disalbe Right click

Thursday, November 30, 2017

குடியிருப்பு திட்டங்கள் பதிவு

குடியிருப்பு திட்டங்கள் பதிவு : 'சிடி' ஆவணம் கட்டாயம்
ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டப்படி,குடியிருப்பு திட்டங்களை பதிவு செய்ய விண்ணப்பிக்கும் நிறுவனங்கள், அனைத்து ஆவணங்களையும், 'சிடி' வடிவத்தில் தருவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில், ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தில், தற்போதைய நிலவரப்படி, 223 திட்டங்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக, இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால், பெரும்பாலான திட்டங்களின் வரைபடங்கள், திட்ட அனுமதி விபர ஆவணங்கள் உள்ளிட்ட விபரங்கள், இணையதளத்தில் பதிவேற்றப்படவில்லை.
இந்நிலையில், ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டப்படி, பதிவு செய்ய விண்ணப்பிக்கும் நிறுவனங்கள், வரைபடம், திட்ட அனுமதி, பரப்பளவு விபரங்களை, 'ஸ்கேன்' செய்யப்பட்ட ஆவணங்களாக அளிக்கின்றன. இவற்றை இணையதளத்தில் பதிவேற்றுவதில், பல்வேறு சிக்கல்கள் ஏற்படுவதாக கூறப்படுகிறது. எனவே, புதிதாக பதிவு செய்ய விண்ணப்பிக்கும் நிறுவனங்கள், திட்டம் தொடர்பான ஆவணங்களை, பி.டி.எப்., வடிவில், 'சிடி'யில் பதிவு செய்து அளிக்க வேண்டும். இந்த நடைமுறை கட்டாயமாக்கப்பட்டு உள்ளதாக, ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது.
நன்றி : தினமலர் நாளிதழ் - 30.11.2017 

Wednesday, November 29, 2017

குழந்தைகளுக்கான இணையதள பக்கங்கள்!

Image may contain: 1 person

இணையத் தொழில்நுட்ப வளர்ச்சியில் குழந்தைகளும் கைகோத்து பயணிக்க ஆரம்பித்துள்ளனர். ஆனால், ஃபேஸ்புக், பொழுதுபோக்குப் பக்கங்கள் என அவர்களின் கவனம் சிதற விடாமல் ஆக்கப்பூர்வமான வழியில் மடை திருப்ப, குழந்தைகளுக்கான பிரத்யேக வலைதளங்கள் பல செயல்பட்டு வருகின்றன. உங்கள் வீட்டு குட்டிஸுக்கு அறிமுகப்படுத்த சில தரமான வலைதள முகவரிகள் இங்கே..
Kids Health
மருத்துவச் செய்திகளை குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்கும் பக்கம் இது. ‘ஆஸ்துமா என்றால் என்ன?’, ‘நமது உடல் பாகங்கள் எவ்வாறு செயல்படுகின்றன?’, ‘வைரஸ் காய்ச்சல் எதனால் ஏற்படுகிறது?’ என, இப்படி மருத்துவம் சம்பந்தமான குழந்தைகளின் அனைத்து சந்தேகங்களுக்கும், கேள்விகளுக்கும் இங்கே விடை கிடைக்கும்.
மேலும், வீடியோ மூலமாகவும் தகவல்களை தெளிவுற தெரிந்துகொள்ளலாம்
இதன் வலைதள முகவரி: http://kidshealth.org/kid/.National Geographic Kids
National Geographic Kids
அமெரிக்காவிலிருந்து செயல்படும் அறிவியல், கல்வி அமைப்பான The National Geographic Society, குழந்தைகளுக்காக நடத்தும் வலைதளம் இது. இதில் தாவரங்கள், உயிரினங்கள் பற்றிய செய்திகளை குழந்தைகள் சுலபமாக கற்றுக் கொள்ளலாம்.
வாண்டுகளின் ஆர்வத்தைத் தூண்டும் வகையிலான இந்த தளத்தின் புகைப்படங்களும், வீடியோக்களின் இதன் பெரிய பிளஸ். வலைதள முகவரி: http://kids.nationalgeographic.com/kids/.
Kidsmart
இது லண்டனிலிருந்து குழந்தைகளுக்காகச் செயல்படும் இணையதளம். இணையம் தொடர்பான பல்வேறு விஷயங்களை சுலபமாகப் புரிந்துகொள்ளும் வகையில் குழந்தைகளுக்கு கற்றுத் தருகிறது இந்த இணையதளம்.
சாட்டிங், சமூக வலைதள பக்கங்கள், இணைய பாதுகாப்பு உள்ளிட்ட பல விஷயங்களை சின்ன சின்ன டிப்ஸ்களாகத் தெரிந்துகொள்ளலாம். வலைதள முகவரி: http://www.kidsmart .org.uk/.
உங்கள் செல்லங்களின் இணையப் பொழுதுகள் இனி பயனுள்ளதாகக் கழியட்டும்!
- சா.வடிவரசு
நன்றி “ விகடன் செய்திகள் 28.11.2014   

