந்த செவ்வாய் தோஷம் பாடாய்ப் படுத்தி பரிதவிக்க வைக்கிறது. செவ்வாய் தோஷம் இருக்கிறது என்ற ஒரே காரணத்துக்காக பலருடைய வாழ்க்கையில் திருமணம் தடைப்பட்டுக் கொண்டே வருவதை நாம் அனுபவத்தில் காண்கிறோம்.
ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் ஏற்படுவதற்கான காரணங்கள் மற்றும் இந்த தோஷத்துக்கு உரிய பரிகாரங்கள் பற்றி பார்ப்பதற்கு முன்பு, ஒரு ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருக்கிறதா இல்லையா என்பதை எப்படி நிர்ணயிப்பது என்பது பற்றி விவரிக்கிறார் 'ஜோதிட மாமணி' கிருஷ்ணதுளசி.
லக்னம், சந்திரன், சுக்கிரன் ஆகியவைகளுக்கு 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் எங்கு இருந்தாலும் அந்த ஜாதகம் செவ்வாய் தோஷ ஜாதகம் ஆகும்



பொதுவாக இந்த இடங்களில் பாவ கிரகங்கள் இருப்பதும் தோஷம்தான். அதே நேரத்தில் லக்னம், சந்திரன், சுக்கிரன் ஆகியவைகளுக்கு   2, 4, 7, 8, 12 ஆகிய இடங்கள் செவ்வாயின் ஆட்சி வீடுகளான மேஷம், விருச்சிகம், உச்ச வீடான மகரம் என்று இருந்து அந்த இடத்தில் செவ்வாய் இருந்தால், தோஷம் இல்லை

மேலும் அந்த இடங்களில் செவ்வாய் இருந்து, சூரியன், குரு, சனி ஆகியோர் சேர்ந்து இருந்தாலும் தோஷம் இல்லை. அல்லது அந்த இடங்களில் இருக்கும் செவ்வாய்க்கு மேற்கண்ட சூரியன், குரு, சனி ஆகியவர்களின் பார்வை பட்டிருந்தாலும் தோஷம் இல்லை. ஒருவருக்கு தோஷம் இருந்து மற்றவர்க்கு தோஷம் இல்லை என்றால், அவர்களுக்கு திருமணம் செய்யக்கூடாது.
இது தவிர, சில ஜோதிஷ சாஸ்திரங்களில் இந்த தோஷத்துக்கு சில விலக்குகளும் அளிக்கப்பட்டு இருக்கின்றன. இப்படியான அமைப்புகள்கூட இல்லாத நிலையில் அந்த ஜாதகத்தை ஏற்றுக்கொள்ளக்கூடாது.
லக்னத்தைப் பொறுத்தவரை கடக லக்னம், சிம்ம லக்னம் ஆகிய லக்னத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் எங்கே இருந்தாலும் இந்த தோஷம் இல்லை என்று சொல்லலாம்.


 

செவ்வாய் இருக்கக்கூடிய 2- இடமானது மிதுனம் அல்லது கன்னியாக இருந்தால் தோஷம் இல்லை.
  




