disalbe Right click

Showing posts with label லஞ்சம். Show all posts
Showing posts with label லஞ்சம். Show all posts

Sunday, December 20, 2020

வேலியே பயிரை மேய்ந்தாலும், சட்டம் சும்மா விடாது!

தவறான வழி தவறான முடிவையே தரும்! 
கடந்த 2010ம் ஆண்டில் நடந்த சம்பவம் இது.
மதுரை அண்ணா நகரில் வசித்து வந்த மேலூர் அரசு சித்த மருத்துவர் திரு அசோக் குமார் என்பவர் ஏராளமாக லஞ்சம் வாங்கி வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்களை சேர்த்து வருவதாக வந்த புகார்களைத் தொடர்ந்து அவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத் துறை உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
இதனைத் தொடர்ந்து, மதுரை லஞ்ச ஒழிப்புத் துறை ஆய்வாளர் திரு பெருமாள் பாண்டியன் என்பவர் அசோக் குமார் மீது வழக்குப் பதிவு செய்துள்ளார்.
விசாரணைக்கு மருத்துவர் அசோக் குமாரை அழைத்த ஆய்வாளர் பெருமாள் பாண்டியன், அசோக் குமாருக்கு சாதகமாக அறிக்கை தயாரிக்க ரூ 12 லட்சம் லஞ்சம் தர வேண்டும் என்றும், அப்படி பணம் தனக்கு கொடுக்காவிட்டால் அவருக்கு எதிரான ஒரு அறிக்கையைத் தயார் செய்து அனுப்பி லஞ்ச வழக்கில் சிக்க வைத்து சிறைக்கு அனுப்பி விடுவதாகவும் அவரை மிரட்டியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து, அந்த வழக்கிலிருந்து தப்புவிக்க இருவரும் பேரம் பேசி இறுதியில் ஏழு லட்ச ரூபாய் என்று முடிவு செய்துள்ளனர். அதற்கு அச்சாரமாக ரூ 1,20,000 ஐ தன்னுடைய நம்பிக்கைக்குரிய புரோக்கர் நமச்சிவாயம் என்பவரிடம் கொடுத்து விடுமாறு ஆய்வாளர் பெருமாள் பாண்டியன் மருத்துவர் அசோக் குமாரிடம் கூறியுள்ளார்.
விதியின் விளையாட்டு ஆரம்பம்!
மருத்துவர் அசோக்குமாருக்கு லஞ்சம் கொடுக்க பிடிக்கவில்லை. அதனால், அவர் உடனடியாக அப்போதைய மதுரை லஞ்ச ஒழிப்பு துறை துணை கண்காணிப்பாளரான திரு மாரிராஜன் அவர்களிடம் புகார் செய்தார்.
அவர் பெரும் அதிர்ச்சி அடைந்தார். முதலில் அது உண்மையான புகார்தானா? என்பதை சில ஆய்வுகள் மூலம் அறிந்து கொண்டார்.
என் வழி தனி வழி!
தனது துறையைச்சேர்ந்த அதிகாரி ஒருவர் மீது புகார் வந்த போதிலும், புறவழியை நாடாமல், சட்டத்தின் வழியில் நடந்தார். உடனடியாக லஞ்ச ஒழிப்பு துறை உயரதிகாரிகளுக்கு மாரிராஜன் தகவல் தெரிவித்துள்ளார். மேலதிகாரிகளின் உத்தரவின் பேரில் திருச்சி லஞ்ச ஒழிப்புத் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் மதுரைக்கு ரகசியமாக வந்து சேர்ந்தனர்.
அவர்களது வழிகாட்டுதலின் பேரில் மருத்துவர் அசோக் குமார் போனில் தொடர்பு கொண்டு பணம் தருவதற்கு தான் தயாராக பணத்துடன் இருப்பதை ஆய்வாளர் பெருமாள் பாண்டியனிடம் தெரிவித்துள்ளார்.
வலையில் சிக்கிய ஆய்வாளர்
தன்னைச் சுற்றி வலை பின்னப்பட்டுக் கொண்டிருப்பதை கொஞ்சம்கூட அறியாமல் கூலாக, பெருமாள் பாண்டியனும் அந்தப் பணத்தைப் புரோக்கர் நமச்சிவாயத்திடம் கொடுத்து விடும்படி கூறியுள்ளார்.


