disalbe Right click

Showing posts with label தொலைந்து போனால். Show all posts
Showing posts with label தொலைந்து போனால். Show all posts

Thursday, August 31, 2017

ஒரிஜினல் டிரைவிங் லைசென்ஸ் தொலைஞ்சா.....?

ஒரிஜினல் டிரைவிங் லைசென்ஸ் தொலைஞ்சா.....?
ஒரிஜினல் லைசென்ஸ் தொலைந்தால் புதுசுக்கு போலீஸ் உடனடி ஏற்பாடு
வாகன ஓட்டிகளின், 'ஒரிஜினல் லைசென்ஸ்' உள்ளிட்ட ஆவணங்கள் தொலைந்து போனால், இணையதளம் வாயிலாக, மாற்று ஆவணம் பெறும் நடைமுறையை, போலீசார் எளிமைப்படுத்தி உள்ளனர்.
இது குறித்து, போலீஸ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள், குற்றம் சாட்டப்பட்டவர்கள், வழக்கு ஆவணம் மற்றும் தொலைந்து போன ஆவணங்கள் குறித்து புகார் அளிக்கவும், தொலைந்து போன ஆவணங் களின் நகல் பெறவும், http:/eservices.tnpolice.gov.in என்ற போலீஸ் இணையதளத்தில், இரண்டு புதிய வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
சாலை விபத்துக்களில் பாதிக்கப்பட்டவர், இழப்பீடு தொகையை பெறவும், சாலை விபத் தில் இறந்தவர்களின் சட்ட பிரதிநிதிகளும், இந்த வசதியின் வாயிலாக, விரைவாக ஆவணங்களை பெறலாம். புலன் விசாரணை யின்போது, போலீசில் பதிவு செய்யப்பட்ட மொபைல் போன் எண் அடிப்படையில், ஆவணங்கள் கோருவோருக்கு அனுமதி வழங்கப்படும்.
'நெட் பாங்கிங்' வசதியை பயன்படுத்த, ஒரு ஆவணத்திற்கு, 10 ரூபாய் செலுத்த வேண்டும்.
கூடுதலாக கோரப்படும் ஆவண நகல்கள், இ - மெயிலில் அனுப்பி வைக்கப்படும். அரசு இ - சேவை மையத்துடன், இந்த சேவையை ஒருங்கிணைக்கும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
இதனால், பாஸ்போர்ட், வாகன பதிவு சான்றிதழ், ஒரிஜினல் டிரைவிங் லைசென்ஸ் போன்ற ஆவணங்கள் தொலைந்து போனது குறித்து, போலீ சில் புகார் அளிக்கும்நடைமுறையும், மாற்று ஆவணம் பெறுவதும் எளிமையாக்கப்பட்டு உள்ளது. மாற்று ஆவணங்கள் கோருவோரின் மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும்,
ஓ.டி.பி., எனப்படும் ரகசிய எண்கள் அடிப்படையில், இதன் உண்மைத் தன்மை உறுதி செய்யப்படும்.பின், தேவையான தகவல்கள் சமர்ப்பிக்கப்பட்டவுடன், தொலைந்த ஆவண நகல், ஒரு தனித்துவமான குறிப்பு எண்ணுடன், உடனடியாக பயனாளிக்கு அளிக்கப்படும். அதே சமயத்தில், இந்த நகல், அவரின் இ - மெயிலுக்கும் அனுப்பப்படும்.
ஆவணம் வழங்கும் அதிகாரிகள், உண்மை தன்மை யை சரிபார்க்க,இணையதளத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதை பயன்படுத்தி, ஓட்டுனர் லைசென்ஸ் உட்பட, அரசு ஆவணங் களை, அந்தந்த துறைகளில் உடனடியாக பெறலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த புதிய இணைய தள சேவை, இன்று முதல், சென்னையை தவிர்த்து, அனைத்து மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகங்கள், மாவட்ட எஸ்.பி., அலுவலகங்களில் செயல்பாட்டுக்கு வருகிறது. சென்னை மாநகருக்கான சேவை, நாளை துவங்க இருப்பதாக, காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
போலீசுக்கும் 3 மாதம் சிறை!
'ஒரிஜினல் லைசென்ஸ் இல்லாத, போலீசார் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.நாளை முதல், வாகனங்கள் ஓட்டுவோர் கட்டாயம், 'ஒரிஜினல் லைசென்ஸ்' வைத்திருக்க வேண்டும் என்ற நடைமுறை, அமலுக்கு வருகிறது. ஒரிஜினல் லைசென்ஸ் இல்லாமல் வாகனங்கள் ஓட்டுவோர் மீது, போலீசார் வழக்குப் பதிவு செய்ய உள்ளனர்.
இந்த நடைமுறையை, 'தமிழக காவல் துறையில் பணிபுரியும், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட போலீசாரும், கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்; மீறினால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்' என, டி.ஜி.பி., அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.இது குறித்து, போலீஸ் உயர் அதிகாரிகள் கூறுகையில், 'ஒரிஜினல் லைசென்ஸ் இல்லாமல் வாகனங்கள் ஓட்டி னால், மூன்று மாதம் சிறை அல்லது, ரூ.500 அபராதம் அல்லது இரண்டையும் சேர்த்து அனுபவிக்க நேரிடும். இது, பொது மக்களுக்கு மட்டுமல்ல; போலீசாருக்கும் பொருந்தும். செப்., 1 முதல், ஒரிஜினல் லைசென்ஸ் இல்லாமல், யாரும் வாகனம் ஓட்ட வேண்டாம்' என எச்சரித்துள்ளனர்.
நன்றி : தினமலர் நாளிதழ் - 30.08.2017