கங்காரு மதர் கேர்’

கங்காரு மதர் கேர்’- குறைமாதக் குழந்தைகளுக்கு வரப்பிரசாதம்!
பெண்ணின் கர்ப்பக்காலம் முழுமையாகப் பூர்த்தியடையாமல், ஏழுஎட்டு மாதங்களில் பிறக்கும் குழந்தைகளைக் `குறைமாதக் குழந்தைகள்என்கிறோம். பிறக்கும் குழந்தைகள் சராசரியாக மூன்று கிலோ எடை இருக்க வேண்டும். குறைமாதத்தில் பிறக்கும் குழந்தைகள் இரண்டு கிலோவுக்கும் குறைவாகப் பிறக்கின்றனர். இக்குழந்தைகளை இன்குபேட்டரில் வைத்து மருத்துவமனைகளில் பராமரிப்பார்கள் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. குறைமாதக் குழந்தைகளுக்கு இன்குபேட்டரைத் தவிர்த்து `கங்காரு மதர் கேர்சிகிச்சை கொடுக்கப்படுகிறது. தற்போது தமிழகத்தின் அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள் எனப் பரவலாக இந்தச் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
`கங்காரு மதர் கேர்சிகிச்சை முறை என்பது என்ன, அதன் பயன்கள் என்ன, எப்படிக் கொடுக்கப்படுகிறது? என்பவைத் தொடர்பான விவரங்களை அளிக்கிறார் சென்னை, எழும்பூர் அரசு குழந்தைகள்நல மருத்துவமனையின் பச்சிளம் குழந்தைகள் பிரிவின் தலைவர் டாக்டர் கமலரத்தினம்.
கங்காரு மதர் கேர்
கங்காரு தன் குட்டி வளரும்வரை இயற்கையாக வயிற்றில் அமைந்துள்ள பையில் வைத்துக் கவனித்துக்கொள்ளும். அதை அடிப்படையாகக்கொண்டு குறைமாதக் குழந்தையைத் தாயின் மார்பின் நடுவில் வைத்து அணைத்தவாறு கட்டிக்கொள்வதைகங்காரு மதர் கேர்என்கிறோம்

Image result for கங்காரு மதர் கேர்’