அடுத்து லஞ்ச ஒழிப்புத் துறையினரால் ரசாயனப் பவுடர் தடவிய பணக் கட்டுகள் தயார் செய்யப்பட்டது. அந்தப் பணக்கட்டுகளை புரோக்கர் நமச்சிவாயத்திடம் டாக்டர் அசோக் குமார் கொடுக்கும் போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.


இந்த நிகழ்ச்சிகள் எதுவும் ஆய்வாளர் பெருமாள் பாண்டியனுக்கு தெரியாது. சினிமாவில் வருவது போல, பின் புரோக்கர் நமச்சிவாயத்தைப் அவரிடம் பேச வைத்த லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள், பெருமாள் பாண்டியனுக்காக புரோக்கர் நமச்சிவாயம் பணக்கட்டுகளை பெற்றதை பதிவு செய்து, அதனை உறுதி செய்து கொண்டனர்.

அதன் பிறகு ஆய்வாளர் பெருமாள் பாண்டியன் வீட்டுக்குச் சென்று லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் அவரிடம் ஆதாரங்களுடன் விசாரணை நடத்தியதில் தான் லஞ்சம் கேட்டது உண்மைதான் என்பதை பெருமாள் பாண்டியன் வேறு வழியின்றி ஒத்துக் கொண்டார். பெருமாள் பாண்டியன் கைது செய்யப் பட்டார். ஆய்வாளர் பெருமாள் பாண்டியன், புரோக்கர் நமச்சிவாயம் ஆகிய இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப் பட்டு உடனடியாக சிறையில் அடைக்கப்பட்டனர். அதன்பிறகு இருவரது வீட்டிலும் சோதனை நடத்தியபோது கணக்கில் வராத பல்வேறு சொத்து ஆவணங்களை லஞ்ச ஒழிப்பு துறை காவலர்கள் கைப்பற்றியுள்ளனர்.
அந்தக் காலத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட வழக்கு இது. தமிழ்நாட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி ஒருவரே லஞ்சம் வாங்கி சிக்கிக் கொண்டாராமே! என்று நாடே அதிர்ச்சி அடைந்தது.
இதெல்லாம் நிக்காது; சும்மா ஒரு பரபரப்புக்காக! என்றும்,
அவுங்க ஆள அவுங்களே காட்டிக் கொடுப்பாங்களா? என்றும்,
ஆதாரம் இல்லன்னு கொஞ்ச நாளில் அவரை விட்டு விடுவார்கள்! என்றும்,
பலவிதமான விமர்சனங்கள் மக்கள் மத்தியில் எழுந்தது.
பத்து ஆண்டுகளாக நடந்த வழக்கில், அதற்கெல்லாம் இப்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
யார் இந்த பெருமாள் பாண்டியன்?
சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த இவர், எஸ்.ஐ-யாகப் பணியில் சேர்ந்து, தேனி மாவட்ட காவல்துறையில் பணியாற்றிவந்தார். அப்போது எழுந்த சில புகார்களால் இவர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அதனை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து ஆய்வாளராக பதவி உயர்வும் பெற்று, 2010-ம் ஆண்டில் மதுரை லஞ்ச ஒழிப்புத்துறையில் பணியாற்றினர்.