Tuesday, November 15, 2016

சொத்து பத்திரங்கள் தொலைந்துவிட்டால்

சொத்து பத்திரங்கள் தொலைந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும்?
சொத்துப் பத்திரத்தின் அசல் (Original) ஆவணங்கள் தொலைந்துவிட்டால், உடனடியாக அது தொலைந்த இடத்துக்கு அருகில் இருக்கும் காவல் நிலையத்தில், தொலைந்த பத்திரங்க ளின் விவரங்களைத் தெளிவாக எழுதி, ஒரு புகார் கொடுக்க வேண்டும். அதில் அந்த பத்திரங்களை கண்டுபிடித்துத் தரும்படி கேட்க வேண்டும்.
காவல் நிலைய அதிகாரிகள் உங்கள் மனுவை பதிவு செய்துகொண்டு ஆவணங்களைக் கண்டுபிடிக்க முயற்சிப்பார்கள். காணாமல் போன ஆவணங்கள் கிடைத்தால், புகார் செய்தவரிடம் தந்துவிடுவார்கள். ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் கண்டுபிடிக்க முடியவில்லை எனில், கண்டுபிடிக்க முடியவில்லை (Non Traceable Certificate) என சான்றிதழ் தந்துவிடுவார்கள்.
அதனைப் பெற்றுக்கொண்டவுடன், அதைக் காண்பித்து தங்களுக்கு தெரிந்த வழக்கறிஞர் மூலமாக இரண்டு பிரபலமான நாளிதழ்களில் (ஒரு ஆங்கில நாளிதழ், ஒரு தமிழ் நாளிதழ்) பத்திரங்கள் காணவில்லை என்றும், ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் கண்டெடுப்பவர் வழக்கறிஞரிடம் தரவேண்டும் என்றும் விளம்பரம் செய்ய வேண்டும்.
தொலைந்த சொத்து பத்திரங்களை யாராவது கண்டெடுத்து, வழக்கறிஞரிடம் தந்தால், நாம் அந்த ஆவணங்களை பெற்றுக்கொள்ளலாம். அவ்வாறு கிடைக்கவில்லை எனில், பத்திரப் பதிவு அலுவலகங்களில் இருந்து பெறப்பட்ட பத்திரங்களின் நகலை (Certified Copies of the Documents) காணாமல் போன அசல் (Original) ஆவணங்களுக்கு பதிலாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
இப்படி அசல் பத்திரம் காணாமல் போன சொத்துக்களை வாங்குபவர் கவனிக்க வேண்டியவை என்ன என்பதைப் பார்ப்போம்.
காவல் நிலையத்தில் புகார் செய்தபின், அசல் சொத்துப் பத்திரத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று காவல் நிலையம் தரும் சான்றிதழ், பத்திரிகைகளில் வெளியான விளம்பரங்கள் போன்ற ஆவணங்களை, தங்களின் வழக்கறிஞரிடம் காண்பித்து அவர் ஒப்புதல் தரும்பட்சத்தில் அந்தச் சொத்தை வாங்கிக்கொள்ளலாம்.
புதிதாக பதிவு செய்யும் சொத்து ஆவணத்தில் அடுத்து வரும் வாசகம் கட்டாயம் இடம்பெறும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். “இந்தச் சொத்தில் எந்த வில்லங்கமும் இல்லை என்று விற்பவராகிய நான் உறுதி அளிக்கிறேன். பிற்காலத்தில் இந்த சொத்தில் எந்த வில்லங்கம் ஏற்பட்டாலும், விற்பவராகிய நான் முன்னின்று என் செலவில் வில்லங்கத்தை சரிசெய்வேன் என்று உறுதி அளிக்கிறேன்”.
அசல் ஆவணம் இல்லாத சொத்தின் மேல், வங்கியில் கடன் வாங்கும்போது சிக்கல் வர வாய்ப்பு இருக்கிறது. முன்னர் ஏற்பட்ட சில கசப்பான அனுபவங்களால் சில வங்கிகள் கடன் வழங்க தயக்கம் காட்டக்கூடும். ஏனெனில், முன்பெல்லாம் சொத்தின் ஆவணங்களை கொலாட்ரல் செக்யூரிட்டியாக (Collateral Security) கொடுத்து, வங்கியில் கடன் பெறுவார்கள். ஆனால், பத்திரப் பதிவு அலுவலகத்தில் அவ்வாறு கடனுக்காக கொலாட்ரல் செக்யூரிட்டி கொடுப்பதைப் பதிவு செய்யமாட்டார்கள். அதனால் கடன் பெறுவது வில்லங்கச் சான்றிதழில் தெரியாது.
ஒரு சிலர் பல்வேறு காரணங்களால் தாங்கள் வங்கிக்கு கொடுக்க வேண்டிய கடனைக் கொடுக்காமல், மேற்கூறியவாறு சொத்து ஆவணங்கள் தொலைந்துவிட்டது என்று காவல் நிலையத்திலும், பின்பு பத்திரிகைகளிலும் விளம்பரம் கொடுத்து வழக்கறிஞரிடம் சான்று பெற்று சொத்தினை விற்றுவிடுவார்கள். பிற்காலத்தில் சொத்தை வாங்கியவரும், கடன் கொடுத்த வங்கியும் நீதிமன்றங்களை நாட வேண்டியது வரும். பொதுவாக, கடன் கொடுத்த வங்கிதான் வெற்றி பெறும். ஆனாலும் நீண்ட கால தொல்லைகள் உண்டாகும். வாங்கியவருக்கும் நஷ்டம் ஏற்படும்.
இதுமாதிரியான தவறுகள் நடக்காதிருக்க, தற்போது வங்கியில் ஆவணங்களை வைத்துக் கடன் பெற்றால், Memorandum of Deposit of Title Deeds (MOD) என்ற ஆவணம் பத்திரப் பதிவு அலுவலகத்தில் பதிவு செய்யப்படுகிறது. இது வில்லங்க சான்றிதழில் தெரியவரும். இந்தமுறை கடந்த 10 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.
பொதுவாக, சொத்தின் அசல் ஆவணங்கள் தொலைந்துவிட்டால், அந்த சொத்தின் மதிப்பு, சந்தை (Market) மதிப்பைவிட சற்று குறைவாகவே இருக்கும். மேலும், ஆவணங்களை தொலைத்தவர் கீழ்க்கண்ட முறையை பின்பற்றினால், வாங்குபவருக்கு நம்பிக்கை ஊட்டுவதாக இருக்கும்.
ஆவணங்களை தொலைத்தவர், அவருடைய மனைவி அல்லது மகன் எவருக்காவது அந்த சொத்தினை தான செட்டில்மென்ட் (Settlement Deed) மூலம் எழுதிக் கொடுக்கலாம். இதற்கான செலவு என்பது சொத்தின் மதிப்பு 25,00,000 ரூபாய்க்கு மேல் இருப்பின் ரூ.33,000 வரை செலவாகும். அந்த செட்டில்மென்ட் பத்திரத்தில், அந்த சொத்தினை வாங்கிய விவரம், சொத்தின் ஆவணங்கள் விவரம், அவை காணாமல் போன விவரம், காவல் நிலையத்தில் புகார் கொடுத்த விவரம், வழக்கறிஞர் மூலம் பத்திரிகைகளில் விளம்பரம் அளித்த விவரம் ஆகியவற்றை முறையாக எழுதிப் பதிவு செய்யலாம்.
இந்த செட்டில்மென்ட் பத்திரத்தை கொண்டு, வீடாக இருந்தால் பட்டா, வீட்டு வரி ரசீது, மின் வாரிய ரசீது ஆகியவற்றை சொத்து செட்டில்மென்ட் செய்தவர் மேல்மாற்றம் செய்துவிடலாம்.
இதனால் அந்த செட்டில்மென்ட் ஆவணத்தில் உங்கள் புகைப்படத்துடன், தற்போதைய விலாசம், அதற்குறிய சான்றுகள் ஆகியவை மூலம் நீங்கள்தான் அந்த சொத்தின் உரிமையாளர் எனவும், நீங்கள் அதை மனைவிக்கோ, மகனுக்கோ செட்டில்மென்ட் செய்துவிட்டீர்கள் எனவும் வில்லங்க சான்றிதழ் மூலம் தெரியவரும். பின்பு உங்கள் மனைவியோ அல்லது மகனோ இந்த சொத்தினை மேற்கூறிய ஆவணங்களைக் காட்டி சுலபமாக விற்கலாம்.
த.பார்த்தசாரதி, சொத்து மதிப்பீட்டு நிபுணர்.
*********************************நன்றி : நாணயம் விகடன் - 15.11.2015 

