disalbe Right click

Showing posts with label ரயில் பயணம். Show all posts
Showing posts with label ரயில் பயணம். Show all posts

Sunday, February 4, 2018

விஜிலென்ஸ் விழிப்புணர்வு முகாம்

பயணியர்களின் அன்பான கவனத்திற்கு.....
தென்னக ரயில்வேயில், விஜிலென்ஸ் பிரிவின் சார்பாக பயணியர்களுக்கு விழிப்புணர்வு முகாம், வருகின்ற 10.02.2018ம் தேதி வரை நடத்தப்படுகிறது.
ரயில்வேயில் நடக்கின்ற ஊழல்கள், முறைகேடுகள், உணவு, சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு குறைபாடுகள், இரயில்வே ஊழியர்களின் அடாவடி மற்றும் ரயில் பயணத்தில் ஏற்படும் பிரச்னைகள் உட்பட, அனைத்து முறைகேடுகளையும், விஜிலென்ஸ்
உதவி மையத்திற்கு, 155210 என்ற எண்ணில் தெரிவிக்கலாம்.
இணையதளம் மூலமாக, vigcomplaints@sr.railnet.gov.in என்ற முகவரியிலும் புகாரை பதிவு செய்யலாம். இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
உதவி மையத்தின் போன் எண் மற்றும் இணையதள முகவரி குறித்து, பயணியருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த, தெற்கு ரயில்வே முழுவதிலும் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில், 22.01.2018 முதல் 28.01.2018 வரை, விஜிலென்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஏற்கனவே நடத்தப்பட்டுள்ளன.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை, வரும், 10.02.2018 ம் தேதி வரை, முக்கிய ரயில் நிலையங்களில் தமிழ்நாடு முழுவதும் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
******************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி, 04.02.2018

Friday, April 28, 2017

பயணியை எழுப்பாததற்கு 5000 ரூபாய் அபராதம்

பயணியை எழுப்பாததற்கு 5000 ரூபாய் அபராதம்

பயணியை எழுப்பி விடாததால் ரயில்வேக்கு 5,000 ரூபாய் அபராதம்
மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த கிரிஷ் கார்க் என்ற வழக்கறிஞர், கடந்த 2015-ம் ஆண்டு கோவை-ஜெய்ப்பூர் சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்றார். அவர் கோட்டா என்ற பகுதிக்குச் செல்ல திட்டமிட்டு இருந்தார். அப்போது, 139 என்ற ரயில்வே வாடிக்கையாளர் சேவை மையத்துக்கு தொடர்பு கொண்ட அவர், கோட்டா ரயில் நிலையம் வந்தால் என்னை அலர்ட் செய்து எழுப்பி விடுங்கள் என்று கூறியுள்ளார்.
இதற்கு 139 சேவை தரப்பிலும் சம்மதம் தெரிவித்துள்ளனர். ஆனால், கோட்டா ரயில் நிலையம் வந்தபோது அவரை, 139 சேவை மையம் அலர்ட் செய்யவில்லை. இதையடுத்து, அவராகவே சுதாரித்துக் கொண்டு கடைசி நேரத்தில், கோட்டா ரயில் நிலையத்தில் இறங்கினார். இதைத்தொடர்ந்து  அவர், "நான் இந்த சம்பவத்தால் மன வேதனை அடைந்து விட்டேன். இதனால் எனக்கு ரயில்வே நிர்வாகம் 20,000 ரூபாய் இழப்பீடு தர வேண்டும்" என்று கூறி இருந்தார்.
இதையடுத்து, கிரிஷின் மனுவை தள்ளுபடி செய்யக் கோரி நீதிமன்றத்தில், ரயில்வே நிர்வாகம் மனு தாக்கல் செய்து இருந்தது. இந்த வழக்கு விசாரணையின்போது, மன வேதனை அடைந்த கிரிஷ்க்கு 5,000 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, இந்த மாத இறுதிக்குள் இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.
மேலும், இந்த வழக்கு செலவுகளுக்காக, கிரிஷ்க்கு 2,000 ரூபாய் வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இரா.குருபிரசாத்
நன்றி : விகடன் செய்திகள் - 29.04.2017




Friday, April 7, 2017

ரயிலில் பைக்குகளை கொண்டு செல்ல


ரயிலில் பைக்குகளை கொண்டு செல்ல என்ன செய்ய வேண்டும்?