இவரது மனைவியின் பெயர் உமா மீனாட்சி. இவர் மதுரை கார்ப்பரேஷன் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றி வந்துள்ளார். இவர்களுக்கு சுந்தர் சுகிர்தன் மற்றும் பிரனவ் கவுதம் என்று இரண்டு மகன்கள். இவர்கள் அனைவரும் மதுரை தத்த நேரியில் வசித்து வருகிறார்கள்.
மேற்கண்ட வழக்கில் உடனடியாக சஸ்பெண்ட் ஆன அவர், கடந்த 10 ஆண்டுகள் பணியில்லாமல் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இது சம்பந்தமாக குடும்பத்தில் அடிக்கடி சண்டைகள், சச்சரவுகள் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த 14.12.2020 அன்று, அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டு, அவருக்கு நீதிமன்றத்தால் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டணை வழங்கப்பட்டது.
தமிழ்நாட்டிலேயே லஞ்ச ஒழிப்பு ஆய்வாளர் ஒருவர் லஞ்சம் பெற்ற வழக்கில் தண்டணை பெறுவது இதுதான் முதல் முறை! என்று தீயாக பரவிய செய்தி அவரை பெரும் வேதனைக்கு உள்ளாக்கியுள்ளது. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய திட்டமிட்டிருந்ததாக தெரிய வருகிறது.
இந்நிலையில் 17.12.2020 அன்று, மகன்கள் இருவரும் வெளியில் சென்றிருந்த நேரத்தில், அவர் தனது மனைவியுடன் ஏற்பட்ட தகராறில், அவரை சுத்தியலால் அடித்து கொன்றுவிட்டு தானும் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தவறான வழிகளில் செல்வபர்களுக்கு தவறான முடிவு காத்திருக்கிறது என்பதை இந்த நிகழ்ச்சி நமக்கு உணர்த்துகிறது.
--------------------- அன்புடன் செல்வம் பழனிச்சாமி, 20.12.2020

Sunday, February 17, 2019

அரசு ஊழியர்கள் மீதான லஞ்ச புகார்


அரசு ஊழியர்கள் மீதான லஞ்ச புகார் : போலீசார் விசாரிக்க கட்டுப்பாடுகள்
'அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீதான லஞ்ச புகார்களை விசாரிக்க, முன் அனுமதி பெற வேண்டும்' என, லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு, கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது, லஞ்ச புகார் வந்தால், லஞ்ச ஒழிப்பு போலீசார், நேரடியாக வழக்கு பதிவு செய்யும் நடைமுறை உள்ளது. பரஸ்பர அடிப்படையில் மட்டும், சம்பந்தப்பட்ட துறை தலைமையிடம், அனுமதி பெற்று வந்தனர்.
இந்நிலையில், மத்திய அரசின் புதிய சட்டத்தை பின்பற்றி, தமிழக அரசு, புது அரசாணை பிறப்பித்துள்ளது. இந்த அரசாணை, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறை வாயிலாக, அரசின் பல்வேறு துறைகளுக்கும், சுற்றறிக்கையாக அனுப்பப்பட்டுள்ளது.
சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
ஊழல் தடுப்பு சட்டம், 1988ல், மத்திய அரசு, '17 - ' என்ற, பிரிவை இணைத்துள்ளது. அதை பின்பற்றி, தமிழக அரசும், ஊழல் தடுப்பு சட்டத்தில், புதிய பிரிவை சேர்த்துள்ளதுஇதன்படி
 அரசு பணியில் நியமிக்கப்பட்டுள்ள, குரூப் - , பி, சி மற்றும் டி பிரிவில் உள்ள, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது, ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்பு புகார்கள் வந்தால், அதுகுறித்து, துறை தலைமைக்கு, லஞ்ச ஒழிப்பு போலீசார் தகவல் தர வேண்டும்.
➤ புகார் அனுப்பியவர்களிடம், புகாருக்குரிய விளக்கம் மற்றும் ஆதாரங்களை பெற வேண்டும்
➤ அவ்வாறு, ஆதாரத்தை தர தவறினால், அந்த புகாரை ஆதாரமற்றதாக கருத வேண்டும்.
➤ புகார்தாரர்களின் விளக்கம் கிடைத்து, புகார் உறுதியானால், அதன் மீது, போலீசார் நேரடியாக நடவடிக்கை எடுக்க கூடாது.
➤ சம்பந்தப்பட்ட துறையின் தலைமைக்கு தகவல் அளித்து, உரிய அனுமதி பெற வேண்டும்.
➤ அதற்கு முன், துறை தலைமை வழியாக, புகாருக்குள்ளானவர் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும். 
➤ அதன்பிறகே, போலீசார் விசாரணையை நடத்தலாம்.
இவ்வாறு, சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
*************************************************நன்றி : தினமலர் நாளிதழ் - 17.02.2019 