                                                   
செவ்வாய் 4-ல் இருந்து அந்த இடம் மேஷம், விருச்சிகம் ஆகிய ராசிகளாக இருந்தால் தோஷம் இல்லை.
அதேபோல் களத்திர ஸ்தானத்தில் செவ்வாய் இருந்து, அந்த ஸ்தானம் கடகமாகவோ அல்லது மகரமாகவோ இருந்தால் தோஷம் இல்லை.
செவ்வாய் இருக்கும் 8-வது இடம் தனுசு அல்லது மீனமாக இருந்தாலும், 12-வது இடம் ரிஷபம், துலாமாக இருந்தாலும் இந்த தோஷம் இல்லை.
ஒருவரின் ஜாதகத்தில் செவ்வாய் சிம்மம் அல்லது கும்பத்தில் இருந்தாலும் செவ்வாய் தோஷம் இல்லை. செவ்வாய் குருவுடன் சேர்ந்திருந்தாலும் தோஷம் இல்லை. செவ்வாய் குருவுடன் சேர்ந்திருப்பது குருமங்கள யோகம் ஆகும். மிகவும் விசேஷமான பலன்களைத் தரக்கூடியது.
சந்திரனுடன் சேர்ந்து மேலே சொன்ன எந்த இடத்தில் செவ்வாய் இருந்தாலும் செவ்வாய் தோஷம் இல்லை.
மேலே சொன்ன இடங்களில் செவ்வாய் இருந்து புதன் அல்லது சூரியனுடன் சேர்ந்திருந்தாலோ அல்லது அவர்களால் பார்க்கப்பட்டாலோ இந்த தோஷம் இல்லை.
செவ்வாய் இருக்கக்கூடிய ராசியானது லக்னம், சந்திரன்,சுக்கிரன் ஆகியவைகளுக்கு 2, 4, 7, 8, 12 ஆகிய ராசியாக இருந்து, அந்த ராசிகளின் அதிபதியான கிரகம் லக்னத்தில் இருந்தாலும், 4, 5, 7, 9, 10 ஆகிய இடங்கள் ஒன்றில் இருந்தாலும் தோஷம் இல்லை. உதாரணமாக செவ்வாய் இருக்கும் ராசி ரிஷபம் என்று வைத்துக்கொண்டால், ரிஷபத்துக்கு அதிபதியான சுக்கிரன் லக்னத்திலோ அல்லது 4, 5, 7, 9, 10 ஆகிய இடங்களில் ஒன்றில் இருந்தாலும் தோஷம் இல்லை.
மேஷம், சிம்மம், விருச்சிகம், மகரம் ஆகிய ராசிகளில் செவ்வாய் இருந்து, அந்த இடம் இந்த தோஷத்தைக் குறிப்பிடும் 8-ம் இடமாகவோ அல்லது 12-வது இடமாகவோ இருந்தாலும் தோஷம் இல்லை.
சனி, ராகு, கேது ஆகியோருடன் சேர்ந்திருந்தாலும் அவர்களால் பார்க்கப்பட்டிருந்தாலும் தோஷம் இல்லை.
செவ்வாய்க்கு நட்பு கிரகங்களான சூரியனின் ஆட்சி வீடான சிம்மம், சந்திரனின் ஆட்சி வீடான கடகம், குருவின் ஆட்சி வீடுகளான தனுசு, மீனம் ஆகிய இடங்களில் செவ்வாய் இருந்து, அந்த இடம் லக்னம், சந்திரன், சுக்கிரன் ஆகியவைகளுக்கு 2, 4, 7,8, 12 ஆகிய இடங்களாக இருந்தாலும் தோஷம் இல்லை.
செவ்வாய் தோஷம் ஒருவருக்கு இருந்து ஒருவருக்கு இல்லை என்றால் திருமணம் செய்யக்கூடாது என்பது சாஸ்திரம். இருவருக்கும் இந்த தோஷம் இருந்தால் திருமணம் செய்து வைக்கலாம் என்றும் சொல்வார்கள். ஆனால், பொதுவாக தோஷம் ஒருவருக்கு இருந்தாலும் சரி அல்லது இருவருக்குமே இருந்தாலும் சரி தக்க ஜோதிடர்களை ஆலோசித்து, முறைப்படி பரிகாரங்கள் செய்வதுதான் சரி.