Monday, April 18, 2016

அசல் பத்திரம் தொலைந்த சொத்தை விற்க

அசல் பத்திரம் தொலைந்த சொத்தை விற்க என்ன செய்ய வேண்டும்?
சொத்துப் பத்திரத்தின் அசல் (Original) ஆவணங்கள் தொலைந்துவிட்டால், உடனடியாக அது தொலைந்த இடத்துக்கு அருகில் இருக்கும் காவல் நிலையத்தில், தொலைந்த பத்திரங்களின் விவரங்களைத் தெளிவாக எழுதி, ஒரு புகார் கொடுக்க வேண்டும். அதில் அந்த பத்திரங்களை கண்டுபிடித்துத் தரும்படி கேட்க வேண்டும்.
காவல் நிலைய அதிகாரிகள் உங்கள் மனுவை பதிவு செய்துகொண்டு ஆவணங்களைக் கண்டுபிடிக்க முயற்சிப்பார்கள். காணாமல் போன ஆவணங்கள் கிடைத்தால், புகார் செய்தவரிடம் தந்துவிடுவார்கள். ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் கண்டுபிடிக்க முடியவில்லை எனில், கண்டுபிடிக்க முடியவில்லை (Non Traceable Certificate) என சான்றிதழ் தந்துவிடுவார்கள்.
அதனைப் பெற்றுக்கொண்டவுடன், அதைக் காண்பித்து தங்களுக்கு தெரிந்த வழக்கறிஞர் மூலமாக இரண்டு பிரபலமான நாளிதழ்களில் (ஒரு ஆங்கில நாளிதழ், ஒரு தமிழ் நாளிதழ்) பத்திரங்கள் காணவில்லை என்றும், ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் கண்டெடுப்பவர் வழக்கறிஞரிடம் தரவேண்டும் என்றும் விளம்பரம் செய்ய வேண்டும்.
தொலைந்த சொத்து பத்திரங்களை யாராவது கண்டெடுத்து, வழக்கறிஞரிடம் தந்தால், நாம் அந்த ஆவணங்களை பெற்றுக்கொள்ளலாம். அவ்வாறு கிடைக்கவில்லை எனில், பத்திரப் பதிவு அலுவலகங்களில் இருந்து பெறப்பட்ட பத்திரங்களின் நகலை (Certified Copies of the Documents)    காணாமல் போன அசல் (Original) ஆவணங்களுக்கு பதிலாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
ஆவணங்களை தொலைத்தவர், அவருடைய மனைவி அல்லது மகன் எவருக்காவது அந்த சொத்தினை தான செட்டில்மென்ட் (Settlement Deed) மூலம் எழுதிக் கொடுக்கலாம். இதற்கான செலவு என்பது சொத்தின் மதிப்பு 25,00,000 ரூபாய்க்கு மேல் இருப்பின் ரூ.33,000 வரை செலவாகும். அந்த செட்டில்மென்ட் பத்திரத்தில், அந்த சொத்தினை வாங்கிய விவரம், சொத்தின் ஆவணங்கள் விவரம், அவை காணாமல் போன விவரம், காவல் நிலையத்தில் புகார் கொடுத்த விவரம், வழக்கறிஞர் மூலம் பத்திரிகைகளில் விளம்பரம் அளித்த விவரம் ஆகியவற்றை முறையாக எழுதிப் பதிவு செய்யலாம்.
இந்த செட்டில்மென்ட் பத்திரத்தை கொண்டு, வீடாக இருந்தால் பட்டா, வீட்டு வரி ரசீது, மின் வாரிய ரசீது ஆகியவற்றை சொத்து செட்டில்மென்ட் செய்தவர் மேல்மாற்றம் செய்துவிடலாம்.
இதனால் அந்த செட்டில்மென்ட் ஆவணத்தில் உங்கள் புகைப்படத்துடன், தற்போதைய விலாசம், அதற்குறிய சான்றுகள் ஆகியவை மூலம் நீங்கள்தான் அந்த சொத்தின் உரிமையாளர் எனவும், நீங்கள் அதை மனைவிக்கோ, மகனுக்கோ செட்டில்மென்ட் செய்துவிட்டீர்கள் எனவும் வில்லங்க சான்றிதழ் மூலம் தெரியவரும். பின்பு உங்கள் மனைவியோ அல்லது மகனோ இந்த சொத்தினை மேற்கூறிய ஆவணங்களைக் காட்டி சுலபமாக விற்கலாம்.
*************************************************************நன்றி : நாணயம் விகடன், 15.11.2015 

Tuesday, March 1, 2016

ஸ்மார்ட் ஃபோன் தொலந்துவிட்டால்


ஸ்மார்ட் ஃபோன் தொலந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும்?

நாம் அனைவரும் ஒரு முறையாவது போனை தொலைத்திருப்போம். ஒன்று தெரியாமல் தொலைத்திருப்போம் அல்லது யாராவது திருடி இருப்பார்கள். அந்த மாதிரி நேரத்தில் நாம் பதட்டப்படுவதால் எந்த ஒரு பலனும் இல்லை. அமைதியாக அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதில் கவனம் செலுத்தினால் போதும். இதனால் சில நேரத்தில் போனை கண்டு பிடிக்கலாம் அல்லது யாரும் அதை தகாத காரியங்களுக்கு பயன்படுத்தாமல் பாதுகாத்து கொள்ளலாம். அது எப்படி செய்ய வேண்டும் என்பதை பற்றி விரிவாக தெரிந்து கொள்ளுங்கள்.

ரிங்

உங்கள் போனுக்கு ரிங் அல்லது மெசேஜ் கொடுக்கவும்
முதலில் உங்கள் போனுக்கு ரிங் அல்லது டெக்ஸ்ட் மெசேஜ் அனுப்பவும்.
யாரிடமாவது உங்கள் போன் இருந்தால் அவர்கள் உங்களுக்கு தொடர்பு கொள்வார்கள் இல்லையென்றால் அடுத்த முயற்சிக்கு செல்லவும்.
கடவுச்சொல்
கடவுச்சொல்லை மாற்றவும்.
உங்கள் போன் தொலைந்துவிட்டால் உடனே உங்கள் கணினியில் உள்ள அனைத்து கடவுச் சொல்லையும் மாற்றிவிடவும். நம்மில் பலர் இமெயில், முகநூல், வங்கி கணக்கு போன்றவற்றின் கடவுச்சொற்களை மொபைலில் சேமித்து வைக்கும் பழக்கத்தில் இருப்போம். ஆகவே உடனே அவைகளின் கடவுச் சொல்லையும் மாற்றி விடுவது நல்லது.
டிவைஸ் மேனேஜர்
ஆண்ட்ராய்ட் டிவைஸ் மேனேஜரை பயன்படுத்தவும்
ஆண்ட்ராய்ட் டிவைஸ் மேனேஜரின் உதவியுடன் உங்களை போனை கண்டுபிடிக்க முடியும். இதில் ரிங், லாக் அல்லது போனை செயலற்று போக செய்வதற்கான ஆப்ஷன்கள் உள்ளன. இதில் ஏதாவது ஒன்றை பயன்படுத்தி உங்கள் போனை கண்டுபிடிக்கலாம், இல்லாவிட்டால் செயலற்று போக செய்யலாம். குறிப்பு இந்த ஆப்ஷன் கருவி தொலைந்து போகும் முன் நீங்கள் எனேபிள் செய்திருந்தால் மட்டுமே வேலை செய்யும்.
சிம் பிளாக்
சிம் கார்டை பிளாக் செய்யவும்
போன் தொலைந்தவுடன் உங்கள் டெலிகாம் ஆப்ரேட்டரை தொடர்பு கொண்டு உங்கள் சிம் கார்டை பிளாக் செய்யவும். இதனால் உங்கள் போனை எடுத்தவர்கள் உங்கள் சிம் கார்டை பயன்படுத்த முடியாது. இதன் மூலம் உங்கள் சிம் கார்டை தகாத செயல்களுக்கு பயன்படுத்தப்படாமல் பாதுகாக்க முடியும்.
காவல் நிலையம்
காவல் நிலையம் செல்லவும்
போனை கண்டுபிடிக்க காவல் நிலையம் செல்வதால் ஒரு பயனும் இல்லையென்றாலும் அதை செய்வது நல்லது. உங்கள் போனை கண்டுபிடிக்க முடியாவிட்டால் உடனே அருகில் உள்ள காவல் நிலையம் சென்று புகாரை பதிவு செய்தல் அவசியம்.
கண்காணிப்பு
எல்லா கணக்குகளையும் கண்காணிக்கவும்
உங்கள் மின்னஞ்சல், முகநூல், சமூக வலைதளம் போன்றவற்றின் கணக்குகளை அடிக்கடி கண்காணிக்க வேண்டும். இதனால் யாராவது உங்கள் கணக்குகளை பார்வையிடுகின்றார்கள் என்பதை அறிந்து கொள்ள முடியும்
Written by: Aruna Saravanan 
நன்றி : கிஸ்பாட் - 27.02.2016

Friday, January 29, 2016

தொலைந்து போன மொபைல் , லேப்டாப்


தொலைந்து போன மொபைல் , லேப்டாப் – ட்ராக் செய்ய வழிகள்!

