disalbe Right click

Showing posts with label மதிப்பு மிக்கவர்கள். Show all posts
Showing posts with label மதிப்பு மிக்கவர்கள். Show all posts

Friday, December 22, 2017

கக்கன்

எளிமைக்கு உதாரணமாய் திகழ்ந்த கக்கனின் நினைவு தினம் -
டிசம்பர் 23: கக்கன் என்கிற அரிதிலும் அரிதான அரசியல் தலைவர் மறைந்த தினம்...
தும்பைப்பட்டி எனும் கிராமத்தில் ஒடுக்கப்பட்ட வகுப்பில் தோன்றினார் இவர். சேரிப்பகுதியின் கோயிலுக்கு கக்கன் அவர்களின் தந்தைதான் பூசாரி. அந்த கோயிலில் பெருக்கி,சுத்தம் செய்து பூஜையில் ஈடுபடுகிற பழக்கம் கக்கன் அவர்களுக்கு இளம் வயதிலே இருந்தது.
பள்ளிக்கல்வியை படிக்க அமெரிக்க மிஷன் வருடத்திற்கு அவருக்கு பதினெட்டு ரூபாய் உதவித்தொகை தந்தது. அதற்காக மிஷனுக்கு சொந்தமான நிலத்தில் கற்கள் பொறுக்கி,முட்கள் நீக்கி வேலை பார்த்தார். பள்ளி இறுதி தேர்வில் ஆங்கிலத்தில் ஒரே ஒரு மதிப்பெண்ணில் தோல்வியுற்றார். பள்ளிக்கூடத்தில் கள்ளுக்கடை மறியலில் கலந்து கொண்டு கைது செய்யப்பட்ட தொண்டர்கள் உறங்க பள்ளிக்கூட பகுதிக்கு வருகிற பொழுது காந்தியின் போராட்ட முறைகளை அறிந்து கொண்டார் இவர். 1932லேயே சொர்ணம் பார்வதி என்கிற கிறிஸ்துவ பெண்ணை தோழர் ஜீவானந்தம் தலைமையில் திருமணம் செய்து கொண்டார்.
வைத்தியநாத ஐயரின் வழிகாட்டுதலில் எண்ணற்ற போராட்டங்களில் பங்கு கொண்டார். சிறை சென்று கடுமையான தண்டனைகளுக்கு உள்ளாகவும் செய்தார். ஒரு முறை சவுக்கால் அடித்தும்,குதிரையின் கீழே படுக்க வைத்தும் கொடுமைப்படுத்துகிற அளவுக்கு தீர்க்கமாக விடுதலைப்போரில் பங்கு கொண்டார். வைத்தியநாத ஐயருடன் இணைந்து மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் ஆலய நுழைவு போராட்டத்தை வெற்றிகரமாக நிகழ்த்தினார். 1945-ல் திருப்பரங்குன்றத்தில் காங்கிரஸ் ஊழியர் மகாநாட்டில் காமராஜரை சந்தித்த பொழுது இருவரும் நெருக்கமானார்கள்.
நாடாளுமன்ற உறுப்பினர்சட்ட சபை உறுப்பினர்அரசியல் அமைப்பு குழு உறுப்பினர் என்று பல்வேறு பதவிகள் வகித்த இவர், காமராஜர் மற்றும் பக்தவச்சலம் ஆகியோர் அமைச்சரவையில் பொறுப்பேற்று கொண்ட துறைகள் என்னென்ன தெரியுமா ? அமைச்சரவையில் வேளாண்மை, உணவு, சிறுபாசனம், மதுவிலக்கு, கால்நடை, தாழ்த்தப்பட்டோர் நலன்,பொதுப்பணி. உள்துறை, காவல்துறை, நீதித்துறை, சிறைத்துறை ஆகியன !
அரசு வாகனத்தில் குடும்ப உறுப்பினர்கள் போக அனுமதிக்க மாட்டார். மனைவி ஒரு நாள் அரசு ஊழியரை மண்ணெண்ணெய் வாங்கிவர அனுப்பிய பொழுது கடுமையாக கண்டித்தார். அவரின் தம்பி விசுவநாதன் வேலையில்லாமல் இருந்த பொழுது சிபாரிசு செய்ய மறுத்தார் அவர். அரசு அதிகாரி லயோலா கல்லூரிக்கு அருகில் அவரின் தம்பிக்கு மனை ஒதுக்கிய பொழுது அந்த கோப்பை வாங்கி கிழித்துப்போட்டு விட்டு ,”எத்தனையோ ஏழைகள் மழைக்கு ஒதுங்க கூட இடமில்லாமல் நோகிறார்கள். இப்படி ஒரு இடம் தேவையா ?" எனக்கேட்டார். விசுவநாதனுக்கு காவல் துறை வேலை கிடைத்த பொழுது ,”இது நேர்மையாக கிடைத்திருந்தாலும் என் சிபாரிசால்தான் கிடைத்தது என்பார்கள் ! இந்த வேலைக்கு இவன் வேண்டாம்என்று தடுத்துவிட்டார்.
இவர் அமைச்சராக இருந்த காலத்தில்தான் மேட்டூர், வைகை அணைகள் கட்டப்பட்டன. மதுரை வேளாண்மைக் கல்லூரியை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றினார். தாழ்த்தப் பட்டோர் நலத்துறையின் கீழ் ஆயிரக்கணக்கான பள்ளிகளை திறந்தார். அம்மக்களுக்கு வீட்டு வசதி வாரியம் அமைத்து வீடுகள் கட்டிகொடுத்தது ஒரு புறம் என்றால்லஞ்ச ஒழிப்பு துறையை தமிழகத்தில் கொண்டு வந்ததும் கக்கனே ! கலவரங்களை தடுக்க ரகசிய காவலர் முறையைக்கொண்டு வந்தார்.
அரசு விடுதியில் தங்கபோனார் கக்கன். அங்கே வேறொரு அதிகாரி தங்கியிருந்தார். ஒன்றுமே சொல்லாமல் நண்பரின் வீட்டில் போய் தங்கிக்கொண்டார். அறுபத்தி ஏழு தேர்தலில் கடன் வாங்கி போட்டியிட்டார்.
தேர்தலில் தோற்றுப்போனார். அவருக்கு நிதி திரட்டி இருபதாயிரம் தந்தார்கள். அதை முழுக்க தேர்தல் செலவுகளை அடைக்க கொடுத்துவிட்டு அரசு வாகனத்தை தொடாமல் அரசு பேருந்துக்கு காத்திருந்து வீட்டுக்கு போனார்.
சொந்த மகளை கான்வென்ட் பள்ளிகளில் சேர்க்காமல் அரசு பள்ளியில் படிக்க வைத்தார் ,”எனக்கு எங்கே அங்கே எல்லாம் படிக்க வைக்க சக்தியிருக்கு ?” என்று கேட்டார். விடுதலைப்போரில் ஈடுபட்டதற்காக தனியாமங்கலத்தில் அவருக்கு தரப்பட்ட நிலத்தை வினோபாவின் பூமிதான இயக்கத்துக்கு தந்துவிட்டார் அவர். அமைச்சர் பதவியை விட்டு விலகியதும் வாடகை வீடு தேடி தெருத்தெருவாக அலைந்தார்
முடக்கு நோயால் பாதிக்கப்பட்டவர் கோட்டக்கல் சித்த மருத்துவமனையில் சேர்ந்தார். அங்கே பணம் செலுத்த முடியாத நிலையில் நோய் தீராமலே மதுரை அரசு மருத்துவமனையில் சேர்ந்தார். எம்.ஜி.ஆர் மதுரை முத்துவை பார்க்க வந்தவர் செய்தி கேட்டு இவரைக்கண்டு கலங்கினார் ,”நல்ல சிகிச்சைக்கு ஏற்பாடு செய்கிறேன் !” என்று அவர் கேட்டுக்கொள்ள ,”நீங்கள் பார்க்க வந்ததே போதும் !” என்று இயல்பாக மறுத்தார். யாருமே கண்டுகொள்ள ஆளில்லாமல் மரணித்துப்போனார். சொத்தே இல்லாமல் நாட்டுக்கே சொத்தாகிப்போன அவரின் நினைவு தினமின்று.
-பூ.கொ.சரவணன்
நன்றி : விகடன் செய்திகள் - 23/12/2014




