disalbe Right click

Showing posts with label CIVIL. Show all posts
Showing posts with label CIVIL. Show all posts

Saturday, September 17, 2016

ஒரே சொத்து, இரண்டு பத்திரம்


ஒரே சொத்து, இரண்டு பத்திரம் -  என்ன செய்ய வேண்டும்?

ஒரே சொத்தை இருவருக்கு விற்பது சட்டப்படி குற்றம் ஆகும். அவ்வாறு ஒருவர் விற்பனை செய்திருந்தால் இரண்டாவதாக செய்த விற்பனை செல்லாது. இருந்தாலும், அந்த சொத்தை முதலாவதாக வாங்கியவர் சட்டப்படி சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

அந்த இரண்டாவது பத்திரத்தை முறைப்படி  ரத்து செய்ய என்ன செய்ய வேண்டும்? 

இரண்டாவதாக பதிவு செய்யப்பட்டுள்ள பத்திரத்தின் பதிவுகளை ரத்து செய்யக் கோரி, பதிவுச்சட்டம், 1908 - பிரிவு 82ன் கீழ் பதிவுத்துறைத் தலைவர் அவர்களுக்கு முதலில்  உரிய ஆவண நகல்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

பதிவுத்துறைத் தலைவர் அவர்களின் உத்தரவின்படி தங்களின் விண்ணப்பமானது  தங்களது மாவட்டப் பதிவாளர்  (நிர்வாகம்) அவர்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்க அனுப்பப்படும்.

மாவட்டப் பதிவாளர் அவர்கள், சமபந்தப்பட்ட இரண்டு தரப்பினரையும் அழைத்து விசாரணை மேற்கொண்டு ஆவணங்களை ஆய்வு செய்வார். 

உங்களது புகாரில் உண்மை இருப்பது மாவட்டப் பதிவாளர் (நிர்வாகம்) அவர்களுக்கு தெரிய வந்தால், இரண்டாவதாக பதிவு செய்யப்பட்ட பத்திரஙளை ரத்து செய்ய சார்பதிவாளர் அவர்களுக்கு உத்தரவிடுவார்.

பதிவுச்சட்டம், 1908 - பிரிவு 83ன் கீழ் சட்டத்திற்கு புறம்பாக இரண்டு நபர்களுக்கு ஒரே சொத்தை விற்பனை செய்த நபர் மீது, காவல்நிலையத்தில் புகார் அளித்து சட்டப்படியான நடவடிக்கை எடுக்கவும் சார்பதிவாளர் அவர்களுக்கு அதிகாரம் உள்ளது.

தகவல் உதவிக்காக, நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் - 17.09.2016


Saturday, July 30, 2016

இரண்டாவது மனைவிக்கு சொத்தில் பங்கு


இரண்டாவது மனைவிக்கு சொத்தில் பங்கு
என்ன செய்ய வேண்டும்?

ஒருவருடைய முதல் மனைவி இறந்துவிட்ட பிறகோ அல்லது அவருடைய முதலாவது திருமணம் சட்டப்படி ரத்தான பிறகோ அவர் வேறோரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டால் அந்த இரண்டாவது திருமணமானது சட்டப்படி செல்லும்.
அவருடைய சட்டப்படியான மனைவி என்கிற அந்தஸ்தும் அந்தப் பெண்ணிற்கு கிடைக்கும். அந்த வகையில் அந்தப் பெண்ணிற்கு தன் கணவர் இறந்த பிறகு, கணவரின் மூதாதையர் சொத்தில் உரிமை தானாகவே வந்துவிடும்.
அதே நேரத்தில் முதல் மனைவி உயிருடன் இருக்கும் போது அவரை விவாகரத்து செய்யாமல் வேறொரு பெண்ணை ஒருவர் திருமணம் செய்து கொண்டால், அந்தப் பெண்ணிற்கு சட்டப்படி மனைவி என்ற அந்தஸ்தோ, கணவன்வழி சொத்தோ கிடைக்காது.
இருந்தாலும் சட்டப்படி செல்லாத அந்த திருமணம் மூலமாக அந்தப் பெண்ணிற்கு பிறக்கும் குழந்தைகள் அனைவருக்கும் கணவன்வழி சொத்தில் பங்குண்டு.
முதல் மனைவி வயிற்றில் பிறந்த குழந்தைகளுக்கு என்ன பங்கு வழங்கப்படுகின்றதோ, அதே அளவு இரண்டாவது மனைவி வயிற்றில் பிறந்த குழந்தைகள் அனைவருக்கு வழங்க வேண்டும்.