நீங்கள் எவ்வளவு அதிகமாக மொபைல், லேப்டாப் –ஐ பயன்படுத்துகிறீர்களோ அவ்வளவு அதிகமாக டேட்டாக்களை இழந்திருப்பீர்கள் அவை தொலைந்தால் !! இப்பொழுதே சில நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் இதற்கு ஒரு தீர்வு காணலாம்!!

மொபைல் :

கூகுள் செட்டிங்க்ஸ் – டிவைஸ் மேனேஜர் ( ஆண்ட்ராய்டு ) :

                  இதற்கு நீங்கள் உங்களின் தொலைந்து போன மொபைலில் டிவைஸ் மேனேஜர் ஆப் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. உங்களின் மொபைலில் உள்ள “ கூகுள் செட்டிங்க்ஸிற்குள் ” செல்லுங்கள் ( பொதுவாக நீங்கள் பயன்படுத்தும் “செட்டிங்க்ஸ்” அல்ல இது ).

                உள்ளே செக்யூரிட்டி ஆப்ஷன்ஸில் நுழைந்து ‘டிவைஸ் மேனேஜர்’ என்பதின் கீழ் “Remotely locate this device” மற்றும் “Allow remote lock and erase” ஆகியவற்றை டிக் செய்து கொள்ளுங்கள். மேலும் இதே கூகுள் செட்டிங்க்ஸிற்குள் உள்ள “லொகேஷன்” ஆப்ஷனில் உள்ள கூகுள் லொகேஷன் ஹிஸ்டரிக்குள் உள்ள “லொகேஷன் ஹிஸ்டரி” ஆப்ஷனை டிக் செய்து கொள்ளுங்கள்.

                இனிமேல் உங்களது மொபைலை கண்டுபிடிக்க இரண்டு வழிகள் உள்ளன.

1. உங்கள் மொபைல் “சுவிட்ச் ஆன்” ஆகியிருந்து,  ட்ராக் செய்யும் வகையில் சிக்னலும் இருந்தால் வேறொரு நபரின் மொபைலில் டிவைஸ் மேனேஜர் ஆப் இன்ஸ்டால் செய்து,  android.com/devicemanager என்ற லிங்க்கினுள்ளே உங்களது கூகுள் அக்கவுண்ட்டை சைன் செய்தால்,  உடனே கூகுள் மேப்பில் உங்களது மொபைலின் இருப்பிடம் காட்டப்படும்.

2. உங்கள் மொபைல் “சுவிட்ச் ஆப்” ஆகியிருந்தால் லொகேஷன் ஹிஸ்டரிக்குள் சென்று,  கடைசியாக உங்கள் மொபைல் ரிப்போர்ட் செய்யப்பட்ட இடத்தை அறியலாம். இதனை google.com/settings/accounthistory க்குள் சென்று ப்ளேசெஸ் யூ கோ (Places you go ) என்பதை தட்டி மேனேஜ் ஹிஸ்டரியை கிளிக்கினால் காணலாம். இவ்வாறு செய்தால் நீங்கள் குறிப்பிடும் நேரத்திற்குள் உங்களின் மொபைல் எங்கெல்லாம் டிடெக்ட் செய்யப்பட்டுள்ளது என்பதைக் காணலாம்.



ஃபைன்ட்  மை ஐ போன் ( ஐ போன் ) :

தொலைந்து போன ஆப்பிள் சாதனத்தை இதன் மூலம் கண்டுபிடிக்கலாம். ஆனால் அதற்காக முன்னாலேயே இந்த செட் அப் உங்கள் சாதனத்தில் இருப்பதை உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும். செட்டிங்க்ஸை க்ளிக் செய்து உள்ளே ஐ க்ளவுட் ( I cloud ) சென்று,  ஃபைன்ட்  மை ஐ போன்-ஐயும்,  சென்ட் லாஸ்ட் லொகேஷன் ( Send Last Location ) -ஐயும் க்ளிக் செய்யுங்கள். பிறகு செட்டிங்க்ஸ் – பிரைவசி க்குள் சென்று லொகேஷன் சர்வீசஸை க்ளிக் செய்யவும்.


இனிமேல் உங்களது மொபைலை கண்டுபிடிக்க இரண்டு வழிகள் உள்ளன.

1. மற்றொரு ஆப்பிள் சாதனத்தில் இலவசமான ஃபைன்ட்  மை ஐ போன் ஆப்-ஐ இன்ஸ்டால் செய்து பார்க்கலாம்.

2. உங்கள் டெஸ்க்டாப்பில் Icloud.com சென்று ஃபைன்ட்  மை ஐ போன் கொடுத்தால் உங்கள் ஆப்பிள் சாதனத்தின் இருப்பிடம் தெரிந்து விடும்.

                  மேலும் இதன் மூலம் உங்கள் மொபைலின் கன்டென்ட்களை அழிக்கவும், அலாரம் அடிக்கவும் , லாக்கும் செய்யலாம்.
 
ஃபைன்ட்  மை போன் (விண்டோஸ் போன்) 

விண்டோஸ் போனில் ஆப்ஸ் லிஸ்ட்டிற்குள் சென்று செட்டிங்க்ஸில் நுழையவும். அங்குள்ள பிரைவசி பிரிவிற்குள் சென்று லொகேஷன் மற்றும் ஃபைன்ட்  மை போன்  ஆகியவற்றை டிக் செய்யவும். பிறகு ஃபைன்ட்  மை போன் ஆப்ஷன் உள்ளே சென்று “Save my phone’s location periodically and before the battery runs out to make it easier  to find “ ஆப்ஷனை  டிக் செய்யவும்.

இதன் பிறகு உங்களது விண்டோஸ் அக்கவுன்டிற்குள் சென்று,  ஃபைன்ட்  மை போன் பிரிவிற்குள் செல்லுங்கள். உங்களின் மொபைல் கடைசியாக ரிப்போர்ட் செய்யப்பட்ட லொகேஷன் உங்களுக்கு மேப்பில் காட்டப்படும். மேலும் இதன் மூலம் உங்கள் மொபைலின் கன்டென்ட்களை அழிக்கவும், அலாரம் அடிக்கவும் , லாக்கும் செய்யலாம்.
லேப்டாப்:

பிரே:

பிரே என்னும் இந்த இலவசமான ஆப்பின் செயல்பாடுகள் முற்றிலும் டிவைஸ் மேனேஜர் போலவே. இதனை மொபைலிற்கும் பயன்படுத்தலாம். பின்வருவது இதன் சில செயல்பாடுகள்.

மிக சத்தமான அலாரம் வைத்துக்கொள்ளலாம்.

லேப்டாப் பிறரது கைக்கு போனால் உங்கள் மொபைலிற்கு கஸ்டமைஸ்டு மெசேஜ் அனுப்பிக்கொள்ளலாம்.

லேப்டாப்பை லொகேட், லாக் செய்து கொள்ளலாம். கன்டென்ட்களை அழித்துக்கொள்ளலாம்.                 
 