Thursday, September 21, 2017

மருத்துவ சேர்க்கைக்கு லஞ்சம் : ஒடிசா ஐகோர்ட் முன்னாள் நீதிபதி கைது

மருத்துவ சேர்க்கைக்கு லஞ்சம் : ஒடிசா ஐகோர்ட் முன்னாள் நீதிபதி கைது
புதுடில்லி : மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு சுப்ரீம் கோர்ட் தடை விதித்திருந்த நிலையில், பணம் பெற்றுக் கொண்டு தனியார் மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்கியதாக ஒடிசா ஐகோர்ட் முன்னாள் நீதிபதி இஷ்ரத் மஸ்ரூர் குத்துசியை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
சுப்ரீம் கோர்ட் தடை மீறி தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்கியது மட்டுமின்றி, தனியார் கல்லூரிகளுக்கு சாதகமாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கில் சாதகமான முடிவை பெற்று தருவதாகவும் குத்துசியை வாக்குறுதி அளித்துள்ளார் . இதற்காக பெரிய அளவிலான தொகையை குத்துசி லஞ்சமாக பெற்றுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்து, சோதனை மேற்கொண்டது.
டில்லி, லக்னோ, புவனேஸ்வர் உள்ளிட்ட 8 இடங்களில் நேற்று சோதனை நடத்தப்பட்டது. டில்லியில் உள்ள குத்துசியின் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.1.91 கோடி ரொக்க பணம் கைப்பற்றப்பட்டது. இந்த லஞ்ச விவகார வழக்கில் குத்துசி உள்ளிட்ட 5 பேர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். இதே வழக்கில் புதுச்சேரியை சேர்ந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிகள் 2 பேர் மீதும் சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
லஞ்சம் கொடுத்து, மாணவர் சேர்க்கை நடைபெற்ற விவகாரம் வெளியானதும் 46 கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு அடுத்து 2 ஆண்டுகளுக்கு ஒடிசா அரசு தடை விதித்துள்ளது. இந்த கல்லூரிகள், போதிய உள்கட்டமைப்புக்கள் இல்லாமலும், முழுமையாக கட்டி முடிக்கப்படாத நிலையும் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி பெற்றுள்ளது தெரிய வந்துள்ளது.
நன்றி : தினமலர் நாளிதழ் - 21.09.2017 

Wednesday, August 9, 2017

ரூ.20,000/- லஞ்சம் பெற்ற நகராட்சி ஆணையர் கைது!

