disalbe Right click

Showing posts with label RTI. Show all posts
Showing posts with label RTI. Show all posts

Wednesday, February 19, 2020

பொது தகவல் அலுவலர்களுக்கு ஏற்படும் பணிச்சுமை!

பொது தகவல் அலுவலர்களுக்கு ஏற்படும் பணிச்சுமை!
தகவல் அறியும் உரிமை சட்டம் - பொது தகவல் அலுவலரின் கவனத்திற்கு....ஒரு பொது தகவல் அலுவலரின் ஆதங்கம் 
  • இந்த தகவல் அறியும் உரிமை சட்டம் வந்த பிறகு ஏராளமான மனுக்கள் வருகின்றது
  • அந்த மனுக்களை எனக்கு கீழே பணிபுரிபவர்களிடம் கொடுத்து அதற்கான தகவலை வழங்க கோருகின்றேன்
  • அவர்கள் பல நேரங்களில் தாமதமாக எனக்கு தகவலை வழங்குவதால், அதன் அடிப்படையில் மனுதாரருக்கு பதில் எழுத கால தாமதம் ஆகிவிடுகின்றது
  • அதற்குள் மனுதாரர் மேல் முறையீடு செய்துவிடுகின்றார். சில நேரங்களில் சரியான தகவல்களை எனக்கு கீழே பணிபுரிபவர்கள் வழங்காததால், தகவல் ஆணைய விசராணைக்கு நான்தான் செல்ல வேண்டியதுள்ளது.
  • விசாரணையின்போது, அந்த தகவல் சார்ந்த அனைத்து விஷயங்களும் முழுமையாக தெரியாததால் பல நேரங்களில் மனுதாரர் வைக்கும் வாதங்களுக்கு என்னால் ஆணையர் முன்பு முறையான எதிர் வாதங்களை வைக்கமுடிவதில்லை
  • இதற்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை?
இவரின் ஆதங்கத்திற்கு, தகவல் அறியும் உரிமை சட்டம் எந்த வகையில் அவருக்கு உதவுகின்றது என்று பார்ப்போம்
  • தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் பிரிவு 5(1) கீழ்கண்டவாறு கூறுகின்றது 
  • பொது அதிகார அமைப்பு ஒவ்வொன்றும், இந்தச் சட்டத்தின்படி தகவலினைக் கோருகிறவர்களுக்குத் தகவலினை அளிக்க, அனைத்து நிர்வாகப்பிரிவுகளிலும் அல்லது அதன் கீழுள்ள அலுவலகங்களிலும் தேவைப்படுகின்ற எண்ணிக்கையிலான அலுவலர்களை இந்த சட்டத்தின்படி பதவியமர்த்த வேண்டும. (ஆங்கிலத்தில்.... designate as many officers’ ன்று குறிப்பிடப்பட்டுள்ளது)
  • ஒரு அலுவலகத்தில் ஒரு பொது தகவல் அலுவலர்தான் இருக்க வேண்டும் என்று அந்த சட்டத்தில் எங்கும் சொல்லப்படவில்லை
  • ஆகவே, பெரிய அலுவலகங்களில் பொது தகவல் அலுவலரின் பணிச்சுமையை குறைக்க, அந்த அலுவலகத்தில் உள்ள ஒவ்வொரு துறைக்கும் அல்லது பிரிவிற்கும் ஒரு பொது தகவல் அலுவலரை நியமிக்கலாம்
  • உதாரணமாக ஒரு பிரிவிற்கான கண்காணிப்பாளரை, அல்லது நிர்வாக அதிகாரியை அந்த பிரிவு சார்ந்த தகவல்களை வழங்க பொது தகவல் அலுவலராக நியமித்து விடலாம்
  • இந்த வகையில் சட்டத்தின் வாயிலாக பெறப்பட்ட மனுக்களை அந்த அலுவலகத்தில் இலகுவாக கையாளலாம்
  • அந்த பிரிவை சார்ந்த கண்காணிப்பாளரானவர் பொது தகவல் அலுவலராக நியமிக்கப்படும்போது, அந்த மனுக்களை பைசல் செய்ய அவருக்கு தனிப்பொறுப்பு வந்துவிடும்
  • இதனால் மனுக்களுக்கு விரைவாக பதில் அளிக்கபட வாய்ப்புண்டு
  • மேலும் தகவல் ஆணைய விசாரணையில் அவருக்கு அவரது பிரிவை சார்ந்த புரிதல் இருப்பதால், ஆணைய விசாரணையை சிறப்பாக எதிர்கொள்ள முடியும்
  • இந்த முறையில்தான் தமிழக அரசின் செயலகத்தில் உள்ள பல துறைகளானது, அவர்கள் துறையிலேயே பல பொது தகவல் அலுவலர்களை கொண்டுள்ளது
  • ஒரே அலுவலகத்ததில் பல பொது தகவல் அலுவலர்களை நியமிக்க சட்டத்தில் இடம் இருக்கும்போது, அவ்வாறு நியமித்தால் மட்டுமே, பொது தகவல் அலுவலர்களின் வேலைப்பழுவை குறைக்கலாம்.