இது முதன்முதலாக கொலம்பியாவைச் சேர்ந்த டாக்டரால் 1980-ல் கொண்டுவரப்பட்டது. தமிழகத்தில் 2000-ல் இச்சிகிச்சை முறை அறிமுகமானது. அதைத் தொடர்ந்து 2010 முதல் மருத்துவமனைகளில் பிரபலமாகச் செய்யப்பட்டு வருகிறது. குறைந்தது ஒரு கிலோ எடையுள்ள குழந்தை முதல் அதிகபட்சம் இரண்டு கிலோ வரை எடையுள்ள குழந்தைகளுக்கு இச்சிகிச்சையை அளிக்கலாம்.
சிகிச்சை முறை
தாயின் மார்பில் குழந்தையை வைத்துக்கொண்டு பனியன் துணியால் கட்டிவிட வேண்டும். குழந்தையின் தலைக்குத் தொப்பி போன்ற உறையும் கால்களுக்கு சாக்ஸும் அணிவிக்க வேண்டும். இதன் மூலம் தாயின் சருமத்துக்கும் குழந்தையின் சருமத்துக்கும் நேரடித் தொடர்பு ஏற்படும். குழந்தையின் வெப்பநிலை தாய்க்கும் தாயின் வெப்பநிலை குழந்தைக்கும் கடத்தப்படுவதால் வெப்பநிலை சமன் செய்யப்படுகிறது. தாயின் மார்பகத்தின் அருகில் இருப்பதால் குழந்தை தாய்ப்பாலின் வாசம் அறிந்து தேடிச்சென்று பாலை அருந்தும். இதன்மூலம் குழந்தையின் எடை வேகமாக அதிகரிக்கும். நோய்த்தொற்று இல்லாமல் இருக்கும். தாய்க்கும் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.
பயன்கள்
குறைமாதக் குழந்தை பிறந்ததை நினைத்து தாய் கவலைப்பட்டுக் கொண்டிருப்பார். இச்சமயத்தில் குழந்தை தன்னுடனேயே இருக்கும்போது குழந்தைக்கும் தாய்க்குமான பாசப்பிணைப்பு அதிகரிக்கும். ரத்த ஓட்டம், ரத்தத் துடிப்பு சீராகும். ஆக்ஸிஜன் தேவையும் குறையும். தாயின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். குழந்தை நீண்ட நேரம் தூங்கும். இதனால் குழந்தையின் முகம் புத்துணர்வுடன் காணப்படுவதோடு, அதன் எடையும் விரைவாக அதிகரிக்கும். குறைமாதக் குழந்தையின் இறப்பு விகிதம் குறையும்; நோய்த்தொற்று ஏற்படுவதும் தடுக்கப்படுகிறது.
யார் வேண்டுமானாலும் செய்யலாம்
அம்மாதான்கங்காரு மதர் கேர்செய்ய வேண்டும் என்பதில்லை. தாய்க்கு இயலாத நேரங்களில் தந்தை, தாயின் சகோதரி, பாட்டி, தாத்தா என யார் வேண்டுமானாலும் செய்யலாம். செய்பவர்கள் குளித்துச் சுத்தமாக இருப்பது அவசியம்

Image result for கங்காரு மதர் கேர்’ 

படுத்த நிலையில் மட்டும்தான் இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை. சாய்வான சேரில் சாய்ந்துகொண்டோ, படுத்துக்கொண்டோ, இசை கேட்டுக்கொண்டோ இதைத் தொடரலாம். குழந்தை வளர்ப்பு என்பது தாய்க்கு மட்டுமே விதிக்ககப்பட்டதில்லை என்பதைக் குடும்பமும் உணர்ந்துகொண்டு பின்பற்றும்போது குழந்தையின் வளர்ச்சியும் வேகமாக இருக்கும்.
எவ்வளவு நாள்கள்?
குறைமாதக் குழந்தை சராசரி எடையை அடையும்வரை இதைத் தொடரலாம். பொதுவாக குழந்தையின் எடை இரண்டு கிலோவுக்கு மேல் அதிகரிக்கும்போது ஒரே நிலையில் மார்பில் படுத்திருக்காது. குழந்தைக்கு அசௌகரியம் ஏற்படும்போது தவிர்த்துவிடலாம்.

Image result for கங்காரு மதர் கேர்’

குறைந்தபட்சம் ஒருநாளில் காலையில் ஒருமணி நேரம் மற்றும் மாலையில் ஒருமணி நேரமாவது செய்ய வேண்டும். ஒரு நாளைக்கு எவ்வளவு மணி நேரம் வேண்டுமானாலும் தொடரலாம். அதிக நேரம் கங்காரு மதர் கேரைத் தொடரும்போது குழந்தையின் வளர்ச்சி அதிகரிப்பதை உணரலாம்.
எந்த மாதிரியான குழந்தைகளுக்கு அளிக்க இயலாது?
குறைமாதக் குழந்தைகளில் .சி.யூ-வில் இருக்கும் குழந்தைகள், சுவாசப் பிரச்னைகள் இருக்கும் குழந்தைகளுக்கு இச்சிகிச்சையை வழங்க இயலாது.’
நன்றி : டாக்டர் விகடன் – 01.12.2017