disalbe Right click

Showing posts with label Personnel. Show all posts
Showing posts with label Personnel. Show all posts

Tuesday, February 12, 2019

காவல் ஆய்வாளரின் தில்லுமுல்லு

திருத்தங்கல் காவல் ஆய்வாளரின் தில்லுமுல்லு!
  1. நான் சார்ந்துள்ள சங்க நிர்வாகிகள் செய்த மோசடி(1) மற்றும் அவர்களுக்கு ஆதரவாக திருத்தங்கல் காவல் ஆய்வாளர் திரு சௌ.இராஜா போலி ஆவணம் புனைந்தது குறித்து நான் 27.07.2018 அன்று மதுரை காவல்துறை துணைத்தலைவர் அவர்களிடம் உரிய ஆதார ஆவண நகல்களுடன் அளித்த புகாரின் மீது, அவர் இட்ட உத்தரவின் பெயரில் விருதுநகர் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் அவர்கள்  கடந்த 12.09.2018 அன்று என்னிடம் விசாரனை நடத்தினார். எனது புகாருக்கு ஆதாரமாக பல ஆவண நகல்களை அவரிடம் நான் சமர்ப்பித்தேன், இன்றுவரை முடிவு எட்டப்படவில்லை.
  2. நான் சார்ந்துள்ள சங்க நிர்வாகிகள் செய்த ஒன்பது கோடி ரூபாய் மோசடி(2)  குறித்து கடந்த 25.10.2018 அன்று மதுரை காவல்துறை துணைத்தலைவர் அவர்களிடம் உரிய ஆதார ஆவண நகல்களுடன் அளித்த புகாரானது, விருதுநகர் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் அவர்களுக்கு அனுப்பப்பட்டு இன்றுவரை என்னிடம் விசாரணையே நடத்தப்படாமல், நிலுவையில் வைக்கப்பட்டு உள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விபரம் கேட்டதில், நடவடிக்கையில் உள்ளதாக தகவல் எனக்கு வழங்கப்பட்டுள்ளது. 
  3. விருதுநகர் மாவட்ட கூடுதல் காவல்கண்காணிப்பாளர் அவர்கள் போலி ஆவணம் தயாரித்ததாக  உரிய ஆதார ஆவண நகல்களுடன்  ஆன்லைனில் நான் 24.06.2018 அன்று அளித்த (RAP1849391) புகாரானது, விசாரணையே நடத்தப்படாமல், 155 நாட்கள் நிலுவையில் வைக்கப்பட்டு கடந்த 28.11.2018 அன்று  தள்ளுபடி செய்யப்பட்டது. 
  4. பொதுவாக ஆன்லைன் மூலமாக கொடுக்கப்படும் புகார்கள் தள்ளுபடி செய்யப்பட்டால், அதற்கான காரணத்தை நீண்ட அறிக்கையாகவே அந்த இணையதளத்தில் பதிவு செய்திருப்பார்கள். அதனை நாம் டவுண்லோடு செய்து கொள்ளலாம்..ஆனால், எனது புகாரை தள்ளுபடி செய்த காரணமோ, விசாரணை அதிகாரியின் பெயரோ இணையதளத்தில் இல்லை. ஆதாரத்துடன் கொடுத்த புகாரை எப்படி தள்ளுபடி செய்தீர்கள்? எனக்கு விசாரணை அறிக்கை நகல் வேண்டும்! என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விபரம் கேட்டதில், அந்தப் புகாரானது நடவடிக்கையில் உள்ளதாக தகவல் எனக்கு வழங்கப்பட்டுள்ளது. 
  5. இந்நிலையில் கடந்த 28.01.2019 அன்று  திருத்தங்கல் காவல் ஆய்வாளர் அவர்கள் ஒரு ”காவல் விசாரணை அழைப்பாணை”யை பதிவுத்தபால் மூலம் எனக்கு அனுப்பி இருந்தார். அதில் பார்வையில் கண்ட புகார் மனுக்கள் தொடர்பாக விசாரணை செய்ய தங்கள் தரப்பு ஆவணங்களுடன் 29.01.2019 காலை 10 மணிக்கு திருத்தங்கல் காவல்நிலையத்தில் ஆஜராகும்படி கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது. அந்தக் கடிதத்தின் நகலை கீழே காணலாம். 