பணி மாறுதல் உள்ளிட்ட சூழல்களில் கையுடன் மோட்டார்சைக்கிள்களையும் எடுத்துச் செல்லும் நிலை பலருக்கு ஏற்படுகிறது. குறைந்த தூரம் என்றால் ஆம்னி பஸ்களில் அல்லது பார்சல் சர்வீஸ் மூலமாக எடுத்துச் செல்ல முடியும்.

 ஆனால், வெளி மாநிலங்களுக்கு எடுத்துச் செல்வதற்கு ரயில்களே சிறந்த வழியாகவும், விரைவான வழியாகவும் இருக்கும். இந்தநிலையில், ரயில்களில் பைக் மற்றும் ஸ்கூட்டர்களை எடுத்துச் செல்வதற்கான சில வழிமுறைகளை இங்கு காணலாம்.

இரண்டு வழிகள்

ரயில்களில் இருசக்கர வாகனங்களை எடுத்துச் செல்வதற்கு இரு வழிகள் உள்ளன. அதாவது, பயணியுடன் சேர்த்து எடுத்துச் செல்லும் விதத்திலும், தனி பார்சலாகவும் அனுப்ப முடியும். இதற்கிடையே, ரயில்வே பார்சல் அலுவலகத்திற்கு சென்று, கட்டணம், ஆவணங்கள், குறிப்பிட்ட இடத்திற்கு எடுத்துச் செல்ல எவ்வளவு நாட்களாகவும் போன்ற தகவல்களை கேட்டுத் தெரிந்துகொள்ளவும்.

பேக்கிங்

ரயில்வே சரக்குப் பிரிவிலும் பேக்கிங் செய்வார்கள். ஆனால், ரயில்வே பார்சல் அலுவலங்களுக்கு வெளியில் சில தனியார் அல்லது தனி நபர்கள் சிறந்த முறையில் பேக்கிங் செய்து கொடுக்கின்றனர். இதற்கு கட்டணம் சிறிது கூடுதலாகும் என்றாலும், பைக்கை ரயிலில் ஏற்றும்போது, இறக்கும்போது கீறல்கள் விழாமல் தவிர்க்கும்.


விண்ணப்பம் 

ரயில் சரக்குப் பிரிவில் கொடுக்கப்படும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும். அதில், பைக்கின் தற்போதைய விலை மதிப்பு, எஞ்சின் மற்றும் சேஸீ நம்பர்கள் உள்ளிட்ட விபரங்களை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.

கட்டணம் 

தூரத்திற்கும், பைக்கின் எடைக்கும் தக்கவாறு கட்டணம் நிர்ணயிக்கப்படும். மேலும், புறப்படும் நிலையத்திலும், சென்றடையும் நிலையத்திலும் பேக்கிங் மற்றும் கையாளுதல் பணிகளுக்காக ரூ.150 முதல் ரூ.200 வரை தனித்தனியாக வசூலிக்கப்படும். அத்துடன், நீங்கள் குறிப்பிடும் பைக்கின் மதிப்பில் ஒரு சதவீதம் காப்பீடுக்காக வசூலிக்கப்படும். ஆனால், ரூ.10,000 குறைவான மதிப்புடைய வாகனங்களுக்கு இந்த கட்டணம் இல்லை.

தனி பார்சலாக... 

தனி பார்சலாக அனுப்பும்போது காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அலுவல் நேரத்தில் சரக்கு கையாளும் பிரிவில் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். அதேபோன்று, இதே வேலை நேரத்தில் மட்டுமே சென்றடையும் இடத்திலும் டெலிவிரியும் பெற முடியும்.


பயணியுடன் சேர்த்து...

பயணிக்கும்போதே, பைக்கையும் எடுத்துச் செல்லும் வசதியும் உள்ளது. அதாவது, கையுடன் எடுத்துச் சென்று டெலிவிரி பெறும் முறை இது.

முன்பதிவு நேரம்

பயணிக்கும் குறிப்பிட்ட ரயில் புறப்படுவதற்கு முன் 2 மணிநேரத்திற்கு முன்பாக சரக்கு கையாளும் பிரிவை அணுக வேண்டும்.

உரிமையாளர் இல்லையெனில்... 