Tuesday, December 5, 2017

டாக்டர் C.சைலேந்திரபாபு, IPS.,

டாக்டர் C.சைலேந்திரபாபு, IPS.,
தமிழ்நாட்டில் எனக்குப் பிடித்த காவல்துறை அதிகாரிகளில் இவர் முதன்மையானவர். இன்னும் இவரை நான் நேரில் சந்தித்ததில்லை. இவரைப் பற்றி பத்திரிக்கைகளில் படித்துள்ளேன். ஊடகங்களில் பார்த்துள்ளேன். நேர் கொண்ட பார்வை, தெளிவான, புன்னகை மாறாத பேச்சு, மற்றவர்கள் முன்னேற வேண்டும் என்று இவர் செய்யும் செயல்கள், எழுதிய புத்தகங்கள் இவை அனைத்தும் இவரை பார்க்காமலேயே மிகுந்த மரியாதையை என்னுள் ஏற்படுத்தியது. நான் அறிந்து கொண்ட இந்த மாமனிதரைப் பற்றிய செய்திகள் உங்களுக்காக.
இளமைப் பருவம்
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த இவர் குழித்துறையில் 05.06.1962 அன்று பிறந்தார். இவருடன் பிறந்தவர்கள் மொத்தம் எட்டு பேர்கள். இவர் ஆறாவது குழந்தை. ஏழாம் வகுப்பு வரை சராசரி மாணவனாக இருந்த இவரை சிறந்த மாணவனாக மாற்றியது ஆசிரியை சதானந்தவள்ளி அவர்களின் கண்டிப்புதான்.