நன்றி : விகடன் செய்திகள் - 27.01.2017

Sunday, May 3, 2020

நீர்நிலை புறம்போக்கு நிலங்களில் கட்டப்பட்டுள்ள வீடுகளுக்கு மின் இணைப்பு

நீர்நிலை புறம்போக்கு நிலங்களில் கட்டப்பட்டுள்ள வீடுகளுக்கு மின் இணைப்பு
நமது தமிழ்நாட்டில் இருக்கின்ற புறம்போக்கு நிலங்களிலும், நீர்நிலைகளிலும் அரசியல் செல்வாக்கு கொண்ட சிலர் ஆக்கிரமிப்பு செய்து கொண்டு, கட்டிடங்கள் கட்டி அதற்கு மின் இணைப்பும் சட்டவிரோதமாக வாங்கி விடுகிறார்கள். ஒரு இடத்திற்கு மின் இணைப்பு பெறுவதென்றால் அதற்கென்று சில நடைமுறைகளை அரசு வகுத்து வைத்துள்ளது. ஆனால், ஆக்கிரமிப்பு செய்பவர்கள் எதனை அடிப்படையாக வைத்து மின் இணைப்பு பெறுகிறார்கள் என்பது ஆச்சர்யமான விஷயம்! 
இந்தப் பதிவிலும் அது போன்ற புகார் ஒன்றைத்தான் நாம் பார்க்கப் போகிறோம். வாருங்கள்.
புகாரைப்பற்றிய விபரம்
இந்த புகாரானது கடந்த 2011ம் ஆண்டு  காஞ்சிபுரம் மாவட்டம், மறைமலை நகரைச் சேர்ந்த அர.எழுமலை என்பவர் இந்த வழக்கில் மனுதாரர் ஆவார்.  நீர்நிலை புறம்போக்கில் கட்டப்பட்டுள்ள தனது வீட்டிற்கு மின் இணைப்பு தர அருகிலுள்ள மின்சார வாரிய அலுவலகத்தில் விண்ணப்பிக்கிறார்.  அவர்கள் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் விதிகளின்படி மின் இணைப்பு தர மறுக்கிறார்கள்.  அந்த விதிகளை யாரும் தற்போது பின்பற்றுவது இல்லை. அதனால் தனது வீட்டிற்கு மின் இணைப்பு வழங்க வேண்டும் என்று சென்னை - 600 008, எக்மோர், லட்சுமிபதி சாலையில் அமைந்துள்ள  தமிழ்நாடு மின்சார வாரியம் ஆம்புட்ஸ்மேன் அலுவலகத்திற்கு மனுதாரர் மேல்முறையீடு செய்கிறார்.
விசாரணைக்கு இருதரப்பினரும் அழைக்கப்படுகிறார்கள். விசாரணை நடக்கிறது.   . 
சுடுகாடு, ஏரிக்கரையில் வீடு கட்டுபவர்களுக்கு மின் இணைப்பு தரக்கூடாது என்றும், அதுபோன்று ஆக்கிரமிப்பு செய்பவர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் 05.08.2010 தினகரன் நாளிதழில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அவர்கள்   அறிவித்துள்ளதாகவும், இதற்கென்று  தமிழ்நாடு மின்சார வாரியம் ஒரு அரசாணை வெளியிட்டுள்ளதாகவும் (அரசாணை எண்:382, (வருவாய்த்துறை), நாள்:14.05.1993)    செங்கல்பட்டு  மின்துறை செயற்பொறியாளர் அவர்கள் பதில் அளிக்கிறார். 
அந்த அரசாணையின் நகலை அளித்தால் அதனை தான் ஏற்றுக் கொள்வதாக மனுதாரர் தெரிவிக்கிறார். அந்த அரசாணை நகல் மனுதாரருக்கு அளிக்கப்பட்டு புகார் முடித்து வைக்கப்படுகிறது.
தமிழ்நாடு மின்பகிர்மான விதித்தொகுப்பு  விதி 27(12) எ ன்ன சொல்கிறது?
புறம்போக்கு நிலத்தில் மின் இணைப்பு வேண்டுபவர்கள் 
  1. துணை வட்டாட்சியர் நிலைக்கு குறையாத அலுவரிடமிருந்து பெறப்பட்ட மறுப்பின்மைச் சான்றிதழ் (அல்லது)
  2. மேற்கண்ட மறுப்பின்மைச் சான்றிதழை விணப்பத்துடன் இணைத்து தர முடியாத பட்சத்தில் மனுதாரர் கீழ்க்காணும் உறுதிமொழியை தரவேண்டும்.
  • நான் இந்த இடத்தை காலி செய்வதற்கு கட்டுப்பட்டவன் என்றும்,  அரசாங்கத்தால் பின்னாளில் இந்த இடங்கள் கோரப்படுமாயின் அல்லது பின்னாளில் ஏதும் பூசல் எதுவும் நிகழுமாயின் எந்த நேரத்திலும் மின் இணைப்பு துண்டிக்கப்படும்! மற்றும் இதுபொறுத்து மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது என்று நிலத்தின் உரிமையை கோருவதற்கு  எனக்கு உரிமை இல்லை என்பது எனக்குத் தெரியும்.
  • மேலேயுள்ள ஏற்புறுதி நிலத்தின் உடைமைக்குரிய நிரந்தர மற்றும் முழு உரிமையை வழங்காது என்பதும் எனக்குத் தெரியும்.
மேற்கண்ட தீர்ப்பின் நகலைப் பெற கீழ்க்காணும் லின்க்கை கிளிக் செய்யவும்.