இதனை இன்ஸ்டால் செய்யாமலேயே உங்கள் லேப்டாப்பை கண்டுபிடிக்குமாறு  செட் செய்து கொள்ள முடியும்.

மேற்குறித்த முறைகளில் ஏதேனும் ஒன்றில் உங்களது மொபைலை நீங்கள் மீண்டும் கண்டுபிடித்துவிட்டால் அந்தந்த நிறுவனங்களுக்கு அதனை தெரிவித்துவிடுவது நல்லது !!!

-  ஸ்ரீ.தனஞ்ஜெயன்
(மாணவர் பத்திரிகையாளர்)
விகடன் செய்திகள் - 01.11.2016

Saturday, December 19, 2015

சொத்து பத்திரங்கள் தொலைந்தால்

சொத்து பத்திரங்கள் தொலைந்தால் என்ன செய்ய வேண்டும்?
சொத்து உரிமையாளர்கள், சொத்து ஆவணங்களை பழுதுபடாத விதத்தில் மிகுந்த பாதுகாப்புடன் வைத்துக்கொண்டாலும் கூட, சொத்து ஆவணங்கள் தொலைந்து போகும் சம்பவங்கள் பற்றி அடிக்கடி புகார்கள் கொடுக்கப்படுகின்றன. சில சொத்து பரிமாற்ற தீர்வுகளின் போது அல்லது வீட்டைப் புனரமைப்பதற்கு உங்களுக்கு வங்கி கடன் தேவைப்படும் நேரத்தில், நீங்கள் தான் சொத்து உரியாளர் என்பதற்கான கையடக்க ஆதாரமாக சொத்து ஆவணங்கள் மட்டுமே இருக்கின்றன. இந்த ஆவணங்கள் இல்லாத பட்சத்தில், வங்கி அதிகாரிகள் கடன் வழங்க மாட்டார்கள் மற்றும் சொத்துப் பரிமாற்றங்கள் தீர்க்கப்படுவதில் சிக்கல் உருவாகும். இருப்பினும், சொத்து ஆவணங்களை இழப்பதனால் ஒருவர் முழுமையாக தவிக்க விடப்படுவதில்லை. சொத்து உரிமையாளர்கள் முயற்சி செய்து நகல் ஆவணங்களை மீண்டும் பெற்றுக்கொள்ள முடியும். மேலும் இங்கு நகல் சொத்து ஆவணங்களைப் பெறுவதற்கான வழிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளது. நகல் சொத்து ஆவணங்களை எப்போதும் சொத்து உரிமையாளர் பெறமுடியும். ஆனால், இதற்கு கணிசமான செலவு, முயற்சி மற்றும் நேரம் ஆகியவை தேவை.
எஃப் ஐ ஆர் தாக்கல் செய்தல்சொத்து ஆவணம் தொலைந்து விட்டால் முதல் வேலையாக போலீஸில் எஃப்ஐஆர் தாக்கல் செய்ய வேண்டும். இந்தப் புகார் பற்றிய நகலை சொத்து உரிமையாளர் பெற்றுக்கொள்ள வேண்டும். அடமான சொத்து ஆவணங்கள், வங்கி மூலம் இடந்தவறி வைக்கப்பட்டாலும் கூட, புகார் கொடுக்கப்பட வேண்டியது அவசியம்.
செய்திதாளில் விளம்பரம் செய்தல்சொத்து உரிமையாளர் சொத்து ஆவண இழப்புப் பற்றி உடனடியாக ஒரு ஆங்கில மற்றும் பிராந்திய மொழி தினப்பத்திரிகையில் விளம்பரம் செய்ய வேண்டும். சம்பந்தப்பட்ட சொத்தை வாங்க ஆர்வமுள்ள நபரும் இது பற்றி விளம்பரம் செய்யலாம்.
என்ஓசி மற்றும் நகல்
பங்குச் சான்றிதழ் பெறுவதற்கு விண்ணப்பித்தல் சொத்து ஆவணங்கள் தொலைந்து போனதற்கான எஃப்ஐஆர் காப்பி ஆதாரத்தைக் கொண்டு, ஹவுசிங் சொசைட்டியிலிருந்து, என்ஓசி மற்றும் டூப்பிளிகேட் ஷேர் சர்டிபிக்கேட் பெறுவதற்கு சொத்து உரிமையாளர் விண்ணப்பிக்க முடியும். சில வேளைகளில் வங்கிகள் என்ஓசி இல்லாமல் கடன் வழங்குவதில்லை. ஆகையால் கண்டிப்பாக நோ அப்ஜக்ஷன் சர்டிபிக்கேட் பெற்றுகொள்வது அவசியம்.
தொலைந்து போனதற்கான உத்தரவாதம் பெறுதல் சொத்து விபரங்கள், எஃப்ஐஆர் நம்பர் மற்றும் பத்திரிகையில் வெளியான விளம்பரம் ஆகியவை அடங்கிய ஒரிஜினல் சொத்து ஆவணங்கள் தொலைந்து போனதற்கான உத்தரவாதம் பெறுவதற்கான அனைத்து விபரங்களும் ஒரு ஸ்டாம்ப் பேப்பரில் இருக்க வேண்டும். இந்த ஆவணத்தில் கூறப்பட்டவை உண்மை என்பதை உறுதிபடுத்த, ஒரு நோட்டரி மூலம் இது கையெழுத்திடப்பட்டு பதிவு செய்யப்பட வேண்டும்.
விற்பனைப் பத்திர நகலைப் பெறுதல் பதிவாளர் அலுவலகத்துக்குச் சென்று தேவையான ஆவணங்களை சமர்ப்பித்து, வேண்டிய கட்டணத்தை செலுத்தினால், பதிவாளர் அலுவலகம் விற்பனைப் பத்திரத்தை வழங்கும். நியாயமாக ஒரு பழைய சொத்தாக இருந்தால், குறிப்பிடப்பட்ட சொத்தின் மீது எந்தவொரு வில்லங்கமும் இல்லை என்பதை உறுதிபடுத்த ஒருவர் உறுதி அறிக்கை பெற வேண்டும். 
இந்த உறுதி அறிக்கையும் பதிவாளர் அலுவலகத்திலிருந்து பெற முடியும். ஆகவே, ஒருவேளை நீங்கள் சொத்து ஆவணங்களை தொலைத்து விட்டால், தாமதிக்காமல் நகல் ஆவணங்களைப் பெறுவதற்கு மேற்குறிப்பிட்ட நடைமுறைகளைப் பின்பற்றுங்கள்.
********************************************************************************************************நன்றி : தினகரன் நாளிதழ் - 18.09.2013 

Wednesday, May 20, 2015

செல்போன் தொலைந்தால்


செல்போன் தொலைந்தால் என்ன செய்ய வேண்டும்?
*********************************************************

செல்போன்களின் எண்ணிக்கை, செல்போன் வாங்குவோரின் எண்ணிக்கை மற்றும் செல்போன் தயாரிப்பு நிறுவனங்களின் எண்ணிக்கை எப்படி நாளுக்குநாள் அதிகரித்து வருகிறதோ அதேபோலத்தான் செல்போன் தொலைப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகிறது. சில போன்கள் திருடப்படுகின்றன. சில செல்போன்களை நாமாகவே தொலைத்துவிடுகின்றோம். அப்படி செல்போன் தொலைந்துபோனால் உடனடியாக செய்யவேண்டியது என்ன என்பதையே இன்று நாம் பார்க்கவிருக்கிறோம். 

