disalbe Right click

Showing posts with label இழப்பீடு. Show all posts
Showing posts with label இழப்பீடு. Show all posts

Saturday, March 7, 2020

விபத்து வழக்குகளில் மேல்முறையீடு - நிறுவனங்கள் என்ன செய்ய வேண்டும்?

விபத்து வழக்குகளில் மேல்முறையீடு - நிறுவனங்கள் என்ன செய்ய வேண்டும்?
இழப்பீடு தொகையை டெபாசிட் செய்யவில்லை என்றால் மேல்முறையீடு மனுவை விசாரணைக்கு ஏற்க கூடாது
ஆணையங்களுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!
சென்னை: விபத்து இழப்பீடு வழக்குகளில் அறிவிக்கப்படும் இழப்பீடு தொகையை பாதிக்கப்பட்டவரின் கணக்கில் டெபாசிட் செய்யவில்லை என்றால் நிறுவனங்களின் மேல்முறையீடு வழக்குகளை பட்டியலிடக்கூடாது என்று உயர் நீதிமன்ற பதிவகம் மற்றும் மேல்முறையீடு ஆணையங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது
  • கடந்த 2007ம் ஆண்டு நடந்த ஒரு விபத்தில் 22 வயது இளைஞர் பலியானார்
  • இதையடுத்து, அவரது பெற்றோர் தங்களுக்கு இழப்பீடு வழங்கக்கோரி தொழிலாளர் துணை ஆணையரிடம் முறையிட்டனர்
  • அவர்களின் மனுவை விசாரித்த துணை ஆணையர் இளைஞர் பணியாற்றிய நிறுவனம் ₹2 லட்சத்து 93 ஆயிரத்து 502 இழப்பீடு தருமாறு உத்தரவிட்டார்
  • இந்த உத்தரவை எதிர்த்து அந்த நிறுவனத்தை சேர்ந்த நஸர் அக்தர் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
  • இந்த மனு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது
மனுவை விசாரித்த நீதிபதி அளித்த உத்தரவு வருமாறு
  • இந்த வழக்கில் விபத்தில் பலியான இளைஞரின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்குமாறு தொழிலாளர் துணை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்
  • ஆனால், அந்த இழப்பீடு தொகையை சம்பந்தப்பட்ட நிறுவனம் டெபாசிட் செய்யவில்லை
  • இழப்பீடு தொகையை டெபாசிட் செய்யாமல் நிறுவனங்களோ, இன்சூரன்ஸ் நிறுவனங்களோ மேல்முறையீடு செய்யக்கூடாது
  • இழப்பீடு தொகையை டெபாசிட் செய்யாமல் நிறுவனங்களின் பின்னால் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் ஒழிந்துகொள்ளக்கூடாது.
  • எனவே, இந்த வழக்கில் தொழிலாளர் துணை ஆணையரின் உத்தரவின்படி இழப்பீடு தொகையை 3 மாதத்திற்குள் விபத்து நடந்த நாளிலிருந்து ஆண்டுக்கு 12 சதவீத வட்டியுடன் மேல் முறையீடு செய்பவர் டெபாசிட் செய்ய வேண்டும்.
  • மேல்முறையீடு மனு தாக்கல் செய்யும்போது இழப்பீடு தொகை டெபாசிட் செய்யப்பட்டுள்ளதை உயர் நீதிமன்ற பதிவகம் உறுதி செய்ய வேண்டும்
  • அதன் பிறகே மேல்முறையீடு வழக்கை பட்டியலிட வேண்டும்
  • இழப்பீடு தொகையை டெபாசிட் செய்யவில்லை என்றால் மேல்முறையீடு வழக்குகளை நீதிமன்றங்கள் மற்றும் மேல் முறையீடு ஆணையங்கள் விசாரிக்க கூடாது
இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
நன்றி : தினகரன் நாளிதழ் - 08.03.2020

Thursday, September 28, 2017

தவறான சிகிச்சை - ரூ.1,55,000/- இழப்பீடு

தவறான சிகிச்சை - ரூ.1,55,000/- இழப்பீடு
தவறான சிகிச்சை அளித்த மருத்துவமனை ரூ.1.55 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு
சென்னை: தவறான சிகிச்சை அளித்த மருத்துவமனை, 1.55 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க, நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது
சென்னை மாவட்ட, தெற்கு நுகர்வோர் நீதிமன்றத்தில், அரும்பாக்கத்தைச் சேர்ந்த, ஸ்ரீதேவி தாக்கல் செய்த மனு
என் மகள் நித்யஸ்ரீ, நேரு விளையாட்டரங்கில் விளையாடியபோது, சறுக்கி விழுந்ததால், இடது கை எலும்பு முறிந்தது. சேத்துப்பட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில், அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஒரு லட்சம் ரூபாய், மருத்துவ செலவு ஆனது.
'உரிய சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது; சில நாட்களில் சரியாகிவிடும்' என, மருத்துவர்கள் தெரிவித்து, நித்யஸ்ரீயை, 'டிஸ்சார்ஜ்' செய்தனர்.
ஆனால், தவறான சிகிச்சையால், வீக்கம், வலி குறையவில்லை. இதனால், மன உளைச்சலுக்கு ஆளானோம். மருத்துவ செலவுடன், உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கோரியிருந்தார்.
வழக்கு விசாரணையில், 'பாதிப்பிற்கு, சிகிச்சை பெற்றவரின் கவனக்குறைவே காரணம். சிகிச்சைக்கு பின், கையை கவனமாக வைத்துக் கொள்ளவில்லை. எங்கள் சேவையில் குறைபாடில்லை. வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்' என, மருத்துவமனை நிர்வாகம் வாதிட்டது.
நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
மருத்துவமனை சேவையில் குறைபாடு உள்ளது. பாதிப்படைந்த மனுதாரருக்கு, மருத்துவ செலவு தொகை, ஒரு லட்சம் ரூபாயுடன், சேவை குறைபாட்டிற்கு, 25 ஆயிரம் ரூபாயும், இழப்பீடு, 25 ஆயிரம் ரூபாயும், வழக்கு, செலவு, 5,000 ரூபாய் என, மொத்தம், 1.55 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும்.
இவ்வாறு உத்தர விடப் பட்டுள்ளது.
நன்றி : தினமலர் நாளிதழ் - 29.09.2017