பைக்கின் உரிமையாளர் பயணிக்கவில்லை எனில் அவரால் அங்கீகரிக்கப்பட்ட நபர் அல்லது ஏஜென்ட் பைக்கின் பொறுப்பை எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும், நீங்கள் பயணிக்கும் ரயிலிலேயே, உங்களது இருசக்கர வாகனம் ஏற்றப்பட்டுவிட்டதா என்பதை உறுதி செய்து கொள்ளவும்.

டெலிவிரி 

பயணியுடன் சேர்த்து பைக்கை எடுத்துச் செல்லும்போது சென்றடையும் இடத்தில் 24 மணிநேரமும் டெலிவிரி பெற்றுக் கொள்ளலாம். சிறிய ரயில்நிலையங்களில், பைக்கை இறக்குவதற்கான வசதி இல்லையெனில், அருகிலுள்ள பெரிய ரயில் நிலையங்களுக்கு முன்பதிவு செய்து டெலிவிரி பெற முடியும்.


ஆவணங்கள் 

ரயிலில் அனுப்பும்போது, இருசக்கர வாகனத்தின் ஒரிஜினல் ஆர்சி புக் அல்லது வாகனத்தின் பதிவு ஸ்மார்ட் கார்டை முன்பதிவு அதிகாரியிடம் காண்பிக்க வேண்டும். அத்துடன் ஒரு நகரை அவர்களிடம் தர வேண்டும். அதேபோன்று, வாகனத்தின் இன்ஸ்யூரன்ஸ் பிரதியும் கொடுக்க வேண்டும்

பொது விதிமுறைகள் 

பெட்ரோல் டேங்க் முழுவதுமாக காலி செய்யப்பட்டிருக்க வேண்டும்.

கவர் 

இருசக்கர வாகனத்தை ரயில்வே விதிகளின்படி பேக் செய்ய வேண்டும். பாலித்தீன் கவர் அல்லது சாக்குப் பைகளால் பேக் செய்யலாம்.

லேபிள் 

ரயிலில் ஏற்றுவதற்கு முன்னர் ரயில்வே துறை அதிகாரிகளால் அடையாள எண்கள் ஒட்டப்படும்.

ரசீதுகள் பத்திரம் 

முன்பதிவு செய்யும்போது கொடுக்கப்படும் கட்டண ரசீதின் நகலை, டெலிவிரி பெறும்போது கொடுக்க வேண்டும். அத்துடன், கையுடன் எடுத்துச் செல்லும்போது, பயணச் சீட்டையும், சரக்கு கட்டண சீட்டு என இரண்டையும் காண்பிக்க வேண்டும்.


முழுமையாக சேதமடைந்தால்... 

ஒருவேளை தீ விபத்து உள்ளிட்ட காரணங்களால் உங்கள் இருசக்கர வாகனம் முழுவதுமாக சேதமடைந்துவிட்டால், நீங்கள் குறிப்பிட்டிருக்கும் மதிப்பிற்கு காப்பீட்டு தொகை வழங்கப்படும்.


டிப்ஸ்

ரயிலில் எடுத்துச் செல்லும்போது பெட்ரோல் முழுவதுமாக காலி செய்யப்பட்டு விடும் என்பதால், டெலிவிரி பெற செல்லும்போது சிறிய கேனில் பெட்ரோலை வாங்கிச் செல்வது நலம். ரயில் நிலைய வளாகத்திற்குள் வண்டியை ஓட்ட முடியாது. வெளியில் வந்தவுடன் பெட்ரோலை ஊற்றி எடுத்துச் செல்ல முடியும். கையுடன் எடுத்துச் செல்பவர்கள் வாய்ப்பு இருந்தால் நண்பர்கள், உறவினர்களை பெட்ரோலை வாங்கி வரச்சொல்லலாம்.