********************* அன்புடன் செல்வம் பழனிச்சாமி, 04.05.2020 

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (பி.எஃப்)

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (Employees Provident Fund) என்னும் பி.எஃப். என்பது தொழிலாளர்களின் ஓய்வுக்காலத்துக்கான உருப்படியான ஒரு முதலீடு ஆகும்.  இந்த திட்டத்தின் கீழ்தான் தொழிலாளர்களுக்கு குடும்ப ஓய்வூதியம் (Family Pension) வழங்கப்படுகிறதுபி.எஃப். பிடிக்க அரசு வகுத்துள்ள விதிகள் என்ன?   இந்த பென்ஷன் தொகை எவ்வளவுபென்ஷன் பெறுவதற்கான தகுதி என்னஎன்பதைப் பற்றி காண்போம்.
பி.எஃப்.  பிடிப்பதற்கான விதி என்ன? எவ்வளவு பிடிக்க வேண்டும்?
ஒரு தனியார் நிறுவனத்தில் அல்லது தொழிற்சாலையில் 20 தொழிலாளர்களுக்கு  மேல் வேலை பார்த்தால் கண்டிப்பாக பி.எஃப். பிடித்தம் செய்யவேண்டும். இந்த விதியின் கீழ் வருகின்ற தொழிலாளரின் அடிப்படை மற்றும் டி.சேர்ந்த  சம்பளத்தில் இருந்து  12 சதவிகிதமும், அதே அளவுள்ள தொகையை நிறுவனமும்  தொழிலாளரின் பெயரில் கட்டாயம்  செலுத்த வேண்டும். தொழிலாளி விருப்பப்பட்டால் இன்னொரு 12% தொகையை தனது ஊதியத்திலிருந்து கூடுதலாக  தொழிலாளர் சேமநல நிதி கணக்கில் பிடிக்கச் சொல்லலாம். ஆனால், இதற்கு இணையாக எந்தத் தொகையையும் நிறுவனம் செலுத்தாது.
பென்ஷன் எப்படி கிடைக்கிறது?
நிறுவனம் செலுத்துகின்ற 12 சதவிகித தொகையில் 8.33% பென்ஷன் திட்டத்திற்காகவும், 3.66% வருங்கால வைப்பு நிதித் திட்டத்திற்காகவும் பிரித்து வரவு வைத்து வரப்படும்.  தற்போது இந்தத் தொகைக்கு  9.5% வட்டி தரப்படுகிறது. இன்றைய நிலையில் குறைந்த பட்சம் 6,500 ரூபாய் வரையில் சம்பளம் வாங்குபவர்களுக்கு ( பி.எஃப்.) பிடித்தம் கட்டாயம் பிடிக்க வேண்டும் என்பது சட்டமாகும்.   ஒரு தொழிலாளியின்   கணக்கில்  பென்ஷனுக்காக அதிகபட்சம் மாதம் 541 ரூபாய் மட்டுமே இதிலிருந்து எடுத்து வரவு வைக்கப்படும். தொழிலாளி ஓய்வு பெறும்போது இந்தத் தொகையிலிருந்து தான் மாதா மாதம் ஒரு தொகை பென்ஷனாக கிடைக்கும்
தொழிலாளர் ஓய்வூதியத் திட்டம்
தொழிலாளர் குடும்ப ஓய்வூதியத் திட்டம் 1971 என்று செயல்பட்டு வந்த திட்டமானது  1995-ம் ஆண்டு தொழிலாளர் ஓய்வூதியத் திட்டம் என்று மாற்றி இந்திய அரசு அறிமுகப்படுத்தியதுதொழிலாளர் குடும்ப ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் தொழிலாளர் ஒருவர் மரணமடைந்தால் அவருடைய குடும்பத்துக்கு ஓய்வூதியம் கிடைக்கும்படி  செய்யப்பட்டு இருந்தது. ஆனால், 1995-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட திட்டத்தின் கீழ் தொழிலாளரின் 50 வயதுக்கு பிறகு அவருக்கு விருப்ப ஓய்வு ஊதியமும், 58 வயதுக்குப் பிறகு கட்டாய ஓய்வூதியமும் கிடைக்கும். பென்ஷன் பெறுவதற்கு குறைந்தபட்ச தகுதி என்பது வயது மற்றும் பணிக்காலம்தான். குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பி.எஃப். கணக்கு வைத்திருப்பதோடு குறைந்தபட்சம் 50 வயதாகி இருக்க வேண்டும்.
தொழிலாளர்கள் பலருக்கும் பென்ஷன் குறித்த விழிப்பு உணர்வு இல்லாத காரணத் தினால் ஒரு வேலையிலிருந்து இன்னொரு வேலைக்குச் செல்லும்போது பி.எஃப். கணக்கில் உள்ள பணத்தை எடுத்துவிடுகிறார்கள். இதுபோன்ற சமயங்களில் 10 ஆண்டுகளுக்கு குறைவாக கணக்கு வைத்திருப்பவர்களுக்கு பென்ஷனுக்காக ஒதுக்கப்பட்ட தொகை குறிப்பிட்ட சதவிகிதத்தில் திரும்பக் கிடைக்கும். (சம்பளத்தில் எவ்வளவு மடங்கு என்பதை மேலே உள்ள அட்டவணையில் பார்க்க).