  6. மேற்கண்ட கடிதத்தில் பார்வையில் யார் புகார் அளித்துள்ளார்கள்? எந்த நாளில் அளித்துள்ளார்கள்? என்ன புகார்? என்ற விபரம் இல்லை. அது பற்றி தெரிந்தால்தானே, நான் எனது தரப்பு ஆவணங்களை எடுத்துச் செல்லமுடியும்? ஆகையால், அந்த விபரங்களை அளித்தால்தான் விசாரணையில் கலந்து கொள்ள முடியும்!  என்று காவல் ஆய்வாளர் அவர்களுக்கு கடிதம் அனுப்பினேன். அந்த கடிதத்தின் நகலை கீழே காணலாம்,
  7. உள்ளூர் என்பதால் அனுப்பிய 29.01.2019 அன்றே நான் அனுப்பிய கடிதம் அஞ்சல் செய்யப்பட்டுவிட்டது. ஆனால், எனக்கு எந்தவிதமான பதிலும் உடனடியாக தரப்படவில்லை. காத்திருந்தேன். 
  8. இந்நிலையில் இன்று (12.02.2019)  திருத்தங்கல் காவல் ஆய்வாளர் அவர்கள் மீண்டும் ஒரு ”காவல் விசாரணை அழைப்பாணை”யை பதிவுத்தபால் மூலம் எனக்கு அனுப்பி இருந்தார். அதில் ஏற்கனவே 29.01.2019 அன்று  அனுப்பப்பட்ட காவல் விசாரணை அழைப்பாணையில், என்மீது புகார் கொடுத்தவர்கள் பற்றி குறிப்பிட்டு இருந்தது போலவும், நான் வேண்டுமென்றே விசாரணையில் கலந்து கொள்ளாதது போலவும் திருத்தங்கல் காவல் ஆய்வாளர் அவர்கள்   குறிப்பிட்டு இருந்தார். நான் அனுப்பிய 29.01.2019  கடிதத்தைப் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. புகார் மனுக்கள் தொடர்பாக விசாரணை செய்ய தங்கள் தரப்பு ஆவணங்களுடன் 14.02.2019 காலை 10 மணிக்கு திருத்தங்கல் காவல்நிலையத்தில் ஆஜராகும்படி கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது. அந்த காவல் விசாரணை அழைப்பாணையின் நகலை கீழே காணலாம்.                                                                                   
  9. மேற்கண்ட இரண்டாவது அழைப்பாணையிலும், என்ன புகார் என்பதை திருத்தங்கல் காவல் ஆய்வாளர் அவர்கள் குறிப்பிடவில்லை. அது பற்றி தெரிந்தால்தானே, நான் எனது தரப்பு ஆவணங்களை எடுத்துச் செல்லமுடியும்? ஆகையால், அந்த விபரங்களை அளித்தால்தான் விசாரணையில் கலந்து கொள்ள முடியும்!  என்று காவல் ஆய்வாளர் அவர்களுக்கு இன்று கடிதம் அனுப்பியுள்ளேன்.. அந்த கடிதத்தின் நகலை கீழே காணலாம்,


  10. திருத்தங்கல் காவல் ஆய்வாளர் அவர்கள்  என்ன பதில் தரப்போகிறார் என்று காத்திருக்கிறேன். பதில் வந்ததும் பகிர்ந்து கொள்கிறேன். மீண்டும் சந்திப்போம்.
****************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 12.02.2019.

Saturday, June 16, 2018

SELVAMPALANISAMY

சட்டம், மருத்துவம், கல்வி மற்றும் பொதுவான விஷயங்கள் பற்றிய பயனுள்ள பல பதிவுகள்!
வருகை தாருங்கள், அன்புடன் அழைக்கிறேன்!
www.selvampalanisamy.com

Tuesday, February 27, 2018

நன்றி!

உங்களது பேராதரவோடு
www.selvampalanisamy.com

நன்றி, நன்றி, நன்றி!
அன்புடன் செல்வம் பழனிச்சாமி

Monday, February 26, 2018

நன்றி, நன்றி, நன்றி!




நன்றி, நன்றி, நன்றி!
தங்களின் பேராதரவோடு
www.selvampalanisamy.com