சாதாரண செல்போன் காணாமல் போனால் கூட அதிக கவலை இல்லை. ஸ்மார்ட்போன்கள் எனப்படுகின்ற அதிநவீன, விலையுயர்ந்த செல்போன் காணாமல்போனால் என்ன செய்ய? ஸ்மார்ட்போன் அனுகூலங்களை மட்டுமே பயன்படுத்திக் கொள்ள துடிப்பாக இருக்கும் பலரும் அது தரும் பாதுகாப்பு அம்சங்களை பயன்படுத்த தவறுகிறார்கள். தகவல்கள் கீழே!

செல்போன் பாதுகாப்பு: 
ஒரு ஸ்மார்ட்போனை வாங்கிய கையோடு அதன் 'செட்டிங்ஸ்' வழங்கும் அனைத்து பாதுகாப்பு அம்சங்களையும் ஆராய்ந்து பாதுகாப்பை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். இதற்கு விற்பனை பிரதிநிதி அல்லது அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் சென்டரில் தேவையான உதவி கிடைக்கும். பின் நம்பர், பேட்டர்ன் லாக் எனப்படும் பல கடவுச்சொற்கள் முறையானது உங்கள் செல்போன் அல்லது ஸ்மார்ட்போனை மற்றொருவர் பயன்படுத்துவதற்கெதிராக செயல்படும்.

மொபைல் டிராக்கிங்: 
மொபைல் டிராக்கிங் என்னும் வசதியை ஆக்டிவேட் செய்வதன் மூலம், உங்களது சிம்கார்டு தவிர்த்து வேறு சிம்கார்டுகளை உங்கள் மொபைலில் பொறுத்தினால்... அந்த சிம்கார்டு குறித்த விபரங்களை உங்கள் குடும்பத்தினர் செல்போனுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் தெரிவிக்குமாறும் அமைக்கலாம்.

மொபைல் இன்ஷூரன்ஸ்: 
பல ஆயிரங்கள் மதிப்புள்ள ஒரு ஸ்மார்ட்போனுக்கான இன்ஷூரன்ஸ் வெறும் நூற்று சொச்ச ரூபாய்கள் தான். போலீஸில் புகார் கொடுத்ததற்கான சான்றோடு, மொபைல் வாங்கியதற்கான பில், காப்பீட்டு விபரம் இவற்றை இணைத்து காப்பீட்டு நிறுவனத்திடம் நேரடியாகவோ, தபால் மூலமோ அணுகினால், தொலைந்த போனுக்கான காப்பீடு கிடைக்கும். 

சிம்கார்டை பிளாக் செய்க: 
மொபைல் காணாமல் போனது உறுதியானதும் நீங்கள் சந்தாதாரராக இணைப்பில் இருக்கும் செல்போன் நிறுவனத்தை தொடர்புகொண்டு உங்கள் சிம் கார்டை முடக்குங்கள். பின்னர் அருகிலிருக்கும் கிளையை அணுகி அதே எண்ணில் புதிய சிம்கார்டை, பேலன்ஸ் டாக் டைமுடன் பெற்றுக் கொள்ளுங்கள்.   

காவல் நிலையத்தில் புகார்: 
சிம்கார்டை பிளாக் செய்ததற்கும், புதிய சிம் வழங்கியதற்குமான அவர்கள் வழங்கும் அத்தாட்சி நகலோடு, செல்போன் பில் நகலையும் இணைத்து, காவல் நிலையத்தில் புகார் செய்யுங்கள். முடிந்தால் திருடுபோன செல்போனை கண்டுபிடித்து தருவார்கள் அல்லது சில நாட்களுக்குப் பின்னர், 'கண்டுபிடிக்க முடியவில்லை' என்பதற்கான சான்றை தருவார்கள். 

மொபைல் பேங்கிங் வசதியை முடக்குங்கள்:
 ஸ்மார்ட் போன் தொலைந்து போவதில், இன்னுமொரு பண இழப்பை தவிர்க்கும் நடவடிக்கை. மொபைல் பேங்கிங் செயல்பாட்டை முடக்குவதுதான். இதற்கு உங்கள் வங்கி சேவையாளர் மையத்தை கால்சென்டர் உதவியுடன் அணுகி மேற்படி இணைப்பில் இருக்கும் மொபைல் பேங்க் வசதியை ரத்து செய்யுமாறு கோரலாம்.


அந்தரங்க படங்களை தவிருங்கள்: 
தனிப்பட்ட மற்றும் அந்தரங்க படங்கள், வீடியோக்களை ஸ்மார்ட்போனில் இருப்பு வைப்பதை தவிர்க்க வேண்டும். அந்த மாதிரியான பர்சனல் படங்களை எடுக்காமல் தவிர்ப்பதே உத்தமம். ஸ்மார்ட் போனில் சேகரிக்கும் ஏனைய படங்கள், வீடியோக்களை அவை பதிந்திருக்கும் ஃபோல்டருக்கு தனியாக பாஸ்வேர்டு உபயோகிப்பதன் மூலம் பாதுகாக்கலாம். 

ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன்கள்: 
நீங்கள் பயன்படுத்தும் செல்போன் ஆன்ட்ராய்டு இயங்குதளத்தில் செயல்படுவதாக இருந்து, உங்கள் போனில் அதிநவீன வசதிகள் இல்லாவிட்டால் இலவசமாக கிடைக்கும் ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன்கள் பயன்படுத்தியும் பாதுகாக்கலாம்.

நன்றி : TAMIL GIZBOT

சாதாரண செல்போனாக இருந்தால்,

1. அது தொலைவதற்கு முன்பே,  அந்த போனில் இருந்து *#06# என்ற எண்ணுக்கு போன் செய்யுங்கள்.

2. உங்கள் செல்போனில் 15 டிஜிட் நம்பர் வரும்,

3. இந்த நம்பர் தங்கள் செல்போனின் IMEI (International Mobile station Equipment Identity) number ஆகும்.

4. இதனை தாங்கள் டைரியிலோ அல்லது வேறு இடத்திலோ குறித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

5.மொபைல் காணாமல் போனது உறுதியானதும் நீங்கள் சந்தாதாரராக இணைப்பில் இருக்கும் செல்போன் நிறுவனத்தை தொடர்புகொண்டு உங்கள் சிம் கார்டை முடக்குங்கள். பின்னர் அருகிலிருக்கும் கிளையை அணுகி அதே எண்ணில் புதிய சிம்கார்டை, பேலன்ஸ் டாக் டைமுடன் பெற்றுக் கொள்ளுங்கள்.  

6. அதன்பிறகு , உடனே இந்த (IMEI) நம்பரை  cop@vsnl.net - க்கு  மெயில் அனுப்ப வேண்டும்.

7.  தங்களது செல்போன் இருக்குமிடம் 24 மணி நேரத்துக்குள்  GPRS (General Pocket Radio Service) மூலம்  கண்டறியப்படும்.





Friday, April 10, 2015

கிரெடிட் கார்டு தொலைந்து போனால்


கிரெடிட் கார்டு தொலைந்து போனால் யாரை அணுகுவது?
********************************************************************நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையம்.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
தொலைந்துபோன கிரெடிட் கார்டு தொடர்பான விவரங்கள்.
எவ்வளவு கட்டணம்?
ரூ.100 (நிறுவனத்துக்கேற்ப வேறுபடும்).
கால வரையறை
15 வேலை நாட்கள்.

நடைமுறை :
கிரெடிட் கார்டு தொலைந்ததும் உடனடியாக வாடிக்கையாளர் சேவை மையத்துக்கு தகவல் அளித்து பரிவர்த்தனைகளை நிறுத்த வேண்டும். தொலைந்த கார்டுக்கு மாற்றாக வேறு கார்டு அளிக்கக் கோரினால் பதினைந்து வேலை நாட்களுக்குள் உங்களுக்கு அனுப்பி வைத்துவிடுவார்கள். அடையாளச் சான்று காண்பித்து வாங்க வேண்டும்.