ஒருவர் 10 ஆண்டுகளுக்கு மேல் ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்தபிறகு வேறு நிறுவனத்திற்கு வேலை மாறுகிறார் அல்லது சொந்த தொழில் செய்கிறார் அல்லது இனிமேல் வேலைக்குப் போகவேண்டாம் என்று முடிவெடிக்கும் சூழ்நிலையில் அவரின் வயது 50-க்கு குறைவாக இருந்தால் பென்ஷன் கணக்கில் இருக்கும் தொகை உடனடியாகக் கிடைக்காது. இதற்கு பதிலாக பி.எஃப். அலுவலகத்திலிருந்து திட்ட சான்றிதழ் (ஸ்கீம் சர்ட்டிஃபிகேட்) வாங்கி வைத்துக் கொள்ளலாம். இதில் நீங்கள் எத்தனை வருடம் வேலை பார்த்தீர்கள், உங்கள் கணக்கில் எவ்வளவு பென்ஷன் தொகை உள்ளது, எந்த தேதியிலிருந்து நீங்கள் பென்ஷன் பெற முடியும் என்பது புரியும். இரண்டு, மூன்று திட்டச் சான்றிதழ் வைத்திருப்பவர்கள் அனைத்துச் சான்றிதழ்களையும் பி.எஃப். அலுவலகத்தில் தந்து கூட்டுத் தொகையை பென்ஷனாகப் பெறலாம். சுமார் ரூ.3,500 வரை அதிகபட்சமாக பென்ஷன் கிடைக்க வாய்ப்புண்டு.