Image result for சைலேந்திர பாபு ஐ.பி.எஸ்.,

இவர் ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது ஆங்கில ஆசிரியராக இருந்த திரு ராமசாமி அவர்கள் இவரது வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியவர். ஆங்கில மொழியில் இவருக்குள்ள  புலமையைக் கண்டு வியந்து, இவரை தேசிய மாணவர் படை(NCC)யில்  சேர்த்து 100 மாணவர்களுக்குத் தலைவனாக நியமித்து முக்கிய பொறுப்பைக் கொடுத்தார்.  காவல்துறையில் ஈடுபாடு வருவதற்கு அவரே முக்கியக் காரணம். குழித்துறை - விளவங்கோடு அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்தார்.   
கல்லூரி வாழ்க்கை
கோவையில் உள்ள வேளாண் பல்கலைக் கழகத்தில் விவசாயப் படிப்பில் முதுகலைப் பட்டம் பெற்றவர். சட்டத்தின் மீதுள்ள ஆர்வம் காரணமாக அண்ணாமலைக் கழகத்தில் பொது சட்டம் பிரிவில் இளங்கலை பட்டமும், மக்கள் தொகைக் கல்வி பிரிவில் முதுகலையும் படித்துள்ளார். அதன் பின்னர், “குழந்தைகள் காணாமல் போவதற்கான காரணங்களும் அதன் விளைவுகளும்” என்ற தலைப்பில் ஆய்வு செய்து பி.ஹெச்.டி. பட்டம் பெற்றுள்ளார். சமீபத்தில் பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் MBA பட்டமும் பெற்றுள்ளார். 
இவருக்குப் பிடித்த செயல்கள்
இளைஞர்களோடு பேசுவதும், கலந்து உரையாடுவதும் அவர்களை சரியான இலக்கை நோக்கிய லட்சியம் கொண்டவர்களாக   உருவாக்குவது இவருக்கு மிகவும் பிடிக்கும். 