பாஸ்போர்ட் தொலைந்து போனால் யாரை அணுகுவது?
**************************************************************மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்கள்.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
காவல் துறை சான்றிதழ், பழைய பாஸ்போர்ட் நகல், 
20 ரூபாய் முத்திரைத்தாளில் விண்ணப்பம்.
எவ்வளவு கட்டணம்?
ரூ.4,000.
கால வரையறை: 
இந்தியாவில் தொலைத் திருந்தால் 35-லிருந்து 40 நாட்கள்; வெளிநாட்டில் தொலைத்திருந்தால் அதிக காலம் எடுக்கும்.
நடைமுறை: 
பாஸ்போர்ட் தொலைத்த பகுதியில் உள்ள காவல் துறையில் புகார் அளித்து கண்டுபிடிக்கப்படவில்லை என்கிற சான்றிதழ் வாங்க வேண்டும். 20 ரூபாய் முத்திரைத்தாளில் தொலைந்த விவரங்களை பதிவு செய்துகொள்ள வேண்டும். இவற்றில் நோட்டரி பப்ளிக் ஒருவரின் கையெழுத்து பெற்று மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அதன் அடிப்படையில் அவர்கள் விசாரணை மேற்கொண்ட பிறகு நகல் பாஸ்போர்ட் அனுப்பி வைத்துவிடுவார்கள்.

மனைப் பட்டா தொலைந்து போனால் யாரை அணுகுவது?
*****************************************************************வட்டாட்சியர்.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்.?
நகல் பட்டா கோரும் விண்ணப்பம்.
எவ்வளவு கட்டணம்?
ரூ.20.
கால வரையறை: 
ஒரு சில நாட்களில் கிடைக்கக்கூடும்.
நடைமுறை: 
முதலில் தாசில்தாரிடம் மனு தர வேண்டும். அவர் பரிந்துரையின் பேரில் கிராம நிர்வாக அதிகாரி (வி.ஏ.ஓ.), வருவாய் ஆய்வாளரிடம் ஒப்புதல் பெற வேண்டும். இதன் அடிப்படையில் தாசில்தார் அலுவலகத்தில் விண்ணப்பித்தால் நகல் பட்டா கிடைத்துவிடும்.

டெபிட் கார்டு தொலைந்து போனால் யாரை அணுகுவது?
சம்பந்தப்பட்ட வங்கியின் கிளை மேலாளர்.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
கணக்குத் தொடர்பான விவரங்கள்.
எவ்வளவு கட்டணம்?
ரூ.100.
கால வரையறை:
 வங்கியைப் பொறுத்து ஓரிரு நாட்கள் அல்லது அதிகபட்சம் 15 நாட்கள்.
நடைமுறை: டெபிட் கார்டு தொலைந்தவுடன் அந்த வங்கி வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு தகவல் தெரிவித்து, அதன் மூலம் மோசடியான பரிவர்த்தனைகள் நடக்காதவாறு தடுக்க வேண்டும். அதற்குப் பிறகு சம்பந்தப்பட்ட கிளைக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தி புது டெபிட் கார்டு வழங்குமாறு கோர வேண்டும்.

பங்குச் சந்தை ஆவணம் தொலைந்து போனால் யாரை அணுகுவது?
**************************************************************************சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பதிவாளர்.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
காவல் துறை சான்றிதழ், பங்கு ஆவணத்தின் நகல் அல்லது ஃபோலியோ எண்.
எவ்வளவு கட்டணம்? 
தனியாக கட்டணம் கட்டத் தேவையில்லை; ஆனால், பங்குகளின் சந்தை மதிப்பிற்கு ஏற்ப முத்திரைத்தாள் கட்டணம் செலுத்த வேண்டும்.
கால வரையறை: 
விண்ணப்பித்த 45 நாட்களிலிருந்து 90 நாட்களுக்குள்.
நடைமுறை: 
முதலில் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு கடிதம் எழுதவும். இதன் அடிப்படையில் காவல் துறையில் புகார் அளித்து சான்றிதழ் வாங்க வேண்டும். பங்குகள் மதிப்பிற்கு ஏற்ப நிறுவனம் குறிப்பிடும் தொகைக்கு முத்திரைத்தாளில் ஒப்புதல் கடிதம் தர வேண்டும். சில நிறுவனங்கள் செய்தித்தாள்களில் விளம்பரம் வெளியிட வலியுறுத்தும்.

டிரைவிங் லைசென்ஸ் தொலைந்து போனால் யாரை அணுகுவது?
*************************************************************************மாவட்டப் போக்குவரத்து அதிகாரி.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
பழைய லைசென்ஸ் நகல் அல்லது எண்.
எவ்வளவு கட்டணம்?
கட்டணம் ரூ.315 (இலகுரக மற்றும் கனரக வாகனம்).
கால வரையறை: 
விண்ணப்பம் செய்தபிறகு அதிகபட்சமாக ஒரு வாரம்.
நடைமுறை:
 காவல் துறையில் புகார் தெரிவித்து, அவர்களிடம் சான்றிதழ் வாங்கியபிறகு மாவட்டப் போக்குவரத்து அதிகாரிக்கு விண்ணப்பம்.

கிரயப் பத்திரம்

தொலைந்து போனால் யாரை அணுகுவது?!
****************************************************************
பத்திரப்பதிவு துறை துணைப் பதிவாளர்.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
காவல் துறை கடிதம், பத்திரிகையில் வெளியிடப்பட்ட விளம்பரம், யாரிடமும் இருந்து ஆட்சேபனை வரவில்லை என்பதற்கான நோட்டரி பப்ளிக் ஒருவரின் உறுதிமொழி, சர்வே எண் விவரங்கள்.
எவ்வளவு கட்டணம்? 
ஆவணக் கட்டணம் 100 ரூபாய். இது தவிர, கூடுதலாக ஒவ்வொரு பக்கத்திற்கும் 20 ரூபாய்.
கால வரையறை: 
ஒரு சில நாட்களில் கிடைக்கக்கூடும்.
நடைமுறை: 
கிரயப் பத்திரம் தொலைந்த பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்து அவர்களிடமிருந்து சான்றிதழ் வாங்க வேண்டும். தொலைந்த விவரம் குறிப்பிட்டு பத்திரிகையில் விளம்பரம் செய்ய வேண்டும். இதற்குபிறகு சார்பு பதிவாளர் அலுவலம் செல்ல வேண்டும்.


இன்ஷூரன்ஸ் பாலிசி தொலைந்தால்



இன்ஷூரன்ஸ் பாலிசி தொலைந்து போனால் யாரை அணுகுவது?
**************************************************************************பாலிசியை விநியோகம் செய்த கிளையை.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
முகவரிச் சான்று, புகைப்பட அடையாளச் சான்றின் நகல்களில் நோட்டரி பப்ளிக் சான்றொப்பம் இடப்பட்டவை மற்றும் பிரீமியம் செலுத்தியதற்கான ஏதாவது ஒரு ரசீது நகல்.

எவ்வளவு கட்டணம்?
ஆவணங்கள் தயாரிப்புக் கட்டணமாக ரூ.75 கட்ட வேண்டும். இது தவிர, கவரேஜ் தொகையில் 1,000 ரூபாய்க்கு 20 காசு வீதம் கவரேஜ் தொகைக்கு ஏற்ப கட்டணம் செலுத்த வேண்டும்.