பென்ஷன் திட்டத்திற்கு நாமினி நியமன வசதி உள்ளது. இதன்படி ஓய்வூதியம் பெறும் தொழிலாளர் இறந்துவிட்டால் பென்ஷன் தொகை மனைவிக்கு ஆயுள் முழுக்கவும், இரு குழந்தைகளுக்கு அவர்களின் 25 வயது வரைக்கும் பென்ஷன் கிடைக்கும் வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு நிரந்தர ஊனம் இருந்தால் ஆயுட்காலம் முழுக்க பென்ஷன் கிடைக்கும்.
ஒரு தொழிலாளிக்கு திருமணம் ஆகாத நிலையில், உறவினர் யாரும் இல்லை எனில் அவர் மரணம் அடைந்தால் அவருடைய பெற்றோருக்கு பென்ஷன் தரப்படும். தொழிலாளர் பணியில் இருக்கும்போது இறக்க நேரிட்டாலோ, நிரந்தர ஊனம் ஏற்பட்டாலோ பென்ஷன் கிடைக்கும். இதுபோன்றோருக்காக மத்திய அரசு தனியாக நிதி ஒதுக்கீடு செய்கிறது.
பி.எஃப். பென்ஷன் பெறுபவர் மரணம் அடைந்தபிறகு அவரது துணைவர் (கணவன் அல்லது மனைவி) அரசு வேலை பார்த்து அதன் மூலம் பென்ஷன் கிடைத்தாலும், அவர்களுக்கு இந்த பி.எஃப். பென்ஷனும் கிடைக்கும்.
பென்ஷன் திட்டத்தின் கீழ் பிடித்தம் செய்யப்படும் தொகைக்கு ஆரம்பம் முதலே எந்த வட்டியும் அரசு வழங்குவதில்லை.

- இரா. ரூபாவதி.

தொழிலாளர் ஈட்டுறுதி காப்பீட்டுத் திட்டம்!

***************************************************************

வருங்கால வைப்பு நிதித் திட்டத்தின் கீழ் உறுப்பினர்கள் அனைவருக்கும் ஆயுள் இன்ஷூரன்ஸ் கவரேஜ் கிடைக்கும். இதற்காக தொழிலாளர் எந்தவிதமான பிரீமியமும் செலுத்தத் தேவையில்லை. நிறுவனம் இதற்காக தொழிலாளரின் மொத்த ஊதியத்தில் 0.5 சதவிகிதம் தொகையைச் செலுத்துவார்கள். இதன் அடிப்படையில் பணியிலிருக்கும்போது மரணம் ஏற்பட்டால் அவருடைய வாரிசுதாரர்களுக்கு 60,000 முதல் 1,30,000 ரூபாய் கிடைக்கும்.
ஓய்வூதியம் கணக்கீடு எப்படி?

ஓய்வூதியத்திற்கான ஊதியம் X ஓய்வூதிய திட்ட உறுப்பினர் பணிக் காலம் / 70.

ஓய்வூதியத்துக்கான ஊதியம் என்பது அதிகபட்சமாக 6,500 ரூபாய் என்று கணக்கிடப்படும்.
25 வயதில் வேலைக்குச் சேரும் ஒருவருக்கு ஆரம்பத்திலே ரூ. 541 குடும்ப பென்ஷனுக்காக பிடித்தம் செய்யப்படுகிறது. அவர் 58 வயதில் ஒய்வு பெறுகிறார் என வைத்துக்கொள்வோம். அவர் மொத்தமாக பணிபுரிந்தது 33 வருடம் ஆகும். எனவே, (6500X33/70) அவருக்கு மாதத்திற்கு 3,094 ரூபாய் குடும்ப பென்ஷனாக கிடைக்கும்