Image result for சைலேந்திர பாபு ஐ.பி.எஸ்.,

சாதிக்க வேண்டும் என்ற ஆசையை மாணவர்கள் மனதில் ஏற்படுத்துவது இவருக்கு மனநிறைவைத் தருகின்ற செயலாகும். 
கல்லூரிகளில் பேச
கல்லூரியில் மாணவ, மாணவியர்கள் மத்தியில் பேச வேண்டும் என்றால் இவரை அழையுங்கள். நாம் மதிக்கின்றவர் பேசுவதையே ஏற்க, நமது மனது எப்போதும் விரும்பும். 
இவரது பணிகள்
முதலில் இவர்  திருவனந்தபுரத்தில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அதிகாரியாகத்தான் வேலை பார்த்துள்ளார். அதன்பிறகே இந்திய காவல் பணிக்குத் தேர்வாகி, ஹைதராபாத்தில் உள்ள தேசிய காவல்துறை அகடாமியில் பயிற்சி பெற்றுள்ளார். பயிற்சிக்குப் பிறகு கோபிசெட்டி பாளையம், சேலம், தர்மபுரி ஆகிர ஊர்களில் காவல்துறை துணை கண்காணிப்பாளராகவும், திண்டுக்கல், செங்கல்பட்டு, சிவகங்கை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் காவல்துறை  கண்காணிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். 
Image result for சைலேந்திர பாபு ஐ.பி.எஸ்.,
மனித நேயம் மிக்கவர்
கடந்த 2014ம் ஆண்டு ஒரு சாலை விபத்து நடந்தது. அந்த இடத்திற்கு வந்த காவல்துறை அதிகாரிகள் விபத்து அடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்ப ஆம்புலன்ஸிற்காக காத்துக் கொண்டு இருந்தனர். அங்கு வந்த திரு சைலேந்திரபாபு அவர்கள் எப்போது ஆம்புலன்ஸ் வருவது? எப்போது இவர்களை காப்பாற்றுவது? என்று யாரையும் எதிர்பார்க்காமல் அவர்களை தானே தூக்கி, தனது வாகனத்தில் வைத்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அந்த அளவுக்கு மனித நேயம் மிக்கவர் இவர்.   
அஷ்ரப்: திரு.சைலேந்திர பாபு.ஐ.பி.எஸ்
மண்டல ஐ.ஜி.
சென்னை அடையார் துணை கமிஷனராக சிலகாலம் பணியாற்றிவிட்டு, அதன்பிறகு விழுப்புரம் பகுதியில் துணை இன்ஸ்பெக்டர் ஜெனரலாகவும்,  சென்னை காவல்துறையில்  இணை கமிஷனராகவும்  பணியாற்றியுள்ளார். அதன்பிறகு திருச்சி டி.ஐ.ஜி.ஆகவும், கரூரில் உள்ள தமிழ்நாடு காகித ஆலையில் தலைமை விஜிலென்ஸ் அதிகாரியாகவும், சிறப்புப் படையின் இன்ஸ்பெக்டர் ஜெனரலாகவும் பணியாற்றியுள்ளார். 
அதன்பிறகு கோவை மாநகர கமிஷனராக பணியாற்றியுள்ளார். 
தற்போது காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய ஆறு மாவட்டங்களை உள்ளடக்கிய தமிழ்நாடு வடக்கு மண்டலத்திற்கு ஐ.ஜி.யாக சிறப்பாக பணியாற்றி வருகிறார்.
எந்தப் பதவியில் இருந்தாலும், போலீஸ் என்ற பொறுப்பு என்பது முழுமையானதாக இருக்க வேண்டும் என்ற கருத்தில் இருந்து இவர் எப்போதும் மாறியதில்லை. தான் ஏற்றுக் கொண்ட பதவிகளுக்கு சிறப்பையே  இவர் அளித்து வருகிறார்.
 இவர் பெற்ற விருதுகள்
கடமை உணர்வுக்கான இந்திய குடியரசுத் தலைவரின் விருது, சிறப்புப் பணிக்கான இந்திய குடியரசுத் தலைவரின் விருது  உயிர் காத்த செயலுக்காக இந்தியப் பிரதமரின் விருது, வீரதீரச் செயலுக்காக தமிழக முதல்வரின் விருது 

Image result for சைலேந்திர பாபு ஐ.பி.எஸ்.,
எழுத்தாளராக
எழுத்தின் மீது கொண்ட ஆர்வத்தால், உடலினை உறுதி செய், நீங்களும் ஐ.பி.எஸ். அதிகாரி ஆகலாம்!, அமெரிக்காவில் 24 நாட்கள், உனக்குள் ஒரு தலைவன்,  என்ற தலைப்புகளில் தமிழிலும், 
You too can become an IPS officer, Principles of Success in Interview, A guide to health and happiness, Boys and Girls be ambitious என்ற தலைப்புகளில் ஆங்கிலத்திலும் புத்தகங்கள் எழுதியுள்ளார்.
அழைக்கிறது காவல்துறை
இப்போது கூட காவல்துறை பணியில் சேர்வது எப்படி? என்பதை விளக்கும் விதமாக தினமலர் நாளிதழில், “அழைக்கிறது காவல்துறை” என்ற தலைப்பில் தொடர்ந்து எழுதி வருகிறார்.
இவரது பார்வையில், இன்றைய இளைஞர்கள் எப்படி இருக்கவேண்டும்? 
சமுதாயமும், குடும்பமும் நம்மிடம் என்ன எதிர்பார்க்கிறது என்பதை இளைஞர்கள் அறிந்து கொள்ள வேண்டும். செய்கின்ற செயல்கள் ஒவ்வொன்றையும் நாம் என்ன செய்கின்றோம், எதற்காக செய்கின்றோம்? என்பதை அறிந்து செய்ய வேண்டும். தன்னிடம் உள்ள பண்புகளை ஆராய்ந்து அவற்றில் உள்ள குறைகளை களைந்து சரிசெய்து கொள்ள வேண்டும். ஏதாவது ஒரு துறையில் ஒவ்வொரு இளைஞனும் சிறந்து விளங்க வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு இந்த சமுதாயத்தில் மதிப்பு கிடைக்கும். கிடைக்கின்ற வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளாதவர்களை மன்னிக்க முடியாது.
இணையதளம் மூலமாகவும் சேவை  
இளைஞர்களுக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்து வருகின்ற இந்த இனிய மனிதர் இணையதளம் மூலமாகவும் சேவை செய்து வருகிறார். இந்த இணையதளத்தில் உங்களது குறைகளைக் கூறி நிவர்த்தி பெறலாம். இவரது இணையதளம்
*******************************************அன்புடன் செல்வம் பழனிச்சாமி -05.12.2017