நன்றி :  டிரைவ் ஸ்பார்க் - 07.03.2016

Monday, January 23, 2017

ரயில் விபத்து - நிவாரணம் பெற

ரயில் விபத்து - நிவாரணம் பெற
சாலையில் மோட்டார் வாகன விபத்து அன்றாட நிகழ்ச்சியாகி விட்டது. இந்த விபத்துகளில் பாதிக்கப்படும் நபர்களுக்கு தேவையான சட்ட உதவிகள் தேவையான அளவிற்கு கிடைத்து விடுகின்றன.ஆனால் ரயில் விபத்துகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடு, அதனைப் பெறும் முறை குறித்து பெரும்பாலானவர்களுக்கு தெரியவில்லை.
இரண்டு ரயில்கள் மோதிக்கொள்வதோ, அல்லது ஒரு ரயில் தடம்புரள்வதோ ரயில் விபத்து ஆகும். இந்த விபத்துகளில் பாதிக்கப்படுவோருக்கு நிவாரணம் வழங்கப்படுகிறது. அதேபோல ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிர் இழப்போருக்கும், உடல் பாகங்களை இழப்போருக்கும்கூட நிவாரணம் வழங்கப்படுகிறது.ஆனால் இந்த செயல் தற்கொலை முயற்சியாகவோ, வேறு காரணங்களுக்காக தானாகவே மேற்கொள்வதாகவோ இருக்கக்கூடாது. இவ்வாறு தவறி விழுவோர் குடிபோதையில் விழுந்திருக்கக்கூடாது. மேலும் சட்டவிரோதமான குற்றச்செயலில் ஈடுபடும்போது தவறி விழுந்தாலும் இழப்பீடு கோரமுடியாது.
இதேபோல ரயில் பயணத்தின்போது நடக்கும் பயங்கரவாத செயல்கள், திருட்டு, கொள்ளை போன்ற சம்பவங்களால் பாதிக்கபோபடுவோரும் இழப்பீடு பெறலாம்.
இதற்காக மாநில அளவில் ரயில் (பயணிகள்) உரிமைத் தீர்ப்பாயம் [Railway Claims Tribunal] இயங்கி வருகிறது. தமிழ்நாட்டிற்கான ரயில் பயணிகள் உரிமைத் தீர்ப்பாயம் சென்னையில் இயங்கி வருகிறது.
விபத்து நடந்த ஓராண்டு காலத்திற்குள் இழப்பீடு கோரும் மனுவை பதிவு செய்யலாம்.உயிர் இழப்புக்கு அதிகபட்சமாக ரூ.4 இலட்சம் வழங்கப்படும். அதேபோல உடல் உறுப்பு இழப்புக்கும் அதிகபட்சமாக ரூ.4 இலட்சம் வழங்கப்படும். பொருள் இழப்புக்கும், இழப்பின் தன்மைக்கு ஏற்ப இழப்பீடு வழங்கப்படுகிறது.
ரயில் பாதையில் அத்துமீறி பிரவேசித்து, கவனக்குறைவாக நடந்துகொண்டு ஏற்படும் இழப்புகளுக்கு ரயில்வே நிர்வாகம் பொறுப்பேற்காது.
பயணச்சீட்டு பெற்று முறைப்படி பயணம் செய்யும் பயணிகளே இந்த நிவாரணங்களை பெற தகுதி உடையவர்கள். அதே போல முறைப்படி ரயில் பெட்டியின் உட்புறத்தில் பயணம் செய்பவர்கள்தான் சட்டரீதியான பயணிகளாக கருதப்படுவார்கள். ரயில் பெட்டியின் கூரைமேல் அமர்ந்து செல்பவர்களுக்கு இந்த நிவாரணங்கள் கிடைக்காது. மேலும் கூரை அமர்ந்து செல்பவர்களுக்கு மூன்று மாத சிறைத்தண்டனையும், ஐநூறு ரூபாய் அபராதமும் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.
ரயில்வே நிர்வாகம் அளிக்கும் இந்த நிவாரணங்களை முறைகேடாக பெறமுயற்சி செய்பவர்களுக்கு மூன்றாண்டு சிறைத் தண்டனையும், அபராதமும் பரிசாக கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது.
முகவரி:
Railway Claims Tribunal,
"Freshford"
50, McNichols Road,
Chetpet,
Chennai - 600 031

Friday, January 20, 2017

பற்று அட்டை மூலம் முன்பதிவு


பற்று அட்டை மூலம் முன்பதிவு செய்த ரயில் டிக்கெட் 


பற்று அட்டை மூலம் முன்பதிவு செய்த ரயில் டிக்கெட்டை ரத்து செய்யும் வழிமுறை: ரயில்வே விளக்கம்