நன்றி : எனது முகநூல் நண்பரும், வழக்கறிஞருமான திரு Leenus Leo Edwards 

தகவல் அறியும் உரிமைச் சட்டம், பிரிவு-18(1)


    தகவல் அறியும் உரிமைச் சட்டம்பிரிவு-18(1) 
    ஆடுற மாட்டை ஆடித்தான் கறக்கணும்! பாடுறமாட்டை பாடித்தான் கறக்கணும்.
    சில பொது தகவல் அலுவலர்களின் மனநிலை என்னவென்றால்
    • ஏதாவது ஒரு காரணத்தை சொல்லிமனுதாரர் கோரிய தகவலானது பிரிவு 2(f)-ல் வராது, தனிப்பட்ட நபர் தகவல் அல்லது மூன்றாம் நபர் தகவல் என்று மனுவை திருப்பி அனுப்பி விடுவோம்
    • 50-60 சதவீதம் மனுதாரர்கள்தான் முதல் மேல் முறையீடு செய்வார்கள்
    • அதையும் அதே காரணத்தை சொல்லி அனுப்பிவிட்டால், பின்னர் மனுதாரர் சென்னைக்கு செல்லும் செலவினை கருத்தில் கொண்டு, 10 சதவீதம் நபர்கள்தான் ஆணையத்திற்கு செல்வார்கள்
    • அப்படியே சென்றாலும் அந்த வழக்கு விசாரணைக்கு ஒரு வருடம் கழித்து வரும்போது, நாம் இந்த பொறுப்பில் இருப்போமா என்பது தெரியாது
    • ஆகவே, ஒரு வருடம் கழித்து அந்த பத்து சதவீத கேஸ்களில் ஒன்றாக நமக்கு வந்த மனு ஆணையத்திடம் விசாரணைக்கு வந்து அப்போது நாம் இந்த பதவியில் இருந்தால் பார்த்து கொள்ளலாம் என்பதாகும்.

    அவ்வாறான சில பொது தகவல் அலுவலர்களின் மனநிலையை மாற்றத்தான் பிரிவு 18(1)-ல் கீழ் புகார் செய்ய வேண்டும்.
    • தகவல் வழங்கவில்லை என்றாலும், முதல் மேல் முறையீடு செய்யாமல் எப்படி உடனே மனுதாரர் ஆணையத்திடம் புகார் செய்கிறார்
    • இது என்ன புது முறையாக இருக்கின்றது
    என்று அவர்கள் உணரவேண்டும்.
    தகவல் ஆணையமானது புகார் மனு மீது விசாரணை செய்து, நம் மீது தண்டம் விதித்துவிடுமோ அல்லது துறை வாரியான நடவடிக்கைக்கு அரசிற்கு பரிந்துரை செய்துவிடுமோ என்ற நிலையில் அவர்களை கொண்டு செல்வதற்காகவே, மனுதாரர்கள் பிரிவு 18(1)-யை பயன்படுத்த ஆரம்பிக்க வேண்டும்.
    தகவல் அறியும் உரிமைச் சட்டம், பிரிவு-18(1) என்ன சொல்கிறது?
    1. தகவல்கள் வழங்க மறுப்பது (மனுவை வாங்க மறுப்பது) தவறு 
    2. குறித்த காலத்திற்குள் தகவல் வழங்காதது தவறு 
    3. நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிகமாக வசூலிப்பது தவறு
    4. தவறான, பொய்யான தகவல்களை வழங்குவது தவறு
    5. தகவலை கோருகின்ற மனுதாரர்களுக்கு ஏற்படுகின்ற பிரச்சனைகள் (மிரட்டல்)
    பரிகாரம் என்ன?
    துறைரீதியான நடவடிக்கை, இழப்பீடு

    நன்றி : எனது முகநூல் நன்பரும் வழக்கறிஞருமான திரு Leenus Leo Edwards.