Friday, July 22, 2016

உறுத்துக்கட்டளை

உறுத்துக்கட்டளை - என்ன செய்ய வேண்டும்?
Injunction Order என்பதை உறுத்துக் கட்டளை என்று அழைக்கிறோம். உறுத்துக்கட்டளை என்றால் ஒருசில செயல்களை ஒரு குறிப்பிட்ட நபர் அல்லது ஒரு தரப்பினர் செய்யக் கூடாது என்றும், செய்ய வேண்டும் என்றும் அந்த நபர் அல்லது அந்த தரப்பினர்க்கு எதிராக வழங்கப் படுவதாகும்.
உறுத்துக்கட்டளையின் வகைகள் 
1) இடைக்கால (தற்காலிக) உறுத்துக் கட்டளை  (Interim Injunction  or  Temporary Injunction)
ஒரு வழக்கில் மறு உத்தரவு வரும்வரை நீதிமன்றம் இடும் கட்டளைக்கு இடைக்கால உறுத்துக்கட்டளை என்று பெயர்.
2) செயலுறுத்து கட்டளை  (Mandatory Injunction)
ஒரு செயலை ஒருவர் செய்ய வேண்டும் என்று  நீதிமன்றம் இடும் கட்டளைக்கு செயலுறுத்துக் கட்டளை என்று பெயர்.
3) நிலைக்கால உறுத்துக்கட்டளை    (Perpetual Injunction)
நிலைக் கால உறுத்துக் கட்டளை என்பது நிரந்தர உறுத்துக்கட்டளை ஆகும்.. சொத்து சம்பந்தமான பிரச்சனையில் இந்தக் கட்டளைக்கான தீர்ப்பாணையை சம்பந்தப்பட்ட நீதிமன்றம் வழங்கினால்தான், அதில் குறிக்கப்பட்ட சொத்து அதில் குறிப்பிடப்பட்டவருக்குச் சொந்தமானது என்று அர்த்தம்.
4) தடை உறுத்துக்கட்டளை     (Prohibitory Injunction) 
ஒரு செயலை ஒருவர் செய்யக்கூடாது என்று  நீதிமன்றம் இடும் கட்டளைக்கு தடையுறுத்துக் கட்டளை என்று பெயர்.
யாரெல்லாம் உறுத்துக் கட்டளை பெற முடியும்?
உறுத்துக் கட்டளையினை ஒருவர் நீதிமன்றத்தில் பெறுவதற்கு அவர் தொடுத்த அல்லது அவர்மீது வேறு எவராவது தொடுத்த  வழக்கு ஒன்று நிலுவையில் இருக்க வேண்டும். 
எந்த சூ்ழ்நிலையில் உறுத்துக்கட்டளை பெறமுடியாது?
⧭ வழக்கு தாக்கல் செய்யப்படாமல் இருந்தாலோ, அல்லது அந்த வழக்கு முடிவடைந்து விட்டாலோ உறுத்துக் கட்டளை பெறமுடியாது.
⧭ உறுத்துக்கட்டளையினை வழங்குவதற்கு நீதிமன்றம் ஒன்றுக்கு அதிகாரம் இல்லாத போது அந்த வழக்கில் உறுத்துக்கட்டளை வழங்கக்கூடாது.
⧭ பாகப்பிரிவினை சம்பந்தமான வழக்கில் உறுத்துக் கட்டளை பெற முடியாது.
⧭ ஒரு நிர்வாகமானது தன்னுடைய வேலையாளுக்கு எதிராக எடுக்கின்ற நடவடிக்கைக்கு எதிராக உறுத்துக் கட்டளை பெறமுடியாது.
⧭ வழக்கு ஒன்று நீதிமன்றத்தில் சரியான முறையில் தாக்கல்  செய்யாமல் இருக்கும்போது உறுத்துக்கட்டளை பெறமுடியாது.
நடைமுறைக்கு எப்போது வரும்?
எப்போது எதிர்தரப்பினருக்கு தெரியப்படுத்தப்பட்டதோ அப்போது முதலே உறுத்துக்கட்டளை நடைமுறைக்கு வரும்.
எப்போது முடிவுக்கு வரும்?
ஒரு வழக்கில் உறுத்துக்கட்டளை வழங்கப்பட்டு இருந்தால் அந்த வழக்கு முடிந்தவுடன் உறுத்துக்கட்டளையும் முடிவுக்கு வந்துவிடும்.
இதில் உள்ள சிக்கல்கள் 
வழக்கு ஒன்று நீதிமன்றத்தில் நடைபெறுகிறது. அந்த வழக்கில் உறுத்துக்கட்டளை பெற்றவர் முன்னிலை ஆக தவறிய காரணத்தால் வழக்கு தள்ளுபடி ஆகியிருந்தால், பெறப்பட்டிருந்த உறுத்துக் கட்டளையும் தள்ளுபடி ஆகிவிடும். அந்த வழக்கு மீண்டும் கோப்பில் எடுக்கப்பட்டால் உறுத்துக்கட்டளையையும் தானாக கோப்பில் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது.
உறுத்துக்கட்டளையை ஒருவர் மீறுவது தண்டணைக்குரிய குற்றமாகும்.
எதிர்தரப்பினர் உறுத்துக்கட்டளையை மீறுகிறார்கள் என்பதை, தக்க ஆதாரத்துடன் உறுத்துக் கட்டளையை பெற்றவர்தான் நீதிமன்றத்தில் முறையிட வேண்டும்.
----------------------புலமை வெங்கடாச்சலம் அவர்கள் எழுதிய நூலில் இருந்து----------

தடையாணை & உறுத்துக்கட்டளை


தடையாணை & உறுத்துக்கட்டளை என்ன செய்ய வேண்டும்?
Stay Order என்பதை தமிழில் தடையாணை என்று அழைக்கிறோம்.
தடையாணைகள் என்றால், ஒரு அதிகார அமைப்பையோ அல்லது கீழமை நீதிமன்றங்கள் வழங்கிய உத்தரவினை செயல்படுத்தக் கூடாது என்பதற்கு மேலமை நீதிமன்றம், உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் தடை செய்து பிறப்பிக்கின்ற ஒரு உத்தரவாகும்.
Injunction Order என்பதை உறுத்துக் கட்டளை என்று அழைக்கிறோம்.
உறுத்துக்கட்டளை என்றால் ஒருசில செயல்களை ஒரு
குறிப்பிட்ட நபர் அல்லது ஒரு தரப்பினர் செய்யக் கூடாது என்று அந்த நபர் அல்லது
அந்த தரப்பினர்க்கு எதிராக வழங்கப் படுவதாகும்.