ரூ.20,000/-  லஞ்சம் பெற்ற நகராட்சி ஆணையர் கைது!
ரூ. 20 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக லஞ்ச ஒழிப்பு போலீஸ் நடவடிக்கை: ஒப்பந்ததாரர் புகாரில் வேலூர் மாநகராட்சி ஆணையர் கைது
ஒப்பந்ததாரரிடம் ரூ.20 ஆயிரம் லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில், வேலூர் மாநகராட்சி ஆணையரை லஞ்ச ஒழிப்புப் போலீஸார் நேற்று கைது செய்தனர்.
இதுகுறித்து லஞ்ச ஒழிப்புப் போலீஸ் தரப்பில் கூறியதாவது:
வேலூர் வேலப்பாடியை சேர்ந்தவர் பாலாஜி (30), மாநகராட்சி ஒப்பந்ததாரர்.
இவர் வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, வீடுகளுக்கு மருந்து தெளிப்பது, தேங்கிய தண்ணீரை அகற்றுவது உள்ளிட்ட பணிகளை டெண்டர் எடுத்து செய்து வந்தார்.
கடந்த ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் இந்த பணிகளை பாலாஜி முடித்தார். இதற்கான தொகை 10 லட்சத்து 90 ஆயிரத்து 200 ரூபாய். இந்த காசோலையை தனக்கு வழங்குமாறு வேலூர் மாநகராட்சி ஆணையர் குமாரிடம்(54) கேட்டுள்ளார். காசோ லையை வழங்க 2 சதவீதம் கமிஷன் தொகையாக ரூ.22 ஆயிரத்தை வழங்குமாறு ஆணையர் குமார் கேட்டதாகக் கூறப்படுகிறது. ரூ.20 ஆயிரம் வழங்குவதாக பாலாஜி தெரிவித்துள்ளார்.
எனினும், லஞ்சம் கொடுக்க விரும்பாத பாலாஜி, வேலூர் லஞ்ச ஒழிப்புப் போலீஸில் புகார் செய்தார். இதையடுத்து, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியம் தலைமையிலான போலீஸார், ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை பாலாஜியிடம் கொடுத்துள்ளனர்.
அந்த பணத்துடன் நேற்று மாநகராட்சி அலுவலகத்துக்கு சென்ற பாலாஜி, ஆணையர் குமாரை சந்தித்து பணத்தைக் கொடுத்துள்ளார். அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புப் போலீஸார் குமாரை பிடித்து. அறைக்குள் வைத்து பல மணி நேரம் விசாரணை நடத்தினர். பிறகு அங்குள்ள ஆவணங் களை போலீஸார் ஆய்வு செய்தனர். பின்னர் குமாரை கைது செய்தனர்.
இதை தொடர்ந்து ஆணையர் குமார் வீட்டில் நேற்று லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை நடத்தினர். அதில், 9 லட்சத்து 40 ஆயிரம் பணமும், 26 பவுன் தங்க நகைகளை யும் பறிமுதல் செய்தனர். ஆணையர் கைது செய்யப்பட்ட சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியது
நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் - 10.08.2017

Friday, July 21, 2017

சிறையில், சசிக்கு சலுகைகள் வழங்கியது உண்மைதான்

சிறையில், சசிக்கு சலுகைகள் வழங்கியது உண்மைதான்
புதிய சிறைத்துறை அதிகாரிகள் ஒப்புதல்
பெங்களூரு: சொத்துக்குவிப்பு வழக்கில் சிறயைில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் உண்மைதான் என சிறைத்துறை உயர் அதிகாரிகள் இன்று ஒத்துக்கொண்டனர்.

சசிக்கு சிறையில் சலுகைகள் வழங்கப்படுவதாக டி.ஐ.ஜி., ரூபா பரபரப்பு தகவலை வெளியிட்டார்.
இதற்கென ரூ.2 கோடி லஞ்சம் வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தார். இதனை தொடர்ந்து சிறைதுறை டி.ஜி.பி., சத்தியநாராயணன், ரூபா ஆகியோர் இட மாற்றம் செய்யப்பட்டனர்.இந்நிலையில் கர்நாடக சட்டசபை வளாகத்தில் சட்டசபை பொதுக்கணக்கு குழு கூட்டம் நடந்தது. குழு தலைவர் ஆர். அசோக் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி., என்.எஸ் மேக்ரட், டி.ஐ.ஜி., ரேவண்ணா ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.
சசிக்கு வழங்கப்பட்ட சலுகைகள் குறித்து கேள்வி கேட்கப்பட்டன. சசிக்கு வழங்கப்பட்ட டி.வி., சிறப்பு சமையலறை இருந்தது உண்மைதான், சீருடை அணியாமல் சாதாரண உடையில் இருந்தது உண்மை தான். 7, மற்றும் 8 வளாகத்தில் கண்காணிப்பு காமிரா செயல்படவில்லை. இவ்வாறு குழு முன்பு ஒத்து கொண்டனர்.

இதனை குழு தலைவர் ஆர். அசோக் மீடியாக்களிடம் தெரிவித்தார். ஆக ரூபா கூறிய அனைத்து குற்றச்சாட்டுகளும் உண்மை தான் என நிரூபணம் ஆகியுள்ளது.

நன்றி : தினமலர் நாளிதழ் - 21.07.2017 

Monday, July 17, 2017

சிறைக்குள் ஏமாந்த சின்னம்மா!