கால வரையறை: 
விண்ணப்பம் அளித்த 15 நாட்களுக்குள் நகல் ஆவணம் கிடைக்கக்கூடும்.

நடைமுறை:
 நகல் பாலிசி கோரும் விண்ணப்பக் கடிதம் அளித்தால் அதற்குரிய இரண்டு ஆவணங்கள் தருவார்கள். அதில் ஒரு ஆவணத்தை 80 ரூபாய் பத்திரத்தில் டைப் செய்துகொள்ள வேண்டும். இன்னொரு ஆவணத்தில் பாலிசி தொலைந்து போன விவரங்கள் கேள்வி பதில் வடிவில் கேட்கப்பட்டிருக்கும்; அதை பூர்த்தி செய்து நோட்டரி பப்ளிக் ஒப்புதலோடு, ஆவணங்களை இணைத்து தர வேண்டும்.

மதிப்பெண் பட்டியல் தொலைந்து போனால் யாரை அணுகுவது?
***********************************************************************பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரி.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
மதிப்பெண் பட்டியல் நகல், பள்ளி மாற்றுச் சான்றிதழ், 
கட்டணம் செலுத்திய ரசீது.

எவ்வளவு கட்டணம்? 
உயர்நிலைப் பொதுத்தேர்வு (10-ம் வகுப்பு) ரூ.105.
மேல்நிலை பொதுத்தேர்வு ( 2) பட்டியல் ரூ.505.

கால வரையறை: 
விண்ணப்பம் செய்ததிலிருந்து 60 நாட்கள்.
நடைமுறை: 
காவல் துறையில் புகார் அளித்து ‘கண்டுபிடிக்க முடியவில்லை’ என சான்றிதழ் வாங்கியபிறகு, முன்பு படித்த பள்ளி/நிறுவனத்தின் மூலம் விண்ணப்பம் வாங்கி அதை பூர்த்தி செய்து தாசில்தாரிடம் கையப்பம் வாங்க வேண்டும். அந்த விண்ணப்பத்தோடு ஒரு கடிதம் மற்றும் இணைப்புகள் சேர்த்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிக்கு அனுப்ப வேண்டும். இந்த விவரங்களை அரசிதழில் வெளியிட்டு அதன் அடிப்படையில் அவர் பள்ளித் தேர்வுத்துறை இயக்குநருக்கு அனுப்புவார். தனித் தேர்வர்கள் நேரடியாக தேர்வுத் துறை இயக்குநர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். பட்டம் மற்றும் அதற்கு மேற்பட்ட உயர் கல்விக்கு சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களை அணுக வேண்டும்.

ரேஷன் கார்டு தொலைந்து போனால் யாரை அணுகுவது?
****************************************************************
கிராமப்புறங்களில் வட்டார உணவுப் பொருள் வழங்கு அலுவலர்; நகர்ப்பகுதிகளில் உணவுப் பொருள் வழங்கு துறை மண்டல உதவி ஆணையர்.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
காணாமல் போன குடும்ப அட்டையின் நகல் அல்லது 
ஏதாவது ஒரு அடையாள அட்டை

எவ்வளவு கட்டணம்?
புதிய ரேஷன் கார்டு வாங்கும்போது ரூ.10 கட்ட வேண்டும்.
கால வரையறை: 
விண்ணப்பம் அளித்த 45 நாட்களுக்குள் கிடைத்துவிடும்.

நடைமுறை: 
சம்பந்தப்பட்ட அலுவலரிடத்தில் காணாமல் போன விவரத்தைக் குறிப்பிட்டு கடிதம் தந்து, அவர்கள் வழங்கும் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து தர வேண்டும். அவர்களின் விசாரணைக்குப் பிறகு புது குடும்ப அட்டை அனுப்பி வைக்கப்படும்.

பான் கார்டு தொலைந்து போனால் யாரை அணுகுவது?
*************************************************************


பான் கார்டு பெற்றுத் தரும் அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்டுகள்      அல்லது 
வருமான வரித்துறை.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் இரண்டு, அடையாளச் சான்று மற்றும் முகவரிச் சான்று நகல்கள்.

எவ்வளவு கட்டணம்?
அரசுக்குச் செலுத்த வேண்டிய ரூ.96 ரூபாய்.

கால வரையறை: 
விண்ணப்பித்தப் பிறகு 45 நாட்கள்.
நடைமுறை:
 பான் கார்டு கரெக்ஷன் விண்ணப்பம் வாங்கி அதில் தேவையான விவரங் களைக் குறிப்பிட்டு விண்ணப்பிக்க வேண்டும்.
 —

Monday, April 6, 2015

ஆதார் அட்டை தொலைந்துவிட்டால் ?

ஆதார் அட்டை தொலைந்துவிட்டால் ?
உங்கள் ஆதார் அட்டை தொலைந்து போனால் பயம் கொள்ளாதீர்கள். அதன் பிரதியை பெற்றுக்கொள்வதற்கு மீண்டும் விண்ணப்பம் செய்ய எளிமையான வழிகள் உள்ளது. 
இருப்பினும் ஆதார் அட்டையை பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும். 
அதற்கு காரணம் அதில் உள்ள உங்கள் தகவல்களை கொண்டு உங்கள் நிதி சார்ந்த தரவுகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம். 

உங்களுக்கு உங்களுடைய ஆதார் எண் நினைவிருந்தால் மற்றும் / அல்லது பதிந்த போது கொடுக்கப்பட்ட ஆதார் அட்டை ஒப்புகை சீட்டு உங்களிடம் இருந்தால், ஆன்லைன் மூலம் ஆதார் அட்டையின் பிரதியை எடுத்துக் கொள்ளலாம்.
தொலைந்த ஆதார் அட்டை அல்லது அதன் பிரதியை ஆன்லைன் மூலம்  விண்ணப்பிக்க கீழ்கூறிய வழிமுறைகளை பின்பற்றவும்: 
1. ஈ-ஆதார் ஆன்லைன் முகவாயிலுக்கு செல்லவும்.
2. ஆதார் ஒப்புகை சீட்டில் உள்ள பதிவீடு விவரங்களை (பதிவு எண் மற்றும் தேதி நேரம், குடியிருப்பவரின் பெயர், மற்றும் பின்கோட்) நிரப்ப வேண்டும்.
3. மாறாக, உங்களுக்கு உங்கள் ஆதார் அட்டை எண் தெரிந்திருந்தால்,
4. மேலே உள்ள "I have" தேர்வில் உள்ள "Aadhaar" என்ற ரேடியோ பட்டனை அழுத்தவும். 
5. நீங்கள் பதிந்துள்ள கைப்பேசி எண்ணில் ஓ.டி.பி. (ஒன் டைம் பின்) கடவுச்சொல் ஒன்றை குறுந்தகவல் மூலம் பெறுவீர்கள். 
6. கடவுச்சொல்லை உள்ளீடு செய்தவுடன் ஆதார் அட்டையின் பிரதியை தரவிறக்கம் செய்யும் தேர்வை நீங்கள் காணலாம். 
இந்த கோப்பு பி.டி.ஃஎப். வடிவத்தில் இருக்கும். மேலும் பாதுகாப்பிற்காக அது கடவுச்சொல் மூலமாக பாதுகாக்கப்பட்டிருக்கும். 
கடவுச்சொல் தெரியவில்லையே என பயப்பட வேண்டாம். உங்கள் பின் கோடே உங்கள் கடவுச்சொல்லாகும். அசலை போலவே அச்சிடப்பட்ட பிரதியும் அனைத்து இடங்களிலும் செல்லுபடியாகும்.