பற்று அட்டை (டெபிட் கார்டு), கடன் அட்டை (கிரெடிட் கார்டு) ஆகியவற்றைப் பயன்படுத்தி "ஸ்வைப்' மெஷின் மூலம் முன்பதிவு செய்த ரயில் டிக்கெட்டை ரத்து செய்யும் வழிமுறைகளை ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதிக மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்பட்ட பிறகு, ரொக்கமற்ற பணப் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன்படி, ரயில் நிலையங்களில் உள்ள முன்பதிவு மையங்களில் 10,000 "ஸ்வைப்' மெஷின்களை நிறுவ ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கி பற்று அட்டை மூலம் முன்பதிவு செய்யப்பட்டிருந்தால், ரயில்வே கவுன்டர்களை அணுகி டிக்கெட்டை ரத்து செய்துகொள்ள முடியும். பற்று அட்டைகளை மீண்டும் எடுத்து வரவேண்டியதில்லை. இதையடுத்து, முன்பதிவு தொகை வாடிக்கையாளரின்  வங்கிக் கணக்கில் 7 தினங்களில் வரவு வைக்கப்படும்.

ஒருவேளை, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கி பற்று அட்டை மூலம் முன்பதிவு செய்யவில்லை எனில், ரயில் டிக்கெட்டை ரத்து செய்யும் நபர் "ஸ்வைப்' மெஷினில் தனது பற்று அட்டை அல்லது கடன் அட்டையை (கிரெடிட் கார்டு) பயன்படுத்த வேண்டும்.

அதன் மூலம், அந்த நபரின் வங்கி விவரங்கள் எடுக்கப்பட்டு முன்பதிவு செய்த தொகை வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.

நன்றி : தினமணி நாளிதழ் - 21.01.2017

Tuesday, November 15, 2016

முன்பதிவு ரத்து


முன்பதிவு ரத்து செய்வோர் - என்ன செய்ய வேண்டும்?

ரயில் டிக்கெட் ரத்துக்கு ஆதார், பான் கார்டு கட்டாயம்
சென்னை: முன்பதிவு செய்த ரயில் டிக்கெட்டை ரத்து செய்வதற்கு ஆதார் எண், பான் கார்டு எண் மற்றும் வங்கி கணக்கு எண் கட்டாயம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ரத்து செய்யப்படும் டிக்கெட்டின் தொகை பயணியின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.

கறுப்பை வெள்ளையாக்க திட்டம்
பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளதால் தங்களிடம் உள்ள கறுப்பு பணத்தை ரயில் டிக்கெட் மூலம் வெள்ளையாக மாற்ற பலரும் முயற்சித்து வருகின்றனர்.

ரயில் நிலையங்களில் பழைய 500, 1000 ரூபாய் பயன்படுத்த மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதை பயன்படுத்தி, முதல் வகுப்பு ஏ.சி., போன்ற அதிக கட்டணங்கள் கொண்ட டிக்கெட்களை பழைய நோட்டுகளை கொண்டு பலரும் அதிகளவு முன்பதிவு செய்வது தெரியவந்துள்ளது.

அவர்கள் சில நாட்களுக்கு பின்னர், முன்பதிவு செய்த டிக்கெட்களை ரத்து செய்து புதிய கரன்சிகளை பெறலாம் என திட்டமிட்டனர். இதன் மூலம், வருமான வரித் துறையின் கண்காணிப்பில் இருந்து தப்பிக்கலாம் என எண்ணினர்.

சமூக வலைதளங்களின் வழியாக பரவிய இந்த யோசனையை பார்த்த பலரும் முன்பதிவு செய்வதற்கு ரயில்நிலையங்களில் குவிந்தனர்.

ஆதார், பான் கார்டு கட்டாயம்
இதை கண்டறிந்த ரயில்வே நிர்வாகம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, முன்பதிவு செய்தவர்கள் டிக்கெட்களை ரத்து செய்யும் போது ஆதார் எண், பான் கார்டு எண் மற்றும் வங்கி கணக்கு எண் ஆகியவற்றை சமர்பிக்க வேண்டும். 

ரத்தாகும் டிக்கெட்டின் தொகை ரொக்கமாக வழங்குவதற்கு பதிலாக அவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என ரயில்வே அறிவித்துள்ளது. இதன்மூலம், கறுப்பை வெள்ளையாக்க நினைத்தவர்களுக்கு கிடுக்குபிடி போடப்பட்டுள்ளது.

நன்றி : தினமலர் நாளிதழ் - 15.11.2016