இந்த "டப்பா" ரூமுக்குப் போயா ரூ. 2 கோடி செலவழிச்சாங்க சசிகலா.. ஏமாந்துட்டீங்களேம்மா!
பெங்களூர்: பரப்பன அக்ரஹார சிறையில் தங்கியிருக்கும் சசிகலாவுக்கு கூடுதல் வசதிகளுக்காக ரூ. 2 கோடி லஞ்சம் கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் அந்த தொகைக்கு அவருக்கு ஒதுக்கப்பட்ட அறைகள் மதிப்பில்லாதது போல் தெரிகிறது.
சிறப்பு வசதிகள்
சொத்துக் குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட சசிகலா பெங்களூரில் உள்ள பரப்பரன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் அங்கு அடைக்கப்பட்ட நாள் முதலே விதிமுறைகளை தனக்கேற்றார்போல் வளைத்து வருவதாக தகவல்கள் வெளியாகின.
பணத்தை தண்ணீராக...
சிறப்பு வசதிகள் பெங்களூர் சிறையில் சிறை துறை டிஐஜி ரூபா மேற்கொண்ட ஆய்வில் சசிகலாவுக்கு சிறையில் சிறப்பு வசதிகள் செய்யப்பட்டது தெரியவந்தது. அவருக்கென்று தனி சமையலறை இருப்பதும், அதில் தனக்கு தேவையானதை தானே சமைத்து சாப்பிடுவதும் தெரியவந்தது.
பணத்தை தண்ணீராக... சசிகலா சிறை துறை அதிகாரிகளுக்கு ரூ. 2 கோடி லஞ்சமாக கொடுத்தது மட்டும் அல்லாமல் அவ்வப்போது அவர் விதிமுறைகளை மீற நினைக்கும் போதெல்லாம் பணத்தை தண்ணீராக வாரி இறைத்திருக்கிறார். மேலும் ஓரிரு முறை சிறையை விட்டு சசிகலா வெளியே சென்றும் வந்துள்ளதாக தெரிகிறது.
சசிகலாவுக்கு 5 அறைகள் இந்நிலையில் சசிகலாவுக்கு சிறையில் 5 அறைகள் இருப்பது டிஐஜி ஆய்வில் தெரியவந்துள்ளது. அதில் பார்வையாளரை சந்திக்க ஒரு அறையும், டிவி பார்க்க, யோகாசனம் செய்ய என ஒவ்வொரு அறையும் இருந்துள்ளது. மேலும் சிறையிலேயே சசிகலா குக்கர் வைத்து சமைக்கவும் சதி செய்யப்பட்டதும் அம்பலமாகியுள்ளது.
Sasikala prison rooms are closed with a cloth
ஒர்த் இல்லையே நாளிதழ், ஊடகங்களில் சிறப்பு வசதிகள், சிறப்பு வசதிகள் என்று குறிப்பிட்டுள்ளதை பார்த்த போது ஏதோ 5 ஸ்டார் ஹோட்டல் அறை அளவுக்கோ அல்லது 3 ஸ்டார் ஹோட்டல் அறை அளவுக்கோ இருக்கும் என்று பார்த்தால் போயஸ் கார்டனில் உள்ள காவலர்கள் தங்கியுள்ள அறையே தேவலை போல. அவ்வளவு மோசமாக இருக்கிறதே. சிறையில் இருக்கும் சசிகலாவை அவ்வழியாக போவோர் வருவோர் பார்த்து விடக் கூடாது என்பதற்காக துணியால் ஸ்கிரீன் போல் போடப்பட்டுள்ளது. கைதியை கைதியாக பாவிக்க வேண்டும்தான். ஆனால் லஞ்சம் கொடுத்தாலும் அதற்கு ஒர்த் இருக்க வேண்டுமே. ஏமாந்துட்டீங்களே சின்னம்மா... ஏமாந்துட்டீங்களே!!
Posted By: Lakshmi Priya
நன்றி : ஒன்இந்தியா » தமிழ் » செய்திகள் - 17.07.2017